Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈஸ்டர் தாக்குதல்: விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டும் – எதிர்க்கட்சி

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.

இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

https://athavannews.com/2022/1294629

  • கருத்துக்கள உறவுகள்

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

பாப்ஸ் கொடுத்தது பாப்கோணுக்கு.

8 hours ago, தமிழ் சிறி said:

ஈஸ்டர் தாக்குதலில்.. பாதிக்கப் பட்டவர்களுக்காக, பாப்பரசரிடம் இருந்து... 100,000 யூரோக்கள் நன்கொடை.

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

சேத விபரங்களுக்கு ஏற்றால் போல வழங்கியதாக நேற்றைய செய்தி சொன்னது/காட்டினார்கள்

1. உயிரிழந்த குடும்ப உறுப்பினர்கள்

2. அங்கவீனராக்கப்பட்டவர்கள்

3. சிறிய காயங்களுக்குள்ளானவர்கள் 

தகவலுக்கு நன்றி தனி.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

நட்ட ஈடு கொடுக்கவேண்டிய கோத்தா நாட்டை விட்டு ஓடிவிட்டார். போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 06:13, தமிழ் சிறி said:
இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான குறித்த நன்கொடைப் பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கட்டுவாப்பிட்டி மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 25 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்த குடும்பங்களுக்கு 30 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

36 மில்லியன் நன்கொடை என்று ஆரம்பத்தில போட்டிட்டு.. 28 மில்லியனுக்கு தான் கணக்குக் காட்டி இருக்கு. மிச்சம் 8 மில்லியன்..??!

அதுசரி.. நவாலி தேவாலயம் உட்பட வடக்குக் கிழக்கில் சிறீலங்கா படைகளால் கொல்லப்பட்ட அப்பாவிகளுக்கு.. பாப்பரசர் கருணை காட்டமாட்டாரோ..??! பாவம் ஜேசு நாதருக்கு விசயம் தெரியல்லப் போல. 

மதமும் வியாபாரமாகிவிட்டது. ஆனாலும் பக்கத்தில் இருக்கும் ஹிந்து நாடு.. ஈழத்தில் இந்துக்களை கொன்று குவித்ததை விட பாப்பரசரின் உலகம் பறவாயில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, satan said:

போப்பாண்டவர் தயவு பண்ணி கொடுத்துள்ளார். தானத்துக்கு  உழுத மாட்டின் பல்லை பிடிச்சு பாக்க கூடாது!

அட சும்மா போங்க சாத்ஸ். 

நீங்க அந்தோணியாரை விட மோசமா இருக்கிறீங்க🤣.

நான் சும்மா தமாசுக்கு சொன்னேன். ஆனாலும் பாப்ஸ்சிடம் இருக்கும் சொத்துக்கு ஒரு ரவுண்ட் பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிகரா ஒரு மில்லியன் ஈரோவாவது கொடுத்திருக்கலாம்

அடுத்தமுறை இன்னும் பல தேவாலயங்களில் அச்சமில்லாமல் குண்டு வெடிக்கும், பணம் வருமில்லே! அதே வியாபாரமாக்கிவிடுவார்கள், தமிழர் கொல்லப்பட சர்வதேசங்கள் அள்ளிக்கொடுத்தனவே! பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவப்போய்,  போப்பாண்டவரே குண்டுத்தாக்குதலை  ஊக்குவித்ததா பிரச்சாரம் செய்யப்படும், முடிச்சுப்போடப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 21:23, goshan_che said:

ஆளுக்கு 100,000 ஈரோவா? அல்லது மொத்தமாவா?

மொத்தமா எண்டால் பாப்ஸ் இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

கத்தோலிக்கர்களின் தலைமையகமான வத்திக்கானிலும், உலகெங்கும் இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபைகளிலும் காலம் காலமாக நடைபெற்றுவரும் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான பாலியல் பலாத்காரங்களை மூடி மறைக்கவும், நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும், நீதிமன்ற வழக்காடும் செலவுகளுக்குச் செலுத்தவும் இவர்கள் கொடுக்கும் பணத்துடன் ஒப்பிடும்பொழுது இது ஒரு துளி கூட கிடையாது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்.

கேவலமானவர்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2022 at 12:23, goshan_che said:

இதை கொடுக்காமலே விட்டிருக்கலாம்🤣

👆👇

16 minutes ago, satan said:

அவர் உதவி செய்யாமலே இருந்திருக்கலாம்

100,000 ஈரோவில் 70,000 இறந்தவர்களுக்கு என வைப்போம்.

269 பேர் இறந்தனர் - 70,000/269 = இறந்த வரின் குடும்பத்துக்கு தலா 260 ஈரோ. அண்ணளவாக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய். எனது கணக்கின் படி இது 300 வெட்டுபாண்கள் வாங்கும் விலை. பாப்பரசர் கொடுத்த பணத்தை வைத்து ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்கு தனியே பாண் கூட வாங்க முடியாது.

மிகுதி 20,000 காயப்பட்டோர், 10,000 சிறு காயங்களுக்கு உள்ளானோருக்கு என்றாலும் அவர்களுக்கு கிடைப்பது இதை விட சிறிய தொகையே.

இங்கேதான் மேலே ரஞ்சித் சொன்ன பாதிரிமாரின் ஈன செயலுக்கு நட்ட ஈடு உட்பட வத்திகனின் ஏனைய செலவுகளுடன் ஒப்பிடும் தேவை ஏற்படுகிறது.

இங்கே பாப்ஸ் கொடுப்பது தானமும் அல்ல. கொல்லபட்டவர்கள் திருச்சபை உறுப்பினர்கள். இதுவே குண்டு வெடிப்பு ஒரு கோவிலில் நடந்து இருந்தால் இந்த பணமும் கிடைத்திராது. ஆகவே இது திருச்சபை தனது உறுப்பினர்கள் தனது வளாகத்தில் கொல்லபட்டதை முடிந்தளவு ஈடு செய்ய கொடுக்கப்படும் பணம். தானம் அல்ல.

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது. சபையின் காசு. சபை உறுப்பினர்க்கு போகிறது.

அதை கொஞ்சம் மரியாதையான தொகையாக கொடுத்திருக்கலாம்.

பிகு

மல்கம் இலங்கையில் எவரினதோ கைப்பாவையாக இயங்குகிறார் என்பதும், அதை ஒட்டியே அவரின் பாஸ் இந்த பணத்தை கொடுத்துள்ளார் என்ற அரசியலை நான் கதைக்கவில்லை. கொடுப்பனவின் அளவை பற்றியே எழுதினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காசு பல்லுக் குத்தவே காணாது. 

உண்மையில் இந்தக் குண்டுவெடிப்பை திட்டமிட்ட உந்தியாவும் மேற்குலக அரசுகளும்தான் நட்ட ஈட்யைக் கொடுக்க வேண்டும். அதிலும் அவர்களின் திட்டத்தை நடாத்தி முடித்த ஸஹறான் குடும்பங்களிற்கும் உதவி செய்ய வேண்டும்.

😏

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

நீதிமன்றத்திற்கு வெளியே பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கவும்,

இலங்கையில் வன்முறைகளை அழித்து விட்டோம்குண்டுகளை ஒழித்துவிட்டோம் என்று கூறியவர்களே, குண்டுகளை வைத்து மக்களை அழித்து லாபம் அடைந்தார்கள். நட்ட ஈடு கொடுத்தார்களா? ஏற்றுக்கொண்டார்களா? மன்னிப்பு கேட்டார்களா? தன் நாட்டில் நடந்த  வன்முறைகளுக்கு கர்தினால் ஆவது மன்னிப்பு கேட்டாரா? இளகின இரும்பை கண்டவர் பின்பக்கத்தை தூக்கி  தூக்கி அடித்தாராம்.

19 hours ago, ரஞ்சித் said:

இந்த பாப்ஸே தனது நெருங்கிய மத குரு ஒருவரின் பாலியல் கொடுமைகளை தனது அதிகாரத்தைப்பாவித்து மறைத்து வந்தார் என்பதுதான்

உங்களது பணத்தை, பதவியை பாவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுத்து விட்டு வந்து விமர்சியுங்கள் ஏற்றுக்கொள்ளலாம். வெறும் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. காய்த்த மரத்திற்குத்தான் கல்லெறி விழும். இதுவரை யாரும் அந்த மக்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை, யாரும் விமர்சிக்கவுமில்லை. ஒருவர் விருந்து  வைத்தாராம், அழைத்தவர்க்கெல்லாம் ஒரு தொகைப்பணத்தை அன்பளிப்பாக கொடுத்தாராம், பெற்றுக்கொண்ட ஒருவர் சொன்னாராம் "சும்மா இருந்த என்னை அழைத்து இவ்வளவு தொகையை தந்தார், அவருக்கு எவ்வளவு பெரிய மனது" என்றாராம். பெற்றுக்கொண்ட இன்னொருவர் சொன்னாராம் "அவருக்கு இருக்கிற பணத்தில் இது ஒரு துளியே, இன்னும் கொஞ்சம் அதிகமாக  தந்திருக்கலாம், இது தந்ததற்கு அவர் தாராமலே இருந்திருக்கலாம்" என்றாராம். பெறுபவரின் பண்பு, தேவையை பொறுத்தே பெறுமதி பார்க்கப்படுகிறது. உதவியை பெற்றவர், பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கொடுக்கப்பட்ட தொகையை விமர்சித்ததாக தெரியவில்லை.

12 hours ago, goshan_che said:

சபையின் காசு.

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

12 hours ago, goshan_che said:

பாப்ரசரின் வீட்டு காசல்ல இது

   

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அதற்குரிய தேவைகள், காரணங்கள், முடிவுகள் அந்தச் சபையாலேயே எடுக்கப்படுகின்றன. இது பாப்பரசரின் தனிப்பட்ட பணமல்ல, தனித்து முடிவெடுப்பதற்கு. ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நிச்சயமாக.

சரி பாப்பரசரை விட்டு விடுவோம். சபையாவது கொஞ்சம் அதிகம் கொடுத்திருக்கலாம்.

2022ம் ஆண்டில் ஒரு மரணத்துக்கு நஸ்ட ஈடாக 260 ஈரோவை வழங்கும் நிலையில்தான் சபையின் முடிவு எடுக்கும் மனநிலை இருக்கிறது என்றால் அதை விமர்சிப்பது தப்பில்லை என நினைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தூர இருந்து பாத்தால் எல்லாம் பச்சையாகவே தெரியும். சபைக்கு எங்கிருந்து பணம் வருகிறது? அங்கத்தவர்கள் தங்களை ஒறுத்து கொடுக்கும் பணத்தில் அவர்கள் ஏற்கெனவே ஒதுக்கி தமது திட்டமிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள். கைவிடப்பட்டவர்கள்,முதியோர், பாடசாலை, வைத்தியசாலை பராமரிப்புகள் அடங்கும். இப்போ உலக சூழ்நிலை கொள்ளைநோய், போர், வறுமை இதனால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சபையின் அங்கத்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள். தேவைகளும் அதிகரித்திருக்கும், வரவும் குறைந்திருக்கும். அப்படியிருக்கும்போது அவர்கள் வரும் வருவாயில் திட்டமிட்ட செயற்பாடுகளை கொண்டுசெல்ல முடியாத நிலை தோன்றலாம். உதாரணத்திற்கு இலங்கையில் இருப்பவர்கள் நினைக்கலாம் வெளிநாட்டில் இருக்கும் உறவுகளிடம் நிறைய பணம் இருக்கிறது அவர்கள் கூடுதலாக உதவலாம் என. ஆனால் அங்கும் தொழில் இழப்பு, நோயின் தாக்கம், விலையுயர்வு, தேவை என அவர்களும் சந்திக்கிறார்கள். இருந்தாலும் உதவி பெறுபவரின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.   காரணம்கொடுப்பவரின்  தோற்றப்பாடு, வதிவிடம்,  அவர்கள் உதவி செய்ய முன்வந்தமை. இருப்பதனாலே கொடுக்கிறார் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்திருக்கலாம் என அங்கலாய்க்கும், அவர்கள் தங்கள் தேவையை, குறைவை மட்டும் சிந்திப்பதால். ஆனால் அவர்கள் எவ்வளவு பாடுபட்டு, தம்மை ஒறுத்து இந்தப்பணத்தை அனுப்பினார்கள் என்பது அனுப்புபவர்களுக்கு மட்டுமே தெரியும். சும்மா தோற்றப்பாட்டை வைத்து நாம் யாரையும் கணிப்பிட முடியாது. மக்களின் வரியை சுரண்டும் அரசாங்கங்களே திணறும் போது மக்களின் பெருந்தன்மையில், உதவியில் வாழும் இந்தச் சபை எங்கே போகும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.