Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை விட விபத்துக்களில் உயிரிழந்தவர் எண்ணிக்கை அதிகரிப்பு- சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர

இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேவைக்கமைய எமது வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

சீன கண்காணிப்பு கப்பல் உளவு பார்ப்பதற்காக ஹாம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தருகிறது என இந்தியா குறிப்பிடுவது அடிப்படையற்றது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இந்த கப்பலுக்கான அனுமதியை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் வழங்கிய நிலையில்.. அதனை தற்போதைய அமைச்சர் அலி சப்ரி ரத்து செய்வது, இலங்கையின் வெளிவிவகார கொள்கையினை மலினப்படுத்தும் என குறிப்பிட்டார்.

கப்பல் விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் எவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்தாலும் அவர்களுக்காக வெளிவிவகார கொள்கையினை மாற்றியமைக்க முடியாது என சரத் வீரசேகர தெரிவித்தார். (நன்றி கேசரி)

இதேவேளை யுவான் வோங் கப்பல் விவகாரத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகின்றதோடு இந்தியா மற்றும் அமெரிக்காவின் யுத்த கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரும் போது... சீனா, ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்

https://athavannews.com/2022/1294654

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bild

 

Bild

இலங்கைக்கு... நேர்ந்த நிலைமையை... 
அழகாக கருத்து ஓவியம் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்கள்.
பார்க்க சிரிப்பு வந்தாலும், உண்மை அதுதான்.  😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக... எமது கொள்கையை மாற்றியமைக்க முடியாது, என்கின்றார்... சரத் வீரசேகர

உங்களுக்கு என்ன கொள்கை இருக்குது எண்டு சொன்னியளெண்டால் போற வழிக்கு புண்ணியமாய் போகும் 🤪

  • கருத்துக்கள உறவுகள்

நாறிப்போன இறையாண்மை என்பான்,  எங்கை இருக்குதெண்டு கேக்காதையுங்கோ.  

  • கருத்துக்கள உறவுகள்

ம் ஆனா கடன் மட்டும் கெளரவமாக வேண்டுவாங்க 

  • கருத்துக்கள உறவுகள்

         நாட்டை காட்டி ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்துவது, பிறகு கடனில் இருக்கும் நாட்டிற்கு இறையாண்மை தேடுவது,   இதைத்தான் வரட்டுக்கவுரவம்  என்பது. கடன் குடுக்க வழியில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் கேட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் கொள்கை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

         நாட்டை காட்டி ஒவ்வொரு நாட்டிடமும் கையேந்துவது, பிறகு கடனில் இருக்கும் நாட்டிற்கு இறையாண்மை தேடுவது,   இதைத்தான் வரட்டுக்கவுரவம்  என்பது. கடன் குடுக்க வழியில்லை என்று தெரிந்தும் தொடர்ந்து கடன் கேட்டுக்கொண்டே இருப்பது இவர்களின் கொள்கை.

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரை அழிக்க… அயல் நாடுகளின் உதவியை பெறுவதற்காக… 
அவன் ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து… இலங்கையை தனது அடிமையாகி விட்டான்.
தமிழருடன்… ஒற்றுமையாக போயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதே.
ஆனால்… அதனை ஒப்புக் கொள்ள சிங்கள இனவாதம் இடம் கொடுக்க வில்லை.
இப்ப.. வந்தவனை எப்படி கையாளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இப்ப… எல்லோரும், உரிமை கோரும்… விபச்சார நிலையில் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  வெட்கங்கெட்டு பகிரங்கமாக சொல்கிறார்கள், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென்பதற்காக புலம்பெயர்ந்த தமிழரின் உதவி வேண்டுமாம், அவர்களுக்கு தடை விதித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து உதவி பெறமுடியாதாகையால் தடையை நீக்குகிறார்களாம். ஆக தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மட்டும் தமிழர் தேவை. தேவை முடிந்தவுடன் புலம் பெயர் புலிகள் நாட்டை துண்டாட முயற்சிக்கிறார்கள் என்று மாத்திபோடுவான். இதே தமிழர் போரால் சிதைந்த தம் இனத்தை தூக்கி நிறுத்த முன்வந்ததாலேயே அதை முடக்கும் வகையில் அவர்களுக்கு தடை விதித்தது. இப்போ அவர்களின் முதலீடுகள் அவர்களுக்கு வேண்டும், அங்கேயும் தமிழருக்கு எதுவும் செல்லாமல், தன்னிறைவு அடையாமல் பாத்துக்கொள்வார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையின் பூர்வீக குடிகளான தமிழரை அழிக்க… அயல் நாடுகளின் உதவியை பெறுவதற்காக… 
அவன் ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து… இலங்கையை தனது அடிமையாகி விட்டான்.
தமிழருடன்… ஒற்றுமையாக போயிருந்தால், இந்த நிலைமை வந்திருக்காதே.
ஆனால்… அதனை ஒப்புக் கொள்ள சிங்கள இனவாதம் இடம் கொடுக்க வில்லை.
இப்ப.. வந்தவனை எப்படி கையாளப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
இப்ப… எல்லோரும், உரிமை கோரும்… விபச்சார நிலையில் உள்ளார்கள்.

எப்ப சிங்களவன் தமிழரிலை கை வைக்க தொடங்கினானோ அப்ப அழிய வெளிக்கிட்ட நாடுதான் சிறிலங்கா....

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

எப்ப சிங்களவன் தமிழரிலை கை வைக்க தொடங்கினானோ அப்ப அழிய வெளிக்கிட்ட நாடுதான் சிறிலங்கா....

 இப்ப தமிழன்தான் கைகொடுத்து கட்டியெழுப்ப வேண்டுமாம், ஏனென்றால் எங்களாலதான் கடன் வேண்டினவையாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது. தமிழர்களை அழிக்க அமெரிக்கா.. ஹிந்தியா.. எல்லாம் கூட்டா நின்று செய்த உதவிக்கு கிடைக்கப் பெற்ற நன்றிக்கடனாக இந்த சிங்களத்தின் உண்மை முகம் அமைவது.. சிறப்பு.

தொடர்ந்து இப்படியே பேசிக்கிட்டிருங்க. அப்ப தான்.. புலிகளை அழிச்சம் என்ற இறுமாப்பில் சிங்களவனோடு சேர்ந்து நின்று தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டோரின் கொட்டம் அடங்கும். 

அமெரிக்கா இந்து சமுத்திரத்தில் மிக மோசமான இராஜதந்திரத் தோல்வியை சந்தித்திருக்குது. இது புலி அழிப்பின் விளைவு என்பதை அவர்கள் விளங்கிக் கொண்டாலும்.. வெளியில் காட்டிக்க முடியாத நிலை. ஹிந்தியாவுக்கும் அதே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு இன்னும் முடியவில்லை நெடுக்ஸ். இப்பொழுது தான் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழருக்கு எதுவும் கிடைக்காது என்பது தான் இப்போதைய நிலை.அப்படியான வித்துவான்களை தமிழர்கள் தெரிந்து விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவை உளவு பார்ப்பதற்கு சீனாவின் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தர வேண்டிய தேவை கிடையாது என்றும் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

உங்கடையை பார்க்க போறான் என்றால் மூடி வையுங்களேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.