Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

பண்டாரவன்னியனின்... 219ஆவது, நினைவு நாள் இன்று.

வன்னி இராஜ்சியத்தின் இறுதி மன்னன் பண்டாரவன்னியனின், 219வது நினைவு நாள் நிகழ்வு வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.

வவுனியா நகரசபை மற்றும் பண்டார வன்னியன் விழாக்குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் காலை 8.15மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்ட செயலக முன்றலில் அமைந்துள்ள பண்டார வன்னியனின் நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி சட்டத்தரணியும் அவரது சிலை மாவட்ட செயலகத்தில் அமைவதற்கு காரணமாக இருந்தவருமான மு.சிற்றம்பலம் சார்பாக மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அத்துடன், நகரசபை உறுப்பினர்கள், பொது அமைப்பினர், அரச அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்களால் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனையடுத்து குறித்த சிலைக்கு முன்பாக ஒருங்கிணைந்து செல்லும் மன்னார் பிரதான வீதி மற்றும் எ9வீதி ஒன்றிணையும் பகுதிக்கு இன்றுமுதல் பண்டாரவன்னியன் சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நிகழ்வின் இறுதியில் தமிழ்மணி அகளங்கனால் நினைவுரையும் நிகழ்தப்பட்டிருந்து. அதனை தொடர்ந்து வவுனியா நகரசபை மண்டபத்தில் ஏனைய அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.

https://athavannews.com/2022/1296127

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கம்.......!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆங்கிலேயனால் வீழ்ந்த முடியாமல் அஞ்சி நடுங்கிய போது காக்கை வன்னியன் உதவியால் விழ்த்தபட்ட தினம்.
நினைவு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் சதுக்கம் அங்குரார்பண நிகழ்வு

22-630762b2b1262-300x169.jpgவவுனியாவில் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் சதுக்கம் இன்று(25) அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பண்டாரவன்னியன் சிலை அமைந்துள்ள சந்திப்பகுதி இன்றிலிருந்து பண்டாரவன்னியன் சதுக்கம் என அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பண்டாரவன்னியனின் 219 வது நினைவுநாள் நிகழ்வு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அவரது சிலையடியில்அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சிலைக்கு முன்பாக ஒருங்கிணைந்து செல்லும் மன்னார் பிரதான வீதி மற்றும் ஏ9 வீதி ஒன்றிணையும் பகுதிக்கு, இன்று முதல் பண்டாரவன்னியன் சதுக்கம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த சதுக்கம் நகரசபை தலைவர் இ.கௌதமன் மற்றும் உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.பண்டாரவன்னியன் சதுக்கம் அங்குரார்பண நிகழ்வு – குறியீடு (kuriyeedu.com)

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வணக்கம்.

இன்று “பண்டாரவன்னியன் நாள்” என நினைக்கிறேன்.

“நினைவுநாள்” அல்ல? 

ஆகஸ்டு 25 இல் முல்லைதீவு தளத்தை கைப்பற்றி, அழித்து, இரு பீரங்கிகளையும் எடுத்து சென்றநாள்.

கற்சிலை மடுவில் வீழ்ந்த நாள் 31 அக்டோபர்.

முன்னர் இதைதான் நினைவுகூர்ந்தனர். 

புலிகள்தான் அவரின் வீழ்தலை, வீழ்ந்தப்பட்டதை நினைவுகூராமல், அவரின் மாபெரும் வெற்றி அடையபட்ட நாளில் அவரை நினைவுகூரலை நடத்தும் வழக்கத்தை உருவாக்கினர்.

பிகு

2009 இல் அழிக்கப்பட முன் சிறு வயதில் கற்சிலை மடு நினைவுகல்லை காணும் பாக்கியம் கிடைத்தது. அப்போதெல்லாம் கமெராவை பாதுகாப்பாக ஒரு சூட்கேசில் வைத்து விட்டுத்தான் பயணம் போவோம்😆.  ஆகவே நினைவுகள் மட்டுமே மிச்சம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழினம்   சொந்த மண்ணுக்காக வெள்ளைக்காரனோடு போராட ஆரம்பித்து இன்றுவரை போராடிக்கொண்டே இருக்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்+
51 minutes ago, goshan_che said:

நினைவு வணக்கம்.

இன்று “பண்டாரவன்னியன் நாள்” என நினைக்கிறேன்.

“நினைவுநாள்” அல்ல? 

ஆகஸ்டு 25 இல் முல்லைதீவு தளத்தை கைப்பற்றி, அழித்து, இரு பீரங்கிகளையும் எடுத்து சென்றநாள்.

கற்சிலை மடுவில் வீழ்ந்த நாள் 31 அக்டோபர்.

முன்னர் இதைதான் நினைவுகூர்ந்தனர். 

புலிகள்தான் அவரின் வீழ்தலை, வீழ்ந்தப்பட்டதை நினைவுகூராமல், அவரின் மாபெரும் வெற்றி அடையபட்ட நாளில் அவரை நினைவுகூரலை நடத்தும் வழக்கத்தை உருவாக்கினர்.

பிகு

2009 இல் அழிக்கப்பட முன் சிறு வயதில் கற்சிலை மடு நினைவுகல்லை காணும் பாக்கியம் கிடைத்தது. அப்போதெல்லாம் கமெராவை பாதுகாப்பாக ஒரு சூட்கேசில் வைத்து விட்டுத்தான் பயணம் போவோம்😆.  ஆகவே நினைவுகள் மட்டுமே மிச்சம்.

 

ஓம், இன்டைக்கு முல்லைத்தீவு கோட்டை தமிழர் வசம் வீழ்ந்த நாள்... பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்ட/இறந்த நாள் அன்று.

உது பிழையான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் பிரிட்டிஷ் காரர்களால் வீழ்த்தப்பட்டது 1799 அக்டோபர் 31ம் திகதி.

இந்த வரலாற்று முக்கியமான திகதியில், ஓயாத அலைகள், கிளம்பி, வன்னியில் இருந்தும் தாண்டிக்குளம், ஓமந்தை வரை ராணுவத்தினை துரத்தியடித்து, வவுனியாவை நெருங்கியது.

யாழ்பாணமா, வவுனியாவா என்று, நுனிக்கதிரையில் வைத்த சில தினங்கள்.

வாஜ்பாஜ் அரசு தந்த நெருக்கடியால், இரண்டுமே தப்பியது. 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.