Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை

By RAJEEBAN

14 SEP, 2022 | 11:32 AM
image

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட  அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ள உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அதன் பின்னர் சாத்தியமற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு உதவும் எங்கள் நோக்கம் தடைகள் தொடர்வது நீக்கப்படுவதற்கு அப்பாற்பட்டது என  குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வருடம் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிற்கு பின்னர் கொவிட் பெருந்தொற்றினால் இலங்கையர்கள் பலர் பலியான வேளை உலக தமிழர் பேரவை இலங்கை மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக காணப்பட்ட 2.6மில்லியன் பெறுமதியான செயற்கை சுவாசக்கருவிகளை வழங்கியது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தடைகள் நாங்கள் உதவிகளை வழங்குவதை தடுக்கவில்லை,எனினும் இந்த தடை காரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்கள் உதவிகளை நிராகரித்தனர் என குறிப்பிட்டுள்ள சுரேன்சுரேந்திரன் எங்கள் சலுகைகள் மற்றும் விலையுயர்ந்த மற்றும் அவசரமாக தேவைப்படும் உபகரணங்களை வேறு நாடுகளிற்கு வழங்குமாறு எழுத்துபூர்வமாக கோரினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 இல் இலங்கையின் தென்பகுதி வெள்ளத்தின் போது சிங்கள கிராமங்களான மாத்தறை களுத்துறைக்கு உதவுவதற்கு உலக தமிழர் பேரவை மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை அனுப்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நாங்கள் உதவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளோமா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் இலங்கை அரசாங்கம் தடையை அகற்றும் தடையை அறிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக இலங்கையின் இந்த தன்னிச்சையான அர்த்தபூர்வமற்ற நடவடிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனதெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் நாங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு உதவி வழங்கினோம் என தெரிவித்து சில புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடை செய்தது,எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இலங்கை முன்வைக்கவில்லை, இலங்கை தன்னிடமிருந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நபர்கள் அமைப்புகளிற்கு தெரியப்படுத்தி  அவர்கள் தங்கள் சார்பில் தடைக்கு எதிராக வாதாடுவதற்கான  வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்,எனினும் இந்த நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் தடைகள் விதிக்கப்பட்டன எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை நடவடிக்கை தன்னிச்சையானது அர்த்தபூர்வமற்றதுஐநாவின் விதிமுறைகளைமுற்றாக மீறுவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தடையை முற்றாக புறக்கணித்தன,சில தரப்பினர் இது தன்னிச்சையானது நிராகரிக்கின்றோம் என  அறிக்கைகளை வெளியிட்டனர் அதேவேளை ஏனைய அரசாங்க அதிகாரிகள் பகிரங்கமாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/135617

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் அதிகார பகிர்வு தரப்போவதில்லை.....நீங்கள் முதலீடு செய்யப்போதுமில்லை

செய்யப்போவதுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்+

உவர் ஒரு புரட்டுக்காரன். 

வெளியால சொல்லுற மாதிரி சொல்லிப்போட்டு அங்க எல்லாத்தையும் செஞ்சிருப்பாங்கள்.😏

  • கருத்துக்கள உறவுகள்

இவருதான் புலம்பெயர் தமிழரின்....நம்பிக்கை நிதியமோ?........நேரத்திற்கு ஒரு கதை சொல்லுவார்...இவருடைய இருப்பிடமே ..ஐ. நா. தானோ...அல்லது தமிழரி ன் வைப்புக்கள் எல்லாம் இவர்மூலம்தான் கையாளப்படுகிறதோ...புரியவில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

சரி விசுகர்...நியாயம்தான்...இவரு நாளைக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு கதை கதைப்பார் பாருங்கள்...இவ்ரை2009 முதல் அவதானித்தபடியே இருக்கின்றேன்..தன்னிச்சையான கருத்துக்களை கூறி....தலைவனாக காட்ட முயல்வது...இத்வெ எனது கருத்துக்கு காரணம்..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நன்னிச் சோழன் said:

உவர் ஒரு புரட்டுக்காரன். 

வெளியால சொல்லுற மாதிரி சொல்லிப்போட்டு அங்க எல்லாத்தையும் செஞ்சிருப்பாங்கள்.😏

இலங்கையில் புலம்பெயர் தமிழர் முதலீடு செய்வது எப்போதுமே எமக்கு நன்மைதான். 

இவர் கூறும் முதலீடு இலங்கை அரசை உயிர் பிழைக்க வைக்கும் நடவடிக்கையுடன் தொடர்புபட்டது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, alvayan said:

சரி விசுகர்...நியாயம்தான்...இவரு நாளைக்கு இன்னொரு இடத்தில் இன்னொரு கதை கதைப்பார் பாருங்கள்...இவ்ரை2009 முதல் அவதானித்தபடியே இருக்கின்றேன்..தன்னிச்சையான கருத்துக்களை கூறி....தலைவனாக காட்ட முயல்வது...இத்வெ எனது கருத்துக்கு காரணம்..

எனக்கும் இவரைப் பற்றி தெரியும் ஆனால் அவர் சொல்லும் தொடக்கம் சரி. இறுதி வரைவு என்பது இன்னும் ஆயிரம் படிகளை தாண்டணும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இவர் கூறும் முதலீடு இலங்கை அரசை உயிர் பிழைக்க வைக்கும் நடவடிக்கையுடன் தொடர்புபட்டது. 

உண்மை .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

அதிகாரப்பகிர்வு சாத்தியமாகும் வரை இலங்கையில் முதலீடு செய்ய முடியாது - உலக தமிழர் பேரவை

By RAJEEBAN

14 SEP, 2022 | 11:32 AM
image

வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட  அனைத்து மாகாணங்களிற்கும் ஆகக்கூடியளவு அதிகாரப்பகிர்வுடன் தமிழ்தேசிய பிரச்சினைக்கு பொருத்தமான அரசியல் தீர்வை முன்வைத்தால் மாத்திரமே இலங்கையில் முதலீடு செய்ய முடியும் என புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

மாகாணங்களிற்கான அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வுடன் 70 வருடகால தமிழ்தேசிய இனப்பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை இலங்கை சாத்தியமாக்கும் என்றால் புலம்பெயர்ந்த வர்த்தக சமூகமும் தமிழ்நாடு வர்த்தக சமூகமும் இணைந்து இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் சாத்தியக்கூறுகளை நினைத்து பார்க்க முடியும் என தெரிவித்துள்ள உலக தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அதன் பின்னர் சாத்தியமற்ற வாய்ப்புகளை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களிற்கு உதவும் எங்கள் நோக்கம் தடைகள் தொடர்வது நீக்கப்படுவதற்கு அப்பாற்பட்டது என  குறிப்பிட்டுள்ள அவர் கடந்த வருடம் தடை நடைமுறைப்படுத்தப்பட்டு மூன்று மாதங்களிற்கு பின்னர் கொவிட் பெருந்தொற்றினால் இலங்கையர்கள் பலர் பலியான வேளை உலக தமிழர் பேரவை இலங்கை மருத்துவமனைகளில் தட்டுப்பாடாக காணப்பட்ட 2.6மில்லியன் பெறுமதியான செயற்கை சுவாசக்கருவிகளை வழங்கியது எனஅவர் தெரிவித்துள்ளார்.

தடைகள் நாங்கள் உதவிகளை வழங்குவதை தடுக்கவில்லை,எனினும் இந்த தடை காரணமாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எங்கள் உதவிகளை நிராகரித்தனர் என குறிப்பிட்டுள்ள சுரேன்சுரேந்திரன் எங்கள் சலுகைகள் மற்றும் விலையுயர்ந்த மற்றும் அவசரமாக தேவைப்படும் உபகரணங்களை வேறு நாடுகளிற்கு வழங்குமாறு எழுத்துபூர்வமாக கோரினார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

2016 இல் இலங்கையின் தென்பகுதி வெள்ளத்தின் போது சிங்கள கிராமங்களான மாத்தறை களுத்துறைக்கு உதவுவதற்கு உலக தமிழர் பேரவை மருத்துவ பணியாளர்கள் மருந்துகளை அனுப்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் இலங்கையின் அனைத்து சமூகங்களிற்கும் நாங்கள் உதவுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளோமா இல்லையா என்பது பொருட்டல்ல என்பதை புலப்படுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில நிமிடங்களில் இலங்கை அரசாங்கம் தடையை அகற்றும் தடையை அறிவிக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக இலங்கையின் இந்த தன்னிச்சையான அர்த்தபூர்வமற்ற நடவடிக்கைகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனதெரிவித்துள்ளார்.

முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் நாங்கள் பயங்கரவாத அமைப்பிற்கு உதவி வழங்கினோம் என தெரிவித்து சில புலம்பெயர் அமைப்புகளையும் தனி நபர்களையும் தடை செய்தது,எனவும் அர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை தடை செய்யப்பட்ட அமைப்புகள் நபர்கள் பயங்கரவாதத்திற்கு உதவினார்கள் என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எவற்றையும் இலங்கை முன்வைக்கவில்லை, இலங்கை தன்னிடமிருந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நபர்கள் அமைப்புகளிற்கு தெரியப்படுத்தி  அவர்கள் தங்கள் சார்பில் தடைக்கு எதிராக வாதாடுவதற்கான  வாய்ப்பை வழங்கியிருக்கவேண்டும்,எனினும் இந்த நடைமுறைகள் எவற்றையும் பின்பற்றாமல் தடைகள் விதிக்கப்பட்டன எனவும் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தடை நடவடிக்கை தன்னிச்சையானது அர்த்தபூர்வமற்றதுஐநாவின் விதிமுறைகளைமுற்றாக மீறுவது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே ஐநா உட்பட சர்வதேச அமைப்புகளும் சர்வதேச சமூகமும் தடையை முற்றாக புறக்கணித்தன,சில தரப்பினர் இது தன்னிச்சையானது நிராகரிக்கின்றோம் என  அறிக்கைகளை வெளியிட்டனர் அதேவேளை ஏனைய அரசாங்க அதிகாரிகள் பகிரங்கமாக எங்களுடன் தொடர்பில் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/135617

இப்படி புலம்பெயர் தமிழர்கள் சொன்னால்   இலங்கை அரசாங்கம் உன்னோட முதலீடுகள் வேண்டாம் உனக்கு அதிகாரப்பங்கீடுமில்லை என்று பதில் தரலாம்   நாங்கள் என்ன செய்ய முடியும்?.  ..எனவே… முதலீடு செய்தாலும் செய்ய விட்டாலும்   தீர்வு என்பது கண்டிப்பாக உடனடியாக முன் வைக்க படவேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அவர் சொல்வது  சரி

அதுதான் தேவையும் கூட

(யார்  சொல்கிறார்  என்பதல்ல  என்ன  சொல்கிறார் என்பதே முக்கியம்)

யார் என்ன சொல்கிறார் என்பது முக்கியமல்ல இவரின் கூட்டு, வாக்கு நிலைப்பு சொன்ன சொல்லில் நிலைத்து நிற்பாரா என்பது முக்கியம். இன்று ஒன்று நாளை வேறொன்று பேசுபவரின் வார்த்தை பயனற்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.