Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்துள்ளமை மக்களை ஏமாற்றும் செயற்பாடு – சாணக்கியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

24 Sep, 2022 | 09:27 PM
image

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையிலான இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ராஜித்த சேனாரத்ன மற்றும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, சர்வமதத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் ஹம்பாந்தோட்டை வரையில் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 

https://www.virakesari.lk/article/136360

 

  • கருத்துக்கள உறவுகள்

 சாணக்கியன் யாரை ஏமாற்றுகிறார் என வெகு விரைவில் வெளித் தெரியவரப் போகிறத..😉

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதை நிர்ணயிப்பது எதிர்காலம், இவர் எதை வைத்து இப்படிச் சொல்கிறார்? இவர் என்ன தீர்க்கதரிசியா?  இதே ரணிலோட த. தே. கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை, அனுபவத்தை வைத்தா? சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இவர் முன்னாள் முதல்வர்  விக்கினேஸ்வரனைப்பற்றி இப்படி அறிக்கை விடுவது இது முதற்தடவையல்ல, தங்களது அரசியல் வியாபாரத்திற்கு அவர் ஒரு முட்டுக்கட்டை என பயப்படுகிறார்!

  • கருத்துக்கள உறவுகள்

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

இவரின் செயற்பாடு பற்றிய அவதானம் மக்களுக்கு  தேவை. அரசால் தெரியப்பட்ட  8 பேரில் இவர் அடங்கவில்லை போல.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரஞ்சித் said:

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.

பின் கதவால் வந்தவர்கள் தான் இப்போ ஆட்சி அதிகாரம் பண்ணுகிறார்கள்.

எந்த ஒரு கட்சியிலும் நீண்டகால தொண்டனாக இருந்து வந்தவனுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் கட்சிக்காக உழைக்காமல் எப்படி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள்?

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

அப்படிப்பட்டவர்களை சம்பந்தன் ஐயா கேள்வி கேக்காமல் இணைத்துக்கொள்வார் அதிகாரமும் கொடுப்பார் முதன்மைப்படுத்துவார் கட்சியில்  இப்படி வந்து தம்மை நிலைநாட்டிக்கொண்டு வெளியேறியோர் பலர்.

18 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

தமிழரை அழிக்கக்கூடிய கோடரிக்காம்புகளை சிங்களம் தேடிக்கண்டு பிடித்து களமிறக்கிவிடும் எங்கள்குள்ளேயே, அதன் கைக்கூலி சம்பந்தர்!

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

பின் கதவால் வந்தவர்கள் தான் இப்போ ஆட்சி அதிகாரம் பண்ணுகிறார்கள்.

எந்த ஒரு கட்சியிலும் நீண்டகால தொண்டனாக இருந்து வந்தவனுக்கே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறார்கள்.

சுமந்திரனும் சாணக்கியனும் மட்டும் கட்சிக்காக உழைக்காமல் எப்படி தேர்தலில் போட்டியிட அனுமதித்தார்கள்?

ஓருவேளை மகிந்த தரப்புத் தான் இவர்களுக்கு இடம் கொடுக்க சொல்லி சொன்னார்களோ?

மகிந்தவின் வாலுகள் இவர்கள் .

18 hours ago, ரஞ்சித் said:

ராசமாணிக்கம் சாணக்கியன் 1990 இல் பிறந்தவர். கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்விகற்றவர். 

பட்டிருப்புத் தொகுதியின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக, ஒருங்கிணைப்பாளராக தனது அரசியல்ப் பயணத்தைத் தொடங்கியவர். ராஜபக்ஷேக்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்று பரவலாக நம்பப்படும் இவர், கிழக்கில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துவரும் சிங்கள இனவாதப் பிக்குவான சுமனரத்னே தேரோவுடன் மிகவும் நெருக்கமானவர். பிள்ளையானின் கொலைக்குழுவின் ஆலோசகராகவும், நெருங்கிய ஆதரவாளராகவும் 2015 வரை செயலாற்றியவர்.

பிள்ளையானின் கட்சியூடாக 2015 இல் பாராளுமன்ற தேர்தலில் பங்குபற்றித் தோல்வியடைந்த நிலையிலேயே 2020 இல் தமிழரசுக் கட்சி சார்பாக தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர்.


கிழக்கில் தமிழரின் இருப்பிற்கு மிகவும் அச்சுருத்தல்களை உருவாக்கிய்வர்களில் இவர் முதன்மையானவர். சிங்களவர்களுடனான நெருக்கமும், சிங்கள பெளத்தர்களுடனான இவரது குடும்ப உறவும் இவரை இயல்பாகவே சிங்களவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிங்களத் - தமிழ்த் தலைவராக காண்பிக்கிறது.

இவர் பற்றி மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். 

நன்றி தகவல்களுக்கு ரஞ்சித் .

  • கருத்துக்கள உறவுகள்
On 25/9/2022 at 01:29, satan said:

அதை நிர்ணயிப்பது எதிர்காலம், இவர் எதை வைத்து இப்படிச் சொல்கிறார்? இவர் என்ன தீர்க்கதரிசியா?  இதே ரணிலோட த. தே. கூட்டமைப்பு கடந்த காலங்களில் செயற்பட்ட விதத்தை, அனுபவத்தை வைத்தா? சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட இவர் முன்னாள் முதல்வர்  விக்கினேஸ்வரனைப்பற்றி இப்படி அறிக்கை விடுவது இது முதற்தடவையல்ல, தங்களது அரசியல் வியாபாரத்திற்கு அவர் ஒரு முட்டுக்கட்டை என பயப்படுகிறார்!

1௦௦ வித உண்மை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.