Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி!

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி!

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் எதிர்வரும் ஒக்டொபர் 02ஆம் திகதியாகும். அதனை முன்னிட்டு, யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்திய சாலை முன்பாக உள்ள காந்தி சிலையில் முன்றலில் இருந்து, வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை துவிச்சக்கர வண்டி பேரணி சென்றது.

யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு இந்த பேரணி ஆரம்பமானது.

01-10-600x338.jpg

https://athavannews.com/2022/1302026

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர பேரணி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

தமிழீழத்தின் காந்தியை(தியாக தீபம் திலீபனை) கொன்றுவிட்டு காந்திக்குக் காவடியெடுக்கும் இந்திய தூதரகம் என்ன சொல்ல முனைகிறது. இதனோடு வேலை வெட்டியில்லாமல் இழுபட ஒரு கூட்டம். தியாக தீபத்தின் ஈகத்தின் முன் காந்தியை நிலைநிறுத்தவே முடியாது. தன் இன்னுயிரை மக்களுக்காக துடிதுடிக்க அர்பணித்த திலீபனின் ஈகத்தை புரிந்துகொள்ள முடியாத இந்தியாவுக்கு காந்தியைப் பற்றிப் பேசவே இந்தியாவுக் அருகதையுண்டா? பெரியகோடு போட முனையும் இந்தியத் தூதரகமும் எடுபிடிகளும் சிந்திக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு யாழில் துவிச்சக்கர பேரணி!

வெளுக்கோணும் புடிச்சு......
எங்களுக்கு  உந்த காந்தி யார்?????
ஏன் சிங்கள இடங்களில் காந்தி ஜெயந்தி; வசந்தியள் இல்லை????
இந்தியர்களே உந்த காந்தியை மதிக்கிறார்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வெகு விரைவில் ஙாழ்ப்பாணத்தில் குரஙகிற்கு கோயில்கள் பல கட்டப்படும். யாழப்பாணம் இந்தியாவின் அறிவிக்கப்படாத மாநிலமாக மாறும். அதற்குத்தான் சிசசேனா >வேலன் சுவாமிகள் போன்றவரகளை முன்னிலைப்படுத்தி இந்தியாவின் துரோகத்தைக் கிழித்தெறிந்த திலிபன் நினைவுக் கூட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, குமாரசாமி said:

இந்தியர்களே உந்த காந்தியை மதிக்கிறார்கள் இல்லை.

எங்கோ ஒரு செய்தியில் படித்த நினைவு, இந்தக்காந்தி பிரிட்டிஷாருக்கு ஒரு கடிதம் கேள்வி கேட்டு எழுதியிருந்தாராம். அதாவது சந்திரபோஸுக்கு தூக்கக்குத்தண்டனை அழிக்க தாமதிப்பதேன் என்று? தனக்கு மட்டுமே புகழ் இருக்க வேண்டுமென விரும்பியிருப்பார் போலுள்ளது.

காந்தி காலத்தை கணித்து போலிக்கு உண்ணாவிரதமிருந்தார், அதனால் அவரை யாரும் அங்கு மதிக்காமல் இருக்கலாம், அவரின் போலித்துவம் நமது திலீபனின் உணர்வும் அவர்களுக்கு போலியாக தெரிந்திருக்கலாம். பிரிட்டிஷார் தமது அன்றைய இக்கட்டான நிலையில் காந்தியின் உணர்வுக்கு மதிப்பளிப்பதுபோல் நாட்டை விட்டு வெளியேறினர். அதனால் காந்தி தப்பினார். ஆனால் அவர்களின் போலியால் நம் வீரனின் வயிறு காய்ந்து உயிர் வெந்து மடிந்தது. ஈழத்து காந்தி என்று திலீபனை அழைப்பது தவறு. அவர் நமது ஈழத்து திலீபனாகவே இருக்கட்டும். அவரது போராட்டம் உண்மையானது, அவரோடு ஒப்பிடுவதற்கு காந்தி தகுதியற்றவர். அந்தக் காந்திதேசமே நமது உறவுகளை கொன்று குவித்து வேடிக்கை பாத்தது. பிரிட்டிஷார் காந்தியின் போராட்டத்தை மதித்து இந்தியாவை விட்டு வெளியேறினர் என்று அவர்கள் மார்பு தட்டவும் முடியாது. பிரிட்டிஷார்  காந்தியின் போராட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எங்களின் போராட்டத்தின் உயர்வையும் மதிக்கத் தெரிந்திருக்கும் அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

திலீபனும் பூபதியும் எங்கள் ஈழத்துக் காந்தியரே.

🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nochchi said:

தமிழீழத்தின் காந்தியை(தியாக தீபம் திலீபனை) கொன்றுவிட்டு காந்திக்குக் காவடியெடுக்கும் இந்திய தூதரகம் என்ன சொல்ல முனைகிறது. இதனோடு வேலை வெட்டியில்லாமல் இழுபட ஒரு கூட்டம். தியாக தீபத்தின் ஈகத்தின் முன் காந்தியை நிலைநிறுத்தவே முடியாது. தன் இன்னுயிரை மக்களுக்காக துடிதுடிக்க அர்பணித்த திலீபனின் ஈகத்தை புரிந்துகொள்ள முடியாத இந்தியாவுக்கு காந்தியைப் பற்றிப் பேசவே இந்தியாவுக் அருகதையுண்டா? பெரியகோடு போட முனையும் இந்தியத் தூதரகமும் எடுபிடிகளும் சிந்திக்கவேண்டும். 

 

1 hour ago, குமாரசாமி said:

வெளுக்கோணும் புடிச்சு......
எங்களுக்கு  உந்த காந்தி யார்?????
ஏன் சிங்கள இடங்களில் காந்தி ஜெயந்தி; வசந்தியள் இல்லை????
இந்தியர்களே உந்த காந்தியை மதிக்கிறார்கள் இல்லை.

 

1 hour ago, புலவர் said:

வெகு விரைவில் ஙாழ்ப்பாணத்தில் குரஙகிற்கு கோயில்கள் பல கட்டப்படும். யாழப்பாணம் இந்தியாவின் அறிவிக்கப்படாத மாநிலமாக மாறும். அதற்குத்தான் சிசசேனா >வேலன் சுவாமிகள் போன்றவரகளை முன்னிலைப்படுத்தி இந்தியாவின் துரோகத்தைக் கிழித்தெறிந்த திலிபன் நினைவுக் கூட்டத்தில் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள்.

 

35 minutes ago, satan said:

எங்கோ ஒரு செய்தியில் படித்த நினைவு, இந்தக்காந்தி பிரிட்டிஷாருக்கு ஒரு கடிதம் கேள்வி கேட்டு எழுதியிருந்தாராம். அதாவது சந்திரபோஸுக்கு தூக்கக்குத்தண்டனை அழிக்க தாமதிப்பதேன் என்று? தனக்கு மட்டுமே புகழ் இருக்க வேண்டுமென விரும்பியிருப்பார் போலுள்ளது.

காந்தி காலத்தை கணித்து போலிக்கு உண்ணாவிரதமிருந்தார், அதனால் அவரை யாரும் அங்கு மதிக்காமல் இருக்கலாம், அவரின் போலித்துவம் நமது திலீபனின் உணர்வும் அவர்களுக்கு போலியாக தெரிந்திருக்கலாம். பிரிட்டிஷார் தமது அன்றைய இக்கட்டான நிலையில் காந்தியின் உணர்வுக்கு மதிப்பளிப்பதுபோல் நாட்டை விட்டு வெளியேறினர். அதனால் காந்தி தப்பினார். ஆனால் அவர்களின் போலியால் நம் வீரனின் வயிறு காய்ந்து உயிர் வெந்து மடிந்தது. ஈழத்து காந்தி என்று திலீபனை அழைப்பது தவறு. அவர் நமது ஈழத்து திலீபனாகவே இருக்கட்டும். அவரது போராட்டம் உண்மையானது, அவரோடு ஒப்பிடுவதற்கு காந்தி தகுதியற்றவர். அந்தக் காந்திதேசமே நமது உறவுகளை கொன்று குவித்து வேடிக்கை பாத்தது. பிரிட்டிஷார் காந்தியின் போராட்டத்தை மதித்து இந்தியாவை விட்டு வெளியேறினர் என்று அவர்கள் மார்பு தட்டவும் முடியாது. பிரிட்டிஷார்  காந்தியின் போராட்டத்தை மதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் எங்களின் போராட்டத்தின் உயர்வையும் மதிக்கத் தெரிந்திருக்கும் அவர்களுக்கு.

 

8 minutes ago, Kapithan said:

திலீபனும் பூபதியும் எங்கள் ஈழத்துக் காந்தியரே.

🙏

இந்தியா....  ஸ்ரீலங்கா சிங்களவனுக்கு,  சகல உதவியும் செய்து... 
மரியாதையான தோரணையில் நடத்துவார்கள்.

தமிழனை... அழிக்க மட்டும், முந்திக்  கொண்டு வருவார்கள்.
அந்த சிங்கள பிரதேசத்தில்... காந்தி ஜெயந்தி நடத்த மாட்டார்களாம்...

வெட்கம் கெட்டவர்கள்  தமிழர் பிரதேசத்தில்,  சைக்கிள் ஓடிக்  காட்டுகிறார்கள்.
உலகத்திலேயே... உதவத்த கெட்ட நாடு என்றால், இந்தியாதான். 

எங்களுடைய இனத்தைப்  போல... கேவலமான இனம் இல்லை. மண்ணின் மைந்தன், திலீபனின் நினைவு அஞ்சலியை குழப்பிய பைத்தியக்காரங்கள்... இப்ப எங்கே போனார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

அந்த சிங்கள பிரதேசத்தில்... காந்தி ஜெயந்தி நடத்த மாட்டார்களாம்.

பிடரியில விழும் என்று நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள். "சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது." கண்டியளோ!

11 minutes ago, தமிழ் சிறி said:

எங்களுடைய இனத்தைப்  போல... கேவலமான இனம் இல்லை. மண்ணின் மைந்தன், திலீபனின் நினைவு அஞ்சலியை குழப்பிய பைத்தியக்காரங்கள்... இப்ப எங்கே போனார்கள்

அதைத்தான் நானும் நினைத்தேன். அவர்கள் சைக்கிள் பேரணி நடத்துவதில் அமளி. எங்கட மண்ணில் எங்கள் தியாகிகளுக்கு நினைவேந்தல் செய்ய தடை, காந்தியை தெரியாதவர்கள் சைக்கிள் பவனி, அதுக்கு பொலிஸ் பாதுகாப்பு. என்னத்தை சொல்வது? வேண்டுமென்றே கடுப்பேத்துகிறார்கள்!  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

திலீபனும் பூபதியும் எங்கள் ஈழத்துக் காந்தியரே

காந்தி பிரிட்டிஷாரிடம் இருந்து  இந்தியாவுக்கு விடுதலை வாங்கித்தந்தார் என்று அவரின் ஆதரவாளர்கள் பரப்புரை செய்தார்கள், தங்கள் கொடூரங்களை மறைப்பதற்கு இன்றுவரை அதை தூக்கிப்பிடிப்பவர்கள்; திலீபனின் அதே போராட்டத்தை ஏறி மிதித்து, எங்களது விடுதலையை சிங்களத்துக்கு தாரை வார்த்தனரே, இது தான் காந்தியின் அஹிம்ஸையா? இதுக்குள்ள காந்தியை இழுத்து திலீபனின், அன்னை பூபதியின்  தியாகத்தை கொச்சைப்படுத்துகிறீர்களா? அல்லது திலீபனை காந்தியோடு ஒப்பிட்டு காந்தியை மகிமைப்படுத்துகிறீர்களா தெரியவில்லையே? அவர்கள் எங்கள் தியாகிகள். இதில் எங்கே காந்தி வந்தார்? அவர் எங்களுக்கு என்ன செய்தார் என்று விளக்க முடியுமா?  அவர்களை அடக்க பாவிக்கப்பட்டது ஆயுதம், அதையே எங்களுக்கு எதிராக அது பாவித்தது. அஹிம்ஸையில் நாம் போராடியபோது நம்மை திரும்பி பார்த்து நமது குறை கேளாதவர்கள், நாம் ஆயுதம் ஏந்தியபோது ஓடி வந்து, கூடி அழித்துவிட்டு அஹிம்ஸை பற்றி பாடம் நடத்துகிறார்கள் நமக்கு! அஹிம்ஸையில் விடுதலையை அந்நியரிடம் இருந்து  பெற்றுத்த தந்தவரை ஆயுதத்தாலேயே அழித்தார்கள் தம்மவரே. அதிலிருந்தும் கற்றுக்கொள்ளவில்லை அவர்கள்.   

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த யாழில் உள்ள இந்திய துதரகம் எண்ணத்துக்கு இருக்கு நெருப்பை கொளுத்தி போட்டு விடுங்க .உண்மையான நெருப்பு அல்ல .😃

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தது RSS ன் பேரணிதானே...😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.