Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!

13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாகியுள்ளார் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் வயோதிபர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

https://athavannews.com/2022/1303322

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய கிழக்கிற்கு அனுப்புங்கள். 

😡

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி மனுசா... உனக்கெல்லாம், நல்ல சாவே வராதடா 🤬

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அடப்பாவி மனுசா... உனக்கெல்லாம், நல்ல சாவே வராதடா 🤬

மின்கம்ப தண்டனைகளை வெறுத்த கூட்டம் இப்ப அந்த தண்டனைகள் கொடுப்பவர்கள் வர மாட்டர்களா என்று ஏங்கவைக்கும் அளவுக்கு யாழ்பானியம் மேட்டுக்குடி போன்ற சொல்களுக்குள் மறைந்து கிடந்த மிருங்கங்களின் சுய ரூபம் வெளிப்படுகின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

மின்கம்ப தண்டனைகளை வெறுத்த கூட்டம் இப்ப அந்த தண்டனைகள் கொடுப்பவர்கள் வர மாட்டர்களா என்று ஏங்கவைக்கும் அளவுக்கு யாழ்பானியம் மேட்டுக்குடி போன்ற சொல்களுக்குள் மறைந்து கிடந்த மிருங்கங்களின் சுய ரூபம் வெளிப்படுகின்றது .

சுய லாபத்திற்காக விடுதலை போராட்டத்தை எதிர்த்தவர்கள் தான் இந்த கொடுமைகளை செய்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

சிறுமி வன்புணர்வு – முதியவருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது.

“விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது என்று விசாரணைகளின் போக்கில் அறியவரும். அதற்கு பின்னர் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயலாம்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கட்டளை வழங்கினார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து நீதிமன்றம் கட்டளையிட்டது.
இந்த நிலையில் பதின்ம வயது சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டின் கீழ் முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நளினி சுபாகரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணம் செய்தார்.

பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மேலதிக நீதிவான், நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு குறிப்பிட்டு சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

நேற்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டார்.

சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை முன்வைத்து சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

விசாரணைகள் நிறைவடைவடையாத காரணத்தினால் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மன்று சந்தேக நபரை வரும் 21ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

https://athavannews.com/2022/1304071

  • கருத்துக்கள உறவுகள்

@satan இந்த தாத்தாவுக்கும் அரசுதான் பயிற்சியாளராக இருந்திருக்குமோ என்ன 

தனி ஒருவன் திருந்தா விட்டால் சமுதாயம் சல்லடைதான் ஓட்டை விழுந்து கொண்டே இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

 இவர்கள் அப்பவும் இருந்தார்கள், எப்பவும் இருப்பார்கள். ஆனால் அதற்கான சந்தர்ப்பம்  கூலிப்படை எங்கள் நிலத்தில் குடிகொண்ட பின் கேப்பாரற்று வளருது. பயம், உணர்வு விட்டுப்போச்சு. குடுக்காரன், கொலை கொள்ளைகாரர் சீர்திருத்தும் நிலையில் இப்போ நாமிருக்கிறோம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.