-
Tell a friend
-
Topics
-
Posts
-
இலங்கை: முள்ளிவாய்க்கால் கஞ்சி தானங்களுக்கு தடை, கைது செய்யும் காவல்துறை - உரிமை மீறல் என மக்கள் கோபம் பட மூலாதாரம்,KUMANAN| X 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் மே 18ஆம் தேதி, இலங்கைப் போரில் இறந்த தமிழர்களின் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால், சமீப ஆண்டுகளாகவே இந்த நிகழ்வுகளை நடத்துவதில் பல தரப்பினரிடம் இருந்து, பல்வேறு விதமான தடைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த வாரம் வடகிழக்குப் பகுதி முழுவதிலும் பல இடங்களில், “முள்ளிவாய்க்கால் கஞ்சி” எனப்படும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், கடந்த இரு தினங்களில் நீதிமன்ற உத்தரவைப் பெற்று இரு நிகழ்வுகளுக்கு காவல்துறையினர் தடை போட்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவு சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்று தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரை கைது செய்துள்ளது. மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்ட கமலேஸ்வரன் தென்னில (22), கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வ வினோத் சுஜானி (40), நவரத்ன ராசா ஹரிஹர குமார் (43) ஆகிய நால்வரும் மே 27ஆம் தேதி வரை மூதூர் நீதிமன்றத்தால் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். போரில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் வகையில் மே 12ஆம் தேதி திரிகோணமலை சம்பூரில் உள்ள சேனையூர் பிள்ளையார் கோவில் முன்பு, உள்ளுர் மக்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்க இவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது அங்கு வந்த சம்பூர் காவல்துறையினர், வெள்ளமுள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்றுகூடல், உணவு வழங்குதல் போன்றவற்றுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தடை ஆணையை நால்வரிடமும் வழங்க முற்பட்டுள்ளனர். அப்போது அவர்கள் அதை வாங்க மறுத்துள்ளனர். அந்தத் தடை உத்தரவில் வெள்ளமுள்ளிவாய்க்காலில் எந்தவிதமான பள்ளிகள், கோவில்கள் அருகில் இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தவும், வாகன அணிவகுப்புகளை நடத்தவும், பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையிலான கூட்டத்தைக் கூட்டவும், உணவுப் பொருட்கள் வழங்கவும் தடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்தத் தடை உத்தரவை, மகாவீரர் சங்கத்தின் தலைவர் கந்தையா காண்டீபன், துணைத் தலைவர் சாந்தலிங்கம் கோபிராசா, பொருளாளர் நவரத்ன ராசா ஹரிஹர குமார், செயலாளர் செல்வ வினோத் சுஜானி, இதர உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு 14 நாட்களுக்குப் பிறப்பித்துள்ளது. விடுதலை புலிகளுக்கான கொண்டாட்டமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான தயாரிப்புப் பணிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக கடந்த மே 14ஆம் தேதி காவல்துறையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில், உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள பல காவல் வட்டாரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு சிலர் தயாராகி வருவதாக புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூர்வதே இக்குழுவின் நோக்கம் என காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, திரிகோணமலை சம்பூர் காவல் பிரிவில் விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொண்டாடுவது சட்டவிரோதமான செயல் என்று, சம்பூர் காவல் நிலைய பொறுப்பதிகாரி மூதூர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து தடை உத்தரவைப் பெற்றுள்ளார். 'கஞ்சி விநியோகித்ததால் கைது செய்யப்படவில்லை' படக்குறிப்பு,சம்பூரில் நடத்தப்பட்ட கஞ்சி வழங்கும் நிகழ்வுக்குத் தடை விதித்த காவல்துறை அதை முன் நின்று நடத்திய மூன்று தமிழ் பெண்கள் உட்பட நால்வரைக் கைது செய்துள்ளது. இந்த வழக்கில் நால்வருக்கும் ஒரே மாதிரியான நீதிமன்ற உத்தரவை காவல்துறை பெற்றுள்ளது. சம்பூர் காவல் நிலையத்தின் காவலர், கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று நீதிமன்ற தடை உத்தரவை அந்தக் குழுவிடம் வழங்கியதாகவும், ஆனால் அதை ஏற்க மாட்டோம் என்று கூறி அவர்கள் நிகழ்வை தொடர்ந்து நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் கைதாகியுள்ள நால்வரில் ஒருவர் இந்நிகழ்வில் ஈடுபடாதவர், அவரும் இதில் பங்கேற்று கைதாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால், காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் வேறு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறிய வழக்கில் சந்தேக நபரைக் கைது செய்வதற்காக அவரது மகள் வீட்டுக்கு காவல்துறை சென்றபோது அவரின் மகள் கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்வதாக காவல் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உடனே காவலர்கள் நிலைமையைக் கட்டுப்படுத்தி அந்தப் பெண்ணையும், மூன்று சந்தேக நபர்களையும் கைது செய்ததாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் காவலர்களை நோக்கி கூறிய ஆயுதத்தால் தாக்கியதில் பெண் காவலர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் என்ன? மேற்கண்ட சந்தேக நபர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி, நீதிமன்ற உத்தரவை மீறுதல், ஆபத்தான ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், காரணத்துடன் அல்லது விருப்பத்துடன் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல், அரசு ஊழியரின் உத்தரவை மீறுதல் மற்றும் கிரிமினல் மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நால்வரும் 12.05.2019 அன்று சம்பூர் காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மூதூர் கௌரவ நீதவான் நீதிமன்றில் 13.05.2024 அன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே 27ஆம் தேதி வரை ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று காவல் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், திரிகோணமலை துறைமுகம் மற்றும் உப்புவெளி காவல் பிரிவுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் இடம்பெற உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்த நிலையில், அதைத் தடுக்கும் வகையில் அந்த காவல் நிலையங்களின் காவலர்கள் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'வெசாக் உணவு தானத்தை தடுக்குமா காவல்துறை?' படக்குறிப்பு,ஈழப்போர் உச்சத்தில் இருக்கும்போது மக்கள் உணவாகச் சமைத்து உண்ட கஞ்சியே அவர்கள் நினைவாக ஆண்டுதோறும் சமைக்கப்படுகிறது. பிபிசி சிங்கள சேவையிடம் பேசிய மனித உரிமை சட்டத்தரணியும், செயற்பாட்டாளருமான அம்பிகா சத்குணநாதன், “மே மாதத்தில் தமிழ் மக்கள் போரில் இறந்த, குறிப்பாக இறுதிக்கட்டத்தில் இறந்த அனைவரையும் நினைவு கூர்வார்கள்” என்று கூறினார். கஞ்சி விநியோகத்தைத் தடை செய்வதற்கான முயற்சிகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “இந்த மாதம் அவர்கள் போரில் இறந்த அனைவரையும் நினைவு கூர்கின்றனர். ஆனால், அரசாங்கம் அவர்களைத் தடுக்க முயல்கிறது" என்றார். “ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் நவம்பர் மாதம் மகாவீரர் தினத்தில் நினைவுகூரப்படுவதாகவும், போரில் உயிரிழந்த அனைவரும் மே மாதத்தில் நினைவுகூரப்படுவதாகவும்” அவர் தெரிவித்தார். மேலும், கஞ்சி வழங்கும் நிகழ்வுகளைத் தடை செய்ய காவல்துறை கூறும் காரணங்களில் சுகாதாரமும் ஒன்று. இதே வெசாக் தான நிகழ்வுகளை அவர்களால் நிறுத்த முடியுமா என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார். “இந்த மாதத் தொடக்கத்தில் மே தினப் பேரணிகள் நடந்தன. அப்போதும் மக்கள் உணவைப் பகிர்ந்து கொண்டனர். அங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அடுத்த வாரம் வெசாக் பண்டிகை நடக்கவுள்ளது. அதிலும் உணவு தானம் நடைபெறும். அதைத் தடை செய்ய காவல்துறை நீதிமன்ற உத்தரவைப் பெறுமா?" 'எல்லாவற்றையும் மறப்பதா நல்லிணக்கம்?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போரில் இறந்தவர்களின் சிதிலமடைந்த கல்லறைகள் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை மீறப்படுவது நாட்டின் நல்லிணக்கத்திற்குத் தடையாக உள்ளதாக சட்டத்தரணி அம்பிகா சத்குணநாதன் வலியுறுத்துகிறார். நல்லிணக்கம் குறித்து அரசாங்கம் கொண்டுள்ள பார்வை என்ன என்பதை அவர் விளக்கினார். “நல்லிணக்கத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். என்ன நடந்தது என்பதை அறிய உரிமை இல்லை. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்த உரிமை இல்லை. நமக்கு நடந்த அனைத்தையும் மறந்துவிடுவது, போர் குறித்தான அரசுத் தரப்பு வாதம் மற்றும் போரினால் உண்டான பின்விளைவுகளை எதிர்க்காமல் இருப்பது ஆகியவைதான் நல்லிணக்கம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.” மேலும், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையை அறியவும், நீதியைப் பெறவும், நினைவேந்தல் உரிமையும், இழப்புகளுக்கு நஷ்டஈடு பெறும் உரிமையும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மனித உரிமை ஆணையத்தில் புகார் படக்குறிப்பு,போரில் இறந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்கான உரிமையை மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ள போதிலும் காவல்துறை நீதிமன்ற உதவியுடன் அதைத் தடுக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் புகார் செய்துள்ள இளம் ஊடகவியலாளர் அமைப்பு, “மனித உரிமைகள் ஆணைக்குழு ‘நினைவேந்தல் உரிமையை’ 2016இல் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டு காவல்துறையினர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக” தெரிவித்துள்ளது. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டப்பிரிவின் (ஐசிசிபிஆர்) கீழ் அவர்கள் குற்றம் செய்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி அவர்கள் ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட ஒரு நாட்டில் நீதி, நல்லிணக்கம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் சம உரிமைகளை மட்டும் அரசாங்கம் மதிக்கவில்லை என்பதையே காவல்துறையினரின் இந்தத் தன்னார்வப் பணி காட்டுவதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தனது புகாரில் தெரிவித்துள்ளார். மற்றொரு தடை உத்தரவு படக்குறிப்பு,இந்த ஆண்டு இதுவரை இரண்டு இடங்களில் கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இதற்கிடையில், மே 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை கல்முனை பாண்டிரிப்பு அரசடி அம்மன் கோவிலுக்கு அருகில் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். கல்முனை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நோக்கில் இவ்வாறான செயல்பாடுகளை மேற்கொள்வது மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான செயல் என்பதாலேயே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அமுலுக்கு வரும் இந்த நீதிமன்றத் தடை உத்தரவு தமிழ் தேசிய ஜனதா பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஷ்பராஜ் துஷானந்தனின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் கஞ்சி என்றால் என்ன? படக்குறிப்பு,மக்களிடம் ஒவ்வொரு பொருளாக வசூலித்து சமைக்கப்படும் உணவே இந்தக் கஞ்சி. இது கடைசிகட்ட போரில் உயிரிழந்த மக்களின் நினைவாகக் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்த நிலையில் அந்தப் போர் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பல வார காலமாக உணவு கிடைப்பதில் சிரமங்களை எதிகொண்டனர். அந்தச் சூழலில் தமிழர்கள் அவர்களுக்குக் கிடைத்த அரிசியைக் கொண்டு, கஞ்சி தயாரித்து தமது பசியைப் போக்கிக் கொண்டனர். எனவே அதை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 12 முதல் 18 வரை வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்படும் அரிசியில் இருந்து கஞ்சி சமைத்து தானம் செய்வார்கள். மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் பேரணியுடன் இந்த நினைவேந்தல் வாரம் நிறைவடைகிறது. https://www.bbc.com/tamil/articles/czrxjm718j2o
-
லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU 18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில் அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
-
By Kavi arunasalam · Posted
கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு -
By கிருபன் · பதியப்பட்டது
இன அழிப்பின் நினைவழியாத நாள்.. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம். எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது https://newuthayan.com/article/இன_அழிப்பின்_நினைவழியாத_நாள்.. -
By ஏராளன் · பதியப்பட்டது
18 MAY, 2024 | 07:28 AM முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts