Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

By RAJEEBAN

20 DEC, 2022 | 01:18 PM
image

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

மதுரை, மதுரையைச் சேர்ந்த ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் மதுரையில் உள்ள உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து நூல்களை வைக்கும், நூலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தெரிவித்திருந்தார்.

 

இந்த மனு மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், தேவையான நிதியை ஒதுக்கி சங்ககால தமிழ் இலக்கியம் குறித்தும், நவீன கால தமிழ் இலக்கியம் குறித்தும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

https://www.virakesari.lk/article/143640

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

தமிழ் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

தமிழ் மொழியை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

ஆம். முக்கியமாக முதலில் ஓர் சட்டம் கொண்டு வரவேண்டும்.

பொது  நிகழ்வுகளில், அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் முழுமையாக தமிழிலியே கட்டாயமாக அறிவிக்க வேண்டும். வேற்று மொழிகளை தமிழ் அறிவிப்பில் கலப்பது தண்டனைக்கு உரிய குற்றம்.

வேற்று மொழியில் பிறிம்பான அறிவுப்பு இருக்கலாம், ஆனால், கலப்பு கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும்.

அறிவிப்பாளர், தொகுப்பாளர்கள், தமிழக அரசு பயிற்சி திட்டத்தின் கீழ் தமிழில் அறிவிப்பதற்கு பயிற்றுவிக்கப்ப்பட்டு  இருக்க வேண்டும்.

தமிழகத்திலும் சரி, இலங்கையிலும் சரி ஏதாவது ஒரு  மொழியில் கூட உரையாடலை முழுமையாக தொடர முடியாத இளைய சமூகம் உருவாக்கி வருகிறது.   

எமது மொழியை நாம் செம்மை படுத்தாமல், வேறு யார் செய்வது.

தமிழக அரசு செய்யாத தொடங்கினால், வேற்று மாநிலங்கள் முந்திக்  கொள்ளும்.   
 
வளர்ந்த மேலை நாடுகளில் கூட, அவர்கள் மொழியை உரிய மட்டத்தில் பிரயோகிக்கும் தகமை வேண்டப்படுகிறது. 


 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

உந்த வருத்தம் இலங்கை தமிழ் ஊடகளிடமும் மக்களிடமும் தொற்றி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் தமிழ் பேசும்படி உயர் நீதிமன்றம் சொல்ல வேண்டிய நிலை 😭

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அறிவியல் மொழியாக்க வேண்டும். அதுவே தீர்வு. தமிழ் மொழி என்பது பழைய கம்பராமாயணத்தின் புகழ் பாடும் பழமை இலக்கியமாக மட்டும் வைத்திருக்காமல், காலத்திற்கேற்ப சீர் திருத்தப்பட்டு செம்மை டுத்தபடல் வேண்டும்.  பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை படுத்த 50 ஆண்டுகள் தேவைப்படும் அளவுக்கு நாம் மிக பின்தங்கி இருந்திருக்கிறோம். (அறிமுகம் 1935. நடைமுறை 1980 க்கு பின்பு) 
 

அந்த சீர்திருத்தம் கணணித்தமிழுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. அது போல் நவீன காலத்திற்கு ஏற்ப அதை திருத்தி அமைப்பது தமிழ் அறிஞர்கள் என்று கூறுவோரின் கடமை.  உயர் கல்வியை கற்பதற்கு தமிழில் நூல்கள் இல்லை.  அந்த குறை நீங்க உயர்கற்கை நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கபட்டல் வேண்டும்.  

தமிழ் அறிஞர்கள் பழந்தமிழ் பெருமை பேசுவதில் செலவிடும் நேரத்தை விட்டு  எதிர்கால தமிழுக்கு தம்மாலானதை செய்ய வேண்டும்.  சீதையின் கற்பை பற்றியும்,  இராமனின் பெருமை பற்றியும் மணிக்கணக்கில் மேடை பேச்சே தமிழ் தொண்டு என்று இருப்பதை தமிழ் அறிஞர்கள் முற்றாக கைவிட வேண்டும்.  வைத்தியம், வணிகம், தொழில்நுட்பம், கட்டிக்கலை முதலிய துறைகளில் உலக மொழிகளில் உள்ள நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கபடல் வேண்டும் அல்லது தமிழில் அவ்வாறான நூல்கள் எழுதப்படல் வேண்டும். அதன் மூலமே தமிழ் அறிவியல் மொழி என்பதை நடைமுறை  நிரூபிக்க முடியும்.  இதன் மூலமே எதிர் கால சந்ததியினருக்கு பெருமையுடன் எமது மொழியை கடத்த முடியும். அதை விடுத்து தமிழ், தமிழ் என்று பழம் பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை.
 

மனித வாழ்க்கைக்கு எந்த மொழி உதவுகிறதோ அந்த மொழியையே மக்கள் நாடுவர்.  நாம் வாழ்வதற்கும் சுலபமாக தொடர்பாடல் செய்வதற்குமே மொழியே தவிர மொழிக்காக மனிதர்கள் வாழ முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிந்து செயற்பட்டடால்  இவ்வாறான பயம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, island said:

தமிழ் அறிவியல் மொழியாக்க வேண்டும். அதுவே தீர்வு. தமிழ் மொழி என்பது பழைய கம்பராமாயணத்தின் புகழ் பாடும் பழமை இலக்கியமாக மட்டும் வைத்திருக்காமல், காலத்திற்கேற்ப சீர் திருத்தப்பட்டு செம்மை டுத்தபடல் வேண்டும்.  பெரியாரின் எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறை படுத்த 50 ஆண்டுகள் தேவைப்படும் அளவுக்கு நாம் மிக பின்தங்கி இருந்திருக்கிறோம். (அறிமுகம் 1935. நடைமுறை 1980 க்கு பின்பு) 
 

அந்த சீர்திருத்தம் கணணித்தமிழுக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. அது போல் நவீன காலத்திற்கு ஏற்ப அதை திருத்தி அமைப்பது தமிழ் அறிஞர்கள் என்று கூறுவோரின் கடமை.  உயர் கல்வியை கற்பதற்கு தமிழில் நூல்கள் இல்லை.  அந்த குறை நீங்க உயர்கற்கை நூல்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கபட்டல் வேண்டும்.  

தமிழ் அறிஞர்கள் பழந்தமிழ் பெருமை பேசுவதில் செலவிடும் நேரத்தை விட்டு  எதிர்கால தமிழுக்கு தம்மாலானதை செய்ய வேண்டும்.  சீதையின் கற்பை பற்றியும்,  இராமனின் பெருமை பற்றியும் மணிக்கணக்கில் மேடை பேச்சே தமிழ் தொண்டு என்று இருப்பதை தமிழ் அறிஞர்கள் முற்றாக கைவிட வேண்டும்.  வைத்தியம், வணிகம், தொழில்நுட்பம், கட்டிக்கலை முதலிய துறைகளில் உலக மொழிகளில் உள்ள நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கபடல் வேண்டும் அல்லது தமிழில் அவ்வாறான நூல்கள் எழுதப்படல் வேண்டும். அதன் மூலமே தமிழ் அறிவியல் மொழி என்பதை நடைமுறை  நிரூபிக்க முடியும்.  இதன் மூலமே எதிர் கால சந்ததியினருக்கு பெருமையுடன் எமது மொழியை கடத்த முடியும். அதை விடுத்து தமிழ், தமிழ் என்று பழம் பெருமை பேசுவதில் எந்த பயனும் இல்லை.
 

மனித வாழ்க்கைக்கு எந்த மொழி உதவுகிறதோ அந்த மொழியையே மக்கள் நாடுவர்.  நாம் வாழ்வதற்கும் சுலபமாக தொடர்பாடல் செய்வதற்குமே மொழியே தவிர மொழிக்காக மனிதர்கள் வாழ முடியாது என்ற ஜதார்த்தத்தை புரிந்து செயற்பட்டடால்  இவ்வாறான பயம் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. 

உண்மை.

இந்தத் திசையிலான முயற்சி ஏற்கனவே தமிழ் நாடு அரசின் மொழிப்பிரிவினால் ஆரம்பிக்கப் பட்டு விட்டது. கடந்த ஒரு  வருடமாக தமிழில் கலைச் சொற்களை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் நிபுணர்களிடமிருந்து சேகரித்து ஒரு சொற்குவை ஏழு இலட்சம் சொற்களுடன் உருவாக்கியிருக்கிறார்கள். இது இன்னும் தொடர்கிறது. நானும் ஒரு நாற்பது மருத்துவ உயிரியல் சொற்கள் பங்களித்திருக்கிறேன். 

இணைப்பு: https://www.sorkuvai.com/

அடுத்த முயற்சியாக ஒவ்வொரு விஞ்ஞான தொழில் நுட்பத் துறையிலும் ஒரு கலைச்சொல் அகராதி உருவாக்கப் போகிறார்கள். முதல் அகராதி மருத்துவ உயிரியல் அகராதியாக 2023 இறுதியில் வெளிவர இருக்கிறது. இதன் ஆலோசனைக் குழுவிலும் என் பங்களிப்பு இருக்கும்.

விளம்பரங்கள் இல்லாமல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், திராவிடன் தமிழுக்கு சேவை செய்தால் சில தமிழருக்கு விளம்பரம் செய்தாலும் கூட அது மூளையில் ஏறாது.😂

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2022 at 17:11, ஈழப்பிரியன் said:

அப்போ தமிழகத்தில் தமிழே இல்லையா கோப்பால்?

13 hours ago, விசுகு said:

தமிழ் நாட்டில் தமிழ் பேசும்படி உயர் நீதிமன்றம் சொல்ல வேண்டிய நிலை 😭

13 hours ago, Kadancha said:

எமது மொழியை நாம் செம்மை படுத்தாமல், வேறு யார் செய்வது.

தமிழக அரசு செய்யாத தொடங்கினால், வேற்று மாநிலங்கள் முந்திக்  கொள்ளும்.   
 
வளர்ந்த மேலை நாடுகளில் கூட, அவர்கள் மொழியை உரிய மட்டத்தில் பிரயோகிக்கும் தகமை வேண்டப்படுகிறது. 

 

சரியாகச் சொன்னீர்கள் 👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.