Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதிலும் வெடித்தது பூகம்பம் – இறுதி முடிவில் குழப்பம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசிய கட்சிகள் ஒன்றுபடுவதிலும் வெடித்தது பூகம்பம் – இறுதி முடிவில் குழப்பம்!

12-22.jpg

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் இருவேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இறுதி முடிவெடுப்பது என்று அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சூம் செயலி ஊடாக நேற்று மாலை இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. இதன் போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 75 ஆம் ஆண்டு விழா சர்ச்சை தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

அது தொடர்பில் கட்சியின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுப்பது எனத் தெரிவிக்கப்பட்டு அந்த விடயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகப் பயணிப்பது குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒன்றாக எதிர்கொள்வது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாகவும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாகச் செயற்படுவதன் நன்மை அதன் அவசியம் தொடர்பிலும் விளக்கினார்.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இப்போதுள்ள நிலையிலேயே தேர்தலை எதிர்கொள்வோம் என்று குறிப்பிட்டார்.

மேலும், கூட்டமைப்பின் வாக்காளர்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் புதிய கூட்டுத் தேவையில்லை என்றும் அது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

கட்சியின் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், கருத்துத் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அனந்தி போன்று பலரும் வெளியேறிச் சென்று தனிக் கட்சி உருவாக்கினார்கள். இனிமேல் வந்து அதிக ஆசனங்களைக் கேட்பார்கள். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளால் கூட எமக்கு பல இடங்களில் பாதிப்பே” என்று குறிப்பிட்டார்.

இதன் போது, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், எந்தக் கட்சியோடும் சேராமல் இலங்கைத் தமிழரசுக் கட்சியாகவே, தனித்துத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், இந்த விடயங்கள் தொடர்பில் பரந்துபட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று கருத்து வெளியிட்டார். அதேவேளை அதிபர் சட்டத்தரணி கே.வி. தவராசா, தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இது குறித்து, இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கடும் வாக்குவாதத்தின் மத்தியில் இழுபறிபட்ட நிலை தொடர்ந்ததால், எதிர்வரும் 6ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுப்பது என்று தெரிவித்து கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.
 

https://akkinikkunchu.com/?p=233576

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அம்பிகா அன்றி மட்டும் அந்த சபையில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா...?
அதுசரி எங்கே சபையில்  சம்சும்மை காணோம்  

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு பிரபாகரன் இன்றி இவர்களை தமிழ் மக்களுக்காக ஒற்றுமைப்படுத்த முடியாது. பல்லாயிரம் உயிர்களைக் கொடுத்து பெறப்பட்ட அந்த ஒற்றுமையை குலைத்ததில்.. சம் சும்  கும்பலுக்கே கூடிய பங்கு. அந்த கும்பலோடு முன்னாள் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்தால் எப்படி ஒற்றுமை பிறக்கும்..??! கனவு காண்பதிலும் ஒரு நியாயம் அநியாயம் வேணாமா..?!

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா அன்றி மட்டும் அந்த சபையில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா...?
அதுசரி எங்கே சபையில்  சம்சும்மை காணோம்  

சண்டைக்கு... காரணமானவர்கள் சபைக்கு வர மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த பத்திரிகை மற்றும் இணையதளங்களில் தலைப்பு வைப்பவர்களை ஒழிக்கணும். 

பூகம்பம் மண்ணாங்கட்டி என்றபடி 😡

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இன்னொரு பிரபாகரன் இன்றி இவர்களை தமிழ் மக்களுக்காக ஒற்றுமைப்படுத்த முடியாது. பல்லாயிரம் உயிர்களைக் கொடுத்து பெறப்பட்ட அந்த ஒற்றுமையை குலைத்ததில்.. சம் சும்  கும்பலுக்கே கூடிய பங்கு. அந்த கும்பலோடு முன்னாள் ஒட்டுக்குழுக்களும் சேர்ந்தால் எப்படி ஒற்றுமை பிறக்கும்..??! கனவு காண்பதிலும் ஒரு நியாயம் அநியாயம் வேணாமா..?!

சுமத்திரன்சார்பாக அவரின் கருத்தை அவரின் சீடப்பிள்ளை சாணக்கியன் கருத்தெரிவித்து இருக்கிறார். சிறிதரன் கழுவுற மீனில நழுவுறமீனாக கருத்துச் சொல்லி கடைசியில் எந்தக்கருத்து ஒங்குதோ அந்தப்பக்கம் பாய மதில்மேல் பூனையாக கருத்துத்தெரிவித்திருக்கிறார். சத்தியலிங்கமும் சுமத்திரனுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். மற்றவர்கள் மாவைைக்கு  துதிபாடுகிறார்கள். 

2 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா அன்றி மட்டும் அந்த சபையில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா...?
அதுசரி எங்கே சபையில்  சம்சும்மை காணோம்  

அவர்கள் இவர்களை விட்டுவிட்டு ரணிலை சந்திக்க நேரங்கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

1 hour ago, விசுகு said:

முதலில் இந்த பத்திரிகை மற்றும் இணையதளங்களில் தலைப்பு வைப்பவர்களை ஒழிக்கணும். 

பூகம்பம் மண்ணாங்கட்டி என்றபடி 😡

 பூகம்பம்.அதிரடிஈசீற்றம்>காட்டம்>பாய்ச்சல் இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய கலைச்சொற்கள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புலவர் said:

பூகம்பம்.அதிரடிஈசீற்றம்>காட்டம்>பாய்ச்சல் இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய கலைச்சொற்கள்.

விபச்சார வியாபாரிகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, புலவர் said:

 பூகம்பம்.அதிரடிஈசீற்றம்>காட்டம்>பாய்ச்சல் இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய கலைச்சொற்கள்.

கடந்து போகாமல் திரும்பிப் பார்க்கவைக்கவேண்டுமே!

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின் தலைமை மீது தவராசா சீற்றம்..

IMG-20221227-222209.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்.

சூம்’ செயலி ஊடாக நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திருமதி அனந்தி சசிதரன், அருந்தவபாலன் போன்று பலரை தமிழரசுக் கட்சிதான் வெளியேற்றியது. எல்லோரும் பிரிந்து செல்கின்றார்கள். ஆரம்பத்தில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பின்பு 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்போது 10 பேர் என்று கூட்டமைப்பின் ஆதரவு சுருங்கி வருகின்றது. கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான்.

எமது கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் மூன்றாம் இடத்தையே பெற்றது. முதலிடத்தில் சிங்கள தேசியக் கட்சி பெற்றது. நாம் இன்னமும் பிரிந்து – பிளவுபட்டு நிற்போம் என்றால் உடுப்பிட்டித் தொகுதியில் கிடைத்த இடம்தான் எல்லாத் தொகுதிகளிலும் கிடைக்கும். வீட்டுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் பிளவுபட்டுநிற்பதால் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டோம்.

இவ்வளவுக்கும் காரணம் கூட்டமைப்பின் தலைமைதான். ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் தான்தோறித்தனமான முடிவுகளுக்கு இடம்கொடுத்தமையால்தான் இந்த நிலைமை ஏற்பட்டது.

எதிர்காலத்தில் கட்சியில் ஒரு நிபுணத்துவக் குழுவை அமைத்து கட்சியை ஜனநாயகப் பண்பாக மாற்றுவோம். முதலில் தமிழரசுக் கட்சியைச் சீர்திருத்த ஒரு நிபுணர் குழுவை அமைப்போம்.

தமிழரசுக் கட்சியை சீராக்கி விட்டு அதன் பின்னர் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதே பொருத்தம். தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டும்” – என்றார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2022/12/181730/

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பிகா அன்றி மட்டும் அந்த சபையில் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா...?
அதுசரி எங்கே சபையில்  சம்சும்மை காணோம்  

ஏன் இப்போ அவர்களை தேடுகிறீர்கள்? கண்ணுக்கு குளிர்ச்சியாய் காட்சிகள் பாக்க முடியலையே என்கிற ஏக்கம் ஐயாவுக்கு!
இதுகளுக்கெல்லாம் பிரம்படிதான் அவசியம். தங்களை ஒழுங்கமைக்க முடியல அதுக்குள்ள மக்களுக்கு விடியல் வாங்கித்தரப்போகுதுகள். சிங்களவனும் தெரிந்தே எல்லோரும் சேர்ந்து வாருங்கள் என்று அழைக்கிறான். த. தே. கூட்டமைப்பு மட்டும் தமிழரின் பிரதிநிதிகள் இல்லை என்கிறான் உதயன் கம்மன்பில. சுமந்திரன் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடும் என்கிறார். இதிலிருந்து குடுமி யார் கையில் என்று யோசித்தறிந்து கொள்ளுங்கள்!    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.