Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாசங்கத்தினரை, சிங்கள பௌத்த சக்திகளை மீறி இந்த நாட்டில் எதையும் செய்யமுடியாது . அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் : மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாசங்கத்தினரை மீறி இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது என

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

சிங்கள பௌத்த சக்திகளை மீறி எதையும் செய்யமுடியாது. அதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

மேலும், வடக்கு தமிழ் பிரதிநிதிகள் அனைத்தையும் கேட்கக் கூடாது. நடுநிலைமையாக அவர்கள் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்..

 

” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.” – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

 

எனவே, கடும்போக்கை கைவிட:டு வடக்கு அரசியல் தலைவர்கள், நடுநிலை நோக்கி நகர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார்.

 

அத்துடன், தான் ஜனாதிபதியாக இருந்தபோது வடக்கில் 95 சதவீத காணிகளை விடுவித்ததாக தெரிவித்த மைத்திரி, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

https://www.madawalaenews.com/2023/02/i_62.html

  • கருத்துக்கள உறவுகள்

இது தெரியாமலா தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர்களின் வாக்கில் அரச கதிரை ஏறி, இந்த சக்திகளின் மூலம் அவர்களை அழித்தீர்கள்? இப்போ நஷ்ட ஈடு கொடுக்க பிச்சை எடுக்கிறீர்கள், மக்களை காப்பாற்ற முடியாத நீங்கள், அவர்கள் தாளத்துக்கு ஆடிய உங்களை, தர்மத்தை போதித்துகாப்பாற்ற முடியாத பிக்குகள் நாட்டின் சாபக்கேடு!

8 hours ago, colomban said:

கடும்போக்கை கைவிட:டு வடக்கு அரசியல் தலைவர்கள், நடுநிலை நோக்கி நகர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

நடுவுநிலைமை என்றால் என்ன என்று தெரியாததுகள் நடுவுநிலைமை பற்றி கதைக்க வெளிக்கிட்டு மூக்குடைபட்டு, தலைகுனிந்து நிற்கிறார்கள் ஆனால் அதன் அர்த்தம் இன்னும் புரியவில்லை. பரம்பரை அப்படி, வரலாறை மறைத்து புதிய வரலாற்றை புனைந்து அதுதான் வரலாறு என அடம்பிடிக்கும் கூட்டம், நடுவுநிலைமை பற்றி கதைக்குதுகள். பறித்ததை திருப்பித்தாருங்கள். மக்களை கொள்ளையடித்து வெருட்டுவது ஒரு அரசியலுக்கு அழகல்ல பவுத்தத்துக்கும் பொருத்தமல்ல. இதுகள் பிக்குகளல்ல பிசாசுகள்! தமிழரிடம் இருந்து பிடுங்கி அந்நியருக்கு விற்று இப்போ ஒன்றுமில்லாமல் ஊழையிட்டுக்கொண்டு திரியுதுகள்.

8 hours ago, colomban said:

” பௌத்த தேரர்களை பகைத்துக்கொண்டு இலங்கையில் எதையும் செய்ய முடியாது. சிங்கள பௌத்த சக்திகளும், பிக்குகளும் எதிர்க்கும் விடயத்தை நிறைவேற்றவும் முடியாது. 13 விடயத்துக்கும் இது பொருந்தும்.”

ஒன்று செய்யுங்கள்; நீங்களெல்லாம் அரசியலில் இருந்து விலகி இதுகளிடம் அரசியலை கையளியுங்கள், நாங்கள் அவர்களுடன் பேசித்தீர்த்துக்கொள்கிறோம். எதற்கு வீணாக நீங்கள் இடையில தரகர் வேலை பாத்துக்கொண்டு. எதற்கு சர்வதேச பேச்சுக்களில் நீங்கள் கலந்து கொண்டு இவர்களை மீறி செய்ய முடியாதவற்றை செய்வோம் என்று வாக்குறுதி கொடுக்கிறீர்கள்? இவர்ளை அனுப்பி வைப்பதுதான். நரியாரின் இறுதித்திட்டமும் இதுதான், இதை காரணம் காட்டி இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது. அதுகள் உழைத்து சாப்பிடுவதில்லை பாத்திரமேந்தி உண்பதுகள் அந்த நிலைக்கு நாட்டை கொண்டுவந்து விட்டிருக்குதுகள். இன்னும் இதுகளை நம்பிக்கொண்டு, இதுக்கு மேல் இழப்பதற்கு இதுகளை தவிர வேறொன்றுமில்லை நாட்டில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

large.4968154F-B038-4C7F-AA19-2D58CB9A409C.jpeg.ec012a7b3f91caa6e4b435c1b3c4c143.jpeg

இந்த விசயம் உதிலை கூலிங்கிளாசோட நிக்கிறவருக்கு தெரியுமே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

large.4968154F-B038-4C7F-AA19-2D58CB9A409C.jpeg.ec012a7b3f91caa6e4b435c1b3c4c143.jpeg

இந்த விசயம் உதிலை கூலிங்கிளாசோட நிக்கிறவருக்கு தெரியுமே?

ஆதாரது பக்கத்தில? மெய்ப்பாதுகாவலரோ? அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  சுதந்திரத்தினத்தில் பங்கெடுக்காமல், வடகிழக்கு போராடத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தன் வழி தனி வழியென்று கொஞ்சப்பேரை வளைச்சுக்கொண்டு போய், போராட்டத்தோடு சம்பந்தமில்லா உடை, நடை அவர் பிரச்சனை வேறு ஐயா! 

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

ஆதாரது பக்கத்தில? மெய்ப்பாதுகாவலரோ? அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  சுதந்திரத்தினத்தில் பங்கெடுக்காமல், வடகிழக்கு போராடத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தன் வழி தனி வழியென்று கொஞ்சப்பேரை வளைச்சுக்கொண்டு போய், போராட்டத்தோடு சம்பந்தமில்லா உடை, நடை அவர் பிரச்சனை வேறு ஐயா! 

எனக்கு இவர்கள் மனநல நோயாளிகள் ஆகி விட்டார்கள் போல் தெரிகிறது.
சம்பந்தம் இல்லாமல் கதைப்பதும், சம்பந்தமில்லாத உடைகளை அணிவதும் 
அதனைத்தான் காட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு இவர்கள் மனநல நோயாளிகள் ஆகி விட்டார்கள் போல் தெரிகிறது.
சம்பந்தம் இல்லாமல் கதைப்பதும், சம்பந்தமில்லாத உடைகளை அணிவதும் 
அதனைத்தான் காட்டுகின்றது.

தன்னை விட கெட்டிக்காரன் இல்லை என்கிற மமதை மனநிலையை பாதித்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு இவர்கள் மனநல நோயாளிகள் ஆகி விட்டார்கள் போல் தெரிகிறது.
சம்பந்தம் இல்லாமல் கதைப்பதும், சம்பந்தமில்லாத உடைகளை அணிவதும் 
அதனைத்தான் காட்டுகின்றது.

1 hour ago, satan said:

தன்னை விட கெட்டிக்காரன் இல்லை என்கிற மமதை மனநிலையை பாதித்திருக்கலாம்.

 

கமலகாசன் கூட உந்தளவுக்கு நடிக்க மாட்டார் 😆

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

கமலகாசன் கூட உந்தளவுக்கு நடிக்க மாட்டார் 😆

இந்திய தூதுவரிடம்... "நேரு மாமா" வேடம் போட்டு நடித்ததற்கு,
"பாரத ரத்னா" பட்டம்  கொடுக்கச் சொல்லி, கடிதம் போடுவமா. 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்திய தூதுவரிடம்... "நேரு மாமா" வேடம் போட்டு நடித்ததற்கு,
"பாரத ரத்னா" பட்டம்  கொடுக்கச் சொல்லி, கடிதம் போடுவமா. 🤣

 நமக்கு பெட்டீசம் போட்டுத்தான் பழக்கம்...    :rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

ஆதாரது பக்கத்தில? மெய்ப்பாதுகாவலரோ? அவருக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  சுதந்திரத்தினத்தில் பங்கெடுக்காமல், வடகிழக்கு போராடத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளாமல் தன் வழி தனி வழியென்று கொஞ்சப்பேரை வளைச்சுக்கொண்டு போய், போராட்டத்தோடு சம்பந்தமில்லா உடை, நடை அவர் பிரச்சனை வேறு ஐயா! 

அகிம்சை வாதியாம்.....நேரு ,காந்தி பரம்பரையாம்

  • கருத்துக்கள உறவுகள்

தேரவாதம்...அங்குநடக்கும் தமிழருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ..அப்பட்டமாக உலகத்திற்கு தெரிகிறதே..பிறகேன்..புத்தகம் அடித்து உலகத்தற்கு கொடுப்பான்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

தேரவாதம்...அங்குநடக்கும் தமிழருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ..அப்பட்டமாக உலகத்திற்கு தெரிகிறதே..பிறகேன்..புத்தகம் அடித்து உலகத்தற்கு கொடுப்பான்...

அது வேறவாய், இது நாறவாய்.
அடிக்கடி தேரவாதத்துக்கு… இப்பிடி வெள்ளை அடித்துக் கொண்டு இருக்காட்டில்
தேரைகளின் சுய ரூபத்தை உலகம் கண்டுபிடித்து விடும்.
புத்தம் சரணம் கச்சாமீ. 😂

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மகா சங்கத்தினரை வைச்சு பொருளாதார நெருக்கடியை தீர்க்கலாமே. எதுக்கு உலகமெல்லாம் கெஞ்சிக்கிட்டு அலையுறீங்க. பகுதி பகுதியா அந்நிய நாடுகளுக்கு கூறு போட்டு விக்கிறீங்க. அதெல்லாம் நடக்கலாம்.. தமிழர்களுக்கு கொடுக்கக் கூடாது. அடிப்படையில்.. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் வரட்டுப் புத்திக்கு சிங்களம் தானே அழியப் போகுது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காவி போத்த ரவுடிகளை உசுப்பிவிட்டு, சிறுபான்மையினரை நசுக்கிக்கொண்டு, அவர்களுக்கு சர்வதேசம் கொடுக்கும் நஷ்ட ஈட்டில் வயிறு வளர்த்து ஊதிப்பெருத்திருக்கும் புத்தம் நாட்டில்  இருந்து துடைத்தெறியப்படும் காலம் நெருங்கி வருகிறது. உழைத்தாற்த்தான் தட்டில் சோறு விழும் என்கிற நிலையை இவர்களுக்கு உருவாக்க வேண்டும், சகல சலுகைகளும் நிறுத்தப்படவேண்டும், தெருவில் நின்று ரவுடிகள் போல் கொழுத்தவும், கூக்குரலெழுப்பவும், அச்சுறுத்தவும் முடியுமென்றால் எதற்கு இவர்களுக்கு சலுகைகளும் மரியாதைகளும்? அதற்கு இவர்கள் தகுதியானவர்களா? சும்மா இருந்து கொழுத்தாடு பிடிக்கும் இவர்களை மக்கள் விரட்டியடிக்க வேண்டும், இவர்கள் கையால் ஆசி பெறுவதை நிறுத்தவேண்டும், நாட்டை எரிப்பவர்களால் எப்படி ஆசி வழங்க முடியும்? அவர்கள் வழங்கும் ஆசி நாசமாய்தான் போகும்! பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகள், நாட்டில் ஒற்றுமை, நீதி, எல்லோரையும் சமமாய் நடத்தி முன்னேறி நிமிர்ந்து நிற்கும்போது அவர்களிடம் கைநீட்டி பிச்சை வேண்டிக்கொண்டு, தமது மக்களை நசுக்கிக்கொண்டு இறைமை, பவுத்தம் பற்றி கதைக்க இவர்களுக்கு வெட்கமில்லை? கொடுப்பவர்களுக்கும் அதை கேட்க விருப்பமில்லை. கையை நீட்டும்போது  கேள்வி கேட்டால் திருந்த வழியுண்டு. சும்மா தங்கள் மக்களின் வரிப்பணத்தை வீணாக விரயம் செய்து நம் நாட்டில் வன்முறைகளை ஊக்குவிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.