Jump to content

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ. நெடுமாறன் தகவல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் விசயத்தில் மீண்டும் சீமானின் சரியான நிலைப்பாடு

Edited by Nathamuni
  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 185
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

Ahasthiyan

போரில் நேரடியாக சம்பத்தப்பட்ட இரு தரப்பும் தெளிவாக இருக்கின்றோம். அதிலும் நாம அறிவார்ந்த சமூகமாக தமிழ் தேசியத்தையும் ஈழ விடுதலையும் அணுக வேண்டும்/அணுகுகிறோம். ஆயுதம் மௌனிக்கபட்டு 14 வருடமாக கொள்கையில்

நிழலி

அண்ணாமலையார் ஊரில் நிற்கும் போது இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. அடிக்கடி இந்திய அமைச்சர்கள், பா.ஜ.க வின் பிரமுகர்கள் ஊருக்கு வந்து போவதே ஒரு பெரும் சதித் திட்டத்தின் அங்கங்கள் தான்.  நெடுமாறன் எட

ரதி

ஆம் அண்ணா...இனி மேல் இப்படி ஒரு போரே வரக்  கூடாது என்று அந்த போரை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும்..பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்த பின் தலைவர் திரும்பி வந்தால், தலைவருக்காய் நடந்த போர் என்று எதிரி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

பிரபாகரன் விசயத்தில் மீண்டும் சீமானின் சரியான நிலைப்பாடு

ஆம் மூத்த‌வ‌ரே
அண்ண‌ன் சீமான் எல்லாத்தையும் ச‌ரியா புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறார்..................நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌து போல் மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிக்க‌ வேண்டாம் என்று அதையே தான் அண்ண‌ன் சீமானும் சொல்லி இருக்கிறார்..............🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

May be an image of 3 people and text that says 'SHORT NEWS /ShortnewsTV EHIND 5000S மக்கள் M மල්රර லமை அது போன மாசம், இது இந்த மாசம்! வடிவேல் பாணியில் பழ. நெடுமாறன் பல்டி பிரபாகரனின் முக்கிய தளபதிகள் பேசியதை வைத்து தான் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக நான் கூறினேன். என்னுடன் பிரபாகரன் தொடர்பில் இல்லை. நெடுமாறன் பல்டி www.shortnews.lk/ f ShortnewsTV 19.02.2023'

முத‌ல் த‌லைவ‌ரின் குடும‌த்தின‌ர் த‌ன்னுட‌ன் பேசினார்க‌ள்
இப்போது த‌ள‌ப‌திக‌ள்

அடுத்த‌ அறிக்கையில் சிங்க‌ள‌ ராணுவ‌த்தால் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ள் சொல்லித் தான் தெரியும்

இப்ப‌ தெரியுதா ஏன் என் போன்ற‌வ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்திலே இவ‌ரின் அறிக்கையை எதிர்த்தோம் என்று...............ம‌ண்ணோடு ம‌ண்ணா போன‌ மாபெரும் மாவீர‌னை கொச்சைப் ப‌டுத்த‌ வேண்டாம் என்ப‌த‌ற்காக‌................

இப்ப‌டி அறிக்கை விட்டு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா சாதிச்ச‌து என்ன‌................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, பையன்26 said:

இப்ப‌டி அறிக்கை விட்டு ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா சாதிச்ச‌து என்ன‌................

என்ன இப்படி கேட்டுடீங்க பையன். எத்தனை யூரியூப் சனல்களின் views அதிகரித்து எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் தெரியுமா? அது பெரிய சாதனை தானே. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

என்ன இப்படி கேட்டுடீங்க பையன். எத்தனை யூரியூப் சனல்களின் views அதிகரித்து எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள் தெரியுமா? அது பெரிய சாதனை தானே. 😂

அண்ணா யூடுப் நிறுவ‌ன‌ம் கொடுக்கும் சில்ல‌ரை காசுக்காக‌ 

ஒரு இன‌த்தின் த‌லைவ‌ரின் தியாக‌த்தை இப்ப‌டியா சித்த‌ரிப்ப‌து முடிய‌ல‌ 😢

ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவின் அறிக்கையால் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து ஈழ‌ ம‌ண்ணில் வ‌சிக்கும் எம் உற‌வுக‌ள் தான்..................இதை த‌ட்டி கேட்க்க‌ வேண்டிய‌வையே ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யாவுக்கு முர‌ட்டு முட்டு கொடுத்த‌வை😡...............

சில‌ர் வாத்து ஆயிர‌ம் முட்டை போட்ட‌ க‌தை

த‌வ‌ளை க‌தை அது இது என்று தேவை இல்லா ந‌க்க‌ல் நையாண்டி இந்த‌ திரியில் .............இந்த‌ ந‌க்க‌லை போல் யாழில் ப‌ல‌நூறு ந‌க்க‌ல் நையாண்டியை பார்த்து க‌ட‌ந்து வ‌ந்த‌வ‌ன்..................

முன்னுக்கு பின் மாறி மாறி ப‌ழ‌ நெடுமாற‌ன் ஜ‌யா அறிக்கை விடும் போது தெரிந்து விட்ட‌து ஜ‌யாவும் க‌ற்ப‌னை உல‌கில் வாழுகிறார் நிஜ‌ உல‌கில் இல்லை என்று................

இந்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளுக்கு அவ‌தூற‌ ப‌ர‌ப்பி அதுக‌ள் கூட‌ இன்னும் 10அல்ல‌து 20வ‌ருட‌ம் க‌ழித்தோ த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் அகிம்சை வ‌ழியில் கூட‌ போராடாதுக‌ள் கார‌ண‌ம் த‌லைவ‌ர் உயிருட‌ன் இருக்கிறார் என்ர‌ புர‌ளிய‌ கில‌ப்பி விட்டாச்சு தானே த‌லைவ‌ரே பார்த்து கொள்ளுவார் என்று இருந்து விடுங்க‌ள்.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரன் வருகிறார்...!சிங்கள மக்கள் மீது நிகழ்த்தபட இருக்கும் பேரழிவின் பின்னணி சக்திகள் .

NESAKKARAM MEDIA

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவிப்பிற்கான பின்னணி என்ன என்பது குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டக்கிளப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறையின் முன்னாள் பொறுப்பாளரும் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான தயா மோகன் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பிரபாகரன் பற்றிய நெடுமாறனின் கூற்று நிதி திரட்டலுக்கானது" - இலங்கை எம்.பி சித்தார்த்தன்

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,யூ.எல். மப்றூக்
  • பதவி,பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இலங்கை, விடுதலை புலிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக பழ. நெடுமாறன் வெளியிட்ட தகவல், நிதி சேகரிப்புக்கான ஓர் அறிவிப்பாகும் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போது, அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

இந்த நிதி சேகரிக்கும் நடவடிக்கைக்கான கூட்டம் சுவிட்ஸர்லாந்து நாட்டிலேயே முதன் முதலில் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனின் மகள் துவாரகா லண்டனில் இருப்பதாகவும், அவருடைய வாழ்வாதாரத்துக்காக நிதி சேகரிக்கப் போவதாகவும் - அந்தக் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சித்தார்த்தன் எம்பி தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சுவிட்ஸர்லாந்திலுள்ள ஒருவர், பிரபாகரனின் மகளைப் பார்க்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும், அந்த நபரின் மகளும் பிரபாகரனின் மகளும் ஒன்றாகப் படித்தவர்கள் எனவும் சித்தார்த்தன் கூறினார்.

இதனையடுத்து அந்த நபர் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு பிரபாகரனின் மகள் என ஒரு பெண் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது குறிப்பிட்டார்.

பிரபாகரன் மகள் என்றவரிடம் தொடுக்கப்பட்ட கேள்வி

அந்தப் பெண்ணிடம் சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்றவர், 'உங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு கற்றுத் தந்தவர் யார்' என கேட்டுள்ளார்.

”பிரபாகரனின் மகளுக்கு யார் வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார் என்று சுவிட்ஸர்லாந்திலிருந்து சென்ற நபருக்குத் தெரியும். புலிகளின் பெண்கள் படையொன்றிலுள்ள ஒருவர்தான் பிரபாகரனின் மகளுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தார்”.

”அந்தக் கேள்விக்கு பிரபாகரனின் மகள் எனக்கூறப்பட்ட பெண், தவறான ஒரு பதிலை வழங்கியுள்ளார். இதனையடுத்து அந்த நபர், இந்த விடயத்தை உடனடியாக சுவிட்ஸர்லாந்தில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்தி, அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கையை முறியடித்தார்". எனவும் சித்தார்த்தன் எம்.பி தெரிவித்தார்.

இலங்கை, விடுதலை புலிகள்

கேவலமான நடவடிக்கை

தனக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும், தான் அறிந்த வகையிலும் பிரபாகரன் உயிரோடு உள்ளதாக அறிவிக்கப்பட்டமையானது, நிதி சேகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாகும் என்று அவர் கூறினார்.

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்ற கூட்டத்துக்குச் சென்றவர்களும் தன்னிடம் இதையே சொன்னதாகவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

"இது கேவலமானதும், மலினப்படுத்துகின்றதுமான ஒரு செயல்பாடாகும்" எனவும் அவர் மேலும் கூறினார்.

"தம்பி பிரபாகரன் மீது - நான் மதிப்பு வைத்துள்ளேன். காரணம், அவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் அர்ப்பணித்தவர் என்பதனாலாகும். அந்த அர்ப்பணிப்புகளை மலினப்படுத்தி, நாலு பேர் சீவியம் நடத்துவதற்காக பணம் சேர்க்கும் வேலையாகவே இது உள்ளது" எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

"பழ. நெடுமாறன் எங்களுடனும் நெருக்கமாக இருந்தவர். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக அவர் கூறியதை, பின்னர் - 'சொன்னார்கள், சொன்னேன்' என, அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதாவது பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று, யாரோ சொல்லச் சொன்னதை அவர் சொல்லியிருக்கிறார்” என்கிறார் சித்தார்த்தன்.

இவ்விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியபோது; புலிகள் இயக்கம் செயற்பாட்டில் இருந்த காலத்தில், அவர்களின் சுவிஸ் கிளையின் முக்கியஸ்தராக இருந்த ஒருவரும், சுவிஸர்லாந்தில் நடத்தப்பட்ட நிதி சேகரிப்புக்கான கூட்டத்தில் பங்கேற்றிருந்தாக கூறினார்.

பிரபாகரன் ஒளிந்திருக்கும் ஆள் இல்லை

"யுத்தம் முடிந்து 13 வருடங்களாகி விட்டன. பிரபாகரனைப் பொறுத்தவரையில் இவ்வளவு காலம் அவர் ஒளிந்திருக்கும் ஒருவர் அல்ல".

"சரி, பிழைகளுக்கு அப்பால் தனிநாட்டுப் போராட்டத்துக்கு அவர் விஸ்வாசமாக இருந்தார். எங்கள் எல்லோரையும் விடவும் அவர் ஆகக்கூடியளவில் அதற்கு விஸ்வாசமாக இருந்தார். அது கேள்விக்கு அப்பாற்பட்டது".

"இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானபோது, நாங்கள் ஜனநாயக அரசியலுக்குத் திரும்பினோம். ஆனால், தனி நாட்டுக்காக கடைசி வரை பிரபாகரன் போராடினார்” என சித்தார்த்தன் கூறினார்.

தனது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளை போராட்டத்துக்காக பிரபாகரன் அர்ப்பணித்தமைச் சுட்டிக்காட்டிப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "தனது குடும்பத்தவர்களை வெளிநாட்டில் வைத்திருப்பதற்கான சந்தர்ப்பம் பிரபாகரனுக்கு இருந்தது. அவர்கள் முன்பு டென்மார்கில் இருந்தார்கள். ஆனால், அவர்களை பிரபாகரன் பின்னர் தன்னிடம் அழைத்துக் கொண்டார்" என்றார்.

இவ்வாறான ஒரு மனிதர் இவ்வளவு காலமும் ஒளிந்து கொண்டு இருக்க மாட்டார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கியஸ்தர்களுடைய உடல்களை கண்டு, அவற்றினை ஏற்றுக் கொண்டவர்கள், பிரபாகரனின் உடலை - அவருடையதுதான் என ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை என கேள்வியெழுப்பும் அவர், "பிரபாகரனின் மரணத்தை ஏன் பொய் எனக் கூறுகின்றனர்?" எனவும் வினவினார்.

பிரபாகரனின் உடலைப் பார்த்த பலர், அது அவரின் உடல் என கூறியுள்ளனர் எனவும் சித்தார்த்தன் குறிப்பிட்டார்.

ஆயுத போராட்டத்தை இனி இந்தியா ஆதரிக்காது

இலங்கை, விடுதலை புலிகள்
 
படக்குறிப்பு,

தர்மலிங்கம் சித்தார்த்தன்

மறுபுறமாக, பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என வைத்துக் கொண்டாலும், அவரால் பழையபடி புலிகள் இயக்கத்தை மீளக் கட்டமைக்க முடியாது என சித்தார்த்தன் கூறுகின்றார். "அவருடைய வயது அதற்கு முக்கியமான தடையாக இருக்கும். வடக்கு - கிழக்கு மாகாணங்களின் தற்போதைய நிலை, அங்குள்ள இளைஞர்களின் மனநிலை, ராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினரின் கட்டுப்பாடு போன்றவற்றைத் தாண்டி, அங்கு ஒரு போராட்ட இயக்கத்தை கட்டியெழுப்ப முடியாது" என்கிறார்.

இவற்றுக்கெல்லாம் அப்பால், இந்தியாவின் பின்புலம் இருந்தமையினால்தான் தமிழர் போராட்ட இயக்கங்களை இலங்கையில் கட்டியெழுப்ப முடிந்தது என்று குறிப்பிட்ட அவர், இப்போது இந்தியாவின் நிலைப்பாடு வித்தியாசமாக உள்ளது என்கிறார். "இனி தமிழர் தரப்பிலிருந்து ஆயுதப் போராட்டம் நடப்பதை ஆதரிப்பதற்கான சமிக்ஞைகளை இந்தியா காட்டாது என நான் நம்புகிறேன்" எனவும் தெரிவித்தார்.

"இந்தியா தற்போது தனது பலத்தை பொருளாதார ரீதியில்தான் காட்ட விரும்புகிறது. தமிழ் நாட்டிலுள்ளவர்களில் குறைந்தளவானவர்களே ஆயுதப் போராட்டத்துக்கு ஆதரவாக உள்ளனர்.

பெரும்பான்மையானோர் மனதளவில் முழுமையாக மாற்றமடைந்துள்ளார்கள். அங்கு - மேல் நடுத்தர வர்க்கத்தினர் (Upper middle class) அதிகளவில் உள்ளனர். பொதுவாகவே இந்த வர்க்கத்தினர் போராட்டங்களில் ஈடுபடுவதுமில்லை, அக்கறையும் காட்டுவதில்லை" என, தனது கருத்துக்கான நியாயங்களை அவர் முன்வைத்தார்.

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் - தமிழ் நாட்டு மக்களிடம் ஓர் அனுதாப உணர்வு உள்ளதாக கூறும் சித்தார்த்தன், அவர்களில் அரசியல்வாதிகளும் இருக்கின்றனர் என்கிறார். "இலங்கைத் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிட்ட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். ஆனால், இலங்கை தமிழர்கள் ஆயுதப் போராட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள்". என்றார்.

இனப் பிரச்சினை விவகாரத்தில் - தமிழர்களுக்கான உடனடித் தீர்வாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் எனக் கூறும் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், "13ஆவது திருத்தமும், மாகாண சபை முறைமையும்தான் தமிழர்களுக்கான தீர்வு என்று நான் கூறவில்லை. இருந்தபோதும், தமிழர்களுக்கு ஓரளவு தீர்வை வழங்கும் வகையில் - அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாக 13ஆவது திருத்தமே உள்ளது" என்றார்.

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கே சிங்கள அரசியல்வாதிகளிடம் இவ்வளவு பெரிய எதிர்ப்பு இருக்கும் நிலையில், 70 வருடங்களாக தமிழர்கள் கோரி வரும் - சமஷ்டி அமைப்பை வென்றெடுப்பது எவ்வளவு கடினமான விடயம் என - தங்களுக்குத் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"அதற்காக அந்தக் கோரிக்கையை நாம் கைவிட மாட்டோம்" என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன்.

https://www.bbc.com/tamil/articles/c2572d80153o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன் – பழ.நெடுமாறன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற அறிவிப்பு இலங்கைத் தமிழர்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்தவுடன் அதை ஊடகங்களில் வெளியிடப்போவதாக உலகத் தமிழர் கூட்டமைப்புத் தலைவர் நெடுமாறன் மீண்டும் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ செய்திச்சேவை இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், விரைவில் அவர் பொது வெளியில் வருவார் என்றும் நெடுமாறன் தகவல் வெளியிட்ட சில வாரங்களுக்குப் பிறகு அவரது அறிக்கை மீண்டும் வந்துள்ளது.< எனினும் முன்னதாக இந்த கூற்றை மறுத்த இலங்கையின் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் ரவி ஹேரத், பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பதற்கான மரபணுச் சான்றிதழ்கள் உட்பட அனைத்து பதிவுகளும் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

https://thinakkural.lk/article/243354

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.