Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

இந்தியக் கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாரை கேட்டுள்ளதுடன், அவ்வாறான சம்பவம் நடைபெற்றிருக்குமானால் கண்டிக்கப்பட வேண்டியது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் கடல் வளத்தினை அழிக்கும் இந்தியக் கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இராஜதந்திர ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் குறித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், அவை போதுமானளவு பலனளிக்காத நிலையில்,

அண்மைக்காலமாக தொடர்ச்சியாக இந்தியத் தலைவர்களுடன் இதுதொடர்பாக கலந்துரையாடி வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் மற்றும் இந்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருடனும் இவ்விடயம் தொடர்பாக பிரஸ்தாபித்திருந்ததுடன், விரைவில் புதுடெல்லி மற்றும் தமிழகத்தின் மேலும் பல உயர் மட்டத் தலைவர்களையும் சந்தித்து பேச்சுக்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இவ்வாறான சூழலில், இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத அத்துமீறல்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளதுடன், பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.

https://athavannews.com/2023/1324320

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

 

Fo-LZk8wa-EAEt-Wf-X.jpg

ஓ மை காட்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 

Fo-LZk8wa-EAEt-Wf-X.jpg

ஓ மை காட்....

காந்தியின் பேரன் டக்கி. 
எவன் எவன் என்னத்தை சொல்லுறது எண்டு ஒரு இழவும் இல்லாமல் கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

ஆமா ஆமா அரசும் அரச குண்டர்களுமே வன்முறையை கையாளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தமிழ் சிறி said:

மேலும், எந்தவொரு சூழலிலும் யாரும் வன்முறைகளை கையில் எடுப்பதை  அனுமதிக்க முடியாது எனவும், எமது தொப்புள்கொடி உறவுகள் பாதிக்கப்படாத வகையிலே இந்த விவகாரம் கையாளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு அஹிம்ஸைவாதிக்கு எதிராக,  ஏன் இந்திய நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது? என கேட்கத்தோன்றுகிறது.

19 hours ago, தமிழ் சிறி said:

பொலிசாருக்கு தேவையான ஆலோசனைகளை கடற்றொழில் அமைச்சர் வழங்கியுள்ளார்.

ரணில் தனக்கு கூலிக்கு ஆள் தேவையென்று ஆளை அழைத்தால்; ஆள் வேறை லெவல், ஆலோசனை எல்லாம் வழங்க வெளிக்கிட்டு விட்டார். நாய் பாக்கிற வேலையை கழுதை பாக்க வெளிக்கிட்டு வாங்கிக்கட்டின கதையாய் மாறப்போகுது. போகிற போக்கில் ரணிலுக்கும் ஆலோசனை வழங்குவார் போலுள்ளது! "கான மயிலாட பாத்திருந்த வான்கோழி தானும் அதுவாக பாவித்து தன் பொல்லாச்சிறகை விரித்தாடியதாம்."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 17/2/2023 at 12:57, தமிழ் சிறி said:

காந்தியின் பேரன் டக்கி. 
எவன் எவன் என்னத்தை சொல்லுறது எண்டு ஒரு இழவும் இல்லாமல் கிடக்கு.

சிறித்தம்பி காணிப்பிரச்சனையாய் நான் சிலோனுக்கு போக வேண்டி இருக்கிறதாலை....பதில் சொல்ல முடியவில்லை.:grinning_face_with_big_eyes:

Fo-LZk8wa-EAEt-Wf-X.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சிறித்தம்பி காணிப்பிரச்சனையாய் நான் சிலோனுக்கு போக வேண்டி இருக்கிறதாலை....பதில் சொல்ல முடியவில்லை.:grinning_face_with_big_eyes:

Fo-LZk8wa-EAEt-Wf-X.jpg

 

தாத்தா, யேர்மணியிலையிருந்து ஒருதர் வீடு ஒண்டை இடிச்சு தரைமட்டமாக்கிப்போட்டாராம் அதுநீங்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, வாதவூரான் said:

தாத்தா, யேர்மணியிலையிருந்து ஒருதர் வீடு ஒண்டை இடிச்சு தரைமட்டமாக்கிப்போட்டாராம் அதுநீங்களோ?

இந்த‌ வ‌ய‌து போன‌ தாத்தா எப்ப‌ எத்தை செய்வார் எப்ப‌ எங்கு நிப்பார் என்று யாருக்கும் தெரியாது அண்ணா..............ஆனால் ப‌ரிம‌ள‌த்துக்கு ம‌ட்டும் ந‌ல்ல‌வ‌ர்............ஊருக்கு போக‌ போகிறார் அப்ப‌ ப‌ரிம‌ள‌ம் பாட்டியின் ஆத்தில் அடை ம‌ழை தான் லொல்  தாத்தா எப்பவும் வேற‌ லெவ‌ல் 😂😁🤣

 

ஊரில‌ 50 ல‌ச்ச‌த்துக்கு எல்லாம் வீட்டை க‌ட்டி போட்டு அதை உடைத்து விட்டு ஒரு கோடிக்கு மேல‌ சில‌வு ப‌ண்ணி வீடுக‌ள் க‌ட்டி புல‌ம்பெய‌ர் நாட்ட‌வ‌ர்க‌ள் என‌து ப‌க்க‌த்து ஊரில் போடும் கூத்து இருக்கே அண்ணா சீ சீ பொறுத்துக் கொள்ள‌ முடிய‌ வில்லை..................உப்ப‌டியான‌ மென்ட‌லுக‌ள் ஒரு வேல‌ சாப்பாடுக்கு க‌ஸ்ர‌ப் ப‌டும் ஏழைக‌ள‌ க‌ண்டு கொள்ளாதுக‌ள்................

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் நடந்த சம்பவம். ஜேர்மன் பிரஜை ஒருவர் ஒரு காணியில் குடியிருந்த குடும்பத்தை அடித்து விரட்டி அவர்கள் குடியிருந்த வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளாராம் அவருக்கு எதிராக ஜேர்மன் தூதுவராலயத்திலும் முறையிடவுள்ளனராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, வாதவூரான் said:

தாத்தா, யேர்மணியிலையிருந்து ஒருதர் வீடு ஒண்டை இடிச்சு தரைமட்டமாக்கிப்போட்டாராம் அதுநீங்களோ?

ஏற்கனவே கொட்டில் வீடு.....அதை வேறை இடிச்சு தரைமட்டமாக்க வேணுமாக்கும்...:hahaha:

  • கருத்துக்கள உறவுகள்
On 21/2/2023 at 10:07, குமாரசாமி said:

ஏற்கனவே கொட்டில் வீடு.....அதை வேறை இடிச்சு தரைமட்டமாக்க வேணுமாக்கும்...:hahaha:

அது தட்டி விட்டால் விழும், எதுக்கு வீணாக கடப்பாரை எல்லாம் தூக்கிக்கொண்டு?  நீங்கள் இன்னும் இங்கு மினைக்கெடுகிறீர்கள். அங்கு இடித்தவர் நீங்களல்ல வேறு யாரோ? விரைவில் யார் என்று வெளிவரும்!

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2023 at 07:28, தமிழ் சிறி said:

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

வன்முறைகளை யாரும் கையிலெடுக்க கூடாது என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

அவர்  எப்பொழுது தான்  நேரிடையாக உத்தரவிட்டிருக்கிறார்??

அவர்  மட்டுமல்ல அவருடன்  சேர்பவர்களும்  அப்படி  என்ற  வருத்தம்  அவருக்கே உண்டு

நெடுந்தீவில் வாடி எரிப்பு ; 15 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.