Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் திறப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, Nathamuni said:

இது முட்டையா, கோழியா முதலில் வந்தது கதை.

தந்தையோடு கல்வி போம்.

பொறுப்பான தந்தை வாய்ப்பது தவம் அய்யா.

அப்படி ஒரு தந்தை அமைந்து அவரால் மகன் சபையில் கெளரவிக்கப்பட்டால், தந்தைக்கு நன்றி சொல்வது நல்லறம்

 

மூத்தவரே,

கோழி, முட்டை அல்ல நான் சொல்லுவது பிரியாணி கதை🤣.

மகன் தந்தையை நினைவுகூற வேண்டும் மறுப்பில்லை.

ஆனால் அவை, சபை, உலகம் எப்படி அடையாளப்படுத்தும் என்பதற்கும் மகனின் நன்றியுணர்வுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

சச்சின் தன் தந்தையை என்றும் நன்றியோடு நினைவு கூறுவார்.

ஆனால் உலகு? 

ரமேஸ் டெண்டுல்கார் என்றால் எவ அவ? எண்டுதான் கேட்கும்.

சச்சின் டெண்டுல்கார் தந்தை என்பதே அவரின் அறிமுகம். 

இதுதான் உலக நியதி.

  • Replies 57
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

தலைவர் வரட்டும் காசு தல்லாம் கோஸ்டிகள் மூலத்தில் கை வைக்காதா அப்பிரெசெண்டுகளா?

தலைவர் சொல்லி விட்டு சென்றதிலிருந்து ஆரம்பிக்க முடியாத கோழைகளா நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

தலைவர் சொல்லி விட்டு சென்றதிலிருந்து ஆரம்பிக்க முடியாத கோழைகளா நீங்கள்?

ஓம்.

ஆனால் அவரிடம் கொள்ளை அடித்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் அளவு கோழைகள் இல்லை.

கேள்வி அதுவல்ல. தவிபு பணத்தை கையாடல் செய்தாரா? என்ற சந்தேகம் உள்ள நபரை ரிசி, நதி மூலம் பார்க்காமல் ஏற்க முடியும் என்றால் ஏன் டக்லஸ், கருணா, பிள்ளையானை ஏற்க முடியாது?

புலம்பெயர்ந்தவர் என்றால் விசேச சலுகையா? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kandiah57 said:

இங்கே சட்டம் ஆள்கிறது........இலங்கையில் சிங்கள இனவாதம். ஆள்கிறது.    இங்கு உள்ளது போல் சகல உரிமைகளும். இலங்கையில் இருந்தால்   நான் ஏன் இங்கே இருக்கிறேன்  ? ...தமிழர்கள் ஏன் தமிழ்ஈழம். கேக்கணும்?

வட கிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள்? வெளிநாடுகளில் இருக்கும்  தமிழ் மக்கள் வருடாவருடம் இலங்கை சென்று வருகின்றார்கள். உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

4 minutes ago, goshan_che said:

ஓம்.

ஆனால் அவரிடம் கொள்ளை அடித்தவர்களுக்கு வெள்ளை அடிக்கும் அளவு கோழைகள் இல்லை.

கேள்வி அதுவல்ல. தவிபு பணத்தை கையாடல் செய்தாரா? என்ற சந்தேகம் உள்ள நபரை ரிசி, நதி மூலம் பார்க்காமல் ஏற்க முடியும் என்றால் ஏன் டக்லஸ், கருணா, பிள்ளையானை ஏற்க முடியாது?

புலம்பெயர்ந்தவர் என்றால் விசேச சலுகையா? 

இனக்கலவரத்தின் மூலம் தமிழர்களின் சொத்து பணம் மானம் சூறையாடப்பட்டதிற்கு நீதி நியாயம் கிடைத்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் பல மத பல இன பல மொழிக்கு உரித்தான ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழ்ந்து கொண்டு எப்படி இலங்கையில் தனிநாடு கோரலாம்? இலங்கையில் இனப்பிரச்சனை இல்லையென்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

குதர்க்கமே…உனது குறும்பெயர்தான் குமாரசாமியோ🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

மூத்தவரே,

கோழி, முட்டை அல்ல நான் சொல்லுவது பிரியாணி கதை🤣.

மகன் தந்தையை நினைவுகூற வேண்டும் மறுப்பில்லை.

ஆனால் அவை, சபை, உலகம் எப்படி அடையாளப்படுத்தும் என்பதற்கும் மகனின் நன்றியுணர்வுக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

சச்சின் தன் தந்தையை என்றும் நன்றியோடு நினைவு கூறுவார்.

ஆனால் உலகு? 

ரமேஸ் டெண்டுல்கார் என்றால் எவ அவ? எண்டுதான் கேட்கும்.

சச்சின் டெண்டுல்கார் தந்தை என்பதே அவரின் அறிமுகம். 

 

பெரிசு,

இந்திரா காந்தியின் தந்தை ஜவகர்லால் நேரு.

ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு

ராசேந்திர சோழன் தந்தை, கிங், கிங் சோழன்.

நம்மூர் லெவலில, சந்திரிகா அப்பாம்மா, இருவரும் பிரதமர்கள்.

கனடா பிரதமர் அப்பா பிரதமர், ஜோர்ஜ் புய்ஸ் அப்பா ஜனாதிபதி.

ஸ்ராலின் அப்பா முதலமைச்சர்.

இன்னார் பிள்ளை என்பதே அவர்கள் அறிமுகம்

இதுதான் உலக நியதி. 😁

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

வட கிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள்? வெளிநாடுகளில் இருக்கும்  தமிழ் மக்கள் வருடாவருடம் இலங்கை சென்று வருகின்றார்கள். உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

 

Just now, Nathamuni said:

பெரிசு,

இந்திரா காந்தியின் தந்தை ஜவகர்லால் நேரு.

ஜவகர்லால் நேருவின் தந்தை மோதிலால் நேரு

ராசேந்திர சோழன் தந்தை, கிங், கிங் சோழன்.

நம்மூர் லெவலில, சந்திரிகா அப்பாம்மா, இருவரும் பிரதமர்கள்.

கனடா பிரதமர் அப்பா பிரதமர், ஜோர்ஜ் புய்ஸ் அப்பா ஜனாதிபதி.

இன்னார் பிள்ளை என்பதே அவர்கள் அறிமுகம்

இதுதான் உலக நியதி.

மேலே காந்தியின் மகன் ஏலவே உதாரணம் காட்டி உள்ளேன்.

தந்தையை விட தனையன் உயர்ந்தால் - தனையன் அறிமுகம்.

தனயன் இருந்தும் தந்தையை விஞ்ச முடியவில்லை என்றால் தந்தை அறிமுகம்.

ஆனால் ஒன்று….

எனக்கு இப்ப நாலு கழுதை வயசாகீட்டு…இண்டைக்கும் ஒரு பொது இடத்தில் என்னை இன்னாரின் மகன் எண்டு சொல்லித்தான் தெரியும் அளவுக்கு நான் இருந்தால்….

நான் வாத்தியார் பிள்ளை….மக்கு என்பதே அர்த்தம்.

11 minutes ago, குமாரசாமி said:

இனக்கலவரத்தின் மூலம் தமிழர்களின் சொத்து பணம் மானம் சூறையாடப்பட்டதிற்கு நீதி நியாயம் கிடைத்ததா?

இல்லை.

அதனால் தவிபுக்கு என சேர்த்த காசை ஆட்டையை போட்டோரையும் மன்னித்து விட்டு விடலாம் என்கிறீர்களா?

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

 

தவிபுக்கு என சேர்த்த காசை ஆட்டையை போட்டோரையும் மன்னித்து விட்டு விடலாம் என்கிறீர்களா?

 

என்றும் இல்லை என்பதே என் பதில்.
ஆனால் அதிலே மட்டும் மூழ்கியிருக்காமல் எம் மக்கள் நலனில் கவனம் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

என்றும் இல்லை என்பதே என் பதில்.
ஆனால் அதிலே மட்டும் மூழ்கியிருக்காமல் எம் மக்கள் நலனில் கவனம் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

நன்றி. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 minutes ago, goshan_che said:

குதர்க்கமே…உனது குறும்பெயர்தான் குமாரசாமியோ🤣

குதர்க்கம் என்பதை விட ஒரு சில இடங்களில் யதார்த்தமும் எனக்கு முக்கியமாக தெரிகின்றது. யதார்த்தம் இல்லாவிட்டால் சிங்கள மக்கள் தமிழ்மக்களை விட ஏராளமாக அழிந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

வட கிழக்கு பகுதிகளில் தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றார்கள்? வெளிநாடுகளில் இருக்கும்  தமிழ் மக்கள் வருடாவருடம் இலங்கை சென்று வருகின்றார்கள். உங்களுக்கு மட்டும் என்ன பிரச்சனை?

இனக்கலவரத்தின் மூலம் தமிழர்களின் சொத்து பணம் மானம் சூறையாடப்பட்டதிற்கு நீதி நியாயம் கிடைத்ததா?

வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள்  இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் மட்டுமல்ல  இலங்கையின் அனைத்து பகுகளுக்கும் ....அனைத்து உலக நாடுகளுக்கும் அனுதினமும். போய் வந்து கொண்டிருக்கிறார்கள்....அது பிரச்சனையில்லை...ஆனால் பிரச்சனையான இடங்களில் வாழ்வது கடினம்...மிகவும் கடினம்  ...போய் வருவதும்.  அந்த இடங்களில் வாழ்வதும்.   ஒன்றில்லை    

பிரச்சனையான இடங்களுக்கு போய் வரலாம்” 

பிரச்சனையான இடங்களில் வாழ முடியாது   .....என்னுடைய பிரச்சனை அங்கு வாழ முடியாது என்பது தான்  ....நான் ஒருபோதும் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க மாட்டேன்  ஏனென்றால் எனக்கு தெரியும்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

நடிகை ரம்பாவின் கணவரா?

 

10 hours ago, Nathamuni said:

இந்திரன் பத்மநாதன் மனைவிதான் ரம்பா... 😁

Soori Comedy Pushpa Purushan, Buy Now, Hotsell, 53% OFF, www.alcom.bz.it

இந்த அக்கப் போரில்... நம்ம சசிகலா நடராஜனை மறந்து விட்டீர்கள். 😁
நடராஜனின் மனைவிதான்... சசிகலா. 😂

"புஸ்பா புருசன்"...  என்றும், ஒரு ஜீவன் உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Kandiah57 said:

இனி  பத்தாம் வகுப்பு பெயில். பண்ணியவர்களும்....காசு கொடுத்து பட்டதாரிகள் ஆகலாம்....🤣😂

ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்..

பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது..

யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்..

பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது..

யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.

பொரிஞ்சு தள்ளிவிட்டீர்கள்! 

சிங்கள அரசு நிணைப்பதும் அவ்வாறு என்பதால், பல்கலைககழகங்கள் பல அமைத்து, அபிவிருத்திகளையும் அதிகமாக செய்தால், தமிழர் அமைதியாயிடுவர். நோ பிச்சணை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்..

பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது..

யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.

உங்களை மாதிரி தான் நானும் இருந்திருக்கிறேன்.   ...நான் ஊரில் இருந்த காலத்தில் எனது நண்பன்  ஒருவன் இரண்டு தடவையாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியும் பெயில்.  எனவே மூன்றாவது தடவையாக   வேறு ஒருவருக்கு பணம் கொடுத்து   தனது பரீட்சையை எழுதிவித்தார்  ...அதில் பாஸ் பண்ணிட்டு....பணம் கொடுத்து ஆசிரியர் வேலையில்.  நியமனம் பெற்று   படிபித்துகொண்டு திரிந்தார்.  இவர் ஆசிரியர் வேலை பெற்றது பற்றி உங்கள் கருத்துகள் என்ன?? இதே போல் பலரும் வேறு வேலைவாய்ப்புகள் பணம் கொடுத்து பெற்றுள்ளார்கள் 

எவரும் சுயமாக படித்து பட்டம் பெறுவது வரவேற்க கூடியது  நல்ல விடயமும் கூட 

நான் சொன்னது பணம் கொடுத்து வேறு நபரை தனக்கு பரீட்சை எழுத வைப்பது அல்லது பட்டதை விலைக்கு வேண்டுவது பற்றியாகும்.  காசு கட்டி படிப்பதில் எந்த தவறுமில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kandiah57 said:

உங்களை மாதிரி தான் நானும் இருந்திருக்கிறேன்.   ...நான் ஊரில் இருந்த காலத்தில் எனது நண்பன்  ஒருவன் இரண்டு தடவையாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதியும் பெயில்.  எனவே மூன்றாவது தடவையாக   வேறு ஒருவருக்கு பணம் கொடுத்து   தனது பரீட்சையை எழுதிவித்தார்  ...அதில் பாஸ் பண்ணிட்டு....பணம் கொடுத்து ஆசிரியர் வேலையில்.  நியமனம் பெற்று   படிபித்துகொண்டு திரிந்தார்.  இவர் ஆசிரியர் வேலை பெற்றது பற்றி உங்கள் கருத்துகள் என்ன?? இதே போல் பலரும் வேறு வேலைவாய்ப்புகள் பணம் கொடுத்து பெற்றுள்ளார்கள் 

எவரும் சுயமாக படித்து பட்டம் பெறுவது வரவேற்க கூடியது  நல்ல விடயமும் கூட 

நான் சொன்னது பணம் கொடுத்து வேறு நபரை தனக்கு பரீட்சை எழுத வைப்பது அல்லது பட்டதை விலைக்கு வேண்டுவது பற்றியாகும்.  காசு கட்டி படிப்பதில் எந்த தவறுமில்லை 

அதை விளக்கமாக எழுதவேண்டும்.. ஓரிருவர் செய்வதை எல்லோருக்கும் பொதுமைப்படுத்தக்குடாது.. பத்தாம் வகுப்பு படித்தவன் எல்லாம் என்று பொதுமைப்படுத்தி எல்லோரையும் நக்கலாக எழுதினால் தவறாகத்தான் விளங்கிக்கொள்ளப்படும்.. பாரம்பரிய முறை படிப்பில்கூட குதிரை ஓடுவது கொப்பி அடிப்பது எல்லாமே இருக்கு.. ஏன் எனக்கு கூட இன்றுவரை எனது யாழ்ப்பாண டிகிரியில் நிறைவு இல்லை.. ஏனெனில் அது நான் உண்மையாக படித்து எடுத்தது இல்லை.. பொடியன் கம்பஸ் எண்ட மதிப்பில நாலுபக்கத்தாலும் உதவியும் காசும் மதிப்பும் வர நான் அதை பயன்படுத்தி ரூம் பொடியளோட சேந்து பகல் முழுக்க விளையாட்டு படம் கடைகடையா விதம் விதமா சாப்பாடு குடி எண்டு இருந்திட்டு அசைமெண்டு சோதினை எல்லாம் கடைசி நேரத்துல ஆளை ஆள் பிட் அடிச்சு அதில கொஞ்சம் இதில கொஞ்சம் எண்டு கொப்பி பண்ணி பாசனதுதான்.. அதுக்காக அங்கும் உண்மையாக படிப்பவர்கள் இருக்கிறார்கள்.. இங்கும் அப்படித்தான்.. ஒரு சிலதை வைத்து எல்லாரையும் பொதுமைப்படுத்தகூடாது.. எப்படியாவது படிக்கனும் என்று முயற்சி செய்பவர்களை கூட மனம் உடைய செய்துவிடும் இப்படியான பொதுமைப்படுத்தும் நக்கல் நையாண்டிகள்.. எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களை நாம் எப்பொழுதும் ஊக்கப்படுத்த வேண்டுமே ஒழிய முதல் படியில் ஏறும்போதே காலை இடறி விழுத்தகூடாது..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்து ஓணாண்டியார்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஏதோ பத்தாம் வகுப்பு பாஸ்பண்ணி யாழ்ப்பாணத்தில கம்பஸ் போனதுகள் பூரா வெட்டிகிழிச்ச மாதிரி.. அரைவாசி யாழ்ப்பாண கம்பசில பாத்தடிச்சுதான் பாஸ்பண்ணுறது.. நானும் அதைத்தான் செய்தனான்.. எங்கட பச்சில உண்மையா விளங்கி படிச்சது ஒரு மூண்டுபேர்தான்..

பத்தாம் வகுப்பு பெயிலானவன் பூரா தெருவில நிக்கோனும் பள்ளிக்கூடத்தில பத்தாம் வகுப்பு பாசனவன் மட்டும்தான் மேற்கொண்டு படிச்சு முன்னேறோனும் ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளால பத்தாம் வகுப்பு பெயில் ஆனவன் எல்லாம் காலம் முழுக்க கண்ணீர் விடோனும் படிக்கிறவன பாத்து.. இதைத்தானி யாழ்ப்பாணியின் பனங்கொட்டை மெண்டாலிற்றி எண்டு இணையத்தில் நக்கலடிக்கிறார்கள்.. புலம்பெயர்ந்து வெளிநாடு வந்தவர்களுக்கு கூட பாரம்பரிய முறைகளில் கல்வி பயில முடியாதவர்களுக்கு மாற்று வழிகளில் கல்விபயின்று பல்கலைக்கழகம் போய் கலாநிதிகூட வெளிநாடுகளில் ஆகிறார்கள் என்பது புரியவில்லை.. யூகேயில் இதற்கென்றே BTEC edexcel இருக்கிறது..

யாழ்ப்பாணிக்கு தெரிஞ்சதெல்லாம் ஓலெவல் ஏலெவல் யாழ்ப்பாணகம்பஸ்( இலங்கையை விட்டு வெளிய வந்து யாழ்ப்பாணகம்பஸ் எண்டா ஒருத்தனுக்கும் தெரியா.. கம்பஸ் வேல்ட் ரேங்கை இணையத்தில் தேடினால் பக் ஆல சிரிப்பானுக)..என்ர பெற்றோர் மற்றும் நான்கூட வெளிநாடு வரும்வரை இப்படித்தான் இருந்தேன்.. காசுகட்டி கம்பஸ் படிக்கலாம் எண்டெல்லாம் தெரியா… பிரைவேட் கம்பஸ் எண்டா என்னெண்டே தெரியா அப்பிடி ஒண்டு இருக்கெண்டும் தெரியா.. இஞ்ச வந்தா பூரா பிறைவெட்தான் காசுகட்டித்தான் படிக்கோனும்.. அங்க படிச்சவன் எழுதின புத்தகத்தைதான் நாங்கள் ஊர் யூனில படிக்கிறம்.. ஆகையால் இன்னமும் யாழ்ப்பாணி மனநிலையில் இருப்பவர்கள் இப்பிடியே குண்டுசட்டிக்க குதிரை ஓட்டி காலத்தை முடிக்கவேண்டியதுதான்.. இனிவரும் யாழ்ப்பாண தலைமுறை குண்டுசட்டி பனங்கொட்டைகளாக இருக்க மாட்டாது என்று நம்புகிறேன்,.

சிறப்பு. 

கூடவே இந்த டாக்டர், எஞினியர், வக்கீல், அக்கவுண்டன் என்ற தொழில்சார் படிப்பின் மீது இருக்கும் மோகத்தையும், கல்வி-சார் கற்கைகள் (academic qualifications) மீதும் உள்ள கவர்சியையும் விடுத்து, plumbing, roofing போன்ற தொழில்களில் பயிற்சி எடுத்தால், தகமை பெற்று கொண்டால் உலகெங்கும் போகலாம் செல்வம் திரெட்டெலாம் (பின் ஊருக்கு போய் டிரைவர், வேலைக்காரி என ஜாம் ஜாம் எண்டு வாழலாம்🤣).

யோசித்துப்பார்தால் டை கட்டி, ஏசி அறையில் இருந்து செய்யும் plumbing தான் IT. இந்தியாவில் நாராயண மூர்த்தி செய்ததன் 1% வடகிழக்கில் செய்தாலே நாம் எங்கையோ போய்விடலாம்.

மேலே சொன்னது போல் முதலிடுபவர் யார் என்பது பற்றிய தெளிவான பார்வை எமக்கு அவசியம். இது ஒன்றும் தர்மஸ்தாபனம் இல்லை என்பதையும் கருத்தில் எடுக்கவே வேண்டும்.

கல்வி இப்போ பெரும் வியாபாரம். பிரிஸ்டீஜ் சிம்பள். அதில் முறைசாரா கல்வியும் அடங்கும்.

பிரித்தானியாவுக்குள் காலடி எடுத்து வைக்காமலே ஒட்டு மொத்த டிகிரியையும் இலங்கையில் இருந்து முடித்துவிட்டு நாமும் இன்ன பிரித்தானிய பல்கலைகழகம் என விபரகொத்தில், முகபுத்தகத்தில் போடுவது இப்போ சர்வ சாதாராணம்.

அவர்கள் இந்த தகமைகளை வைத்து வேலைகளும் எடுக்கிறார்கள். 

அது எந்தளவு நம்பகமான தகமை என்பது அவர்களுக்கும் வேலை கொடுப்பவருக்குமான பிரச்சனை.

ஆகவே அதிகம் உணர்சிவசப்பட்டு புல்லரிக்காமல் - இது உண்மையில் தகமையான நிறுவனம்தானே என ஆராய்ந்து தனி நபர்கள் அதை தம் முன்னேற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். 

காசை கொடுத்து போட்டு, வடிவேலு எடுத்த அண்ணா யூனிவர்சிட்டி டாக்டர் பட்டம் போல ஒன்றை எடுத்து விட்டு “நே” என்று முழிக்காதவரை ஓக்கே.

53 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அதை விளக்கமாக எழுதவேண்டும்.. ஓரிருவர் செய்வதை எல்லோருக்கும் பொதுமைப்படுத்தக்குடாது.. பத்தாம் வகுப்பு படித்தவன் எல்லாம் என்று பொதுமைப்படுத்தி எல்லோரையும் நக்கலாக எழுதினால் தவறாகத்தான் விளங்கிக்கொள்ளப்படும்.. பாரம்பரிய முறை படிப்பில்கூட குதிரை ஓடுவது கொப்பி அடிப்பது எல்லாமே இருக்கு.. ஏன் எனக்கு கூட இன்றுவரை எனது யாழ்ப்பாண டிகிரியில் நிறைவு இல்லை.. ஏனெனில் அது நான் உண்மையாக படித்து எடுத்தது இல்லை.. பொடியன் கம்பஸ் எண்ட மதிப்பில நாலுபக்கத்தாலும் உதவியும் காசும் மதிப்பும் வர நான் அதை பயன்படுத்தி ரூம் பொடியளோட சேந்து பகல் முழுக்க விளையாட்டு படம் கடைகடையா விதம் விதமா சாப்பாடு குடி எண்டு இருந்திட்டு அசைமெண்டு சோதினை எல்லாம் கடைசி நேரத்துல ஆளை ஆள் பிட் அடிச்சு அதில கொஞ்சம் இதில கொஞ்சம் எண்டு கொப்பி பண்ணி பாசனதுதான்.. அதுக்காக அங்கும் உண்மையாக படிப்பவர்கள் இருக்கிறார்கள்.. இங்கும் அப்படித்தான்.. ஒரு சிலதை வைத்து எல்லாரையும் பொதுமைப்படுத்தகூடாது.. எப்படியாவது படிக்கனும் என்று முயற்சி செய்பவர்களை கூட மனம் உடைய செய்துவிடும் இப்படியான பொதுமைப்படுத்தும் நக்கல் நையாண்டிகள்.. எப்படியாவது கல்வி கற்க வேண்டும் என்று விரும்புபவர்களை நாம் எப்பொழுதும் ஊக்கப்படுத்த வேண்டுமே ஒழிய முதல் படியில் ஏறும்போதே காலை இடறி விழுத்தகூடாது..

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொழிற்கல்வி கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அவசியம் தேவை. அது சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதாக இருந்தாலும்.....

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, suvy said:

நல்ல கருத்து ஓணாண்டியார்.......!  👍

ஆம் நல்ல கருத்துகள்.....உண்மை 

8 minutes ago, குமாரசாமி said:

தொழிற்கல்வி கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் அவசியம் தேவை. அது சுவருக்கு சுண்ணாம்பு அடிப்பதாக இருந்தாலும்.....

ஆமாம் நிச்சியமாக .....அது கைதடியில்.  வரவேண்டும் 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, Kandiah57 said:

ஆமாம் நிச்சியமாக .....அது கைதடியில்.  வரவேண்டும் 🤣

கைதடிக்கு இருக்கிற வயோதிபர் மடமும் ஆயுர்வேத ஆஸ்பத்திரியும் காணும் :smiling_face_with_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

கைதடிக்கு இருக்கிற வயோதிபர் மடமும் ஆயுர்வேத ஆஸ்பத்திரியும் காணும் :smiling_face_with_sunglasses:

கைதடியில்.  இதைவிடவும் வேறு நிறுவனங்கள் உண்டு”...வடமாகாண சபை தலைமையகம். 

சைவச் சிறுவர்கள் அனாதை இல்லம் 

இரச்சணிய இல்லம்   கத்தோலிக்கருக்கானது 

செவிடர். குருடர். வாய்பேச முடியாதோர். பள்ளிக்கூடம். 

தென்னம்கள்ளிலிருந்து சாரயம். தயாரிக்கும். தொழில்சாலை ....இப்போது இல்லை 

தொழில்நுட்பம் கல்லூரி ஒன்று தேவை    அமையும் என்று நம்பிக்கை உண்டு” பார்ப்போம்   😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kandiah57 said:

தொழில்நுட்பம் கல்லூரி ஒன்று தேவை    அமையும் என்று நம்பிக்கை உண்டு” பார்ப்போம்   😂

அங்காலை தனங்கிளப்புக்கும்  ஏதாவது ஒன்றை குடுங்கப்பா......எல்லாம் உங்களுக்கு வேணுமெண்டால் இதென்ன நியாயம்??? :face_with_tears_of_joy:

1 hour ago, Kandiah57 said:

 

செவிடர். குருடர். வாய்பேச முடியாதோர். பள்ளிக்கூடம். 

  

மாற்றுத் திறனாளிகள் என்று நல்ல தமிழில் அழைக்கலாமே இவர்களை...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

மாற்றுத் திறனாளிகள் என்று நல்ல தமிழில் அழைக்கலாமே இவர்களை...

ஆம்.  ரொம்ப சரி    ஆனால் அங்கே பெயர் பலகையில்  இப்படி தான் இருக்கிறது  ...வருட வருடம்  சிறந்த முறையில் விளையாட்டு போட்டிகள் நடக்கும்   இனிமேல் நீங்கள் குறிப்பிட்படி அழைக்கிறேன்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.