Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                                                     

 

                                                                   மலருக்கு தென்றல் பகையானால் .......!

மலர்ந்திட கதிரவன் துணையுண்டு.

(1).

 

                                                                         நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால்  வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான்.

                                               நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். 

                                                                      இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது.  அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும்  சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும்  கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது.

                           முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள்.  ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது.

மலரும்...........!   🌹

Edited by suvy

  • Replies 71
  • Views 4.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • மலர்..........(3).                                                         நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்ற

  • மலர்............(5).                                                                                            வவுனியாவில் நிர்மலா நடந்து செல்லும் அந்த வீதியில் அநேகமானோர் பலதரப்பட்ட வாகனங்

  • மலர்.................(2).                                                                                                                    சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, suvy said:

மலரும்...........!   🌹

மலரட்டும்.....:rose:

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து  வாடா மலராக மலர  காத்திருக்கிறோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். 

No Phone No Life.

மலரும் வாசனைக்காக காத்திருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்க சுவி அண்ணா. 
(இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)
 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

                                                                                                     

 

                                                                   மலருக்கு தென்றல் பகையானால் .......!

மலர்ந்திட கதிரவன் துணையுண்டு.

(1).

 

                                                                         நிர்மலா சங்கரைத் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டுக்கு வந்து பத்து வருடமாகின்றது. முன்பெல்லாம் மிக அன்பாயிருந்த அவளது மாமியார் இராசம்மா இப்போதெல்லாம் அவள்மீது கொஞ்சம் எரிச்சலாகத்தான் இருக்கிறாள். அது நிர்மலா அவளைக் கடந்து போகும் போதெல்லாம் ஜாடைமாடையாக கதைப்பதும், ஏதாவது சிறு தவறு செய்தாலும் அதைப் பெரிதாக்கி சண்டை போடுவதுடன், மாலையில் மகன் சங்கர் வேலையால்  வந்ததும் போட்டுக் குடுப்பதிலும் தெரிகிறது. அவனும் வேலையால் அலுத்துக் களைத்து வரும்போது தாயின் புறணியைக் கேட்டு சில நேரங்களில் நிர்மலாவை கை நீட்டி அடித்தும் விடுகிறான்.

                                               நிர்மலாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லா விட்டாலும்கூட சராசரியான நடுத்தரக் குடும்பம்தான். சண்முகம் கோமளம் தம்பதிகளுக்கு நிர்மலா ஐந்தாவது பெண்பிள்ளை. ஆனாலும் அவர்கள் அவளை நன்றாகப் படிக்க வைத்திருந்தார்கள். அவளும் படிப்பில் நல்ல கெட்டிக்காரி. விசேஷமாக கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களில் அந்தப் பாடசாலையிலேயே சிறப்பான சித்தி பெற்றிருந்தாள். அத்துடன் சங்கீதத்திலும் நல்ல தேர்ச்சி உண்டு. யாழ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக இந்தத் திருமணம் வந்தது. அவர்கள் சீர்வரிசை எதுவும் கேட்கவில்லை. ஆயினும் நிர்மலா எவ்வளவோ மறுத்தும்கூட, இனி இப்படி ஒரு சம்பந்தம் அமைவது கஷ்டம் என்று சொல்லு அவளை சம்மதிக்க வைத்துவிட்டார்கள். ஆனாலும் சண்முகம் அவளுக்கு கழுத்துக்கு காதுக்கு கைகளுக்கு என்று சில பல நகைகள் எல்லாம் போட்டுத்தான் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் வரும்போது மறக்காமல் தனது மடிக்கணனியையும் கைபேசியையும் கையேடு கொண்டு வந்திருந்தாள். 

                                                                      இராசம்மாவும் கொடுமையானவள் அல்ல. அவளுக்கு வயசும் நாற்பத்தைந்தில் இருந்து நாற்பத்தெட்டில்தான் இருக்கும். அவளுக்கு குட்டையான தலைமுடி. முன்பெல்லாம் முடி நீளமாக வளரவில்லையே என்பதுதான் அவளது குறையாக இருந்தது.  அதற்காக "கேசவர்த்தினி" உட்பட பல எண்ணெய்கள் தைலங்கள் எல்லாம் பாவித்தும் வந்திருக்கிறாள். இப்பொழுது அந்தக் குறைகூட இல்லை அவளுக்கு. முடிவாக இருக்கிற முடியை காப்பாற்றினாலே போதும் என்னும் மனநிலைக்கு வந்திருக்கிறாள்.அவ்வளவுக்கு முடி கொட்டத் தொடங்கி விட்டது. அத்துடன் இத்தனை வருடங்களாகியும் மகனுக்கு பிள்ளை இல்லையே என்னும் கவலையும்  சேர்ந்துகொண்டது. அதற்கேற்றாற்போல் கோயில் குளங்கள், கடைகளில் சந்திக்கும் அவளது சிநேகிதிகளும் சங்கருக்கு இன்னொரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள். "கரைப்பார் கரைத்தால் கல்லும்  கரைவதுபோல்" இப்போதெல்லாம் அந்த எண்ணங்கள்தான் அவளை ஆட்டிப் படைக்கிறது.

                           முன்பு இராசம்மாதான் மகனிடம் சொல்லி நிர்மலா விட்ட அவள் படிப்பைத் தொடர வழி செய்து பட்டப் படிப்பை முடிக்கவும் உதவியவள். சமைக்கவே தெரியாமல் இருந்த அவளை தனக்குப் பக்கத்தில் வைத்து தான் சமைக்கும் போதெல்லாம் அவளுக்கும் சொல்லிக் குடுத்து சாம்பார்,ரசம்,கறி குழம்புகளுக்கு ஏற்றாற்போல் காய்கறி வெட்டுவதில் இருந்து மீன்கள், இறைச்சிகள் எப்படி வெட்டுவது என்பதுவரை கற்றுக் குடுத்திருந்தாள். கூடவே வேலைக்காரி தாயம்மாவும் இருப்பதால் சமைக்கிற நேரம் போக மிச்சம் நிறைய நேரம் இருக்கும். அந்நேரங்களில் இருவரும் சங்கீதம்,இராகங்கள் பற்றி விலாவாரியாக விவாதிப்பதும் தேவாரம் கீர்த்தனைகள் சாதகம் செய்வதுமாய் பொழுதுகள் போகும். அதனால் மாமியாரை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவவை தனது தாய்க்கும் மேலாக மதித்து கவனித்து வருவாள்.  ஆனாலும் என்ன செய்வது தன் குலம் விளங்க ஒரு பேரனோ பேத்தியோ அவள் பெற்றுத் தரவில்லை என்னும் ஆதங்கம் அவளை கொஞ்சம் மாற்றி விட்டது.

மலரும்...........!   🌹

குடும்பக் கதை போலுள்ளது.
நிச்சயம்  எதிர்பாராத சம்பவங்கள் நடக்கும் என்ற ஆவலுடன்,
வாசிக்க காத்திருக்கின்றோம். 
தொடருங்கள் சுவி. 🙂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
56 minutes ago, ஏராளன் said:

தொடருங்க சுவி அண்ணா. 
(இனி மருத்துவச் சான்றிதழ் பெற்றுத் தான் திருமணம் செய்து வைக்கவேண்டும் போல!)
 

புலம்பெயர் எமது உறவுகளுக்குள் அதுவும் நடந்டேறியது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

புலம்பெயர் எமது உறவுகளுக்குள் அதுவும் நடந்டேறியது.

அண்ணை அது நன்மை தானே. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களா எனும் சான்றிதழ் தானே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, ஏராளன் said:

அண்ணை அது நன்மை தானே. குழந்தை பெற்றுக்கொள்ளும் தகுதி உடையவர்களா எனும் சான்றிதழ் தானே?

சிலருக்கு தகுதி இருந்தும் பின்னர் அது சரிவராமல் செயற்கையாகத்தானே பிள்ளையை உருவாக்குகின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

சிலருக்கு தகுதி இருந்தும் பின்னர் அது சரிவராமல் செயற்கையாகத்தானே பிள்ளையை உருவாக்குகின்றார்கள்?

அதுவும் உண்மை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்.................(2).

                                                  

                                                                சங்கரும் நிர்மலாவும் எல்லா வைத்தியர்களையும் போய் பார்த்து தேவையான பரிசோதனைகள் எல்லாம் கூட செய்து விட்டார்கள். எல்லா பதில்களும் அவர்கள் இருவர் மீதும் உடலளவில் எந்தக் குறையும் இல்லை என்றே சொன்னார்கள். இப்போதெல்லாம் சங்கருக்கும் குழந்தை இல்லாதது பெரிய குறையாகத் தெரிகின்றது. தனக்குப்  பின் திருமணம் செய்தவர்கள் எல்லாம் பிள்ளை குட்டிகளுடன் வரும்போது ஏக்கமாய் இருக்கும். அவளுக்கும் அந்த ஏக்கம் இருக்கிறது. தாயையும் மகனையும் பார்க்கும்போது கவலையாகவும் இருக்கும். இவ்வளவுகாலமும் இல்லாத பிள்ளை இனி கிடைக்குமா என்னும் விரக்தியும் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கு.

                                                                   நிர்மலாவின் மூத்த தமக்கைக்கு நான்கு பிள்ளைகள். அவளுக்கு பின் திருமணம் செய்த இரண்டாவது அக்காவுக்கு இரண்டு பிள்ளைகள். தனக்கும் எந்தக் குறையும் இல்லை என்பதை தானே நன்றாக உணர்ந்திருந்தாள். ஆனால் இந்த சமூகம் பெண்கள் மீதுதானே குறைகளைக் கூறி வசை பாடுகிறது. ஒருபோதும்  ஆண்களை சந்தேகிக்கிறதில்லையே. ஏதாவது உறவினர்களின் விசேடங்களுக்கு இவர்கள் போனாலும் அவர்களின் மங்களமான எந்த நிகழ்வுகளிலும் நிர்மலாவை தவிர்த்து விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் அவளாகவே அது போன்ற நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி விடுகிறாள்.

                                                          அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை நிர்மலா  அழுக்குத் துணிகளை அலசிப் பிழிந்து அவற்றை வாளியோடு தூக்கிக் கொண்டு வீட்டுக் கொல்லையில் இருந்த கொடியில் விரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது அதன் பக்கத்தில் இருந்த அறையில் இருந்து இராசம்மாவும் மகன் சங்கரும் கதைப்பது கேட்கிறது. அவர்களது பேச்சில் தனது பெயரும் அடிபடுவதால் அவளும் அப்படியே நின்று கேட்கிறாள்......!

--- இராசம்மா மகனிடம் தம்பி நான் சொன்னதை யோசிச்சனியோடா..... நீ என்ன சொல்கிறாய் என்று வினவ

--- அது அம்மா வந்து.....நிர்மலா பாவம் அம்மா, இதெல்லாம் தேவையா என்றுதான் யோசிக்கிறேன்.....!

--- நீ ஒன்றும் அதைப்பற்றி கவலைப் படவேண்டாம். நான் நல்ல நேரம் பார்த்து அவளிடம் பக்குவமாய் எடுத்து சொல்லுறன். அதுக்கென்ன அவளும் எங்களுடன் கூடவே இருக்கட்டும்......என்ன ஊர் உலகத்தில இல்லாததையா நீ புதுசா செய்யப் போகிறாய்......உங்களுக்கு ஒரு பிள்ளை இருந்தால் நான் ஏன் இப்படி சொல்லப் போறன்.......நானும் ஒரு பொம்பிளைதானே.....!

--- அதுக்கு இன்னும் கொஞ்சகாலம் பார்த்து விட்டு செய்யலாம்தானே அம்மா.

--- அது சரிதான்......ஆனால் நான் இப்ப பார்த்திருக்கிற இடம் நல்ல இடம். அப்பாவழி உறவும் கூட....பொம்பிளையும் நல்ல லட்ஷணமாய் இருக்கிறா. அதோட அவையிலும் அவசரப் படுகினம். இதை விட்டால் பிறகு எப்ப இப்படி அமையுமோ தெரியாது.அதுதாண்டா மோனை.....!

--- சரியம்மா என்னவோ செய்யுங்கோ. பட்டும் படாமலும் சொல்கிறான்.

--- அப்ப நான் அவையளிட்ட சரியென்று சொல்லுறன்.நீ ஒன்றுக்கும் யோசியாத, வாறமாதம் நல்லநாள் இருக்கெண்டு சொன்னவை, கொஞ்ச ஆட்களுடன் சென்று கோயிலில தாலி கட்டி கூட்டிக் கொண்டு வரலாம். எல்லா அலுவலும் அவையளே பாக்கினம்,நாங்கள் செலவில் பாதி  குடுத்தால் போதும்.

--- இதால பிரச்சினை ஒன்றும் வராதுதானே அம்மா.

--- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள்.

                                                     இவையனைத்தையும் எதிர்பாராமல் வெளியில் நின்று கேட்ட நிர்மலாவுக்கு வானமே இடிஞ்சு தலைமேல் விழுந்தது போல் இருக்கிறது. இந்த கல்யாணத்துக்கு சங்கரும் சரியென்று சொல்லுவான் என்பதை அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் அங்கிருந்து அழுதுவிட்டு பேசாமல் துணிகளை கொடியில் விரித்து விட்டு முத்தத்துக்கு வருகிறாள். அவள் பின் பக்கத்தில் இருந்து வெறும் வாளியுடன் வருவதைப் பார்த்த இராசம்மாவுக்கு தாங்கள் கதைத்ததை இவள் கேட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் வருகிறது. கேட்டிருந்தால் அதுவும் ஒன்றுக்கு நல்லதுதான் என்று நினைக்கிறாள். அதற்கேற்றாற்போல் நிர்மலாவின் அழுது சிவந்த முகத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் உள்ளே போகிறாள்.......!

மலரும்........!  🌷

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல தொடர் தொடர்ந்து மலரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

--- நான் நல்லா விசாரிச்சுட்டன். நிர்மலாவோடு பதிவுத் திருமணம் செய்யவில்லைத்தானே அதனால் பெரிசா ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்கள் அவளையும் எங்களோடுதானே வைத்திருக்கப் போகிறோம். என்று சொல்லிவிட்டு வெளியே வருகிறாள்.

அடிபாவி பெற்ற தாயே மகனுக்கு கூட்டி குடுக்கிறாவே.

தொடருங்கள் சுவி அண்ணா 

ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? 

கதை ஊரிலா நிகழ்கின்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்..........(3).

                                                        நிர்மலாவும் தான் இனி என்ன செய்யவேண்டும் என்று மனதுக்குள் நினைத்து கொள்கிறாள். தொடர்ந்து இங்கே இருப்பதா அம்மா வீட்ட சென்று அவர்களுக்கு சுமையாக இருப்பதா. ஏற்கனவே பெரியத்தான் குடி வெறி என்று ஒழுங்காக இல்லாததால பெரியக்கா குடும்பமும் பிள்ளைகளுடன் அம்மாவோடுதான் இருக்கிறார்கள். இதில் நானும் அங்கு சென்று இருப்பது சரியாய் இராது. என்று பலவாறு நினைக்கிறாள். தான் முன்பு விளையாட்டாக "யூ டியூபில்" சமையல் மற்றும் தோட்டக் கலை என்று தொடங்கிய நிகழ்ச்சிகள் மூலம் ஏதோ கொஞ்ச காசு வருகுதுதான் ஆனால் அது மட்டும் போதாது வேறு ஏதாவதும் செய்ய வேண்டும். அவளால் சரியாக ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.

                                               

                                                           அன்று இராசம்மாவும் சங்கரும் வீட்டில் பரபரப்பாக வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். சங்கர் கடைக்கும் போகவில்லை. அவன் தனது பெட்டியில் வேட்டி, சட்டை மற்றும் புது ஆடைகள் எல்லாம் எடுத்து வைத்து பூட்டுகிறான்.வளமையாய் அவன் எங்காவது வெளியூர் போவதென்றால் நிர்மலாதான் எல்லா ஆயத்த வேலைகளும் செய்து வைப்பாள். அவனுக்கு ஒரு வேலையும் இருக்காது. ஐயா ஹாயாக பெட்டியை உருட்டிக் கொண்டு கிளம்பிப் போவார்.இப்போது எதற்கும் அவளை கூப்பிடவில்லை.அவர்களுக்கு உள்ளுக்குள் குற்ற உணர்வு இருப்பதையும் அவள் கவனிக்கிறாள்.

                            வெளியே அவர்களது கார் வந்து நிக்கும் சத்தம் கேட்கிறது. அதை சாரதி மிகவும் அழகாக கழுவி பொலிஸ் போட்டு துடைத்துக் கொண்டு வந்திருந்தார். வெளியே தயாராய் இருந்த இவர்களது சாமான்கள் எல்லாவற்றையும் அவரே எடுத்துக் கொண்டு போய் கார் டிக்கியில் வைக்கிறார். நிர்மலா எல்லோருக்கும் தேநீர் கொண்டுவந்து குடுக்கும் போது  இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன். வீட்டையும் கொஞ்சம் கழுவித் துடைத்து வளைவுகளையும் கூட்டிப் பெருக்கி சுத்தமாய் வைத்திருங்கோ என்று சொல்லி கொஞ்சநேரம் அவளது கையை வாஞ்சையாய் பிடித்திருந்தது விட்டு கலங்கிய கண்களுடன்  காருக்குப் போக சங்கரும் அவளைத் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்து விட்டு தலை குனிந்து கொண்டு போய் காருக்குள் ஏறுகிறான்.   காரும் புறப்பட்டு செல்கிறது.

                           நிர்மலாவுக்கும் வேலைக்காரம்மாவுக்கும் வீட்டில் நிறைய வேலைகள் இருந்தன. அவர்கள் கூடுதலாக இரண்டு ஆட்களையும் கூலிக்கு கூப்பிட்டு வீடு மட்டுமன்றி தோட்டம், முற்றம் என்று எல்லாவற்றையும் நன்றாக செப்பனிட்டு மரம் செடி கொடிகள் எல்லாவற்றையும் அழகாக கத்தரித்து செழிப்பாக வைத்திருந்தார்கள்.

 

                                                              நான்காம் நாள் அதிகாலை நிர்மலா முதல்நாளே ஒழுங்கு செய்து வைத்திருந்த தனது சூட்கேஸ், கணனி கைபேசி எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டாள். மறக்காமல் போன் சிம்மை கழட்டி பையில் வைத்துவிட்டு மிக்க வேதனையுடன் தாலிக்கொடியை கழட்டி தனது கூறைச் சேலையின் மேல் வைத்து அவற்றை  சங்கரின் மேசைமேல் வைத்து விட்டு வெளியே வருகிறாள். பின் குசினி அருகே இருக்கும் அறையை சென்று பார்க்க அங்கு தாயம்மா பகல்முழுதும் வேலை செய்த களைப்பில் நன்றாக அயர்ந்து உறங்குகிறாள். அப்படியே வீதிக்கு வந்தவள் சிறிது தூரம் நடக்கும்போது அவ்வழியால் வந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து புகையிரத நிலையத்துக்கு வருகிறாள். எதற்கும் இருக்கட்டும் என்று கொழும்புவரை பயணச்சீட்டு எடுத்துக் கொண்டு அடுத்து வந்த புகையிரதத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறாள். அந்த வண்டியும் சாவகச்சேரி, கொடிகாமம் என்று ஒவ்வொரு நிலையமாய் நின்று நின்று போகிறது. நிர்மலாவுக்கு எங்கு போவது, எங்கு இறங்குவது என்ற எண்ணம் இல்லை. அவர்கள் வரமுதல் இங்கிருந்து போக வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கின்றது. வவுனியாவில் வண்டி நிக்கும்போதுதான் தன் நினைவுக்கு வந்தவள் இனி அங்கால  எல்லாம் சிங்கள ஊர்கள்தான் வரும், அதனால் இங்கேயே இறங்கி அடுத்த அலுவலைப் பார்க்கலாம் என்று நினைத்து வண்டி புறப்பட முன் பெட்டியுடன் இறங்கி விடுகிறாள்.

                                                 காலைப் பொழுது பலபலவென்று விடிந்து விட்டிருந்தது. நேராக வவுனியா மையத்துக்கு நடந்து வருகிறாள். இது எனக்குப் பழக்கமில்லாத ஊர் அதனால் எதற்கும் பயந்தவளாக தன்னைக் காட்டிக் கொள்ளக் கூடாது என்று தனக்குள் சொல்லிக்கொண்டே வருகிறாள். அதனால் மிகவும் பழகியமாதிரி அங்கிருந்த ஒரு கைபேசி விற்கும் கடைக்கு சென்று புதிதாக ஒரு சிம் வாங்கிப் போனுக்குள் பொருத்திவிட்டு ஒரு புதிய இலக்கத்தையும் பெற்றுக் கொண்டு வெளியே வரும்போது எங்கிருந்தோ ஒரு கோவில் மணி ஒலிக்கின்றது. அந்த ஓசையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்றால் அது ஒரு முருகன் கோவில். அங்கு நன்கு வணங்கி முருகனுக்கு ஒரு அர்ச்சனையும் செய்துவிட்டு  தனது கைபேசி மூலம் அருகில் இருக்கும் பல விடுதிகளில் ஒன்றைத் தெரிவுசெய்து அங்கு சென்று தனியறை ஒன்றை எடுத்து அங்கே தனது பெட்டியை வைத்துவிட்டு சிறிது ஒய்வு எடுக்கிறாள்.

                                                பின்பு நிர்மலா அறையைப் பூட்டிவிட்டு கைப்பையுடன் வெளியே வருகிறாள். அவளது நோக்கமெல்லாம் நகரத்தைத் தாண்டி கொஞ்சம் உள்ளூருக்குள் சென்று ஒரு பாடசாலையை அண்மித்த இடமாக வதிவிடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். தற்போது நிர்மலாவிடம் போதிய அளவு பணமும் தனக்குப் பெற்றோர் போட்டுவிட்ட நகைகளும் கொஞ்சம் இருக்கின்றன. கைபேசியிலேயே அங்குள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து பின் ஒரு வீதியைப் பிடித்து நடந்து செல்கிறாள்.......!

மலரும்..........!🍁

  • கருத்துக்கள உறவுகள்

 கதை வேகமாக போகிறது . இதுசற்றுமுந்தைய காலமாக இருக்கும்.  தற்போது என்றால்  சண்டைக்குவந்து  மாமியாரை உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள் மருமகள். ஏன் திருமணம் பதிவு செய்யப்படவில்லை?  இது குற்றமாச்சே ? முதல்மணமகள் உயிரோடு இருக்கும்போது இரண்டாம் திருமணம் முதல் மணமகள் விருப்பின்றி  குற்றமாகும் . தொடருங்கள்........

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண்ணால் தன் வாழ்க்கையை தீர்மானிக்க முடிகிறது, எல்லோரும் கைவிடும் போது.
தொடருங்கள் சுவி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பிள்ளைகளாக இருக்கும் ஆண்கள் எப்போதும் அப்படியே வாழ்வது நன்று...பெண்கள் தனித்து வாழும் நிலை ஏற்பட்டால் சந்தோசமாக ஏற்று தங்களை முன்னேற்றி யார் கை விட்டார்களோ அவர்கள் முன்னாடி வாழ்ந்து காட்ட வேண்டும்..என்ன  மனமும், உடலும் கொஞ்சம் சோர்ந்து போய் விடும் அவ்வளவு தான்..தொடருங்கள் சுவியண்ண...

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 16:03, நிழலி said:

ஆனாலும் இக் காலத்திலும் இப்படி செய்வார்களா என்ற கேள்வி வருகின்றது. முக்கியமாக இக் காலத்தில் எங்கள் சமூகத்தில் இப்படி நடப்பதில்லை அல்லவா? 

B5-FB0047-C573-41-FB-86-FC-BD065-C1-BA76

On 24/3/2023 at 16:03, நிழலி said:

கதை ஊரிலா நிகழ்கின்றது?

கொடிகாமம்,சாவகச்சேரி, வவுனியா  எல்லாம் வருகிறதை கவனிக்கவில்லையா நிழலி?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்............(4).

                                         

 

                                                     "வவுனியா" ஒரு நகரசபையைக் கொண்ட மிகவும் அழகான நகரம். திரும்பிய இடமெல்லாம் குளங்கள் உள்ள நகரம் என்றால் அது வவுனியாதான். அந்தக் குளங்களை அண்மித்தே குடிமனைகள் பாடசாலைகள் கடைகள் எல்லாம் இருக்கும். அங்கு பல கோவில்களும் ஓரிரு மசூதி மற்றும் விகாரைகள் இருக்கின்றன. அவளும் வெளிக்குளத்தில் ஒரு பாடசாலையை தெரிவுசெய்து அதற்கு அண்மையில் ஒரு ஆட்டோவில் சென்று இறங்கி பணம்குடுத்த ஆட்டோவை அனுப்பிவிட்டு அதில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதியில் குடிமனைகள் இருக்கும் பக்கமாக நடந்து போகிறாள்.

                                                                   இங்கு இராசம்மாவின் வீட்டில்  வழக்கம்போல் காலை ஆறுமணிக்கு காகம், கோழி, குருவிகளின்களின் சத்தத்தில் எழுந்த வேலைக்காரி தாயம்மா முற்றமெல்லாம் கூட்டி சாணித் தண்ணி தெளித்து கோலம் போட்டுவிட்டு அதன் நடுவில் சாணியாலேயே அழகாக ஒரு பிள்ளையாரும் பிடித்து வைத்து அதன்மேல் செம்பருத்திப் பூ ஒன்றும் வைத்து விட்டு நிர்மலாவைத் தேடி அவள் அறைக்குப் போகிறாள். அங்கு அவளைக் காணாமல் குளியல்அறை, கிணத்தடி எல்லாம் தேடி கூப்பிட்டுப் பார்த்து விட்டு நிர்மலாவுக்கு போன் செய்கிறாள். அது அமைதியாக இருக்கின்றது. சரி வெளியே சந்தைக்கு எங்காவது போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு மற்ற மற்ற வேலைகளைச் செய்கிறாள். இப்படியாக இருமணித்தியாலங்களுக்கு மேலாகி விட்டிருந்தது. மீண்டும் மீண்டும் நிர்மலாவின் கைபேசிக்கு முயற்சி செய்தும் தொடர்பில்லாததால் தாயம்மாவுக்கு பயமாகவும் பதற்றமாகவும் இருக்கிறது. அதற்கு சமீப நாட்களாக வீட்டில் ரகசியமாக நடக்கும் திருமண ஏற்பாடுகளும் காரணம். அது தாயம்மாவுக்கும் கவலையாக இருக்கிறது. தன்னை ஒருவாறு ஆசுவாசப்படுத்திக் கொண்டு இராசம்மாவுக்கு தொலைபேசி எடுக்கிறாள்.அங்கிருந்தும் இராசம்மா கைபேசியை எடுக்கவில்லை. இராசம்மா மற்றும் சங்கர் ஜோதி அவளின் பெற்றோர்கள் எல்லோருமாக வந்த கார்கள் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவிலடியில் தரிசனத்துக்காக தரித்து நிற்கின்றன.

                                                   சுவாமி தரிசனம் முடிந்து வந்த இராசம்மா தனது கைப்பேசியைப் பார்த்தபோது அதில் வீட்டில் இருந்து அழைத்திருப்பது தெரிந்து வீட்டிற்கு அழைப்பு எடுக்கிறாள். அப்போது தாயம்மா தொலைபேசியை எடுத்து ஹலோ அம்மாவா பேசுறது என்று கேட்கிறாள்.

--- ஓம்.....நான்தான் என்ன தாயம்மா என்ன விடயம்.

--- அது வந்து அம்மா சின்னம்மாவைக் காணவில்லை. அதுதான் பதற்றமாய் இருக்கு.

--- சரி.....நீ பதறாதே......நாங்கள் இப்பொழுது கோயிலடியில் நிக்கிறம். நீ ஒரு தட்டத்தில் ஆரத்தி சாமான்கள் எல்லாம் எடுத்து ஒழுங்கு பண்ணி வை. நான் அயல் ஆக்களிடமும் சொல்லி இருக்கிறன், அவர்களும் இப்ப அங்கு வருவார்கள். நாங்களும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்திடுவம்.

--- சரி அம்மா அப்படியே செய்கிறேன்......!

அப்போது ஒரு வானில் சிலர் வந்து சில பல பலகாரப் பெட்டிகளுடன் உணவு கறி வகைகளும் அத்துடன் பெரிய பெரிய சுடுதண்ணீர்ப் போத்தல்களில் பால் தேநீர் மற்றும் கோப்பி எல்லாம் இறக்கி வைத்து விட்டுப் போகிறார்கள்.

                                  கைபேசியில் தாயம்மாவுக்கு தைரியம் சொல்லி விட்டாளே தவிர இராசம்மாவுக்கும் உள்ளுக்குள் ஒரு பதற்றம் ஏற்பட்டு விட்டது. ஒருவேளை நிர்மலா தனது தாய் வீட்டுக்கு போயிருக்கலாம் என நினைத்து அங்கு பேசுவதற்கு கைபேசியை எடுத்தவள் பிறகு இப்ப வேண்டாம், எதுக்கும் வீட்டுக்குப் போய் பார்க்கலாம் என்று முடிவெடுத்து சங்கருக்கும் விடயத்தை சொல்லாமல் மறைத்து விடுகிறாள். அவர்களின் கார்கள் மீண்டும் அங்கிருந்து புறப்படுகின்றன.

                                                                   தாயம்மாவும் அயலவர்களும் சேர்ந்து பொம்பிளை மாப்பிளைக்கு ஆரத்தி எல்லாம் எடுக்க ஆயத்தமாய் இருக்கும் போது  அவர்களின் வண்டியும் அங்கு வந்து நிக்கிறது. மணமக்கள் இறங்கி உள்ளே வர இரு சுமங்கலிப் பெண்கள் வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து கண்ணூறு கழித்து அவர்களுக்கு திலகம் இட்டு விட்டு மிச்சத்தைக் கொண்டுபோய் வாசலில் கொட்டிவிட்டு வருகினம். பின் எல்லோருமாக வீட்டுக்குள் போகிறார்கள். சங்கரின் கண்கள் நிர்மலாவைத் தேடுகிறது. தாயிடம் ஜாடையில் விசாரிக்கிறான். தாயும் கண்ணாலேயே அவனைப் பேசாமல் இருக்கும்படி ஜாடை காட்டி விட்டு தாயம்மாவை தனியாக அழைத்துக் கொண்டு போகிறாள். அயலவர்கள் சிலர் வந்திருந்த எல்லோருக்கும் பெட்டிகளில் இருந்து உணவுகள், தேநீர்கள் எல்லாம் எடுத்து பரிமாறுகிறார்கள்.

                                                               சங்கரும் புது மனைவி ஜோதிக்கு ஆடைகள் மாற்றுவதற்கு தங்களது அறையைக் காட்டிவிட்டு தனது ஆபீஸ் அறைக்கு வருகிறான். அங்கு அவனது மேசைமீது நிர்மலாவின் கூறைப்புடவையும் அதன்மேல் தாலிக் கொடியையும் பார்த்ததும் அவனுக்கு ஓரளவு விடயம் புரிகின்றது. வந்திருந்தவர்கள் எல்லோரும் இவர்களை வாழ்த்திவிட்டு சென்றபின் அவன் தாயிடம் சென்று அவற்றைத் தருகிறான். அவற்றைப் பார்த்ததும் இராசம்மாவுக்கு எல்லாம் தெளிவாகப் புரிகின்றது. உடனே இராசம்மா நிர்மலாவின் வீட்டுக்கு அழைப்பு எடுத்து அங்கு நிர்மலா வந்தாளா என்று விசாரிக்கிறாள். அதைக் கேட்டதும் நிர்மலாவின் தந்தை சண்முகமும்  கோமளமும் பதற்றமாகி இங்கு வரவில்லை என்று சொல்கின்றார்கள். தொடர்ந்து சண்முகம் நான் உடனே அங்கு வருகின்றேன் சம்பந்திஎன்ர பிள்ளை எங்கு போயிருப்பாள், அங்கு என்ன நடந்தது என விசாரிக்க இராசம்மாவும் நீங்கள் இப்ப இங்கு வரவேண்டாம். அவளின் சிநேகிதிகள் வீட்டுக்கு போயிருப்பாள். நான் எல்லா இடமும் விசாரித்து பார்த்து விட்டு உங்களுக்கு சொல்லுறன் என்று சொல்லி அழைப்பைத் துண்டித்து விடுகிறாள். இவை எதையும் அறியாத ஜோதி ஆடை மாற்றி வரவேற்பறைக்கு வந்து சங்கரிடம் எங்கே உங்களது மனைவி நிர்மலாவை நான் பார்க்கலாமா என்று கேட்கிறாள். 

மலரும்..........! 🌹

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மூச்சில்... மிகுதி மூன்று பாகத்தையும் படித்து முடித்தேன்.
அருமையாக உள்ளது... தொடருங்கள் சுவியர். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

நடந்த சம்பவங்களை அருகில் இருந்துபார்த்துக் கொண்டு இருப்பதுபோல எழுதுகிறீர்கள். தொடரட்டும்.  நிர்மலாவின் வாழ்வு ...விடிவு நோக்கி பயணிக்கட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2023 at 05:00, suvy said:

இராசம்மாவும் நிர்மலாவிடம் பிள்ளை நாங்கள் ஒரு அலுவலாய் ஒரு இடத்துக்கு போயிட்டு இரண்டுநாள் கழித்துத்தான் வருவம். அதுவரை தாயம்மாவும் நீயும் வீட்டைப் பார்த்துக்கொண்டு கவனமாய் இருங்கோ. நான் போய் வந்து எல்லாம் சொல்லுறன்.

இது கதையாக இருந்தாலும் மிகவும் கஸ்டமான கட்டம்.

5 hours ago, suvy said:

மலரும்..........! 🌹

ஆவலுடன் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நிறைய விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்..கதையை படிக்கும் போது மனதுக்கு கடினமாக இருக்கிறது..அந்தப் பிள்ளையின் கணவரும், தாயும் யாரிடமாவது நன்றாக படிக்கும் நிலை வர வேணும்.தொடருங்கள் சுவியண்ண.

Edited by யாயினி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.