Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக விசாரணைகோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் எழுத்து மூல முறைப்பாடு ஒன்றினையும் வழங்கியுள்ளார்.

இந்த எழுத்துமூல முறைப்பாடு நேற்றயதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த போதகர் புத்தரை அவமதித்துள்ளதாகவும் அவரது இந்த செயற்பாடுகளால் நாட்டின் மத நல்லிணக்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் கிறிஸ்தவ அடிப்படைவாத கும்பல் மிக வேகமாக மதமாற்றத்தை பரப்பி வருவதாகவும் கலகொடஅத்தே ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த சதியில் இந்த மத போதகரும் ஒரு அங்கம் என்றும் ஞானசார தேரர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://athavannews.com/2023/1331994

  • கருத்துக்கள உறவுகள்

புத்தர் இயேசுநாதரை தேடினார் - புத்தருக்கு இயேசுநாதர் தேவை - சர்ச்சைக்கருத்துக்களால் நெருக்கடியில் சிக்கிய ஜெரோம் பெர்ணாண்டோ

Published By: RAJEEBAN

17 MAY, 2023 | 10:02 AM
image

புத்தர் பௌத்தமதம் தொடர்பில் போதகர் ஜெரோம் பெர்ணாண்டோ தரக்குறைவான  வார்த்தைகளை பயன்படுத்தியுள்ள நிலையில் எவரும் எந்த மதத்தையும் அவமதிப்பதற்கு அனுமதிக்க கூடாது என கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க அவ்வாறான தனிநபர்களிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் போதகர் ஜெரோம் பெர்ணான்டோ புத்தர் பௌத்தமதம் குறித்து போதனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்ததை தொடர்ந்து பெரும்பான்மை பௌத்தசமூகத்தினர் மத்தியில் சீற்றம் உருவானது.

தன்னைத்தானே இறைதூதராக பிரகடனப்படுத்திய ஜெரோம் பெர்ணாண்டோவிற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள்கள் வெளியாகின.

Jerome-Fernando-6.jpg

ஜெரோம் பெர்ணான்டோ ஒருபோலி என சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்த சிலர் அவர் மன்னிப்புகோரவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.நாட்டில் மதஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற வேண்டுகோள்களும் எழுந்தன.

குறிப்பிட்ட வீடியோவில் ஜெரோம் பெர்ணான்டோ பௌத்தர்களின் மனது என்பது புத்தரின் அன்பை ஒருபோதும் செவிமடுப்பதில்லை  அவர்கள் ஞானம் குறித்தே சிந்திக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

ஆனால் ஞானம் பெற ஒளிவேண்டும்,புத்தர் என்ற பெயருக்கு ஞானம் பெற்றவர் என பொருள் அப்படியானால் எது பெரியது ஒளி அல்லது ஞானம் என ஜெரோம் பெர்ணான்டோ குறிப்பிட்ட வீடியோவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

நான் உலகத்தின் ஒளி என இயேசு கூறியிருந்தார்,நான்; உங்களிற்கு சொல்கின்றேன் இயேசு தான் ஞானம் பெற்றவன் என குறிப்பிடவில்லை எனவும் தெரிவித்திருந்த ஜெரோம் பெர்ணான்டோ இயேசு நான் ஒளி என தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆகவே நான் சொல்கின்றேன் புத்தர் உண்மையில் ஒளியை தேடினார் புத்தர் இயேசுநாதரை தேடினார்,புத்தருக்கு இயேசுநாதர் தேவை எனவும் ஜெரோம் பெர்ணாண்டோ  தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க நாட்டில் சட்டவிரோத மதவழிபாட்டுத்தலங்கள் உள்ளன அவ்வாறான ஒன்றிலேயே  தன்னைத்தானே இறைதூதர் என அழைத்துக்கொள்ளும் ஜெரோம் பெர்ணான்டோ மதநிந்தனை கருத்துக்களை தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/155460

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of windmill and text

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான் மாதிரி போகுது நாடு!

  • கருத்துக்கள உறவுகள்

மொறட்டுவையில், தாய்க்கு மதுபானத்தினை கொடுத்து, மயங்கியபின். அவருடன் வந்த சிறுமி மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 62 வயது ஆமத்துரு கைது.

இவர் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, பௌத்த விவகார ஆலோசகராக இருந்தவராம். 🤦‍♂️

  • கருத்துக்கள உறவுகள்

சில விஷயங்கள் சிலரின் மனதுக்கு சரி எனப் பட்டாலும் அதை வெளியிடும் கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையானது பொது மக்களின் IQ வின் சராசரி அளவு,அந்தந்த நாடுகளின் அரசியல் தன்மையைப் பொறுத்தது. உலகத்தில் IQ தர நிலையில் இலங்கை மோசம் என்று எங்கோ படித்த ஞாபகம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஞானசாரருக்கு பெளத்தம் பற்றி குறையாக கூறியவுடனேயே கொதித்து எழுகிறார். புத்தர் சிலைகளை அடாத்தாக வைக்கும் போது மட்டும் அமசடக்காக இருக்குறார். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

ஞானசாரருக்கு பெளத்தம் பற்றி குறையாக கூறியவுடனேயே கொதித்து எழுகிறார். புத்தர் சிலைகளை அடாத்தாக வைக்கும் போது மட்டும் அமசடக்காக இருக்குறார். 

தன் குற்றம் தனக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு அதிசயம், அதை நிஞாயப்படுத்த இவர் வராமல் போனது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த போதகர் ஜெரோம் கைது செய்யப்பட வேண்டியவர். இவர் தன்னை தானெ ஒரு தீர்க்கதரிசி / ஆசியாவின் சிங்கம் என சொல்லித் திரிபவர். இலங்கையில் உள்ள் மிகவும் செல்வந்த கிறிஸதவ பாஸ்டர்களில் ஒருவர். 


இவர் ஊபெர்ட் ஏஞ்ஜல் எனும் சிம்பாப்வே நாட்டு இராஜதந்திரி ஒருவரை இவர் தன்னுடைய ஆவிக்குரிய தக‌ப்பனென்பார். 
இந்த ராஜதந்திரியும் ஒரு மதபோதகர் ஆவார். ஆனால் மிகவும் ஒரு நோடொரியாஸ் கிறிமினல் ஒழுங்மைக்கப்ப்பட்ட குற்றங்களிலீடுபடும் இவர் தன்னுடைய ராஜதந்திர சிறப்புறிமையை பாவித்து எல்லா குற்றங்களும் ஆதாரமின்றி செய்பவர். மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழும் இந்த போதகரின் ஆவிக்குரிய மகனே ஜேரொம்.

சமீபத்தில் அல்ஜசீராவின் உளவாளிகள் இவருடைய எல்லாவித சட்டவிரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வந்தார்கள்.

கீளுள்ள அல்ஜசீரவன் வீடியோவை பாருங்கள் விளங்கும்.

(பாஸ்டர் ஜெரோம் அணியும் ஒரு ஜக்கடின் விலை மாத்திரம் 1750 பவுண்)

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இந்த போதகர் ஜெரோம் கைது செய்யப்பட வேண்டியவர். இவர் தன்னை தானெ ஒரு தீர்க்கதரிசி / ஆசியாவின் சிங்கம் என சொல்லித் திரிபவர். இலங்கையில் உள்ள் மிகவும் செல்வந்த கிறிஸதவ பாஸ்டர்களில் ஒருவர். 


இவர் ஊபெர்ட் ஏஞ்ஜல் எனும் சிம்பாப்வே நாட்டு இராஜதந்திரி ஒருவரை இவர் தன்னுடைய ஆவிக்குரிய தக‌ப்பனென்பார். 
இந்த ராஜதந்திரியும் ஒரு மதபோதகர் ஆவார். ஆனால் மிகவும் ஒரு நோடொரியாஸ் கிறிமினல் ஒழுங்மைக்கப்ப்பட்ட குற்றங்களிலீடுபடும் இவர் தன்னுடைய ராஜதந்திர சிறப்புறிமையை பாவித்து எல்லா குற்றங்களும் ஆதாரமின்றி செய்பவர். மிகவும் ஆடம்பர வாழ்க்கை வாழும் இந்த போதகரின் ஆவிக்குரிய மகனே ஜேரொம்.

சமீபத்தில் அல்ஜசீராவின் உளவாளிகள் இவருடைய எல்லாவித சட்டவிரோத நடவடிக்கைகளையும் வெளிக்கொண்டு வந்தார்கள்.

கீளுள்ள அல்ஜசீரவன் வீடியோவை பாருங்கள் விளங்கும்.

(பாஸ்டர் ஜெரோம் அணியும் ஒரு ஜக்கடின் விலை மாத்திரம் 1750 பவுண்)

கைது செய்தால் மட்டும் காணாது, சொத்துக்களையும் முடக்க வேண்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of helicopter

 

May be an image of boat and text

 

May be an illustration of text

  • கருத்துக்கள உறவுகள்

image_9d07f8eab4.jpg

எனக்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: போலிப் பௌத்தர், மகிந்த பெர்சி ராஜபக்சே...

அப்ப இது என்ன?

 மகிந்த தேப்பன்பெயர்: டொன் ஆல்வின்  ராஜபக்சே 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

image_9d07f8eab4.jpg

எனக்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: போலிப் பௌத்தர், மகிந்த பெர்சி ராஜபக்சே...

அப்ப இது என்ன?

 மகிந்த தேப்பன்பெயர்: டொன் ஆல்வின்  ராஜபக்சே 

போதகர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை -மஹிந்த ராஜபக்ஷ!

போதகர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை -மஹிந்த ராஜபக்ஷ!

ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் உபேர்ட் ஏஞ்சல் ஆகிய போதகர்களை ஒருமுறைதான் சந்தித்துள்ளதாகவும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த போதகர்களுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜெரோம் பெர்னாண்டோவின் காரியாலயத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாகவே தாம் அவர்களை ஒருமுறை சந்தித்ததாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பௌத்தம் மற்றும் ஏனைய மதங்கள் தொடர்பில் ஜெரோம் பெர்னாண்டோ வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை தாம் கண்டிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களுக்கு எமது நாட்டில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ சந்திப்பு என்பதால் புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டதாகவும், அதைத் தவிர அவர்களுடன் தனக்கு தனிப்பட்ட உறவு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1332236

  • கருத்துக்கள உறவுகள்

ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணையில் வெளிவரும் தகவல்கள். - ஒரு செங்கல் ஐந்து லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் உட்பட தகவல்கள்.

AVvXsEhuqbEWUocl4-O1CBqC3Lh61wlPbZcBhSNNkfE9asPS7lSYoAomdw5bvS6V0CBlFpKlRwvMhpNor22ghQ2pDxgTXYmjWmvF4eTrSZLSLR8bX3X-f639r2IyBsuyGX3ZG24rcA0M9gQBbKUkkUwC_YYhJ_yqD-3PjpMlovZqom_W0GugsyT2lkyW-FLO=s16000

 

பெளத்த மதம் உட்பட மதங்களை  அவமதித்த குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொருட்கள்  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு தீர்மானித்துள்ளது.

 

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடை விதித்தது. அதற்கு   முன் தினம் சிங்கப்பூர் சென்ற அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 

ஜெரோம் பெர்னாண்டோ தனது போதனைகளை  ஆற்றும் கட்டுநாயக்க வயங்கொட வீதியிலுள்ள ''மிராக்கிள் டோம்'' எனப்படும் சமய நிலையத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட பெறுமதி 09 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனத் தெரியவந்துள்ளது.

 

இதற்கான  நான்கு ஏக்கர் நிலம் அந்த சபையில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர் ஒருவர்  மற்றும் அவரது மனைவியால் வழங்கப்பட்டுள்ளது.

 

லண்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஹொங்கொங், துபாய், அவுஸ்திரேலியா, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போதகர்கள் இந்நாட்டிற்கு பிரார்த்தனை சேவைகளுக்காக வருகை தருவதுடன், இந்நாடுகளும் இந்த நிறுவனத்திற்கு உதவித் தொகையைப் பெற்றுக் கொள்வதாகத் தெரியவந்துள்ளது.

 

இந்த சமய சபைக்கு உதவித்தொகையாக வழங்கப்படும் பணத்திற்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும், குறைந்தபட்ச உதவித்தொகை ஐந்து இலட்சம் ரூபாவாகும் எனவும் தெரியவந்துள்ளது. தேவாலய கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு செங்கல் ஐந்து லட்சத்துக்கு விற்கப்பட்டது எனவும் தெரிவிக்கபடுகிறது.

 

இந்த நிறுவனம்  உண்டியல் முறையில் மூலம் பெறும்  பணம் துபாய், கத்தார், இங்கிலாந்து கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. 

 

கல்கிஸ்ஸ  மற்றும் ஹெவ்லொக் சிட்டியில் உள்ள விலையுயர்ந்த இரண்டு வீடுகள் ஆயர் குடும்பத்தினரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

https://www.madawalaenews.com/2023/05/1_19.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும் இவ்வாறான கருத்துக்களுக்கு எமது நாட்டில் இடமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹி.....ஹி..... தமிழரைப்பற்றி தாமும் தம் அமைச்சரவையில் இருந்தோரும் இருப்போரும் உங்கள் தம்பியும் வெளியிட்ட வெளியிடும் கருத்துக்கள் தங்கள் காதுகளுக்கு எட்டவில்லையோ? அவை தமிழ் இனத்தை வெறுப்பேற்படுத்தும் கருத்துக்கள் அல்லவோ? அல்லது தமிழருக்கு உணர்வே இல்லை என்று முடிவு செய்து கருத்து வெளியிட்டீர்களோ? உலகில் சிங்கள இனந்தான் இனம், பவுத்தம் மட்டுந்தான் மதம், மற்றவையெல்லாம் பிணம் என்று நினைத்து தாங்கள் கருத்து வெளியிடும்போது மற்றவர்களுக்கும் இப்படித்தான் கோபம் வந்திருக்குமென நினைத்துப்பார்த்து, இனிவருங்காலத்தில் அதை தவிர்க்கவும், அப்படி கருத்து வெளியிடுவோரை தண்டிக்கவும் சட்டத்தை உருவாக்குங்கள். ஊருக்கு உபதேசம் உனக்கில்லடி என்று உபதேசிக்க கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தவறு செய்யவில்லை ; ஆனால் மன்னிப்பு கோருகிறேன் – போதகர் ஜெரோம் பெர்னாண்டோ

தான் நிச்சயமாக இலங்கைக்கு திரும்புவேன் என்று கூறியுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது கருத்து பௌத்த, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு ஏதேனும் காயத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

போதகர் பெர்னாண்டோ, நேற்று மிரிஹானவில் நடைபெற்ற கூட்டுப்பிரார்த்தனையில் காணொளி மூலம் கலந்துகொண்டார். அதன்போதே தாம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், தனது மன்னிப்பு உண்மையைப் பிரசங்கித்ததற்காக அல்ல என்றும் தமது கருத்து ஏனைய மதத்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்திருந்தால் மன்னிப்பு கோருவதாகவும் அவர் கூறினார்.

“நான் நற்செய்தி உண்மையைப் பிரசங்கித்தேன், நான் பைபிளில் உள்ளதைப் பிரசங்கித்தேன், அது இன்னும் பைபிளில் உள்ளது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என் பௌத்த சகோதரர்கள், இந்து சகோதரர்கள், இஸ்லாமிய சகோதரர்கள் மற்றும் சகோதரிகளிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். எந்த வகையிலும் வார்த்தைகள் உங்களை மனரீதியாக காயப்படுத்திவிட்டன. இலங்கையில் உள்ள பௌத்த மதகுருமார்களிடம் நான் பணிவுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/254922

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ஏராளன் said:

தவறு செய்யவில்லை ; ஆனால் மன்னிப்பு கோருகிறேன் –

செய்யாத தப்புக்கு மன்னிப்பு கேட்கும் பாதிரியார் வேற லெவல்...:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2023 at 19:27, Nathamuni said:

எனக்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: போலிப் பௌத்தர், மகிந்த பெர்சி ராஜபக்சே...

இது அவர்களின் வழமையான மறுப்பறிக்கைதான். நினைவிருக்கோ என்னோ? நாட்டில் கொஞ்ச நாள் பரபரப்பாக பேசப்பட்ட மோசடிக்காரி, அவரின் பெயர் மறந்துபோச்சு. அவவோடு சிராந்தி ராஜபக்ச கூடிக்குலாவி விருந்துண்டு மகிழ்ந்த படங்கள் எல்லாம் வெளிவந்தது பின் அவ கைது செய்யப்பட்டதும் அவருக்கும் தமக்கும் எவ்வித தொடர்புமில்லை என மறுத்து விட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்பு கேட்டு ஜெரோம் தப்பிக்க முடியாது: அமைச்சர் அலஸ்

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தனது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு வீடியோ ஸ்ட்ரீம் மூலம் மன்னிப்புக் கோரியிருந்தாலும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை தவிர்க்க முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் கூறியுள்ளார் .

பௌத்தம், இஸ்லாம் மற்றும் இந்து மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் போதகர் பெர்னாண்டோ கடந்த வாரம் நாட்டை விட்டு வெளியேறினார்.

“யாராவது குற்றம் செய்துவிட்டு மன்னிப்புக் கேட்டால் அவருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது. இது குறிப்பிட்ட விடயத்திற்கு மாத்திரமல்ல எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நடைமுறையாகும்” என இன்று பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.

போதகர் பெர்னாண்டோவுக்கு எதிரான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மீது சிஐடிக்கு பல புகார்கள் வந்துள்ளன, தற்போது அனைத்து புகார்களையும் விசாரித்து வருகின்றனர். நீதிமன்றம் அவருக்கு பயண தடை விதித்தது. எனவே அவர் நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதே சாதாரண நடைமுறையாகும். அவர் வந்தவுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்வார்கள் என்றார்.

அப்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா அல்லது வீட்டுக்கு அனுப்பப்படுவாரா என்பதை சிஐடி மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

போதகர் ஜெரோம் இலங்கைக்கு திரும்புவதற்கான ஏற்பாடுகளை தற்போது அவரது சட்டத்தரணிகள் தயார் செய்து வருவதாக போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கூறியிருந்தார்.

https://thinakkural.lk/article/254971

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா.... அவரோடு தொடர்பில் இருந்து கொண்டாடியவர்களையும் சேர்த்துத்தானே விசாரணை என்று  கூறுகிறீர்கள்? ஒரு அரச தலைவர், யாரோடு தொடர்பு கொள்கிறோம், அவரின் பின்னணி என்ன என்று ஆராயாமலே விருந்துண்டு படம் பிடித்து வெளியிட்டு மகிழ்வாரா? அவ்வளவு சில்லறைத்தனமானவரா மஹிந்தா?

5 hours ago, ஏராளன் said:

அவர் நாடு திரும்பியதும், விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுவதே சாதாரண நடைமுறையாகும்.

கோத்தா நினைத்தபோது நாட்டிலிருந்து தப்பியோடினர் பின் திரும்பினார், அப்போ இந்த நடைமுறைகள் நாட்டில்  இருக்கவில்லையோ?

5 hours ago, ஏராளன் said:

அவருக்கெதிராக விசாரணைகளை முன்னெடுக்காமல் இருக்க முடியாது. இது கடந்த காலத்திலும் நடக்கவில்லை, எதிர்காலத்திலும் நடக்காது.

அந்த லட்ஷணத்தைத்தான் பாத்துக்கொண்டிருக்கிறோமே!

 

  • கருத்துக்கள உறவுகள்

மற்ற மதத்தவரை புண்படுத்துவது தவறு. இவரின் நோக்கம் பணம் சம்பந்தமாக போதனைகளே தவிர ஆன்மிக சம்பந்தமான போதனைகள் குறைவு என்று அறியமுடிகின்றது.

 எப்படி இருந்தாலும் இந்த தேரருக்கு மற்றவர்களை குறை சொல்லுவதட்கு எந்த தகுதியும் இல்லை. உங்களில் பாவம் இல்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.