Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா?

Featured Replies

2r2.jpg5.jpgMullaiNavy12Jul97.jpg

கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன்

கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன்

படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன்

பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன்

இளகிய மனதது உங்களுக்குள்ளது

இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது

பச்சை இலையதன் காடுகள் காப்பவர்

பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்

விலங்கை விடவும் கேவலமாகிய

விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது

பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது

பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது

நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது

நினைத்திடாத பல கேவலம் நடக்குது

உங்கள் கண்களில் ஏன்படவில்லை

உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை

எங்கள் இனமது ஏதிலியான

எதுவும் அடைந்திட அருகதையற்ற

செத்துப் போகவே பிறந்த இனமென்று

செய்வதென்ன இனிஇங்கு உள்ளதென்று

எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று

எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ

Posted by தமிழினி at 9:03 PM

19 Comments - Show Original Post

Collapse comments

Orani said...

//இளகிய மனதது உங்களுக்குள்ளது

இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது

பச்சை இலையதன் காடுகள் காப்பவர்

பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்//

:-(

7/20/2006 10:12 PM

தமிழினி said...

நன்றி இயற்கை நேசி.

வலைப்பூவிலும் கைவிட்டு விட்டார்களோ என்று நினைத்தேன்.

இல்லை!

7/21/2006 12:09 AM

மணியன் said...

ஈழத்தின் வலி புரிகிறது; வழி தெரியாமல் விழிக்கிறோம் :D

7/21/2006 1:03 AM

ஈழபாரதி said...

எங்களது உண்மையான் வலியைகூறும் கவிதை,

பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ, அனைவரும் படித்துக்கொண்டுதான் இருப்பார்கள், உங்களுக்கு தெரிந்ததை, நீங்கள் அறிந்ததை பதித்துக்கொண்டே இருங்கள், ஏனெனில் எங்கள் வலிகள்,தகவல்கள்,உண்மைசம்பவங்

நெஞ்சில் வலியது தேங்கியே நீக்குது

ஈழத்து இன்னல்கள் கண்ணை நனைக்குது

பாசப்பிணைப்பினால் உள்ளம் உருகுது

வெந்தவர் கைகளை தாங்கத்துடிக்குது

  • தொடங்கியவர்

இலக்கியன் பதிவுக்கு நன்றி,

ஈழத்தின் வேதனை நிரந்தரம் ஆனதால்

இங்கிவை நடப்பது நித்தமாய் போனதால்

உலகத்தின் கண்களுக்(கு) அலுத்து விட்டதோ

உண்மையே உண்மையில் தூங்கி விட்டதோ

நாட்டுக்கு நாடு கொடி பிடிக்கிறோம்

நாம் என்ன செய்வது என்று முழிக்கிறோம்

நாட்டிலே நம்மவர் அழிவினை அறிகிறோம்

நாளந்தம் அதை கணக்கிலே பதிக்கிறோம்

நேற்று நடந்ததும் நடந்தது ஆனது

இன்று நடப்பதும் வழக்கமாய் போனது

நாளையும் தொடருமென்று மனதது ஏங்குது

நாறிக் கிடக்குதே நம்மவர் வாழ்வது

நாளாந்தம் பத்துயிர் சாதாரணமாயிற்று

நாமதை எண்ணியே காலங்கள் போயிற்று

நாளொரு அறிக்கையே வரலாறு ஆகிற்று

நாம்படும் பாடிங்கு ----

---கத்திக் கத்தி நாவே வறண்டு போயிற்று

-தொடருவோம்.

Edited by தமிழினீ

ஈழ நினைவை தாங்கிய பாவை

தந்த பாவோ நெஞ்ச பிழிந்தது

உணர்வை சுட்டது..

இவ்வாறு தொடருங்கள்..அங்கு நடக்கும்

இன்னல்களை நினைவழியா பதிவுகளாக்குங்கள்..

பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..

வணக்கம்!

ஓர் சிறிய சந்தேகம், தமிழினியும், தமிழீனியும் ஒருவரா? :lol:

தமிழீனி உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது. நீங்களும் தமிழ்தங்கையுடன் இணைந்து உள்ளீர்கள்! (அவரைப் போல் நன்றாக எழுதுறீங்கள் என்று சொல்லவந்தேன் :lol: )

நன்றி!

  • தொடங்கியவர்

பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி வன்னி மைந்தன்.

கலைஞன் அவர்களே! தமிழினியும் தமிழினீயும் ஒன்றுதான்,

தமிழினி எனும் பெயரிலேயே நீண்ட நாளாக Blogஇல் எழுதி வருகிறேன்.

யாழில் என்னை இணைக்க வந்த போது, ஏற்கனவே ஒருவர் அப்பெயரை இணைத்துள்ளதாக(ஆனால் நான் எங்கும் அவரின் இணைப்புக்ககளை இதுவரை காணவில்லை) யாழ் நிர்வாகம் கூறியதால், தமிழனி எனும் பெயரை மாற்ற விரும்பாது, னி ஐ மட்டும் நெடில் ஆக்கி விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வு நிறைந்த வரிகள்

உண்மையின் நியத்தை உள்ளபடி காட்டும்

சொற்களின் ஓவியம் உங்கள் கவிகள்!

பாராட்டுக்கள் தமிழினி!!

தமிழன் துன்பங்களை உலகுக்கு எடுத்துச் சொல்லட்டும் உங்கள் பணி மேலும்!!

தமிழீனிக்கு யாழின் தமிழினியை பற்றி தெரியாதா? :rolleyes:

தமிழினி அவர்கள் யாழில் 10,000 ற்கும் மேற்பட்ட கருத்துக்கள் எழுதியுள்ளார்.

tamilini

26th December 2006 - 07:56 PM

கருத்துக்கள உறவுகள்

Joined: 10-February 04

Posts: 10,707

Views: 163

அவரது புரபைல் இங்கே உள்ளது...

http://www.yarl.com/forum3/index.php?showuser=296

தமிழீனி, தாயகபறவைகள் இணைய சஞ்சிகையில் இணைந்து செயற்படும் தமிழினி நீங்கள் தானா? அல்லது அது வேறு யாரோவா?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழினீ ,உங்கள் கவிதைகள் அபாரம். மீண்டும் மீண்டும் இப்படியான கவிதைகளை எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

நன்றி கலைஞன் தங்கள் தகவலுக்கு,

தங்களின் தகவலுக்கு பின்பே அவரைப்பற்றி அறிந்து கொண்டேன்,

நான் அன்றாடன் கிடைக்கும் சிறிதளவு நேரத்திலும் செய்திகள், அரசியல் பகுதிகளிலே அதிகம் உலாவுவதால், இவ்வளவு அதிகம் பதிவுகளை இட்டுள்ள tamiliniஐ அறிந்திருக்கவில்லையே என்பதில் வருத்தம் தான்.

மீண்டும் தகவலுக்கு நன்றி கலைஞன்

அவலங்களை நேரடியாக காட்டும் புகைப்படங்களின் கீழ் உங்கள் ஆற்றல் கனதியாக வெளிப்படுகின்றது.

மனட்சாட்சி உங்களிட் இருக்கின்றது என்று சுட்டிக்காட்டுகின்றீர்கள்

உங்கள் மனதின் கனதியை சொல்கின்றீர்கள். காரணங்களை நிதர்சனமாக வெளிப்படுத்தி நீதியை சுட்டிக்காட்டப்பட்ட மனசாட்சியிடம் கேட்கின்றீர்கள். இது ஒரு ஆக்கபூர்வமான வடிவம். பயன்தரும் வடிவம். தொடருங்கள். இந்த கவிதை அமைப்பில் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கின்றது.

  • தொடங்கியவர்

தமிழீனி, தாயகபறவைகள் இணைய சஞ்சிகையில் இணைந்து செயற்படும் தமிழினி நீங்கள் தானா? அல்லது அது வேறு யாரோவா?

கலைஞன் அவர்களே!

நீங்கள் இதில் குறிப்பிட்ட பின்னர்தான் "தாயகப்பறவைகள்" இணைய சஞ்சிகையையே சென்று பார்த்தேன்.

சிறப்பாக உள்ளது.

சஞ்சிகையை அறிமுகப்படுத்தி உதவியமைக்காக கலைஞன் அவர்களுக்கு நன்றிகள்.

Edited by தமிழினீ

எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று

எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ

பலர் மனதில் இருக்கும் விசயத்தை கவிதையாக மிகவும் உணர்வூபர்வாமகா வடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள் தமிழீனி அக்கா தொடர்ந்தும் இவ்வாறான கவிதைகளை தரவேண்டும் என்பது தான் நம் அவா............. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கான நீதியை நாங்கள் எங்களிடமே கேட்டுக்கொண்டிருக்கும் வரை... சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் முண்டு பிடித்துக்கொண்டு, சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் வரை எங்களுக்கான நீதி நிலுவையிலிருக்கும் கணக்கு போன்றதே...!

கவிதையும் கருத்துதும் நன்று..

நெஞ்சு கனக்கிறது.. எம் தேசத்தின் நிலையைக்கண்டு மட்டுமல்ல...

எங்களுக்கான நீதியை நாங்கள் எங்களிடமே கேட்டுக்கொண்டிருக்கும் வரை... சின்ன சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் முண்டு பிடித்துக்கொண்டு, சண்டையிட்டுக்கொண்டு இருக்கும் வரை எங்களுக்கான நீதி நிலுவையிலிருக்கும் கணக்கு போன்றதே...!

கவிதையும் கருத்துதும் நன்று..

நெஞ்சு கனக்கிறது.. எம் தேசத்தின் நிலையைக்கண்டு மட்டுமல்ல...

:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.