Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம்

adminAugust 14, 2023
01-1-1.jpg?fit=1170%2C658&ssl=1

காவல்துறையினா்  மீது நம்பிக்கை இல்லாததால் , தமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 காவல்துறையினா்   மீது நம்பிக்கை இல்லை.   காவல்துறையினா்   சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதில்லை இராணுவத்தின் மீதே எங்களுக்கு நம்பிக்கை. தனியார் காணியில் உள்ள இராணுவ முகாமை மாற்றுவதாக இருந்தால், அரச காணியில் இராணுவ முகாமை அமையுங்கள் என போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
spacer.png

spacer.png

spacer.png

spacer.png

 

https://globaltamilnews.net/2023/194013/

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைகளின் மனோநிலை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

“இராணுவ முகாமை அகற்றாதே ! ” – யாழில் போராட்டம்

சிங்கள இராணுவத்தின் ஆலோசனையோடு இராணுவத்தோடு இயங்கும் சமூக விரோதக்கும்பல்களாக இருக்கவே வாய்ப்புள்ளது. அவர்கள் தமது சொந்தங்களோடு சேர்ந்து போராட அது செய்தியாக வருகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்

அங்குள்ள எல்லாரும் அடிமைகள் தான்.எமது மக்கள் சிங்கள ஜனாதிபதி வேட்ப்பார்களுக்கு ஓட்டு போடுவதைப் போல உள்ளதில் நல்ல பேய் என்று நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்று தொடக்கம் ஏதோ ஒரு முகத்துடன் இந்த குழுக்கள் இருந்து கொண்டே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரைக்கும் , கட்கோவளம் பூர்வீக  குடிகள் யாருமே இங்கு இல்லயாம். எல்லோருமே யுத்திட்கு பின்னர் வந்து குடியேறியவர்கள். அங்கு நிறைய கடத்தல்கள், போதை வியாபாரம் போன்றவை பொலிஸாரின் ஒத்துழைப்பில் நடப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே ராணுவமிருப்பதால் இவை கட்டுக்குள் இருப்பதாகவும் எனவே அவர்களை இருக்கும்படியும் கேட்பதாகவே அறிய முடிகின்றது. எனவே மக்களின் பிரச்சினைகளை அங்குள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதலில் தீர்க்க வேண்டும். கள நிலவரத்தை பொறுத்தே தீர்மானம் எடுக்க வேண்டும். இருந்தாலும் ராணுவ அதிகாரி கூறும்போது, இந்த முகாமை அகற்றும் எண்ணம் இல்லை என்று கூறி இருந்தார். 

  • கருத்துக்கள உறவுகள்

சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர்.  தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முகாமில் இருந்து தான் சற்று தொலைவில் போய்க்கொண்டிருந்த ஏறக்குறைய குடும்ப உறுப்பினர்கள் நாம் அனைவரும் போய்க்கொண்டிருந்த கார் மீது தொடர்ச்சியாக பல நிமிடங்களிற்கு துப்பாக்கிப்பிரயோகம் நடந்தது ஞாபகத்தில்.

 காரை விட்டு என்னமாதிரி இறங்கினோம், எவ்வாறு பக்கத்துக்கு ஒழுங்கைக்குள் ஓடி கவர் எடுத்தோம் என்பது நினைவில் இல்லை. ஏனெனில் அவை எல்லாம் தன்னிச்சையாக நடந்த செயல்கள்.

 அவர்கள் பின்பு ரேஞ் கூடிய துப்பாக்கிகளைப் பாவித்திருக்க வேண்டும் நாங்கள் சென்ற கார் நாங்கள் இறங்கி ஓடிய அடுத்த சில நிமிடங்களில் சல்லடைக்கண் ஆயிற்று என்று அங்கே சென்ட்ரியில் நின்ற பொடியங்கள் பின்பு சொன்னார்கள்.

1987 இல்...

  • கருத்துக்கள உறவுகள்
On 14/8/2023 at 08:54, கிருபன் said:

கற்கோவளம் பகுதியில் அமைந்துள்ள 4 வது சிங்க றெஜிமென்ட படையணி இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை காலை அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1965இல் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளிவந்தது அதில் ஆர்.கே. சண்முகம் இப்படி ஒரு வசனம் எழுதியிருந்தார்.

எமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள். ஆனால் காது மட்டும் வாய்வரை நீண்டு இருக்கிறது

நாங்கள் கத்திக் கத்தியே….

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள்... தமிழ்ப் பகுதியில் நிலை கொண்ட இராணுவ முகாம்களை அகற்ற,
பல நாள் கண் விழித்து இருந்து... வேவு பார்த்து, குறிப்பிட்ட ஒரு நாளை தேர்ந்தெடுத்து....
பலர் சேர்ந்து தமது உயிரை வெறுத்து... இருக்கும் சொற்ப ஆயுதங்களுடன் தாக்கி அழிக்கும் 
போது... அங்கவீனர்களாகி, உயிரை துறந்து  மாவீரர்களாகி  இராணுவ முகாமை அழித்தொழித்த
இனத்தில் வந்த எம் மக்கள் இன்று.... 

பதாகை ஏந்தி... இராணுவத்தை போக வேண்டாம் என்று போராட்டம் செய்யும் அளவிற்கு
நிலைமை வந்துள்ளது. இந்த மக்களுக்காக அந்த வீரர்கள் போராடியது எவ்வளவு வீண் என்று  
எதிர் பார்த்திருக்க மாட்டார்கள். 😮

நமது இனத்தின் விடுதலைக்கு போராடியது, எல்லாம் வீணாகி விட்டதே. 😥     

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.