Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

 

 

 

“கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது.

 

அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர்.

 

இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகின் பெரும் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

 

 

உலக உணவுத்திட்டம் பாடசாலையின் மதிய உணவுக்கு டின் மீன்களை வழங்கி வருவதோடு, மதிய உணவில் முட்டை, நெத்தலி என்பவனவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

 

இவ்வாறான பின்னணியில் கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு வேலனை மத்திய கல்லூரி அறிவித்துள்ளமை தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

https://www.jaffnamuslim.com/2023/09/blog-post_962.html

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சாப்பிட்டுட்டு கழிவுகளை எறிஞ்சுட்டு போனா, யாரு சுத்தம் செய்வது.

தெரு நாய்கள் உள்ள வந்து மாணவர்களை கடித்து வைக்கின்றன.

மச்சத்தை வீட்டில சாப்பிடுங்க, மச்சமில்லாததை பள்ளிக்கு கொண்டு வாங்கோ எண்டுது நிர்வாகம்.

பிழையில்லையே  🙏

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு மறைமுகமான மத ஒதுக்கலாய் இருக்க கூடும்.

மாணவர்களின் உணவு தெரிவை அவர்களிடம் விடுவதே புத்திசாலித்தனமானது.

பள்ளி கூடத்தில் மச்சம் சாப்பிட கூடாது என்றால் நான் எல்லாம் 3ம் வகுப்பு தாண்டி இருக்க முடியாது🤣.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எல்லாம் மாட்டிறைச்சி ரோல்ஸ் சாப்பிட என்றே சாப்பாட்டு மணி அடிக்க காத்து கிடந்தவன்களாக்கும் ...

உந்த பள்ளிக்கூடத்தில் சமயப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கு. அதன் தாக்கம் தான் இதுவும்.

எங்க நம்ம @நந்தன்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

உந்த பள்ளிக்கூடத்தில் சமயப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கு. அதன் தாக்கம் தான் இதுவும்

இந்து vs தமிழ் கிறிஸ்தவர்?

அல்லது

தமிழர் vs சோனகர்?

  • கருத்துக்கள உறவுகள்

பொது இடங்களில் மீன் இரால் போன்ற சாப்பாடுகளை கறியாக இருக்கலாம் பொரித்ததாக இருக்கலாம் பொட்டலத்தை அவிழ்கும் போதே குறைந்தது 10-15 அடி தூரத்துக்கு மணக்கும்.

போதாததற்கு சாப்பிட்டு முடிந்தவுடன் சவுக்காரம் போட்டு கையை வாயை கழுவுவுவதில்லை.

இது நீண்ட நேரமாக பக்கத்தில் உள்ளவர்களுக்கு மணக்கும்.

ஆனாலும் பாடசாலை நிர்வாகம் ஏன் இந்த முடிவு என்று தெரியவில்லை.

1 hour ago, goshan_che said:

இது ஒரு மறைமுகமான மத ஒதுக்கலாய் இருக்க கூடும்.

மாணவர்களின் உணவு தெரிவை அவர்களிடம் விடுவதே புத்திசாலித்தனமானது.

பள்ளி கூடத்தில் மச்சம் சாப்பிட கூடாது என்றால் நான் எல்லாம் 3ம் வகுப்பு தாண்டி இருக்க முடியாது🤣.

பக்கத்தில் இருந்த என் போன்ற பிராமண பையன்கள் எவ்வளவு அருவருப்பாகியிருப்பார்கள்.

சிவாயநம.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் இது "பிள்ளைகளை நாய்கள் கடிக்காமல் பாதுகாக்கும்" ஒரு நடவடிக்கையாகத் தான் இருக்கும்😂!

ஒரு தற்செயல் நிகழ்வாக: சில மாதங்கள் முன்பு இதே பாடசாலையில் "சைவரல்லாத ஒருவரை" அதிபராக ஏற்க மாட்டோமென ஒரு தரப்பு மாணவர்களை வைத்து ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தது. அந்த கிறிஸ்தவ பெயர் கொண்ட அதிபரின் மனைவி சைவர் என்பது தெரியவந்ததும், ரியூனை மாத்திப் போட்டு "உள்ளூரவர் தான் அதிபராக வர வேண்டும்" என புதிய ஆர்ப்பாட்டம். இறுதியில் "இது சாதி சம்பந்தப் பட்டது" என நோக்கர்கள் சுட்டிக் காட்ட ஆரம்பித்ததும், விடயம் அடங்கி , கிறிஸ்தவப் பெயர் கொண்ட அதிபர், திருநீறு தரித்தபடி சேவையில் இணைந்தார்😎.

https://www.themorning.lk/articles/EArbplXqbBNIts2zxkOe

எனவே, இது "கட்டாக்காலி நாய்" கட்டுப்பாடாகத் தான் இருக்கும்😂!

  • கருத்துக்கள உறவுகள்

சீருடை தவிர்த்து நான் என்ன சாப்பிடனும் நான் என்ன பிராண்ட் யட்டி போடனும் நான் என்ன குடிக்கனும் எல்லாத்தையும் முடிவு பண்ண யார் அதிகாரம் தந்தது பாடசாலைக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

நிச்சயம் இது "பிள்ளைகளை நாய்கள் கடிக்காமல் பாதுகாக்கும்" ஒரு நடவடிக்கையாகத் தான் இருக்கும்😂!

ஒரு தற்செயல் நிகழ்வாக: சில மாதங்கள் முன்பு இதே பாடசாலையில் "சைவரல்லாத ஒருவரை" அதிபராக ஏற்க மாட்டோமென ஒரு தரப்பு மாணவர்களை வைத்து ஆர்ப்பாட்டமெல்லாம் செய்தது. அந்த கிறிஸ்தவ பெயர் கொண்ட அதிபரின் மனைவி சைவர் என்பது தெரியவந்ததும், ரியூனை மாத்திப் போட்டு "உள்ளூரவர் தான் அதிபராக வர வேண்டும்" என புதிய ஆர்ப்பாட்டம். இறுதியில் "இது சாதி சம்பந்தப் பட்டது" என நோக்கர்கள் சுட்டிக் காட்ட ஆரம்பித்ததும், விடயம் அடங்கி , கிறிஸ்தவப் பெயர் கொண்ட அதிபர், திருநீறு தரித்தபடி சேவையில் இணைந்தார்😎.

https://www.themorning.lk/articles/EArbplXqbBNIts2zxkOe

எனவே, இது "கட்டாக்காலி நாய்" கட்டுப்பாடாகத் தான் இருக்கும்😂!

அப்படியா?

இந்த பாடசாலையில் எனக்கு பின்னாளில் நன்கு அறிமுகமான ஒரு கிறிஸ்தவர்தான் பல வருடமாய் அதிபராய் இருந்தவர் (70 களில்).

அரியரட்ணம். பாடசாலை/ஊரில் அவரை நன்கே நடத்தினார்கள். அவரும் நல்லதையே செய்தார்.

அப்போதே கிறிஸ்தவ அதிபரை ஏற்று கொண்ட மக்களுக்கு இப்போ ஏன் மண்டையில் பழுது ஏற்படுகிறதோ தெரியவில்லை.

44 minutes ago, ஈழப்பிரியன் said:

பக்கத்தில் இருந்த என் போன்ற பிராமண பையன்கள் எவ்வளவு அருவருப்பாகியிருப்பார்கள்.

கொஞ்சம் விட்டால் நீங்கள்தான் சங்கராச்சாரியார் எண்டு சொன்னாலும் சொல்லுவியள்🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அப்படியா?

இந்த பாடசாலையில் எனக்கு பின்னாளில் நன்கு அறிமுகமான ஒரு கிறிஸ்தவர்தான் பல வருடமாய் அதிபராய் இருந்தவர் (70 களில்).

அரியரட்ணம். பாடசாலை/ஊரில் அவரை நன்கே நடத்தினார்கள். அவரும் நல்லதையே செய்தார்.

அப்போதே கிறிஸ்தவ அதிபரை ஏற்று கொண்ட மக்களுக்கு இப்போ ஏன் மண்டையில் பழுது ஏற்படுகிறதோ தெரியவில்லை.

 

ஆச்சரியம் தான் எல்லோருக்கும், ஆனால் -இறுதியில் இந்த சாதி/மத வாதம் பேசிய சிறு குழுவை பெரும்பான்மையான பழைய மாணவர்கள் எதிர்த்து வென்றார்கள் என்ற நல்ல செய்தியையும் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய "மண்டை பழுதாகாத" முற்போக்காளர்கள் தான், ஈழத்தமிழருக்கு மிச்சமிருக்கும் நம்பிக்கை எனக் கருதுகிறேன்.

இன்னொரு ஆச்சரியம், இடக்கரடக்கலாகச் சொல்கிறேன்: இந்த மத/சாதி வாதத்தை முன்னின்று நடத்தியவர் ஒரு யாழ் பல்கலை மாணவர். சாதாரண மாணவர் அல்ல, தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு நீதித் துறை அதிகாரியின் இளைய சகோதரர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்து vs தமிழ் கிறிஸ்தவர்?

அல்லது

தமிழர் vs சோனகர்?

இந்து vs தமிழ் கிறிஸ்தவர்

இப்பாடசாலைக்கு அண்மையில் ஒரு கிறிஸ்தவர் அதிபராக வந்தமை பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டமாக இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இதுவும்...????

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இந்து vs தமிழ் கிறிஸ்தவர்

இப்பாடசாலைக்கு அண்மையில் ஒரு கிறிஸ்தவர் அதிபராக வந்தமை பெரிய அளவில் எதிர்ப்பு போராட்டமாக இருந்தது. அதன் தொடர்ச்சி தான் இதுவும்...????

அப்படித்தான் தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

 , கிறிஸ்தவப் பெயர் கொண்ட அதிபர், திருநீறு தரித்தபடி சேவையில் இணைந்தார்😎.

திருநீற்றை அள்ளிப்பூசி படம் போட்டு மக்கள் மனதை வென்றார் 😂

  • கருத்துக்கள உறவுகள்

தீவுப்பகுதியில் இரண்டு முக்கிய A/L பாடசாலைகள். 

ஒன்று ஊர்காவல்துறை செயின்ட் அந்தனிஸ் அடுத்து வேலணை மத்திய மகா வித்தியாலயம்.

இரண்டுக்குமே போட்டி.

ஆகவே, இங்கே கிறித்தவரும் அங்கே சைவரும் அதிபராவதில், ஒரு எதிர்ப்பு வருவது இயல்பு. இதை பூதாகாரமாக்கி பார்ப்பதில் எதுவுமே இல்லை. 

இதில் குறை சொல்லும் ஜஸ்டின் அய்யா, செயின்ட் அந்தனிஸ் பாடசாலையில், சைவர் அதிபராக முடியுமா என்றும் சொல்லி விடுங்கள்.

இங்கே, தேவையில்லாத, மத, குரோதங்கள் தவிர்க்கப்படலாமே.

2 hours ago, goshan_che said:

பள்ளி கூடத்தில் மச்சம் சாப்பிட கூடாது என்றால் நான் எல்லாம் 3ம் வகுப்பு தாண்டி இருக்க முடியாது🤣.

அப்ப, தீபாவளிக்கு ஆடு, வருசத்துக்கு கோழி... இப்ப அப்படியா? தினமும்... 

Pizza. KFC ???

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

திருநீற்றை அள்ளிப்பூசி படம் போட்டு மக்கள் மனதை வென்றார் 😂

ஓம், அப்படித் தான் கேள்விப் பட்டேன்.

ஆனால், அதன் பின்னர் தான் சாதி பார்க்கிறார்கள் என்ற பூனை சாக்கினுள் இருந்து வெளியே வந்தது. மேலே என் செய்தி இணைப்பில் சொல்லப் பட்டிருப்பது போல, மத்தியகல்வி அமைச்சு தலையிட வேண்டுமென்ற கோரிக்கை சிங்களவர்கள் தலைமையில் இருக்கும் அதிபர்கள் சங்கத்தினால் முன்வைக்கப் பட்ட பின்னர் தான் சாதி வாதிகள் பின்வாங்கினார்கள்!

வடக்கில் இருக்கும் ஒரு நீண்ட வரலாறுடைய பாடசாலையில், எல்லாத் தகுதிகளும் உள்ள ஒருவர் அதிபராக வர மதம்/சாதி குறுக்கே நிற்கிறது, தெற்கில் இருக்கும் ஒரு அமைப்பு நீதி கேட்டு உதவ முன்வர வேண்டிய நிலை! இது எவ்வளவு பெருமையான விடயம் எங்களுக்கு😂?

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் ஒஸ்மேனியா கல்லூரியில் பன்றி உணவு சாப்பிடவும்.. பன்றி உணவுக் கழிவுகளைக் கொட்டவும் இடமளிப்பினமோ.. கொழும்பான். எதுக்கு யாழ் சோனிக்கு தேவையில்லாத சோழி முடிதல்...??! இதனால் தான் 1990 இல் இடம்பெயர வேண்டி வந்தது. 

யாழ் சிவன்பண்ணை வீதியை மறித்து.. யாழ் வண்ணார் பண்ணை சிவன்கோவிலுக்கு அருகில் வேண்டுமென்றே மாட்டுக்கழிவுகளைக் கொட்டியும்..  சமூகப் பிரச்சனைகளை தூண்ட முனைந்தமை உட்பட பல காரணிகள் இருந்ததை மறக்கக் கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

யாழ் ஒஸ்மேனியா கல்லூரியில் பன்றி உணவு சாப்பிடவும்.. பன்றி உணவுக் கழிவுகளைக் கொட்டவும் இடமளிப்பினமோ.. கொழும்பான். எதுக்கு யாழ் சோனிக்கு தேவையில்லாத சோழி முடிதல்...??! இதனால் தான் 1990 இல் இடம்பெயர வேண்டி வந்தது. 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலோ, அல்லது கொழும்பு றோயல் கல்லூரியிலோ, ஒரு இஸ்லாமியர் அதிபரானதாக நான் அறியவில்லை. அதேவேளை, கொழும்பு சாஹிராவிலோ, அல்லது யாழ்ப்பாணம் ஒஸ்மானியாவிலோ, இஸ்லாமியர் அல்லாது வேறு ஒரு மார்க்கத்தினர் அதிபர் ஆக முடியாது.

இங்கே லண்டனில், பாடசாலைகளில், இலவசமாக கொடுக்கப்படும் உணவில், பன்றி சோசஜ் கொடுக்கக்கூடாது என்ற கோரிக்கை இஸ்லாமியரால் வந்தது.

உங்கள் பிள்ளைக்கு வேணாம் என்று சொல்லுங்கள், அடுத்தவர் பிள்ளைகளை எப்படி தடுப்பீர்கள் என்று பதில் கொடுக்கப்பட்டது.

இங்கவே அந்த நிலைமை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

தீவுப்பகுதியில் இரண்டு முக்கிய A/L பாடசாலைகள். 

ஒன்று ஊர்காவல்துறை செயின்ட் அந்தனிஸ் அடுத்து வேலணை மத்திய மகா வித்தியாலயம்.

இரண்டுக்குமே போட்டி.

ஆகவே, இங்கே கிறித்தவரும் அங்கே சைவரும் அதிபராவதில், ஒரு எதிர்ப்பு வருவது இயல்பு. இதை பூதாகாரமாக்கி பார்ப்பதில் எதுவுமே இல்லை. 

இதில் குறை சொல்லும் ஜஸ்டின் அய்யா, செயின்ட் அந்தனிஸ் பாடசாலையில், சைவர் அதிபராக முடியுமா என்றும் சொல்லி விடுங்கள்.

இங்கே, தேவையில்லாத, மத, குரோதங்கள் தவிர்க்கப்படலாமே.

 

செயின்ற் அந்தனி, செயின்ற் பட்ரிக்ஸ், போன்றன இன்னும் கத்தோலிக்க திருச்சபையின் (archdiocese) கட்டுப் பாட்டில் இருக்கும், கத்தோலிக்க திருச்சபையின் நிதி பெறும் அரச பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பாடசாலைகள் - இவற்றில் பாதிரியார் தான் தலைவராக முடியும் என எழுத்தில் இருக்கிறது

(சுதந்திரத்திற்கு முன்னிருந்து இன்று வரை, இலங்கையில் இருக்கும் பாடசாலைகளின் வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை - ஏனெனில் பல விடயங்களில் உங்கள் reputation அப்படி😎.எனவே விளக்க முயலாமல் என் நேரத்தை மிச்சப் படுத்துகிறேன்).  

 வேலணை மத்திய கல்லூரி எந்த இந்து அல்லது சைவ பீடத்தின் கட்டுப் பாட்டினால் நடத்தப் படுகிறது? முழுவதும் அரச நிதியில் இயங்கும் ஒரு அரச பாடசாலையில் மதத்தைப் பாடமாகப் போதிக்கலாம், ஆனால் மத ரீதியில் நியமனங்கள் செய்ய முடியாது அப்படி அனுமதிக்கும் விதிகள் எழுத்தில் இல்லை! 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

செயின்ற் அந்தனி, செயின்ற் பட்ரிக்ஸ், போன்றன இன்னும் கத்தோலிக்க திருச்சபையின் (archdiocese) கட்டுப் பாட்டில் இருக்கும், கத்தோலிக்க திருச்சபையின் நிதி பெறும் அரச பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் பாடசாலைகள் - இவற்றில் பாதிரியார் தான் தலைவராக முடியும் என எழுத்தில் இருக்கிறது

(சுதந்திரத்திற்கு முன்னிருந்து இன்று வரை, இலங்கையில் இருக்கும் பாடசாலைகளின் வரலாறு உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நான் நம்பவில்லை - ஏனெனில் பல விடயங்களில் உங்கள் reputation அப்படி😎.எனவே விளக்க முயலாமல் என் நேரத்தை மிச்சப் படுத்துகிறேன்).  

 வேலணை மத்திய கல்லூரி எந்த இந்து அல்லது சைவ பீடத்தின் கட்டுப் பாட்டினால் நடத்தப் படுகிறது? முழுவதும் அரச நிதியில் இயங்கும் ஒரு அரச பாடசாலையில் மதத்தைப் பாடமாகப் போதிக்கலாம், ஆனால் மத ரீதியில் நியமனங்கள் செய்ய முடியாது அப்படி அனுமதிக்கும் விதிகள் எழுத்தில் இல்லை! 

மன்னிக்க வேண்டும். இந்த விளக்கம் எமக்கும் தெரியும்.

அதை 'ஜஸ்டின்' என்ற பெயரில் சொல்லும் போது, தேவையில்லா ஒரு முரண்பாடு வருவதை கவனிக்கவில்லையா?

யாழ்ப்பாண மத்திய கல்லூரி, முன்னர் வெஸ்லியன்... இப்போது ?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

மன்னிக்க வேண்டும். இந்த விளக்கம் எமக்கும் தெரியும்.

அதை 'ஜஸ்டின்' என்ற பெயரில் சொல்லும் போது, தேவையில்லா ஒரு முரண்பாடு வருவதை கவனிக்கவில்லையா?

 சாதி வாதிகளை "வுட்றா வுட்றா" என்ற தோரணையில் "நாதமுனி" என்ற பெயருடயவர் தடவிக் கொடுக்கும் போது தேவையில்லாத ஒரு முரண்பாடு வருவது தெரியவில்லையா😎?

இதற்கு ஒரு தீர்வு தான் இருக்கு: " கோசான் சே" மாதிரி இருவரும் religiously neutral பெயரில் வந்து எதையும் எழுதலாம்!😂

நான் படித்த யாழ் மத்திய கல்லூரி யாழில் முதலாவதாக ஆரம்பிக்கப் பட்ட பாடசாலைகளில் ஒன்று- 1816 வெஸ்லியன் மிசனரிகள். ஆனால், நாவலரையும் சேர்த்துக் கொண்ட மதச்சார்பின்மை அப்பவே இருந்தது. இப்போது மத்திய கல்லூரி அரச பாடசாலை - ஆனால் எந்த மதத்தின் அடிப்படையிலும் செயல்படும் பாடசாலை அல்ல! பல தடவைகள் சைவ ஆசிரியர்கள் மாற்ற முயன்றார்கள், ஆனால், அரசும் நிர்வாகமும் இடம் கொடுக்கவில்லை.

இப்ப ஏன் இதைக் கேட்டீர்கள்?

Edited by Justin
நாதம் ரைம் மெசினில் போய் திருத்திய பதிவிற்குரிய பதில் இணைக்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

 சாதி வாதிகளை "வுட்றா வுட்றா" என்ற தோரணையில் "நாதமுனி" என்ற பெயருடயவர் தடவிக் கொடுக்கும் போது தேவையில்லாத ஒரு முரண்பாடு வருவது தெரியவில்லையா😎?

இதற்கு ஒரு தீர்வு தான் இருக்கு: " கோசான் சே" மாதிரி இருவரும் religiously neutral பெயரில் வந்து எதையும் எழுதலாம்!😂

கத்தோலிக்க பாடசாலைகளில் நடக்கும் கூத்துக்களையும் விவாதிப்போமா?

நல்லா பத்துப் பக்கம் போகுமே.

சாப்பாட்டை பத்திய திரிக்குள் மதக் குப்பைகளை கொண்டு வந்தது ஏன்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Justin said:

 

நான் படித்த யாழ் மத்திய கல்லூரி யாழில் முதலாவதாக ஆரம்பிக்கப் பட்ட பாடசாலைகளில் ஒன்று- 1816 வெஸ்லியன் மிசனரிகள். ஆனால், நாவலரையும் சேர்த்துக் கொண்ட மதச்சார்பின்மை அப்பவே இருந்தது. இப்போது மத்திய கல்லூரி அரச பாடசாலை - ஆனால் எந்த மதத்தின் அடிப்படையிலும் செயல்படும் பாடசாலை அல்ல! பல தடவைகள் சைவ ஆசிரியர்கள் மாற்ற முயன்றார்கள், ஆனால், அரசும் நிர்வாகமும் இடம் கொடுக்கவில்லை.

இப்ப ஏன் இதைக் கேட்டீர்கள்?

நாவலர்? மதசார்பின்மை?

வரலாறு முக்கியம் அய்யா!

அவர் நாவலரானது பின்னர்.

அதன் முன்னர், பீற்றர் பேர்சிவெல், ஆறுமுகத்தாரை சேர்த்துக் கொண்டது ஜேம்ஸ் அரசரின் பைபிளை மொழிபெயர்க்க!

நான் சொல்ல வந்தது, இன்று அங்கே சைவர்களும் அதிபராகின்றனர்.

மாணவர் போராட்டத்தின் மூலம் அரச பந்த அதிபர் அகற்றப்பட்ட சரித்திரமும் உண்டு!

ஆக, நான் சொல்ல வந்தது, இலங்கை முழுவதும், இன, மதம் சார்ந்த பாடசாலைகள், அங்குள்ள பெரும்பான்மை மாணவர் மத சார்ந்த நபர்கள் அதிபராவர்.

அதனுள், சாதீய உள்குத்துக்கள், அரசியல் பின்புலம் தவிர்க்க முடியாதது.

அதனை தூக்கிப் பிடிப்பது தேவையற்றது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Nathamuni said:

கத்தோலிக்க பாடசாலைகளில் நடக்கும் கூத்துக்களையும் விவாதிப்போமா?

நல்லா பத்துப் பக்கம் போகுமே.

சாப்பாட்டை பத்திய திரிக்குள் மதக் குப்பைகளை கொண்டு வந்தது ஏன்?

சாப்பாட்டுக் கட்டுப் பாடு என்பதே மத ஒதுக்கல் சம்பந்தப் பட்டது என்பதைப் புரிய நீங்கள் tone-deaf இல்லாமல் இருக்க வேண்டும்😂! இது நீங்கள் தொடும் எல்லா விவாதங்களிலும் வெளிப்படும் ஒரு விடயம்: பின்புலம் (context)  என்பதை தூக்கி விட்டு, சம்பவம் (incidence) மட்டுமே பார்ப்பீர்கள், தெரியாமலா தெரிந்தேயா என்பது உங்களுக்கே வெளிச்சம்!

12 minutes ago, Nathamuni said:

நாவலர்? மதசார்பின்மை?

வரலாறு முக்கியம் அய்யா!

அவர் நாவலரானது பின்னர்.

அதன் முன்னர், பீற்றர் பேர்சிவெல், ஆறுமுகத்தாரை சேர்த்துக் கொண்டது ஜேம்ஸ் அரசரின் பைபிளை மொழிபெயர்க்க!

நான் சொல்ல வந்தது, இன்று அங்கே சைவர்களும் அதிபராகின்றனர்.

மாணவர் போராட்டத்தின் மூலம் அரச பந்த அதிபர் அகற்றப்பட்ட சரித்திரமும் உண்டு!

மத்திய கல்லூரி போன்ற ஒரு அரச பாடசாலையில் யாரும் அதிபராகலாம் - இது என் பொயின்ற், இதையே ஏன் எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்களெனப் புரியவில்லை😂!

 அரச நிதியில் இயங்கும் பாடசாலைகளில் தகுதி தான் பார்க்க வேணும் , மத அடையாளம் அல்ல. அப்படி மதம், சாதி ஒரு தகுதியாகப் பார்க்க வேண்டுமென்றால் அது எழுத்தில் இருக்க வேண்டும். இது விளங்கவில்லயானால், இப்பவே "மீற்றிங்" என்று சொல்லிக் கிளம்பி விடுங்கள்! என் நேரம் மிச்சம்!

Edited by Justin
நாதம் திரும்பவும் ரைம் மெசினில் போய் திருத்திய கருத்துக்கு பதில் இணைக்கப் பட்டது!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

 

மத்திய கல்லூரி போன்ற ஒரு அரச பாடசாலையில் யாரும் அதிபராகலாம் - இது என் பொயின்ற், இதையே ஏன் எனக்குத் திருப்பிச் சொல்கிறீர்களெனப் புரியவில்லை😂!

இல்லையே,

எனது முதல் பதிவு அதற்கான காரணத்துடன்.

அதனை கட்டாக்காலி நாய்கள் என்று நக்கல் அடித்துக் கொண்டே, இன்னுமொரு மத ரீதீயான தளத்தின் நோக்கத்தை குறி வைத்து அதை ஒத்து விசமத்துடன் கருத்து வைத்தது அய்யா தான்.

இதையே வேண்டாம் என்கிறேன்.

அதையே நெடுக்கரும் சுட்டிக் காட்டினார்.

யாழ் இந்துக் கல்லூரி காஸ்டலில் அன்றிலிருந்து இன்று வரை சைவ சாப்பாடு தான்.

பாடசாலை கன்ரீனிலும் சைவம் தான்.

அங்கே சைவர்கள் அல்லாதோரும் இருக்கின்றனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

இல்லையே,

எனது முதல் பதிவு அதற்கான காரணத்துடன்.

அதனை கட்டாக்காலி நாய்கள் என்று நக்கல் அடித்துக் கொண்டே, இன்னுமொரு மத ரீதீயான தளத்தின் நோக்கத்தை குறி வைத்து அதை ஒத்து விசமத்துடன் கருத்து வைத்தது அய்யா தான்.

இதையே வேண்டாம் என்கிறேன்.

அதையே நெடுக்கரும் சுட்டிக் காட்டினார்.

யாழ் இந்துக் கல்லூரி காஸ்டலில் அன்றிலிருந்து இன்று வரை சைவம் தான்.

அங்கே சைவர்கள் அல்லாதோரும் இருக்கின்றனர்.

 வேலணை மத்திய கல்லூரி  "இந்துக் கல்லூரியா"? யாழ் மத்திய கல்லூரியிலும் விடுதி இருக்கிறது. மச்சம் தான் அனேக நாட்கள். இலவச மதிய உணவு காலத்திலும் மச்சம் பரிமாறினோம்!

உங்களுக்கு உண்மையிலேயே விளங்காப் பிரச்சினையா அல்லது "அய்யா" பிரச்சினையா😂?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.