Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை பகுதியில் மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலைக்கு ஒழுங்கான  வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். 

புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். 

இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் தந்தையும் , பிறிதொருவருமாக  பாடசாலை வாசலில் காத்திருந்து , பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் வந்த போது , ஆசிரியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். 

அதனால் காயமடைந்த ஆசிரியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். 

மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த பெற்றோரின் மனநிலை விளங்கவே இல்லை.. 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ஆசிரியரைப் பற்றி தவறாக வீட்டில் சொல்லி இருக்கலாம் அல்லது ஆசிரியரும் முரட்டுத் தனமாக அடித்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

பிள்ளை ஆசிரியரைப் பற்றி தவறாக வீட்டில் சொல்லி இருக்கலாம் அல்லது ஆசிரியரும் முரட்டுத் தனமாக அடித்திருக்கலாம்!

இங்கு மாணவியை ஆசிரியர் கண்டித்ததாகத்தான் செய்தி சொல்கிறது. அடித்து துன்புறுத்தியதாக தெரியவில்லை. எனவே ஆசிரியரை தாக்கியது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. சடடம் தன் கடமையை செய்ய வேண்டும். இல்லாவிட்ட்தால் இது தொடர் கதைதான். 

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையின் எதிர்காலத்தில் மிகவும் அக்கறையுள்ள தந்தையாராக இருப்பார் போலும். முதலில் பிள்ளை ஒழுங்காக பாடசாலைக்கு சமூகம் அழிக்காததுக்கான காரணத்தை சொல்லி அடித்திருக்கலாம் ஆசிரியருக்கு அடித்தவர்கள், அல்லது பிள்ளையை அடிக்க  முடியாத காரணத்தினால் ஆசிரியரை அடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, P.S.பிரபா said:

எனக்கு இந்த பெற்றோரின் மனநிலை விளங்கவே இல்லை.. 

விளங்க எதுவுமில்லை.

கல்வியின் அருமை புரிந்த பெற்றோரே பிள்ளைகளுக்கு கடத்துவர்.

இது அருமை புரியாத, பிள்ளையின் எதிர்காலத்தையே நாசமறுக்கும் குடும்பம். 

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே, வளர்ந்த நாடுகளில் கூட இந்த மனப்போக்கு இருக்கிறது.

பிள்ளைகளில் உள்ள தவறுகளை குறித்து, சுட்டி கட்டாக் கூடாது என்று பெற்றோரின் எதிர்பார்ப்பு,  ஆசிரிய -மாணவர் உறவு மிகவும் மென்மையாகவும் , சட்டத்தால் வரையறுத்து, பாதுகாப்பு அளிக்கப்படும்  மேற்கில்  .

ஆயினும், ஆசிரியர் மீது தாக்குதல் நடந்து இதுவரை கேள்விப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

விளங்க எதுவுமில்லை.

கல்வியின் அருமை புரிந்த பெற்றோரே பிள்ளைகளுக்கு கடத்துவர்.

இது அருமை புரியாத, பிள்ளையின் எதிர்காலத்தையே நாசமறுக்கும் குடும்பம். 

 

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி விடயங்களை முன்பு கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஆசிரியரில் ஒரு வித மரியாதை கலந்த பயம் இருக்கும். 

ஆனால் இப்பொழுது இந்த மாதிரி சம்பவங்களை அதிகம் கேள்விப்படலாம்.. அதனால்தான் ஏன் இந்தப் பெற்றோர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

தனியே அக்கறையில்லாத பெற்றோர் என கூறிவிடமுடியாது..கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றால் சமூகமாக இதற்கான காரணங்களை கண்டு சரி செய்தல் அவசியம். 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, P.S.பிரபா said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி விடயங்களை முன்பு கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஆசிரியரில் ஒரு வித மரியாதை கலந்த பயம் இருக்கும். 

ஆனால் இப்பொழுது இந்த மாதிரி சம்பவங்களை அதிகம் கேள்விப்படலாம்.. அதனால்தான் ஏன் இந்தப் பெற்றோர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

தனியே அக்கறையில்லாத பெற்றோர் என கூறிவிடமுடியாது..கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றால் சமூகமாக இதற்கான காரணங்களை கண்டு சரி செய்தல் அவசியம். 

 

 

 

இந்த விதமான over protecting of their kids இங்கும் இருக்கிறது.

ஸ்ரேசனில் ரிக்கற் எடுக்கும் லைனில் நின்றவர், வேறு கவுண்டர் போகலாம் என்று திரும்ப பின்னால் நின்ற கறுப்பரின் (கறுவ* எண்டால் கோவிக்க ஆளிருக்கு) மகனின் காலை தவறுதலாக மிதிக்க, சிறுவன் வலியில் துடிக்க, மகனை அங்கேயே விட்டுவிட்டு, சாரி சொல்லி போனவர் பின்னால் போய் தலையில் ஒரு குத்து. கீழே விழுந்து தலை அடிபட்டு ஆள் அவுட். இன்னுமொரு குடும்பத்துக்கு தந்தை இல்லை. இவரது மகனுக்கு தந்தை கொலை செய்து உள்ளே!! 🥹

விளையாட்டுப் போட்டிகளில் தமது பிள்ளையை முந்தும் சக மாணவனின் பெற்றோரை தாக்குவது பொதுவானது.

ஆக, இந்த குடும்பம், தமது பிள்ளையை யாரும் கண்டிக்க கூடாது என்ற நிலைப்பாடு கொண்டோராயும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, P.S.பிரபா said:

எங்களது சமூகத்தில் இந்த மாதிரி விடயங்களை முன்பு கேட்டதில்லை. அதுமட்டுமல்ல, மாணவர்களுக்கும் ஆசிரியரில் ஒரு வித மரியாதை கலந்த பயம் இருக்கும். 

ஆனால் இப்பொழுது இந்த மாதிரி சம்பவங்களை அதிகம் கேள்விப்படலாம்.. அதனால்தான் ஏன் இந்தப் பெற்றோர்கள் இப்படி நடக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

தனியே அக்கறையில்லாத பெற்றோர் என கூறிவிடமுடியாது..கல்விக்கான முக்கியத்துவம் குறைந்து வருகிறது என்றால் சமூகமாக இதற்கான காரணங்களை கண்டு சரி செய்தல் அவசியம். 

 

 

 

அண்மையில் யாழ் அரசாங்க  அதிபர் சொன்ன "சட்டத்தை மதிக்காத சமுதாயம்" என்ற கருத்தோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சும்மா இருக்கும் இளையோரின் எண்ணிக்கை கூடி விட்டது. அப்படிச் சும்மா இருக்கும் இளையோருக்கு வேண்டியவை எல்லாம் பெற்றோர்/வெளிநாட்டு உறவுகள் மூலம் கிடைப்பதால், படிப்பு, தொழில் தகைமை தேவையில்லை என்ற நிலை பரவி விட்டது. இதனோடு, படிப்பு இல்லா விட்டாலும் வெளிநாடு இருக்கிறது போக என்ற மனநிலையும் பரவி விட்டது.

இங்கேயே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்: படிப்பு/கல்வி என்பது அடிப்படையில் ஒரு மனப்பயிற்சி. அதனோடு சேர்ந்து தொழில் தகைமை, சமூகப் பொறுப்பு என்பன perks ஆக வருகின்றன. ஆனால், படிப்பு என்பது சேர்டிபிகேட், மிச்சமெல்லாம் தேவையில்லாத ஆணி என்ற மனநிலை உருவாகி விட்டது.

இது எல்லா இளையோரின் நிலையுமா என்றால், இல்லையென்பதே பதில். ஆனால், ஊரைக் கெடுக்க ஒரிரு றௌடிகள் போதும்! பத்து நல்ல இளையோரின் விளைவை  பூச்சியமாக்க இந்த றௌடிகள் ஓரிருவரால் முடியும்! 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

ஆக, இந்த குடும்பம், தமது பிள்ளையை யாரும் கண்டிக்க கூடாது என்ற நிலைப்பாடு கொண்டோராயும் இருக்கலாம்.

அப்படி என்றால் அவர்கள் homeschooling தான் அவர்களது பிள்ளைக்குச் செய்யவேண்டும்..

 

35 minutes ago, Nathamuni said:

ஸ்ரேசனில் ரிக்கற் எடுக்கும் லைனில் நின்றவர், வேறு கவுண்டர் போகலாம் என்று திரும்ப பின்னால் நின்ற கறுப்பரின் (கறுவ* எண்டால் கோவிக்க ஆளிருக்கு) மகனின் காலை தவறுதலாக மிதிக்க, சிறுவன் வலியில் துடிக்க, மகனை அங்கேயே விட்டுவிட்டு, சாரி சொல்லி போனவர் பின்னால் போய் தலையில் ஒரு குத்து. கீழே விழுந்து தலை அடிபட்டு ஆள் அவுட். இன்னுமொரு குடும்பத்துக்கு தந்தை இல்லை. இவரது மகனுக்கு தந்தை கொலை செய்து உள்ளே!! 🥹

விளையாட்டுப் போட்டிகளில் தமது பிள்ளையை முந்தும் சக மாணவனின் பெற்றோரை தாக்குவது பொதுவானது.

இதெல்லாம் பொதுவானது என்று இலகுவில் கடந்து போகும் விடயங்களாக எனக்குத் தெரியவில்லை. 

மேலும் இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெறும் பொழுது சம்பவங்களில் தொடர்புள்ளோருக்கு தண்டனைகள் கிடைத்துத்தான் இருந்திருக்கும். 

ஆனால் எங்களது சமூகத்தின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் பொழுது இப்படியான செயல்களை இதெல்லாம் பொதுவானது என ஊக்குவிக்ககூடாது. அவ்வளவுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

அண்மையில் யாழ் அரசாங்க  அதிபர் சொன்ன "சட்டத்தை மதிக்காத சமுதாயம்" என்ற கருத்தோடு இதைப் பொருத்திப் பார்க்க வேண்டும்.

சும்மா இருக்கும் இளையோரின் எண்ணிக்கை கூடி விட்டது. அப்படிச் சும்மா இருக்கும் இளையோருக்கு வேண்டியவை எல்லாம் பெற்றோர்/வெளிநாட்டு உறவுகள் மூலம் கிடைப்பதால், படிப்பு, தொழில் தகைமை தேவையில்லை என்ற நிலை பரவி விட்டது. இதனோடு, படிப்பு இல்லா விட்டாலும் வெளிநாடு இருக்கிறது போக என்ற மனநிலையும் பரவி விட்டது.

இங்கேயே பல தடவைகள் சொல்லியிருக்கிறேன்: படிப்பு/கல்வி என்பது அடிப்படையில் ஒரு மனப்பயிற்சி. அதனோடு சேர்ந்து தொழில் தகைமை, சமூகப் பொறுப்பு என்பன perks ஆக வருகின்றன. ஆனால், படிப்பு என்பது சேர்டிபிகேட், மிச்சமெல்லாம் தேவையில்லாத ஆணி என்ற மனநிலை உருவாகி விட்டது.

இது எல்லா இளையோரின் நிலையுமா என்றால், இல்லையென்பதே பதில். ஆனால், ஊரைக் கெடுக்க ஒரிரு றௌடிகள் போதும்! பத்து நல்ல இளையோரின் விளைவை  பூச்சியமாக்க இந்த றௌடிகள் ஓரிருவரால் முடியும்! 

நீங்கள் கூறுவது உண்மைதான்.. 

நாங்கள் வெளிநாட்டிலிருந்து கொண்டு இதைப்பற்றி கதைக்க முடியாது எனக் கூறுவோரும் உள்ளனர். ஆனால் நாங்கள் கூறுவது அவர்கள் அடிப்படைக் கல்வியையாவது ஒழுங்காக முடிக்கவேண்டும் என்பதுதான். என்னைப் பொறுத்தவரை மிகவும் கஷ்டமான போர் காலத்தில் கூட கல்வியில் ஈடுபாடு குறையவில்லை ஆனால் இன்று அவர்களுக்கு படிக்க வசதியிருந்தும் அதனை ஓழுங்காகப் பயன்படுத்தவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 4/10/2023 at 11:49, பிழம்பு said:

பாடசாலைக்கு ஒழுங்கான  வரவில்லை என மாணவியை கண்டித்த ஆசிரியர் மீது மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (03) தாக்குதல் நடாத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். 

புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். 

இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் தந்தையும் , பிறிதொருவருமாக  பாடசாலை வாசலில் காத்திருந்து , பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் வந்த போது , ஆசிரியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். 

அதனால் காயமடைந்த ஆசிரியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார் ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவரை கைது செய்துள்ளனர். 

மாணவியை கண்டித்த ஆசிரியரை தாக்கிய மாணவியின் தந்தை உள்ளிட்ட இருவர் கைது | Virakesari.lk

 

ஜேவிபி:பிரேமதாசா காலத்தில் முன்பு ஆறுகளில் முண்டங்கள் மிதந்து வரும். 

மிதந்து வரும் முண்டத்துக்கு சிலது தலை இருக்காது, சிலது கை, கால்கள் இருக்காது. முண்டம் இன்னாறென அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்து காணப்படும்.

ஆற்றில் மிதந்து வரும் முண்டத்தை வைத்து ஆட்களை அடையாளம் காண்பது போன்றதுதான் இப்போதைய ஊடகங்களின் செய்திகள். 

பவர் உள்ளவர்கள் தம் சார்பாக, தமக்கு சார்பாக செய்திகளை வேகமாக பரப்பிவிடுகின்றார்கள். 

நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன என்பது போன்று அவலங்களை வைத்து வியாபாரம் ஆக்கியுள்ள ஊடகங்கள் பாய்ந்தடித்து தலவலை பரப்புகின்றன. 

இங்கு மேற்கண்ட செய்தியில் பாதிக்கப்பட்ட மாணவி தரப்பின் தகவல் ஏதும் இல்லை. 

அடிவாங்கிய ஆசிரியர் ஆணா பெண்ணா? திருமணம் ஆகியவரா/இல்லையா?  மாணவி எத்தனையாம் வகுப்பில் கல்வி கற்கின்றார்? அடி மாணவி மீது ஏதும் சொறிச்சேட்டை விட்டதால் ஆத்திரமுற்றதால் வந்து இருக்கலாம். 

மாணவி பாடசாலைக்கு ஒழுங்காக சமூகம் தரவில்லையென்றால் அதற்கான காரணம் அறியப்பட்டதா?

முதலாவது பாடசாலையில் இருந்து மாணவி பிரிதோர் பாடசாலைக்கு மாற்றலாகியதற்கான காரணம் உண்மையில் என்ன என்பது எமக்கு தெரியாது. இங்கு வீரகேசரி ஒரு தரப்பு தகவலை பரப்பியுள்ளது.

பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் எல்லோரும் யோக்கியவான்களும் அல்லர். 

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2023 at 02:49, பிழம்பு said:

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலைக்கு ஒழுங்கான வரவில்லை எனும் காரணத்தால் பாடசாலை அதிபர் , ஆசிரியர்கள் மாணவியை கண்டித்ததால் , அந்த பாடசாலை நிர்வாகத்துடன் முரண்பட்டு , அந்த பாடசாலையில் இருந்து விலகி, பருத்தித்துறை பகுதியில் உள்ள பிறிதொரு பாடசாலையில் இணைந்து கற்றல் நடவடிக்கையை ஆரம்பித்தார். 

புதிதாக சேர்ந்த பாடசாலைக்கும் மாணவி ஒழுங்காக சமூகமளிக்கவில்லை. அதனால் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவியை கண்டித்துள்ளார். 

இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற மாணவியின் தந்தையும் , பிறிதொருவருமாக  பாடசாலை வாசலில் காத்திருந்து , பாடசாலைக்கு வெளியே ஆசிரியர் வந்த போது , ஆசிரியர் மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். 

 

12 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

அடிவாங்கிய ஆசிரியர் ஆணா பெண்ணா? திருமணம் ஆகியவரா/இல்லையா?  மாணவி எத்தனையாம் வகுப்பில் கல்வி கற்கின்றார்?

இதெல்லாம் குசும்புகேள்விகள். தேவைதானா?

இங்கே முக்கியமானது, பிள்ளைகள் தவறு விடுவதற்கு காரணம்; பிள்ளைகளுக்கு சரி தவறு இரண்டுக்கும்இடையில் உள்ள வேறுபாடு தெரிவதில்லை, ஊட்டப்படுவதில்லை. பெற்றோரை பின்பற்றுவதால், பாடசாலையில் இப்படி நடந்துகொள்ளும் பெரியோர் வீட்டில் எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்வர் பிள்ளைகளின் முன்னால்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

 

இதெல்லாம் குசும்புகேள்விகள். தேவைதானா?

இங்கே முக்கியமானது, பிள்ளைகள் தவறு விடுவதற்கு காரணம்; பிள்ளைகளுக்கு சரி தவறு இரண்டுக்கும்இடையில் உள்ள வேறுபாடு தெரிவதில்லை, ஊட்டப்படுவதில்லை. பெற்றோரை பின்பற்றுவதால், பாடசாலையில் இப்படி நடந்துகொள்ளும் பெரியோர் வீட்டில் எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்வர் பிள்ளைகளின் முன்னால்.

 

இங்கே சம்மந்தப்பட்டு உள்ளது உங்கள் பிள்ளை இல்லை தானே. எனவே நல்லாய் பொழிந்து கட்டுவீர்கள். 

நாங்கள் படிக்கும்போது காலத்தில் நடக்காத சம்பவங்களா தற்போது நடைபெறுகின்றது?

இது சமநிலை உள்ளதா அல்லது ஒருசாரார் வழங்கிய தகவலா என்று செய்தியை பார்க்கும்போதே தெரிகின்றது.  

உங்கள் பிள்ளையை வேண்டுமென்றால் ஊர் பாடசாலை ஒன்றில் சேர்ப்பித்து அங்குள்ள நிலவரங்களை கண்டுபிடியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இதெல்லாம் குசும்புகேள்விகள். தேவைதானா?

👆இது உங்களுக்கான பதில்.

2 hours ago, satan said:

இங்கே முக்கியமானது, பிள்ளைகள் தவறு விடுவதற்கு காரணம்; பிள்ளைகளுக்கு சரி தவறு இரண்டுக்கும்இடையில் உள்ள வேறுபாடு தெரிவதில்லை, ஊட்டப்படுவதில்லை. பெற்றோரை பின்பற்றுவதால், பாடசாலையில் இப்படி நடந்துகொள்ளும் பெரியோர் வீட்டில் எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்வர் பிள்ளைகளின் முன்னால்.

👆இது உங்களுக்கான பதில் அல்ல, பொதுவானது. யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பிள்ளை முதலில் படித்த பாடசாலையில் முரண்பட்டு இன்னொரு பாடசாலைக்குச் சென்றிருக்கிறார். இங்கேயும் முரண்பாடு வந்திருக்கிறது.அடித்தற்காரணம் பிள்ளையின் பெற்றோர்தரப்பில் இருந்து வரவில்லை.ஆசிரியர்கள் கண்டித்ததற்காக ஆசிரியரை அடிப்பதென்றால் எல்லா அசிரியர்களும் அடிவாங்காமல் இருக்கமாட்டார்கள்.முன்பெல்லாம் ஆசிரியர்கண்டித்து விட்டார் என்று வீட்டில் போய்ச் சொன்னால் அப்படி என்ன குழப்படி செய்தாய் என்று வீட்டில் அடிவிழும். அப்பொழுதெல்லாம் ஆசிரியர்கள் மேல் முழுநம்பிக்கை வைத்து பிள்ளைகளை ஆசிரியரிடத்தில் ஒப்படைத்து விடுவார்கள். ஆனால் இப்பொழுது அப்படியான நிலமைகள் இல்லை.ஆசிரியர்களும் தங்கள்பொறுப்புணர்ந்து தாங்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருப்பார்கள்.இப்பொழுது ஆசிரியர்களும் அப்படி இல்லை. பெற்றோர்களும் அப்படி இல்லை. இது ஆரோக்கியமான சமூகத்திற்கு நல்லதல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளைகளின் சரி பிழைகளுக்கப்பால் ஊரில் இருக்கும் ஜமீன்தார் குடும்பங்களின் பிள்ளைகளை யாருமே கண்டிப்பப்படாது. பல ஊர்களில் இதுதான் வழக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.