Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Biden has not seen photos of decapitated children - White House official

Earlier, we reported that US President Joe Biden said he saw pictures of "terrorists beheading children" in Israel, referring to the massacres carried out by Hamas over the weekend.

"I've been doing this a long time. I never really thought I would see - have confirmed pictures of terrorists beheading children," Biden said as he spoke to a roundtable of Jewish community leaders on Wednesday afternoon.

Reports of such images have circulated on social media and in some news reports, but have not been confirmed by the Israeli Defence Forces.

The BBC reached out to the White House to get clarification on Biden's comments.

A White House official has since told the BBC that Biden did not see such images, rowing back from the president's comments.

"He was referring to the reports from Israel," the official said.

https://www.bbc.co.uk/news/live/world-middle-east-67073970

பைடன்.. இஸ்ரேலின் உக்ரைனின் மற்றும் இவர்களுக்கு சார்ப்பான அமெரிக்க அதிகாரிகளின்... பொய்களுக்கு ஆடும் ஒரு பொம்மை. இந்த பொம்மையின் தப்பாட்டத்தால்.. உலகம் பாரிய மனித அழிவுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

  • Replies 1.5k
  • Views 157.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    நன்னி!! இது கொஞ்ச அதிகமாக தெரியவில்லையா? இல்லை முஸ்லீம் என்றதால் உங்களது அறிவை மறைக்கிறதா? இஸ்ரேலும் சரி இந்த மதவெறி பிடித்த முஸ்லீம் இனக்குழுக்களும் சரி எல்லாம் ஒன்றுதான்.    போர் என

  • பந்தி பந்தியாக வரலாற்றை எழுதினாலும் வாசிக்கவா போகிறார்கள்? யாராவது உணர்ச்சி மயப்பட்டு ரிக் ரொக்கில் கொட்டுவதைத் தான் நம்புவர் . ஆனால், உண்மையாக நிலைமையை அறிந்து கொள்ளும் ஆர்வமுள்ளோருக்குச் சுருக்கமாக:

  • அனைத்து தமிழ்ஆயுதபோராட்ட இயக்கங்களுமே பாலஸ்தீனத்தின் விடுதலையையும், அவர்கள் போராட்டத்தின் மீதிருந்த நியாயத்தையும் ஆதரித்தன, பக்கம் பக்கமாக கட்டுரை கவிதைகள்கூட வடித்தன. பாலஸ்தீன இயக்கங்கள்போலவே ஒர

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of one or more people and text

 

May be an illustration of map, the Western Wall and text that says 'আরও আনন্দ ISRAEL ALESTIN MANIF'

 

No photo description available.

 

May be an illustration of text

 

May be a doodle of map and text

 

 

May be an illustration of text

 

May be an illustration of text that says 'STOP THE WAR!'

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இதை சாட்டாக வைத்து ரஸ்யாவை வெள்ளை அடிக்க ஒரு சாரார் கிளம்பி உள்ளனர்.

உக்ரேனில் ரஸ்யாவும் வெள்ளை பொஸ்பரசை பாவித்தது. பாவிக்கிறது.

ஆனால் உக்ரைன் பாவிப்பது.. இவைட கண்ணுக்கு வெள்ளையா தெரியாது. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. 

காஸா போல் டான்பாஸ் பிராந்தியம் 2014 இல் இருந்தும் அதற்கு முன்னிருந்தும் உக்ரைனால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நல்லா மூடிமறைச்சு.. உருட்டு உருட்ட நினைக்கிறார்கள். பொய்யர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nedukkalapoovan said:

ஆனால் உக்ரைன் பாவிப்பது.. இவைட கண்ணுக்கு வெள்ளையா தெரியாது. சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. 

காஸா போல் டான்பாஸ் பிராந்தியம் 2014 இல் இருந்தும் அதற்கு முன்னிருந்தும் உக்ரைனால் எரிக்கப்பட்டுக்கொண்டிருப்பதை நல்லா மூடிமறைச்சு.. உருட்டு உருட்ட நினைக்கிறார்கள். பொய்யர்கள். 

சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. 

ம்ம்ம் அந்த சப்பிளை
அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு கொத்தணிக்குண்டுகளை வழங்கியது ரஸ்ஸியாவே.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. 

ம்ம்ம் அந்த சப்பிளை
அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊

ஆமாம் ஆமாம்... உக்ரைன் வழங்கிய.. மல்ரிபரல் ராக்கெட் வெள்ளை பொஸ்பரஸ் தாக்குதலை.. சொப்பிங் பேக்கில கட்டி தான் அனுப்பி இருப்பாய்ங்க போல. அதுதான் உண்மையை மறைச்சிடலாம் என்று சிலர் சுத்தி திரியினம்... சாரி சாரி.. உருட்டித் திரியினம்.

அண்மையில்.. அர்பர்ஜானுக்கு வெள்ளைப் பொஸ்பரஸ் ஆயுதங்கள சப்பிளை செய்த குற்றச்சாட்டும் உக்ரைன் கொடிய நாட்டை சாரும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தவறான செய்திகள் x தளத்தில் பரப்பபடுகிறதாக கூறப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

 

இல்லை உது பொய்யென்று அறிவித்துள்ளார்கள், இஸ்ரேலியர்கள். உது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாம்.

உதை வெளியிட்டது அல் ஜெசீரா...

மற்றது, கமாஸ் அறிவித்துள்ளது, இப்போதைக்கு எந்தவொரு பணையக்கைதிகள் பரிமாற்றமும் நடைபெறாது என்டு.

 

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

சொறீலங்காவுக்கு வெள்ளை பொஸ்பரஸ் சப்பிளை செய்ததே உக்ரைன் என்ற கொடிய நாடு. 

ம்ம்ம் அந்த சப்பிளை
அனைத்தையும் ஷாப்பிங் பேக்கில் போட்டு அதை சொறிலங்கா ராணுவ முகாமுக்கு தவணைமுறையில் அனுப்பி வைத்ததே எங்கட நெடுக்கர் தான். 🙊

உங்கள் மூச்சை விணடிக்காதீர்கள். Don’t waste your breath.

சிலருடன் விவாதிக்கலாம், விடயங்களை பகிரலாம், நாமும் கற்று கொள்ளலாம்.

சிலரை கடந்து போவதே கற்று கொள்வதுதான்🤣.

7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தலைவரே எந்த நேரமும் யாழில் எழிதிக்கொண்டிருக்க நான் பென்சன் எடுத்த பின்புதான் முடியும்.. ஏதோ நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் எழுதுகிறேன்.. எத்தனையோ திரிகளுக்கு வாசிக்கும்போதே கருத்தெழுத தோன்றும் ஆனால் வேறு வேலை எதிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதால் பலநேரங்களில் முடிவதில்லை. அப்புறம் அது அப்படியே மறந்து போயிருக்கும்.:

அதுவும் சரிதான் நண்பா.

எனக்கெண்டாலும் பரவாயில்லை மாச கடைசியில் CIA, MI6 பாங் டெபோசிட் பண்ணி விடுவார்கள்.

இந்த மாதத்தில் இருந்து மொசாடும் போடும்.

எவ்வளவு உருட்டுரோனோ அவ்வளவுக்கு கொட்டும்🤣.

நீங்கள் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் 🙏.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Maruthankerny said:

அப்படியா எழுதுகிறார்கள் ? 
எல்லோரையும் பிடித்துக்கொடுக்க நீங்கள் இருந்தும் அப்படி எழுதுகிறார்கள் என்பதைத்தான் நம்ப முடியவில்லை 

இப்ப என்ன?

ரஸ்யா உக்ரேனில் போட்டது அனுமான்

மத்தாப்பு….

இஸ்ரேல் காசாவில் போட்டது வெள்ளை பொஸ்பரஸ் ….

சரி ஓக்கே விடுங்கோ🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

‘ஹமாஸின் சுரங்கப் பாதைகளைக் குறிவைக்கிறோம்’ – இஸ்ரேல் ராணுவம்

இஸ்ரேல் பாலத்தீனம், காசா, ஹமாஸ்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

தெற்கு காசாவிலிருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் உருவான பள்ளம்

10 அக்டோபர் 2023
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதையடுத்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,200 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கினறனர்.

இந்நிலையில், தற்போது தாங்கள் ஹமாஸ் அமைப்பின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹமாஸ் குழுவால் அமைக்கப்பட்டசுரங்கப்பாதைகள்

இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்தச் நிலத்தடிச் சுரங்கங்களின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.

“20 வருடங்கள் முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்தச் நிலத்தடிச் சுரங்கப் பாதைகளை அமைத்தனர்,” என்றார் அவர்.

மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி, ஒன்று தரைக்குமேல் பொதுமக்களுக்கானது, மற்றொன்று நலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது, என்றார்.

“ஹமாஸின் அந்த நிலத்தடிச் சுரங்கங்களைத் தாக்குவதற்காகத்தான் முயற்சி செய்கிறோம்,” என்றார் கான்ரிகஸ்.

 
இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

காசா மீது 6 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்

‘பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை மின்சாரம் தண்ணீர் இல்லை’

வியாழனன்று, இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரமோ தண்ணீரோ, எரிபொருளோ வழங்கப்படமாட்டாது என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.

லெபனான் மீதும் தாக்குதல்

முன்னர், காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்துவந்த இஸ்ரேல் ராணுவம், திடீரென அண்டை நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

காசா

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் அரிதான தொலைபேசி அழைப்பு - முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் பேசியது என்ன?

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்து புதன்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தெஹ்ரானில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏழு ஆண்டுகால விரோதப் போக்கிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சீனா பேச்சுவார்த்தை நடத்திய பிறகான முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும்.

ரைசியும் முகமது பின் சல்மானும் "பாலத்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று விவாதித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

சௌதி பட்டத்து இளவரசர் "அனைத்து சர்வதேச, பிராந்திய கட்சிகளுடனும் தொடர்புகொள்வதில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்" செய்து வருவதாக சவுதி அரச செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.

எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சௌதி அரேபியா ஏற்காது என்பது பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியதாக எஸ்.பி.ஏ. தெரிவித்துள்ளது.

காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம்

காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசாவின் எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில் தரை வழியாகத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது.

ஆயுதமேந்திய வீரர்கள், காலாட்படை வீரர்கள், பீரங்கிப் படைகள் ஆகியோர் தவிர சுமார் 3 லட்சம் ரிசர்வ் படைகளும் காஸா எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

முன்னதாக சிரியாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.

இதேபோல் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளது.

விமானங்களை கண்காணிப்பதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தை தாக்கி அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

சண்டையில் இதுவரை இஸ்ரேலிய தரப்பில் 1,200 பேரும் காசாவில் 1100 பேரும் உயிரிழந்துள்ளனர்.

https://www.bbc.com/tamil/articles/cmlrvevweezo

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை மின்சாரம் தண்ணீர் இல்லை’

ஹமாஸ் 100 பேரை பணயகைதிகளாக பிடித்து வைத்துள்ளது.

பதிலுக்கு இஸ்ரேல் ஒட்டுமொத்த காசாவையும் பணயகைதிகளாக்கி உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரேத அறைகளாக மாறும் காசாவின் மருத்துவமனைகள்

Published By: RAJEEBAN

12 OCT, 2023 | 01:38 PM
image
 

காசாவின் மருத்துவமனைகளில் மின்சாரம் இல்லாத நிலை காரணமாக அவை பிரேத அறைகளாக  மாறுகின்றன  என சர்வதே செஞ்சிலுவை குழு எச்சரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக காசாவின் ஒரேயொரு  மின்நிலையமும் செயல் இழந்துள்ளது

gaza_hos2.jpg.

இதன் காரணமாக காசாவின் மருத்துவமனைகள் மின்பிறப்பாக்கிகளின் உதவியுடன் செயற்படுகின்றன.

மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு புதிதாக எரிபொருள் தேவை 

காசாவிற்கான மின்சாரத்தை இஸ்ரேலே வழங்கிவந்தது எனினும் ஹமாசின் தாக்குதலை தொடர்ந்து மின்சாரவிநியோகத்தை  இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது.

gaza_hospital1.jpg

வன்முறை அதிகரிப்பால் ஏற்படும் மனித துயரங்கள் வெறுக்கத்தக்கவையாக உள்ளன என தெரிவித்துள்ள மத்திய கிழக்கிற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின்  பிராந்திய இயக்குநர் பப்ரிசியோ கார்போனி பொதுமக்களின் துயரங்களை குறைக்குமாறு நான் சம்மந்தப்பட்ட தரப்பினை கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காசா மின்சாரத்தை இழப்பதால் மருத்துவமனைகள் மின்சாரத்தை  இழக்கின்றன புதிதாக பிறந்த குழந்தைகளும் முதியவர்களும்  ஆபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/166707

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 அமெரிக்கர்கள் பலி – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றைய 5 ஆவது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு துணை நிற்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 22 அமெரிக்கர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 17 பேர் மாயமாகினர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதை நாம் அறிவோம். அமெரிக்கர்களில் பலரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர் என தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கர்கள் இஸ்ரேல் செல்வதற்கான பயணத்தை மறு மதிப்பீடு செய்யும்படியும், காசா நகருக்குச் செல்வதை தவிர்க்கும் படியும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/276705

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அல்அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்ததற்கு பழிவாங்குவதற்காக இஸ்ரேல் மீதான தாக்குதலை திட்டமிட்ட ஹமாசின் இரகசிய தளபதி -

Published By: RAJEEBAN

11 OCT, 2023 | 12:45 PM
image
 

ரொய்ட்டர்

ஹமாஸ் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பேரழிவு தாக்குதலை இஸ்ரேல் தனது செப்டம்பர் 11 என  தெரிவிக்கின்றது, இந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான பாலஸ்தீன போராளி முகமட் டெய்வ் அதனை அல் அக்சா  வெள்ளம் என்கின்றார்.

ஹமாஸ் சனிக்கிழமை காசாவின் மீது ஆயிரக்கணக்கான ரொக்கட்களை ஏவிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலால் அதிகம் தேடப்படும்  முகமட் டெய்வ் ஒலிநாடா மூலம் வெளியிட்ட அறிவிப்பில் இதனை தெரிவித்தார்.

ஜெரூசலேத்தின் அல் அக்சா மசூதி மீதான தாக்குதலிற்கான  பதிலடியே இது என அவர் குறிப்பிட்டார்.

Gaza-Deis-590x375.jpg

2014 இல் காசாவில் முகமட் டெய்வின் மனைவியும் கைக்குழந்தையும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டவேளை அவர்களை காசாவின் வடபகுதியில் உள்ள  பெய்ட்லகியா புதைகுழியில்  புதைப்பதற்கு தயாராகும் பொதுமக்கள் 

------------------------

மே 2021 இல் ஜெரூசலேத்தின் அல்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொலை செய்த இந்த தாக்குதலை டெய்வ் திட்டமிட ஆரம்பித்தார் என   காசாவில் உள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜெரூசலேமின் அக்அக்சா மசூதிக்குள் இஸ்ரேல் நுழைந்தமை  அராபிய -இஸ்லாமிய உலகத்தினை சீற்றமடையச்செய்திருந்தது - இஸ்லாமியர்களின் மூன்றாவது புனிதமான இடம் இந்த மசூதி.

ரம்ழான் மாதத்தில் அந்த மசூதிக்குள் நுழைந்த படையினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்கியதும்  முதியவர்கள் சிறுவர்களை வெளியே இழுத்துவந்ததும்  அதனை காண்பிக்கும் வீடியோக்களும் கடந்த வார தாக்குதல் திட்டமிடப்படுவதற்கு காரணமாக அமைந்தன என தெரிவித்துள்ள ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இவை அனைத்தும் சீற்றத்தையும் ஆத்திரத்தையும் தூண்டின எனவும் குறிப்பிட்டுள்ளன.

ஜெருசலேத்தின் இறைமை மற்றும் மதம் தொடர்பான சர்ச்சைகளின் முக்கிய அம்சமாக நீண்ட காலமாக காணப்படும் இந்த மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தமை ஹமாசிற்கும் இஸ்ரேலிற்கும் 11 நாள் மோதலிற்கு காரணமாக அமைந்தது.

இந்த சம்பவங்களிற்கு இரண்டு வருடங்களின் பின்னர் -1973 இஸ்ரேலிய அராபிய மோதலின் பின்னர்- முதல் தடவையாக இஸ்ரேலிற்குள் ஹமாஸ் நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது இஸ்ரேல் போர்பிரகடனம் செய்யும் நிலையை  உருவாக்கியுள்ளது - 800க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டெய்வ் இஸ்ரேலின் பல கொலைமுயற்சிகளில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

2021 இல் இறுதியாக இஸ்ரேல் அவரை இலக்குவைத்தது.

டெய்வ் ஒருபோதும் மக்கள் முன்னிலையில் தோன்றாதவர் - உரையாற்றாதவர்- இதன் காரணமாக சனிக்கிழமை ஏழாம் திகதி அவர் ஹமாஸ் தொலைக்காட்சியில் உரையாற்றவுள்ளார் என  அறிவிக்கப்பட்டவேளை - ஏதோ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்ற உணர்வு பாலஸ்தீனியர்கள் மத்தியில் காணப்பட்டது.

இன்று அல்அக்சாவின் சீற்றம் வெளிப்படுகின்றது -நமது மக்களின்- தேசத்தின் சீற்றம் வெடிக்கின்றது- எங்கள் முஜாஹிதீன்களிற்கான செய்தி இது -குற்றவாளிகளுக்கு தங்கள் காலம் முடிவடைந்து விட்டது என்பதை புரிய வைப்பதற்கான நாள் இன்றைய நாள் என டெய்வின் பதிவு செய்யப்பட்ட அந்த செய்தி தெரிவித்தது.

இரண்டு மூளைகள் - ஒரு சூத்திரதாரி

டெய்வின் மூன்று படங்களே உள்ளன - முதலாவது 20 வயதில் எடுக்கப்பட்டது- இரண்டாவது முகக்கவசம் அணிந்த படம் - மூன்றாவது அவர் உரையாற்றும்போது காணப்படும் நிழல்.

அவர் எங்கிருக்கின்றார் என்பதும் தெரியாது - காசாவில் உள்ள சுரங்கப்பாதைகளிற்குள் அவர் இருக்கவேண்டும்.

இந்த தாக்குதலின் திட்டமிடல்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளிலும் டெய்வ் நேரடியாக ஈடுபட்டிருந்தார் என இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரமொன்று தெரிவித்தது.

ஹமாசின் இல் ஹசாம் பிரிகேட்டின் தளபதியான டெய்வும் காசாவில் உள்ள ஹமாசின் தளபதி யெஹ்சியா சின்வரும் இணைந்து இந்த தாக்குதலை திட்டமிட்டனர் என ஹமாசிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த தாக்குதலை முழுமையாக வடிவமைத்தவர் யார் என்பது வெளிப்படையான விடயம்.

இரண்டு மூளைகள் உள்ளன, ஆனால் ஒரு சூத்திரதாரி என தெரிவிக்கும் ஹமாஸிற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த தாக்குதல் குறித்த விபரங்கள் ஒருசில ஹமாஸ் தலைவர்களிற்கு மாத்திரம் தெரிந்திருந்தன என குறிப்பிட்டுள்ளன.

இந்த தாக்குதல்  குறித்த விபரங்கள் எவ்வளவு தூரம் இரகசியமாக வைக்கப்பட்டன என்றால்  இஸ்ரேலின் முக்கிய எதிரியும் ஹமாசிற்கு நிதி வழங்கும் முக்கிய  நாடான ஈரானிற்கு கூட  இந்த நடவடிக்கை குறித்த மேலோட்டமான விடயங்களே தெரிந்திருந்தன - தாக்குதல் எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் ஈரானிற்கு கூட தெரியாது என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/166618

https://www.facebook.com/q7medianews/videos/849917096648063/?extid=NS-UNK-UNK-UNK-AN_GK0T-GK1C&ref=sharing

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்- ஐ.நா பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உட்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காசா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 இலட்சம் பேர் காசாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காசா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காசாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 இலட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

இதையடுத்து, “உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காசாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்” என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://thinakkural.lk/article/276784

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, ஏராளன் said:

அல்அக்ஸா மசூதிக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்ததற்கு பழிவாங்குவதற்காக

சார்,

உள் நுழைந்ததுக்கே இப்டி செய்றீங்களே…

அங்க ஒருவர் மசூதிய இடிச்சு கோவில் கட்டி கும்பாபிசேகமும் செய்யப்போறாரே அவரை கவனிக்க மாட்டீங்களா?🤣

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

செய்தியில் ஒரு யூத பெண்மணி 10 நிமிடங்களுக்கும் அதிகமாக தனது பேரனை ஹமாஸின் பிடியில் இருந்து மீட்டு தருமாறு பிரெஞ்சு ஜனாதிபதியை கோருவது காட்டப்பட்டது.  இன்று இரவு 8 மணிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இதற்கான பதிலை சொல்கிறாராம். 

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். யூத இனத்துக்கு கொடுக்கப்படும் இத்தகைய முக்கியத்துவம். மன்னிக்கவும் இதை எழுதுவதற்கு.

இனி பலஸ்தீனம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்

 

சிரியாவின் டமாஸ்கஸ் ஏர்போட்டை தாக்கியது இஸ்ரேல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இன்று காலையில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டு இருந்தேன்.

செய்தியில் ஒரு யூத பெண்மணி 10 நிமிடங்களுக்கும் அதிகமாக தனது பேரனை ஹமாஸின் பிடியில் இருந்து மீட்டு தருமாறு பிரெஞ்சு ஜனாதிபதியை கோருவது காட்டப்பட்டது.  இன்று இரவு 8 மணிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இதற்கான பதிலை சொல்கிறாராம். 

நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். யூத இனத்துக்கு கொடுக்கப்படும் இத்தகைய முக்கியத்துவம். மன்னிக்கவும் இதை எழுதுவதற்கு.

இனி பலஸ்தீனம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kandiah57 said:

விசுகர். யூதர்களை.  ஐரோப்பியர்கள்  அடித்து துரத்திய வரலாற்றை நான் படித்து உள்ளேன்   ரொம்ப ரொம்ப கஸடப்படடவார்கள். அந்த காலத்தில் ஆடு மாடு .......போன்ற மிருகங்களுக்கு  கிடைத்த கவனிப்புக்கூட.  யூதர்கள். பெறவில்லை இருக்க வீடுகள் இல்லை   இஸ்ரேல் போக கப்பல் இல்லை   இஸ்ரேலில் இவர்கள் வரவேற்கபடவில்லை அந்த நேரம் இஸ்ரேல் ஆண்டது யூதன்  தான் மிகுந்த சிரமபபட்டுததான். பாலைவனத்தை.  சோலைகள் ஆக்கினார்கள்   பாலஸ்தீனன் என்ன செய்தான் ???   எனக்கு தெரியாது   இந்த யூதன். முஸ்லிம்கள். என்றால் பிரச்சனை இல்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பணயக்கைதிகள் விடுதலை செய்யப்படும் வரை எரிபொருள் இல்லை மின்சாரமில்லை - இஸ்ரேல் திட்டவட்டம்

Published By: RAJEEBAN

12 OCT, 2023 | 04:46 PM
image
 

ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை செய்யும் வரை  காசாமீதான முற்றுகையை தளர்த்தப் போவதில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

காசாவின் காயமடைந்தவர்களால் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்  பிரேத அறைகளாக மாறுவதை தவிர்க்கவேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை குழு மன்றாட்டமாக வேண்டுகோள் விடுத்துள்ள நிலையிலேயே இஸ்ரேல் இதனை தெரிவித்துள்ளது.

ஹமாசினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்கள்  விடுதலைசெய்யப்படும் வரை காசாவிற்கு எரிபொருளையோ மின்சாரத்தையோ வழங்கப்போவதில்லை என இஸ்ரேலின் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக பதிவில் அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் இதனை தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமா, கடத்தப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகும்வரை மீண்டும் இஸ்ரேல் திரும்பும்வரை  மின்சாரத்தை மீண்டும் வழங்கப்போவதில்லை  எரிபொருள் வாகனங்கள் எவையும் காசாவிற்குள் நுழையாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானத்திற்கு மனிதாபிமானம் எங்களிற்கு ஒழுக்கநெறி குறித்து எவரும்போதிக்ககூடாது என அவர்தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை துண்டித்துள்ளது.

https://www.virakesari.lk/article/166724

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் உலகப்போர் உத்தியைப் பயன்படுத்தி இஸ்ரேலுக்குள் ஹமாஸ் ஊடுருவிய ஆயுதக்குழு

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இரண்டாம் உலகப்போரின் உத்தியை பயன்படுத்தியதா ஹமாஸ் ?

பட மூலாதாரம்,HAMAS

படக்குறிப்பு,

ஹமாஸின் 'அல்-கஸ்ஸம் பிரிகேட்ஸ்' ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடங்கியபோது தங்களது குழுவைச் சேர்ந்த ஒருவர் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டனர்.

கடந்த சனிக்கிழமை ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேல் மீது கொடிய தாக்குதலை நடத்தியபோது, அந்நாட்டிற்குள் படையெடுத்து வந்த ஆயுதக்குழுவினர் பாராசூட் மூலமாகவும் நாட்டிற்குள் நுழைந்தார்கள்.

'இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ்' ஆயுதக்குழுவின் ராணுவப் பிரிவினர் ஒரு இசை விழாவிற்குச் சென்றவர்கள் மற்றும் காசா பகுதியைச் சுற்றியுள்ள இஸ்ரேலிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தீடீர் தாக்குதலை 'அல்-அக்ஸா தாக்குதல்' எனக் கூறினர்.

பாலத்தீன ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகவும், கடல் மற்றும் நில வழியாகவும் ஊடுருவியதாக இஸ்ரேலிய ராணுவ செய்தித் தாெடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் உறுதிப்படுத்தினார்.

அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழவைச் சேர்ந்தவர்கள் பாராசூட் மூலமாகத் தரையிறங்குவது போன்ற படங்களும், வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது இதுபோன்ற நுட்பத்தைப் பயன்படுத்தியது இதுவே முதல்முறையாகக் கருதப்படுகிறது.

 
பாராசூட்டில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்

பட மூலாதாரம்,HAMAS

படக்குறிப்பு,

சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊவடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர்.

வான் வழியாக எல்லையைக் கடந்த ஆயுதக்குழுவினர்

பாலத்தீன ஆயுக்குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலையும் காசாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியை பாராசூட்டில் அமர்ந்து கொண்டு வான்வழியாகக் கடந்துள்ளனர்.

ஜெனரேட்டர் மற்றும் பிளேடுகளால் இயக்கப்படும் அந்த பாராசூட், காசாவை சுற்றியுள்ள பகுதிக்கு முன்னேறும்போது இயக்கப்பட்டன.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

சனிக்கிழமையன்று இஸ்ரேலின் தெற்குப் பகுதிகளில் பாலத்தீனிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இஸ்ரேல்-காசா எல்லையில் உள்ள வேலிப்பகுதியில் பாலத்தீனியர்கள் நுழைந்தனர்.

ஹமாஸ் இரண்டாம் உலகப்போரின் உத்தியைப் பின்பற்றியதா?

எல்லையை ஊடுருவிச் செல்லும் நோக்கத்தில், ஹமாஸின் ராணுவப் பிரிவினர் வான்வழித் தாக்குதல் நடத்த ராணுவ பாராசூட்டுகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தினர்.

இரண்டாம் உலகப் போரின்போதும் ஜெர்மனி மற்றும் அதன் நேச நாடுகள் பாராசூட் மூலம் தாக்குதல் நடத்தும் பிரிவினரைத்தான் முதலில் சண்டையிட அனுப்பினார்கள்.

 
ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பாராகிளைடர்கள் தரையில் இருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும்.

1987இல் நடந்த கிளைடர் தாக்குதல்

கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7) அன்று ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதல், பாலத்தீன விடுதலைக்கான பாப்புலர் ஃப்ரண்ட் - ஜெனரல் கமாண்ட் அமைப்பைச் சேர்ந்த பாலத்தீனர்கள் இருவர், சிரியாவை சேர்ந்த ஒருவர் துனிசியாவை சேர்ந்த ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவால் நடத்தப்பட்ட கிளைடர் ஆபரேஷனை நினைவுபடுத்துகிறது.

நவம்பர் 1987இல் இஸ்ரேலிய ராணுவ தளத்தைத் தாக்க அவர்கள் லெபனானில் இருந்து புறப்பட்டனர்.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

நவம்பர் 26, 1987இல், வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு ராணுவ முகாமில், ஆறு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஏழு பேர் காயமடைந்தனர். இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட கிளைடரை ஒரு இஸ்ரேலிய ராணுவ வீரர் பார்வையிட்டார்.

பாராசூட் மூலம் ஊடுருவிய ஹமாஸ் ஆயுதுக்குழு

மோட்டார் பொருத்தப்பட்ட பாராசூட்களை பயன்படுத்தி, திசை திருப்புவதற்குப் பயன்படும் கட்டுப்பாட்டைக்கொண்டு, போர் விமானங்களைத் தரையிலிருந்து ஏவ முடிந்தது.

இதனால், அவர்கள் மலையில் ஏறாமல், விமானத்தில் இருந்து தரையிறங்காமல் பயணிக்கலாம். இந்த இஞ்சின் பொருத்தப்பட்ட பாராசூட்களை மணிக்கு 56கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும்.

பாராகிளைடர்கள் தரையிலிருந்து சராசரியாக 5,000 மீட்டர் உயரத்தில் மூன்று மணிநேரம் பறக்க முடியும். பாராகிளைடிங் இணையதளங்களில் உள்ள தகவலின் படி, இந்த பாராகிளைடர்களால் 230 கிலோ எடை வரை சுமக்க முடியும்.

இஸ் அல்-தின் அல்-கஸ்ஸம்-ப்ரிகேட்ஸ் ராணுவத்தின் ஊடகப் பிரிவினர் பகிர்ந்துள்ள வீடியோக்களில், அவர்கள் தரையிலிருந்து பாராகிளைடர்களை ஏவுவதைக் காட்டுகிறார்கள். ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது இரண்டு பேரால் இயக்கப்படுகின்றன.

அவர்கள் வெளியிட்டுள்ள மற்ற காட்சிகள், ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் இஸ்ரேலிய தளங்களில் தரையிறங்கும் முன்பாகவே வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்துவதைக் காட்டுகின்றன.

காசாவையும் இஸ்ரேலையும் பிரிக்கும் வேலியைத் தாண்டி பாராசூட் மூலம் ஊடுருவியவர்களை 'சகர் படை' என அழைக்கின்றனர்.

 
ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஹமாஸ் ஆயுதக்குவினர் காசா பகுதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அவர்கள் எல்லைப்பகுதியை ஊருடுவிச் செல்கின்றனர்.

இஸ்ரேலிய ராணுவம் பாராசூட்களை ஏன் கண்டுபிடிக்கவில்லை?

ஹமாஸ் ஆயுதக்குழுவின் ஊடகப்பிரிவு சார்பில் வெளியிடப்பட்ட காணொளிக் காட்சியில், அவர்கள் காசாவில் இருந்து ராக்கெட்டுகளை ஏவி, அதன் மறைவில் ஆயுதமேந்திய பாராகிளைடர்கள் மூலம் அவர்கள் பறப்பதைக் காட்டுகிறது.

சில பாராகிளைடர்கள் குறைந்த உயரத்தில் பறப்பது போன்றும், மற்றவை உயரமாகப் பறப்பது போன்று இருந்தன. காசாவை சுற்றியுள்ள வான் பகுதியில் அவை மிகவும் தெளிவாகக் காணப்பட்டன.

இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஆயுதக்குழுவினர் வான்வழியாக ஊடுருவியதை இஸ்ரேலிய படைகளால் ஏன் கணிக்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை இஸ்ரேலிய ராணுவம் இன்னும் வெளிப்படையாகக் கூறவில்லை.

குறிப்பாக, பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
இஸ்ரேல்-பாலத்தீனம்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

இஸ்ரேல் ராணுவத்தால் ஏன் இந்தத் தாக்குதலைக் கண்டுபிடிக்க முடியவில்லை என இஸ்ரேல் ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

'அயர்ன் டோம்'

இஸ்ரேலியர்கள் நேரடியாக மனிதர்களை ரோந்துக்கு பயன்படுத்துவதை விட தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருந்தார்களோ?

'அயர்ன் டோம்' மற்றும் 'ரேடார்' போன்ற இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகள் பாராசூட் போன்ற சிறிய பறக்கும் பொருட்களைக் கணிக்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை என சில செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் ஆயுதக்குழு

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,

பாராசூட்கள் மிகவும் கவனிக்கத்தக்க வகையில், மக்கள் தங்கள் தொலைபேசிகளில் படம் பிடிக்கும் வகையில் இருந்தபோதும், ராணுவத்தால் ஏன் கணிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

பலமுனைத் தாக்குதல்

ஹமாஸ் 5,000 ராக்கெட்டுகளை ஏவுவதன் மூலம் தனது திடீர் தாக்குதலை ஆரம்பித்தது என்று அல்-கஸ்ஸாம் ஆயுதக்குழுவின் தளபதி முஹம்மது அல்-டீஃப் முதல் நாளில் அறிவித்தார்.

 
ஹமாஸ்

பட மூலாதாரம்,EPA

படக்குறிப்பு,

முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர்.

ராக்கெட் ஏவுதலை திசைமாற்றப் பயன்படுத்தி, ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் தரைவழியிலும், துப்பாக்கிப் படகுகளைப் பயன்படுத்தி கடல்வழியிலும், பாராசூட்டை பயன்படுத்தி வான்வழியிலும் ஊடுருவியுள்ளனர்.

ஊடக மற்றும் ராணுவ அறிக்கைகளின் படி, பாராசூட் தாக்குதல் மற்றும் அந்த பாராசூட்களால் வான் பாதுகாப்பு திறனை முறியடிக்கும் உத்தியே ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எல்லைக்குள் ஊடுருவுவதற்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்ததாகக் கூறுகிறார்கள்.

முதல் நாளில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை கடத்திச் சென்றனர். தற்போது, "அவர்களைக் கொலை செய்துவிடுவோம்" என்று மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.

 
ஹமாஸ் -இஸ்ரேல்
படக்குறிப்பு,

கடத்தப்பட்டவர்களை கொலை செய்துவிடுவோம் என ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

https://www.bbc.com/tamil/articles/crg1rl67nvqo

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இன்று இரவு 8 மணிக்கு பிரெஞ்சு ஜனாதிபதி இதற்கான பதிலை சொல்கிறாராம். 

இரெண்டாம் உலக யுத்ததின் முன்னும், அதன் போதும்…..கால்நடைகளை விட மோசமாக ஒட்டு மொத்த யூத இனமே நடத்தப்பட்டது.

ஹிட்லரால் மட்டும் அல்ல.

தன்னை நோக்கி படை எடுக்காமல் விட்டால் - யூதரை என்ன செய்தாலும் பரவாயில்லை என்ற நிலையை ஸ்டாலின் எடுத்தார். கிட்லருடன் உடன்படிக்கை செய்தார்.

யூதரை பற்றி எதுவும் சொல்லாமல், செக்கொஸ்லோவியாவின் Sudetenland ஐயும் எடுத்துக்கொள், ஆனால் அடுத்த எந்த ஐரோப்பிய நாட்டையும் பிடியாதே என கிட்லரோடு ஒப்பந்தம் போட்டார் பிரிட்டனின் சேம்பர்லின்.

பேர்ல்காபர் தாக்கப்படும் வரை - யூதர் கொலைகள் அமெரிக்காவை போரில் இறக்கவில்லை.

இப்படியா மில்லியன் கணக்கான யூதர்களின் சாவு, இழப்பு, வன்கொடுமைகள் போரின் சகல தரப்பாலும் கிள்ளுகீரையாகவே நடத்தப்பட்டது.

ஆனால் இன்று?

ஒரு யூத தாயின் கோரிக்கை பிரஞ்சு தொலைகாட்சியில் ஒரு மணி நேரம் போகிறது. ஜனாதிபதி விரைந்து பதில் கொடுக்கிறார்.

பாடம் புரிகிறதா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.