Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன்

எங்களுக்கு வாழ்க்கையில் சண்டை தெரியாது ஆனால் நீங்கள் எத்தனையோ சண்டை களங்களை பார்த்துள்ளீர்கள். உங்களை பார்க்கும்போது பெருமையாக உள்ளது என சிங்கப்பூர் ஜெனரல் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி பிரிகேடியர் பால்ராஜை நோக்கி கூறியதாக தமிழரசு கட்சியின் தலைவர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தமிழ் தேசிய கலை இலக்கிய பேரவைனுடைய ஏற்பாட்டில் எழுத்தாளர் நா. யோகேந்திர நாதன் எழுதிய 34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு எனும் நூல் கிளிநொச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் மகாதேவா ஆசிரமத்தின் தலைவர் சி மோகன பவன் உட்பட படைப்பாளிகள் அதிபர் ஆசிரியர் மற்றும் படைப்பாளிகள் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ந்தும் சிறீதரன் தெரிவிக்கையில்...

https://tamilwin.com/article/kilinochchi-book-release-event-1707921777

  • கருத்துக்கள உறவுகள்

திரு சிறீதரன் அவர்கள்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்பதை யாரேனும் அவருக்கு நினைவுபடுத்துதல் நன்று. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

திரு சிறீதரன் அவர்கள்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்பதை யாரேனும் அவருக்கு நினைவுபடுத்துதல் நன்று. 

☹️

தலைவர் என்பதுக்கு அர்த்தம் வேறாகி போவது நமது அரசியலில் வேறாகி போகும் அவ்வளவுக்கு நரியிலும் கேவலமான சுமத்திரன் இன்னும் அரசியலில் இருந்து எல்லாரையும் குழப்புவார் இந்த கருத்து வெட்டப்பட்டாலும் நடக்கபோவது அதுதான் இருந்து பாருங்கள் ஒவ்வொரு விடயத்திலும் ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்கி கொண்டு இருப்பார் சுமத்திரன் .

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

தலைவர் என்பதுக்கு அர்த்தம் வேறாகி போவது நமது அரசியலில் வேறாகி போகும் அவ்வளவுக்கு நரியிலும் கேவலமான சுமத்திரன் இன்னும் அரசியலில் இருந்து எல்லாரையும் குழப்புவார் இந்த கருத்து வெட்டப்பட்டாலும் நடக்கபோவது அதுதான் இருந்து பாருங்கள் ஒவ்வொரு விடயத்திலும் ஏதாவது ஒரு குழப்பத்தை உருவாக்கி கொண்டு இருப்பார் சுமத்திரன் .

சும் மிற்கும் சிறீதரனின் இந்தப் பேச்சுக்கும் என்ன தொடர்பு? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

சும் மிற்கும் சிறீதரனின் இந்தப் பேச்சுக்கும் என்ன தொடர்பு? 

🤨

உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல் கேட்பது ஒருவகை அல்லது சோதனைக்கு மட்டுமே படித்து பாஸ் பண்ணிய அறிவுக்கு விளங்கவில்லை என்று நேரடியாக கேளுங்க பதில் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

திரு சிறீதரன் அவர்கள்தான் தமிழரசுக் கட்சியின் தலைவர் என்பதை யாரேனும் அவருக்கு நினைவுபடுத்துதல் நன்று. 

☹️

அவர் மறந்தால் தானே நினைவு படுத்த முடியும்,..அவருக்கு அது நன்றாகவே தெரியும்   தமிழரசுக்கட்சியின்  தலைவர் என்ற படியால் தான் இப்படி பேசுகிறார்  

24 minutes ago, Kapithan said:

சும் மிற்கும் சிறீதரனின் இந்தப் பேச்சுக்கும் என்ன தொடர்பு? 

🤨

தமிழருக்கும்,.இலங்கை தமிழருக்கும் இந்த பேச்சுக்கும். தொடர்பு உண்டு  .... சும்.   தமிழர் என்றால் தொடர்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாதது போல் கேட்பது ஒருவகை அல்லது சோதனைக்கு மட்டுமே படித்து பாஸ் பண்ணிய அறிவுக்கு விளங்கவில்லை என்று நேரடியாக கேளுங்க பதில் வரும் .

 

40 minutes ago, Kandiah57 said:

அவர் மறந்தால் தானே நினைவு படுத்த முடியும்,..அவருக்கு அது நன்றாகவே தெரியும்   தமிழரசுக்கட்சியின்  தலைவர் என்ற படியால் தான் இப்படி பேசுகிறார்  

தமிழருக்கும்,.இலங்கை தமிழருக்கும் இந்த பேச்சுக்கும். தொடர்பு உண்டு  .... சும்.   தமிழர் என்றால் தொடர்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் 🤣

சாரி பிறதர்ஸ், 

உங்கள் மொக்கை கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்குச் நான் வரவில்லை. 

எதற்கெடுத்தாலும் என்னால் காலைத் தூக்க முடியாது. 

👋

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

 

சாரி பிறதர்ஸ், 

உங்கள் மொக்கை கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்குச் நான் வரவில்லை. 

எதற்கெடுத்தாலும் என்னால் காலைத் தூக்க முடியாது. 

👋

இந்த செய்தி பால்ராஜ் அண்ணய் சிங்கபூர் போய்வந்தபின் பெரிதாக உலாவியது அந்த செய்தியாவது உங்கள் சுமத்திரன் அவர்களுக்கு தெரியாது அந்த கதையாவது சுமத்துக்கு தெரியுமா என்று சொல்லவே srஆள்  சொல்லபட்டு உள்ளது .

ஏனென்றால் 2௦௦9 பின்தான் சம்த்திரன் தேசியபட்டியல் மூலம் சம்பந்தரால் உள் வாங்கபட்டார் அதாவது பின்கதவு அரசியல் மூலம் இனவெறி சகுனி ரணில் ன் ஆலோசனைப்படி அப்படி வந்தவருக்கு தமிழர் போராட்டத்தை பற்றி என்ன தெரியும் என்பது போல் இந்தக்கதை சொல்லியுள்ளார் ஆனால் தற்போது யார் தலவர் என்பது முக்கியமல்ல உண்மையில் தமிழ் இனத்தின் மேல் பற்று இருந்தால் சுமத்திரன் ஸ்ரீயின் இந்தகதைக்கு அடங்கி பாயும் இடத்தில் பாயணும் அது உங்கள் பணம் என்றால் பிணம் ஆளானும் வாயை துறப்பேன் எனும் சுமத்துரனால் முடியாது அவ்வளவுக்கு பண ஆசை பிடித்த மனிதன் .அங்குள்ள தமிழர் கதை அதோதான் .

***

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2024 at 18:45, ஏராளன் said:

சிங்கப்பூர் ஜெனரலை வியக்க வைத்த சமர்க்கள நாயகன்

இந்த வீடியோவை இன்று தான் கேட்டேன். அதில் உண்மையாகவே தமிழரசு கட்சி தலைவர் சொல்கிறார் 6:09 ல் புலி தளபதியோடு தான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அவர் தனக்கு சொன்னதாக சொல்கிறார் , சிங்கப்பூர் ஜெனரல் வந்து தனக்கு சலுட் அடித்ததாகவும் நாங்கள் சண்டையை பார்க்காதவர்கள் எங்களுக்கு வாழ்கையில் சண்டை தெரியாது நீங்கள் பல சண்டைகளங்களை பாத்தனிங்கள் உங்களை பார்க்க எங்களுக்கு பெருமையாகவும் உற்சாகமாகவும் உள்ளது என்று சிங்கப்பூர் ஜெனரல்  சொன்னதாக சிறிதரன் சொல்கிறார்.

இது உண்மையா ?  சிங்கப்பூர் புலிகளை அங்கீகரித்து இருந்ததா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

சிங்கப்பூர் புலிகளை அங்கீகரித்து

யார் சொன்னார் அங்கீகரித்தது என்று ..   ??? மீண்டும் மீண்டும் வடிவாக விளங்கி  வாசியுங்கள் 🤣. சிங்கப்பூரில் உள்ள தமிழர்களில் பெரும்பாலோர் புலிகளை புகழ்ந்து பேசியுள்ளார்கள்.  .. பேசி கொண்டுமிருக்கிறார்கள்.   ஆனால்  யாழ் களத்தில் ஒரு சிலர்  திட்டுவது உண்டு” 🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kandiah57 said:

யார் சொன்னார் அங்கீகரித்தது என்று ..   ??? மீண்டும் மீண்டும் வடிவாக விளங்கி  வாசியுங்கள் 🤣. சிங்கப்பூரில் உள்ள தமிழர்களில் பெரும்பாலோர் புலிகளை புகழ்ந்து பேசியுள்ளார்கள்.  .. பேசி கொண்டுமிருக்கிறார்கள்.   ஆனால்  யாழ் களத்தில் ஒரு சிலர்  திட்டுவது உண்டு” 🤣

Yov Kands 😡

அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

இதுதான்  கேள்வி? 

🤨

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kapithan said:

Yov Kands 😡

அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

இதுதான்  கேள்வி? 

🤨

என்ன கேள்வி?? பேச்சுவார்த்தை நடத்திய காலப்பகுதியில்   வெளிநாட்டு அமைச்சர்கள் கூட புலிகளின்  உயர்மட்ட.  தலைவர்களை தளபதிகளை  கண்டு கை கொடுத்து கதைத்து  உணவருத்தி களித்துள்ளார்கள்.   ஒரு தளபதி சந்திப்பா சாத்தியம் இல்லை    !

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

என்ன கேள்வி?? பேச்சுவார்த்தை நடத்திய காலப்பகுதியில்   வெளிநாட்டு அமைச்சர்கள் கூட புலிகளின்  உயர்மட்ட.  தலைவர்களை தளபதிகளை  கண்டு கை கொடுத்து கதைத்து  உணவருத்தி களித்துள்ளார்கள்.   ஒரு தளபதி சந்திப்பா சாத்தியம் இல்லை    !

🤨

சாரி கந்ஸ், உதுக்கு மேல நான்  க்தைக்கேல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

இதுதான்  கேள்வி? 

இதில் இருந்து தெளிவாகின்றது என்னவென்றால் தமிழரசு கட்சி தலைவர் சிறிதரன் இப்படியான கற்பனை கதைகள் நிறையவே சொல்லி மகிழ்விப்பார் 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

Yov Kands 😡

அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

இதுதான்  கேள்வி? 

🤨

@விளங்க நினைப்பவன்

2003 இல் பால்ராஐ் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அவர் திரும்பிவரும் போது கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் ஓர் சம்பவம் நடந்தது.

இணையத்தில் தேடிப்பாருங்கள் நிச்சயம் கிடைக்கும். 

@கிருபன் ஜீ தேடிப் பார்க்க முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

2003 இல் பால்ராஐ் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சூசை அவர்களின் சிங்கபூர் பயணம் தொடர்பாக உள்ளது.

https://eelamaravar.wordpress.com/2024/01/06/praba-soosai/

2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா?
இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது?
அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார்.

 

இதில் தளபதி பால்ராஜ்

https://www.tccnorway.no/2015/05/20/சமர்க்கள-நாயகன்-பிரிகேடி/

அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெரியவர் இங்கே தந்த தகவலை வைத்து சிங்கப்பூரில் புலி  இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடந்திருக்கின்றது சிங்கப்பூர் தளபதியும் பங்கு பற்றியிருக்கிறர்  என்று நினைத்துவிட்டேன்.சிங்கப்பூர் யாழ்கள உறவு அக்கினிஷன் வரும்போத கேட்க வேண்டும் என்று நினைத்தேன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

இதில் இருந்து தெளிவாகின்றது என்னவென்றால் தமிழரசு கட்சி தலைவர் சிறிதரன் இப்படியான கற்பனை கதைகள் நிறையவே சொல்லி மகிழ்விப்பார் 😂

தலையை எங்கு முட்டுவது என்று தெரியலை.................. முடியலை 😃

 

10 hours ago, Kapithan said:

அந்த ஆள் என்ன கேட்கிறார் என்று புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீரா? 

பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட புலிகளின்  தளபதி ஒருவரை,  ஒரு நாட்டின் இராணுவத் தளபதி சாதாரணமாகச்  சந்திப்பது என்பது சாத்தியமா ? 

அப்ப இவ்வளவு காலமும் நடந்தவை தெரியாமல் தான்  இங்கு கருத்துக்கள் வைத்து உள்ளீர் கள் ?

1 hour ago, MEERA said:

2003 இல் பால்ராஐ் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அவர் திரும்பிவரும் போது கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் ஓர் சம்பவம் நடந்தது.

இணையத்தில் தேடிப்பாருங்கள் நிச்சயம் கிடைக்கும். 

யாழிலே அந்த செய்தி இணைக்கபட்டு இருந்தது  பால்ராஜ் அண்ணா கட்டுநாயக்காவில் வந்து இறங்கும்போது பல சிங்கள படைத்தளபதிகள் அவரை நேரில் பார்க்க தள்ளுமுள்ளு பட்டு கொண்டிருந்தவை .(ஒரு 13 வருடம் தான் கண் மூடி முழிக்கையில் போயிட்டுது கடந்த காலம்களில் நடந்தவை தெரியாமலே கருத்துக்கள் வைப்பதுக்கு தில்தான் வேணும் )😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

தலையை எங்கு முட்டுவது என்று தெரியலை.................. முடியலை 😃

 

அப்ப இவ்வளவு காலமும் நடந்தவை தெரியாமல் தான்  இங்கு கருத்துக்கள் வைத்து உள்ளீர் கள் ?

யாழிலே அந்த செய்தி இணைக்கபட்டு இருந்தது  பால்ராஜ் அண்ணா கட்டுநாயக்காவில் வந்து இறங்கும்போது பல சிங்கள படைத்தளபதிகள் அவரை நேரில் பார்க்க தள்ளுமுள்ளு பட்டு கொண்டிருந்தவை .(ஒரு 13 வருடம் தான் கண் மூடி முழிக்கையில் போயிட்டுது கடந்த காலம்களில் நடந்தவை தெரியாமலே கருத்துக்கள் வைப்பதுக்கு தில்தான் வேணும் )😃

Singapore உம் Sri Lanka வும் அஆரம்ப எழுத்தில்  மட்டுமே ஒன்றாக இருப்பது தாங்கள் அறியாததா?

(தளபதி பால்ராஜ் USA வராததால் US தப்பித்தது  😏)

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், சிறிதரன் தன்னை தீவிர புலி ஆதரவாளராகக் காட்டிக் கொள்ள இது போன்ற நடந்ததா, இல்லையா என்று யாரும் நிறுவ இயலாத சம்பவங்களைப் பேசுகிறார் எனக் கருதுகிறேன்.

"இது உண்மையா இருக்கலாம் ,நம்புங்கோ!"  என்று suggestive ஆகத் தரப்பட்டிருக்கும் இணைப்புகளோ "வட்டுக் கோட்டைக்கு வழி கேட்டால் துட்டுக்கு ரண்டு கொட்டைப் பாக்கு" என்ற தோரணையில் இருக்கின்றன😂

  • கருத்துக்கள உறவுகள்

கொட்டைப் பாக்கு காரருக்கு ஆவர்மில்லா விடயத்தில் என்ன வேலை?

இணைப்பு தரப்பட்டது அவர்கள் சிங்கப்பூர் சென்றதை உறுதிப்படுத்த.

எங்கள் கண்முன்னே நடந்த சம்பவங்கள் பலவற்றை தற்போது பலர் மறுதலிக்க முனைவதால் இப்படி பல பூனைகளுக்கு மணி அடிக்க வேண்டியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, MEERA said:

கொட்டைப் பாக்கு காரருக்கு ஆவர்மில்லா விடயத்தில் என்ன வேலை?

இணைப்பு தரப்பட்டது அவர்கள் சிங்கப்பூர் சென்றதை உறுதிப்படுத்த.

எங்கள் கண்முன்னே நடந்த சம்பவங்கள் பலவற்றை தற்போது பலர் மறுதலிக்க முனைவதால் இப்படி பல பூனைகளுக்கு மணி அடிக்க வேண்டியுள்ளது.

சிங்கப்பூர் ஜெனரல் சொன்னது உண்மையாக நடந்ததா என்பதில் தான் ஆர்வமில்லை - இலகு தமிழில் சொல்லாமல் விட்டமைக்கு மன்னியுங்கள்😎!

பால்ராஜ் சிங்கப்பூர் சென்றதை யார் மறுதலித்தார்கள் இங்கே? எனவே தான் உங்கள் இணைப்பு தொடர்பற்றது என்றேன். இணைப்புக் கூட சூசை சிங்கப்பூர் சென்றது பற்றியது.

நிற்க: பால்ராஜ் அவர்களின் பெருமை பற்றிப் பேசும், நம்பிக்கையான, யாரும் மறுதலிக்க முடியாத  பல பதிவுகள் இருக்கின்றன. அவையே பால்ராஜின் பெருமை சொல்லப் போதுமானவையாக இருக்கும் போது இப்படி நிரூபணமில்லாத கிளிஷேக்களை வைத்து அரசியல் செய்வோர் நிச்சயம் பால்ராஜின் நினைவை மரியாதை தான் செய்கிறார்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

சிங்கப்பூர் ஜெனரல் சொன்னது உண்மையாக நடந்ததா என்பதில் தான் ஆர்வமில்லை - இலகு தமிழில் சொல்லாமல் விட்டமைக்கு மன்னியுங்கள்😎!

பால்ராஜ் சிங்கப்பூர் சென்றதை யார் மறுதலித்தார்கள் இங்கே? எனவே தான் உங்கள் இணைப்பு தொடர்பற்றது என்றேன். இணைப்புக் கூட சூசை சிங்கப்பூர் சென்றது பற்றியது.

நிற்க: பால்ராஜ் அவர்களின் பெருமை பற்றிப் பேசும், நம்பிக்கையான, யாரும் மறுதலிக்க முடியாத  பல பதிவுகள் இருக்கின்றன. அவையே பால்ராஜின் பெருமை சொல்லப் போதுமானவையாக இருக்கும் போது இப்படி நிரூபணமில்லாத கிளிஷேக்களை வைத்து அரசியல் செய்வோர் நிச்சயம் பால்ராஜின் நினைவை மரியாதை தான் செய்கிறார்கள்😂!

தம்பி Just in,

உங்களுக்காக இலகு தமிழில்

மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை மறுத்த காரணம் 

 

இரண்டாவது இணைப்பு உங்களின் கண்களில் தெரியவில்லை.

 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, MEERA said:

தம்பி Just in,

உங்களுக்காக இலகு தமிழில்

மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை மறுத்த காரணம் 

 

இரண்டாவது இணைப்பு உங்களின் கண்களில் தெரியவில்லை.

 

யார் மறுத்தார்கள் அப்படி சென்றதை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.