Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

நீங்கள் வேண்டும் என்றால் சிரியுங்கள்

ஆனால் குற்றவாளி என்பதற்கும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதற்குமான வித்தியாசத்தை மட்டுமே நான் குறிப்பிடுகிறேன். ஏனெனில் என் இனம் மீதான பொறுப்பு எனக்கிருக்கிறது. டொட். 

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை ஆதரிக்கும் நீங்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பதத்தை பாவித்ததன் மூலம் ஜனநாயக  உலகின் சிவில் சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்ததை வரவேற்கிறேன்.

ஆனால்,    ஜஸ்ரின் கூறியது போல்   இப்படியான சட்டங்கள் புலிகளுக்கு மட்டுமல்ல புலிகளால் படு கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.  

  • Replies 379
  • Views 35.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • nedukkalapoovan
    nedukkalapoovan

    அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவா

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    ஒருவருக்கு புலிகளை வசைபாடவும் அவர்களது ஜனநாயக விரோத செயற்பாடுகளை வாரியிறைக்கவும் வடிகால் ஒன்றும் கிடைத்த மகிழ்ச்சி. இன்னும் இருவருக்கு புலியெதிர்ப்பு என்பதற்கூடாக உள்நுழைந்து பேரினவாதத்தின் திட்டத்தை

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

சிறிய சந்தேகம் வந்தாலே துப்பாக்கி குண்டு மூலம் தீர்ப்பெழுதுவதை ஆதரிக்கும் நீங்கள் இப்போது குற்றம் சாட்டப்பட்டவர் என்ற பதத்தை பாவித்ததன் மூலம் ஜனநாயக  உலகின் சிவில் சட்டங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு வந்ததை வரவேற்கிறேன்.

ஆனால்,    ஜஸ்ரின் கூறியது போல்   இப்படியான சட்டங்கள் புலிகளுக்கு மட்டுமல்ல புலிகளால் படு கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்பதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்வீர்கள்.  

சட்டங்களை உயிர் உள்ளவர்களுக்கு தான் பயன்படும் பயன்படுத்த முடியும்  இறந்தவர்களுக்கு இல்லை   உலகில் எந்தவொரு போராட்டமும்  பிழையின்றி நடந்நது இல்லை     5% .....10% பிழைகள் புறக்கணிக்கலாம்  இது போராட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும். பொருந்தும்  அதாவது 100க்கு 100% சரியாக யாரும் நடத்தது  சரித்திரத்தில் இல்லை  எல்லாம் சரியாக செய்தவனும் இல்லை எல்லாம் பிழையாக செய்தவனுமில்லை  அழிக்கப்பட்ட புலிகளை பற்றி  இன்று களத்தில் இல்லாத புலிகளை பற்றி  கதைப்பது விழலுக்கு இறைத்த நீராகும்.  ஒரு பிரயோஜனம் அற்ற செயல்  வீண் வேலை  தேவையற்றதும்கூட  150000. மக்களை கொன்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள்  அவர்கள் மீது தான் சட்டம் பாயும்  ஆனால் இது பற்றி எவரும் ஒரு வார்த்தை பேசுவது இல்லை   ஒருக்கால். பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம்  முடியாவே முடியாது  ஒருபோதும் ஒருவராலும் முடியாது  

நாங்கள் பிழையை சொல்லுகிறோம்..    ஏனெனில் இனி திருந்தி. பிழையின்றி போராட்டம் நடத்துவோம்   இது ஒரு உலக மாகா புலுடா .........30 ஆண்டுகள் போரில்  சில பிழைகள் இருக்கலாம்    நான் சவால் விடுகிறேன்  30  மணித்தியாலத்துக்கு பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம்  ........உங்களால் முடியாது    அடுத்தவனுக்கு.   எப்படி சொல்லி கொடுக்க முடியும் ??  நான் புலி அல்லது அரசாங்கம் ஆதரவாளன் இல்லை   🙏

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, kalyani said:

எனது -1 ஏனைய கருத்தாளர்களை மட்டம் தட்டி எழுதுவதற்கு. 

😎ஓ யெஸ்..முன்னுக்குப் பின் முரணாக, தங்களுக்கே சிரிப்பு வரவைக்கும் விளக்கங்களை தந்து கொண்டிருக்கிறார்கள்..இவர்களை வெளியே இருந்து தான் ஒருவர் "மட்டந் தட்ட" வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சட்டங்களை உயிர் உள்ளவர்களுக்கு தான் பயன்படும் பயன்படுத்த முடியும்  இறந்தவர்களுக்கு இல்லை   உலகில் எந்தவொரு போராட்டமும்  பிழையின்றி நடந்நது இல்லை     5% .....10% பிழைகள் புறக்கணிக்கலாம்  இது போராட்டத்துக்கு மட்டுமின்றி வாழ்க்கையில் அனைத்து விடயங்களுக்கும். பொருந்தும்  அதாவது 100க்கு 100% சரியாக யாரும் நடத்தது  சரித்திரத்தில் இல்லை  எல்லாம் சரியாக செய்தவனும் இல்லை எல்லாம் பிழையாக செய்தவனுமில்லை  அழிக்கப்பட்ட புலிகளை பற்றி  இன்று களத்தில் இல்லாத புலிகளை பற்றி  கதைப்பது விழலுக்கு இறைத்த நீராகும்.  ஒரு பிரயோஜனம் அற்ற செயல்  வீண் வேலை  தேவையற்றதும்கூட  150000. மக்களை கொன்றவர்கள் உயிர் வாழ்கிறார்கள்  அவர்கள் மீது தான் சட்டம் பாயும்  ஆனால் இது பற்றி எவரும் ஒரு வார்த்தை பேசுவது இல்லை   ஒருக்கால். பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம்  முடியாவே முடியாது  ஒருபோதும் ஒருவராலும் முடியாது  

நாங்கள் பிழையை சொல்லுகிறோம்..    ஏனெனில் இனி திருந்தி. பிழையின்றி போராட்டம் நடத்துவோம்   இது ஒரு உலக மாகா புலுடா .........30 ஆண்டுகள் போரில்  சில பிழைகள் இருக்கலாம்    நான் சவால் விடுகிறேன்  30  மணித்தியாலத்துக்கு பிழையின்றி போராடி காட்டுங்கள் பார்ப்போம்  ........உங்களால் முடியாது    அடுத்தவனுக்கு.   எப்படி சொல்லி கொடுக்க முடியும் ??  நான் புலி அல்லது அரசாங்கம் ஆதரவாளன் இல்லை   🙏

கந்தையர் இங்கு எம்மால் பேசப்பட்ட விடயங்கள் எல்லாம் நடைபெற்ற உண்மைச்சம்பவங்களே. இவை எல்லாம் ஏற்கனவே அனைத்துலக நிறுவனங்களால்  ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  இலங்கை அரசு செய்த படுகொலைகளும் அவர்கள் விரும்பாவிட்டாலும் ஆவணப்படுத்தப்பட்டே உள்ளன.    நீங்கள் வேண்டுமானால் இவற்றைப் பொய் என்று. நிரூபிக்கலாமேயொழிய இவற்றை பேசக்கூடாது என்று தடை போட உங்களுக்கு உரிமை இல்லை.

 இவை எல்லாம் நீங்கள் கூறியது போல் சிறிய தவறுகள் அல்ல.  இங்கு பேசப்பட்டது நடந்தவற்றில் வெறும் 5% தான் இருக்கும். இதற்கே இப்படி கொந்தளிக்கின்றீர்கள் என்றால் 30 வருடங்களாக நடந்த அனைத்தையும. பேசினால் வெடித்து சிதறிவிடுவீர்கள் போல. 😂 நீங்கள் விரும்பினால் அவை ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பேச நான் தயார்.  அப்போது கூறுங்கள் சிறிய பிழைகளா அல்லது எமது போராட்டத்தை தோற்கடிக்க காரணமான தவறுகளா என்பதை. 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, island said:

😂 நீங்கள் விரும்பினால் அவை ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் பேச நான் தயார்.  அப்போது கூறுங்கள் சிறிய பிழைகளா அல்லது எமது போராட்டத்தை தோற்கடிக்க காரணமான தவறுகளா என்பதை.

நான் விரும்பியா,..எழுதுகிறீர்கள்?? இல்லையே?? உங்கள் விருப்பம் போல் எழுதலாம்   ஒரு பிழையின்றி போராடி காட்டுங்கள்,பார்ப்போம் ..  இந்தியாப் படைகளை எதிர்த்தும்  போராடுங்கள்   தரை. கடல். ஆகாய படைகளை கொண்டும். போராடுங்கள்     தொடர்ந்து ஒரு 40 ஆண்டுகள் போராடுங்கள்    உங்களை எதிரியிடம். காட்டி கொடுப்பவர்களை. அணைத்து வைத்துக்கொண்டு போராடுங்கள்   உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும். எந்தவித சம்பளமுமின்றி  சொந்த உயிரை கொடுத்து போராட்டங்களை இரவு பகலா செய்தவர்கள். உரிமைக்காக    

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Kandiah57 said:

நான் விரும்பியா,..எழுதுகிறீர்கள்?? இல்லையே?? உங்கள் விருப்பம் போல் எழுதலாம்   ஒரு பிழையின்றி போராடி காட்டுங்கள்,பார்ப்போம் ..  இந்தியாப் படைகளை எதிர்த்தும்  போராடுங்கள்   தரை. கடல். ஆகாய படைகளை கொண்டும். போராடுங்கள்     தொடர்ந்து ஒரு 40 ஆண்டுகள் போராடுங்கள்    உங்களை எதிரியிடம். காட்டி கொடுப்பவர்களை. அணைத்து வைத்துக்கொண்டு போராடுங்கள்   உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ளட்டும். எந்தவித சம்பளமுமின்றி  சொந்த உயிரை கொடுத்து போராட்டங்களை இரவு பகலா செய்தவர்கள். உரிமைக்காக    

ஆயுதப் போராட்டம் எந்த நன்மைகளையும் தராது  அழிவுகளை மட்டுமே தந்தது என்பதைக்  கண்முன்னே பார்தத பிறகும் இனியும் அப்படி போராடுவோம் என்று சொல்பவன் புறப்படுபவன் ஒரு லூசனக தான் இருக்கமுடியும் கந்தையர். 😂   

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான உறவுகள் அனைவருக்கும் வணக்கம்

நான் யாழுக்கு வர ஒரு தூர நோக்குண்டு. அதற்கு முடிந்தவரை அனைவரையும் அரவணைத்து சொல்லணும். ஆனால் அதற்கான பரிசுகள் புலிகள் மீதான சேறப்புத்தான் என்றால் அது நான் மாவீரர்களுக்கு செய்யும் அநியாயமாகி விடும். 

இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு.

குடும்பம் மற்றும் உறவுகளுக்கு சில இழப்புகள் வருத்தம் தரும் என்பதைவிட அது ஒரு இனத்தையே அழித்து விடும் என்றே நான் பார்ப்பதுண்டு. இந்த களை பிடுங்குதலுக்கு என் குடும்பமும் இலக்காகி இருக்கிறது. புலிகள் அப்படி தான் தன் குடும்பத்தையே பலி கொடுத்தும் புலிகளை பாதுகாத்த பலரை எனக்கு தெரியும். அதேபோல் தன் குடும்பமே அழியப் போகிறது என்று தெரிந்தும் தனக்கு கொடுக்கப்பட்ட இலக்கை நோக்கி பயணித்த புலிகள் பல நூறு.

மற்றும் படி உடம்பில் ஏதாவது ஒரு உறுப்பால் முழு உயிருக்கும் ஆபத்து வரும் என்றால் அதை எடுத்து விடுவதற்கு இன்றும் ஆதரவானவன். 

எனவே தயவு செய்து கடந்த காலங்களை கிளறி சேறடிக்காது இன்று என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள். எம்மால் முடிந்ததை செய்யலாம்.  நன்றி. 

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

இந்த திரியில் உண்மையே தேடுதல் என்ற பெயரில் சில சந்தேகக்கொலைகளை புலிகள் தான் என்றும் அவர்களால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. (அமிர்தலிங்கம் கதிர்காமர் நீலன் மற்றும் ராஜீவ் காந்தி உட்பட) எனக்கு இவற்றில் சந்தேகங்கள் உண்டு.

 

வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா?

முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன்.

இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை  மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது.

அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி?

முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ  தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும்.

இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன:
1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும்.

2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது.

எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.      

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Justin said:

வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா?

முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன்.

இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை  மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது.

அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி?

முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ  தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும்.

இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன:
1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும்.

2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது.

எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.      

 

1- நான் புலிகள் தவறே செய்யவில்லை என்று எங்கும் சொல்லவில்லை. 

2 - எனக்கு சிலவற்றில் சந்தேகம் இருக்கிறது என்றும் எழுதியுள்ளேன். 

மற்றும் படி மேலே நீங்கள் எழுதிய பலவற்றுடன் முரண்பாடு இல்லை. 

நன்றி ஜயா நேரத்திற்கு. (உங்களின் நேரத்தின் பெறுமதி அறிவேன். )

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும்

மிகச் சிறந்த கருத்து ஜஸ்ரின்.  இக்கொலைகளைச் செய்த புலிகள் இல்லாத போது இவற்றை பேசுவதால் என்ன பிரயோசனம் என்று ஒரு உறவு கேட்டார். இந்த அரசியல்  கொலைகள் தேசியப் பெருமை என்று எதிர்காலத்தில் இதனை முன்மாதிரியாக கொண்டு நடத்தப்படலாம் என்பது மிக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமே. எனவே தான் இவை அத்தனையும் எமது வரலாற்றின் தவறான பக்கங்கள் என்பதை எமது அடுத்த தலைமுறைக்கு   கூறவேண்டிய அவசியம் உள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, island said:

நல்ல புரட்சிகரமான வசனங்கள் வசி.  1983 ம் ஆண்டின் பின்னர் வந்த காலப்பகுதியில் இப்படியான புரட்சிகரமான வசனங்களைக் கூறிப் பாடசாலைகளிலும் சன சமுக நிலையங்களிலும் இயக்கங்களுக்கு ஆள்ச் சேர்த்தார்கள். இப்படியான வசனங்களை நம்பி இயக்கங்களில் சேர்ந்த பல இளைஞர்களில் பலர் சக இயக்கங்களாலேயோ சொந்த இயக்கத்தாலேயோ வேட்டையாடப்பட  இயக்கங்களில் சேராது தயக்கம் காட்டிய இளைஞர்களில் பலர் இன்று ஊரிலும் ஐரோப்பாவிலும் சுக போகமாக பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் இனிதே வாழ்கிறார்கள் என்பதே ஜதார்த்தம். 

உண்மை ...அதே நேரம் இயக்கங்களில் சேர்ந்து இயக்க தலைவர்மாருக்கும் ,தளபதிமாருக்கும் டிமிக்கி விட்டு புலம்பெயர்ந்து அதே புரட்சிவசனம் பேசி  கதை, கட்டுரை எழுதுபவர்களும் உண்டு என்பதை குறிப்பிட்  மறந்துவிட்டீர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

வணக்கம் விசுகர், இதற்கு நானும் பதில் தரலாமா?

முதலில், கடந்த காலத் தவறுகளை 10 பக்கத்திற்குப் பேச வேண்டிய தேவையை உங்கள் மேற்கருத்தே தோற்றுவிக்கிறது என நினைக்கிறேன்.

இங்கே எழுதும், வாசகர்களாக இருக்கும் மிகப்பெரும்பாலானோர் தாயகத்தில் பிறந்து வளர்ந்து அன்றாடச் செய்திகளை உள்ளூர் பத்திரிகைகளிலும், சில சம்பவங்களில் ஈடுபட்டவர்களோடு உறவாடியும் தகவல் அறிந்தவர்கள். இவர்களையெல்லாம் முட்டாள்களாக மாற்றும் வகையில் "தற்கொலைத் தாக்குதல்களை புலிகளை விட வேறு யாரோ செய்து புலிகளின் தலையில் போட்டிருக்கலாம்" என்று நீங்கள் ஒரு புது திசையில் கதையை ஆரம்பிப்பது இது தொடர்ந்து பேசப்படவே வழி வகுக்கும். இத்தகைய ஆதாரங்களை தலைகீழாக மாற்றி விட்டு, கற்பனைக் கதையை வைத்து சில தவறுகளை  மறைக்கும் நிலைக்கு நீங்கள் வந்திருப்பது கவலைக்குரியது.

அப்படியானால் என்ன தான் தவறுகளைப் பேசாமல் விட வழி?

முதலில், புலிகளோ எந்த ஆயுத அமைப்போ  தவறுகளே விடாதோர் என்ற கற்பிதத்தை நம்புவதையும், பரப்புவதையும் நாம் நிறுத்த வேண்டும். தவறுகள் - நீலன் கொலை போன்றவை- நடந்தன. இதை ஏற்றுக் கொண்டு ஒரு வசனத்தில் முடித்து விட்டால் இது மீள மீள பேசப்படுவது குறையும்.

இல்லா விட்டால் இரண்டு தீமைகள் காத்திருக்கின்றன:
1. நியாயப் படுத்தப் பட்ட அரசியல் கொலைகளை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, தற்போது தீவிரமாக வெறுக்கப் படும் தமிழ் அரசியல்வாதிகள் மீது வன்முறை ஏவப்படலாம். இதை செய்ய பலர் தேவையில்லை, உசுப்பேற்றப் பட்ட ஒரு முட்டாப்பீசே ஒரு கொலையைச் செய்யப் போதும்.

2. நமக்குள் பிரிவினைகள் அதிகமாகும். என்னைப் பொறுத்தவரை, அரசியல் படுகொலைகளை தேசிய உணர்வோடு ஏற்றுக் கொள்ளும், பெருமை கொள்ளும் ஒரு தமிழ் அணியோடு எந்த திட்டத்திலும் சேர்ந்து நிற்க மாட்டேன். என்னைப் போன்ற பல ஆயிரம் புல, தாயக தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்கு விளங்குகிறது.

எனவே, முன்னோக்கிப் பாருங்கள், தீமைகளை எப்படிக் குறைப்பதென்று யோசியுங்கள். பழம் பெருமை, பக்தி, சதிக்கதைகள் இவற்றால் என்ன நன்மைகள் விளையும் என உங்களையே கேட்டுப் பதில் காணுங்கள்🙏.      

இதைத் தான் நாங்களும் சொல்லுகிறோம் புலிகளின் ,மற்றும் ஏனைய இயக்கங்களின் கொலைகளை மீண்டும் மீண்டும் பேசாமல் தொடர்வோம் எமது நிலத்தையும் மக்களையும் காப்பாற்றக்கூடிய செயல்களில்....

இன்று பல நல்ல திட்டங்களை தனிநபர்கள் முன் வந்து செய்கின்றனர் ...யாரும் எதிர் பார்க்காத திட்டங்கள் ..பொதுவாக யாழ்ப்பாணத்தார் "நப்பி" மற்றவர்களுக்கு ஒன்று கொடுக்க மாட்டான் என்ற கருத்து பரவலாக இருந்தது ஆனால் அந்த கருத்தை பொய்யாக்கும்வகையில் பல யாழ்ப்பாணத்தவர்கள் செயல் படுகின்றனர் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2024 at 08:40, கிருபன் said:

நீலன் திருச்செல்வம் ஒரு சிறந்த சட்டவாளர், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி கற்ற புலமை மிகுந்தவர்.  தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்படாமல் பாராளுமன்ற உறுப்பினராக 83 இலும் பின்னர் 94 இலும் இருந்தவர். அடிப்படையில் அவர் ஒரு கறுவாத் தோட்டத்து உயர்குழாத்தினர்.

அவர் செய்த நன்மை என்னவென்றால், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஜீ.எல். பீரீஸுடன் சேர்ந்து ஒரு தீர்வுப்பொதியைத் தயாரித்தவர். இப்பொதி இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணங்களுடன் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கும் திட்டங்களைக் கொண்டிருந்தது. 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு மேலே சென்று ஒரு தீர்வை முன்வைத்தது. ஆக, சமஸ்டி என்று எழுத்தில் சொல்லாமல் ஒரு சமஸ்டித் தீர்வை முன்வைத்தது. இந்தப் பொதியை சிங்கள கடும்போக்கினரும், விடுதலைப் புலிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தப் பொதியை தயாரித்தமையால்தான் அவர் “துரோகி” என அடைமொழி கொடுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும்படி அவர் எவரையும் காட்டிக்கொடுத்ததாக வரலாறு இல்லை. அதாவது, அவர் படுகொலை செய்யப்படுமளவிற்கு ஒரு தீமைகளும் செய்யவில்லை.

இந்தப் பொதி தயாரிக்கப்ப்பட்டு 30 வருடங்களின் பின்னர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தமூடாக வந்த (13ஆவது திருத்தச்சட்டம்) நீர்த்துப்போன, அதிகாரம் இல்லாத, வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு மேலாக இருக்காது.

சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய

https://noolaham.net/project/36/3532/3532.pdf

எப்படி இருக்கும் இவர் ஜி எல் பிரிசுடன் சேர்ந்து தயாரித்த தீர்வுப் பொதி அது எப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டது ? அதனது பிரதி ஏதாவது யாரிடமாவது இருக்குதா?

அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா?

ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா?

சுத்தமான பொய்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஒரு தடவை சிஙகள விவசாய அமைச்சர் ஒருவர் கிளிநொச்சிக்கு வந்த போது ஒருவர் மைச்சரை கவர்வதற்காக ஒரு ஆர்வக்கோளாறில் அமைச்சருக்கு வெங்காயத்தில் மாலை செய்து போட்டாராம் அமைச்சர் அதனை மறக்காமல் தான் பேசும் போது ஆர்வக்கோளாறில் தமிழில் வெங்காயம் போட்ட நபரை குறிப்பிடுவதாக எண்ணி "வெங்காயங் போட்ட மாலை" என தனக்கு தெரியாத மொழியினை கேட்டு பிழையாக கூற மக்கள் சிரித்தார்களாம், வெங்காயம் மாலை போட்டவருக்கு அவமானமாகிவிட்டது.

இப்ப எனது நிலை வெங்காய மாலை போட்டவரின் நிலை.

6 minutes ago, Elugnajiru said:

அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா?

 

இங்கிலாந்தில் உள்ள குவேக்கர்ஸ் எனும் அமைப்பின் உதவியினுடனான திட்டம் அது, அது உண்மை என அப்போது அவர்களும் உறுதி அழித்ததாக நினைவில் உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Elugnajiru said:

ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா?

சுத்தமான பொய்


சந்திரிக்கா காலத்து பொதியைப் பற்றி அறிய பக்கம் 4-6 படிக்கவும் (ஆங்கிலத்தில் உள்ளது)

https://noolaham.net/project/36/3532/3532.pdf

  • கருத்துக்கள உறவுகள்

https://www.quaker.org.uk/

இணையத்தில் குவேக்கர் என தேடிய போது இந்த வலைப்பகுதி வந்தது, இவர்களா எனத்தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

எப்படி இருக்கும் இவர் ஜி எல் பிரிசுடன் சேர்ந்து தயாரித்த தீர்வுப் பொதி அது எப்போது பொதுவெளியில் வெளியிடப்பட்டது ? அதனது பிரதி ஏதாவது யாரிடமாவது இருக்குதா?

அல்லது கிட்டர் சுவிஸில இருந்து கப்பலில் வரும்போது ஒரு சமாதனப்பொதியைக் கொண்டுவந்ததாக புலிகள் சொன்னார்களே அதுபோல பொய் புளுகா?

ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா?

சுத்தமான பொய்

விபு க்களினால் அறிவிக்கப்பட்ட ஒரு விடயத்தை என்ன அடிப்படையில் பொய் என்கிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, vasee said:

https://www.quaker.org.uk/

இணையத்தில் குவேக்கர் என தேடிய போது இந்த வலைப்பகுதி வந்தது, இவர்களா எனத்தெரியவில்லை.

Joseph Elder

1930-
 

Joseph Elder is an academic and lifelong Quaker peace activist with experience of mediating conflicts in Kashmir, Vietnam, Korea and Sri Lanka.  He is a currently professor of Sociology and Languages and Cultures of Asia at the University of Wisconsin, USA.

Elder was born in a Kurdish region of Iran, the son of a Presbyterian missionary, and lived in Tehran until he was 15.  While a student at Oberlin College, Ohio, during the Korean War (1950-53), he told his draft board that he would go to jail rather than be inducted. Shortly after, he became a Quaker.

In 1966, along with Adam Curle, he was part of a Quaker delegation who attempted reconciliation between Pakistan and India following the war in Kashmir.  By listening carefully to each side and not imposing their own opinions, they were able to present the views of each party in the conflict to the other as though from the standpoint of an insider – an approach Quakers call ‘balanced partiality’.

In 1969, Elder travelled twice to Hanoi on behalf of theAmerican Friends Service Committee to assess medical needs and to deliver medical supplies to civilians in North Vietnam. As well as assessing the need for medical supplies, he was able to convey messages from North Vietnam to the government in Washington.

In 1984, during the civil war between the Tamil minority and the nationalist Sinhalese government in Sri Lanka, Elder was sent as one of the two-man Quaker delegation to determine whether Quaker involvement in reconciliation efforts was feasible.  They had no prior involvement or contacts in the country and were effectively starting from scratch. Although, on the surface, the two groups were highly polarised, Elder believed that, on the basis of the initial contacts, that Quakers could play a useful role as “message carriers” between the two groups.

During 1985, Elder and his Quaker colleague travelled repeatedly to Sri Lanka and India to meet with leaders on both sides, on missions funded by QPSW (Quaker Peace and Social Witness) in London. Through a series of private meetings, they were able to sow the seeds for the formal mediation conference convened by the Indian government in Bhutan later that year.

Elder imposed two key conditions for Quaker involvement.  First, nothing about the Quaker role should be revealed publicly.  Secondly, if either party felt their role was no longer useful, the Quakers would withdraw.  These conditions emphasised that the Quakers had no overriding interests in the conflict and that control of the negotiations remained in the hands of the disputing parties.

In 1989, Elder found himself once again in the role of message carrier, this time between the North Korean government in Pyongyang and the US government in Washington.

In the 1990s, Elder helped to found Madison Quakers, Inc. which has built a peace park and a school in My Lai (scene of a massacre during the Vietnam war) , and also provides micro-loans to village and ethnic women in Vietnam.

In 1995, Elder became a founder member of the International Committee for the Peace Council, a group of religious and spiritual individuals who are internationally known and respected.  They come together to demonstrate that peace is possible, and that effective collaboration between religions to make peace is also possible.

In 2009, he received a Lifetime Achievement Award for Peacemaking from Wisconsin Network for Peace and Justice.

Recently, his experience of living in Iran and his long record of studying religion and society in South Asia have led to his views being sought on the tensions and conflict in Iran, Iraq and Afghanistan.

Speaking of the role of the mediator, Elder said:

“We have no power. We could easily be dismissed as do-gooders who should be back home minding our own business. The fact that we are taken as seriously… is a never-ending miracle, which I have only been able to explain in the context of our being able to provide a service which apparently is often not available through any other channel. So to this extent we have the power of the powerless of doing something which they can't do and they have no vehicle for doing.”
https://www.quakersintheworld.org/quakers-in-action/201/Joseph-Elder

Quakers have a long history of quiet assistance in peace processes in areas as diverse as Sri Lanka, Northern Ireland, Israel-Palestine and South Africa.
https://www.quaker.org.uk/our-work/international-work/conciliation-work

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு     போன்றன  இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு”   அதற்கு முதல்  அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை   இன்று வரை பொதி  தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை      நன்றி வணக்கம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Kandiah57 said:

எந்தவொரு பொதியும்,....தீர்வு, . வரைவு     போன்றன  இலங்கை பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவேண்டும். அப்புறம் நடைமுறையில் வரும் சந்தர்ப்பம். உண்டு”   அதற்கு முதல்  அவை பொதியுமல்ல. தீர்வுமல்ல வரைவுமில்லை .......பாராளுமன்றம் அங்கீகரிக்க முதல். கதைப்பது வீண் வேலை   இன்று வரை பொதி  தீர்வு வரைவு என்று எவையுமோ இலங்கை பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை      நன்றி வணக்கம் 🙏

உங்கள் கருத்தின்படி நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படாத எதுவுமே பொதியுமல்ல தீர்வுமல்ல.  சரி அப்படியே வைத்துக்கொண்டாலும்,  நடைமுறைப்படுத்த எந்த முயற்சியுமே எடுக்கப்படாத ஒரு விடயத்திற்கு ஏன் மரண தண்டனை”? 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

Joseph Elder

1930-
 

Joseph Elder is an academic and lifelong Quaker peace activist with experience of mediating conflicts in Kashmir, Vietnam, Korea and Sri Lanka.  He is a currently professor of Sociology and Languages and Cultures of Asia at the University of Wisconsin, USA.

Elder was born in a Kurdish region of Iran, the son of a Presbyterian missionary, and lived in Tehran until he was 15.  While a student at Oberlin College, Ohio, during the Korean War (1950-53), he told his draft board that he would go to jail rather than be inducted. Shortly after, he became a Quaker.

In 1966, along with Adam Curle, he was part of a Quaker delegation who attempted reconciliation between Pakistan and India following the war in Kashmir.  By listening carefully to each side and not imposing their own opinions, they were able to present the views of each party in the conflict to the other as though from the standpoint of an insider – an approach Quakers call ‘balanced partiality’.

In 1969, Elder travelled twice to Hanoi on behalf of theAmerican Friends Service Committee to assess medical needs and to deliver medical supplies to civilians in North Vietnam. As well as assessing the need for medical supplies, he was able to convey messages from North Vietnam to the government in Washington.

In 1984, during the civil war between the Tamil minority and the nationalist Sinhalese government in Sri Lanka, Elder was sent as one of the two-man Quaker delegation to determine whether Quaker involvement in reconciliation efforts was feasible.  They had no prior involvement or contacts in the country and were effectively starting from scratch. Although, on the surface, the two groups were highly polarised, Elder believed that, on the basis of the initial contacts, that Quakers could play a useful role as “message carriers” between the two groups.

During 1985, Elder and his Quaker colleague travelled repeatedly to Sri Lanka and India to meet with leaders on both sides, on missions funded by QPSW (Quaker Peace and Social Witness) in London. Through a series of private meetings, they were able to sow the seeds for the formal mediation conference convened by the Indian government in Bhutan later that year.

Elder imposed two key conditions for Quaker involvement.  First, nothing about the Quaker role should be revealed publicly.  Secondly, if either party felt their role was no longer useful, the Quakers would withdraw.  These conditions emphasised that the Quakers had no overriding interests in the conflict and that control of the negotiations remained in the hands of the disputing parties.

In 1989, Elder found himself once again in the role of message carrier, this time between the North Korean government in Pyongyang and the US government in Washington.

In the 1990s, Elder helped to found Madison Quakers, Inc. which has built a peace park and a school in My Lai (scene of a massacre during the Vietnam war) , and also provides micro-loans to village and ethnic women in Vietnam.

In 1995, Elder became a founder member of the International Committee for the Peace Council, a group of religious and spiritual individuals who are internationally known and respected.  They come together to demonstrate that peace is possible, and that effective collaboration between religions to make peace is also possible.

In 2009, he received a Lifetime Achievement Award for Peacemaking from Wisconsin Network for Peace and Justice.

Recently, his experience of living in Iran and his long record of studying religion and society in South Asia have led to his views being sought on the tensions and conflict in Iran, Iraq and Afghanistan.

Speaking of the role of the mediator, Elder said:

“We have no power. We could easily be dismissed as do-gooders who should be back home minding our own business. The fact that we are taken as seriously… is a never-ending miracle, which I have only been able to explain in the context of our being able to provide a service which apparently is often not available through any other channel. So to this extent we have the power of the powerless of doing something which they can't do and they have no vehicle for doing.”
https://www.quakersintheworld.org/quakers-in-action/201/Joseph-Elder

Quakers have a long history of quiet assistance in peace processes in areas as diverse as Sri Lanka, Northern Ireland, Israel-Palestine and South Africa.
https://www.quaker.org.uk/our-work/international-work/conciliation-work

நன்றி கபிதான்.

34 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தின்படி நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படாத எதுவுமே பொதியுமல்ல தீர்வுமல்ல.  சரி அப்படியே வைத்துக்கொண்டாலும்,  நடைமுறைப்படுத்த எந்த முயற்சியுமே எடுக்கப்படாத ஒரு விடயத்திற்கு ஏன் மரண தண்டனை”? 

 

 

தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை).

இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன்.

இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து  அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன்.

இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது.

அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்தின்படி நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படாத எதுவுமே பொதியுமல்ல தீர்வுமல்ல.  சரி அப்படியே வைத்துக்கொண்டாலும்,  நடைமுறைப்படுத்த எந்த முயற்சியுமே எடுக்கப்படாத ஒரு விடயத்திற்கு ஏன் மரண தண்டனை”? 

 

 

நல்ல கேள்வி,..காரணம் எனக்கு தெரியாது இருந்தாலும் மரணத்தண்டனை  பிழை என்று நான் சொல்லப் போவதில்லை,.....காரணம் 1980 ஆண்டிலிருந்து  இப்படி பல மரணத் தண்டனைகள  நிறைவேற்றப்பட்டுள்ளது அவை எவற்றையும். நான் பிழை என்று சொன்னதில்லை”  அதற்கான விளக்கங்களை எழுதி வைக்கப்பட்டிருந்தது  அவை சரியான விளக்கங்கள்  அனேகமாக காட்டி கொடுப்புகள் ...இலங்கை இராணுவத்துக்கு தகவல்கள் வழங்கியது  

எனது பேரனார்  பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றவர்  நன்றாக ஆங்கிலம் சிங்களம் பேசுவார்  அவருக்கு புலிகளை துளியும். பிடிக்காது      இந்தியா இராணுவம் வந்திருந்த சமயம் 1987 ஆண்டு    வலிய. இந்தியா இராணுவ முகாமுக்கு சென்று  புலிகளின். நகர்வுகள் பற்றி தகவல்கள் வழங்கி வந்தார்   சிறிது காலத்தில் புலிகளுக்கு தெரிந்து விட்டது   அவருக்கு கொடுத்த தண்டனை மரண தண்டனை  இவருக்கு ஏன் இந்த வேலை என்று தான் நாங்கள் கதைத்தோம்.    

நீலனுக்கும் அமிருக்கும்.  மட்டும் தண்டனை வழங்கவில்லை  பலருக்கும் வழங்கப்பட்டுள்ளன  நீலனும் அமிரும. பாராளுமன்ற உறுப்பினர்கள்  தனி நபர்கள் இல்லை கட்சியின் தலைவர்கள்   

1,..இனி பேசி பயனில்லை’ 

2,.தமிழ் ஈழம் தான் தீர்வு 

3,ஆயதப் போராட்டம் தான் அதற்கான ஒரே வழி

4,..ஆயுதத்தை தொட்டு கூட பார்க்கவில்லை  

5,.இவர்களின் பேச்சை நம்பி இளைஞர்கள் ஆயுதப்போராட்டம் நடத்தினார்கள் 

6,..ஏன் ஆதரிக்கவில்லை  இலங்கை அரசுடன் ஓட்டி உறவாடத் தொடங்கி விட்டார்கள்   இளைஞர்களின் ஆயுதம் களையவேண்டும் என்பதற்காக 

7,...ஆயுதப் போர் நடக்கும் போது நீலன். பொதி,.வரைவு   வரைய முடியாது   அதற்கு இளைஞர்கள் அனுமதி வேண்டும் 8,.இரண்டு தடவைகள் ஒப்பந்தம் எழுதி ஏமாற்றப்பட்டுள்ளோம்  

9,..நீலன. பீரிஸ் சாந்திரிக்கா  ....நினைத்தவுடன். தீர்வு வழங்க முடியாது   பாராளுமன்றம் அங்கீகாரம் வேண்டும்  அங்கே நிச்சயம் நிராகரிக்கப்படும்.  ஆகவே  இந்த பொதி.....இந்த சதி,.இளைஞர்களின் ஆயுதங்களை களைய மட்டுமே 

10,..புலிகள் கொலை செய்தது பற்றி  வரும் காலச்சந்ததிக்கு சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை  ஆனால் அவர்கள் செய்த அனைத்து விடயங்களையும் பேசுங்கள் சொல்லி கொடுங்கள்   தனிய. கொலையை பற்றி மட்டும் ஏன். பேசுகிறீர்கள். 

11,..இல்லாத அவர்களை பற்றி பொல்லாத கதைகளை தயவுசெய்து தவிர்த்து கொள்ளுங்கள்  போகின்ற வழிக்கு உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்   🤣🤣

நான் எவரையும் ஆதரிப்பவனில்லை 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Elugnajiru said:

 

ஏன் சார் அவர்களது தீர்வுப்பொதியை நீங்களோ அல்லது நம்பிக்கையான வேறி யாராவதோ 13 க்கு மேல் அதிகரமுள்ளதாகத் தயாரித்ததாகச் சொல்லப்படும் நகலைப்பற்றிய விபரம் தரமுடியுமா?

சுத்தமான பொய்

இதெல்லாம் மணடயில் போடு முன்னர் கேட்கப்பட வேண்டிய கேள்விகள். எல்லாவற்றையும் நாசமக்கிப்போட்டு இப்படி கேட்க கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நன்றி கபிதான்.

தீர்வு பொதிக்கு மரண தண்டனை புலிகள் வழங்கினார்களா என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு, அந்த காலகட்டத்தில் சில அரசியல் படுகொலைகளை புலிகளின் மேல் சுமத்தினதாக கூறப்படுகிறது உதாரணமாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் படுகாயமடைந்த நிலையில் சிலநூறு மீற்றர் தொலைவில் அவர் சடலம் கைப்பற்றப்பட்டதாக இலங்கை தரப்பு தெரிவித்திருந்தது அதன் விசாரனையில் உதவிய ஸ்கொட்லன்ட் யார்ட் பொலிஸ் அதனை படுகாயமடைந்த நபர் அவ்வளவு தூரம் ஓட முடியாது என கூறியதாக நினைவுள்ளது (லலித் அத்துலத்முதலியின் கொலையா என சரியாக நினைவில்லை).

இங்கு சிட்னியில் நாகு என்பவர் உள்ளார் இவர் வல்வெட்டித்துறையினை சேர்ந்தவர் இவர் சிட்னி முருகன் கோயிலில் வேட்டியினை மடித்துக்கட்டி கொண்டு இரட்டை அர்த்த பேசும் காவாலி சிட்னி முருகன் பக்தர்களில் ஒருவர், துவாரகா திரியில் முன்னாள் கடற்புலி போராளி ஒருவர் குறிப்பிடும் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் பற்றி குறிப்பிட்டுள்ளார், அந்த சம்பவத்தின் ஒரு கருவியாக இந்த நபர் இருந்ததாக புலிகளின் புலனாய்வு தலைவர் பொட்டம்மான் கூறியதாக கேள்விப்பட்டேன்.

இந்த நபர் கடத்தல் தொழில் ஈடுபட்டவர், இந்தியாவில் பெரும்பாலும் தங்கியிருந்த காலத்தில் புலிகளின் உயர்மட்டத்தில் தொடர்பில் இருந்துள்ளார் நாடு திரும்பிய குறித்த நபர் அந்த போராளி (முன்னாள் யாழ் மாவட்டதளபது குமரப்பாவின் உறவினர்) திட்டமிட்டு தகாத உறவில் ஈடுபடுத்தி அதனை புகைப்படம் எடுத்து  அதனை வைத்து மிரட்டி தலைவரை கொல்ல முயற்சித்தாக கூறப்படுகிறது, அந்த காலத்தில் புலிகளின் உறுப்பினர்கள் நிதி மோசடி, தகாத உறவு என்பவற்றிற்காக மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தாக கேள்விப்பட்டிருந்தேன்.

இந்த விசாரைணை நடைபெறும் போது பொது மக்களும் விசாரித்த போராளிகளும் பொதுமகனா இருந்தாலும் இவர் செய்த குற்றம் தீவிரம் என்பதால் அவருக்கு மரண தண்டனை கிடைக்கும் என கருதினார்கள், அதே நேரம் அவ்வாறு அவருக்கு மரண தண்டனை கிடைக்க கூடாது என மனதார அனைவரும் விரும்பினார்கள் அதற்கு காரணம் அந்த நேரம் அவரக்கு ஒரு கைக்குழந்தை இருந்தது.

அதிசயமாக அவருக்கு தண்டனை கிடைக்கவில்லை, இந்த சம்பவத்தினை எழுதுவதற்கு விருப்பம் இல்லை, ஆனால் உண்மைகளை உணர இது போன்ற தகவல் உதவியாக இருக்கலாம்.

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Kapithan said:

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

ஒரு கைக்குழந்தைக்குத் தந்தை என்பதால், பிரபாகரனைக் கொல்ல முயன்றவரையே கொல்லாமல் மன்னித்து விட்டவர்கள், ஒரு தீர்வுத் திட்டத்திற்காக நீலனைக் கொன்றிருப்பார்களா என்று "ஒரு கதை" மூலம் கேட்கிறார்!

உங்களுக்கு சிரிப்பூட்டினாலும் இனி இது தான் கதையாடல்-narrative😂: "புலிகள் இருந்த போதே அங்கே பல்வேறு குழுக்கள் தற்கொலைப் படையோடு சமகாலத்தில் இருந்திருக்கின்றன. அவை மொசாட், றோ, சி.ஐ.ஏ, கே.ஜி.பி (ஏன், பின் வீட்டு பொன்னம்மாக்கா ரீம்😎) என்று பல்வேறு அமைப்புகள் சார்ந்து கொலைகள் செய்திருக்கிறார்கள்! எல்லாம் அநியாயத்திற்கு புலிகள் தலையில் கட்டப் பட்டன!

(விளங்குதா?? அவர்களும் இனி எந்த மூலையில் தான் போய் ஒழிப்பது, பாவம் விடுங்கோ!)

Guest
This topic is now closed to further replies.



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.