Jump to content

தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம்.

# பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣

யாரை எப்போ சந்தித்தார் என்ன தான் சாதித்தார் என்பதைவிட 

இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே.

ஆற்றைத் தோண்டுறான்.

மலையை தோண்டி விற்கிறான்


இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம்.

மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.

Link to comment
Share on other sites

  • Replies 437
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

வைரவன்

நாம் தமிழர் கச்சி மெய்யாலுமே புத்தி கூடிய கச்சி தான் எல்லா கட்சிகளும் தேர்தலில் தோற்ற பின் தான், எல்லாவற்றிலும் பழி போடும். ஆனால் நாம் தமிழர் கச்சி தோற்கப் போகிறோம் எல்லா இடங்களிலு

ரசோதரன்

Quora இல் இந்த அர்த்தம் இருந்தது. இவர்கள் சொல்வது எல்லாம் சரியா அல்லது தப்பா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு தெளிவு கிடையாது... திராவிடம் என்றால் என்ன? திராவிடம் என்ற சொல் தமிழின் சமக்கிருத த

நிழலி

மேலே எழுதியும் இணைத்தும் உள்ளன்.  அங்கீகரிக்கப்படாத கட்சி எனில் ஒவ்வொரு தேர்தலிலும் சின்னம் ஒன்றை கேட்டுப் / விண்ணப்பித்து பெற வேண்டும். நா.க. அவ்வாறு விண்ணப்பிக்க முன், இன்னொரு கட்சி அதே வி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெள்ளம் வந்த பின்...  @ராசவன்னியன் னின், சிலமன் ஒன்றையும் காணவில்லை. 

இந்த சிலமன் என்பதை பார்த்ததும் ஆகா ஆகா ஈழத் தமிழ் தேன் என்று ஓடி வருவார்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  .

தமிழ் நாட்டில் தலைவராக இன்னமும் தேவை.

கடந்த கால தலைவர்களைப் பாருங்கள்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
16 minutes ago, ஈழப்பிரியன் said:

 

இதனால் ஏதோ கோடிக் கணக்காக பணம் வாங்கி கோடீஸ்வரனாகி விட்டாரோ? இல்லையே.

ஆற்றைத் தோண்டுறான்.

மலையை தோண்டி விற்கிறான்


இப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்க.மற்றவர்களுடன் இவரையும் சேர்த்து விடுகிறோம்.

மற்றும்படி நீங்கள் சொல்லும் குற்றச் சாட்டுகள் எல்லாம் தமிழ் நாட்டில் ஒன்றுமே இல்லை.

பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்?

போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி?

பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார்.

இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள்.

நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம்.

அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.

7 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

 வட்டுக்கோட்டை!🤣

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க.....
உங்களால் முடியாதது எதுவுமில்லை.

நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை?

ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣

1 hour ago, island said:

தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 

ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை ……

விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்?

நல்லது

இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

அடடா   இவ்வளவு இருக்க  .....ஒரு சிறந்த தலைவராக வரும் வாய்ப்புகள்  அறவேயில்லை  ......🤣🤣🤣

தீப்பொறி ஆறுமுகம்…..

நாஞ்சில் சம்பந்த்……..

தூசண துரை முருகன்….

சிவாஜி கிருஸ்ணமூர்த்தி…..

சீமான்…..

இப்படி ஆபாசம் தூக்கலான மேடை பேச்சால் கொஞ்சம் இரசிகர்களை சேர்கும் தலைமை கழக பேச்சாளர். தமிழ் நாட்டு அரசியலில் இதுதான் இவருக்கான இடம், வரிசை.

சிறந்த தலைவர் எல்லாம் - வாய்பில்ல ராஜா, வாய்ப்பில்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, வாலி said:

செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  

இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌த்தில் அவ‌ர் போட்டியிட‌ வில்லை அண்ணா....................
அவ‌ர் த‌னிய‌ ச‌ட்டம‌ன்ற‌ தேர்த‌லில் தான் வேட்பாள‌றா நிப்பார் அவ்ரின் நோக்க‌ம் பாராள‌ம‌ன்ற‌ம் போவ‌து கிடையாது ச‌ட்ட‌ ம‌ன்ற‌ம் போவ‌து...........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

நல்லது

இதை தமிழ் நாட்டவர்கள் முடிவு எடுக்க வேண்டும்.

நாங்கள் குத்தி முறிந்து எதுவுமாகப் போவதில்லை.

100% உண்மை.

இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில்.

அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம்.

Advantage BJP? 

நேற்று
72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு
இன்று 69 ச‌த‌வீத‌மாம்

3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு
நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌

நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும்

அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
7 minutes ago, பையன்26 said:

நேற்று
72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு
இன்று 69 ச‌த‌வீத‌மாம்

3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு
நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌

நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும்

அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................

இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

———————————————————

வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி.

👇

————————————

24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம்

VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]
 

What is the reason behind delay in final polling percentage number in tamilnadu

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது.

தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது.

என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்?

ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்..............................

யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்

 

உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பையன்26 said:

யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்

தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை.

ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர்.

எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை.

ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர்.

எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.

 

ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு.....................

சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு.........................

புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு

நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது

நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது

அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை. 

சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன்.

அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.

13 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................

ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை.

சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு.

நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

100% உண்மை.

இந்த குத்தி முறிதலில் - சக யாழ் கள கருதாளர்கள் சீமானை இட்டு பயப்படுகிறார்கள் என்ற கற்பனையும் அடங்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை.

இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஈழப்பிரியன் said:

முதல்வராக வந்துடுவார் என்று இதுவரை யாருமே சொல்லலை.

இருந்தும் குத்திமுறிவதைப் பார்த்தால் முதல்வராக வந்திடுவாரோ என்று பயப்பிடுவது போல இருந்தது.

யாவும் கற்பனை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை. 

சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன்.

அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன்.

ஒரு த‌த்த‌ன் த‌னிய‌ நின்று த‌மிழ் த‌மிழ் என்று க‌த்துவ‌தில் உங்க‌ளுக்கு ஏன் அதிக‌ம் வேர்க்குது 

ஹிந்திக்கு எதிரா மொழி போர் செய்து ஆட்சியை பிடித்த‌ திமுக்கா

இப்போது முத‌ல‌மைச்சாறா இருக்கும் 
ஜ‌யா ஸ்டாலின் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரிய‌ வில்லை என்று ஒட்டு மொத்த‌ உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளே சிரிக்கின‌ம்

த‌க‌ப்ப‌ன் அப்ப‌டி என்றால் ம‌க‌ன் உத‌ய‌நிதி நீட்டால் இற‌ந்து போன‌ அனித்தா எடுத்த‌ புள்ளி விப‌ர‌த்தை ப‌ற்றி க‌ண்ட‌ ப‌டி உள‌றினார்..........................தேப்ப‌னுக்கும் ம‌க‌னுக்கும் பேச்ச தெரியாது
ஆனால் உத‌ய‌நிதி கெட்ட‌ கெட்ட‌ சொல்லில் ம‌ட்டும் ந‌ல்லா சொல்லுவார்...................முன்ன‌ள் முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி விட்டால் ச‌சிகலாவின் பாவாடைக்கு உள்ள‌ போய் இருப்பார் என்று பொது வெளியில் சொல்வ‌து நாக‌ரிக‌மா.......................

திருட்டு ர‌யிலில் வ‌ந்த‌வ‌னுக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்று  சீமானை த‌விற‌ க‌ருணாநிதிய‌ குடும்ப‌த்தை பார்த்து கேட்ட‌து உண்டா


நீங்க‌ள் யாழில் தொட‌ர்ந்து தேவை இல்லாம‌ சீமான் மீது பொய் அவ‌தூற‌ ப‌ர‌ப்பி விடுறீங்க‌ள்

ஏதோ திரியில் சீமானும் ஊழ‌ல் செய்தார் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதி இருந்தீங்க‌ள் அர‌சிய‌ல் எந்த‌ பொருப்பில் இருந்து ஊழ‌ல் செய்தார் முத‌ல‌மைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாரா அல்ல‌து நிர்ம‌லா சீத்தார‌ம் மாதிரி நிதித்துறை அமைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாறா இல்லை அக்கா க‌னிமொழி அண்ண‌ ராசா மாதிரி 2ஜீ ஊழ‌லில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடி ஊழ‌ல் செய்தாரா..................................

ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு ப‌ஞ் அண்ணா சொன்ன‌து போல் காய்க்கிர ம‌ர‌த்துக்கு தான் க‌ல் எறி அதிக‌ம்.....................................சீமான் என்ர‌ ஒன்றை மனித‌னை இணைய‌த்தில் நாளுக்கு 200ரூபாய் கூட்ட‌த்தை வைச்சு இருக்கு

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் 1000க்கு பிற‌ந்த‌வ‌ங்க‌ள் என்று பெண்க‌ளை சொல்ல‌ வில்லை
ஆனால் திமுக்கா 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் க‌ளிய‌ம்மாள் சொன்ன‌ 8செக்க‌ன் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்பி அதை நாம் தமிழ‌ர் ஜ‌ரிம் அது உண்மை இல்லை பொய் என்று நிறுபித்த‌வை....................பிற‌க்கு இன்னொரு அவ‌தூற‌ கையில் எடுக்கிற‌து..............................திமுக்கா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்த‌ பாவ‌த்துக்கு தான் 2011 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் எதிர் க‌ட்சி ப‌த‌வியையும் இழ‌ந்த‌வை அதோடு 10வ‌ருட‌ம் ஆட்சியில் இல்லாத‌ போது செய்ய‌ முடியாத‌ ஊழ‌லை எல்லாம் ஆட்சிக்கு வ‌ந்து மூன்று ஆண்டுக‌ளில் செய்துதுக‌ள்

மூன்று ஆண்டுக‌ளில் 3000கோடி ஊழ‌ல் அதோட‌ 10ரூபாய் பாலாஜி செய்த‌ ஊழ‌ல்................

ஓட்டுக்கு காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் திமுக்கா குண்ட‌ர்க‌ள்
கையும் மெய்யுமாய் பிடி ப‌ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சில‌ இருந்து வ‌ந்து இருக்கிறோம் என்று பொய் சொன்ன‌  பிராடுக‌ள் க‌ட‌சியில் கேள்வியால் ம‌ட‌க்க‌ தாங்க‌ள் திமுக்காவின் ஆட்க‌ள் என்று சொல்லி விட்டு த‌ப்பி ஓடுதுக‌ள்.............................
க‌ருணாநிதி குடும்ப‌ம் எப்ப‌ அர‌சிய‌ல் அனாதை ஆட்க்க‌ ப‌டுகின‌மோ அப்ப‌ தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம்..............................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை.

👇👆🏼

 

4 minutes ago, பையன்26 said:

ஒரு த‌த்த‌ன் த‌னிய‌ நின்று த‌மிழ் த‌மிழ் என்று க‌த்துவ‌தில் உங்க‌ளுக்கு ஏன் அதிக‌ம் வேர்க்குது 

ஹிந்திக்கு எதிரா மொழி போர் செய்து ஆட்சியை பிடித்த‌ திமுக்கா

இப்போது முத‌ல‌மைச்சாறா இருக்கும் 
ஜ‌யா ஸ்டாலின் துண்ட‌றிக்கை பார்த்து கூட‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரிய‌ வில்லை என்று ஒட்டு மொத்த‌ உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளே சிரிக்கின‌ம்

த‌க‌ப்ப‌ன் அப்ப‌டி என்றால் ம‌க‌ன் உத‌ய‌நிதி நீட்டால் இற‌ந்து போன‌ அனித்தா எடுத்த‌ புள்ளி விப‌ர‌த்தை ப‌ற்றி க‌ண்ட‌ ப‌டி உள‌றினார்..........................தேப்ப‌னுக்கும் ம‌க‌னுக்கும் பேச்ச தெரியாது
ஆனால் உத‌ய‌நிதி கெட்ட‌ கெட்ட‌ சொல்லில் ம‌ட்டும் ந‌ல்லா சொல்லுவார்...................முன்ன‌ள் முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி விட்டால் ச‌சிகலாவின் பாவாடைக்கு உள்ள‌ போய் இருப்பார் என்று பொது வெளியில் சொல்வ‌து நாக‌ரிக‌மா.......................

திருட்டு ர‌யிலில் வ‌ந்த‌வ‌னுக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்று  சீமானை த‌விற‌ க‌ருணாநிதிய‌ குடும்ப‌த்தை பார்த்து கேட்ட‌து உண்டா


நீங்க‌ள் யாழில் தொட‌ர்ந்து தேவை இல்லாம‌ சீமான் மீது பொய் அவ‌தூற‌ ப‌ர‌ப்பி விடுறீங்க‌ள்

ஏதோ திரியில் சீமானும் ஊழ‌ல் செய்தார் என்று க‌ண்ட‌ மேனிக்கு எழுதி இருந்தீங்க‌ள் அர‌சிய‌ல் எந்த‌ பொருப்பில் இருந்து ஊழ‌ல் செய்தார் முத‌ல‌மைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாரா அல்ல‌து நிர்ம‌லா சீத்தார‌ம் மாதிரி நிதித்துறை அமைச்ச‌ரா இருந்து ஊழ‌ல் செய்தாறா இல்லை அக்கா க‌னிமொழி அண்ண‌ ராசா மாதிரி 2ஜீ ஊழ‌லில் ப‌ல‌ ல‌ச்ச‌ம் கோடி ஊழ‌ல் செய்தாரா..................................

ப‌ழைய‌ யாழ்க‌ள‌ உற‌வு ப‌ஞ் அண்ணா சொன்ன‌து போல் காய்க்கிர ம‌ர‌த்துக்கு தான் க‌ல் எறி அதிக‌ம்.....................................சீமான் என்ர‌ ஒன்றை மனித‌னை இணைய‌த்தில் நாளுக்கு 200ரூபாய் கூட்ட‌த்தை வைச்சு இருக்கு

ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் 1000க்கு பிற‌ந்த‌வ‌ங்க‌ள் என்று பெண்க‌ளை சொல்ல‌ வில்லை
ஆனால் திமுக்கா 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் க‌ளிய‌ம்மாள் சொன்ன‌ 8செக்க‌ன் காணொளிய‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்பி அதை நாம் தமிழ‌ர் ஜ‌ரிம் அது உண்மை இல்லை பொய் என்று நிறுபித்த‌வை....................பிற‌க்கு இன்னொரு அவ‌தூற‌ கையில் எடுக்கிற‌து..............................திமுக்கா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் செய்த‌ பாவ‌த்துக்கு தான் 2011 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் எதிர் க‌ட்சி ப‌த‌வியையும் இழ‌ந்த‌வை அதோடு 10வ‌ருட‌ம் ஆட்சியில் இல்லாத‌ போது செய்ய‌ முடியாத‌ ஊழ‌லை எல்லாம் ஆட்சிக்கு வ‌ந்து மூன்று ஆண்டுக‌ளில் செய்துதுக‌ள்

மூன்று ஆண்டுக‌ளில் 3000கோடி ஊழ‌ல் அதோட‌ 10ரூபாய் பாலாஜி செய்த‌ ஊழ‌ல்................

ஓட்டுக்கு காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் திமுக்கா குண்ட‌ர்க‌ள்
கையும் மெய்யுமாய் பிடி ப‌ட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சில‌ இருந்து வ‌ந்து இருக்கிறோம் என்று பொய் சொன்ன‌  பிராடுக‌ள் க‌ட‌சியில் கேள்வியால் ம‌ட‌க்க‌ தாங்க‌ள் திமுக்காவின் ஆட்க‌ள் என்று சொல்லி விட்டு த‌ப்பி ஓடுதுக‌ள்.............................
க‌ருணாநிதி குடும்ப‌ம் எப்ப‌ அர‌சிய‌ல் அனாதை ஆட்க்க‌ ப‌டுகின‌மோ அப்ப‌ தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம்..............................................

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
20 minutes ago, goshan_che said:

👇👆🏼

 

 

அப்ப‌ என்ன‌த்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய‌ திரிக்குள் நின்று முக்கிறீங்க‌ள்

உங்க‌ட‌ வேலைய‌ பார்க்க‌ வேண்டிய‌து தானே..........................என‌து நினைவில் சீமான் ப‌ற்றிய‌ விள‌க்க‌ம் நூறு த‌ட‌வைக்கு மேல் உங்க‌ளுக்கு விள‌க்கி விட்டேன்..................எழுதின‌தையே தொட‌ர்ந்து எழுத‌ யாழில் வாசிப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ ச‌லித்து போய் விடும்...................................

சீமானை திருத்த‌ முடியும் 

க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது............................

 

த‌லைவ‌ர் 2008க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ காணொளிக‌ள் வேனும் என்று கேட்டாராம்....................த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சி த‌லைவ‌ர் அண்ண‌ன் மேல் முருக‌னிட‌ம் இருந்து 2008ம் ஆண்டே தான் வ‌ன்னிக்கு அனுப்பி விட்ட‌தாய் அன்மையில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வ‌தெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் தான் த‌லைவ‌ர்

 

இப்ப‌டி ப‌ட்ட‌ குழு 2009க்கு முத‌ல் எம் த‌லைவ‌ருக்கு பின்னால் குத்தாம‌ல் இருந்து இருப்பார்க‌ளா என்று என்னை அறியாம‌லே யோசிப்ப‌துஉண்டு.............................................

Edited by பையன்26
  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி எத்தனை தொகுதிகளில் கட்டுப்பணம் இழக்காது என்று ஊகத்தைச் சொல்லுங்கள்.

ஒரு தொகுதியிலும் வெல்லப் போவதில்லை. ஆனால் ஏன் போட்டியிடுகின்றார்கள்? கிடைக்கும் வாக்குகளின் வீதத்தை வைத்து எதிர்காலக் கூட்டணிகளில் பேரம் பேசத்தான்.

பா.ம.க.  பிஜேபியுடன் கூட்டில் சேர்ந்ததும் இந்தக் கணக்கில்தான். சட்டமன்றத் தேர்தல்தான் முக்கியம். அதில் திமுக, அதிமுகவுடன்  தொகுதிப் பங்கீடு பேரத்தில் ஈடுபட இந்தத் தேர்தலில் கிடைக்கும் வாக்குகள் முக்கியம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, பையன்26 said:

அப்ப‌ என்ன‌த்துக்கு யாழில் இருந்து சீமான் பற்றிய‌ திரிக்குள் நின்று முக்கிறீங்க‌ள்

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

18 minutes ago, பையன்26 said:

சீமானை திருத்த‌ முடியும் 

க‌ருணாநிதி குடும்ப‌த்தை திருத்த‌ முடியாது............................

இரெண்டுமே அதிமுக.

அடித்தும் திருத்த முடியாத கழுதைகள்.

18 minutes ago, பையன்26 said:

த‌லைவ‌ர் 2008க‌ளில் வீர‌ப்ப‌ன் ப‌ற்றிய‌ புத்த‌க‌ங்க‌ள் ம‌ற்றும் சில‌ காணொளிக‌ள் வேனும் என்று கேட்டாராம்....................த‌மிழ‌க‌ வாழ்வுரிமை க‌ட்சி த‌லைவ‌ர் அண்ண‌ன் மேல் முருக‌னிட‌ம் இருந்து 2008ம் ஆண்டே தான் வ‌ன்னிக்கு அனுப்பி விட்ட‌தாய் அன்மையில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு முன்னாள் மேடையில் சொன்னார்.........................சீமான் சொல்வ‌தெல்லாம் பொய் என்று யாழில் சிறு குழு இருக்கு அவ‌ர்க‌ளுக்கு நீங்க‌ள் தான் த‌லைவ‌ர்

இப்போ தலைவரும் இல்லை….வீரப்பனும் இல்லை….வீரப்பன் மகள் அப்போ பால்குடி…..

ஆமை ஓட்டில் படகு பயணம் போனதாக சொன்ன அண்ணன் - இப்படி ஒரு சுப்பர் ஸ்டோரிலைனை விட்டு வைப்பாரா என்ன🤣.

2008 கிழக்கு முற்றாக இழக்கப்பட்டு, வன்னி படிபடியாக இழக்கப்பட்ட நேரம் - புலிகள் வாழ்வா சாவா என போராடிய நேரம் - தலைவர் வீரப்பனை பற்றி புத்தகம் வாங்கிப்படித்தாராமா🤣.

இதை 2008 இல் குட்டி பையனாக இருந்தவர் நம்பலாம். எனக்கெல்லாம் 2008 ஏழு கழுதை வயசு - நான் எப்படி நம்புவேன்.

உங்கள் குலசாமி வீரப்பனை ஜெயலலிதா போட்டு தள்ளிய போது, அண்ணியின் அப்பா காளிமுத்து என்னவாய் இருந்தார்?

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நான் நின்று முக்குவது சீமானை எதிர்க்க.

அதன் மூலம் ஈழத்தமிழர் தமிழ் நாட்டு அரசியலில் பக்கம் சாராதவர்கள் என்பதை நிலை நிறுத்த.

திமுக வுக்கு கவர் எடுக்க அல்ல. அதை நான் செய்வதும் இல்லை.

நீங்க‌ள் சொன்னாப் போல‌ ஒட்டு மொத்த‌ ஈழ‌த‌மிழ‌ர்க‌ளும் கேட்டு ந‌ட‌ந்து விடுவின‌ம் தானே😂😁🤣 த‌மிழ‌ர்க‌ள் எங்கெல்லாம் வ‌சிக்கின‌மோ அங்கெல்லாம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு கிளைக‌ள் இருக்கு..................யாழுக்கு வெளியில் ப‌ல‌ ஆயிர‌ம் ஈழ‌த்து இளைஞ‌ர்க‌ள் சீமான் பின்னால் தான் நிக்கினம்
ஆன‌ ப‌டியால் வீனா போவ‌து உங்க‌ட‌ நேர‌ம் தான்
..............................புரிந்து செய‌ல் ப‌டுங்கோ..........................
2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது உங்க‌ளை மாதிரி சிறு கூட்ட‌ம் சீமானை சீண்டினார்க‌ள் 
பொது வெளியில் வேலை பார்க்கும் ந‌ப‌ர் அவ‌ர்க‌ளுக்கு ஒரு காணொளி மூல‌ம் ந‌ச்ச‌ன‌ ஒரு ப‌தில் அதோட‌ அட‌ங்கிட்டின‌ம்

த‌மிழ் நாட்டில் ப‌டிச்ச‌ இளைஞ‌ர்க‌ள் ஜ‌ப்பாம் அமெரிக்கா ஜ‌ரோப்பா என்று ப‌ல‌ நாட்டில் வேலை செய்கின‌ம் அவ‌ர்க‌ள் எல்லாம் லீவு போட்டு விட்டு நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட்ட‌வை இந்த‌ தேர்த‌லில்

உங்க‌ளால் முக‌ நூலில் போலி ஜ‌டியில் 200ரூபாய் கொத்த‌டிமைக‌ள் போல் கூவ‌த் தான் முடியும் ஆனால் உங்க‌ட‌ கூவ‌ல் நீண்ட‌ தூர‌ம் கேட்க்காது.........................

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முள்ளிவாய்க்காலில் ‘அவர்கள்’ வழங்கிய கஞ்சி! May 18, 2024 “உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற இந்தப் பாத்திரம், உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய ரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது. என்னை நினைவுகூறும்படி இதைச் செய்யுங்கள் ” – லூக்கா இதுவரை மானுடம் கண்டிராத ஓர் பேரவலத்தின் சாட்சியாக நிற்கும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதி நாட்களின் கொடூரங்களை உலகுக்கு சொல்லும் வரலாறாக ‘அவர்கள்’ வழங்கிய உப்புக் கஞ்சி நிலைத்திருக்கும் இனப்படுகொலை என்ற சொல்லைக் கேட்டாலே ஆயுதங்கள், மரணங்கள், நில ஆக்கிரமிப்புகள், ஓலங்கள், ராணுவ அத்துமீறல்கள், பண்பாட்டுச் சீரழிப்புக்கள், பொருளாதாரச் சூறையாடல்கள் என மானுடத்தின் வதைகள் நமது நினைவுக்கு வந்து செல்லும். அதுவும், தமிழர்களுக்கு அது குறித்து நினைத்த மாத்திரத்தில் முள்ளிவாய்க்கால் பேரழிவு கண்களுக்கு முன்னால் வந்து நிற்கும். அத்தகைய முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ஆறாத வடுக்களோடு வலிகளைத் தாங்கி நிற்கிற தமிழினத்திற்கு கூடுதலாக இன்னுமொரு வார்த்தை நினைவில் வந்துபோகும் அதுதான் பசிப்பட்டினி. 2006 ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்போடு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என சிங்களப்பேரினவாதம் முன்னெடுத்த திட்டமிட்ட இன அழிப்பு 2009 ஆம் ஆண்டு முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் மே மாதம் 18 ஆம் தேதியன்று 1,50,000 மக்களின் படுகொலையோடு நிறைவடைந்தது. ரசாயனக் குண்டுகள், விஷவாயு குண்டுகள், கொத்துக்குண்டுகள், ஷெல் குண்டுகள், வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள், பல்குழல் எறிகணைகள், ஆட்லெறி குண்டுகள் என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஆயுதங்களைக் கொண்டும் நடத்தப்பட்ட இந்த இன அழிப்புப் போரை சர்வதேச சமூகம் கைகட்டி, வாய்மூடி மெளனமாய் வேடிக்கை பார்த்த அந்த மே 18 ஆம் நாளை ஆண்டுதோறும் உலகம் முழுதும் வாழும் தமிழர்கள், மனித உரிமையாளர்கள், விடுதலைப் போராட்ட இயக்கங்கள் ‘தமிழினப்படுகொலை நாளாக’நினைவுகூர்ந்து வருகின்றனர். விளக்கேற்றி, மெழுகுவர்த்திகள் ஏந்தி, மலர் வணக்கம் செய்து நடைபெறும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் இந்தாண்டு‘முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி’என்ற ஊழியின் உணவு வழங்கப்பட்டது.முன்னமே, சொன்னது போல, முள்ளிவாய்க்கால் என்றால் தமிழினத்திற்கு கூடுதலாக நினைவில் வந்துபோகும் அந்த பசிப்பட்டினியின் குறியீடே இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’. இப்போது பேசும் பொருளாக மாறியுள்ள இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தமிழீழ நடைமுறை அரசின் (DeFacto State) தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கடைசி உறுப்பினரின் இறுதி மூச்சுவரை வழங்கப்பட்டது.போர் நடைபெறும் பகுதியில் நிற்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டியது அந்த போரை முன்னெடுக்கும் அரசின் பொறுப்பு. மருத்துவமனைகள் மீதும், மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் மீதும் கொத்துக்குண்டுகளைப் போட்டு கொன்ற சிங்களப் பேரினவாத அரசு இந்த சர்வதேச விதிமுறையை மட்டும் எப்படி கடைப்பிடிக்கும் ?. மக்களிடம் இருந்த உணவுக் களஞ்சியங்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு மக்களின் வாழ்வாதாரங்களை முற்றாக அழித்த சிங்கள அரசின் திட்டமிட்ட செயல்பாட்டால், பட்டினிச்சாவில் தவித்த மக்களை காப்பாற்றியது தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் வழங்கிய இந்த ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’தான். சாவின் விளிம்பில் நின்று இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களுக்கு கிடைத்த பொருள்களைக் கொண்டு மக்களின் பட்டினியை போக்க மாத்தளன் பகுதியில் தயாரித்து வழங்கத் தொடங்கிய கஞ்சி, முள்ளிவாய்க்கால் வரை தொடர்ந்து வழங்கப்பட்டது. ஆனந்தபுரத்தில் பீரங்கி டாங்கிகளால் தகர்க்கப்பட்ட தென்னைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, பிடுங்கப்பட்ட தேங்காய்கள், தமிழீழ போராட்ட இயக்கத்திடம் இருந்த அரிசி, காடுகளில் சேகரிக்கப்பட்ட விறகு, ஆங்காங்கே கிடைத்த ஊற்று தண்ணீர் இவற்றால் தயாரிக்கப்பட்ட கஞ்சிதான் அது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கஞ்சி வழங்கப்பட்டது. பசிப்பட்டினியால் தமது மக்கள் சாகக்கூடாது என்பது அந்தப் போராட்ட இயக்கத் தலைவனின் அதியுச்சக் கட்டளையாக இருந்தது.சிங்கள ராணுவத்தின் கண்களில் மண்ணைத் தூவி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருள்கள் தோண்டி எடுக்கப்பட்டு அதிகாலை 2 மணியளவில் தயாரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும். அதன்மூலம் தயாரிக்கப்படும் கஞ்சி, 8 மணிக்கு முன்னதாக மக்களுக்கும், ஐ.நா. அலுவலர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டு வந்தன. மனித நேயமற்ற தாக்குதல்கள், இறுக்கமான பொருளாதாரத் தடைகளுக்கு இடையிலும் மக்களில் ஒருவர்கூட பட்டினியால் சாகக்கூடாதென தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பணியாற்றியது. உலகில் நடைபெற்ற எத்தனையோ விடுதலைப் போராட்டங்களில், மக்களின் உணவை கொள்ளையடித்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், த.வி.பு இனவிடுதலைப் போர் நடவடிக்கைகளில் மட்டும்தான் போராளிகள் மக்களுடன் இணைந்து தமக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டனர். மக்களை காப்பாற்ற தமது உயிரைத் துறந்தனர். பேரிடர் இடப்பெயர்வின் யூதர்கள் அருந்திய ஓர் உணவை “பாஸ் ஓவர்” என இன்றும் வழக்கமாக நடைமுறையிலுள்ளதைப் போல ஈழத்தமிழர்களின் பொடியன்கள் தயாரித்து தந்த அமிழ்தான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வரலாற்றில் நிலைபெறும். முள்ளிவாய்க்காலினை பொது பண்பாட்டுக் குறிப்பாக மாற்றும். சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக மட்டுமல்ல, சர்வதேச வல்லாதிக்க நாடுகளின் பங்களிப்பையும், ஐ.நாவின் கள்ள மெளனத்தையும் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிற தமிழர்களின் எதிர்ப்புக் குறியீடாக வருங்காலத்தில் மாறும் என்பது உறுதி.   https://www.ilakku.org/முள்ளிவாய்க்காலில்-அவர/
    • டுபாயில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 5 கோடி ரூபா பெறுமதியான நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளுடன் இரண்டு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு திணைக்கள பிரிவினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் உரிய தீர்வையை செலுத்தாது 1,083 நவீன அப்பிள் ரக கையடக்க தொலைபேசிகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். இதுதவிர, குறித்த இருவரும் தம்வசம் வைத்திருந்த 200 பென்ட்ரைவ்களும் மீட்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/301907
    • 18 MAY, 2024 | 08:44 AM   முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று சனிக்கிழமை (18)  நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்திய பின்னர் ரவிகரன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இ.ஜெகதீசன், சமூகசெயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183837
    • வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல் என நீதிமன்றில் தெரிவிப்பு Published By: VISHNU   18 MAY, 2024 | 03:26 AM வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சாட்சியாளர் வவுனியா நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றால் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார். குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் தனது மகள் இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார். இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். நான் குறித்த இடத்திற்குச் சென்றதும் அவர் அங்கிருந்து சென்றுள்ளார். குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும், அதன் பின் சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர் குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடு இக் கொலைக்கு காரணம் என சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார். இவ் வழக்கு அடுத்த தவணைக்காக யூன் மாதம் 7 ஆம் மன்றினால் திகதியிடப்பட்டுள்ளது.  இதேவேளை, இச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  https://www.virakesari.lk/article/183835
    • வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் நேற்று(17) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமலாக்குதலில் பாதுகாப்புப் படையினரும் அவர்களுடன் தொடர்புடைய ஆயுதக்குழுக்களும் ஈடுபட்டுள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், அதற்காக பொதுமன்னிப்புக் கோரப்பட வேண்டுமெனவும் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறந்துவிட முடியாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் அவர்களின் உறவுகளும் நீண்ட காலமாகக் காத்திருப்பதாகவும், உண்மையை அறிந்துகொள்வதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுத மோதல்கள் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், ஆரம்பகட்ட வலிந்து காணாமலாக்கப்படுதல்கள் இடம்பெற்று பல தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும், இலங்கை அதிகாரிகள் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த இன்றுவரை தவறியுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301897
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.