Jump to content

ஆரோக்கிய நிகேதனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
ஆரோக்கிய நிகேதனம்
--------------------------------------
இன்று இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைகளில்  அதிகமாக  முதலாவதாக முன்னுக்கு நிற்பது ஆரோக்கிய வாழ்விற்கான வழிகாட்டல்களே. அதற்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் வாழ்வது, வெற்றியுடன் வாழ்வது, அன்புடன் வாழ்வது, அறத்துடன் வாழ்வது, அமைதியுடன் வாழ்வது,  தமிழுடன் வாழ்வது இப்படியான இலவச ஆலோசனைகளின் வரிசை அசோகவனத்தில் அனுமார் வால் நீண்டது போல நீண்டு வாசிப்பவர்களை பதறவைக்கும். 
 
சமூக ஊடகங்களினூடாக இவை வழங்கப்படும் போது, ஒரு லைக்கை வாசிக்காமலேயே போட்டுவிட்டுத் தப்பிவிடும் வசதி இருக்கின்றது. நேரில் வழங்கப்படும் போதும் தான் திக்குமுக்காட வேண்டியிருக்கின்றது.
 
இங்கு ஒருவரின் வீட்டிற்கு போக வேண்டியிருந்தது. இருபது வருடங்களுக்கு மேலாக இங்கு இருக்கின்றோம், இப்பத்தான் எங்களின் வீட்டிற்கு வருகிறீர்கள் என்று குறைபட்டுக்கொண்டே, டீயா, கோப்பியா என்று கேட்டனர்.
 
இரண்டில் ஏதோ ஒன்றைச் சொல்லவேண்டும் என்ற நினைப்பில், டீ என்று சொல்லிவிட்டேன். நாங்கள் டீ காப்பி குடிப்பதில்லை, அவை உடம்பிற்கு நல்லதில்லை, ஆனால் வீட்டிற்கு வருபவர்களுக்கு போட்டுக் கொடுப்போம் என்றபடியே அவர் உள்ளே போனார். ஸ்மால் சைஸ் உடுப்புக்குள் அதைவிட ஸ்மால் சைஸில் அவர் இருந்தார்.
 
திரும்பி வந்தார். பிளாக்கா, மில்க்கா என்று கேட்டார். இரண்டில் ஒன்று மீண்டும். மில்க் என்றேன். நாங்கள் ஸ்கிம் மில்க் மட்டும் தான், ஃபுல் மில்க்கில் கொலஸ்ட்ரோல். ஹார்ட்டை அட்டாக் பண்ணி விடும் என்றார். அவர் பெரிய படிப்பாளி, இலக்கண சுத்தமாகவே எல்லாவற்றையும் சொல்லிக்கொண்டிருந்தார்.
 
திரும்பவும் வந்தார். எத்தனை ஸ்பூன் சுகர் என்று நின்றார். அவரையே பார்த்தேன், அவர் இரண்டு எண்கள் சொன்னால் அதில் ஒன்றைத் தெரிவு செய்வதற்காக. அவரும் அப்படியே நின்றார், அதனால் நான் மூன்று என்று ஒரு எண்ணை சொல்லிவைத்தேன். நோ நோ, மூன்று அதிகம், சுகர் தான் தி வேர்ஸ்ட் என்றார். அப்ப இரண்டு என்று நான் இழுக்க, அவர் இரண்டும் அதிகம், ஒன்று போடுகின்றேன் என்று மீண்டும் உள்ளே போய்விட்டார்.
 
ஒரு பெரிய குவளையில் ஸ்கிம் மில்க், ஒரு ஸ்பூன் சுகர், தேயிலைச்சாயம் கலந்து என் முன்னால் இருந்தது.
 
கிளம்பும் போது, அடிக்கடி அவர் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அன்புக்கட்டளை ஒன்றையும் போட்டார். 
 
இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.
  • Like 5
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்கால நடை முறையை நகைச்சுவையோடு சொல்லியது அருமை. 
 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால தானோ ஏனோ பலரும் தண்ணீர் மட்டும் தாங்கோ என கேட்கிறார்கள்?!

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
1 hour ago, ஏராளன் said:

இதனால தானோ ஏனோ பலரும் தண்ணீர் மட்டும் தாங்கோ என கேட்கிறார்கள்?!

spacer.png

அப்படி, தண்ணீர் மட்டும் கேட்டாலும்….. 🚰
Gas தண்ணி வேணுமா… Gas இல்லாத தண்ணி வேணுமா ?
“கிளாசில்“ ஊற்றி தரவா… இல்லாட்டி போத்திலோடை தரவா?
அதற்குள்  ஐஸ்  கட்டி  போடவா… வேண்டாமா ?
என்று கேட்டு கடுப்பேத்துவார்கள். 😁 😂

அவர்கள் அலுப்பு தாறதெண்டு முடிவெடித்தால், எந்த ரூபத்திலும் தந்தே தீருவார்கள். 🤣 

Edited by தமிழ் சிறி
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஒவ்வொன்றாய் கேட்டுக் குடுக்கிற பழக்கம் வந்திருக்கு.....அதிலும் காரணம் இருக்கு, அநேகமானவர்கள் விதவிதமான வருத்தங்களுடன் குளிசைகளும் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.....நாங்கள் பொதுவா வெய்யில் என்றால் பழரச பானங்களும் குளிர் என்றால் தேனீரோ கோப்பியோ போட்டுக் குடுக்கிறதுதான் வழக்கம்......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

இன்னும் ஒரு இருபது வருடங்கள் கழித்து இருவரும் உயிரோடிருந்தால், என் வீட்டில் டீ போட்டு, கையில் எடுத்துக்கொண்டு அவர் வீட்டிற்கு மீண்டும் போவதாக உள்ளேன்.

நீங்க 100 வருடம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நண்பன் நினைத்தது பிழையா?

இனிமேல் எங்க போனாலும் தேநீர் வேண்டாம் என்றே சொல்வீர்கள் என எண்ணுகிறேன்.

 

ஊரில சீனி போடாம கொடுத்தா ஏதோ நாகரீகமில்லை என எண்ணுகிறார்கள் போல.

கொஞ்சமாக போடுங்க என்று சொல்லியும் பல இடங்களில் சொண்டும் சொண்டும் ஒட்டுப்பட கூடியதாய் போட்டுத் தருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இப்பதான் ஒவ்வொன்றாய் கேட்டுக் குடுக்கிற பழக்கம் வந்திருக்கு.....அதிலும் காரணம் இருக்கு, அநேகமானவர்கள் விதவிதமான வருத்தங்களுடன் குளிசைகளும் கட்டிக்கொண்டு திரிகின்றனர்.....நாங்கள் பொதுவா வெய்யில் என்றால் பழரச பானங்களும் குளிர் என்றால் தேனீரோ கோப்பியோ போட்டுக் குடுக்கிறதுதான் வழக்கம்......!  😂

சூட்டிற்கு குளிரும், குளிருக்கு சூடும் என்று நீங்கள் சொல்லியிருப்பது நல்ல பொருத்தமே...
 
இருக்கிற வருத்தங்களுக்கு, இனிமேல் புதிதாக ஒன்றும் வராமலிருக்க  என்று இரண்டு வகைக் குளிசைகள் சந்தையில் கிடைக்குது. குளிசை செய்து விற்கிறவர்கள் இங்கு பென்னாம் பெரிய பணக்காரர்கள்.......
 
ஊரில் இருந்த நாட்களில் ஒரு நண்பன் அடிக்கடி உள்ளூர் ஆஸ்பத்திரிக்கு போய் விட்டமின் சி எடுத்துக்கொண்டு வருவான். வாயில் ஒன்றை அடிக்கடி போட்டுக் கொள்வான். புளிப்பாக இருக்குது, நல்லாக இருக்குது என்றும் சொல்வான். இது என்ன வருத்தமடா என்று அப்ப நாங்கள் யோசித்திருக்கின்றோம்.....😀
 
 
 
  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நீங்க 100 வருடம் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்று நண்பன் நினைத்தது பிழையா?

இனிமேல் எங்க போனாலும் தேநீர் வேண்டாம் என்றே சொல்வீர்கள் என எண்ணுகிறேன்.

 

ஊரில சீனி போடாம கொடுத்தா ஏதோ நாகரீகமில்லை என எண்ணுகிறார்கள் போல.

கொஞ்சமாக போடுங்க என்று சொல்லியும் பல இடங்களில் சொண்டும் சொண்டும் ஒட்டுப்பட கூடியதாய் போட்டுத் தருகிறார்கள்.

 
100 வயது மட்டும் வாழ்ந்தோம் என்றால், 33 வருடங்கள் அரசாங்கம் Social Security கொடுக்க வேண்டும். நான் ஒரு ஆள் தனியாகவே அமெரிக்காவை வங்குரோத்து ஆக்கி விடுவன் போல கிடக்குதே....... 🤣
 
ஊரில் என்றால், முழுச் சீனி தான். மறு பேச்சு கேட்கவே மாட்டார்கள் தான்.
 
'தவிட்டுப் பாண்' என்று ஒன்றை ஊரில் அந்த நாட்களில் சொல்வார்கள். அதை நான் பார்த்தது இல்லை. இங்கு வந்த பின்னர் தான் அது என்னவென்று தெரிய வந்தது. நிறைய ஆட்களுக்கு தவிட்டுப் பாண் அன்று அங்கே தேவைப்பட்டிருக்கும். 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:
 
100 வயது மட்டும் வாழ்ந்தோம் என்றால், 33 வருடங்கள் அரசாங்கம் Social Security கொடுக்க வேண்டும். நான் ஒரு ஆள் தனியாகவே அமெரிக்காவை வங்குரோத்து ஆக்கி விடுவன் போல கிடக்குதே....... 🤣
 
ஊரில் என்றால், முழுச் சீனி தான். மறு பேச்சு கேட்கவே மாட்டார்கள் தான்.
 
'தவிட்டுப் பாண்' என்று ஒன்றை ஊரில் அந்த நாட்களில் சொல்வார்கள். அதை நான் பார்த்தது இல்லை. இங்கு வந்த பின்னர் தான் அது என்னவென்று தெரிய வந்தது. நிறைய ஆட்களுக்கு தவிட்டுப் பாண் அன்று அங்கே தேவைப்பட்டிருக்கும். 

கொஞ்சம் வசதியானவர்கள் "சனடோஜன்" மாவும் தனியாக வாங்கி வைத்துக் குடிப்பார்கள்......!  😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.