Jump to content

தம்பி நீ கனடாவோ..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீ கனடாவோ?

வருடங்கள் உருண்டு விட்டன

வயது போகுமுன்

வருவேன் ஊருக்கென்று

வாக்குக்  கொடுத்தேன்

வந்து இறங்கியும் விட்டேன்…

 

வடிவான ஊராகிவிட்டது  நம்மூரு..

வலம் இடம் தெரியவில்லை…

வடிவான வீடும் ஆட்களும்

வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு

வாய் நிறைந்த சிரிப்புடன்

வணக்கமும்  சொன்னேன்..

 

வந்தார் கந்தையா அண்ணர்

வயதும் வட்டுக்கை போயிட்டுது

வந்தவுடன் கேட்ட கேள்விதான்

வயித்தை கலக்கிப் போட்டுது

விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன்

கனடாவில் நிக்கிறான் கண்டனியோ…

 

போத்தல் தண்ணி குடித்து

தவண்டை அடித்த வாய்க்கு…

கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக….

கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா..

ஆறுமுகத்தின்ரை  மருமோன்

விசிட்டர் விசாவிலை வந்தவர்….

வேலை கீலை ..செய்யிறாரோ….

 

பொட்டுக்கடை

பொன்னையர் வீட்டடியால்  போகையில்

பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான்

அண்ணை ..அண்ணை…

அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர்

வன்கூவரில்தான் ..இருக்கிறார்…

அவர் எப்படி அண்ணை இருக்கிறார்..

 

பந்தடி வெட்டைக்குப் போகவும்

பயமாக்கிடக்கு..

படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும்

கூச்சமாக் கிடக்கு

பள்ளித் தோழரையும் காணப் போகவும்

பயமாக்கிடக்கு..

பலகால ஆசை….சொந்தங்கள்

பந்தங்கள் ….காணுகின்ற  ஆசை

கனடா விசிட்டர் விசாவால்.

பாதியில் முடிந்ததுவே…

 

ஏனென்று…கேட்பியள்

முப்பது வருசம் முந்தி வந்த

என்னிடம்..

மூத்தவனின் பேரனைத்தெரியுமோ

மருமோனைத்  தெரியுமோ

வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால்

நான் என்ன சொல்லமுடியும்…

தம்பி நீ கனடாவோ

என்ற கேள்வி  வருமுன்…

பாதியில் பயணத்தை  முடித்துவிட்டேன்..

  • Like 7
  • Haha 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள். 

முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த  நிலையை  (கனடா   வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நன்றி   தங்கள்  வருகைக்கும் ...கருத்துக்கும்...

புங்கையூரன்....நிலாமதி...

உண்மை நிலாமதி...என்வீட்டிலேயே   இதுதான் நிலமை..

முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த  நிலையை  (கனடா   வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.

 

 

 

Edited by alvayan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலத்துக்குப் போன புலம் பெயர்ந்தவரின் நிலையை அழகாக குறிப்பிட்டுள்ளீர்கள்.......!  😁

நன்றி அல்வாயன் ...... நல்ல கவிதை......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி suvy....உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தான் நொந்துபோனியள். நகைச்சுவைக்  கவிதை நன்றாகவே இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, alvayan said:

தம்பி நீ கனடாவோ?

நீங்கள் உங்கடை சோகத்த சொல்ல எனக்கு  நடந்த சோகமும் ஞாபத்துக்கு வருது......அல்வாயன்
நாலைஞ்சு வருசத்துக்கு முதல்  ஊரிலை இருக்கிற ஒருத்தர் எனக்கு ரெலிபோன் அடிச்சு கேட்டார் என்ர மோன் ஏல் முடிச்சிட்டான் உங்கை  கார் கொம்பனியள்ள வேலை எடுக்கலாமோ எண்டு.....?🤣

ஆரிட்ட சொல்லி அழ....😎


நொந்து நூடில்ஸ் ஆன உங்கள் கதையுடன் கூடிய கவிதை மிக அழகு. 👍🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரியூப்பர்

கதை 

கட்டுரை

கவிதை

என்று எழுதுறவன் எல்லாருக்கும்

கனடா விசிட்டர் விசா நல்ல தலைப்பா போச்சு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
18 minutes ago, ஈழப்பிரியன் said:

யூரியூப்பர்

கதை 

கட்டுரை

கவிதை

என்று எழுதுறவன் எல்லாருக்கும்

கனடா விசிட்டர் விசா நல்ல தலைப்பா போச்சு.

உங்களுக்குத் தெரியுமோ..அப்ப ஒருகாலத்திலை.வடமராட்சிப் பகுதியிலை..எந்த ஒரு ஒழுங்கையில் நின்று வாத்தியார் என்று கூப்பிட்டாலும்...ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஓம் என்று குரல் கேட்குமாம்...இப்ப ..கனடாத் தம்பி என்றால் .. அதே நிலைதான்....இது வளர்ச்சி அய்யா...நக்கல் அல்ல...ஏனெனில் என்வீட்டிலே 3 வந்தாச்சு...இன்னும் 2 வெயிட்டிங்...😎.. நன்றி வரவுக்கு

24 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் உங்கடை சோகத்த சொல்ல எனக்கு  நடந்த சோகமும் ஞாபத்துக்கு வருது......அல்வாயன்
நாலைஞ்சு வருசத்துக்கு முதல்  ஊரிலை இருக்கிற ஒருத்தர் எனக்கு ரெலிபோன் அடிச்சு கேட்டார் என்ர மோன் ஏல் முடிச்சிட்டான் உங்கை  கார் கொம்பனியள்ள வேலை எடுக்கலாமோ எண்டு.....?🤣

ஆரிட்ட சொல்லி அழ....😎


நொந்து நூடில்ஸ் ஆன உங்கள் கதையுடன் கூடிய கவிதை மிக அழகு. 👍🏼

நூடில்ஸ் ஆவது நோகாமல் இருக்குக் ..இது கொத்துரொட்டி அய்யா... நன்றி வரவுக்கு

37 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்லாத்தான் நொந்துபோனியள். நகைச்சுவைக்  கவிதை நன்றாகவே இருக்கு. 

நன்றி உங்கள்  ரசனைக்கும் ...அனுதாபத்திற்கும்

Edited by alvayan
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ஈழப்பிரியன் said:

யூரியூப்பர்

கதை 

கட்டுரை

கவிதை

என்று எழுதுறவன் எல்லாருக்கும்

கனடா விசிட்டர் விசா நல்ல தலைப்பா போச்சு.

ஜேர்மனியில வேலைவாய்ப்பு அது இது எண்டு சகல வசதிகளும் இருந்து ஒருத்தனும் வாறானுகள் இல்ல....ஒரே கனடா புராணம் ஏனெண்டு தெரியேல்லை? 😂

⫷⫸⫷⫸⫷⫸⫺⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸⫷⫸

தமிழக உறவுகள் மற்றும் தெலுங்கு கன்னட மலையாள மக்கள் யேர்மனியில் இருக்கும் வாய்ப்புகளை நன்றாகவே அறுவடை செய்கின்றார்கள். தமிழ் பாடசாலைகளில் தமிழக உறவுகளின் பிள்ளைகளின் பெரும்பான்மையை பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது. கோவில்களில் தமிழக உறவுகளின் அன்னதானங்களையும் ஆனந்தங்களையும் பார்க்க ஆச்சரியமாக இருக்கின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

உங்களுக்குத் தெரியுமோ..அப்ப ஒருகாலத்திலை.வடமராட்சிப் பகுதியிலை..எந்த ஒரு ஒழுங்கையில் நின்று வாத்தியார் என்று கூப்பிட்டாலும்...ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஓம் என்று குரல் கேட்குமாம்

உஸ்ஸ்ஸ்
எங்க அப்பா பெரிய வாத்தியார்
அம்மா ரீச்சர்
சின்னம்மா ரீச்சர்
மாமனார் ரீச்சர்
உறவினர்கள் பலர் ஆசிரியர்கள்

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, alvayan said:

தம்பி நீ கனடாவோ?

வருடங்கள் உருண்டு விட்டன

வயது போகுமுன்

வருவேன் ஊருக்கென்று

வாக்குக்  கொடுத்தேன்

வந்து இறங்கியும் விட்டேன்…

 

வடிவான ஊராகிவிட்டது  நம்மூரு..

வலம் இடம் தெரியவில்லை…

வடிவான வீடும் ஆட்களும்

வசதியாக வாழும் நம் சனத்தையும் கண்டு

வாய் நிறைந்த சிரிப்புடன்

வணக்கமும்  சொன்னேன்..

 

வந்தார் கந்தையா அண்ணர்

வயதும் வட்டுக்கை போயிட்டுது

வந்தவுடன் கேட்ட கேள்விதான்

வயித்தை கலக்கிப் போட்டுது

விசிட்டர் விசாவில் வந்த பேரப் பொடியன்

கனடாவில் நிக்கிறான் கண்டனியோ…

 

போத்தல் தண்ணி குடித்து

தவண்டை அடித்த வாய்க்கு…

கோயில் கிணத்தில் தண்ணி குடிக்கப் போக….

கைமண்டையில் தண்ணி ஊத்திய ஆச்சி கேட்டா..

ஆறுமுகத்தின்ரை  மருமோன்

விசிட்டர் விசாவிலை வந்தவர்….

வேலை கீலை ..செய்யிறாரோ….

 

பொட்டுக்கடை

பொன்னையர் வீட்டடியால்  போகையில்

பொன்னற்றை…பூட்டப் பொடியனாம் தான்

அண்ணை ..அண்ணை…

அண்ணன் விசிட்டர் விசாவில் வந்தவர்

வன்கூவரில்தான் ..இருக்கிறார்…

அவர் எப்படி அண்ணை இருக்கிறார்..

 

பந்தடி வெட்டைக்குப் போகவும்

பயமாக்கிடக்கு..

படிச்ச பள்ளிக்குடப் பக்கம் போகவும்

கூச்சமாக் கிடக்கு

பள்ளித் தோழரையும் காணப் போகவும்

பயமாக்கிடக்கு..

பலகால ஆசை….சொந்தங்கள்

பந்தங்கள் ….காணுகின்ற  ஆசை

கனடா விசிட்டர் விசாவால்.

பாதியில் முடிந்ததுவே…

 

ஏனென்று…கேட்பியள்

முப்பது வருசம் முந்தி வந்த

என்னிடம்..

மூத்தவனின் பேரனைத்தெரியுமோ

மருமோனைத்  தெரியுமோ

வன்கூவர் அண்ணனைத் தெரியுமோ என்றால்

நான் என்ன சொல்லமுடியும்…

தம்பி நீ கனடாவோ

என்ற கேள்வி  வருமுன்…

பாதியில் பயணத்தை  முடித்துவிட்டேன்..

நீங்கள் இப்படி சொலுறீங்கள் அங்கு பின்வருமறு பாடுகின்றார்கள்

நாங்க தமிழர்!
Visitor visa பொய் என்றுவம். ஆனால் நாங்க போய் சேர முடியாதா என்று ஓடி திரிவம் .
நாங்க தமிழர்!
கனடா போக வேண்டாம் என்று சொல்லுவம். ஆனால் நாங்க போக என்ன வழி இருக்கிறது என்று பார்ப்பம்.
நாங்க தமிழர்!
கனடா எப்படி visitor visa ஊடாக போனனியள் என்றால் நாங்க வந்த வழியே தெரியாத மாதிரி கதைப்பம்.
நாங்க தமிழர்!
  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.