Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விளங்க நினைப்பவன் said:

விளங்கி  கொண்டேன்  உறவே.

4வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் வீர‌ப்ப‌ன் என் குல‌சாமி என்று எழுதினேன் இன்னொரு க‌ள‌ உற‌வு என் கூட‌ ம‌ல்லுக் க‌ட்டினார் இவ‌ரை எப்ப‌டி இப்ப‌டி சொல்லலாம் என்று......................2000ம் ஆண்டு கூட‌ த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் ஆன‌ தினம‌ல‌ர் தின‌க‌ர‌ன் தின‌ம‌னி போன்ற‌ ப‌த்திரிகைக‌ள் தான் இணைய‌த்தில் அதிக‌ம் வாசிப்பேன் அப்போது வீர‌ப்ப‌னை ப‌ற்றி ந‌ல்ல‌ மாதிரி வ‌ருவ‌தில்லை.........................பிற‌க்கு ந‌க்கீர‌ன் ஊட‌க‌த்தை பார்த்த‌ பிற‌க்கு தான் வீர‌ப்ப‌னின் உண்மையான‌ வ‌ர‌லாற்றை தெரிந்து கொண்டேன் அதில் இருந்து வீர‌ப்ப‌ன் மேல் என‌க்கு அதிக‌ க‌ருணை

வீர‌ப்ப‌னுக்கு ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் மேல் அதிக‌ பாச‌ம்.....................ராஜிவ் காந்தி செய்த‌து எல்லாம் முட்டாள் த‌ன‌மான‌ செய‌ல் என்று வீர‌ப்ப‌ன் சொன்ன‌ அனைத்தையும் ந‌க்கிர‌ன் கோபாலு காணொளி மூல‌ம் வெளியிட்டார்....................அதுக்கு பிற‌க்கு தான் தெரிந்த‌து இப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ ம‌னித‌னையா கெட்ட‌வ‌ர் போல் சித்த‌ரித்தார்க‌ள் ஊழ‌ல் அர‌சிய‌ல் வாதிக‌ள்......................வீர‌ப்ப‌ன் வாழ்ந்த‌ ஊரில் இப்ப‌வும் ம‌க்க‌ள் வீர‌ப்ப‌னை புக‌ழ்ந்து தான் சொல்லிகின‌ம்

வீர‌ப்ப‌ன் இருந்த‌ போது காவேரில‌ இருந்து த‌மிழ் நாட்டுக்கு த‌ண்ணீர் தொட‌ர்ந்து வ‌ந்திட்டே இருந்த‌தாம் வீர‌ப்ப‌னின் ம‌றைவுக்கு பிற‌க்கு காவேரி த‌ண்ணீர் பிர‌ச்ச‌னை பூதாக‌ர‌ம் ஆகி விட்ட‌து

 

வீர‌ப்ப‌ன் அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு எவ‌ள‌வோ ந‌ல்ல‌து செய்து இருக்கிறார் ................வீர‌ப்ப‌னின் ம‌க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சார்பாக‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் கிருஷ்ணகிரி தொகுதியில் வேட்பாள‌றா நிக்கிறா........................கிருஷ்ணகிரி தொகுதியை வெல்ல‌க் கூடும் அல்ல‌து இர‌ண்டாம் இட‌ம் வ‌ர‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு பாப்போம்............................

  • Replies 128
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக

  • goshan_che
    goshan_che

    இதை ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் இதேபோல் யூதருக்கு எதிராக பேசி  இருந்தால் என்ன ஆகி இருக்கும்? உண்மையில் பிரான்சில் எமது சமூகத்தில் படித்தவர்கள், முன்னோடிகள், பிரமுகர்கள் எல்லாம் என்ன வெள்ளி பார்த

  • குமாரசாமி
    குமாரசாமி

    சொல்ல வேண்டியதை செய்ய வேண்டியதை சுடச்சுட செய்து விடவேண்டும் விசுகர். இல்லையேல் எம் இனத்திற்கு நடந்த அனுபவங்கள் பற்றி  சொல்லி தெரியவேண்டியதில்லை. ஏனெனில் எதிரி எப்படி முன்னேறினான் என்பதற்கு  உதாரணங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பையன்26 said:

வீர‌ப்ப‌ன் இருந்த‌ போது காவேரில‌ இருந்து த‌மிழ் நாட்டுக்கு த‌ண்ணீர் தொட‌ர்ந்து வ‌ந்திட்டே இருந்த‌தாம்

நானும் கேள்விப்பட்டேன்….மாதம் மும்மாரி பொழிந்ததாம்….

கோழிகள் எல்லாம் தங்க முட்டை இட்டதாம்….

புல்லை போட்டால் நெல்லு விளைந்ததாம்…

நெல்லை போட்டு….சோறாகவே அறுவடை செய்தார்களாம்….

எல்லாம் குலசாமி இருக்கும் மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும்,  சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன.

1.மேலே நான் தந்த பட்டியல் -  பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது

2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால்

வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே.

அதுதான் நடக்கிறது.

படித்த உலக ஞானம் உள்ள உங்களுக்கு என்னை விட நன்றாக தெரியும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளுக்கும் எமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும்,  சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன.

1.மேலே நான் தந்த பட்டியல் -  பானையில் இருக்கிறது என்பதை காட்டுகிறது

2. எடுக்கும் இலாவகம் தெரியாமல், நிமிர்ந்து நின்று பானையை உடைத்துத்தான் எடுப்போம் என்றால்

வரலாறு பூராகவும் கால்கடுக்க நிற்க வேண்டியதே.

அதுதான் நடக்கிறது.

அருமையான கருத்து. சுப்பர் கோஷான். 👍👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, island said:

அருமையான கருத்து. சுப்பர் கோஷான். 👍👍👍👍

கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று நினைத்தேன். புலிகளை தூற்ற சேறடிக்க எதையும் தூக்கி திரிவீர்கள் என்று புரிந்து கொண்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/4/2024 at 03:43, ரஞ்சித் said:

அமெரிக்கா தனது நலன்களை மட்டுமே முன்னிறுத்தி நாடுகளுடன் உறவை வளர்த்துக் கொள்கிறது. ஆட்சியதிகாரத்தில் எவர் இருக்கின்றாரோ அல்லது எவரது கைகளில் அதிகாரம் இருக்கிறதோ, அவர்களைக்கொண்டே தனது நலன்களை அடைய முனையும். அதற்காக அந்த ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவுதான் ஜனநாயக விரோதிகளாக இருந்தாலும் அமெரிக்கா உதவும்

அமெரிக்கா மட்டுமல்ல  தமிழர்களாகிய நாமும் அப்படித்தான்.  1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக  மூச்சசுகூட விடவில்லை. ஏன்?  1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட  பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக  மூச்சு கூட விடவில்லை.  ஏன்? சுயநலம். 

 நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

கொஞ்சம் விசயம் தெரிந்தவர் என்று நினைத்தேன். புலிகளை தூற்ற சேறடிக்க எதையும் தூக்கி திரிவீர்கள் என்று புரிந்து கொண்டேன். 

உண்மைக்கும் உங்களுக்கும் வெகு தூரம். யாராவது உண்மைகளை பேசினாலே சேறடித்துவிட்டார்கள் கொச்சைபடுத்திவிட்டார்கள் என்று  மூக்கால் அழுவது சென்றிமென்ற் பேசி  உண்மைகள் பேசுவதை தடுக்க நினைப்பது  உங்கள் வாடிக்கை தான்.   அதற்காக உண்மைகளை பேசாமல் இருக்க முடியாதே!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

படித்த உலக ஞானம் உள்ள உங்களுக்கு என்னை விட நன்றாக தெரியும் நீங்கள் குறிப்பிடும் நாடுகளுக்கும் எமக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்று. 

மேலே உள்ள ஒவ்வொருவரு நாட்டுக்கும், இனத்துக்கும் அதன் அமைவிடம், எதிரியின் பலம் ஓர்மம், அயல் நாடு போன்றவற்றை வைத்து ஒவ்வொரு சவால் இருக்கவே செய்தது.

ஏணிகள் இல்லாத இடத்தில், இருக்கும் கம்புகளை வைத்து, தந்திரமாக ஏணி அல்லது அது போல ஒன்றை கட்டி, ஏற முடியாத இடத்துக்கு ஏறுவதன் பெயர்தான், சுதந்திர/இனவிடுதலை/மண் மீட்பு போராட்டம்.

தச்சன் கூடுதான் உனக்குச் சதமோ? 
அக்கா அக்கா என்று நீ அழைத்தாய் 
அக்கா வந்து கொடுக்கச் 
சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?

-பாவேந்தர் பாரதிதாசன்-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

 1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக  மூச்சசுகூட விடவில்லை. ஏன்?  1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட  பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக  மூச்சு கூட விடவில்லை.  ஏன்?

இது ஓரளவிற்கு உண்மைதான். நாம் வங்கதேச விடுதலை பற்றித் தெரிந்து கொண்டளவிற்கு, காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை.

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி இராணுவத்தை அனுப்பியது 1984 இல். அப்போது, புலிகள் உட்பட இயக்கங்கள் எல்லாமே இந்தியாவை தமது நேச சக்தியாகவே பார்த்து வந்தார்கள், குறிப்பாக இந்திராவை. ஆகவே, இந்திராவின் அரசுக்கெதிராகப் போராடிய பிந்தரன் வாலேயிடமிருந்தும், காலிஸ்த்தான் விடுதலை முன்னணியிடமிருந்தும் தம்மை விலத்தி வைத்திருந்ததாக எண்ணுகிறேன். அதாவது, காலிஸ்த்தானுக்கு ஆதரவு கொடுக்கப்போய், இந்திராவின் கோபத்திற்கு ஆளாகி, கிடைக்கும் உதவியையும் கெடுத்துவிடாமல் இருப்பதே சரியென்று எண்ணியிருக்கலாம். சுயநலம் தான். 

ஆனால், பலஸ்த்தீன விடுதலைப் போராட்டம் குறித்து இயக்கங்களுக்கிடையே அனுதாபம் இருந்தது. பணம் கொடுத்து பயிற்சிக்காக லெபனானுக்கும், பலஸ்த்தீனதிற்குச் சென்றாலும், அம்மக்களின் போராட்டம் குறித்த அனுதாபம் இருந்தது. 

ஈழத்தமிழர்கள் மற்றைய இனங்களுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பது பரவலான குற்றச்சட்டுத்தான். அதில் உண்மையில்லாமலும் இல்லை. இந்தியா மீதும், தாம் வாழும் நாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.  

1 hour ago, island said:

நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும்

தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆட்சியதிகாரத்தில் இருப்போரையே அமெரிக்கா ஆதரிக்கிறது என்கிறேன். அதாவது, ஆட்சியில் இல்லாத, அதிகாரத்தில் இல்லாத ஈழத் தமிழர்களை அமெரிக்கா எப்படி ஆதரிக்கும்? தமிழர்களுக்கூடாக தனது நலன்களை எப்படி அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொள்ளும்? ஆகவேதான், எமக்கு அமெரிக்கா உடவப்போவதில்லை என்று கூறுகிறேன். சரி, எம்மிடம் என்னதான் இருக்கிறது அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு என்று கூறுங்கள்? நாம் என்ன செய்தால் அமெரிக்கா தனது மனதை மாற்றி எமக்கு உதவ முன்வரும் என்று சொல்லுங்கள்? எம்மால் அமெரிக்காவின் நலன்களை எப்படிப் பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்? நாம் ஒரு இனமாக இனியாவது சிந்திக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இந்தப் பக்கங்களில் இருக்கும் சில தகவல்களை வைத்து சர்வதேச இராஜதந்திரத்தில் தமிழர் தரப்பின் பாரிய குறைபாட்டையும் காண முடிகிறது. "யாருடன் பேசுகிறோம்-know your audience" என்பது எந்தத் தொடர்பாடலிலும் முக்கியம். ரெனிசியில் பிறந்து, மிசிசிப்பியில் வளர்ந்து,  புஷ் நிர்வாகத்தில் வேலை செய்த ஆஸ்லி வில்ஸ் தான் அமெரிக்க தூதுவர் - நிச்சயமாக சிறுபான்மையினரின் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்ளாத ஒருவராக இவர் இருந்திருப்பார். வில்சின் மேலதிகாரி ரிச்சர்ட் ஆர்மிரேஜ் என்ற தெற்காசிய விவகார பொறுப்பதிகாரியும் இவர் போன்றவரே. இவர்கள் இருவரிடமும் எதையும் எதிர்பார்த்திருக்கக் கூடாது என்பது என் அபிப்பிராயம். ஆட்சேபனை தெரிவித்து விட்டு ரோக்கியோ போய் அந்தப் பிரகடனத்தில் மாற்றம் கொண்டு வந்திருக்க முடியுமா என முயன்றிருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். சரி வந்தால் மலை, போனால் தலை முடி!

அப்படிச் செய்திருந்தால் முள்ளிவாய்க்கால் நடப்பதற்கான வாய்ப்பு 50/50 ஆக இருந்திருக்கும் என நினைக்கிறேன். 

டோக்கியோ மாநாட்டுப் புறக்கணிப்பு, சமஷ்ட்டிக் கோரிக்கை, புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் பற்றி இங்கே எழுதலாமே? போரும் சமாதானமும் தமிழிலும் இருக்கின்றதா? 

இக்காலத்தில் நடந்த பல விடயங்கள் நாம் அறியாதது. தெரிந்தவர்கள் இங்கே பகிர்வதன் மூலம் விவாதிக்கப்பட்டவை, முன்வைக்கப்பட்டவை, புறக்கணிக்கப்பட்டவை என்பவற்றை தெளிவாக அறிய முடியும். 

உங்களுக்கு நேரம் இருந்தால் செய்யுங்கள்.

நீங்கள் சொல்வதன்படி, கொல்லப்பட்ட மக்களினதும், போராளிகளினதும்  ஒரு பகுதியினரையாவது கப்பாற்ற முடிந்திருந்தால் இன்றிருக்கும் நிலையினை விட மேம்பட்ட நிலையில் நிச்சயமாய் இருந்திருப்போம். இழப்புக்களையும் தவிர்த்திருக்கலாம். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, island said:

பேச்சுவார்ததையில் நாம் கேட்டது கிடைத்திருக்கவிட்டாலும் இன்றைய நிலையை விட மிகவும் மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் அதே வேளை  புலிகளுக்குள் இருந்த திறமைமிக்க அரசியல் போராளிகள் உயிருடன் இருந்து மக்களுக்கு தலைமை வகித்திருக்க முடியும்.

சிங்கள அரசுக்கும் சிங்கள மக்களின் பொதுப்புத்திக்கும் யுத்தத்தின் மூலம் புலிகளை தோற்கடித்தோம் என்ற மமதை இல்லாமல்,  பேச்சு வார்ததை மூலம் சமாதானமாகவே அவர்களின் ஆயுதத்தை மௌனித்தோம் என்ற மரியாதை புலிகள் மீதும் தமிழ் மக்கள் மீதும்  இருந்திருக்கும்.  இதை வீம்புக்காக சிலர் மறுக்கலாம். ஆனல் இன்றைய அவல நிலையை விட மேம்பட்ட நிலையே இருந்திருக்கும் என்பதை பொது அறிவுடன் சிந்திக்கும் எவரும் மறுக்க முடியாது. 

 

இது நடந்திருந்தால் நிச்சயமாக மேம்பட்ட நிலையில் இருந்திருப்போம். இப்போது, மீள முடியாத‌ ஆளத்தில்க் கிடக்கிறோம். 
ஆனால், புலிகளை மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே எவற்றையுமே மீளப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா? அக்காலத்தில் தமிழினத்திற்காக தம்மால் இயன்றதை அவர்கள் செய்தார்கள். எடுக்கப்பட்ட முடிவுகள் எல்லாமே சரியானவைதானா என்பது விவாதத்திற்குரியது. இறுதி வருடங்களில் நடந்த நிகழ்வுகள் எமது முடிவிற்குக் குறிப்பிடத் தக்க பங்கினையாற்றின என்பதையும் மறுக்கவில்லை. ஆனால், எமது சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இப்போரைக் கையாண்டது அப்பட்டமான உண்மை. அதற்கெதிராக எம்மால் செய்யக்கூடியவை மிகவும் மட்டுப்படுத்தப்பட்டவை என்பதே எனது எண்ணம்.

ஒன்றுமட்டும் உண்மை. தமிழர்கள் போராட்டத்தினை 80 களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தபோது அது ஆரம்பிக்கப்படத் தேவையாக இருந்த காரணங்களை விடவும் இப்போது அதிகளவான காரணங்கள் இருக்கின்றன. ஆகவே, எமது மக்களின் விடிவிற்கான போராட்டம் ஏதோ ஒருவகையில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். புலிகளை விமர்சிப்பதால் மட்டுமே தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, island said:

உண்மைக்கும் உங்களுக்கும் வெகு தூரம். யாராவது உண்மைகளை பேசினாலே சேறடித்துவிட்டார்கள் கொச்சைபடுத்திவிட்டார்கள் என்று  மூக்கால் அழுவது சென்றிமென்ற் பேசி  உண்மைகள் பேசுவதை தடுக்க நினைப்பது  உங்கள் வாடிக்கை தான்.   அதற்காக உண்மைகளை பேசாமல் இருக்க முடியாதே!  

உண்மையே பேசவேண்டும் என்றால் நாம் அங்கே நின்றிருக்க வேண்டும். நின்றவன் நான் பேசுவது பொய் என்று சொல்லி எதை சாதிக்க போகிறீர்கள்??

என் வாழ்வில் பெரும் பகுதியை என் உழைப்பில் பெரும் பகுதியை கொடுத்தவன். வேறு யாருடனும் விடும் புலுடாக்களை என்னிடம் விடவேண்டாம் விடமுடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

உண்மையே பேசவேண்டும் என்றால் நாம் அங்கே நின்றிருக்க வேண்டும். நின்றவன் நான் பேசுவது பொய் என்று சொல்லி எதை சாதிக்க போகிறீர்கள்??

என் வாழ்வில் பெரும் பகுதியை என் உழைப்பில் பெரும் பகுதியை கொடுத்தவன். வேறு யாருடனும் விடும் புலுடாக்களை என்னிடம் விடவேண்டாம் விடமுடியாது. 

பின்ன,

அண்ணை முன்னரங்கில் நின்று போர் புரிந்தவர்

பிள்ளைகளை போராட அனுப்பியவர்

முதல் வெடி வெடிக்கும் முன் ஒடி வராதவர்

போர் முடிந்த பின் எஞ்சிய போராளிகளின் வாழ்வுக்காக கடுமையாக பாடுபடுகின்றவர்...

இல்லையா பின்ன

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி இராணுவத்தை அனுப்பியது 1984 இல். அப்போது, புலிகள் உட்பட இயக்கங்கள் எல்லாமே இந்தியாவை தமது நேச சக்தியாகவே பார்த்து வந்தார்கள், குறிப்பாக இந்திராவை. ஆகவே, இந்திராவின் அரசுக்கெதிராகப் போராடிய பிந்தரன் வாலேயிடமிருந்தும், காலிஸ்த்தான் விடுதலை முன்னணியிடமிருந்தும் தம்மை விலத்தி வைத்திருந்ததாக எண்ணுகிறேன். அதாவது, காலிஸ்த்தானுக்கு ஆதரவு கொடுக்கப்போய், இந்திராவின் கோபத்திற்கு ஆளாகி, கிடைக்கும் உதவியையும் கெடுத்துவிடாமல் இருப்பதே சரியென்று எண்ணியிருக்கலாம். சுயநலம் தான். 

இது சுயநலம்தான் - ஆனால் புலிகள் உட்பட எமது இயக்கங்கள் எல்லாரும், ஒற்றுமையாக எடுத்த மிக அரிதான, மிக சரியான முடிவுகளில் இது ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

புலிகளை மட்டுமே குறைகூறிக்கொண்டிருப்பதன் மூலம் மட்டுமே எவற்றையுமே மீளப் பெற்றுக்கொள்ள முடியாது அல்லவா?

இங்கே அவர்களை உண்மையில் யாரும் குறைகூறவில்லை.

அவர்கள் பலமாக இருந்த போது பலந்தராத அணுகுமுறையை, இப்போ ஒன்றுமே இல்லாத காலத்தில் மீண்டும் பயன்படுத்துவோம்….

இனித்தான் பானையில் எதுவும் இல்லையே, அட்லீஸ்ட் பானையையாவது உடைக்கும் இன்பத்தை அடைவோம் என எழுதியதற்கான பதிலே இது.

அதிதீவிர விடுதலைபுலிகள் ஆதரவாளருக்கு - எல்லாமும் முடிந்து போய் விட்டதாக இருக்கலாம். அதனால் அவர்கள் scorched earth நடைமுறையை கையில் எடுத்து, புலம் பெயர் நாடுகளில் ஈழதமிழர் அரசியலை வன்முறை கலாச்சாரம் என அடையாளபடுத்தி விட்டு போவதில் ஒரு சிறு திருப்தியும் அடையலாம்.

ஆனால் ஊரிலும், வெளிநாட்டிலும் இன்னும் இந்த இனம் மிச்சமிருக்கிறது. அதன் நியாயமான அபிலாசைகளும் மிச்சம் இருக்கிறன.

அவற்றை நோக்கி நகர எமக்கு பல பானைகள் தேவை. 2009 ற்கு முன்னிருந்ததை விட இப்போதான் எமக்கு பானைகளின் உறவு அதிகம் தேவைபடுகிறது.

ஆகவே பானையை உடைக்கும் அரசியலை விமர்சித்தே ஆக வேண்டும்.

2 hours ago, ரஞ்சித் said:

தமிழர்கள் போராட்டத்தினை 80 களின் ஆரம்பத்தில் ஆரம்பித்தபோது அது ஆரம்பிக்கப்படத் தேவையாக இருந்த காரணங்களை விடவும் இப்போது அதிகளவான காரணங்கள் இருக்கின்றன.

இது உண்மைதானா?

இந்த முறை போய் வந்த பின் இந்த ஒப்பீடு சரியா என எனக்குள் ஒரு குழப்பம் உள்ளது.

இரு காலப்பகுதியையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுகிறேன். விவாதிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இங்கே அவர்களை உண்மையில் யாரும் குறைகூறவில்லை.

அவர்கள் பலமாக இருந்த போது பலந்தராத அணுகுமுறையை, இப்போ ஒன்றுமே இல்லாத காலத்தில் மீண்டும் பயன்படுத்துவோம்….

இனித்தான் பானையில் எதுவும் இல்லையே, அட்லீஸ்ட் பானையையாவது உடைக்கும் இன்பத்தை அடைவோம் என எழுதியதற்கான பதிலே இது.

அதிதீவிர விடுதலைபுலிகள் ஆதரவாளருக்கு - எல்லாமும் முடிந்து போய் விட்டதாக இருக்கலாம். அதனால் அவர்கள் scorched earth நடைமுறையை கையில் எடுத்து, புலம் பெயர் நாடுகளில் ஈழதமிழர் அரசியலை வன்முறை கலாச்சாரம் என அடையாளபடுத்தி விட்டு போவதில் ஒரு சிறு திருப்தியும் அடையலாம்.

ஆனால் ஊரிலும், வெளிநாட்டிலும் இன்னும் இந்த இனம் மிச்சமிருக்கிறது. அதன் நியாயமான அபிலாசைகளும் மிச்சம் இருக்கிறன.

அவற்றை நோக்கி நகர எமக்கு பல பானைகள் தேவை. 2009 ற்கு முன்னிருந்ததை விட இப்போதான் எமக்கு பானைகளின் உறவு அதிகம் தேவைபடுகிறது.

ஆகவே பானையை உடைக்கும் அரசியலை விமர்சித்தே ஆக வேண்டும்.

இது உண்மைதானா?

இந்த முறை போய் வந்த பின் இந்த ஒப்பீடு சரியா என எனக்குள் ஒரு குழப்பம் உள்ளது.

இரு காலப்பகுதியையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுகிறேன். விவாதிக்கலாம்.

சகோ 

உள்ளதை உள்ளபடி பேசப் போகிறோம் என்றால் முதலில் 2009க்கு முதலில் வைக்கப்பட்ட பானை பற்றி எழுதியதை 2024இல் முடிச்சு போட்டு முடிப்பது நல்லதல்லவே. 

2009 க்கு முன்னர் பானையில் ஏதோ இருப்பதாக பல சகாப்தமாக தமிழர்களை ஏமாற்றிய சிறீலங்காவை தோலுரித்து காட்டவே புலிகளால் முடிந்தது.

ஆனால் அதன் பின்னர் நாம் அங்குல மும் நகரவில்லை. நகரப்போவதுமில்லை. இது தான் களநிலை.  நாம் எதையும் எழுதலாம். ஆனால் களத்தில் எதுவும் இல்லை என்றால் பூச்சியம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

தான் துவாரகா என்று சொல்லிக்கொண்டு முன்னால வந்த பிள்ளையை விட சுஜி என்கின்ற இந்தப்பிள்ளை பெரிய புரட்சியை ஏற்படுத்த போகுதோ? 😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நியாயம் said:

தான் துவாரகா என்று சொல்லிக்கொண்டு முன்னால வந்த பிள்ளையை விட சுஜி என்கின்ற இந்தப்பிள்ளை பெரிய புரட்சியை ஏற்படுத்த போகுதோ? 😁

புரட்சி என்பது ஒரு கையால் தான் ஆரம்பிக்கும். மக்கள் தொடரவேண்டும்.

இந்த பெண்ணின் வீடியோவை ஒரு தடவை தான் நான் பார்த்தேன். நான் தெளிவாக இருக்கிறேன் யாரை வளர்க்க வேண்டும் யாரை தள்ளி வைக்க வேண்டும் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

உண்மையே பேசவேண்டும் என்றால் நாம் அங்கே நின்றிருக்க வேண்டும். நின்றவன் நான் பேசுவது பொய் என்று சொல்லி எதை சாதிக்க போகிறீர்கள்??

என் வாழ்வில் பெரும் பகுதியை என் உழைப்பில் பெரும் பகுதியை கொடுத்தவன். வேறு யாருடனும் விடும் புலுடாக்களை என்னிடம் விடவேண்டாம் விடமுடியாது. 

உங்கள் உழைப்பறியோ உங்கள் தனிப்பட்ட வாழ்வு பற்றியோ நான் எதுவும் பேசவில்வும் இல்லை அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை.  தமிழர்  அரசியலை பற்றி விமர்சிக  அனைவருக்கும் உரிமை  உண்டு.  தனி நபர்களை விமர்சிக்கவில்லை. 

பொதுமக்களின் வாழ்வை பாதிக்கும் அரசியல் முடிவுகளை எடுக்கும்  அரசியல்  செய்த/ செய்யும் எல்லோரதும் அரசியல் நடவடிக்கைகளை எவரும்  விமர்சிக்கலாம்.  (கவனிக்க அவர்களது தனிப்பட்ட வாழ்வை அல்ல)

 எவராவது தான் செய்யும் அரசியல் நடவடிக்கைகளை யாரும் விமர்சிக்க கூடாது என்று நினைத்தால் அவர் அரசியலில் ஈடுபடவோ தலைமை வகிக்கவோ  அருகதை  அற்றவர்.  

1 hour ago, நியாயம் said:

தான் துவாரகா என்று சொல்லிக்கொண்டு முன்னால வந்த பிள்ளையை விட சுஜி என்கின்ற இந்தப்பிள்ளை பெரிய புரட்சியை ஏற்படுத்த போகுதோ? 😁

இந்த விடியோவை முதல் முதல் பார்தத போது துவாரகா என்று வந்த பெண்ணுக்கு தான் தான் அடிவிழுவதாக  நினைத்தேன்.  பின்னர் தேன் இவர் வேறு ஒருவர் என்பதை அறிந்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, island said:

அமெரிக்கா மட்டுமல்ல  தமிழர்களாகிய நாமும் அப்படித்தான்.  1980 களின் ஆரம்பத்தில் சீக்கியர்களின் காலிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை வலுவடைந்து பிந்தரன்வாலே தலைமையில் போராடியபோது அவர்களை இந்திரா காந்தியின் அரசு அடக்கி ஒடுக்கியபோது எந்த தமிழ் இயக்கங்களுக்கே (புலிகள் உட்பட்ட) அதற்கெதிராக  மூச்சசுகூட விடவில்லை. ஏன்?  1984 ல் பொற்கோயிலில் அவர்களின் தலைவர் உட்பட  பல போராளிகளை இந்திய இராணுவம் கொன்ற போதும் அவர்களின் பிரச்சனையை தீர்க்க அரசியல் ரீதியில் முயலாது இராணுவத் தீர்வை நாடிய போதும் எந்த தமிழ் ஆயுத இயக்கங்களோ மிதவாத அமைப்புகளோ அதற்கெதிராக  மூச்சு கூட விடவில்லை.  ஏன்? சுயநலம். 

 நங்கள் மட்டும் சுயநலவாதிகளக இருப்போம் மற்றவர்கள் எல்லோரும் தமது தமது நலன்களை விட்டு எமக்கு உதவ வேண்டும் என்ற நினைப்பே பச்சை சுயநலத்தின் வெளிப்பாடே.  

இன்றும் வெளிநாட்டில் செயல் படும் காளிஸ்தான் செயல் பாட்டாளரை இந்திய  வேட்டையாடுகிறது ..கனடா பிர்ஜை அவர்...பிரிவினை கோருபவர்களை எந்த சந்தர்ப்பதிலும் இவர்கள் வர வேற்கப்போவதில்லை...மேற்கின் நலன் கருதி பிரிவனை அடைந்த நாடுகள் தான் அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

இது ஓரளவிற்கு உண்மைதான். நாம் வங்கதேச விடுதலை பற்றித் தெரிந்து கொண்டளவிற்கு, காலிஸ்த்தான் விடுதலைப் போராட்டம் குறித்து தெரிந்து வைத்திருக்கவில்லை.

இதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. பொற்கோயிலுக்குள் இந்திரா காந்தி இராணுவத்தை அனுப்பியது 1984 இல். அப்போது, புலிகள் உட்பட இயக்கங்கள் எல்லாமே இந்தியாவை தமது நேச சக்தியாகவே பார்த்து வந்தார்கள், குறிப்பாக இந்திராவை. ஆகவே, இந்திராவின் அரசுக்கெதிராகப் போராடிய பிந்தரன் வாலேயிடமிருந்தும், காலிஸ்த்தான் விடுதலை முன்னணியிடமிருந்தும் தம்மை விலத்தி வைத்திருந்ததாக எண்ணுகிறேன். அதாவது, காலிஸ்த்தானுக்கு ஆதரவு கொடுக்கப்போய், இந்திராவின் கோபத்திற்கு ஆளாகி, கிடைக்கும் உதவியையும் கெடுத்துவிடாமல் இருப்பதே சரியென்று எண்ணியிருக்கலாம். சுயநலம் தான். 

ஆனால், பலஸ்த்தீன விடுதலைப் போராட்டம் குறித்து இயக்கங்களுக்கிடையே அனுதாபம் இருந்தது. பணம் கொடுத்து பயிற்சிக்காக லெபனானுக்கும், பலஸ்த்தீனதிற்குச் சென்றாலும், அம்மக்களின் போராட்டம் குறித்த அனுதாபம் இருந்தது. 

ஈழத்தமிழர்கள் மற்றைய இனங்களுக்காகக் குரல் கொடுப்பதில்லை என்பது பரவலான குற்றச்சட்டுத்தான். அதில் உண்மையில்லாமலும் இல்லை. இந்தியா மீதும், தாம் வாழும் நாடுகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.  

தனது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள ஆட்சியதிகாரத்தில் இருப்போரையே அமெரிக்கா ஆதரிக்கிறது என்கிறேன். அதாவது, ஆட்சியில் இல்லாத, அதிகாரத்தில் இல்லாத ஈழத் தமிழர்களை அமெரிக்கா எப்படி ஆதரிக்கும்? தமிழர்களுக்கூடாக தனது நலன்களை எப்படி அமெரிக்கா உறுதிப்படுத்திக்கொள்ளும்? ஆகவேதான், எமக்கு அமெரிக்கா உடவப்போவதில்லை என்று கூறுகிறேன். சரி, எம்மிடம் என்னதான் இருக்கிறது அமெரிக்காவுக்கு விட்டுக் கொடுப்பதற்கு என்று கூறுங்கள்? நாம் என்ன செய்தால் அமெரிக்கா தனது மனதை மாற்றி எமக்கு உதவ முன்வரும் என்று சொல்லுங்கள்? எம்மால் அமெரிக்காவின் நலன்களை எப்படிப் பாதுகாத்துக் கொடுக்கலாம் என்று சொல்லுங்கள்? நாம் ஒரு இனமாக இனியாவது சிந்திக்கலாம். 

நான் கூறவந்த விடயம்,  தமது நலன்களைப் பாதுகாப்பதற்காக சமரசம் செய்வதும், சில ராஜதந்திர உறவுகளை மேற்கொள்ளுவதும் உலக வழமை. அதற்காகவே காலிஸ்தானை உதாரணம் காட்டினேன். தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி,  தனக்கு இலாபம் தரும்  வர்த்தகத  தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள்  நடக்கும் மனித உரிமை விவகாரங்களை  தமிழீழமும்  கருத்தில் எடுத்திருக்காது.  இது இயல்பானது.  நாட்டின் நலன் கருதி அவ்வாறு தான் நடந்து கொள்ளவேண்டும். 

ஆகவே இதல் மற்றய நாடுகளை குற்றம் சாட்டுவது எமக்குப் பயன்றறதுடன் எமக்கு பாதகமாகவும் அமையும். 

 ஒரு நாடு என்ற அங்கீகாரத்துடன் உள்ள தனது எதிரிக்கு உலகில் இயல்பாக உள்ள அனுகூலங்கள் என்ன  என்பதையும் உலக அங்கீகாரமற்ற இயக்கம் என்ற ரீதியில் உலகில் இயல்பாக எமக்கு உள்ள  பிரதிகூலங்கள் என்ன என்பதையும் ஆழமாக சிந்தித்து  தனது அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டியது போராட்டதை நடத்தும் விடுதலை இயக்களின் கடமையே தவிர உலக நாடுகளின் வேலையோ மக்களின் வேலையோ அல்ல.  உதாரணத்திற்கு தன்னுடன் ராஜதந்திர உறவு இல்லாத  நாட்டு ராஜதந்திரிகளை தமது நாட்டில் இருந்து வெளியேற்றுவது ஐநாவால்  அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் நடைமுறை.  உலக அங்கீகாரத்துக்காக போராடும் ஒரு விடுதலை அமைப்பு அதே நடைமுறையை பின்பற்றுவது ராஜதந்திரமல்ல.  

ஐரோப்பியயூனியன் தம்மை பயங்கரவாத பட்டியலில் இட்டது என்பதற்காக அதில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் யுத்தநிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இருந்து அவர்களை வெளியேற்றிய செயலால் இலாபமடைந்தது ஶ்ரீலங்கா அரசே. வெறும் உணர்ச்சிவசப்பட்டு இதை சிலர் சிலாகிக்கலாம். ஆனால் உலக அளவில் எமது நிலையை உணர்ந்தே  நாம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேனுல் அதனால் விளையும் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்.  

 இது போல பல விடயங்களைக் கூறலாம்.  இவையெல்லாம் இனி யோசித்து என்ன பலன் என்றோ அல்லது இவை  பேசாப்போருள்கள் அல்லது பேசாமல் மறைக்கப்பட வேண்டியவை என்று  யாராவது நினைத்தால் அந்த அதே போன்ற தவறுகளையே இனியும் எதிர்காலத்திலும் செய்து எம்மை தாமே நாசப்படுத்திக்கொள்வோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 11/4/2024 at 22:51, goshan_che said:

ஆனால் இதே போன்ற வல்லாதிக்க நாடுகளை கெட்டித்தனமாக டீல் பண்ணி (உங்கள் பாசையில் காலில் விழுந்து) தமக்கான தீர்வை பெற்ற இஸ்ரேலும், தென்னாபிரிக்காவும், அயர்லாந்தும், கொசோவோவும்,  சவுத் ஒசேசியாவும், தென்சூடானும் கூட வரலாற்றில் உள்ளன.

மேற்குலகு (அமெரிக்கா) தம் நலனுக்காக மட்டும் இந்த நாடுகளை அங்கீகரித்தன. அதிலும் கோசோவோ நாட்டை தம் பழி தீர்க்க அங்கீகரித்தது(ன)

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

இன்றும் வெளிநாட்டில் செயல் படும் காளிஸ்தான் செயல் பாட்டாளரை இந்திய  வேட்டையாடுகிறது ..கனடா பிர்ஜை அவர்...பிரிவினை கோருபவர்களை எந்த சந்தர்ப்பதிலும் இவர்கள் வர வேற்கப்போவதில்லை...மேற்கின் நலன் கருதி பிரிவனை அடைந்த நாடுகள் தான் அதிகம்

நான்  காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, island said:

நான்  காலிஸ்தானை உதாரணம் காட்டியது நீங்கள் கூறிய விடயத்துக்கக அல்ல. தமது நலன்களை முன்னிறுத்தி மற்றயவற்றை புறக்கணித்தல் என்பதை தமிழரும் செய்துள்ள நிலையில் மற்றயவர்களை அதற்காக குற்றம் சாட்டுவது அபத்தம்.  

சகலரும் தங்கள் நலன் சார்ந்தே செயல் படுகின்றனர் என்பதை தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நியாயம் உண்டு....அதற்காக ஒர் அட்டவனைப்படி செயல் படுவது இந்த உலகில் சாத்தியமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, island said:

தமிழீழம் ஒன்று உருவாகி இருந்தாலும் அதன் பொருளாதார நலன்களை முன்னிறுத்தி,  தனக்கு இலாபம் தரும்  வர்த்தகத  தொடர்பில் இருக்கும் ஒரு நாட்டினுள்  நடக்கும் மனித உரிமை விவகாரங்களை  தமிழீழமும்  கருத்தில் எடுத்திருக்காது.

 இப்போது தமிழீழம் இருந்தால்  மோடி இராகம் தான் மணிப்பூரில் பெண்கள் கவுரவிக்கபடுகின்றனர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.