Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU   08 APR, 2024 | 01:39 AM

image

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் இன்று (07.04.2024) காலை குறித்த ஆசிரியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள  பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை முடிந்து வீட்டிற்குச் சென்ற சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாகத் தெரிவித்துள்ளான்.

இதனைத் தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனைத் தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்குக் கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆசிரியை 'உங்கள் மகனுக்கு அ, ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன், மகனுக்கு அடிக்காமல் கொஞ்சுவதா என ஆசிரியர் கேட்டுள்ளார்.

காயமடைந்த சிறுவன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டமையுடன் பொலிஸாரிடமும் முறைப்பாடு அழிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாகச் சிறுவன் மீது தாக்குதல் மேற்கொண்ட ஆசிரியை கைது செய்யப்படாமையினால் சமூக வலைத்தளங்களில் பொலிஸாருக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருந்தன.

இந்நிலையில் வவுனியா  ஈச்சங்குளம் பொலிஸார் இன்று காலை குறித்த ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/180657

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும் பொழுது இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆசிரியர்கள் என்ற கோபமே வருகிறது.. 

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் உள்ள நடைமுறைகளாலால் எங்களது எண்ணங்களிலும் மாற்றம் வருகிறதா? தெரியவில்லை ஆனால் எங்கள் ஊர் ஆசிரியர்கள் கொஞ்சம் கவனமாக நடக்கவேண்டும் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் தரம் 2 படிக்கும் மாணவர் தானே இன்னும் கற்றுக் கொள்ள எவ்வளவு காலம் எவ்வளவு வயதுகளை அந்தப பிள்ளை கடந்து செல்ல வேண்டும்.பொறுமையாக கற்றுக் கொடுக்கும் பக்குமற்ற ஆசிரியர்கள் எதற்காக ஆசிரியப் பணிக்கு வருகிறார்கள்...😒

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, P.S.பிரபா said:

நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை

அதை போய் வீட்டில் சொன்னால் வீட்டில் டபுளா வாங்கி கட்ட வேண்டி வரும் .

😀

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, P.S.பிரபா said:

நாங்கள் படித்த காலத்தில் எல்லாம் அடி வாங்காத நாளே இல்லை ஆனால் இப்பொழுதெல்லாம் இந்த மாதிரி செய்திகள் வரும் பொழுது இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆசிரியர்கள் என்ற கோபமே வருகிறது.. 

எத்தனையோ பெற்றோர்கள் தனது பிள்ளைகளை தண்டிக்க முடியாமல் வாத்தியார்களிடம் முறையிட்டு அவர்கள் திருத்தியெடுத்த காலமும் இருந்தது.

இப்போ ஆமி பொலிஸ் அடியெல்லோ அடிக்கிறார்கள்.

14 minutes ago, பெருமாள் said:

அதை போய் வீட்டில் சொன்னால் வீட்டில் டபுளா வாங்கி கட்ட வேண்டி வரும் .

😀

 

  • கருத்துக்கள உறவுகள்

அடியாத மாடு படியாது என்பது பொய்யாகிபோய் கனகாலம். ஆசிரியத் தொழில் என்பது கத்தியில் நடப்பது போலாகி விட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்

மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் மீது சரியான நடவடிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் மீது சரியான நடவடிக்கை.

உங்கள் கருத்து மீது முரண்பாடு இல்லை ஆனால் எனது பிள்ளை என்றால் அ, ஆ சொல்லு பார்ப்போம் என்று தான் விசாரணை தொடங்கும். எவருமே எனது பிள்ளைகளை தண்டிப்பது தவறு என்று நினைப்பவன் நான். ஆனால் அதற்கு நான் இடம் வைப்பதில்லை. இதற்கு வாத்திமாரே பரவாயில்லை என்ற நிலை தான் என் வீட்டில். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

மாணவன் மீது தாக்குதல் நடத்திய ஆசிரியர் மீது சரியான நடவடிக்கை.

ஓம் வவுனியா மாவட்ட நீதவான் இளம்செழியனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது என்று அறியக் கூடியதாக இருந்தது.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

அடியாத மாடு படியாது என்பது பொய்யாகிபோய் கனகாலம். ஆசிரியத் தொழில் என்பது கத்தியில் நடப்பது போலாகி விட்டது. 

உண்மைதான்...

மாணவர்களுக்கு  அடிக்கக்கூடாது என்ற சட்டம் உள்ள ஜேர்மனியில் கூட ஆசிரியர் தொழில் கத்தி மேல் நடப்பது போன்றதுதான்.....

ஆசிரியர் மாணவரை பார்த்து ஏய் என்று அதட்டினாலே.....ஆசிரியர் கதை கந்தல்.....🤣

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிட்னியில் தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டார்கள் போதை பொருள் விற்பனை செய்த குற்றசாட்ட்டின் பெயரில்ல் ....இந்த இளைஞர்கள் மூவரும் பட்டதாரிகள் என நினைக்கிறேன் ..ஒருவர் சட்டத்தரணி ...வசதியாக வாழக்கூடிய நிலமை இருந்தும் ஏன் இப்படியான செயலில் ஈடுபதின்றனர் என தெரியவில்லை...

அடி வாங்கின மாணவர்களும் தப்பு செய்கின்றனர்
அடி வாங்காத மாணவர்களும் தப்பு செய்கின்றனர்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.