Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

visa-free-sri-lanka-e1714215746267-750x3

ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக,

சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது.

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2024/1380064

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, தமிழ் சிறி said:

மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

அமெரிக்கா கனடா இங்கிலாந்து அவுஸ்திரேலியா இதற்குள் அடங்குமா?

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்.

ஆனால் இதை கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏன் ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் விசேட சலுகை என கேட்டால் - உங்களையும் பரிசீலிக்கிறோம் என சொல்லும் உத்தி.

இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, இந்தியா எண்டால் எப்பவும் ஸ்பெசல்தான்.

41 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ரீலங்கா பாஸ்போட்டுக்கு.... அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா.... இலவச விசா கொடுக்குமா. என்று ஒருக்கால்  கேட்டு சொல்லுங்கள். 🤣

ஓ இப்படியும் ஒரு பிரச்சனை உள்ளதா?

அப்ப 60 நாடுகளையும் இலங்கை இலவசமாக உள்ளே விடுறாங்களா குமாரூ?

7 minutes ago, goshan_che said:

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்

இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இதை முன்னரும் சொன்னார்கள் ஆனால் கிடப்பில் போட்டவிட்டார்கள்.

ஓம்….மேற்கை சாந்தபடுத்த சொல்வது.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து

மேற்படி நாருகளில் இருந்து அதிக உல்லாசப்பயணிகள் வருகையும் மேலும் வருகையை ஊக்கப்படுத்தவுமாக இருக்கலாம்.
அத்தோடு மேற்கு  நச்டுகளின்  விசா கட்டணம் டொலர் வருவாய்க்கு தேவை என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, goshan_che said:

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

அண்மையில் எங்கோ வாசித்த செய்தியில்.... ரஷ்ய, சீனர்கள் இலங்கையிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றார்களாம். வரும் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் கடையில்தான் பொருட்களை கொள்வனவு செய்வதால்... உள்ளூர் வியாபாரிகள் மனவருத்தத்தில் இருப்பதாக வாசித்தேன்.

இந்திய சுற்றுலாப் பயணிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் ஊரில்  இருந்து வரும்போதே புளிச்சாதத்தை கட்டிக் கொண்டு வந்து கைலாயம் வரை போகக் கூடிய ஆட்கள்.
இவர்களிடமிருந்து...  அந்நிய செலவாணியை எடுக்கிறதெண்டால், "கல்லில் நார் உரிக்கிற வேலை" கண்டியளோ.... 😂 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

அண்மையில் எங்கோ வாசித்த செய்தியில்.... ரஷ்ய, சீனர்கள் இலங்கையிலேயே கடைகளை திறந்து வியாபாரம் செய்கின்றார்களாம். வரும் நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அவர்களின் கடையில்தான் பொருட்களை கொள்வனவு செய்வதால்... உள்ளூர் வியாபாரிகள் மனவருத்தத்தில் இருப்பதாக வாசித்தேன்

எங்கேயோ இல்லை அண்ணை - எனது பயணக்கட்டுரையில்தான் இதை எழுதி இருந்தேன்🤣.

56 minutes ago, தமிழ் சிறி said:

இந்திய சுற்றுலாப் பயணிகளை பற்றி சொல்லத் தேவையில்லை. அவர்கள் ஊரில்  இருந்து வரும்போதே புளிச்சாதத்தை கட்டிக் கொண்டு வந்து கைலாயம் வரை போகக் கூடிய ஆட்கள்.
இவர்களிடமிருந்து...  அந்நிய செலவாணியை எடுக்கிறதெண்டால், "கல்லில் நார் உரிக்கிற வேலை" கண்டியளோ.... 😂 🤣

வரும் போது லக்கேஜில் பிளாஸ்டிக் சாமனை கொண்டு வந்து வித்து, உள்ள செலாவணியையும் அள்ளி கொண்டு போவார்கள்🤣.

ஆனால் இப்போ இதில் ஒரு சின்ன மாற்றம் -மாலைதீவுடன் லடாய் என்பதால் செலவழிக்கும் கோஷ்டிகள் இலங்கை வருவது கூடியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

எங்கேயோ இல்லை அண்ணை - எனது பயணக்கட்டுரையில்தான் இதை எழுதி இருந்தேன்🤣.

ஓம்... கோசான். இப்போ நீங்கள் எழுதியது நினைவிற்கு வருகின்றது.   🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

60 நாடுகள் எனில் அதில் கட்டாயம் சில மேற்கு நாடுகள் அடங்கும் என நினைக்கிறேன்.

ஆனால் இதை கிடப்பில் போட்டு விடுவார்கள். ஏன் ரஸ்யா, சீனா வுக்கு மட்டும் விசேட சலுகை என கேட்டால் - உங்களையும் பரிசீலிக்கிறோம் என சொல்லும் உத்தி.

இலங்கைக்கு, சீனா, ரஸ்யா, இந்தியா எண்டால் எப்பவும் ஸ்பெசல்தான்.

இதுவரை reciprocal நீங்கள் எப்படியோ நாங்களும் அப்படி) முறையில்தான் இலங்கையின் வீசா நடைமுறை, கட்டணங்கள் இருந்தது.

இப்போ 7 நாடுகளை இலவசமாக விடப்போவதாக சொல்கிறார்கள்.

இதில், ரஸ்யா, சீனா, இந்தியா இலங்கை வருவோரில் முதல் 5 க்குள் வரும். 

இதனால் வரும் வீசா வருவாய் அரசுக்கு கணிசமான நட்டத்தை தரும்.

சிலவேளை அதிக அளவில் வந்தால் - வரும் இலாபம் இதை ஈடு செய்கல்ய கூடும்.

சீன இந்திய ரஷ்ய பயணிகள் இலங்கையில் ஒரு நாளில் செலவு செய்யும் பணம் சராசரியாக $20-50 டாலர் க்குள் தான் உண்டு. இதை ரணிலே ஒருமுறை பிச்சைக்கார உல்லாசப் பிரயாணிகள் என்ற பொருள் படக் கூறி  எம் நாட்டுக்கு மேற்கு ஐரோப்பிய பயணிகள் வேண்டும் என கூறி இருந்தார். 

போற போக்கைப் பார்த்தால் இலங்கை இன்னும் பிச்சைக்காரர்களிடம் கையெந்தும் நிலையில் இருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கு. 👍🏼

இப்ப காசு பணம் ஆரிட்ட இருக்கெண்டால் ரஷ்யா,சீனாவிட்ட தானே. அதிலையும் சீனாக்காரன் ரஷ்யாக்காரன்கள் தான்  காசை காசெண்டு பாராமல் விசுக்கி தள்ளுறாங்கள். :cool:

உக்ரேன் சண்டைக்கு முதல் மேற்குலக நாடுகளுக்கு வாற காசுக்காறர் ஆரெண்டு பார்த்தால் எல்லாம் ரஷ்யர்கள்தான். இப்ப அவங்களையும் தடை செய்து போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்.🤣

ரஷ்யங்களின்ர கையில எப்பவும் பச்சை தாள். மஞ்சள் தாள்,கத்தரி பூ கலர் தாள் தான்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பகிடி said:

சீன இந்திய ரஷ்ய பயணிகள் இலங்கையில் ஒரு நாளில் செலவு செய்யும் பணம் சராசரியாக $20-50 டாலர் க்குள் தான் உண்டு. இதை ரணிலே ஒருமுறை பிச்சைக்கார உல்லாசப் பிரயாணிகள் என்ற பொருள் படக் கூறி  எம் நாட்டுக்கு மேற்கு ஐரோப்பிய பயணிகள் வேண்டும் என கூறி இருந்தார். 

போற போக்கைப் பார்த்தால் இலங்கை இன்னும் பிச்சைக்காரர்களிடம் கையெந்தும் நிலையில் இருந்து விடுபடவில்லை என்றே தோன்றுகிறது.

இதில் மூன்று விடயம்.

Small businesses are the engine of the economy என்பது யூகே அரசியலில் தாரக மந்திரம். பொருளாதாரம் முன்னேற சிறு வியாபாரம் உயர்வது அவசியம்.

அடி மட்டத்தில் பணம் புழங்கினால்தான், மக்கள் காசை செலவிடுவர், மக்கள் காசை செலவிட்டால்தான் பொருளாதாரம் வளரும். 

இந்த 50 டொலர் காரர் நேரடியாக ஹோஸ்டல் நடத்துபவர், கொத்து ரொட்டிகாரார், இளனி விற்பவருக்கு நேரடியாக 50 டொலரை கொடுப்பார்கள், ஆனால் 300 டொலர் காரர் 5 நட்சத்திர ஓட்டலில் செலவழித்து அது கீழ் மட்டத்துக்கு ஒழுகி வரும் போது (trickle down economy) 30 டொலர் வருவதே பெரிய விடயமாக இருக்கும்.

அடுத்தது எண்ணிக்கை. 4x250 = 20x50. நாட்டின் பொருளாதாரத்துக்கு 4 நட்டத்திர விடுதி இலாபம் பார்பதை விட 20 ஹொஸ்டல் லாபம் பார்ப்பது நல்ல பலனை தரும்.

மூன்றாவது Trail Blazers. எப்போதுமே ஒரு இடத்துக்கு முதலில் போவது backpackers, shoe-string budgeters எனப்படும் 30 டொலர் பேர்வழிகள்தான். அவர்கள் போய் ஒரு vibe ஐ உருவாக்க, பின் tour operators 300 டொலர் பார்ட்டிகளை கூட்டி வருவார்கள். இன்றைய insta உலகில் - இந்த 30 டொலர் பார்ட்டிகள் கிட்டதட்ட ஒரு நாட்டுக்கு brand ambassadors போல.

ஆகவே எல்லாரையும் கவரும் விதமாகவும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகவும் சுற்றுலா துறையை கட்டி எழுப்பலாம் என நான் நினைக்கிறேன்.

#அதிதி தேவோ பவ🤣

48 minutes ago, குமாரசாமி said:

சிறிலங்கா நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கு. 👍🏼

இப்ப காசு பணம் ஆரிட்ட இருக்கெண்டால் ரஷ்யா,சீனாவிட்ட தானே. அதிலையும் சீனாக்காரன் ரஷ்யாக்காரன்கள் தான்  காசை காசெண்டு பாராமல் விசுக்கி தள்ளுறாங்கள். :cool:

உக்ரேன் சண்டைக்கு முதல் மேற்குலக நாடுகளுக்கு வாற காசுக்காறர் ஆரெண்டு பார்த்தால் எல்லாம் ரஷ்யர்கள்தான். இப்ப அவங்களையும் தடை செய்து போட்டு இப்ப முழுசிக்கொண்டு திரியினம்.🤣

ரஷ்யங்களின்ர கையில எப்பவும் பச்சை தாள். மஞ்சள் தாள்,கத்தரி பூ கலர் தாள் தான்.😎

இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் 67 நாடுகளுக்கு இலவச விசா!

சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் பொருட்டு 67 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏற்கனவே ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் 25 ஆம் திகதி வரையில் மாத்திரம் 121,500 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாகவும். முதல் நான்கு மாதங்களில் 700,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து தமது யூடியூப் சேனல்கள் மூலம் இலங்கையை விளம்பரப்படுத்தினாலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும், கண்டி பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் கண்டியில் இருந்து எல்ல வரையிலான ஒடிசி ரயிலின் டிக்கெட் கட்டணம் 3000 ரூபாவாக இருந்தாலும், புகையிரத திணைக்களத்தில் பணிபுரியும் சில அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுக்கு 8,000 ரூபா போன்ற அதிக விலைக்கு புகையிரத சீட்டை விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்த அதிகாரிகளுக்கு எதிராக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் மேலும் 45 சுற்றுலா வலயங்களை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/300543

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2024 at 00:40, goshan_che said:

இதில் உண்மை இல்லாமல் இல்லை.

இந்தியாவும், சீனாவும், ரஸ்யாவும் சராசரி மனிதருக்கு ஏழை நாடுகள்தான், அதே சமயம் பெரும் பணக்காரரின் நாடுகள் கூட. 

மேற்கத்திய பிரமாண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

மேற்கத்திய பிரமாண்டம் கொஞ்சம் கொஞ்சமாக கரைக்கப்படுகின்றது.

அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.

இந்த நாடுகளில் எப்போதும் வளம், செல்வம் இருந்தது ஆனால் அது சிலரிடம் குவிந்து இருந்தது.

மேற்கில் இது ஒப்பீட்டளவில் பரலவாக்கப்பட்டுள்ளது.

பிரமாண்டம் என பார்த்தால்….

விமானம் தாங்கி கப்பல்கள் சீனா, ரஸ்யாவிடம் எத்தனை அமெரிக்கவிடம் எத்தனை என பார்த்தால் வேறுபாடு புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அப்படியில்லை, லண்டனில் கடைக்கு போன போது தன்னை அவமானப்படுத்தினர் என்பதால், பத்து ரோல்ஸ்ரொய்ஸ் காரை வாங்கி இந்தியாவில் ஊர் கூட்டும் குப்பை லாரியாக பாவித்த மஹாராஜக்கள் எல்லாம் இருந்திருக்கிறார்கள்.

 

ஆதாரம் உள்ளதா? அல்லது  அம்புலி மாமாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 minutes ago, kalyani said:

ஆதாரம் உள்ளதா? அல்லது  அம்புலி மாமாவா?

அம்புலி மாமாதான்

ஆதாரம்👇

https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/

வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன்.

பிகு

6 கார், 10 அல்ல.

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அம்புலி மாமாதான்

ஆதாரம்👇

https://www.india.com/viral/maharaja-of-alwar-once-as-a-revenge-used-rolls-royce-to-collect-garbage-from-the-streets-2944690/amp/

வாசித்து, கிரகிக்க முடியுமாய் இருக்கும் என நம்புகிறேன்.

பிகு

6 கார், 10 அல்ல.

 

அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்பொய்.  உ  உங்கள் தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???


 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.
அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்  உங்கள் .தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???


 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, kalyani said:

அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்பொய்.  உ  உங்கள் தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???


 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.
அதெப்படி ரஸ்ய உக்ரேன் போருக்கு இந்தியம் ஊடகம்  உங்கள் .தரவுக்கு மட்டும் இந்திய  ஊடகம் ஆதாரம்???


 எப்படியான டக்லஸ் புரோ?? நேரத்துக்கு ஏற்ப பிரட்டும் தி**** கும்மல்.

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்….

கவ்வி கொண்டு ஓடவும்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு

ஒருத்தர் என் இக்னோர் லிஸ்டில் 3 வது நபராக சேர்ந்து விட் ரொம்பவே துடிக்கிறார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆடிக்கொருக்கா அமாவாசைக்கு ஒருக்கா கோசானோடு தனக எண்டே யாழ்களம் வாற கள்ள ஐடிக்கெல்லாம் இந்த ஆதாரமே ஓவர்….

கவ்வி கொண்டு ஓடவும்🤣

எந்த *************** இருந்தாலும்
ஒவ்வொரு நாளும்யாழுக்கு வந்து தமிழ் மக்களுக்காக பாடுபடும் ***************

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐஎஸ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் - இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை Published By: RAJEEBAN   21 MAY, 2024 | 10:08 AM   ஐஎஸ் அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும்  இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் உண்மையிலேயே ஐஎஸ் சந்தேகநபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும்  இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர். இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் சில நாட்களிற்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர். அவர்களிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை  ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த நபருக்காக காத்திருந்தவேளை இவர்கள் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அஹமதாபாத் விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கையடக்க தொலைபேசிகளில் காணப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட உரையாடல்கள் செய்திகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அவர்கள் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளோம் சந்தேக நபர்கள்  குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184106
    • களுத்துறையில் அதிக மழை வீழ்ச்சி பதிவு! Published By: DIGITAL DESK 3   21 MAY, 2024 | 09:23 AM நாட்டில்  சப்ரகமுவ, மேல்  மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா,  காலி மற்றும்  மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய  பலத்த  மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) காலை 8.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை  8.00 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பகுதியில் 107 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை,   களுத்துறை - இங்கிரிய பகுதியில் 79 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பண்டாரகம பகுதியில் 77 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. அத்தோடு, புத்தளம் மாவட்டத்தில்  மாதம்பே பகுதியில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 72 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/184099
    • Published By: DIGITAL DESK 3   21 MAY, 2024 | 08:41 AM (நா.தனுஜா) வட, கிழக்கில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாகாணங்களைச் சேர்ந்த பலரிடம் கேட்டறிந்ததாகவும், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.  யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது. அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் (18) கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தார். அதன் ஓரங்கமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்த செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், அவர்களிடம் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார். மூன்று பிரிவாக நடைபெற்ற இச்சந்திப்புக்களில் ஒன்றில் கலந்துகொண்டிருந்த 'அரகலய' போராட்டக்காரர்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களிடம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு நாட்டில் நிலவும் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீதான ஒடுக்குமுறைகள் என்பன தொடர்பில் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர்கள், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள்மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னரே அதற்கு எதிராகத் தடையுத்தரவு பெறப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மேலும் பல்வேறு வழிகளில் மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர்.  அதேவேளை இச்செயற்பாட்டாளர்களில் அங்கம்வகித்த தனியொரு தமிழ் பிரதிநிதியான ராஜ்குமார் ரஜீவ்காந்த், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசியல்கைதிகள் விவகாரம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடன் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். அதுமாத்திரமன்றி விசேடமாக தமிழர் விவகாரத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசுக்கு வலுவான அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தினார். அவற்றை செவிமடுத்த அக்னெஸ் கலமார்ட், தாம் உரிய அழுத்தத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அத்தோடு வட, கிழக்கில் தான் பல்வேறு தரப்பினரை சந்தித்தாகவும், அவர்களிடம் பல விடயங்களைக் கேட்டறிந்துகொண்டதாகவும் தெரிவித்த அக்னெஸ் கலமார்ட், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.  https://www.virakesari.lk/article/184098
    • Published By: DIGITAL DESK 3   21 MAY, 2024 | 09:33 AM   முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு  உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவு இயந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டுள்ளது. குறித்த விபத்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த 16 அகவையுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். உயிரிழந்த இளைஞனின் உடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள். https://www.virakesari.lk/article/184102
    • அண்ணை இலவசமாக தந்துவிட்டு கழிக்கத் தான் கவலையாக இருக்கு!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.