Jump to content

தமிழர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்? நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருப்பூரில் போராட்டம்! பதற்றம் .


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூர்: திருப்பூரில் தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர் ஓட ஓட விரட்டியதாக வெளியான வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிழைப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வருகை தருவது தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. வடமாநிலங்களில் சம்பளம் குறைவாக உள்ளதாலும் வேலைவாய்ப்பு பெரியளவில் இல்லை என்பதாலும் அவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.

ஹோட்டல், கட்டிட பணிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்களே அதிகம் இங்கு வருகிறார்கள்.. இருப்பினும், இப்படி அதிகப்படியாக வரும் வடமாநிலத்தவரால் தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகார் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

வடமாநிலத்தவர் ஊதியம், தொடர்ச்சியாக வேலை கிடைப்பது உள்ளிட்டவற்றால் வடமாநில தொழிலாளர்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வர ஆர்வம் காட்டுகிறார்கள். இது எப்போதோ நடக்கும் சம்பவம் இல்லை.. வட இந்தியாவில் இருந்து வரும் எந்தவொரு ரயில்களைப் பார்த்தாலும் நமக்கு இது புரியும். வடமாநிலத்தவர் மார்கெட்டை காட்டிலும் குறைந்த விலையில் வேலை பார்ப்பதாகவும் இதன் காரணமாகவே தமிழர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன. திருப்பூர் இருப்பினும், குறைந்த விலையில் ஆட்கள் தேவை இருப்பதால் வடமாநிலத்தவர் தொடர்ந்து இங்கு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் சென்னை உட்பட பெருநகரங்களில் மட்டுமே இவர்கள் அதிகம் வந்து கொண்டிருந்த நிலையில், இப்போது சென்னையைத் தாண்டி மற்ற சிறு நகரங்களிலும் செட்டில் ஆகத் தொடங்கியுள்ளனர். குறிப்பாகத் திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் சென்றால் வடமாநிலத்தவரையே பெரும்பாலான இடங்களில் பார்க்க முடியும். பரபர வீடியோ இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் தமிழக இளைஞர்களை ஓட ஓட விரட்டுவது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வந்தது. இது எங்கோ எடுத்தது இல்லை.. நம்ம திருப்பூரில் நடந்த சம்பவம் தான் இது. அங்கிருந்த தமிழக இளைஞர்களைப் பல நூறு வடமாநிலத்தவர்கள் இணைந்து ஓட ஓட விரட்டிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகப் புயலைக் கிளப்பியது. போராட்டம் அனுப்பர் பாளையத்தில் தமிழக தொழிலாளர்களைத் தாக்க முயன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பனியன் அலுவலகத்தைத் திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் ஆய்வு செய்து போராடியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆட்சியர் அலுவலகம் முற்றுகை இருப்பினும், தமிழர்களைத் தாக்கிய வடமாநிலத் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டும் நேற்று பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். இதனால் அங்குச் சற்று பதற்றமான ஒரு சூழல் உருவானது.

இதன் காரணமாகப் பாதுகாப்பு கருதிச் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது தொடர்பாகத் திருப்பூர் போலீசார் தரப்பில் கூறுகையில், "புகை பிடித்தல் குறித்து இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை தகராறாக மாறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் சிலர் தவறான தகவல் பரப்பி வருகின்றனர்" என்றார்

Read more at: https://tamil.oneindia.com/news/tiruppur/many-tamil-groups-are-protesting-against-north-indians-attacking-tamils-in-tiruppur/articlecontent-pf852979-496221.html
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் பிரச்சனை.

தமிழர் எங்கு சென்றாலும், எதிலும் குழு முனைப்பு இல்லை.

முக்கியமாக, சென்ற இடத்தில உள்ள வழங்ககங்கள், கலாசாரங்களை, பழக்கவழக்கங்களை . வேண்டும் என்றால் வீட்டுக்குள் கூட மாற்றி, எவ்வளவு இயைந்து வாழமுடியுமா அதுக்கிம் மேலான முயற்சி, அந்த சமூக பாரம்பரியங்களோடு சேர்ந்து ஒத்து வருவதற்கு    

தமிழர் நிர்வாக பகுதிக்கு வந்தோர், குழு முனைப்பு, அதுவும் மண்ணின் குடிகளான (இப்பொது) தமிழரை அடிப்பதில்.

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.


(புகை பிடித்தல் பிரச்னைக்கே குழுவாக எதிர்க்கும்  முயறசி என்றால் ... )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இது தான் பிரச்சனை.

தமிழர் எங்கு சென்றாலும், எதிலும் குழு முனைப்பு இல்லை.

முக்கியமாக, சென்ற இடத்தில உள்ள வழங்ககங்கள், கலாசாரங்களை, பழக்கவழக்கங்களை . வேண்டும் என்றால் வீட்டுக்குள் கூட மாற்றி, எவ்வளவு இயைந்து வாழமுடியுமா அதுக்கிம் மேலான முயற்சி, அந்த சமூக பாரம்பரியங்களோடு சேர்ந்து ஒத்து வருவதற்கு    

தமிழர் நிர்வாக பகுதிக்கு வந்தோர், குழு முனைப்பு, அதுவும் மண்ணின் குடிகளான (இப்பொது) தமிழரை அடிப்பதில்.

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.


(புகை பிடித்தல் பிரச்னைக்கே குழுவாக எதிர்க்கும்  முயறசி என்றால் ... )

ஸ்டாலின் அந்த செய்தியை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kadancha said:

உண்மையில், தமிழ்நாடு நிர்வாகம் ஓர் படிப்பனை வழங்காவிட்டால், கையில் இருந்ததும் பறிபோகும்.

நிச்சயம், யார் ஆட்சியாளர் என்பதை தமிழக அரசு அப்பட்டமாக எடுத்து காட்ட வேண்டும், கொடுக்கும் படிப்பினை மூலமாக.

 

போற போக்கைப் பார்த்தால் இலங்கைத் தமிழரின் நிலை தமிழ் நாட்டிலும் வருமோ என எண்ணத் தோன்றுகிறது.

22 minutes ago, பெருமாள் said:

ஸ்டாலின் அந்த செய்தியை தன்னுடைய தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தி கொண்டார் .

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே…

ப் பூ ஹா…ஹா.ஹா…🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இதற்கு ஒரே பரிகாரம் - இந்திய ஒன்றியத்தில் இருந்து தமிழ் நாட்டை பிரித்து தனித்தமிழ் நாடு ஆக்குவதே…

ப் பூ ஹா…ஹா.ஹா…🤣

இதே பிரச்சனைதான் இலங்கையிலும் நடக்கின்றது.
அங்கேயும் இதே கொள்கையை பரிந்துரை செய்வீர்களா சார்?? :cool:

ப் பூ ஹா....ஹா....ஹா... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, குமாரசாமி said:

இதே பிரச்சனைதான் இலங்கையிலும் நடக்கின்றது.
அங்கேயும் இதே கொள்கையை பரிந்துரை செய்வீர்களா சார்?? :cool:

ப் பூ ஹா....ஹா....ஹா... 🤣

இல்லை சார்….அங்கே இதே கொள்கையை முயற்சித்தும் முடியாமல் போய்விட்டது சார்….இப்போதைக்கு முயற்சிக்கும் வாய்ப்புகளும் இல்லை சார்.

ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லையே சார்?

முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன் விபரமாக, வட கிழக்கு மாநிலங்கள் தவிர இந்தியாவில் வேறு எங்கும் யாரும் போய் வாழலாம். கிட்டதட்ட ஈயுவில் இருக்கும் freedom of movement போல், இந்தியாவில் மாநிலங்கள் இடையே உள்ளது. 

இந்த freedom of movement பெரும்பான்மை பிரித்தானியருக்கு (எனக்கல்ல) பிடிக்காத படியால் பிரிட்டன் பிரெக்சிற் கேட்டு வெளியே வந்தது. இப்போ இங்கே ஐரோப்பிய எழுந்த மானமாக வந்து குடியேற முடியாது.

அதேபோல் இந்திய ஒன்றியத்தில் தமிழ் நாடு இருக்கும் வரை இதை தடுக்க முடியாது.

ஆக, TN-exit தான் ஒரே வழி.

எந்த தமிழ் நாட்டு அரசியல் கட்சி இதற்கு தயார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முன்னர் இன்னொரு திரியில் எழுதி இருந்தேன்

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

தேடுகிறேன். இதே போல் வட மாநிலத்தவர் பற்றிய திரி ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் இந்த கோரிக்கை மிக நியாயமானது.

ஆனால், வடகிழக்கு மாநிலங்கள் போன்ற சர்ச்சைகுரிய சர்வதேச எல்லை உள்ள பகுதியில், சர்வதேச எல்லைக்கும், நாட்டின் உள்ளக கோட்டுக்கும் (inner line) இடையே செல்ல, மட்டுமே இதுவரை இந்த பெர்மிட் பயன்பாட்டில் உள்ளது.

இந்தியாவின் அரசியல்சட்டம் இந்தியருக்கு, இந்தியாவுள் பூரண நடமாடும் சுதந்திரத்தை (Freedom of movement) கொடுக்கிறது.

இன்னர் லைன் பெர்மிட் என்பது அடிப்படையில் நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச நில எல்லை சம்ப்னதமானது.

மஹாராஸ்டிரா, கர்னாநடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட எந்த வடகிழக்கு இந்தியாவுக்கு வெளியே உள்ள மாநிலத்திலும் இந்த நடைமுறை இல்லை.

அதேபோல் கஸ்மீரின் இதை ஒத்த காணி வாங்கும் “விசேட அந்தஸ்தை” இந்திய பாராளுமன்று சில வருடங்கள் முன் இல்லாமல் ஆக்கியது.

ஆகவே தமிழ்நாட்டில் இந்த இன்னர் லைன் பெர்மிட்டை கொண்டு வருவதில் பின்வரும் சிக்கல்கள் உண்டு.

1. கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தமிழ் நாட்டை போன்ற சர்வதேச கடல் எல்லை மட்டும் உடைய நாடுகள் எதுவும் இதை கோராதவிடத்து, தமிழ் நாடு மட்டும் கோருவது, எது இங்கே இன்னர் லைன் என்ற கேள்வியையும், கூடவே இது நாட்டின் எல்லை பாதுகாப்புக்கு தேவையற்ற கோரிக்கை என்பதையும் காட்டி நிற்கும்.

2. அப்போ தமிழ் நாடு அரசு இப்படி கோருவது, தனியே வேற்று மாநிலத்தவரை தடுக்க என்றே கருதப் படும். அப்போது இதஈ எதிர்த்து வழக்கு போட்டால் - உச்ச நீதிமன்றம் இந்த பெர்மிட்டை தள்ளுபடியாக்கலாம்.

ஆனால் வழக்கு போடும் மட்டும் தமிழ்நாடு அரசு முயலாலாம்.

3. உண்மையில் பாரிய பிரச்சனை தமிழ் நாட்டில் இருந்து வெளியே போய் வேலை செய்வோரின் நலன் பற்றியதே. ஏனைய மாநிலங்களும் இதையே செய்தால் டெல்லி, பம்பாய், பெங்களூர், ஹைதரபாத், இன்னும் பல வெளிமாநிலங்களில் நல்ல வேலைகளில் இருக்கும் தமிழ் நாட்டவருக்கு ஆப்பாக முடியும்.

ஆகவே இந்திய ஒருமைப்பாடு, அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு இதை செய்வது சுலபம் அல்ல.

ஆனால் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்து எடுத்து விட்டால் இது மிக சாத்தியாமாகும்.

உண்மையில் இந்த வட மாநில குடிவரவு விடயத்தை தமிழ் தேசிய அரசியல் பேசுவோர் இதயசுத்தியுடன் அணுகில், அவர்கள் தனித்தமிழ் நாடு கோரிக்கையைதான் கையில் எடுக்க வேண்டும், இந்திய ஒருமைப்பாடு எனும் மொக்காட்டுகுள் இருந்து கையை காட்டாமல்.

Edited November 2, 2023 by goshan_che

3 hours ago, குமாரசாமி said:

எந்த திரி ஐயா?

நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா?

லிங்க் பிளீஸ்  🙏🏼

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத்தமிழருக்கு தனிப்பிரதேசம், உரிமை கிடைத்துவிடக்கூடாது என்பதற்காக தலையால் நடக்கும் கிந்தியா அதற்கு சம்மதிக்குமா? அங்கே ஒரு இனவழிப்பு நடந்தேறும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் இந்தியனுக்கு அடித்தான். இதுக்கை ஏன் வடக்கு  தெற்கு,.... ....என்று கதைக்க வேண்டும்??  இந்தியாவில் இந்தியன் வாழவும் வேலை செய்யவும் முடியும்   

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • லக்னோவ் வெற்றியுடனும் மும்பை ஏமாற்றத்துடனும் விடைபெற்றன Published By: VISHNU   18 MAY, 2024 | 12:57 AM (நெவில் அன்தனி) மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 67ஆவது போட்டியில் மும்பை இண்டியன்ஸை 18 ஓட்டங்களால் லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் வெற்றிகொண்டது. இம்முறை ப்ளே ஓவ் வாய்ப்பை ஏற்கனவே இழந்திருந்த இந்த இரண்டு அணிகளும் புகழ்ச்சிக்காக மாத்திரமே ஒன்றையொன்று எதிர்த்தாடிய நிலையில் அணித் தலைவர் கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகியோரின் அதிரடிகள், வீரர்களின் கட்டுப்பாடான பந்துவீச்சுகள் என்பன லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸை வெற்றியுடன் விடைபெறவைத்தது. அதேவேளை, 5 தடவைகள் சம்பியனான மும்பைக்கு கடைசிக் கட்டத்தில் நாமன் திர் வெளிப்படுத்திய அதிரடி உற்சாகத்தைக் கொடுத்த போதிலும் இறுதியில் இந்தத் தோல்வி பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை இண்டியன்ஸுக்காக விளையாடிய இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார மிகத் திறமையாக பந்துவீசி டெத் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக பந்துவீசத் தயாராக இருப்பதை நுவன் துஷார வெளிப்படுத்தினார். இது இவ்வாறிருக்க, மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகளிலும் இடம்பெற்ற பல வீரர்களுக்கு இந்தப் போட்டி அவரவர் அணிகளிடம் இருந்து பிரியாவிடை பெறும் போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளிலும் 3 வருட சுழற்சி காலத்திற்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்களது ஒப்பந்தம் இந்த வருடத்துடன் முடிவுக்கு வருகிறது. இதன் காரணமாக இரவுப் பொழுது அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமானதாக இருந்தது.  அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல். ராகுல், நிக்கலஸ் பூரண் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் பகிர்ந்த 109 ஓட்டங்கள் லக்னோவின் மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தது. நிக்கலஸ் பூரண் 29 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களையும் கே.எல் ராகுல் 41 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட மாக்கஸ் ஸ்டொய்னிஸ் (28), அயுஷ் படோனி (22 ஆ.இ.), க்ருணல் பாண்டியா (12 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் நுவன் துஷார 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பியூஷ் சௌலா 29 ஓட்டங்களுக்கு 3  விக்கெட்களையும்  கைப்பற்றினர். 215 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20   ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 196 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. டிவோல்ட் ப்ரெவிஸ், ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் 52 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் ஓட்ட வேகத்தை அதிகரிக்க முயற்சித்த மும்பை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் 32 ஒட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவ்வணி நெருக்கடியை எதிர்கொண்டது. ப்ரெவிஸ் 23 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரோஹித் ஷர்மா 38 பந்துகளில் 10 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இந்திய அணியில் இடம்பெறும் அவரது இந்த வருட ஐபிஎல் பெறுதிகள் திருப்திகரமாக இருக்கவில்லை. மத்திய வரிசையில் நாமன் திர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி மும்பை இண்டியன்ஸுக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 34 ஓட்டங்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக்கின் முதல் பந்தை சிக்ஸாக பறக்கச் செய்தார் நாமன் திர். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸாக்க முயற்சித்தார். ஆனால், க்ருணல் பாண்டியா பவுண்டறி எல்லையில் உயரே தாவி ஒரு கையால் பந்தை பிடித்த வேகத்தில்  அந்தரத்தில் இருந்தவாறே பந்தை உள்ளே எறிந்துவிட்டு வெளியே வீழ்ந்தார். இதன் மூலம் அவர் 5 ஓட்டங்களைக் தடுத்தார். அதுவே லக்னோவின் வெற்றிக்கான திருப்புமுனையாக அமைந்தது. அடுத்த பந்தில் இஷான் கிஷான் (14) ஆட்டம் இழக்க மும்பையின் வெற்றிக்கனவு தவிடுபொடியானது. மறுபக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய நாமன் திர் 28 பந்துகளில் 4 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ரவி பிஷோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: நிக்கலஸ் பூரண் https://www.virakesari.lk/article/183821
    • கேட்காது கண்ணிருந்தும் குருடு செவி இருந்தும் செவிடு
    • இன அழிப்பின் நினைவழியாத நாள்.. 2009 மே 18 இல் முள்ளிவாய்க்காலில் கட்டவிழ்ந்த இன அழிப்புப் பெருந்துயரை நினைவுகூர்ந்து அந்தக் குறுகிய வன்முறைவெளிக்குள் தம்மை ஆகுதியாக்கிக் கொண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளன.முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டு உயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கான சுடரேற்றி அஞ்சலி செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் இன்று ஈடுபடவுள்ளனர். ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆகப் பிந்திய – மிகமோசமான இந்தப் படுகொலையின் பெரும் துயரை நினைவேந்தும் நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் மாத்திரமல்லாது, பூமிபந்தெங்கும் ஈழத் தமிழர்கள் பரவி – சிதறி வாழும் தேசங்களிலும் நடைபெறவுள்ளன.'முள்ளிவாய்க்காலில் மூச்சையாகிப் போனவர்களுக்கு எந்தப் பெறுமதியையும் இந்த உலகம் தரவில்லை. வெறுங்கையோடு மாத்திரம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எம் மீது திணிக்கப்பட்ட வன்கொடுமைகளின் நினைவுகள் மட்டும்தான் எம்மிடம் எஞ்சியிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் கொடுந் துயரின் பின்னரும் எஞ்சியிருக்கும் அந்த நினைவுகளையாவது நாம் இறுகப் பற்றிக் கொள்ள முயற்சிக்கின்றோம். அந்த துயரவலிகள் நினைவுகளால் ஒத்தடம் பெறுவதை உணர்கின்றோம்.  எனவே எமது நினைவுகளை மீள் நிறுத்தி, எம்மின விடிவுக்காக மூச்சடங்கிப் போனவர்களுக்கும், கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காகவும், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெறும் நினைவேந்தலில், தாயக மக்கள் அலையென அணி திரண்டு அஞ்சலிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது   https://newuthayan.com/article/இன_அழிப்பின்_நினைவழியாத_நாள்..
    • 18 MAY, 2024 | 07:28 AM   முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலையின் 15 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அனைவரையும் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183838
    • 1958 இனக்கலவரத்தின் போது, தலையை மணந்து நல்லெண்ணை மணக்கிறதா?, காதில் ஓட்டை இருக்கிறதா எனப் பார்த்தும் தமிழர்களை அடையாளம் கண்டு சிங்களவர்கள் தாக்கினார்கள். அதற்குப் பிறகு காது குத்தல் என்பது எங்கள் மத்தியில் மெதுவாக அழிந்து போயிற்று. பணத்தேவைக்காக காது குத்தல் நிகழ்வுகள் எனது ஊரில் ஆங்காங்கே நடந்தது எனக்கு நினைவில் இருக்கிறது நிலாமதி, நான் 1958க்கு முன்னர் பிறந்தவன். ஸ்டையில் எல்லாம் இப்பொழுது எனக்கு அதிகமாகத் தேவைப்படுவதில்லை. “காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை”
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.