Jump to content

ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்


Recommended Posts

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

ஐயா பெரியவரே!  யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்.ஆனால் 70 வருடமாக நீங்கள் நினைத்த படி,கீறல் விழுந்த இசை தட்டு போல் ஒரே  சங்கீதங்களுக்கு வாக்கு செலுத்தி என்ன மாற்றத்தை கண்டீர்கள்?

குமாரசாமி,

படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை.

தேர்தலுக்கு வாக்குப் போட்டோம்.

இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம்.

தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம்.

மாற்றங்கள் இல்லை.

போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை.

பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை.

ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம்.

ரஞ்சித் குறிப்பிடுவது போல்யாசகம் செய்து வாழ முடியாதுஎன்ற வாசகத்தை விட்டுசேர்ந்து வாழ்தல்என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம்.

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு ஓவியம் வரையும் திறமை இருப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. அதற்காக மற்றையவர்களின் கருத்துக்களுக்கு ஓவியம் வரைந்து பதிலளிக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. முடிந்தால் எழுதுங்கள். 

ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல்.

ஓவியம் வரைந்துதான் பதிலளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லைஎன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். பொதுவாகவே கருத்துகள் வைக்க வேண்டும் என்று எவருக்குமே கட்டாயம் இல்லை. ஆனால் கருத்துக்களத்துக்குள் நுழைந்து விட்டால் கை துருதுருக்கிறது.

ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார்  கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.

 

Edited by Kavi arunasalam
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

ஓவியம் போட்டு கருத்து வைப்பது எனது விருப்பம். அது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் கடந்து போய் விடுங்கள். அல்லது நான் ஒரு விடயத்தை எழுதுவேன் அதற்கு இன்னார் இன்னார்  கருத்துக்களை வைக்கக் கூடாது, முக்கியமாக படம் போட்ட கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கக் கூடாது என்று எழுதி விடுங்கள். பிரச்சினை தீர்ந்து விடும். உங்களுக்கும் எனக்கும் நேரமும் மிச்சமாகும்.

கடந்து செல்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரஞ்சித் said:

நீங்கள் முதலில் சிங்கள அரசுகளின் தயவிலேயே தமிழ் மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்று கருதுவதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், தமிழர்களைச் சிங்கள அரசுகள் கைவிட்டு கிட்டத்தட்ட 76 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கள அரசுகளுக்கு தமிழர்களின் நலன்களைக் காப்பததைத்தவிர வேறு தலையாய கடமையே இல்லை எனும் ரேஞ்சில் எழுதுகிறீர்கள்.

தமிழர்களின் வாழ்வாதாரமும், வளமான தாயகமும், மேய்ச்சல் நிலங்களும் நீங்கள் கூறும் அதே சிங்கள அரசுகளாலேயே காவுகொள்ளப்பட்டன. ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே வடக்கும், வன்னியும், கிழக்கின் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழான பகுதிகளும் இலங்கை அரசினதும், இராணுவத்தினதும் பூரண பொருளாதாரத் தடைக்குள்ளேயே இருந்துவந்தன. அதற்காக, அங்கிருந்த தமிழர்கள் பட்டிணியால் இறந்துவிடவில்லை. தமது கைகளில் இருந்த வளங்களைக் கொண்டு தமது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொண்டார்கள். வன்னியில் ஓரளவிற்கு தன்னிறைவை அவர்கள் ஒருகட்டத்தில் அடைந்திருந்தார்கள். 2005 முதல் 2009 வரையான காலப்பகுதியில் வன்னிமீது மகிந்த இறுக்காத த‌டையினையா  இனிவரும் சிங்களத் தலைவர் இறுக்கப்போகிறார்?

சரி, அதை விடுங்கள், 2020 ‍- 2022 வரையான கொரோணாப் பகுதியில் மொத்த நாடுமே வீதிக்கு வந்தபோது வடக்கும் கிழக்கும் தம்மைத் தாமே பார்த்துக்கொண்டன. நிரந்தரமாகவே சிங்கள அரசுகளின் பொருளாதாரத் தடையினை முகம்கொடுத்துவரும் தமிழ்ச் சமூகம் தன்னை மீண்டும் சுய பொருளாதாரத்திற்கு மாற்றிக்கொள்ள அவர்களின் முன்னைய அனுபவம் கைகொடுத்தது.

80 களின் ஆரம்பத்திலிருந்தே புலம்பெயர் தமிழ்ச் சமூகம் தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவியே வருகின்றன. கிட்டத்தட்ட 40 வருடங்களாக இது தொடர்கிறது. எப்போது நிற்கும் என்று கேட்டால் என்னிடம் பதில் இல்லை. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இடையே கிடைக்கும் புலம்பெயர் உதவிகளின் அள்வில் ஏற்றத்தாள்வு இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை.

மலையகத் தமிழர்கள் நிச்சயமாக தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை. அவர்களது தலைமை நிச்சயம் அவர்களை தான் முடிவெடுக்கும் சிங்கள வேட்பாளருக்கே வாக்களிக்கும்படி பணிக்கும். இலங்கைத் தமிழர்களுக்கும் மலையகத் தமிழர்களுக்குமான அரசியல் தொண்டைமானின் பிரிவிலிருந்தே வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. ஆகவே, புதிதாக வரும் சிங்கள ஜனாதிபதி அவர்களை இக்காரணத்திற்காக வஞ்சிப்பார் என்று நினைக்கவில்லை. 

 

இதே போன்ற கருத்து பொருளாதாரச் சரிவின் போதும் வெளிப்பட்டது. "வடக்கு, குறிப்பாக வன்னியில், தமிழர்கள் பெரிதாகப் பாதிக்கப் படவில்லை" என்று எழுதினார்கள். கிராமப் புற சிங்கள மக்களும் நிலத்தில் இருந்து உணவைப் பெற்றுக் கொண்டது (living off the land) போல வன்னியில், யாழ் குடா சில பகுதிகளில் நிகழ்ந்தது. ஆனால் பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் என்பது மூன்று வேளை சாப்பாடு மட்டுமா? கடந்த 3 வருடங்களில் வடக்கில் இருந்து அரச வேலை இருப்போர் கூட வெளிநாடுகளுக்கு இடம் பெயரும் நிலை எப்படி ஏற்பட்டதெனக் கருதுகிறீர்கள்? சாப்பாடு கிடைக்காமலா அல்லது குடும்பத்தைத் தரமாக வைத்துப் பாதுகாக்க வழி தேடியா?

யாழில், 90/2000 களின் பொருளாதார தடையினுள் மண்ணெண்ணை லாம்பில் படித்து, பரீட்சை எழுதியோர் பலர் இங்கே இருக்கின்றனர். அது வேறு காலம். இன்று, மின்சாரம் சில மணி நேரங்கள் இல்லாமல் போனால் அவதிப் படும் நிலையில் வடக்கு மக்கள் இருக்கிறார்கள். ஏன் என்று நினைக்கிறீர்கள்? காலம் மாறி விட்டது, மக்கள் தரமான வாழ்க்கை என்று நிர்ணயிக்கும் தர எல்லை உயர்ந்து விட்டது. நீங்களோ இன்னும் 90 களிலேயே உறைந்து போய் நிற்கிறீர்கள்😂. அந்த உறை நிலையில் இருந்த படியே, தாயக மக்கள் சில அடிப்படை வசதிகளை இழந்தாலும், "சர்வதேசத்திற்கு செய்தி சொல்ல" வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்.

விரும்பியோ, விரும்பாமலோ இலங்கையின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் மக்கள் இலங்கையின் பொருளாதாரமும், அரசியல் சமூக நிலையும் சீரழிந்தால் பாதிக்கப் படுவர் என மிக எளிமையாகப் புரியக் கூடிய உண்மையை நான் எழுதினால், சிங்கள அரசு தமிழர்களைத் தட்டில் வைத்துத் தாங்குவதாக நான் சொல்வது போல உங்களுக்கு விளங்குகிறது! எங்கேயிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

ரஞ்சித், என் கருத்தைத்தான் வைத்திருக்கிறேன். படமாகவும், படத்தோடு கருத்தையும் சேர்த்து எழுதியும் இருக்கிறேன். தவிர, இது நான் வரைந்த படம் அல்ல. AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிய படம். படத்தில் இருப்பது நான் அல்ல. அது, பொதுமகன் ஒருவரின் குரல்.

 

"ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்" என்பார்கள். ஆனால், நீங்கள் ஒரு படத்தையும் போட்டு, அந்தப் படம் என்ன சொல்கிறது என்று இன்னும் சில நூறு சொற்களையும் மெனக்கெட்டு எழுத வேண்டிய துரதிர்ஷ்டம். சில யாழ் வாசகர்களின் புரிதல் அவ்வளவு தான், விளக்க முற்பட்டால் விளக்குபவனுக்கு மூளை அழற்சி வந்து விடும்😂!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 hours ago, Kavi arunasalam said:

large.IMG_6467.jpeg.444940597daeaa205c97

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது. அந்த திறமையை பாராட்டுகிறேன். கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

Edited by விசுகு
எழுத்துப்பிழை
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Kavi arunasalam said:

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

இயக்க காலத்திற்கு முன்னரும் பொதுமகன்கள் தான் முடிவெடுத்தார்கள்.எவ்வித காய்களும் கனியவில்லை.

 

13 hours ago, Kavi arunasalam said:

குமாரசாமி,

படம் சொல்வது ஒரு பொதுமகனின் கருத்தை.

தேர்தலுக்கு வாக்குப் போட்டோம்.

இவருக்குத்தான் வாக்குகள் போடுங்கள் என்று சொன்னோம்.

தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொன்னோம்.

தமிழன் ஒருவரை (இரண்டு தடவைகள்) வேட்பாளராக நிறுத்திப் பார்த்தோம்.

மாற்றங்கள் இல்லை.

போராடிப் பார்த்தோம். வெல்ல முடியவில்லை.

பேசிப் பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை.

ஒற்றுமையாகச் செயல்பட எங்களால் முடியவில்லை. ‘ஏணியும் பாம்பும்விளையாட்டாக மீண்டும் ஆரம்பக் கட்டத்துக்குள் வந்து விழுந்திருக்கிறோம்.

ரஞ்சித் குறிப்பிடுவது போல்யாசகம் செய்து வாழ முடியாதுஎன்ற வாசகத்தை விட்டுசேர்ந்து வாழ்தல்என்ற முறையை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறு வழி இன்று கண்ணுக்கு எட்டிய தூரம்வரை இல்லை. ஒருவேளை பின்னாட்களில் ஏதாவது மாற்றங்கள் வரலாம். வழிகள் கிடைக்கலாம்.

யாருக்கு வாக்குப் போட வேண்டும் என்ற பொறுப்பை மதிப்புக்குரிய பொதுமகனிடமே விட்டு விடுவது நல்லது. அங்கே வாழும் அவருக்கு எல்லாமே தெரிந்திருக்கும்.

 

நீங்கள் சொல்வது சரிதான்.
ஆனால் உலக அரசியல்  நிலமைகளுக்கமைய அன்றைய முடிவுகள் சரியாக இருந்தது.அதற்காக மீண்டும் பழைய குதிரையில் ஏறி உலகவலம் வரவேண்டும் என்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது.

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம்.

ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும்.

மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

அவர்களது தூர நோக்குகள்  என்ன விசுகர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம்.

ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும்.

மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
 

இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நந்தன் said:

இரண்டு மாவீரர்களை கொண்ட குடும்பத்தில் இருக்கும் கவி ஜயாவுக்கு ,உங்களை என்னை விட  நிறையவே பொறுப்பும் கடமையும் உண்டு

எனக்கும் தெரியும் நந்தன்.அவரது சகோதரியையும் அறிவேன்.

அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அவர்களது தூர நோக்குகள்  என்ன விசுகர்?

கனக்க தேவை இல்லை அண்ணா 

கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

கனக்க தேவை இல்லை அண்ணா 

கூட்டமைப்பே உடைந்த போதும் ஏன் நாமெல்லாம் கூட்டமைப்பை வெறுத்த போதும் இன்றுவரை அதற்கு வாக்குகள் போட்டு அதை தங்க வைத்திருக்கும் அவர்களது தூர நோக்கு....

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்த உங்களின் கருத்தென்ன அண்ணை? தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அப்படி ஒருவரை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும் என்றால், எதற்காக என்றும் கூறமுடியுமா? அறிந்துகொள்ளத்தான் கேட்கிறேன்.  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
8 hours ago, ஈழப்பிரியன் said:

அதற்காக அடுத்தவரை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம் தானே.

உண்மை அண்ணை,

இங்கே நான் எழுதிய கருத்திற்கு நக்கலாக படம்போட்டது போல, முன்னர் ஒரு கருத்திற்கும் என்னை, மனித அழிவை விரும்புகின்ற, மக்கள் இறப்பதை விரும்புகின்ற ("சாவின் அரசன்") அந்நியன் படத்தில் வருவது போன்ற, முகம் இல்லாத, தலை முதல் கால்வரை முகமூடியணிந்த கைகளில் கொலை வாளினை ஏந்திய ஒரு உருவத்தினைப் போட்டு கேவலப்படுத்தினார்.. 

நாம் தமிழ் மக்களைக் கொல்ல அழைத்துச் செல்ல‌வில்லை. மாறாக எதுவுமே பலனளிக்காத‌ நிலையில் எம்மால் வேறு என்ன செய்யமுடியும் எனும் கோணத்திலேயே ஆயுதப் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டேன். அதை நாகரீகமாக, "இல்லை, அதுவும் சரிவராது" என்று சொல்லியிருக்கலாம். என்னை இரத்தப்பசி கொண்டவனாகக் காட்டியிருக்கத் தேவையில்லை. 

இப்போதும் அதேபோல, "நீ சொல்றதைச் சொல்லு, சனத்துக்குத் தெரியும் என்ன செய்வதெண்டு" என்கிற ரீதியில் இன்னொரு படம். ஆகவேதான் படம்போடுவதைக் காட்டிலும் எழுதலாம் என்று கூறினேன். உடனேயே சில மேதாவிகள் வந்துவிட்டார்கள். அரைத்த மாவை அரைப்பதைப் பார்க்கச் சகிக்காமலேயே கடந்துசெல்லத் தீர்மானித்தேன்.

கருத்தெழுதுங்கள், படம் வரையுங்கள், மற்றையவனை இகழாமல் அதைச் செய்யப் பாருங்கள்.  

Edited by ரஞ்சித்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி, இங்கு சிலர் கவலைப்படுவதுபோல, தமிழ் வேட்பாளர் தமிழர்களின் வாழ்வை அதள பாதாளத்திற்கு இழுத்துச்  சென்றுவிடுவார் (இப்போது மட்டும் தமிழர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கேட்கவேண்டாம்) என்றே வைத்துக்கொள்வோம். ஆகவே, அவர்கள் விரும்புகின்ற மேற்குலகின் நண்பனான ரனிலுக்கே வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இன்றிருக்கும் நிலையினை விட தமிழர்களின் வாழ்வு எப்படி மேம்படும்? 2002 இலிருந்து 2005 வரை ரணிலே பிரதமராக இருந்தார். 2015 இலிருந்து 2019 வரை நல்லிணக்க அரசாங்கம், (100 நாட்களில் தமிழர்களுக்குத் தீர்வு தருவேன் என்று தனது ஏஜெண்டுகளான சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு) ரணில் அவரது சகாவான மைத்திரியுடனும் ஆட்சி செய்தார். தற்போது கோட்டா தப்பியோடியபின்னர் மீண்டும் ஜனாதிபதியாகியிருக்கிறார். தமிழரின் வாழ்வு மேம்பட்டதா?

கோட்டா உருவாக்கிய தொல்பொருள்ச் சபை, வன வளத்துறை ஆகிய இரண்டும் இன்றுவரை செய்துவரும் சிங்கள பெளத்த மயமாக்கலைத் தடுக்க முடிந்ததா? இவற்றில் பலவற்றைச் செய்விப்பதே ரணில் என்று கூறப்படுகிறது. இன்றுவரை மேற்கின் செல்லப்பிள்ளையான‌ ரணில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் சபையின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறாரா? அரசியல்க் கைதிகளை விடுவித்தாரா? காணமாலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் தொடர்ச்சியான கண்ணீருக்கும் கோரிக்கைகளுக்கும் ரணில் வழங்கிய பதில் என்ன? "இவர்களில் பலர் வெளிநாடுகளுக்குத் தப்பிபோய் விட்டார்கள், வேண்டுமானால் இறப்புச் சான்றிதழ் தருகிறோம்" என்பதற்கப்பால் ரணில் செய்திருப்பது என்ன?  வடக்கின் சில பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து சிலவிடங்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழரின் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல்த் தீர்வு குறித்த ரணிலும் முடிவு என்ன? இவை எதுவுமே இல்லாமல் அவருக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்கவேண்டும் என்று கேட்பது ஏன்? வெறுமனே சர்வதேச நாணய் நிதியத்தை ஜே வி பியினர் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்கிற பீதியைக் கிளப்புவோர், சர்வதேச நாணய நிதியம் ஒன்றும் இலவசமாக மக்களுக்குப் பணம் தரவில்லையென்பதையும், இப்பணம் வட்டியோடு அம்மக்களின் வயிற்றில் மேலும் மேலும் அடித்தே அறவிடப்படும் என்பதையும் ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? அப்போதுமட்டும் தமிழ் மக்களின் வாழ்வாதாரமும், சமூகத்தரமும் உயர்ந்துவிடுமா? இன்று ஆட்சியில் இருப்பது ரணில். அப்படியிருக்க தமிழர்கள் உட்பட பலர் வெளிநாடு போவது ஏன்? சர்வதேச நாணய நிதியம் உதவுகிறதென்றால் அவர்கள் ஏன் நாட்டில் தொடர்ந்தும் இருக்கமுடியாது? 

உண்மை என்னவென்றால், ரணில் என்ன, யார் ஆட்சியில் இருந்தாலும் நாடு பின்னோக்கிச் செல்வதைத் தடுக்க முடியாது.

ஏனென்றால், யுத்தம் 2009 இல் முடிவடைந்த பின்னர் மகிந்தவும், கோட்டாவும் நாட்டிற்கு கொண்டுவந்து குவித்திருந்த மொத்தக் கடன் 2022 இல் 58.73 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இக்கடன் 2021 இலிருந்ததைக் காட்டிலும் 0.03 வீதத்தால் மட்டுமே குறைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவருடத்தில் அதன் கடன் $58,732,518,598 இலிருந்து $ 58,712,654,401 ஆகக் குறைந்திருக்கிறதாம். ஆனால், ரணிலின் அரசாங்கம் உட்பட முன்னைய அரசினது அதிகரித்த பாதுகாப்புச் செலவிங்களினால் 2020 இலிருந்து 2021 வரையான ஒருவருட காலத்தில் கடன் 3.3 வீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த இலட்சணத்தில் நாடு ரணிலின் ஆட்சியில் முன்னேறிப் பாய்கிறது என்று கூறுகிறார்கள். நம்புகிறோம். 

ரணில் இன்று காட்டிவரும் பொருளாதார சீர்செய்தல் என்பது வெற்றுக் கோதுதான். வெறுமனே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் இல்லாததையும், மக்களுக்கு காஸ் கிடைப்பதையும் வைத்துக்கொண்டு பொருளாதாரம் அசுர வேகத்தில் வளர்கிறது என்று கனவு காண்பவர்கள், சர்வதேச நாணய நிதியத்தினால் அரசுக்கு வைக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளைப் பற்றி அறிவார்களா? அப்படி அவர்கள் கூறுவது போல ரணிலின் ஆட்சியில் பொருளாதாரம் அசுர வேகத்தில் இன்று வளர்கிறதென்றால், பலர் வெளிநாடு செல்ல முண்டியடிப்பது ஏன்? ஆக, ரணில் இருந்தாலென்ன, அவரின் மச்சான் இருந்தாலென்ன, தமிழ் மக்கள் மட்டுமல்ல, எந்த மக்களினதும் வாழ்வு இப்போதைக்கு வளம்பெறப்போவதில்லை. ஆகவே ரணில் புராணம் பாடுவதை இவர்கள் நிறுத்தவேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இன்றிருக்கும் நிலையில் ஜே வி பி விரும்பினாலும் எதனையும் செய்ய முடியாது. அப்படி ஜே வி பி சர்வதேச நாணய‌ நிதியத்தின் ஒப்பந்தத்தை நீக்கி வெளியேறினால், நாடு முற்றான பொருளாதார, சமூக, அரசியல் சீரழிவிற்குச் செல்லும். தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நிகழும் சீரழிவுகளுக்கு ஒத்த நிலையை இலங்கை அடையும். ஆகவே, ரணிலின் ஆதரவாளர்கள் பிதற்றுவதுபோல அனுரவினால் இலகுவாக சர்வதேச நாணய நிதியத்தை திருப்பியனுப்ப முடியாது. அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வதே அவர்களுக்கு முன்னால் உள்ள ஒரே தெரிவு.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத் தவிரவும், 2019 இல் தமிழர்களின் வாக்குகள் இல்லாமலேயே சிங்கள ஜனாதிபதியொருவர் பதவிக்கு வரலாம் என்று சிங்களவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால்த்தான் என்ன? 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
17 hours ago, ஈழப்பிரியன் said:

உண்மை தான்.

ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத

On 11/5/2024 at 16:56, விசுகு said:

 கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

 

அதற்காக தான் அண்ணா இதை எழுதினேன். நன்றி 

Edited by விசுகு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

There are lies, damn lies, then there are statistics  என்பார்கள். 

பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய்.

இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது.

1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார்.

2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

3. 

On 10/5/2024 at 10:50, ரஞ்சித் said:

 

1994 ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டு 
ஜனாதிபதி : சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க‌
யாழ்ப்பாணம் : 96.35% (1994) & 46.65 % (1999)
வன்னி : 85.30% (1994) & 25.8% (1999)
மட்டக்களப்பு : 87.3% (1994) & 34.7% (1999)
திருகோணமலை : 71.6% (1994) & 45% (1999)
சராசரி : 85.13% (1994) & 38% (1999)

 

1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?).  இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

1999 தேர்தலும் இதே போல்தான்.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும்.

ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

4. 

On 10/5/2024 at 11:01, ரஞ்சித் said:

2005 தேர்தல்
ஜனாதிபதி : மகிந்த ராஜபக்ஷ‌ (தமிழர்கள் வன்னியில் வாக்களிக்காது விட்டமையினால் தெரிவுசெய்யப்பட்டவர்)

யாழ்ப்பாணம் : 25%
வன்னி : 20%
மட்டக்களப்பு : 18.8%
அம்பாறை : 43%
திருகோணமலை : 37%

சராசரி : 28.76%

இதே தேதலில் தமிழர்களால் ஆதரவளிக்கப்பட்ட வேட்பாளர் ரணிக்குக் கிடைத்த வாக்குகள் 
யாழ்ப்பாணம் : 70%
வன்னி : 77%
மட்டக்களப்பு : 79.5%
அம்பாறை : 55%
திருகோணமலை : 61 %

சராசரி : 68.5%

ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான்.

திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்).

அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣.

2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

5. 

On 10/5/2024 at 11:09, ரஞ்சித் said:

மகிந்தவுக்கான தமிழரின் வாக்குகள்
யாழ்ப்பாணம் : 24.7%
வன்னி : 27.3%
மட்டக்களப்பு : 26.2%
திருகோணமலை : 43%
சராசரி : 30.3%

சரத் பொன்சேகாவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 63.8%
வன்னி : 66.8%
மட்டக்களப்பு : 68.93%
திருகோணமலை : 54%
சராசரி : 63.4%

இத்தேர்தலில் இனக்கொலையாலியான சரத் பொன்சேக்காவிற்கு வக்களித்ததன் மூலம் தமிழர்கள் சொல்லிய செய்தி : சரத் பொன்சேக்காவின் கூற்றுப்படி
1. இனக்கொலையென்றும், போர்க்குற்றங்கள் என்றும் எதுவுமே நடைபெறவில்லை என்பதை எனக்கு வாக்களித்ததன் மூலம் தமிழர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
2. புலிகளை அழிக்க நான் தலைமையேற்று நடத்திய யுத்தத்தினை தமிழ் மக்கள் வரவேற்றிருக்கிறார்கள்

இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது.

அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும்.

6.

On 10/5/2024 at 11:19, ரஞ்சித் said:

2015 தேர்தல்

இனக்கொலையாளியான மகிந்த ராஜபக்ஷவுக்கெதிராகவும், அதே இனக்கொலை யுத்தத்தில் அவனது பிரதமராகவும், இறுதிப்போரின் இறுதிநாட்களின்போது மகிந்த வெளிநாடு சென்றிருந்தவேளை நாட்டின் ஜனாதிபதிப் பொறுப்பினைக் கவனித்துக்கொண்ட‌வனுமான மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாகவும் தமிழ் மக்கள் வாக்களித்த விதம்

மகிந்த ராஜபக்ஷவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 21.8%
மட்டக்களப்பு : 16.2%
திருகோணமலை : 26.6%
வன்னி : 19%
சராசரி :20.9%

மைத்திரிபால சிறிசேனவுக்கான வாக்குகள்
யாழ்ப்பாணம் : 74.4%
மட்டக்களப்பு : 81.6%
திருகோணமலை : 71.8%
வன்னி : 78.5%
சராசரி : 76.6%

2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் தமிழர்கள் தெரிவுசெய்த ஜனாதிபதியான மைத்திரியும், தமிழர்கள் தெரிவுசெய்த பிரதமரான ரணிலும் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். 

உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான்.

அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 

7.

On 10/5/2024 at 11:26, ரஞ்சித் said:

இத்தேர்தலில் பிரபல சிங்கள பெளத்த இனக்கொலையாளியான கோட்டாபய ராஜபக்ஷவுக்கெதிராகவும்,  இன்னொரு பெயர்பெற்ற‌ சிங்கள இனவாதியான பிரேமதாசவின் மகனும், பிரேமதாசவை ஒத்த இனவாதியுமான  சஜித் பிரேமதாசவுக்குத் தமிழர்கள் வாக்களித்த விதம்

கோட்டாபய ராஜபக்ஷ‌
மட்டக்களப்பு : 12.6%
யாழ்ப்பாணம் : 6.2%
வன்னி : 12.2%
திருகோணமலை : 23.3%
சராசரி : 13.5%

சஜித் பிரேமதாச‌
மட்டக்களப்பு : 78.7%
யாழ்ப்பாணம் : 83.36%
வன்னி : 82.1%
திருகோணமலை : 72%
சராசரி : 79.04%

இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது.

இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை.

முடிவாக,

மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது.

பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2024 at 15:56, விசுகு said:

ஓவியம் மூலம் ஒரு கருத்தை வைப்பது என்பது மிக மிக கடினமானது. அந்த திறமையை பாராட்டுகிறேன். கனக்க எழுத முடியாமையால் ஓரிரு சொற்களை பயன்படுத்துவதால் சில சுட்டு விடக்கூடும். 

எனக்கும் உங்கள் இந்த நிலைப்பாட்டில் உடன்பாடு உண்டு. தாயக மக்கள் பல சகாப்தமாக பல தேர்தல்களில் பலரது கணிப்புகளையும் பொய்யாக்கி தூர நோக்கோடு தமது நீண்ட நெடிய வரலாற்றின்பால் வாக்களித்து வருகிறார்கள். நன்றி. 

எனது நிலைப்பாடும் இதுவே. 

உண்மையில் என் போன்றோர் பக்கம் பக்கமாக நீட்டி முழக்குவதை விட - @Kavi arunasalam ஐயா வின் ஒரு ஓவியம், பலருக்கு அதிக உறைப்பை கொடுப்பதை யாழில் பல இடங்களில் கண்டுள்ளேன்.

கருத்தோவியமும் ஒரு கருத்துத்தான்.

ஆகவே “கருத்தை எழுதுங்கள்” என்ற ரஞ்சித்தின் கோபம் அடிப்படை அற்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரஞ்சித் said:

. அப்படி ஜே வி பி சர்வதேச நாணய‌ நிதியத்தின் ஒப்பந்தத்தை நீக்கி வெளியேறினால், நாடு முற்றான பொருளாதார, சமூக, அரசியல் சீரழிவிற்குச் செல்லும். தென்னமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் நிகழும் சீரழிவுகளுக்கு ஒத்த நிலையை இலங்கை அடையும்.

ஒரு கேள்வி - மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருக்க சஜித்துக்கு போடலாம் என நான் யாழில் எழுத, இல்லை கோட்டா வந்தால் அடக்கு முறை கூடும், அதை வைத்து நாம் தீர்வை அடைவது இலகு என எழுதியவர்களில் நீங்களும் ஒருவர் என நினைக்கிறேன்.

இதே லொஜிக் அனுரவுக்கும் பொருந்தாதா?

அவர் நாட்டை வெனிசுவேலா போலாக்கினால் - குறுகிய காலத்தில் மக்கள் துன்பப்பட்டாலும், எமக்கு தீர்வு வர இது உதவும் அல்லவா?

அப்போ தமிழர் திரளாக அனுரவுக்கு போட வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
19 minutes ago, goshan_che said:

There are lies, damn lies, then there are statistics  என்பார்கள். 

பொய், கடும் பொய் அதற்கும் மேலான பொய் புள்ளி விபரப்பொய்.

இங்கே @ரஞ்சித் பொ.த.வே வை ஆதரிக்கும் தன் நிலையை நிறுவ இந்த வகையிலேயே புள்ளிவிபரத்தை பாவிக்கிறார் என படுகிறது.

1. சகல தேர்தல்களிலும் வன்னி, திருமலை, மட்டகளப்பில் இருந்த மிக கணிசமான முஸ்லிம், சிங்கள வாக்காளர் தெரிவை தமிழர் தலையில் கட்டி விடுகிறார்.

2. உண்மையில் இந்த தேர்தல்களில் எல்லாம் தனியே தமிழர் வாக்குகளால் மட்டும் நிரம்பிய ஒரே ஒரு தொகுதி என்றால் அது யாழ் மாவட்டம் மட்டுமே. இந்த அடிப்படையில் பார்த்தால் ஜே ஆர், பிரேமதாசவுக்கு போடாமல் விட்டதால் தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

3. 

1994 தேர்தல் தனியே தீவுபகுதியில் நடந்தது என நினைக்கிறேன் (இதே வருடம்தான் டக்லஸ் 9 எம்பி சீட் எடுத்தார்?).  இங்கேயும் யாழ் மாவட்ட மக்கள் பெருவாரியாக தேர்தலை புறக்கணித்தனர், அல்லது பங்கெடுக்க விடாமல் தடுக்கப்பட்டனர்.

1999 தேர்தலும் இதே போல்தான்.

இந்த தேர்தல்களில் பதிவான வாக்காளரில் எத்தனை சதவீதம் வாக்களித்தனர் என்ற தரவை பார்த்தால் - ரஞ்சித் காட்டு புள்ளி விபரம் ஏன் நம்பிக்கை அற்றது என புரியும்.

ஜே ஆர், பிரேமா தேர்தல்கள் போல இந்த தேர்தல்களும் யாழ் மாவட்ட தமிழர் சிங்கள வேட்பாளருக்கு பெருவாரியாக வாக்கு போடாத தேர்தல்களே. ஆகவே சிங்கள வேட்பாளருக்கு போடாமல் விட்டதால்தான் தமிழருக்கு அழிவு வந்தது எனத்தான் கருத வேண்டி வரும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

4. 

ரஞ்சித் போட்ட புள்ளி விபர குண்டுகளிலேயே பெரிய குண்டு இதுதான்.

திடீரென இங்கே கணக்கில் அம்பாறையை சேர்கிறார் (கிட்டதட்ட முழு சிங்கள/முஸ்லிம் மாவட்டம்).

அதாவது பறாவாயில்லை, புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் தமிழர்கள் ஒட்டு மொத்தமாகவும், ஏனைய தமிழ் இடங்களில் புலிகள் சொன்னதை கேட்டு மக்கள் பெருவாரியாகவும் புறக்கணித்த தேர்தல் முடிவை - மக்கள் இன்னொரு வேட்பாளரை வெல்ல வைத்ததன் பயன் என பக்கேஜ் செய்கிறார் 🤣.

2005 தேர்தல் முடிவால் தமிழருக்கு ஏற்பட்ட விளைவுகள், தேர்தலை புறக்கணிக்கும் முடிவுக்கான விலை. அதை என்னதான் பக்கேஜ் செய்தாலும் மாற்ற முடியாது. இதன் படி பார்த்தாலும் தேர்தல் புறக்கணிப்பு/பொது வேட்பாளர் எமக்கு ஆப்பாகவே முடியும் என்றாகும். இது ரஞ்சித்தின் நிலைக்கு நேர் எதிரானது.

5. 

இங்கே சொல்லப்படும் பொன்சேக்காவின் கூற்றை உலகில் யாரும் நம்பவில்லை என்பதுதான் உண்மை. இதை சர்வ உலகமும் மகிந்தவை தோற்கடிக்க ஆக கூடியதை தமிழர் செய்தார்கள் என்றே பார்த்தது.

அது மட்டும் இல்லை, இங்கேயும் பதிவு செய்யப்பட்டோரில் எத்தனை % பேர் வாக்களித்தனர் என்ற புள்ளி விபரம் - உண்மை நிலையை - அதாவது தமிழர் திரளாக பொன்சேக்காவை ஆதரிக்கவில்லை என்பதை காட்டும்.

6.

உண்மையில் தமிழர்கள் “தெரிவு செய்த” என்ற அடை மொழிக்கு ஏற்புடைய ஒரே ஜனாதிபதி மைத்திரிதான்.

அவர் அரசியல் அபிலாசைகள் விடயத்தில் ஒன்றும் கிழிக்கவில்லை என்பது உண்மையே எனிலும், மும்மொழி கொள்கை, குடியேற்ற வேகம், விகாரை கட்டுதல், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, இராணுவ பிரசன்னம் குறைப்பு, முள்ளிவாய்க்கால், மாவீரர் நினைவேந்தல் என பல வகைகளில் தமிழ் மக்கள், முந்திய மகிந்த, பிந்திய கோட்டா ஆட்சியோடு ஓப்பிடின், ஆசுவாசமாக இருந்த காலம் இது. ஆகவே இங்கே மைத்திரிக்கு வாக்கு போட்டது முற்றிலும் பிழை என கூற முடியாது. அத்தோடு மகிந்த எமக்கு எப்போதும் ஏற்புடையவர் அல்ல என்ற செய்திதையும் மக்கள் சொன்னார்கள். 

7.

இது மகிந்தவை விட மோசமான அடக்குமுறையாளனான கோட்ட வை வரவிடாமல் தடுத்து, ஒப்பீட்டளவில் அராஜகம் குறைந்த சஜித்தை மக்கள் தேர்ந்த தேர்தல். ஆனால் சிங்கள வாக்காளரின் மமதை, இனவெறி முடிவை வேறாக்கி, இறுதியில் அறகளவில் வந்து நின்றது.

இங்கேயும் மக்களின் நோக்க பிழை சொல்ல முடியாது. ஆனால் சிங்கள வாக்குகள் ஒரே அணியில் திரண்டதால் நோக்கம் நிறைவேற வில்லை.

முடிவாக,

மேலே ரஞ்சித் ஒரு பக்கசார்பாக அணுகிய தரவுகளை வைத்து - இலங்கை தேர்தல்களில் இதுவரை தமிழர்கள் வாக்களித்த விதம் அவர்களுக்கு ஆப்பாக அமைந்தது என கூற முடியாது.

பொது தமிழ் வேட்பாளர் பற்றி எனக்கு கடும் எதிர் கருத்து அதிகம் இல்லை. ஆனால் புள்ளி விபரங்களை செலக்டிவாக அணுகி அதை நியாப்படுத்த கூடாது.

தேர்ந்து தெரிந்து (Cherry-pick) எழுதும் போக்கு இங்கேயும் தென்பட்டதால் தான் மேலே கேட்டிருந்தேன் "எங்கிருந்து எழுதுகிறீர்கள்? இதயத்தில் இருந்தா மூளையில் இருந்தா?" என்று. நான் பிதற்றுகிறேன் என்று சொல்லி விட்டுக் கடந்து போய் விட்டார்.

புள்ளி விபரம் மட்டுமல்ல: IMF இனை எதிர்கால NPP அரசோ, யாரோ அவ்வளவு சுலபமாக வெளியேற்ற விட முடியாது என்றும் ஒரு குண்டைப் போட்டிருக்கிறார்.

நான் அறிந்த வரையில், IMF நேட்டோ அல்ல, உதவி கேட்கும் அரசு நிபந்தனைகளுக்கு உடன்படா விட்டால் அவர்கள் கடையைப் பூட்டிக் கொண்டு அடுத்த நாட்டைத் தேடிப் போய் விடுவர். IMF உடனான ஒப்பந்தங்களில், அனுர அணி மதில் மேல் பூனையாக இருக்கிறது. "மக்கள் ஆணைக்குட்பட்ட நிபந்தனைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வோம்" என்று தான் சொல்லி வருகின்றனர். ஒரு ஆய்வாளர் டெய்லி மிரரில் எழுதிய கட்டுரையில் "உதவி கேட்கும் தரப்பின் விருப்பிற்கேற்ப IMF வளைந்து கொடுப்பதை தான் வரலாற்றில் கண்டதில்லை" என உள்குத்தாக எழுதியிருந்தார்.  

Edited by Justin
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 39     இன்று இலங்கையில் ஏறத்தாழ முழுமையாக சிங்களவர்கள் வாழும், தென்மாகாண காலியை கருத்தில் கொண்டால், அங்கே ரொசெட்டாக் கல் அல்லது கல்வெட்டின் ஒரே பக்கத்தில் இரு அல்லது மூன்று வெவ்வேறு மொழிகளில் எழுதப்பட்டிருக்கும் கல்வெட்டு / கற்பலகை [Rosetta Stone] ஒன்றை எஸ். எச். தோம்லின் என்ற பொறியாளர் [An engineer, S. H. Thomlin] 1911 இல் கண்டு எடுத்து உள்ளார். இதை இன்று காலி மும்மொழி கல்வெட்டு (Galle Trilingual Inscription) என்று அழைப்பதுடன், இலங்கையின் கொழும்பு தேசிய நூதனசாலையில் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது.   இலங்கையின் காலியில் சீனக் கடற்படைத் தளபதியும், நாடுகாண் பயணியுமான 'செங் கே' [Chinese traveler Zheng He ,dated 15 February 1409] இத்தீவிற்கு இரண்டாம் முறை வந்ததின் நினைவாக 1409 ஆண்டில் சீன, தமிழ், பாரசீகம் [Chinese, Tamil and Persian] ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்ட இந்த கற்றூண் [stone pillar] கல்வெட்டு நடப்பட்டது ஆகும்.   இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பதின்மூன்றாம் / பதினான்காம் நூற்றாண்டில், இலங்கையின் தெற்குப்பகுதியான காலியில் கூட , சிங்களத்தை தவிர்த்து தமிழில் கல்வெட்டு எழுதப்பட்டு இருப்பது, அந்த நாட்களில், காலியில் கூட, தமிழ் எவ்வளவு நடைமுறையில் இருந்தது என்பதற்கான சான்றாக விளங்குகிறது.   மேலும் இது அவரும் [செங் கே] மற்றவர்களும் சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலைக்கு [Adam's Peak; சிங்களம்: சிறிபாத] வழங்கிய காணிக்கை பற்றி கூறுகிறது. புத்தருக்கு கொடுத்த காணிக்கை பற்றி சீன மொழியிலும், அல்லாஹ்விற்கு வழங்கியதை பாரசீக மொழியிலும், தென்னாவர நாயனார் [Tenavarai Nayanar] என அழைக்கப்படும் விஷ்ணுவிற்கு வழங்கியதை தமிழிலும் எழுதப் பட்டுள்ளது. [The Chinese inscription mentions offerings to Buddha, the Persian in Arabic script to Allah and the Tamil inscription mentions offering to Tenavarai Nayanar (Hindu god, Vishnu).].   தொண்டீசுவரம் (அல்லது தொண்டேசுவரம், தொண்டேச்சரம் / Tenavaram temple) என்பது இலங்கையின் தெற்கில் மாத்தறை மாவட்டத்தில் தெவிநுவர (தேவந்திரமுனை) எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். பஞ்சஈஸ்வரங்களில் ஒன்று இது ஆகும். இது பின் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது ஒரு பெரிய சிவலிங்கம் ஒன்று ஆய்வாளர்களால் அகழ்ந்து எடுக்கப்பட்டது. தற்போது தொண்டேச்சரம் கோயில் இருந்த இடத்தில் ஒரு விஷ்ணு கோயில் அங்கிருந்த சிங்களப் பௌத்தரால் எழுப்பப்பட்டுள்ளது. "தெவிநுவர கோயில்" என இது இன்று அழைக்கப்படுகிறது.   கல்லாடநாகன் (கிமு 50 – 44) (2) சோரநாகன் (கிமு 3 – 9) (3) இளநாகன் (கிபி 96 – 103) (4) மாகலக்க நாகன் (கிபி196 – 203) (5) குஜ்ஜநாகன் (கிபி 246 – 248) (6) குட்டநாகன் (கிபி 248 – 249) (7) ஸ்ரீநாகன் I (கிபி 249 – 269) ( அபயநாகன் (291 – 300) (9) ஸ்ரீநாகன் II (கிபி 300 – 302) (10) மகாநாகன் (கிபி 556 -568) எனப் பல அரசர்கள் நாக பின்னோட்டத்துடன் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது ஆகும். அது மட்டும் அல்ல, தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகனின் தந்தை பெயர் வீர தீசன் ஆகும் (The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85). இவர்கள் யாரும் தங்களை ஹெல, சிகல அல்லது சிங்கள என அழைக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.   நாகர்கள் அதிகமாக மங்கோலியா இன மூலத்தை கொண்டவர்கள் [Mongolian origin] என்று C.ராஜநாயகம் [C.Rasanayagam] கூறுவதுடன், வருணோ மஹதி [Waruno Mahdi] என்பவர், நாகர்கள் ஒரு கடல் வாழ் மக்கள் என்கிறார் [a maritime people]. மேலும் தென் இந்திய மக்களில், கேரளத்தில் வாழும் திராவிட நாயர் [Nāyars] சமுதாயத்தை உதாரணமாக எடுக்கிறார்கள், பண்டைய கேரளா மக்கள் தமிழ் சேரர் என்பது குறிப்பிடத் தக்கது. வட இலங்கையில் ஆரியர் வருவதற்கு முன் குடி ஏறி வாழ்த்த நாகர்கள் இவர்களே என்று ஹென்றி பார்க்கர் கூறுகிறார். இதை K.M. பணிக்கர் சில காரணங்களை சுட்டிக்காட்டி ஆமோதிக்கிறார். நாகர் தான் நாயர் என மாற்றம் அடைந்ததாகவும், ஆணும் பெண்ணும் தமது தலை முடியை முடிச்சு போடும் விதம், ஒரு நாகப்பாம்பின் பேட்டை ஒத்திருப்பது, இதை உறுதி படுத்துவதாகவும் கூறுகிறார்.   [Perhaps the only South Indian community that could be reasonably identified with the Nāgas of yore are the Nāyars, a Dravidian –speaking military caste of Kerala amongst whom remnants of serpent worship have survived. Henry Parker suggested that “the Nāgas who occupied Northern Ceylon long before the arrival of the Gangetic settlers were actual Indian immigrants and were an offshoot of the Nāyars of Southern India”. This view is lent support by K.M. Panikkar who suggests that the Nāyar were a community with a serpent totem and derives the term Nāyar from Nāgar or serpent-men. The belief that the Nāyars have taken their name from the Nāgas also appears to be supported by the peculiar type of hair knot at the top of the head borne by Nayar men and the coiffure of Nayar women in the olden days which resembled the hood of a cobra]   மனோகரன். நாகர்கள் பண்டைய வட இலங்கையில் வசித்தவர்கள் என்றும், பண்டைய தமிழர் என்றும் இரண்டாம் நூற்றாண்டு டோலமியின் வரைபடத்தை வைத்து வாதாடுகிறார் [Manogaran (2000) believed the Nāgas of the MV to be ancient Tamils, drawing his conclusions on Ptolemy’s 2nd century A.C. map of Taprobane which he supposes indicates Nāgadīpa in the northern part of the island, the areal extent of which corresponds to the area settled by present-day Tamils] நாகர்கள் கி மு 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தென் இந்தியாவும் அதை ஒட்டிய பகுதிக்கும் வந்து, படிப்படியாக தமிழுடன் குறைந்தது கி மு 3 ஆம் நூற்றாண்டில் முழுமையாக இணைந்து விட்டார்கள் என்கிறார். நாகர், அதிகமாக திராவிட இனத்தவர்களும் மற்றும் பாம்பை வழிபடுபவர்கள் ஆகும் [Laura Smid (2003). South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Pakistan, Sri Lanka. Great Britain: Routledge. 429]. கி மு மூன்றாம் நூற்றாண்டு வரை நாகர்கள் தனித்துவமான இனமாக ஆரம்பகால இலங்கை வரலாற்று குறிப்பேடுகளிலும் [chronicle] மற்றும் ஆரம்பகால தமிழ் இலக்கிய படைப்புகளிலும் காணப்படுவதுடன், கி மு மூன்றாம் நூற்றாண்டு தொடக்கத்தில், நாகர்கள் தமிழ் மொழியுடனும், தமிழ் இனத்துடனும் ஒன்றிணைய தொடங்கி, தம் தனிப்பட்ட அடையாளத்தை இழந்தார்கள் [Holt, John (2011), The Sri Lanka Reader: History, Culture, Politics, Duke University Press] என்று கருதப் படுகிறது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 40 தொடரும்            
    • மிகவும் வித்தியாசமான கண்ணோட்டம் ........ அருமையான பேச்சு ........!   👍
    • வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை. இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.
    • "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 17     5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture]     இன்பவியல் [Hedonism] என்பது இன்பமே மதிப்புப் பெற்ற ஒரே இலக்கு என்ற கோட்பாடு ஆகும், சிலர் இன்று அதற்க்கே அடிமையாகிறார்கள். அது எப்படி தம்மை கெடுக்கும் என்று எள்ளளவும் கவலைப் படுவதில்லை. உதாரணமாக, ஒரு உணவு எனக்கு உருசி என்றால், அந்த "உணவு" கொழுப்பு மற்றும் நீரிழிவு போன்றவற்றை கொடுக்கும் என்றாலும் எந்த கவலையும் இன்றி இப்ப இன்பமே அதை விட எனக்கு பெரிது என்று சாப்பிட்டு மகிழ்வதை குறிக்கலாம்.   வாழ்வு சலிப்பாக உள்ளதா? வாழ்க்கை எம்மை மூழ்கடிக்கிறதா? "ஓ, நான், நாள் முழுவதும் வீடியோ விளையாட்டு [video games] விளையாடுவேன். எனக்கு இந்த உண்மையான உலகம் தேவையில்லை" என்று எந்த மக்களுடனும் சமுதாயத்துடனும் பெரிதாக பங்கு பற்றாமல் இருந்த இடத்தில் சந்தோசம் என்று களித்து உடல் பருமனையும் நோயையும் வரவழைப்பதையும் மேலும் ஒரு உதாரணமாக கூறலாம்.   அதாவது ஒரு பரந்த அடிப்படையில், மகிழ்ச்சியை மட்டும் தனக்கு அதிகரிக்க முயற்சித்து, அதன் மூலம் தனது வலியை குறைக்க முயலும் ஒரு செயல் என்றும் கூறலாம். ஆனால் இந்த அவர்களின் கட்டாய கலாச்சாரத்தால், புத்திசாலித்தனமான, பொறுப்பான வாழும் வழியை [sensible, responsible way to live] அவர்கள் நிராகரிப்பதை காண்கிறோம். இது தான் எமக்கும் சமுதாயத்திற்கும் கவலை தரும் விடயம்.   ஒரு மனிதனுக்கு காதலனின் அல்லது காதலியின் சீராட்டு மகிழ்ச்சியை தருகிறது, அதே போல, ஒருவருக்கு ஒரு இசை, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக களித்தல், அல்லது வெறுமனே ஒரு தீவிரமான நாளின் பின், ஒரு நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்குதல் போன்றவை கட்டாயம் அவனுக்கு அல்லது அவளுக்கு மகிழ்ச்சியை தரும். இந்த நடவடிக்கைகள் உண்மையில் நல்லவையே, அதில் எமக்கு ஆட்சேபனை இல்லை.   என்றாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு போல, ஒரு மனிதன் முற்றும் முழுதாக ஒன்றில் சார்ந்திருத்தல், ஒரு பழக்கத்திற்கு அடிமையாதல், அளவுக்கு மீறி உண்ணுதல் அல்லது குடித்தல், மற்றும் கட்டாய நுகர்வு [Dependence, addiction, bingeing and compulsive consumption] போன்ற ஆபத்தான அல்லது தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.   முன்னர் மகிழ்ச்சியைத் தந்த நடவடிக்கைகள் அல்லது பழக்கங்கள், எந்த கட்டத்தில் சிக்கல் நிறைந்ததாக மாறும் என்று நாம் சரியாக குறித்துக் காட்ட முடியாது. என்றாலும், உதாரணமாக, எப்போதாவது ஒரு போதை பானம் பியர் [Beer/ஒரு வகைச் சாராயம்] அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு காலை படுக்கையிலிருந்து எழும்பும் போது ஏதாவது ஒரு போதை பானம் தேவை என்ற நிலைக்கும், இடையில் இந்த பிரச்சினைக்கு உரிய நிலையை நாம் கடந்து இருப்போம் என்று கூறலாம்.   பென்தாம் (Bentham) என்பவர் கூறும் இன்பவியல் கோட்பாடு ஆண்டாளுக்கு முற்றிலும் பொருந்தும், எல்லா நேரங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு நோக்கத்தின்பால், நடத்தைக்கு உட்படுகிறான். அந்த நோக்க வெற்றியின் இறுதியில் கிட்டும் மகிழ்ச்சியைச் சுவைப் பதற்க்கே ஒருவன் அவ்வாறான நடத்தைக்கு உட்படுகிறான் என்கிறார்.   உதாரணமாக, நாணம் மிகுதியால் நிந்திப்பது போல் மீண்டும் மீண்டும் நினைத்து திருமாலைப் பற்றி பேசுவதும் மற்றும் இது போன்ற ஆண்டாளின் செயல்களும், அவள் பெருமானையே நினைக்கும் நோக்கில், அவள் உண்மையில் சுவைக்கும் இன்ப நிகழ்ச்சிகளைக் நாம் காணலாம். பெரியாழ்வாரின் தோட்டத்துத் துளசிச் செடியருகே பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவர் என கருதப்படும் ஆண்டாள், பருவம் எய்திய பின்னர், அவருக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடைபெற்றிருக்க வேண்டும். அப்போது, ஆண்டாளுக்குப் பிறப்புப் பின்னணி தெரியாத காரணத்திற்காகவே மணம் நடைபெறாமலேயே போயிருக்க வேண்டும். இதனால் மனம் வேதனையுற்ற ஆண்டாள் மானுட ஆண்களுடனான மணவாழ்க்கையையே வெறுத்து, திருமாலைக் காதலிப்பதாகவும் – அத்திருமாலையே மணமுடிக்க வேண்டு மென்று துடிப்பதாகவும் அவரின் பாடல்கள் அமைந்தன எனலாம் . இதில் அவள் தன்னில் எழும் காதல் உணர்ச்சியையும் – காம வேட்கையையும் தீர்த்துக் கொள்கிறார் என்று நம்புகிறேன். இதனால் அவள் நடத்தை, - இன்று சிலர் முற்றும் முழுதாக ஒன்றில் அடிமையாவது போல, உதாரணமாக பாலியல் வீடியோ- அப்படி மாறி, அதில் அவள் இன்பம் துய்த்திருக்கலாம் என்று நம்புகிறேன். உதாரணமாக திருப்பாவை, பாடல்-19 இல் அவளின் இன்ப ரசனையை மிக தெளிவாக காணலாம்.     “குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய்திறவாய் மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை எத்தனை போதும் துயிலெழு வொட்டாய்காண் எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்...”     இதன் அர்த்தம், படுக்கை அறையில் குத்துவிளக்கு எரிகிறதாம். அழகிய கட்டிலில் விரிக்கப்பட்டிருக்கும் மெத்தையின் மீது ஏறிய கண்ணன், அழகிய கூந்தலையுடைய தன் மனைவி நப்பின்னை மேல் பாய்கிறான்; பலவாறு சுகம் கண்டவன், அவளது கொங்கைகளை தன் அகன்ற மார்பின் மீது வைத்துக் கொண்டு உறங்கிக் கிடக்கின்றானாம். இந்த இடத்தில் ஆண்டாள் சென்று நப்பின்னையை எழுப்பி உன் கணவனை நொடிப் பொழுது படுக்கையை விட்டு எழச் செய்ய மாட்டாயா? இமைப் பொழுது பிரிந்திருக்க மாட்டாயா? என்று கேட்கிறாள் என்கிறது.   இங்கு ஒரு பெண்ணின் அவலம் வெளிப்படுகின்றது. பெண் அதில் பங்காற்றித் தனது தேவையைப் பூர்த்தி செய்ய நினைக்கும் கண்ணோட்டமும் வெளிப்படுகின்றது.   எழுத்து கண்டுபிடிக்கப் பட்ட பின், கி மு 2100 அளவில் எழுதப்பட்ட மெசொப்பொத்தேமியா மக்களின் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh], சிடூரி [ Siduri] என்பவர்,   "உங்கள் வயிற்றை நிரப்புங்கள், பகலும் இரவும் மகிழ்ச்சியாகட்டும், நாட்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கட்டும், பகலும் இரவும் நடனமாடி இசை முழங்குங்கள்..... இந்த விடயங்கள் மட்டுமே மனிதர்களின் [ஆண்களின்] அக்கறையாகட்டும்" [Fill your belly. Day and night make merry. Let days be full of joy. Dance and make music day and night ... These things alone are the concern of men]   என்று ஆலோசனை வழங்குகிறார். ஒரு வகையில் பார்த்தால், முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு இன்பவியல் வாதத்தை இது பிரதிநிதித்துவப் படுத்துகிறது எனலாம். அதே போல, "ஆசை செழிக்கட்டும், உங்களுக்கான துடிப்புகளை இதயம் மறக்கட்டும், நீ வாழும் வரை உமது விருப்பத்தைப் பின்பற்றுங்கள் [Let thy desire flourish, In order to let thy heart forget the beatifications for thee.Follow thy desire, as long as thou shalt live.], என்ற கி மு 2030 க்கும் கி மு 1640 க்கும் இடைப்பட்ட பண்டைய எகிப்தின் ஹார்ப்பரின் பாடல் [Harper's Songs] ஒன்றும் இன்பவியல் வாதத்தை பிரதிபலிக்கிறது எனலாம்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 18 தொடரும்        
    • நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........!   😂  
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.