Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!

adminJune 6, 2024
Civil-2.jpg

“பொது நிலைப்படும் – பொது வாக்கெடுப்பும்” நிகழ்வு எதிர்வரும் 09ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மாலை 02.59 மணிக்கு நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை யாழில் நடாத்தவுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிவித்து இருந்த நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களில் சிவில் சமூகத்தினர், தாம் இந்நிகழ்வுக்கு செல்ல போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Civil-1-343x800.jpg
 

 

https://globaltamilnews.net/2024/203920/

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20240605-WA0256-scaled.jpg?resize=75

பொது வேட்பாளர் குறித்த முக்கிய கலந்துரையாடல்!

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று  சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
  • கருத்துக்கள உறவுகள்

இவை கூட்டம் கூட்டினா அவை வராயினம், அவை கூட்டம் போட்டா இவை போகாயினம்...இந்த இலட்சணத்தில "ஒற்றுமையாக" ஒரு பொது வேட்பாளருக்கு எல்லோரும் வாக்குப் போட வேண்டுமென்று அட்வைஸ் மழை😎!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இவை கூட்டம் கூட்டினா அவை வராயினம், அவை கூட்டம் போட்டா இவை போகாயினம்...இந்த இலட்சணத்தில "ஒற்றுமையாக" ஒரு பொது வேட்பாளருக்கு எல்லோரும் வாக்குப் போட வேண்டுமென்று அட்வைஸ் மழை

தேர்தல் என்று வந்தால் இவர்கள் சத்தம் கேட்கும்.  அது முடிந்ததும் காணாமல் போய்விடுவார்கள்.  அதுசரி ‘ஒற்றுமை’ என்றால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

IMG-20240605-WA0256-scaled.jpg?resize=75

 

பொது வேட்பாளர் பற்றிய யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடை பெற்ற கலந்துரையாடல் என்று மேலே உள்ள படத்தை பார்த்தால் அது கடவுளை பற்றிய கலந்துரையாடல் போல் அல்லவா தெரிகின்றது 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kavi arunasalam said:

அதுசரி ‘ஒற்றுமை’ என்றால் என்ன?

தமிழ் அகராதியில் அழிந்து விட்ட சொல்.

அதனால் அது பற்றி ஒருவருக்கும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை யாழில் நடாத்தவுள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அறிவித்து இருந்த நிலையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுப்பவர்களில் சிவில் சமூகத்தினர், தாம் இந்நிகழ்வுக்கு செல்ல போவதில்லை என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரனோ அல்லது அவரது தலைவர் சம்பந்தனோ தமிழ் பொதுவேட்பாளர் என்பதை முற்றாக நிராகரித்துவிட்டவர்கள். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் உறுதியாக நிற்பவர்கள். ஆகவே, சுமந்திரன் அழைத்திருக்கும் இந்தக் கலந்துரையாடல் என்பது தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருதுகோள் மீது மக்களுக்கு ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி, மக்களை அதிலிருந்து விலகிச் செல்ல வைக்கும் சூழ்ச்சியே அன்றி வேறில்லை.

சுமந்திரனின் இந்தக் கோரிக்கையினை சிவில் அமைப்பினர் நிராகரித்தமை நியாயமானதே. சரியான முடிவு.

5 hours ago, விளங்க நினைப்பவன் said:

கடவுளை பற்றிய கலந்துரையாடல் போல் அல்லவா தெரிகின்றது

இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கவில்லை. சைவம், கத்தோலிக்கம் ஆகிய தமிழர்களின் இரு பிரதான மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களை வழிநடத்தவேண்டிய அரசியல்த் தலைவர்கள் அடுத்த சிங்கள ஜனாதிபதியை உருவாக்கும் நோக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும்போது, மக்களுக்குத் தலைமை தாங்க மதத் தலைவர்கள் முன்வருவது வரவேற்கப்படவேண்டிய செயலே. பாராட்டுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப்பொறுத்தவரை ஒன்றை புறக்கணிப்பதை விட எல்லாரும் கலந்து கொண்டு சரியான முன்மொழிவை அறுத்துறுத்து கதைத்து சுமா கும்பலின் போலிகளை உடைக்கவேண்டும் . விலகுவதால் யாருக்கு நன்மை . சுமாவுக்குத்தான் . கோமாளி ஆட்டம் எப்பவரைக்கும் ஆடபோகின்ரீர்கள் 

மத போதகர்களும் சாமியார்களும் சேரும் அரசியல் கூட்டுகளில் முற்றாக நம்பிக்கையில்லை. பல்வேறுபட்ட மதங்களைப் பிரதிபலிப்பவர்களின் ஒற்றுமை என்பதே பொய்யானது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2024 at 22:50, இணையவன் said:

மத போதகர்களும் சாமியார்களும் சேரும் அரசியல் கூட்டுகளில் முற்றாக நம்பிக்கையில்லை.

ஈரான் மாணவர்கள் பழைய காலத்தில் முல்லாக்கள் ஈரானுக்கு நல்ல ஆட்சியை கொண்டு வருவார்கள் என்று ஆதரித்தார்களாம் 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பகுதி சொல்கின்றது: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவும். 

இன்னோர் பகுதி சொல்கின்றது: தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தவும்.

பிரிதோர் பகுதி சொல்கின்றது: தமிழ் பொது வேட்பாளரை புறக்கணிக்கவும்.

தமிழ் மக்களுக்கு உள்ள தெரிவுகள் இவ்வளவு தானா ஆக? வேற…? 

அவ்வப்போது ஜனாதிபதி ஆட்சிமுறையையே இலங்கையில் இல்லாது ஒழிப்போம் என பல அரசியல் பிரமுகர்கள் கூறினார்கள். அதை கிடப்பில் போட்டாயிற்றா? 

  • கருத்துக்கள உறவுகள்

பொது வேட்பாளரை முன்னிறுத்துவது இல்லை  என்பதற்கான அரசியல், சட்டக் காரணங்களை சம்பந்தன் கூறியுள்ளார். 

 

பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும் என்பவர்கள் அதற்காக கூறும் காரணம் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பேச்சை நம்பக்கூடாது என்பதே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேணும் என்பதற்கான காரணம் போலும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.