Jump to content

ஜோ பைடனை மாற்ற வலியுறுத்தல்: வேட்பாளராகிறார் மிச்சைல் ஒபாமா?


ஏராளன்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பொது விவாத நிகழ்ச்சியில், ஜனாதிபதி ஜோ பைடனின் வாதம் திறம்பட அமையவில்லை. இதனால், ஜனநாயக கட்சியின் வேட்பாளராக, அவருக்கு பதிலாக மிச்சைல் ஒபாமாவை நிறுத்த வேண்டும் என்ற வாதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், போட்டியிட உள்ளனர்.

விரைவில் நடக்க உள்ள இந்த கட்சிகளின் மாநாட்டில், இவர்கள் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி அண்மையில் நடந்தது.

இதில் இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் வாதங்கள் வலுவிழந்து இருந்தது என, பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, டிரம்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஜோ பைடன் தடுமாறினார். வயது முதிர்வும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இது, ஆளும் ஜனநாயகக் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனால், ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பைடனை மாற்றுவது தொடர்பாக பேச்சு எழுந்து உள்ளது. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி, மிச்சைலை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் பராக் ஒபாமா, ஜோ பைடனுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

‘விவாதத்தில், பைடன் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நாட்டுக்காக செய்த பணிகளை நினைத்து பார்க்க வேண்டும்’ என, அதில் அவர் கூறியுள்ளார்.

https://thinakkural.lk/article/304869

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாகிப் போய்விட்டது சனனாயகக் கட்சியினரின் நிலை. 

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா இது ? சிறிலங்கா ஜனாதிபதி வே;பாளர்கள் யார் என்ற குழப்பம் போல அமெரிக்காவிலும் நடந்து விட்டது.நாட்டின் அதிபர் பதவிக்கு வயது எல்லை நிர்ணயிக்கப்பட வேண்டும். குழப்பங்கள் இப்படியே நீடித்தால் ட்ரம்ப் அதிபராக வருவது தவிர்க்க முடியாததாகப் போகின்றது.                  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பைடன் விலகுவதா? குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 11:28 AM

image
 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடவேண்டும் அவர் போட்டியிலிருந்து விலகக்கூடாது என அவரது குடும்பத்தினர் வற்புறுத்தியுள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடிவிவாதத்தின் போது ஜோபைடன் தடுமாறியதை தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து விலகவேண்டும் என்ற வேண்டுகோள்கள் கருத்துக்கள் காணப்படும் நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜோ பைடன் ஞாயிற்றுக்கிழமை காம்ப் டேவிட்டில் தனது குடும்பத்தவர்களை சந்தித்துள்ளார்.

biden_family.jpg

குடும்பத்தவர்களுடனான சந்திப்பின்போது அவரது அரசியல் எதிர்காலம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

காம்ப்டேவிட் சந்திப்பின்போது ஜோபைடனின் மனைவி பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கலந்துகொண்டுள்ளனர்.

தன்னால் மேலும் நான்கு வருடங்களிற்கு  அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகிக்க முடியும் என்பதை பைடனால் அமெரிக்க மக்களிற்கு நிரூபிக்க முடியும் என குடும்பத்தவர்கள் தெரிவித்தனர் என நியுயோர்க் டைம்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முதல்விவாதத்தில் அவர் மிகவும் பலவீனமான விதத்தில் நடந்துகொண்டதை  அறிந்துள்ள அவரது குடும்பத்தினர் அதேவேளை டொனால்ட் டிரம்ப்பை தோற்கடிக்க கூடிய ஓரேயொருவர் பைடனே என கருதுகின்றனர்.

போட்டியிலிருந்து விலகவேண்டும் என விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கவேண்டும் என ஜோபைடனின் மனைவியும் மகன் ஹன்டருமே அதிகளவிற்கு வற்புறுத்தினார்கள் என ஏபி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/187367

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும்,  கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை.

ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.    

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவர் வந்தாலும் அடுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான்.  ✌️ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

ஜோ பைடனை மாற்ற வேண்டி வந்தாலும்,  கமலா ஹாரிஸ் தவிர வேறு எவரையும் இப்பொழுது பிரேரிக்க முடியாத ஒரு சிக்கல் இருக்கின்றது. பல மாநிலங்களில் ஏற்கனவே வேட்பாளர்களின் பட்டியல் நிரப்பப்பட்டு விட்டது. ஜனநாயக் கட்சியில் ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸின் பெயர் மட்டுமே உள்ளது. இன்னும் நாலு மாதங்களே இருக்கின்றன, வேறு மாற்றங்களுக்கு போதிய நேரம் இல்லை.

ஆனால், பைடன் வென்று பதவிக்கு வந்த பின் வேறு மாற்றங்கள் செய்யக் கூடியதாக இருக்கும்.    

என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து.

ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர்  தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட.

இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால்,  ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது,  தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Justin said:

என்னைப் பொறுத்த வரையில் இது தேவையற்ற ஒரு பதற்றம் நீலக்கட்சியின் பக்கமிருந்து.

ஒருவர் தெளிவான குரலில் 90 நிமிடங்கள் பொய்களையும், தரவேயில்லாத கற்பனைகளையும் அள்ளி வீசுகிறார் (Border crisis .."..they are raping and killing our women.."😂). அவர் வாதத்தில் வென்று விட்டார் என்கிறார்கள். மற்றையவர், இவற்றை சுருக்கமாக மறுத்து விட்டு, உண்மையான நிலையை பலம் குறைந்த குரலில் சொல்கிறார். அவர்  தோற்று விட்டார் என்கிறார்கள் - பலவீனமான குரலில் அவர் சொன்னது 90 வீதம் உண்மையான தகவல்கள் என்றாலும் கூட.

இது ட்ரம்ப்- பைடன் குரல் வளப் பிரச்சினை தாண்டி இன்றைய உலகில் எவ்வளவு இலகுவாக "காற்றில் இருந்து கற்பனையைப் பிடிங்கிப் போட்டு" மக்களை ஏமாற்றலாம் என்பதற்கான உதாரணமாக விளங்குகிறது. ஹிற்லர் இந்தக் காலத்தில் இருந்திருந்தால்,  ஆட்சிக்கு வர 3 - 4 வருடங்கள் போராடியிருக்க வேண்டியிருந்திருக்காது,  தன் அல்ப்ஸ் மலை சொகுசு மாளிகையிலிருந்தே ஒரு வருடத்தில் ஆட்சியைப் பிடித்திருப்பார்! - அப்படி பட்ட உலகில் வாழ்கிறோம்! 

மார்க் கியூபன் என்ன சொல்லியிருக்கின்றார் என்று பாருங்கள்:

"Feeble, Capable and Ethical vs Vigorous, Unethical and Incapable of telling the truth. I'll vote ethical every time."

அவர் ஒரு AI Analysis ம் செய்திருக்கின்றார்........ 

https://www.newsweek.com/mark-cuban-trump-biden-election-chat-gpt-x-twitter-1919360

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்க சார்புடைய ஊடக தர்மங்கள் நீண்ட காலம் நிலைக்காது என்பதும் அமெரிக்காவில் இருந்தே ஆரம்பிக்கின்றது.


பழையன கழிதலும்  புதியன புகுதலும் என்ற  புதிய சிந்தனையும் அமெரிக்காவிலிருந்தே ஆரம்பிக்கட்டும்.

பழசுகளின் தொல்லை தாங்கமுடியவில்லை 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து பைடன் விலகவேண்டும் - கருத்துக்கணிப்பில் 39 வீதமான ஜனநாயக கட்சியினர் தெரிவிப்பு

03 JUL, 2024 | 11:49 AM
image
 

ஜனநாயக  கட்சியின்  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக போட்டியிடுவதிலிருந்து  அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுவது  ரொய்ட்டர்ஸ் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான முதலவாது நேரடி விவாதத்தின்போது ஜோ பைடன்  தடுமாற்றத்துடன் காணப்பட்டதை தொடர்ந்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும் என ஜனநாயக கட்சியின் மூன்றில் ஒருவர் கருதுகின்றனர் என ரொய்;;ட்டர் தெரிவித்துள்ளது. 

இதேவேளை பதிவு செய்யப்பட்ட வாக்களர்களில் 40 வீதமானவர்கள் பைடனையும் 40 வீதமானவர்கள் டிரம்பினையும் ஆதரிக்கின்றனர் என  கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ரொய்ட்டர் நேரடி விவாதத்தின் பின்னர் பைடனி;ற்கான ஆதரவு வீழ்ச்சியடையவில்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது என குறிப்பிட்டுள்ளது.

 முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான நேரடி விவாதத்தின்போது தடுமாறியதை தொடர்ந்து  பைடன் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் முயற்சிகளை கைவிடவேண்டும் என 39 வீதமான ஜனநாயக கட்சியினர்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பைடனிற்கு பதில்  ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு  தகுதியானவர் என ரொய்ட்டர் முன்வைத்த பெயர்களில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமாவிற்கு அதிக ஆதரவு கிடைத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187574

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மற்றைய இரண்டுபேர்களுடனும் சொறிச்சேட்டை விட்டால் மறவன் புலவை மறந்த புலவாக்கும் அளவுக்கு கூடி கும்மியெடுத்துவிடுவார்கள் அதுமட்டுமல்ல சிங்கள கிறீஸ்தவ பறங்கிப்படையுடனும் ஐயா சொறியமாட்டார் . தமிழ் கிறீஸ்தவர்கள் சிறுபான்மையிலும் சிறுபான்மை அல்லவா. ஆனாலும் ஒரு விஷயத்தை கவனித்தீர்களா வர வர மறவன்புலவு கூட நிக்கும் ஆட்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகுது. நல்ல சகுனமில்லை இது  
    • ஆஹா...... ரொம்பவே வக்காலத்து வாங்குகிறீர்கள். காயம் பட்ட மக்களுக்கு மருந்து இல்லை, மக்கள் இறக்கின்றனர் மரத்தின்  கீழே சிகிச்சை அளிக்கிறோம் என பிரதம வைத்தியர் வேண்டுகோள் வைத்தபோது இவர்கள் ஏன் வரவில்லை? அனுமதிக்கப்படவில்லை? இவர்கள்  எங்கிருந்து  கோரிக்கை  வைத்தார்களோ   அங்கு மறுநாள் குண்டுபோட்டு காயம்பட்டவர்களை கொல்ல முடிந்தது எப்படி? அப்போ இவர்களெல்லாம் எங்கே போயிருந்தார்கள்? சாட்சிகளில்லாமல் தாம் அழிக்கப்படப்போகிறோம் என்பதை உணர்ந்த மக்கள் தங்களை விட்டுப்போகவேண்டாமென  கதறிய போது ஏன் வெளியேறினார்கள்? யார் வற்புறுத்தலின் பேரில் வெளியேறினார்கள்? வெளியேற்றப்பட்டவர்களால் எப்படி இத்தனை அழிவுகளின் பின் யார், இவர்களை ஏன் அனுமதித்தார்கள் என்பதை யோசித்தால் இவர்கள் யாருக்காக எவ்வாறு   செயற்பட்டார்கள் என்பது புரியும். தங்கள் பிள்ளைகளை உயிரோடு  பாதுகாப்பாக திரும்பி வருவார்கள் என அள்ளிக்கொடுத்து விட்டு கண்ணீரோடு பல ஆண்டுகளாக தெருத்தெருவாக  தேடி அலைகிறார்களே, அவர்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாததும் ஏன்? இவர்களை ஒருமுறையாவது சம்பந்தர்  சந்தித்து ஆறுதல்  சொன்னாரா? சொல்லுங்க சார்! யாராலும் எதுவும் செய்ய முடியாதென்பதல்ல, ஒரே தலைமைத்துவத்தின், கொள்கையின்  கீழ் மக்களுக்காக அரசியல்  செய்தால், ஓநாய்கள், ஓணான்கள், அரசியல்  யாசகர்கள்  ஒதுங்கியிருந்தால் அல்லது மக்களால் விரட்டியடிக்கப்பட்டால் எதுவும் முடியும். 
    • இது இயக்கச்சி ஆட்டிலறிப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் தொடர்பான ஈரத்தீ திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நானும் முதன் முதலில் இங்கு தான் இப்பாடலை செவிமடுத்தேன். அன்றிலிருந்து எல்லா இசைத்தட்டுக்களிலும் தேடிய போதிலும் எங்கினும் கிடைக்கவில்லை. பின்னர் நேற்று தற்செயலாக ஒரு ஒளிவீச்சை கேட்க நேர்ந்த போதுதான் கண்டுபிடித்தேன். அதில் பாடும் ஆணின் குரல் பாடல் வரிக்கு கொஞ்சம் கூட நன்றாக இல்லை; நித்திரை வாற மாதிரி இருக்குது. ஆனால் பாடல் வரிகள் அந்த மாதிரி இருக்கு. எழுச்சியாக பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.    
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.