Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1000266112.jpg?resize=750,375&ssl=1

ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!

2005ல் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்புக்களையும் சந்தித்தோம் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

அது மாத்திரமல்ல, ஆசியாவிலேயே சிறந்த தலைவராக ரணில் விக்கிரமசிங்க விளங்குவதாக அமெரிக்க தூதுவர் கூறியிருக்கின்றார்.

2005ம் ஆண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் இன்றைய ஜனாதிபதிக்கு வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அன்று மக்கள் வாக்களித்திருந்தால் இன்று எமது மக்கள் இழப்புக்களை சந்தித்திருக்கமாட்டார்கள்.

யுத்த இழப்புக்கள், உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்களை தடுத்திருக்கலாம். அந்த பிழையை இனியும் விடாது அனைத்து தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், மலையக மக்களும், சிங்கள மக்களும் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களித்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு யாருக்கும் இருக்கின்றது.

அண்மையில் பங்களாதேசில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த பிரதமரை நாட்டை விட்டே வெளிேயேற்றியிருக்கிறார்கள். அதே போல இந்த நாட்டின் ஜனாதிபதியையும் துரத்தி ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்தார்கள்.

அவ்வாறான நிலையில் நாட்டை மீட்டுத் தந்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்” என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1396652

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அண்மையில் பங்களாதேசில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக அந்த பிரதமரை நாட்டை விட்டே 

ம் வேறை.   அரசியல் புலியாக இருக்குறீர்கள்.

அவர் நாட்டை கட்டி எழுப்பியது போல் யாரும்  பங்களாதேசை கட்டி எழுப்பவில்லை.சிறிலங்காவுக்கு கடல் வழங்கியதாவது நினைவில் உள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

அம்மணிக்கு ..உணர்ச்சி மேலிடுகிறது...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

ம் வேறை.   அரசியல் புலியாக இருக்குறீர்கள்.

அவர் நாட்டை கட்டி எழுப்பியது போல் யாரும்  பங்களாதேசை கட்டி எழுப்பவில்லை.சிறிலங்காவுக்கு கடல் வழங்கியதாவது நினைவில் உள்ளதா?

கணவர் மகேஸ்வரனின்... அகால மரணத்தால், 
திடீரென்று அரசியலுக்கு வந்து அமைச்சர் ஆனவர்தான் விஜயகலா மகேஸ்வரன்.
பங்களாதேஷில் நடந்த விஷயத்தை... நியூஸ் பேப்பரில் அவ பார்க்கவில்லைப் போல் உள்ளது.😂
அவ சொன்னதையும்... நம்புறதுக்கு ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கின்றேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:
4 hours ago, nunavilan said:

ம் வேறை.   அரசியல் புலியாக இருக்குறீர்கள்.

அவர் நாட்டை கட்டி எழுப்பியது போல் யாரும்  பங்களாதேசை கட்டி எழுப்பவில்லை.சிறிலங்காவுக்கு கடல் வழங்கியதாவது நினைவில் உள்ளதா?

கணவர் மகேஸ்வரனின்... அகால மரணத்தால், 
திடீரென்று அரசியலுக்கு வந்து அமைச்சர் ஆனவர்தான் விஜயகலா மகேஸ்வரன்.
பங்களாதேஷில் நடந்த விஷயத்தை... நியூஸ் பேப்பரில் அவ பார்க்கவில்லைப் போல் உள்ளது.😂
அவ சொன்னதையும்... நம்புறதுக்கு ஆக்கள் இருக்கினம் என்று நினைக்கின்றேன்

அந்தம்மாவும் என்னதான் செய்கிறது?

போடுற எலும்புக்கு வாலையாட்டத் தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

,

கொரோனா மற்றும் பொருளாதாரத்தினால் வீழ்ச்சியைடைந்திருந்த இந்த நாட்டை கடந்த இரண்டு வருடங்களில் எவ்வாறு நாட்டை மீட்டார் என்பதை இந்த நாடும் உலகமும் அறிந்த பெருமைக்குரிய நல்ல தலைவராக ரணில் விக்ரமசிங்க உள்ளார்.

 

இந்த விடயம் நூறுவீதம் உண்மை.. மகிந்த போன்ற ஒரு முட்டாள் அதிபரால் ஒருபோதும் இந்த நாட்டை இந்தளவுக்கு மீட்டிருக்க முடியாது.. இன்று மக்கள் ஏதோ ஒரளவுக்காவது அந்த இருண்ட பொருளாதார யுகத்தை கடந்து இன்று வாழ்கிறார்கள் என்றால் அதற்கு ரணிலின் சாமர்த்தியமும் ஒருகாரணம்.. ரணிலை நரி என்பார்கள்.. அது உண்மைதான் என்பதை ரணில் ஆட்சிக்கு வந்த பின்னான காலப்பகுதியில் கண்ணால் காண்கிறேன்..

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ரணிலுக்கு வாக்களிக்காததே நெருக்கடிக்கு காரணம் – விஜயகலா!

இந்தம்மா பயங்காட்டுது. அதாவது 2005 இல் ரணிலுக்கு வாக்களிக்காமல் விட்டதால், அலிசாஹிர் மவுலானாவை பயன்படுத்தி கருணா அம்மானை பிளவுபடுத்தி புலிகள் இயக்கத்தை ரணில் பலவீனம் அடையச்செய்தார்.  இப்ப வாக்களிக்காமல் விட்டால்  இது மாதிரி வேறு ஏதும் நடக்கலாம் என அம்மணி கூறவிழைகின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, வாலி said:

இந்தம்மா பயங்காட்டுது. அதாவது 2005 இல் ரணிலுக்கு வாக்களிக்காமல் விட்டதால், அலிசாஹிர் மவுலானாவை பயன்படுத்தி கருணா அம்மானை பிளவுபடுத்தி புலிகள் இயக்கத்தை ரணில் பலவீனம் அடையச்செய்தார்.  இப்ப வாக்களிக்காமல் விட்டால்  இது மாதிரி வேறு ஏதும் நடக்கலாம் என அம்மணி கூறவிழைகின்றார்!

அந்த பயத்திலும் உண்மை உள்ளது. சிலவேளை இந்தமுறை வாக்களிக்காவிட்டால் அலிசாஹிர் மௌலானாவை வைத்து இந்த அம்மாவையே  பிளவுபடுத்தி போடுவாரோ ரணில் என்று பயப்படுது  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.