Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
16 SEP, 2024 | 02:56 PM
image

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளியுறவுத் துறை முயற்சி: இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம்வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது:

வேலை மோசடி: வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது.

பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார், இவ்வாறு அவர்கள் கூறினர்.

https://www.virakesari.lk/article/193854

  • கருத்துக்கள உறவுகள்

ரசியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்????

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:
16 SEP, 2024 | 02:56 PM
image

புதுடெல்லி: ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யாவில் பாதுகாவலர் வேலை, உதவியாளர் வேலை என மோசடி கும்பல் இங்குள்ள 60 இளைஞர்களை ரஷ்யாவுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ரஷ்யாவின் தனியார் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிலர் டிரோன் தாக்குதலில் இறந்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த ஹமில் என்பவர் டிரோன் குண்டு தாக்குதலில் உயிரிழந்தார். அபாயமான சூழலில் சிக்கியுள்ளதை அறிந்த தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன் என்பவர் 7 மாதங்களுக்கு முன்பு ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தங்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளியுறவுத் துறை முயற்சி: இதையடுத்து ரஷ்ய ராணுவத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அந்நாட்டு அரசிடம்வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. தற்போது ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இந்தியர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் 4 பேர் தற்போது நாடு திரும்பியுள்ளனர். இவர்களில் தெலங்கானாவைச் சேர்ந்த முகமது சுபியன், கர்நாடகாவைச் சேர்ந்த சையத் இலியான் உசைனி ஆகியோர் கூறியதாவது:

வேலை மோசடி: வெளிநாட்டு வேலை எனக் கூறி இந்தியாவில் இருந்து 60-க்கும்மேற்பட்ட இளைஞர்கள் மோசடியாக கடந்தாண்டு ரஷ்யா அனுப்பப்பட்டோம். நாங்கள் அனைவரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டோம். காலை 6 மணியிலிருந்து தொடர்ந்து 15 மணி நேரம் எங்களுக்கு ஓய்வின்றி வேலை கொடுக்கப்பட்டது.

பதுங்கு குழிகள் தோண்டுவது, துப்பாக்கி சுடுவது, கையெறிகுண்டுகளை வீசுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன. குறைவான உணவு அளிக்கப்பட்டு கடினமான வேலைகள் வழங்கப்பட்டன. நாங்கள் சோர்வடைந்தால் துப்பாக்கியால் சுட்டு மிரட்டுவர். செல்போன்களை பறித்து வைத்துக்கொள்வர். அதிக மனஅழுத்தமான சூழ்நிலையில் நாங்கள் உக்ரைன் போரில் பணியாற்றினோம். எங்களுடன் வந்த குஜராத்தைச் சேர்ந்தஹமில் ட்ரோன் குண்டு தாக்குதலில் உடல் சிதறி உயிரிழந்தது, எங்களைஉலுக்கியது. இதனால் நாங்கள் எங்கள் குடும்பத்தினரை தொடர்புகொண்டு மீட்பதற்கு வேண்டுகோள் விடுத்தோம். நாங்கள் நாடு திரும்ப வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நடவடிக்கை எடுத்தார், இவ்வாறு அவர்கள் கூறினர்.

https://www.virakesari.lk/article/193854

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும்  வட இந்திய  மாணவர்களுக்கு ஆங்கிலம் சுத்தமாய் தெரியாது முன்பின் தெரியாதவர்களிடம் எடுத்த எடுப்பிலே  ஹிந்தியிலே கதைக்க தொடங்குவார்கள் அதே விளையாட்டை ரஷ்யர்களிடம் தொடங்கி இருந்து இருப்பார்கள் வாங்கி கட்டிக்கொண்டு நாடு திரும்பி இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

ரசியர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்????

இராணுவத்தில் என்ன அரசர்கள் போலா நடத்துவார்கள்? 

😁

  • கருத்துக்கள உறவுகள்

மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kapithan said:

இராணுவத்தில் என்ன அரசர்கள் போலா நடத்துவார்கள்? 

😁

உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, 
வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன்.

ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும்  நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார்.

இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள்.

முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம்.

போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, ஏராளன் said:

ரஷ்ய ராணுவத்தினரால் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக தாய் நாடு திரும்பிய இந்திய இளைஞர்கள் கூறியுள்ளனர்.

உங்கட பருப்பு எல்லா இடமும் அவியாது கண்டியளோ......உங்கட நாட்டில இருக்கிற சக பிரஜைகளை சமமாக நடத்த பாருங்கோ.....அதுக்குப்பிறகு மற்றவர்களுக்கு பாடம் எடுக்கலாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

உண்மைதான்! இராணுவத்தில் நிலவரம் எப்போதும் பாதகமாக இருப்பதனாலேயே அதிக கட்டுப்பாடு கொண்ட துறையாக இருக்கிறது, 
வட இந்தியர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் அவர்கள் ஒரு வித்தியாசமானவர்கள்.நாங்கள் ஒரு புதிய உற்பத்தியினை ஆரம்பிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தோம், நான் தலைமை பொறுப்பு எடுப்பதில்லை இருந்தும் என்னை இந்த மாதிரியான சிக்கலில் மாட்டி விடுவார்கள், அப்படித்தான் அந்த உற்பத்தி முயற்சியில் வேலை செய்யும் போது என்னுடன் ஒரு வட இந்தியர் ஒரு பாகிஸ்தானியருடன் வேலை செய்ய வேண்டியிருந்தது அவர்களின் மத அனுட்டானங்களின் பிரகாரம் பலதடைவை வழிபட வேண்டும் அதனை உணர்ந்தமையால் அவர்கள் கழிவறைக்கு செல்வதாக கூறி ஒவ்வொரு முறையும் கூறும் போது எனக்கு அதனை பற்றி சொல்லத்தேவை இல்லை நீங்களாகவே எப்போது வேண்டுமானாலும் சென்று வாருங்கள் என கூறியிருந்தேன்.

ஒரு கட்டத்தின் பின் இருவரையும் காணவில்லை ஒரு மணித்தியாலம் ஒன்றைரை மணித்தியாலம் என நேரம் செல்ல செல்ல முழு வேலையின் அழுத்தங்களையும்  நானே பார்க்க வேண்டியதாக இருந்தது (பல பரிசோதனைகள் செய்யவேண்டும்), ஆனால் அந்த இருவரையும் காணவில்லை! எமக்கு உதவியாக இருந்த இயந்திரவியலாளர் நிலமையினை உணர்ந்து எனக்கு உதவ முயன்று ஒரு கட்டத்தில் பொறுமையிழந்துவிட்டார்.

இந்த மாதிரியானவர்கள் இந்திய இராணுவத்தில் பயிற்சிக்காலத்திற்குக்கூட தாக்குப்பிடிக்கமாட்டார்கள்.

முன்னர் 86 களில் புலிகள் அமைப்பில் இணைய விரும்புகின்றவர்களை முதலில் சென்றியில் விடுவதுண்டு பின்னர் அந்த நிலைகளின் பக்கமாக துப்பாக்கியால் சுடுவார்களாம் அதில் பெரும்பாலானோர் அலறி அடித்துக்கொண்டு ஓடி விடுவார்களாம், அதில் நிற்பவர்களை மட்டும் எடுத்துக்கொள்வார்களாம்.

போர் அழுத்தம் நிறைந்த ஒன்று ஆனால் தலமை தாங்குபவர்கள் அந்த அழுத்தத்தின் தீவிரத்தினை அணி வீரர்களுக்கு கடத்தக்கூடாது என்பார்கள் அப்படி கடத்தினால் அணிவீரர்கள் மனதளவில் அழுத்ததிற்குள்ளாவார்கள் அது அவர்களை இலகுவாக சோர்வடைய செய்துவிடும், மோசமான தளபதிகள் தமது இயலாமையினை அணிவீரர்களின் மேல் இறக்கி வைத்துவிடுவார்கள்.

 

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, Kapithan said:

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

 இந்தியா அகிம்சை தேசமாம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

மியன்மாரிலுள்ள சைபர் கிரைம் முகாமிலும் இப்படித்தான் இந்தியா, இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேலைக்கென்று அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இந்த நாடுகளுக்கு எல்லாம் எவரும் வேலைகளுக்கு போகலாமா............. ரஷ்யா, மியன்மார், வட கொரியா, ஈரான்,.............இப்படியான நாடுகளுக்கு ஆதரவாக இன்டெர்நெட்டில், சமூக ஊடகங்களில் எழுதலாம். ஆனால் அங்கே தப்பித்தவறியும் போய் விடக்கூடாது........ 

ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, வாலி said:

ஏன் அவை உங்கையெல்லாம் போகப்போயினம். நல்ல பாதுகாப்பான நாடுகளுக்குப்போய் இருந்துகொண்டு கண்ணாடிக்கு கல்லெறிஞ்சுகொண்டெல்லே நிக்கினம்!😂

நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். 

இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள்.  உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்?   

என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

நீங்கள் ச்சொல்லுறதும் சரிதான். 

இலங்கையில் குண்டு விழும்போது எல்லாரையும் அம்போ என்று விட்டுவிட்டு இங்க ஓடுவந்து ஒழிஞ்சுகொண்டு, ஈழத்திலிருப்பவர்களை அடியடா, வெட்டடா என்று உசுப்பிவுடுகிற ஆட்களெல்லோ நாங்கள்.  உந்த ரத்தத்தில இருக்கிற குணம் என்னெண்டு விட்டுப்போகும்?   

என்ன நாஞ்சொல்லுறது சரிதானே,...😁

ஓம் நீங்கள் சொல்றது நூற்றுக்கு நூறு வீதம் சரி.

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

ஏன் இந்தியனை மரியாதையாக நடாத்த வேண்டும்? 

யாராவது ஒரு காரணம் சொல்லுங்கோ,..🤣

மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁

2 hours ago, வாலி said:

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏

பந்தி முடியிற நேரம் வந்திருக்கியல், சரி பரவாயில்லை! திரும்ப ஊர் போக கொஞ்சம் லேட்டாகும் அவ்வளவுதான்😁.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

குறிப்பு: நான் முதல் வெடி வெடிக்கமுதலே ஓடிவந்து அசைலம் அடிச்சிட்டு அடுத்தவனை உசுப்பேற்றி விடுற ஆள் இல்லை. 2009 வரை தாயகதில் வாழ்ந்துவிட்டு 2010 இன் பின்னர் எல்லா வெடிச் சத்தமெல்லாம் நிண்டாப் பிறகு முறையாக சட்டரீதியாக குடும்பத்தோடு இங்கு வந்து குடியேறிய ஆள்! என்பதனையும் கவனத்தில் கொள்க.😏 

அதாகப்பட்டது, தாங்கள்  அங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்றீர்கள், நாங்களெல்லோரும் இங்கே இருந்துகொண்டே அடியடா வெட்டடா என்று கூவினோம் என்கிறீர்களா,.....😉

Just now, vasee said:

மற்றவர்கள் மதிகும்படி பல நல்ல நல்ல காரியங்கள் செய்வதால்.😁

அந்தப் பல நல்ல காரியங்களில் ஒரு நல்ல காரியத்தை ஒருக்காச் சொல்லுங்கோ , போற வழிக்குப்  புண்ணியமாகப் போகும்,.🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.