Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்  கிழக்கு  தேன் சிட்டு ...

இந்த பாடலில் ஒரு வரி 

பனங் கறுக்கும் பால் சுரக்கும்

இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, பிரபா said:

தென்  கிழக்கு  தேன் சிட்டு ...

இந்த பாடலில் ஒரு வரி 

பனங் கறுக்கும் பால் சுரக்கும்

இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

https://www.facebook.com/reel/1078287266973651

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, nunavilan said:

நன்றி நூணாவிலான். 

ஆனாலும் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
கவிஞர் பன மரம் கறுக்கும் என்கிறாரா அல்லது பணம் கறுக்கும் என்கிறாரா?
பன மரம் கறுக்கும் என்றால் அதால நன்மை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா said:

பனங் கறுக்கும் பால் சுரக்கும்

இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

தேடலில் இரண்டு பொருட்கள் வந்தன:

1. பனங்கறுக்கு: தொரட்டி. தேங்காத் தொட்டி. நாச்சோத்துக் கும்பம். உரிக்காக் கொடி. கத்தக்கொடி. 

தொரட்டி கூட பால் சுரக்கும் என்று மிகையாக சொல்லி இருக்கின்றார்கள் போல.

__________________________

2. ஒரே சொல்லாகப் பார்த்தால், கருக்கு மட்டையை இப்படி எழுதலாம் போலத் தெரியுது. பனங்கறுக்கு(ம்) பால் சுரக்கும் என்று இங்கேயும் மிகையாகச் சொல்ல வந்திருக்கின்றார்கள் போல.

இது விக்கியில் இருந்து. கருக்கு மட்டையை பனங்கறுக்கு மட்டை என்று எழுதும் வழக்கம்.

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா said:

பனங் கறுக்கும்

பனங்கருக்கும்.... என்பது பனைமட்டையிலே உள்ள ''கருக்கு'' என்று அழைக்கும் கூர்மையான பகுதியாகும். காயங்களை ஏற்படுத்த வல்லது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

பனங்கருக்கு என்பதை ஊரில கருக்குமட்டை என்று சொல்றனாங்கள்.(இதாலை அடிவாங்கின நிறையப்பேர் இருக்கினை). 😂

ஆனால் கருக்கு என்பதற்கு இளநீர் என்றும் பொருள்கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாலி said:

பனங்கருக்கு என்பதை ஊரில கருக்குமட்டை என்று சொல்றனாங்கள்.(இதாலை அடிவாங்கின நிறையப்பேர் இருக்கினை). 😂

ஆனால் கருக்கு என்பதற்கு இளநீர் என்றும் பொருள்கொள்ளலாம். 

பனங் கறுக்கும்: பாளை தள்ளாத் காலப்பகுதியில் பனை மரங்களின் ஓலைகள் மிகவும் ஐதாக நெருக்கமின்றிக் காணப்படும். பாளை வெளித் தள்ளும் காலப்பகுதியில் (Season)  பனை மரங்கள் பனங்காய்களால் நிரம்பி பனை மரமே கறுத்துப்போய் கறுப்பாகக் காணப்படும். 

பால் சுரக்கும் என்பது 

பால் : பதநீர் / கள்ளு சுரக்கும் . பாளை வெளித்தள்ளும் காலத்தில்தான் பதநீர் / கள்ளு இற்க்க முடியும். 

இது எனது  கற்பனை/யூகம் மட்டுமே. 😁

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா said:

தென்  கிழக்கு  தேன் சிட்டு ...

இந்த பாடலில் ஒரு வரி 

பனங் கறுக்கும் பால் சுரக்கும்

இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?

நான் படத்தை பார்க்கவில்லை.

அனால் வரிகளை பார்க்கும் போது,

பனங்கறுக்கும் (உண்மையில் இதுவா உச்சரிப்பு அல்லது பணங்கறக்கும் என்பதை   பனங்கறுக்கும் 
என்று உச்சரிக்கப்பட்டு விட்டதோ என்றும் யோசிக்க வேண்டி  இருக்கிறது)

பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது தான் (பாடல்  வரிகளின் உண்மையான) உச்சரிப்பானால்,

பனங்கறுக்கும் என்பது பனங்கிழங்கு அறுவடை என்ற கருத்தை , பால் சுரக்கும் என்ற தொக்கினால் எடுக்கிறது.

அவை இரண்டும், பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது,  இயற்கை தரும் வளத்தையும், அவை இயற்கையாக  தரும் தாய்மை  தன்மையை ( பாடலி உருவகப்படுத்துவதற்க்கும்) ,  (எதிர்கால) செழிப்பையும் குறிக்கிறது (பாடலின் அல்லது படத்தில்   வரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு). 

மற்றது, (பனங்)கருக்கு (மட்டை) என்பதே சரி, வெய்யிலில் கருகி, குறிப்பாக கருகி, கருமையாக பனை மட்டையின் கூரிய விளிம்பாக இருப்பது.   கருகிய தன்மையை வளத்துடன், செழிப்புடன் ஒப்பிட முடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

"பனங்கருக்கும் பால் சுரக்கும்" பனங்கருக்கு என்றால் பனை மட்டையின் ஓரத்தில் இருக்கும் கறுப்பு நிறத்திலான மரம் வெட்டும் வாள் முள்ளுகள் போல் இதில் இருக்கும் முட்களை "கருக்கு" என்று கூறுவது உண்டு. இந்த முட்களும் பால் சுரக்கும் என்றும் அல்லது கரடு முரடான மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று உவமைபடுத்தி கவிதையாசிரியர் எழுதியிருக்கலாம்.🥰

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, nochchi said:

பனங்கருக்கும்.... என்பது பனைமட்டையிலே உள்ள ''கருக்கு'' என்று அழைக்கும் கூர்மையான பகுதியாகும். காயங்களை ஏற்படுத்த வல்லது. 

நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

ஆமா அதுதான்👍, அந்த கருக்கை வெட்டினால், அந்த வெட்டிய பகுதியில் நீர் வடியும்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளிறக்கும் பனைகளில், இந்த கருக்கை சீவி விட்டுவிடுவார்கள்,

அதுவே எங்களுக்கும் வசதி😁, அப்பதான் இலகுவாக வட்டுக்குள் ஏறி இருந்து முட்டியை கலட்டி அப்படியே புளிக்காத கள்ளை (அமிர்தம்) குடித்துவிட்டு, திரும்பவும் முட்டியை கட்டி வைத்துவிட்டு இறங்கி விடுவோம்😇

  • கருத்துக்கள உறவுகள்

 பனங்கருக்கும் பால் சுரக்கும்
அத நெனச்சே நீ கொண்டாடு
பசி மறக்கும் நாள் பிறக்கும்
வலி மறந்தே நீ கூத்தாடு......!

 காலம் எப்போதும் இப்படியே இருக்காது தம்பி . ....... ஒருநாள் உன்னுடைய உடல் வலியும் மாறும் , பசிப்பிணியும் தீரும் கலங்காதிரு . .......அந்த வேளை கூடிவரும் பொழுது பனங்கருக்கும் ( "ம்" ஐ கவனிக்கவும் ) பால் சுரந்து உன் பசி போக்கும் ........! பொதுவா கருக்குள் இருந்து  பால் சுரக்காது, ஆனால் இது கவிஞரின் சிறப்பான உவமை . .....அந்த வாழை படமே உடல் வலியோடும் பசிப்பிணியோடும் நகர்ந்து செல்லும் படம் . .......!

--- " பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் " 

--- தீ வந்து விறல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் " 

அதாவது ஓவியத்தில் இருந்த பூவும் மனக்காது , தீயும் சுடாது .....அதுபோல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற  மிகையான கற்பனை ......!

--- அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே . .....!

 வானத்துக்கு மனமும் கிடையாது குணமும் கிடையாது அதுபோல ......!

 

 

(விரல் )

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

ஆமா அதுதான்👍, அந்த கருக்கை வெட்டினால், அந்த வெட்டிய பகுதியில் நீர் வடியும்

 

7 hours ago, suvy said:

 காலம் எப்போதும் இப்படியே இருக்காது தம்பி . ....... ஒருநாள் உன்னுடைய உடல் வலியும் மாறும் , பசிப்பிணியும் தீரும் கலங்காதிரு . .......அந்த வேளை கூடிவரும் பொழுது பனங்கருக்கும் ( "ம்" ஐ கவனிக்கவும் ) பால் சுரந்து உன் பசி போக்கும் ........! பொதுவா கருக்குள் இருந்து  பால் சுரக்காது, ஆனால் இது கவிஞரின் சிறப்பான உவமை . .....அந்த வாழை படமே உடல் வலியோடும் பசிப்பிணியோடும் நகர்ந்து செல்லும் படம் . .......!

 கவிதைக்குப் பொய்யழகு என்று சுட்டுகிறது இலக்கியம். இந்தப்பாடலில் அதியுச்சமாக  பனைமட்டையிலுள்ள கருக்கை சீவிவிடும்போது நீர்வடிவதைப் பால்வடியும் என உவமைப்படுத்தியுள்ள பாங்கு கவிதைக்கே உரியது. படம்பார்த்த சுவியவர்களின் ஒப்பீடும் கவனத்திறகுரியது. கருக்குமட்டையை விட பச்சைமட்டை ஒருகாலத்தில் பல சேட்டைகளைக் குறைத்து வைத்திருந்தது ஏனோ நினைவுக்கு வருகிறது. 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.