Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி  அவர்களின் செவ்வி.   2009 வரை போராட்டத்திற்க்காக  தன்னை  முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 

கேட்க கேட்க விசர் வருகுது.
 

கண்டிப்பாக கேட்க வேண்டிய பேட்டி

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் பேட்டியை கேட்க கேட்க நெஞ்சு நோ வந்திட்டுது . .......அத்தனையும் நியாயமான பேச்சு ......முன்பென்றால் ஒரு முட்டைக் கோப்பி குடித்து ஆத்தலாம் . .....இப்ப நான் அதுவும் குடிக்கிறேல்ல ......அதைவிட பேட்டியிலும் முட்டைதான் பேசுபொருளாய் இருந்தது . .......!  

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா சொல்வதில் தாயக அரசியல் தவிர்த்து மற்ற அனைத்தும் உலகமயமாக்கல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தான். விவசாயம் குளம் நீர் ஆடு மாடு வளர்ப்பு எல்லாம் உலகம் முழுவதிலும் அருகிவருகிறது. இவற்றிற்குக்கு அடுத்த அடுத்த தலைமுறைகள் செவி சாய்ப்பார்களா?? இணைய வழிகளில் சில மணிநேரத்தில் அனைத்தும் வீடு தேடி வரும் காலத்தில்.....

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நிருபர் கேட்கின்றார் சிறிதரன் சொன்னாரே சிறுவர் தினம் என்று வந்தால்  பிரபாகரன் அவர்களுடைய மகன் தன்னை சுற்றி சுற்றி வந்த நினைவுகள் தான் வருகின்றது அதற்கு அம்மையார் இதற்கு மேலே ஒரு பெரிய பொய் உலகத்தில் இருக்க முடியாது என்று உண்மையை தெரிவிக்கின்றார். சிறிதரன் பொய்கதைகள் பேசி உசுப்பேற்றி தமிழர்களை ஏமாற்றி அரசியல் செய்து வந்திருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளங்களை தூர்வார்வதற்கு பதிலாக  குளத்தில் மண் நிரப்பி வீடு கட்டுகிறார்கள் என்றால்......

அந்த பூமியும் மக்களும் அழியப்போகின்றார்கள் என்றே அர்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரணில்  நாட்டின் பொருளாதாரத்தை சிறிய காலத்தில் மாற்றியமைத்தவர் என்பதால் வாக்களித்தார் என்று கூறிய அவர்,  

தான் வாக்களித்தவர் வெல்ல மாட்டார் அல்லது  வெல்லக்கூடாது என்று ஏற்கனவே தீர்மானித்து ரணிலுக்கு வாக்களித்திருக்கின்றார்

எனக் கூறுவதை   வைத்தே சில கருத்துக்களில் முரண்பாடு இருக்கின்றது

இருந்தாலும் துணிந்து பல உண்மையான கருத்துக்களைக்  கூறும் இவர்

ஏன் தேர்தல் களத்தில் குதிக்கவில்லை  என்பது கேள்விக்குறியாக உள்ளது

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2024 at 07:54, வாத்தியார் said:

இருந்தாலும் துணிந்து பல உண்மையான கருத்துக்களைக்  கூறும் இவர்

ஏன் தேர்தல் களத்தில் குதிக்கவில்லை  என்பது கேள்விக்குறியாக உள்ளது

ஐயோ..... இருக்கிற கட்சிகள் போதாதென்று நீங்கள் வேறை! இவர்களை யார் கட்சியில் சேர்ப்பார்கள்? எல்லாம் சிங்கள துதி பாடி, தம்மை வீரர்களாக காட்டும்போது, இவர்கள் உண்மையை பேசி வேட்டியை உருவி.  மானத்தை வாங்கி விட மாட்டார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் மனமாற்றத்தையும் அதற்கான காரணத்தையும் நிஞாய பூர்வமாக  வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த்தேசியம் என்பதை விட்டு விலகி, எனது கிராமம், வீடு என்று மக்கள் சிந்திக்க தொடங்கி விட்டார்கள். ஏன்,அதற்கு யார் காரணம்? நாங்கள் சிங்கள, தமிழ் மொழியை கற்று சமாதானமாக வாழ, நாட்டை கட்டியெழுப்ப முன்னேற்ற  தயாராகிவிட்டார்கள். ஆனால் வற்புறுத்தி சாதிப்பதை வெறுக்கிறார்கள். இந்த ஒன்று இல்லையென்றால் தமிழ் தலைமைக்கும், சிங்கள தலைமைக்கும் அரசியல் சூனியம். ஆகவே, தமிழ்த்தேசியம் பேசி மக்களை உசுப்பேற்றி ஏமாற்றுபவர்களையும்  இனவாதம் பேசி அரசியல் குளிர் காய்பவர்களையும் மக்கள் விரட்டியடிக்க  வேண்டும்.  இதற்கு  இரு பக்க மக்களும் முன்வரவேண்டும். இன்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தலைவர்,  யுத்த குற்ற விசாரணைகளின் முக்கியத்துவம் பற்றி கூறியிருக்கிறார். நாளடைவில் மக்களும் அதை ஏற்றுக்கொள்வர், ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுள்ளது. தவறும் பட்ஷத்தில் எதை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். என்றோ ஒருநாள் உண்மையை சந்தித்தே ஆக வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார். எங்களின் ஈடு செய்ய முடியாத இழப்புகள், அழிவுகளுக்கு பதில் சொல்லி இனிமேல் இப்படி நடவாது என்கிற உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். அதுவே யுத்த குற்ற விசாரணைகளின் தண்டனையின் மூலம் சொல்லப்படும் செய்தியாகும்.              

  • கருத்துக்கள உறவுகள்
On 5/10/2024 at 06:40, suvy said:

அம்மாவின் பேட்டியை கேட்க கேட்க நெஞ்சு நோ வந்திட்டுது

கேட்டு நெஞ்சு நோ? யாருக்கு? பேசிய அவருக்கா?

On 5/10/2024 at 06:40, suvy said:

முன்பென்றால் ஒரு முட்டைக் கோப்பி குடித்து ஆத்தலாம் .

யாரை ஆத்த? நல்ல வைத்தியரை அணுகுங்கள்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.