Jump to content

தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி

Oruvan

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். 

"எனக்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கபடாமல் தனக்குத் தேவையானவர்களுக்கே சுமந்திரன் நியமனம் கொடுத்துள்ளார்." - என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.

 

 

https://oruvan.com/sri-lanka/2024/10/07/sasikala-who-came-out-of-tamilarasu-party-competes-in-the-conch-symbol

Link to comment
Share on other sites

இந்த முறை தோற்றுப் போகும் போது, என்ன நாடகம் போடப் போகின்றார் என்று பார்க்க ஆவலாக இருக்கு. நவம்பர் 16 வரைக்கும் காத்திருப்போம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தேர்தலில் யாருமே வெற்றிபெற மாட்டார்கள் போல இருக்கு.

ரணிலுக்கு கிடைத்தது போல போனஸ் மட்டுமே கிடைக்கும் என எண்ணுகிறேன்.

அதற்கும் வெட்டுக் கொத்தில் தான் முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Coffin Dancing GIF - Find & Share on GIPHY

தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். 
கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ. 

Edited by தமிழ் சிறி
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Coffin Dancing GIF - Find & Share on GIPHY

தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். 
கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ. 

அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே.

செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 
தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 
தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.

இனியென்ன இதற்கு தலைவர் சுமந்திரன் தான்.

Link to comment
Share on other sites

10 minutes ago, விசுகு said:

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

"சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂!

"இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎?

இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

"சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂!

"இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎?

இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!

கொஞ்சம் பொறுங்கள். இப்போது தான் வெளியே வந்து இருக்கிறார். இனி கனக்க வெளியே வரும் தானே???

50 minutes ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

கொஞ்சம் பொறுங்கள். இப்போது தான் வெளியே வந்து இருக்கிறார். இனி கனக்க வெளியே வரும் தானே???

 

இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂

 

இந்த  நக்கல்  நளினமெல்லாம் யாழில்  உதை  வாங்க  மட்டுமே  உதவும்

கவனம் கோரிக்கையல்ல  எச்சரிக்கை...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள்.

அப்ப ஒட்டுண்ணிகளாக இது வரை உறிஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களென ஒத்துக் கொள்கிறீர்கள்😂?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

இந்த  நக்கல்  நளினமெல்லாம் யாழில்  உதை  வாங்க  மட்டுமே  உதவும்

கவனம் கோரிக்கையல்ல  எச்சரிக்கை...

 

லாசப்பல் படையணியின்  இறுதி எச்சரிக்கையா? அப்ப இனி மண்டையில தான். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்

🤣........

எந்த எந்த கட்சிகளில், யார் யார், எங்கே எங்கே நிற்கின்றார்கள் என்று பார்ப்பது முதன்முதல் மடக்கை அட்டவணையைப் பார்த்தது போல இருக்கின்றது......... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்ப ஒட்டுண்ணிகளாக இது வரை உறிஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களென ஒத்துக் கொள்கிறீர்கள்😂?

நாய் செத்துப் போனது தெரியுமோ?

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய் செத்துப் போனது தெரியுமோ?

எப்ப செத்தது என்று சொல்லாதேங்கோ... ஒப்பாரி வைத்து அழுதிடுவார்.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய் செத்துப் போனது தெரியுமோ?

நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்?

ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம்.

அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள்.

ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார்.

கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது.

அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது.

இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்?

மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்?

ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம்.

4 minutes ago, Justin said:

நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்?

ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!

உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம்.

அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள்.

ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார்.

கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது.

அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது.

இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்?

மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்?

ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம்.

🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது.

சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂!

9 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.

புலிக்காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்டும், யாருக்குப் பாதிப்பு அதனால்?

ஆனால் சீட்டுக்குப் போட்டி போடும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றிற்கு போலிச் செய்திகளை வைத்து முரட்டு முட்டுக் கொடுக்கும் உங்கள் போன்றவர்களால், இப்ப "தமிழ் தேசிய .." என்று எவராவது வாய் திறந்தாலே தாயகத்தில் மக்கள் விலகிப் போய் விடும் நிலை தான் அதிகரித்திருக்கிறது.

2020 இலேயெ அங்கஜனோடு ஆரம்பித்த போக்கு, இந்த முறை அனுர அணியோடு இன்னும் தீவிரமாகும். எல்லாப் புகழும் புலி வால்களுக்கே😂!

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது.

சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂!

மகேசன் பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்த்தீர்களா?

இல்லை என்றால் ஒருமுறை பாருங்கள்.

இங்கு வீரகேசரி தினக்குரலைத் தவிர வேறு எதுவும் இணைக்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வையுங்கள்.

மகேசனைப் பற்றி இப்போது தான் எழுதியிருந்தீர்கள்.

நான் அந்தநேரம் வந்த செய்தியை சொன்னேன்.

வரவர உங்களுக்கு விளக்கம் குறைவாக போய்விட்டது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி இலக்கை அடைந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா மற்றும் டைபிரியாஸ் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310423
    • Published By: VISHNU   07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக  சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு தொடர்ந்து அவரை அவமதிக்கும் வகையில் பொய் தகவல்கள் சமூகமயமாக்கப்பட்டு வருவதை காணகூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அந்த விடயங்களை வன்மையாக கண்டிக்கிறோம். ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு பாரிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அதேபோன்று கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதும் அவராகும். என்றாலும் அவரை இலக்குவைத்து பொய் தகவல்கள் சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (6) பதில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக பிரதி பொலிஸ்மா அதிபர் (மனிதவள முகாமைத்துவம்) சிசிர குமாரவினால் இடமாற்றம் குறிப்பிட்டு எழுத்து மூலமான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெயரிடப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் செயற்படும் வகையில் சமூகமளிக்குமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதுதொடர்பாக சமூகவலைத்தலங்களில் பிரசரமாகி சில மணி நேரங்களுக்கு பின்னர் பதில் பொலிஸ்மா அதிபரால், குறித்த ஊடக அறிக்கை போலியானது எனவும் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் இதுதொடர்பாக முறையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். மேலும்  ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் தொடர்புள்ள தரப்பொன்று செற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் பயன்படுத்திய ஜனாதிபதி மாளிகையின் சமையலறை என குறிப்பிட்டு, வெளிநாடு ஒன்றின் சமையலறை ஒன்றின் காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களின் உண்மை, பொய் தன்மையை முறையாக புரிந்துகொள்ள முடியாத, மூளை வளர்ச்சியற்ற சிலரால் இது சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பயன்படுத்தியது தேசிய மற்றும் சர்வதேச உத்தியோகபூர் கடமைகளுக்கு மாத்திரமாகும். ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வீட்லே வசித்து வந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை முகம்கொடுத்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பொறுப்பில் இருந்து தப்பிச்செல்லாமல் பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்வகையில் முன்னெடுத்திருக்கும் கீழ் மட்டத்திலான சேறு பூசும் பிரசாரம் தொடர்பில்  ஐக்கிய தேசிய கட்சி மிகவும் கவலையடைகிறது. இந்த நாட்டு மக்களுக்கு எது சத்தியம் எது பொய் என்பதை புரிந்துகொள்வதற்கான பகுத்தறிவு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று சேறு பூசும் பிரசாரம் மேற்கொண்டு காலத்தை வீணடிக்காமல் தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன்  செயற்படுமாறு நாங்கள் ஆளும் அரசாங்காத்திடம் கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/195721
    • தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதவிர, தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தக் கோருவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிப்பதில்லை என்றும் அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைகளுக்கமைய செயற்படத் தவறினால் அரசியலமைப்பின்படி அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/310429
    • சமாதானப் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று கோரி கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி புதன்கிழமை, 8 தைமாதம், 2003 விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் காட்டும் வகையில் தீவிர இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பின் முக்கிய சந்தியொன்றில் சுமார் 25,000 ஆதரவாளர்களைக் கூட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வைத் தேடுவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நாட்டைப் பிளவுபடுத்து மேற்குலக ஏகதிபத்தியவாதிகளின் சதி என்று பேரணியில் பேசிய அனைத்து முக்கியஸ்த்தர்களும் குறிப்பிட்டார்கள். மாகாண நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் செந்நிறத்தில் ஆடையணிந்து கொழும்பு நகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தீவிரவாத இடதுசாரிகள் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நகர் மையத்தில் இருக்கும் லிப்டன் சதுக்கம் நோக்கிப் பேரணியாகச் சென்றார்கள்.  "புலிகளுக்கும் யானைகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் சதியைத் தோற்கடிப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆவேசமாகப் பேசினார். இப்பேரணிக்கு "ஜன பலய" (மக்கள் பலம்) என்று ஜே வி பி பெயரிட்டிருந்தது.  பேரணியில் பேசிய அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வேறு கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.  நோர்வே நாட்டவர்கள் இலங்கை விடயத்தில் தேவையில்லாது தலையிட்டு வருகிறார்கள் என்று அவர் கண்டித்தார். நோர்வே நாட்டுத் தூதுவர் ஜொன் வெஸ்ட்போர்க் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பினையடுத்து ரணில் அரசாங்கம் அதிர்ந்த்துபோய் அச்சத்தில் உறைந்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.  https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8123
    • Published By: DIGITAL DESK 7   07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று  திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06)  அறிவிக்கப்பட்டது. அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து விலகினார். அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் கேசரியிடம் உறுதிப்படுத்தினர். ஆனால் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தைத் தொடர்புகொண்டு அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது தான் தானும் அறிந்துகொண்டதாகவும், இருப்பினும் அதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் பதிலளித்தார். அதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது, அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: 'இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான செயன்முறையொன்று நியமனக்குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. எனவே இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்' என்றார். https://www.virakesari.lk/article/195712
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.