-
Tell a friend
-
Topics
-
Posts
-
இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி இலக்கை அடைந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா மற்றும் டைபிரியாஸ் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310423
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: VISHNU 07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு தொடர்ந்து அவரை அவமதிக்கும் வகையில் பொய் தகவல்கள் சமூகமயமாக்கப்பட்டு வருவதை காணகூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அந்த விடயங்களை வன்மையாக கண்டிக்கிறோம். ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு பாரிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அதேபோன்று கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதும் அவராகும். என்றாலும் அவரை இலக்குவைத்து பொய் தகவல்கள் சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (6) பதில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக பிரதி பொலிஸ்மா அதிபர் (மனிதவள முகாமைத்துவம்) சிசிர குமாரவினால் இடமாற்றம் குறிப்பிட்டு எழுத்து மூலமான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெயரிடப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் செயற்படும் வகையில் சமூகமளிக்குமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதுதொடர்பாக சமூகவலைத்தலங்களில் பிரசரமாகி சில மணி நேரங்களுக்கு பின்னர் பதில் பொலிஸ்மா அதிபரால், குறித்த ஊடக அறிக்கை போலியானது எனவும் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் இதுதொடர்பாக முறையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். மேலும் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் தொடர்புள்ள தரப்பொன்று செற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் பயன்படுத்திய ஜனாதிபதி மாளிகையின் சமையலறை என குறிப்பிட்டு, வெளிநாடு ஒன்றின் சமையலறை ஒன்றின் காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களின் உண்மை, பொய் தன்மையை முறையாக புரிந்துகொள்ள முடியாத, மூளை வளர்ச்சியற்ற சிலரால் இது சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பயன்படுத்தியது தேசிய மற்றும் சர்வதேச உத்தியோகபூர் கடமைகளுக்கு மாத்திரமாகும். ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வீட்லே வசித்து வந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை முகம்கொடுத்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பொறுப்பில் இருந்து தப்பிச்செல்லாமல் பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்வகையில் முன்னெடுத்திருக்கும் கீழ் மட்டத்திலான சேறு பூசும் பிரசாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் கவலையடைகிறது. இந்த நாட்டு மக்களுக்கு எது சத்தியம் எது பொய் என்பதை புரிந்துகொள்வதற்கான பகுத்தறிவு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று சேறு பூசும் பிரசாரம் மேற்கொண்டு காலத்தை வீணடிக்காமல் தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நாங்கள் ஆளும் அரசாங்காத்திடம் கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/195721 -
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதவிர, தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தக் கோருவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிப்பதில்லை என்றும் அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைகளுக்கமைய செயற்படத் தவறினால் அரசியலமைப்பின்படி அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/310429
-
சமாதானப் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் என்று கோரி கொழும்பில் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய மாபெரும் கண்டனப் பேரணி புதன்கிழமை, 8 தைமாதம், 2003 விடுதலைப் புலிகளுக்கும், ரணில் அரசிற்கும் இடையே நடந்துவரும் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக தனது முழுப் பலத்தையும் காட்டும் வகையில் தீவிர இடதுசாரி இனவாதக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி இன்று கொழும்பின் முக்கிய சந்தியொன்றில் சுமார் 25,000 ஆதரவாளர்களைக் கூட்டி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது. தமிழ் மக்களின் பிரச்சினைகான தீர்வைத் தேடுவதாகக் கூறி நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் நாட்டைப் பிளவுபடுத்து மேற்குலக ஏகதிபத்தியவாதிகளின் சதி என்று பேரணியில் பேசிய அனைத்து முக்கியஸ்த்தர்களும் குறிப்பிட்டார்கள். மாகாண நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் செந்நிறத்தில் ஆடையணிந்து கொழும்பு நகரில் திரண்ட பல்லாயிரக்கணக்கான தீவிரவாத இடதுசாரிகள் நகரின் மூன்று வெவ்வேறு இடங்களில் இருந்து நகர் மையத்தில் இருக்கும் லிப்டன் சதுக்கம் நோக்கிப் பேரணியாகச் சென்றார்கள். "புலிகளுக்கும் யானைகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்டிருக்கும் சதியைத் தோற்கடிப்போம்" என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆவேசமாகப் பேசினார். இப்பேரணிக்கு "ஜன பலய" (மக்கள் பலம்) என்று ஜே வி பி பெயரிட்டிருந்தது. பேரணியில் பேசிய அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விமல் வீரவன்ச, ரணிலின் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக வேறு கட்சிகளுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார். நோர்வே நாட்டவர்கள் இலங்கை விடயத்தில் தேவையில்லாது தலையிட்டு வருகிறார்கள் என்று அவர் கண்டித்தார். நோர்வே நாட்டுத் தூதுவர் ஜொன் வெஸ்ட்போர்க் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். புலிகளுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மக்கள் மத்தியில் இருந்து வரும் கடுமையான எதிர்ப்பினையடுத்து ரணில் அரசாங்கம் அதிர்ந்த்துபோய் அச்சத்தில் உறைந்திருக்கிறது என்று அவர் மேலும் கூறினார். https://www.tamilnet.com/art.html?catid=13&artid=8123
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) அறிவிக்கப்பட்டது. அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து விலகினார். அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் கேசரியிடம் உறுதிப்படுத்தினர். ஆனால் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தைத் தொடர்புகொண்டு அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது தான் தானும் அறிந்துகொண்டதாகவும், இருப்பினும் அதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் பதிலளித்தார். அதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது, அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: 'இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான செயன்முறையொன்று நியமனக்குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. எனவே இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்' என்றார். https://www.virakesari.lk/article/195712
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts