Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசில் இருந்துவெளியேறிய சசிகலா'சங்கு' சின்னத்தில் போட்டி

Oruvan

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான சசிகலா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

இவ்வாறான நிலையில் இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுவதற்கு அவர் விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழரசுக் கட்சியில் அவருக்கு வேட்பாளர் நியமனம் வழங்கப்படவில்லை.

தமிழரசுக் கட்சியின் இந்த வேட்பாளர் தெரிவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அடாவடித்தனமாகப் பல்வேறு குளறுபடிகளைச் செய்து தனக்கு வேண்டியவர்களுக்கு நியமனத்தைக் கொடுத்துள்ளார் என்று சசிகலா நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். 

"எனக்கு மட்டுமல்லாது கட்சியின் நீண்ட கால உறுப்பினர்கள் பலருக்கும் வேட்பாளர் நியமனம் கொடுக்கபடாமல் தனக்குத் தேவையானவர்களுக்கே சுமந்திரன் நியமனம் கொடுத்துள்ளார்." - என்றும் சசிகலா குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதையடுத்து தமிழரசுக் கட்சியில் இருந்து இன்று காலை வெளியேறிய சசிகலா, ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் சின்னமான சங்குச் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் இன்று பிற்பகல் கையெழுத்திட்டுள்ளார்.

 

 

https://oruvan.com/sri-lanka/2024/10/07/sasikala-who-came-out-of-tamilarasu-party-competes-in-the-conch-symbol

இந்த முறை தோற்றுப் போகும் போது, என்ன நாடகம் போடப் போகின்றார் என்று பார்க்க ஆவலாக இருக்கு. நவம்பர் 16 வரைக்கும் காத்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, கிருபன் said:

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பெண் வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் பாரியார் திருமதி சசிகலா ரவிராஜ் வேட்புமனுவில் இன்று திங்கட்கிழமை கையெழுத்திட்டுள்ளார்.

இந்த தேர்தலில் யாருமே வெற்றிபெற மாட்டார்கள் போல இருக்கு.

ரணிலுக்கு கிடைத்தது போல போனஸ் மட்டுமே கிடைக்கும் என எண்ணுகிறேன்.

அதற்கும் வெட்டுக் கொத்தில் தான் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

  • கருத்துக்கள உறவுகள்

Coffin Dancing GIF - Find & Share on GIPHY

தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். 
கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ. 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, தமிழ் சிறி said:

Coffin Dancing GIF - Find & Share on GIPHY

தமிழரசு கட்சிக்கு.... கடைசி ஆணி அடித்து, பெட்டி மூடப் போகிறார்கள். 
கடைசியாக பார்க்க வேண்டிய ஆட்கள், வந்து... பார்த்திட்டு போங்கோ. 

அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அடடே இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணாமல் ஐயா சம்பந்தன் போய்ச் சேர்ந்துட்டாரே.

செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 
தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

செத்த ஆட்களின் ஆவி.... ஒரு வருசத்துக்கு சுற்றிக் கொண்டு திரியும் என்பது சிலரின் நம்பிக்கை. அந்த வகையில்... சம்பந்தனும் இந்தக் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 
தான்... ஆரம்பித்து வைத்ததை, தனது வாரிசு சுமந்திரன் முடித்து வைக்கின்றார் என்று ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.

இனியென்ன இதற்கு தலைவர் சுமந்திரன் தான்.

10 minutes ago, விசுகு said:

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சியே தனக்கு எதிராகச் சதி செய்தது என்று சசிகலா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கட்சி மீது கடந்த காலங்களில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்திருந்தார்.

 

ஆதாரதாரர்கள் வரவும்

 

"சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂!

"இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎?

இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Justin said:

"சசிகலா சொன்னது தான் சத்தியவாக்கு, ஆதாரம்" என்று நம்பும் அளவுக்கு , சதிக்கதைகளில் அமிழ்ந்து போய் கிடக்கிறீர்கள்😂!

"இந்த ஆதாரத்தை வைத்து அவர் ஏன் அரச அதிபர் மகேசனை நீதிமன்றில் சந்திக்கவில்லை?" யென்று கேட்ட போது பதில் இல்லாமல் இருந்தவர்களையும் தேடுகின்றேன்! இருக்கிறார்களா இங்கே😎?

இந்த முறையாவது முகநூல் பதிவை நம்பி பின்னர் ஏமாந்து ஒப்பாரி வைக்காமல், சசிகலா அவர்கள் தேர்தல் பற்றிய அறிவோடு முடிவை எதிர் கொள்ள வேண்டுமென வாழ்த்துகிறோம்!

கொஞ்சம் பொறுங்கள். இப்போது தான் வெளியே வந்து இருக்கிறார். இனி கனக்க வெளியே வரும் தானே???

50 minutes ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விசுகு said:

கொஞ்சம் பொறுங்கள். இப்போது தான் வெளியே வந்து இருக்கிறார். இனி கனக்க வெளியே வரும் தானே???

 

இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, island said:

இவ்வளவு காலமும் பங்கருக்குள் இருந்தவரா? 😂

 

இந்த  நக்கல்  நளினமெல்லாம் யாழில்  உதை  வாங்க  மட்டுமே  உதவும்

கவனம் கோரிக்கையல்ல  எச்சரிக்கை...

 

  • கருத்துக்கள உறவுகள்

செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

செத்த நாயில் இருந்து உண்ணிகள் கழருவது போல தமிழரசில் இருந்து ஒவ்வொருவராக கழருகிறார்கள்.

அப்ப ஒட்டுண்ணிகளாக இது வரை உறிஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களென ஒத்துக் கொள்கிறீர்கள்😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

இந்த  நக்கல்  நளினமெல்லாம் யாழில்  உதை  வாங்க  மட்டுமே  உதவும்

கவனம் கோரிக்கையல்ல  எச்சரிக்கை...

 

லாசப்பல் படையணியின்  இறுதி எச்சரிக்கையா? அப்ப இனி மண்டையில தான். 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இவர்களிடம் வைகோ மண்டியிட வேண்டும். தூள் கிளப்புறாங்கள்

🤣........

எந்த எந்த கட்சிகளில், யார் யார், எங்கே எங்கே நிற்கின்றார்கள் என்று பார்ப்பது முதன்முதல் மடக்கை அட்டவணையைப் பார்த்தது போல இருக்கின்றது......... 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அப்ப ஒட்டுண்ணிகளாக இது வரை உறிஞ்சிக் கொண்டிருந்திருக்கிறார்களென ஒத்துக் கொள்கிறீர்கள்😂?

நாய் செத்துப் போனது தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய் செத்துப் போனது தெரியுமோ?

எப்ப செத்தது என்று சொல்லாதேங்கோ... ஒப்பாரி வைத்து அழுதிடுவார்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

நாய் செத்துப் போனது தெரியுமோ?

நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்?

ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

இதே கட்சியில் இது நாள் வரைக்கும் ஒட்டிக் கொண்டு இருந்து விட்டு, சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காகத்தான் விலகி இன்னொரு கட்சியில் சீட்டுக்காக சேர்ந்து இருக்கின்றார்.

தேர்தலில் தனக்கு முறைகேடு நடந்தது என புலம்பிய இவர், அதுக்காக ஒரு முறைப்பாடு தானும் செய்யவில்லை என்பதுடன், வழக்கும் நடத்தவில்லை (இலங்கை நீதித் துறையில் தனக்கு நம்பிக்கையில்லை என இவர் சாட்டுச் சொல்ல முடியாது, ஏனெனில் கணவரும் அதே துறையில் தான் இருந்தவர். மகளையும் அதே துறையில் தான் படிப்பித்தவர் என நினைக்கின்றேன்).

கடந்த சனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு கேட்டு இருந்தார் - தன்னிச்சையாக

நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம்.

அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள்.

ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார்.

கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது.

அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது.

இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்?

மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்?

ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம்.

4 minutes ago, Justin said:

நாய் செத்தாலென்ன, ஒட்டுண்ணிகளுக்கு வேற நாய், நரி, முதலை இப்படி கிடைக்காமலா போகும்?

ஆனால், ஒட்டுண்ணி தலையில் ஒரு சின்ன "விக்கிரகத்தைத்" தூக்கி வைத்தாலே போதும், அது ஒட்டுண்ணியாக இருந்தாலும் "புலி" ஆக்கி விட நீங்களெல்லாம் இருக்கிறீர்கள்😂!

உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஈழப்பிரியன் said:

நிழலி தேர்தலில் முறைகேடு நடந்ததாக பத்திரிகை காணொளிகளில் வந்த செய்தியையே எல்லோரும் சொன்னோம்.

அந்த இடத்துக்கு தேர்தலில் நின்றவர் போகக் கூடாது என்றார்கள்.

ஆனாலும் சுமந்திரன் போயிருக்கிறார்.

கோத்தாவின் காலத்தில் நீதி எங்கே இருந்தது.

அந்த அம்மா நீதி தேடி சென்றிருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பாவோ தெரியாது.

இந்த நிலையில் எல்லாம் தெரிந்த நீங்களே ஏன் நீதிதேடி போகவில்லை என்று கேட்கிறீர்கள்?

மகேசன் பதவி ஏற்கும் போது வேறு எந்த ஜனாதிபதி கூப்பிட்டிருந்தாலும் இந்த பதவியை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டேன் என்று கூறியிருந்தாரே ஏன்?

ஏதோ அழுத்தங்களுக்கு அவர் ஆளாகியிருக்கலாம் அதனாலேயே அப்படி சொல்லியிருக்லாம்.

🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது.

சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂!

9 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்களுக்கும் சரி அரசுக்கும் சரி புலிக் காச்சல் இன்னும் விட்டுப் போகவில்லை.

புலிக்காய்ச்சல் இருந்து விட்டுப் போகட்டும், யாருக்குப் பாதிப்பு அதனால்?

ஆனால் சீட்டுக்குப் போட்டி போடும் புழுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றிற்கு போலிச் செய்திகளை வைத்து முரட்டு முட்டுக் கொடுக்கும் உங்கள் போன்றவர்களால், இப்ப "தமிழ் தேசிய .." என்று எவராவது வாய் திறந்தாலே தாயகத்தில் மக்கள் விலகிப் போய் விடும் நிலை தான் அதிகரித்திருக்கிறது.

2020 இலேயெ அங்கஜனோடு ஆரம்பித்த போக்கு, இந்த முறை அனுர அணியோடு இன்னும் தீவிரமாகும். எல்லாப் புகழும் புலி வால்களுக்கே😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

🤣உங்களுக்கும், விசுகருக்கும் போலிச் செய்திகளை முன்னிறுத்தியாவது ஒரு தரப்பை போட்டுத் தாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு இருக்கிறது.

சில நாட்கள் முன்பு தான், மகேசன் பற்றி நீங்களே "அவர் நேர்மையாளர்" என்று எழுதி, அந்த இடத்தில் நானும் "மகேசன் தான் தேர்தல் பொறுப்பதிகாரி, ஏன் றொமெய்ன் மண்டபத்தினுள் போகலாம், காஷ் கட்டிடத்தினுள் இருந்த எண்ணும் நிலையத்திற்குப் போக முடியாது" என்று விளக்கம் தந்திருந்தேன். அப்ப பேசாமல் போய் விட்டு, இப்ப திரும்பவும் வந்து "பேப்பரில் வந்தது , அதை நம்பினோம்" என்கிறீர்கள். எந்த பேப்பரில் வந்தது? வீர கேசரி, தினக்குரல்? புலத்திலும், உள்ளூரிலும் இருந்த இருந்த ரொய்லெற் ஊடகங்களிலும், யூ ரியூப் குப்பைகளிலும் வந்ததெல்லாம் வைத்துக் கொண்டு இன்னும் போலிச் செய்திகளை நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் போன்ற வயது அனுபவம் இருப்போரே இப்படி பொய் எது உண்மை எது என்று தெரியாமல் அப்பாவி கோயிந்தனுகளாக இருந்தால், இங்கே இருக்கும் "பட்டாசு றெஜிமென்ற்" பாடு தான் பரிதாபம்😂!

மகேசன் பதவி ஏற்கும் நிகழ்வைப் பார்த்தீர்களா?

இல்லை என்றால் ஒருமுறை பாருங்கள்.

இங்கு வீரகேசரி தினக்குரலைத் தவிர வேறு எதுவும் இணைக்க வேண்டாம் என்று ஒரு கோரிக்கை வையுங்கள்.

மகேசனைப் பற்றி இப்போது தான் எழுதியிருந்தீர்கள்.

நான் அந்தநேரம் வந்த செய்தியை சொன்னேன்.

வரவர உங்களுக்கு விளக்கம் குறைவாக போய்விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அருந்தவபாலன் இப்போது யாரோடு? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.