Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kandiah57 said:

அது சரி  நீங்கள் மற்றவர்களை பார்த்து தான் கருத்துகள் எழுதுகிறீர்களா?? அதாவது உங்கள் கருத்துகள் மற்றவர்கள் கருத்துகளில் தங்கி அல்லது சார்ந்து இருக்கிறதா???   அப்படி என்றால் தயவுசெய்து அதனை மாற்றி விடுவது நல்லது 🙏🙏

உங்களை மாதிரி திரிக்கும், கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கத் தான் விருப்பம்! முடியவில்லை, எப்படி முடிகிறது உங்களால்😂?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

2020 இலும் தனக்கு தேசியப் பட்டியலில் இடம் எடுத்து பின்னர் இழந்திருக்கிறார். இது வரை விலகாமல் இருக்கக் காரணம் தமிழரசை விட்டுத் தனியாகப் போய் இவர் போன்றோர் முகவரி தேட இனி முடியாது. எனவே தான் தமிழரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு " சீட்டுத் தா" என்று அழுகின்றனர்.

இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, satan said:

இது சுமந்திரனுக்கும் பொருந்தும். அதனாற்தான் மற்றவர்களை மதிக்காமல் தன்னை மட்டும் இறுகப்பிடித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென பொறுப்புணர்ச்சியில்லாமல்.

சுமந்திரன் தமிழரசு அல்லது கூட்டமைப்பு  - இந்த இரு கட்டமைப்புகளோடும் ஒரு அதிருப்தியும் தன்னளவில் கொண்டிருக்காத போது அவர் ஏன் வெளியேறி முகவரி தேட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டும்?  ஏன் கேட்பவர்கள் எல்லோருக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்?

ஏதோ "இளைஞர்களை முன்னிறுத்த வேண்டுமென்று" முகமூடியோடு வந்தார்கள் (உண்மை நோக்கம் சுமந்திரனை அகற்றுவது மட்டும் தான், இளைஞர்களில் அக்கறையெல்லாம் கிடையாது!). இப்போது "சீற் தரவில்லை" என்று வெளியேறியோர் எல்லாம் இளைஞர்கள் இல்லையே? 2020 இலேயே இளைஞர்களை புதிதாக கட்சிக்குள் அரசியலில் உள்ளீர்க்க வேண்டுமென்று சுமந்திரன் முயன்று புலம்பெயர் தேசியக் குஞ்சுகளால் அந்த முயற்சி தோற்றது உங்களுக்கு நினைவில்லையா? பெண் வேட்பாளராக அம்பிகாவைக் கொண்டுவர முயன்ற போது என்ன நடந்தது என்று தெரியாமலா இங்கே உரையாடுகிறீர்கள்? சாணக்கியன் என்ற மும்மொழி தெரிந்த ஒரு இளைஞரை அறிமுகம் செய்தது யார்?

எனவே, ஒன்று 4 வருடங்கள் முன்னர் நடந்த வரலாற்றையாவது குறைந்த பட்சம் தெரிந்து கொண்டு உரையாட வாருங்கள். அல்லது சுமந்திரன் வெறுப்பை மட்டும் கட்டிக் கொண்டு இப்படியே இருந்து விட்டுப் போங்கள்! தாயக மக்கள் உங்களை விடப் புத்தி சாலிகளாக நடந்து கொள்வர்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சுமந்திரன் தமிழரசு அல்லது கூட்டமைப்பு  - இந்த இரு கட்டமைப்புகளோடும் ஒரு அதிருப்தியும் தன்னளவில் கொண்டிருக்காத போது அவர் ஏன் வெளியேறி முகவரி தேட வேண்டுமென்று எதிர்பார்க்க வேண்டும்? 

ஹிஹி..... சுமந்திரனை எல்லோரும் மதித்தார்கள், அவருக்கு மற்றவரை மதிக்கவும் தெரியாது, மதிப்பை ஏற்றுக்கொள்ளவும் தெரியாது.யாரோடு முரண்பட்டு கட்சியிலிருந்து வெளியேறினார்கள் என்பதை தெரியாதா? அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்களா? தமிழரசு ஒன்றும் அவரது ஏக சொத்தல்ல. அங்குள்ளவர்களின் கருத்துக்களை ஏற்கவும் அவர்களை மதிக்கவும் கட்சியின் கொள்கைகளை மதித்து நடக்கவும் எல்லோரையும் சமமாக வழிநடத்தவும் தெரிந்திருக்க வேண்டும். அது அங்கே நடந்ததா? ஆம் என்று நீங்கள் சொல்வீர்களானால் உங்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. ஒரு தலைவரின் சொல்லுக்கு மதிப்பில்லாமல், தான் தோன்றித்தனமாக நடப்பவரை பாதுகாக்க முனைகிறீர்களென்றால்; உங்கள் குணாதிசயமும் ஒன்றே. தமிழரசு செய்த ஒரே தப்பு, இவரை கட்சிக்குள் புகுத்தியதுமட்டுமல்ல, அவர் செய்த தவறுகளை தட்டிக்கேட்க்காமல், கண்டும் காணாதமாதிரி இருந்து கட்சிக்கு சாவு மணி அடித்தார்கள். இனி மக்கள் பார்த்துக்கொள்வார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Justin said:

அக்கம் பக்கம் பார்க்க விடாமல் சுமந்திரன் வெறுப்பு கண்ணை மறைக்கிறது போல😂

தமிழரசுக் கட்சியின் தலைவராக சிறீதரன் இருந்து மாவையுடன் சேர்ந்து முடிவெடுப்பவராக இருந்திருந்தால், நிலாந்தன் இத்யாதிகளுடன் சங்கு ஊதப் போய் ஓட்டு மொத்த கட்சியையும் போட்டுடைத்திருப்பார் என்பதை நடக்கும் சம்பவங்களால்  இப்பொழுது அறிய முடிகிறது.

ஒரு கட்சியை நடத்துவதற்கான வல்லமை சிறீதரனிடம் இல்லை. ‘பார் லைசனஸ்விபரங்களை வெளியிடுங்கள் என சுமந்திரனும் கேட்கிறார். டக்ளஸும் கேட்கிறார். சிறீதரன்  photoவுக்குக் கூட சிரிக்க மாட்டேன் என்கிறார். கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம்  கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம்.

ஒருவர் மீது கொண்ட வெறுப்புக் கண்கள்  யதார்த்தத்தை பார்க்க மறுக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்சி மேடையில் நின்றே தன்னை ஓரம்  கட்டப் பார்க்கிறார்கள் என மூக்கால் அழுது அனுதாபம் தேடப் பார்க்கிறார். தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம் எதற்காக அவர்கள் வெளியேறினார்கள் என்பதைக் காண்கின்றோம்.]

தமிழசு கட்சியை பிடித்த துஷ்ட ஆவி அவர் ☹️

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

உங்களை மாதிரி திரிக்கும், கேள்விகளுக்கும் சம்பந்தமில்லாமல் சும்மா அலட்டிக் கொண்டிருக்கத் தான் விருப்பம்! முடியவில்லை, எப்படி முடிகிறது உங்களால்😂?

அது எனது திறமை     கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள்.    யோசுவின். புத்திரர்கள்.   அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை.  குறிப்பாக சுமத்திரனுக்கும்.  பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம்         

இந்த கருத்துகள்   திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது   

தேவையெனின் கிறித்தவ  கட்சி என்று ஒன்றை தொங்குவது தான்   

அதற்கு தும்பு. இல்லை   தைரியம் இல்லை    தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு   உறிஞ்ச மட்டும் முடியும்    மக்களின் முடிவை 15.11.24.இல்   பார்ப்போம் 🙏

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இளைஞர்களால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறி  இராணுவ பாதுகாப்பு பெற்று வடக்கிற்கு வலம் வந்தவர், சிங்கள மக்களுடன் வாழ்வது எனது அதிஸ்ரம் என்று பேட்டி கொடுத்தவர்,  இன்று எப்படி இளைஞர்களை கட்சியில் சேர்க்கிறாராம், வெட்கமில்லாமல் வடக்கு மக்களிடம் வாக்கு கேட்க்கிறார்?  பேச்சாளர் பதவிகாலம் முடிந்துவிட்டது, அதிலிருந்து விலகவில்லை, தலைவர் பதவியை அடாத்தாக பிடித்து வைத்திருக்கிறார். அவருக்கு தெரியும் இவைகளை விட்டால் தன்னை ஒரு தூசாக கூட யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது. தட்டித்தவறி வருங்காலத்தில், யாரும் தங்கள் கட்சியிலோ, வேறு எந்த குழுவிலோ இவரை சேர்த்து விடாதீர்கள், எல்லோரையும் இரண்டுபடுத்தி, விரட்டி விட்டு அமர்ந்துவிடுவார். பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

அது எனது திறமை     கிறிஸ்துவ பெயரை கொண்ட அனைவரும் கிறித்தவர்கள்.    யோசுவின். புத்திரர்கள்.   அவரை பின்பற்றுகிறார்கள் என்று நான் நம்புவதில்லை.  குறிப்பாக சுமத்திரனுக்கும்.  பைபிள் க்கும் எட்டாம் கட்டை பொருத்தம்         

இந்த கருத்துகள்   திரிக்கு சம்பந்தப்பட்டது 🤣 ஒருவர் என்ன சமயம் என்று பார்த்து அவர் அங்கத்துவம் வகிக்கும் கட்சியை ஆதரிக்க முடியாது   

தேவையெனின் கிறித்தவ  கட்சி என்று ஒன்றை தொங்குவது தான்   

அதற்கு தும்பு. இல்லை   தைரியம் இல்லை    தமிழரசு கட்சியில். அட்டை மாதிரி ஒட்டி கொண்டு   உறிஞ்ச மட்டும் முடியும்    மக்களின் முடிவை 15.11.24.இல்   பார்ப்போம் 🙏

திருநீற்று பூச்சோடு வலம் வரும் விக்கி ஐயாவும், சீனித்தம்பி யோகேஸ்வரனும் "வதை" செய்யா சைவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பில்லை, அது போல சுமந்திரன் பைபிளைப் பின்பற்ற வேண்டியதில்லை. எல்லாத் தரப்பும் தங்கள் மதங்களை தங்கள் வீட்டுக்குள் வைத்திருக்கட்டும், அரசியலில் உள்ளக நேர்மை மட்டும் போதும்.

அது சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? இதையே நான் பல வருடங்களாகச் சொல்லி, அதற்காகவே யாழ் கள சைவக் காவலர்களிடம் திட்டு வாங்கியது (ஒரு பக்கம் உங்களுக்குப் பச்சை போட்ட சாத்தானுக்கும் டோஸ் கிடைத்தது😎) உங்களுக்குத் தெரியாது என்பதாலா😂?

4 hours ago, satan said:

 பின் இவரை அப்புறப்படுத்துவது மிக மிக கஸ்ரம்.

தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் பிரதிநிதியை பதவியில் இருந்து அகற்றுவது மிக மிக இலகு: மக்களின் வாக்குகள் தான் ஆயுதம். 2015, 2020 இல் உங்களைப் போன்றோர் நின்ற இடத்திலேயே நின்று "சுமந்திரன் ஏன் தேர்தலில் நிற்கிறார்?" என்று புறு புறுத்தது சுமந்திரனை அகற்றவில்லை😂. எனவே என்ன வழி?

புரட்டுகள் - மேலே நீங்கள் சொன்னது போல "சுமந்திரன் பாதுகாப்பு கேட்டுப் பெற்றுக் கொண்டார்" என்பது போன்ற போலித் தகவல்கள்-, சொல் வன்முறை, புலிகளைத் துக்கித் தலையில் வைக்க வேண்டுமென்ற மிரட்டல், இவையெல்லாம் வேலைக்காவாது! மக்களை வாக்களிக்க விடுங்கள். மக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் நேர்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் (பிறகு வாக்கை மாற்றி விட்டார், ஆனால் எங்களிடம் ஆதாரம் இல்லை என்று உருட்டாமல்😎!)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

அது சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்க

நீங்கள் எப்போதும் அரசியலுக்குள். மதத்தை புகுத்துவதால்.  சொன்னேன்   சுமத்திரனை விட. டக்ளஸ் எவ்வளவோ சிறந்தவர்.  

தனிக்கட்சி தொடங்கி   அதிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்   சுமத்தாரன். ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்   பதவிக்காக   சம்பந்தனுக்கு  பின்னால் பைல்களை  பல வருடங்களாக தூக்கி  கொணடு திரிந்து   போனாஸ்   சீற்று மூலம். பதவியை பெற்றவர்.   கடந்த 70 ஆண்டு காலத்தில் தமிழரசுக்கட்சியை அழிந்துகொண்டிருக்கிருக்கும். ஒரே நபர் சுமததிரன். மட்டுமே   பல ஆண்டுகளாக தமிழரசு கட்சியிலிருந்தவர்கள் கடசியிலிருந்து வெளியேறுகிறார்கள் 

வெளியேறுவது அவர்களின்  பல. ஆயிரக்கணக்கானா ஆதரவளாரும் தான்  

கடந்த தேர்தலில் ஒரு ஆசனம்  பெற்ற கட்சி ஐக்கிய  தேசிய கட்சி சுமத்திரனின். தாய்க்கட்சி    இந்த தேரதலில். ஒரு ஆசனம். பெறும் கட்சி   தமிழரசு கட்சியா???   சுமத்திரன். அடத்தாக. பிடிந்த கட்சியா???  காலம் பதில் சொல்லும்   

சுமத்திரன். பைபிளை  பின் பற்றுவதில்லை   என்பதை உறுதி படுத்தியமைக்கு  நன்றி  😀🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Justin said:

(ஒரு பக்கம் உங்களுக்குப் பச்சை போட்ட சாத்தானுக்கும் டோஸ் கிடைத்தது😎)

இந்த குற்றச்சாட்டை நிர்வாகம்தான் உறுதிப்படுத்தவேண்டும்.

10 hours ago, Justin said:

புரட்டுகள் - மேலே நீங்கள் சொன்னது போல "சுமந்திரன் பாதுகாப்பு கேட்டுப் பெற்றுக் கொண்டார்" என்பது போன்ற போலித் தகவல்கள்-,

ஐயா, முன்னாள் புலி உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி மஹிந்தா இவருக்கு இராணுவ பாதுகாப்பளித்தது. இவர் இராணுவத்துடன் வலம் வந்த படங்களும் பத்திரிகைகளில் வந்தது. என்னால் தேடி எடுக்க முடியவில்லை, முடிந்தவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதன் பின் கொக்கிளாய் தொடங்கி பொலிகண்டி வரை  பேரணி வந்ததை கண்ட அரசு, சுமந்திரனின் குற்றச்சாட்டு பொய்யானது, அப்படி அவரது உயிருக்கு ஆபத்து இருந்தால் எப்படி ஊர்வலம் போக முடியும் என்கிற கேள்வியுடன் அவருக்கு அளிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 03:39, Justin said:

இப்போது சில வருடங்களாக அனேகமான தமிழ் அரசியல் வாதிகளை முழுப்பெயர் கொண்டு அழைக்கிற வழக்கம் உருவாகியிருக்கிறது. ஏன் என்று நினைக்கிறீர்கள்? "மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன்" என்று ரொய்லெற் ஊடகங்கள் புலத்தில் இருந்து எழுத ஆரம்பித்த  போது "மத அடையாளத்தை நாசூக்காகச் சுட்டிக் காட்ட அப்படி எழுதுகிறார்கள்"

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

சாமுவேல் ஜேம்ஸ் செல்வநாயகம் என்னும் கிறிஸ்தவரை சைவசமய மக்கள் தந்தை என்ற செல்லப் பெயர் வைத்து அவர் இறக்கும் வரை உயரிய மரியாதை கொடுத்தே வந்துள்ளார்கள். அவரை கிறிஸ்தவர் என்று ஒதுக்கி வைத்ததே இல்லை. 
இங்கு @Justin,  @Kapithan இருவருக்கு மட்டும் …. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள்.
சுமந்திரனின் சுத்துமாத்துக்களை அம்பலப் படுத்த வெளிக்கிட்டால்… அதற்கு மதச்சாயம் பூசி பிரச்சினையை திசை திருப்பி வெள்ளை அடிக்க முனையும் தந்திரம் இனியும் பலிக்காது.
ஆனபடியால்… இவர்களின் “பருப்பு” இங்கே அவியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, satan said:

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

""கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன்""

 

சாத் மிக விரைவில் மதம் மாறும் அறிகுறி தெரிகிறது. எதற்கும் அடக்கி வாசிப்போம்,...🤣

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

இருவர் மட்டும்…. ஆபிரகாம் சுமந்திரன் என்றவுடன் இல்லாத ஒன்றை கற்பனை பண்ணி மதப் பிரிவினைக்கு தூபம் போட முனைகிறார்கள். இவர்களின் உள் நோக்கம் என்னவென்று பலரும் அறிந்தே வைத்துள்ளார்கள்.

கிணறு வெட்ட  பூதம் கிழம்பியதுபோல், தங்களையுமறியாமல், மதத்தை அனுதாபத்திற்கு இழுத்து, விழும் சொற்ப வாக்குகளையும்  இழக்க வாய்ப்பளிக்கிறார்கள்  அதி புத்திசாலிகள்! செயலற்ற வாய் வீரரின் கருவியது.  

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

உங்கள் அபிமானியின் சுயநலத்திற்காக இன்னும் வேறு எதை பயன்படுத்துவீர்கள்? தமிழ் இனத்தில் எத்தனை வீதம் கிறிஸ்தவர்கள்? அவர்கள் வாக்கில் மட்டுமா அவர் பாராளுமன்றம் போகிறார்? தமிழரசை கைப்பற்றியதுபோல் கிறிஸ்தவத்தையும் அவரின் பதவிக்காக கைப்பற்றும் நோக்கமா? ஏன் சார்ள்ஸ்  நிர்மலநாதன் கிறிஸ்தவரில்லையா? செல்வம் அடைக்கலநாதன் கிறிஸ்தவரில்லையா? அப்படியிருக்க, சுமந்திரனை மட்டும் ஏன் கிறிஸ்தவர் என்பதற்காக வெறுக்கிறார்கள் என்கிற புரளியை கிளப்புகிறீர்கள்? அவர் என்ன கிறிஸ்தவராகவா வாழுகிறார்? கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன், பின்கதவால் நுழைபவன் உண்மையான ஆயன் அல்ல, அவன் மந்தைகளை கொள்ளையிடும் ஓநாய். தமிழ் தேசியத்தை இன்று வரை உயிரோடு வைத்திருப்பவர்கள் மக்கள். அதற்காக தங்கள் உறைவுகளின் உயிர்கள், உடைமைகள், சொத்துக்களை இழந்து நடு வீதியில் நிற்கிறார்கள். அவர்கள் வாக்கிற்தான் தமிழரசு என்று நீங்கள் பிதற்றித்திரிகிறீர்கள். இழப்பு மக்களுக்கு, அதன் பலன், எதையும் அந்த தேசியத்திற்காக இழக்க விரும்பாமல் ஓடி ஒளித்தவர்களும், அதை சிதைத்தவர்களுமே. ஒரு தலைவரின் பதவியை அடாத்தாக நிஞாயமற்ற வகையில் கைப்பற்றி, கட்சியின் கொள்கைகளுக்கு மதிப்பளிக்காமல், மற்றவர்களுடன் கலந்தாலோசியாமல் தானே முடிவுகளை எடுத்து, ஆட்களை நியமிப்பது நிஞாயமானதா? இது கட்சியல்ல, சர்வாதிகாரம்! தயவு செய்து கிறிஸ்தவத்தை இதில் இழுத்து உங்கள் அழுக்குகளை மறைக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எதை கைப்பற்றி வாக்கு தேட நினைத்தாலும் அது உங்கள் அபிமானியாக இருக்கலாம் அல்லது நலன் விரும்பியாக இருக்கலாம், உங்கள் குண இயல்புகளும் அப்படியானதாக இருக்கலாம். பொய் புரட்டுகளை எழுந்த மானத்திற்கு அவிட்டு விடாதீர்கள். அவர் தனது பெயரை தெளிவாக எழுதுகிறார், அதை மக்கள் அழைக்கின்றனர். பெயர் இடுவது அழைப்பதற்கே. மற்றவர்களை பெயரிட்டு அழைக்கும்போது யாரும் அதில் காரணம் தேடுவதில்லை. சில சமயம் முழுப்பெயரை அழையா விட்டால்; அதற்கு வேறு காரணம் சொல்வார்கள். பிழையை சீர்செய்வதற்கு காரணங்கள் தேவையில்லை.  தமிழ் அரசியல் வாதிகளை மட்டுமல்ல எல்லோரையும் முழுப்பெயர் கொண்டு அழைப்பதுதான் முறை!

வழமையாக உங்கள் நீண்ட அலட்டல்களை நான் வாசிப்பதில்லை😎. ஆனால், மேலோட்டமாக வாசித்த மட்டில் உங்களுக்கு சில வருடங்கள் முன்பு யாழில் நடந்த உரையாடல்கள் நினைவில் இல்லை, அல்லது அதை நினைவில் வைத்திருந்தால் பட்டாசுக் குழுவின் லைக்குகளை இழக்க வேண்டி வரும் என்ற பயம் காரணமாக denial இல் இருக்கிறீர்கள். எனவே மினக்கடாதீர்கள் - அப்படியே இருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 15/10/2024 at 22:45, satan said:

இந்த குற்றச்சாட்டை நிர்வாகம்தான் உறுதிப்படுத்தவேண்டும்.

ஐயா, முன்னாள் புலி உறுப்பினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று கூறி மஹிந்தா இவருக்கு இராணுவ பாதுகாப்பளித்தது. இவர் இராணுவத்துடன் வலம் வந்த படங்களும் பத்திரிகைகளில் வந்தது. என்னால் தேடி எடுக்க முடியவில்லை, முடிந்தவர்கள் இணைப்பார்கள் என நம்புகிறேன். அதன் பின் கொக்கிளாய் தொடங்கி பொலிகண்டி வரை  பேரணி வந்ததை கண்ட அரசு, சுமந்திரனின் குற்றச்சாட்டு பொய்யானது, அப்படி அவரது உயிருக்கு ஆபத்து இருந்தால் எப்படி ஊர்வலம் போக முடியும் என்கிற கேள்வியுடன் அவருக்கு அளிக்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. 

"தன் பாதுகாப்பிற்கு ஆபத்து" என்று சுமந்திரன் முறையிட்ட பொலிஸ் முறைப்பாட்டை இங்கே தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்று இணைக்கும் படி கேட்டு சில வருடங்கள் கடந்து விட்டன. யாரும் இணைக்கவில்லை. ஏன்? அப்படியொரு முறைப்பாடு சுமந்திரனால் செய்யப் படவில்லை. இலங்கைப் புலநாய்வுப் பிரிவு அவருக்கு ஆபத்து இருப்பதாகத் தான் விசேட அதிரடிப்படை (இராணுவம் அல்ல!) பாதுகாப்பு வழங்கப் பட்டது, இன்னும் வழங்கப் படுகிறது.

டிபிஸ் எழுதிய கட்டுரை (போன வாரம் நுணா இணைத்திருந்தார்) புலம்பெயர்ஸ் சிலர் உள்ளூரில் இருந்த சிலருக்கு பணம் அனுப்பி சுமந்திரனைக் கொல்ல திட்டம் போட்டதாகச் சொல்கிறது. சுமந்திரன் மீது காண்டில் இருக்கும் புலம்பெயர் தீவிர "உசார் மடையர்களை" அவதானித்தால், இது நம்பக் கஷ்டமான விடயமில்லை😎!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

வழமையாக உங்கள் நீண்ட அலட்டல்களை நான் வாசிப்பதில்லை😎. ஆனால், மேலோட்டமாக வாசித்த மட்டில்

வாசிப்பதில்லை ஆனால் பதில் எழுதுகிறீர்கள்  அது எப்படி?

7 hours ago, Justin said:

பட்டாசுக் குழுவின் லைக்குகளை இழக்க வேண்டி வரும் என்ற பயம் காரணமாக denial இல் இருக்கிறீர்கள்.

நான் லைக்குகளை எதிர்பார்த்தோ, விமர்சனங்களுக்கு பயந்தோ எழுதுவதில்லை. தமிழரசுக்கட்சியில் எந்த வேட்பாளருக்கும் இல்லாத உயிரச்சுறுத்தல், பாதுகாப்பு சுமந்திரனுக்கு மட்டும் ஏன்? எதற்காக? அப்படியென்றால்; அவர் சிங்களத்தோடு இணைந்து வேலை செய்கிறார் என்பது நிதர்சனம். அப்படி புலம்பெயர்ந்தோரால் அவருக்கு ஆபத்து என்றால்; அவர் எப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறார், பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார்? சுமந்திரனின் சுத்துமாத்துகளை மக்கள் விமர்சிக்கிறார்களேயொழிய அவரது மதத்தையல்ல, அவர் மற்றைய மதத்தினரோடேயே கட்சியில் இருக்கிறார், மற்றைய மதத்தினரின் வாக்குகளை கேட்கிறார், மற்றவர்களின் பதவிகளை கையகப்படுத்துகிறார், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுகிறார், முடிவுகளை எடுக்கிறார், நியமனங்களை செய்கிறார்,  அப்படியிருக்க பொருத்தமில்லாத காரணத்தை நீங்கள் வைத்தீர்கள் அதற்கான பதில்களையே நான் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை அலட்டல் என்று நினைத்தால்; கடந்து போங்கள். அதை விட்டு தேவையற்ற அநாகரிக வார்த்தைகளை தவிருங்கள். இங்கு ஒரு அநாகரிக வழமையுண்டு. தங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாதவரை, உண்மையை எடுத்துச்சொல்பவரை கருத்தால் கையாளத்தெரியாவிட்டால்; அவர்களை இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது. இது அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனம். மழை மேகங்களால் சூரியனை மறைக்கமுடியாது! 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

வாசிப்பதில்லை ஆனால் பதில் எழுதுகிறீர்கள்  அது எப்படி?

நான் லைக்குகளை எதிர்பார்த்தோ, விமர்சனங்களுக்கு பயந்தோ எழுதுவதில்லை. தமிழரசுக்கட்சியில் எந்த வேட்பாளருக்கும் இல்லாத உயிரச்சுறுத்தல், பாதுகாப்பு சுமந்திரனுக்கு மட்டும் ஏன்? எதற்காக? அப்படியென்றால்; அவர் சிங்களத்தோடு இணைந்து வேலை செய்கிறார் என்பது நிதர்சனம். அப்படி புலம்பெயர்ந்தோரால் அவருக்கு ஆபத்து என்றால்; அவர் எப்படி வெளிநாடுகளுக்கு செல்கிறார், பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார்? சுமந்திரனின் சுத்துமாத்துகளை மக்கள் விமர்சிக்கிறார்களேயொழிய அவரது மதத்தையல்ல, அவர் மற்றைய மதத்தினரோடேயே கட்சியில் இருக்கிறார், மற்றைய மதத்தினரின் வாக்குகளை கேட்கிறார், மற்றவர்களின் பதவிகளை கையகப்படுத்துகிறார், தான்தோன்றித்தனமாக கருத்துக்களை வெளியிடுகிறார், முடிவுகளை எடுக்கிறார், நியமனங்களை செய்கிறார்,  அப்படியிருக்க பொருத்தமில்லாத காரணத்தை நீங்கள் வைத்தீர்கள் அதற்கான பதில்களையே நான் கொடுத்திருந்தேன். நீங்கள் அதை அலட்டல் என்று நினைத்தால்; கடந்து போங்கள். அதை விட்டு தேவையற்ற அநாகரிக வார்த்தைகளை தவிருங்கள். இங்கு ஒரு அநாகரிக வழமையுண்டு. தங்கள் கருத்துக்களோடு ஒத்துப்போகாதவரை, உண்மையை எடுத்துச்சொல்பவரை கருத்தால் கையாளத்தெரியாவிட்டால்; அவர்களை இழிவுபடுத்துவது, கேவலப்படுத்துவது. இது அவர்களின் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத கையாலாகாத்தனம். மழை மேகங்களால் சூரியனை மறைக்கமுடியாது! 

அது தான் மேலோட்டமாக வாசித்தேன் என்று சொலியிருக்கிறேனே?

கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் தராமல் உங்களை நீங்களே "பிரகாசிக்கும் சூரியனாக😂" கற்பனை செய்து மேகங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சுமந்திரன் செய்த "முறைப்பாடு" உங்களுக்காவது ஆவணமாகக் கிடைத்ததா? அல்லது நீங்களும் இணையக் குப்பையில் பொறுக்கி வெட்டி ஒட்டி ஒப்புவிக்கும் இன்னொரு automaton ஆ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

அது தான் மேலோட்டமாக வாசித்தேன் என்று சொலியிருக்கிறேனே?

கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் தராமல் உங்களை நீங்களே "பிரகாசிக்கும் சூரியனாக😂" கற்பனை செய்து மேகங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். சுமந்திரன் செய்த "முறைப்பாடு" உங்களுக்காவது ஆவணமாகக் கிடைத்ததா? அல்லது நீங்களும் இணையக் குப்பையில் பொறுக்கி வெட்டி ஒட்டி ஒப்புவிக்கும் இன்னொரு automaton ஆ?

ஐயா.... குற்றச்சாட்டு உண்மையாயிருக்கிற பட்ஷத்தில் தானே போலீசில் முறைப்பாடு செய்யலாம். சரி.... முறைப்பாடு செய்யவில்லை, எப்படி எந்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அதிலும் தமிழ் உறுப்பினர்களுக்கு அளிக்கப்படாத அந்த உயர் பாதுகாப்பு அவருக்கு அளிக்கப்பட்டது? அதை அவர் என்ன முறையில், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டார்? அதே புலம்பெயர்ந்தோரிடம் எந்த பாதுகாப்பும் இல்லாமல் போய் பகிரங்கமாக கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அது முடிகிறது? புலம் பெயர்ந்தோர் சில ஆட்களுக்கு பணம் அனுப்பி கொலை செய்ய திட்டம் போட்டார்கள் என்றால்; எப்படி பகிரங்கமாக தேர்தல் பிரச்சாரம் செய்கிறார்? அந்த கொலைகாரர் யார்? இரண்டு முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டதாக செய்திகளில் வந்தன. பின் ஏன் அவருக்கு இன்னும் பாதுகாப்பு? அன்றைய சிங்களஅரசு தெரிவித்தது, தங்களுடன் இணைந்து செயற்படும் பாராளுமன்ற உறுப்பினருக்கு உயிராபத்து இருப்பதாக. அப்போ அவர் சிங்கள அரசுக்கு முட்டுக்கொடுத்தார் என்பது உண்மை, வாக்களித்த மக்களுக்கு  அவர் செய்வது துரோகம்  என உணர்ந்த அரசு அவருக்கு பாதுகாப்பளித்தது. மற்றப்படி அவர் தமிழ் இனத்துக்கு, தனக்கு வாக்கு போட்டவர்களுக்கு என்ன செய்தார்? ஒரு வீரன், ஒரு துரோகி இவர்களுக்கு உயரச்சுறுத்தல் இருப்பது வழமை. இவர்தான் மேடைகளில் தன்னை துரோகி என்று மக்கள் சொல்வார்கள் நான் அதற்கு அஞ்சசப்போவதில்லை என அடிக்கடி சவால் விடுகிறாரே. ஈஸ்ரர் குண்டு வெடிக்கமுன் எத்தனை உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுத்தகவல்கள் வந்தும் தடுக்க தவறிய புலனாய்வு, சுமந்திரனுக்கு விஷேச புலனாய்வு பாதுகாப்பு வழங்கியதாம். முஸ்லீம்  தீவிர வாதிகள் போலீசாரை கொலை செய்து பறித்த ஆயுதங்களை, முன்னாள் போராளிகள் செய்தார்கள் என கைது செய்த புலனாய்வு, சுமந்திரனுக்கு புலம்பெயர்ந்தோரால் உயிராபத்து என துல்லியமாக கண்டுபிடித்து உயர் பாதுகாப்பு வழங்கியதாம். சொல்பவர் சொன்னாலும் கேட்ப்பவருக்கு மதி இருக்க வேணும், இருக்கு.     

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2024 at 10:13, Kapithan said:

""கிறிஸ்து சொன்னார், "தலைவனாக இருக்க விரும்புபவன் மற்றவருக்கு சேவை செய்யட்டும், முதலிடத்தில் இருக்கைகளை விரும்பாதிருக்கட்டும், கேட்க்கிறவன் எவனுக்கும் மறுக்கக்கூடாது, தன் மந்தைகளுக்காக உயிரை கூட கொடுக்க துணிந்தவனே உண்மையான தலைவன்""

 

சாத் மிக விரைவில் மதம் மாறும் அறிகுறி தெரிகிறது. எதற்கும் அடக்கி வாசிப்போம்,...🤣

 எதிர்க்கருத்து வைக்க முடியாவிட்டால், அமைதியாக இருங்கள். நானொன்றும் சொல்ல மாட்டேன், வற்புறுத்தவும்மாட்டேன். அதுதான் உங்களுக்கு வராதே. எழுதுங்கள் .......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.