Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானத்திற்குள் விமானிக்கும் துணை விமானியயான  பெண்ணிற்கும் இடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்கொண்டுள்ளனர்.கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இதனை தொடர்ந்து விமானி துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிபூட்டினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் பயணத்தை தொடர்ந்த போதிலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானியறையின் செயற்பாடுகள் பயணிகள் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை தொடர்ந்து விமானி பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/196289

  • கருத்துக்கள உறவுகள்

விமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. 

கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? 

இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நியாயம் said:

விமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. 

கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? 

இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.

பல வருடங்களுக்கு முன்... துருக்கிய விமானம் ஒன்று 300 பயணிகளுடன் பயணித்துக் கொண்டு இருக்கும் போது... விமானிக்கும், துணை விமானிக்கும் சண்டை வந்தபோது... அவர்கள் விமானத்தை தானியங்கி முறையில் இயங்க விட்டு விட்டு, கைகலப்பில் இறங்கி விட்டார்களாம். 

இது எப்படியோ... விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிந்து, சில நிமிட போராட்டத்தின் பின் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜேர்மன் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.  🙂

அவர்கள் இருவருக்கும்... அதுதான் கடைசி வேலை நாளாக இருந்திருக்கும் என  நான் நினைக்கின்றேன்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

பாத்ரூம் பிரேக் எடுத்ததில் இருவருக்கும் தகராறு வந்தது என்று செய்திகளில் இருக்கின்றது. ஒருவர் அதிக நேரம் எடுத்து விட்டாரா..............

நீண்ட பயணத்தில் இருவர் கட்டாயமாக விமானி அறையின் உள்ளே எப்போதும் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கின்றது. ஒரு விமானி வெளியே போனால் ஒரு விமான பணியாளர் அந்த இடத்தில் தற்காலிகமாக இருக்கவேண்டும். ஒரு விமானியை விமானி அறையின் வெளியே தள்ளி விட்டு விட்டு விமானத்தை பறக்கக்கூடாது. முன்னர் நடந்த ஒரு விமான விபத்தின் பின் இந்த நடைமுறை வந்தது.........      

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

பல வருடங்களுக்கு முன்... துருக்கிய விமானம் ஒன்று 300 பயணிகளுடன் பயணித்துக் கொண்டு இருக்கும் போது... விமானிக்கும், துணை விமானிக்கும் சண்டை வந்தபோது... அவர்கள் விமானத்தை தானியங்கி முறையில் இயங்க விட்டு விட்டு, கைகலப்பில் இறங்கி விட்டார்களாம். 

இது எப்படியோ... விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தெரிந்து, சில நிமிட போராட்டத்தின் பின் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜேர்மன் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.  🙂

அவர்கள் இருவருக்கும்... அதுதான் கடைசி வேலை நாளாக இருந்திருக்கும் என  நான் நினைக்கின்றேன்.🤣

இவர்களின் சண்டையால் மற்வர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதமில்லாத ஒரு நிலை ஏற்படும் போது அந்த விமானிகளை வேலையை விட்டு நிறுத்துவதை விட வேறு வழி இல்லைத் தானே.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

விமான பயணத்தில் கப்டனே அனைவருக்கும் மேலானவர். அவர் துணை விமானியை விமான அறையை விட்டு வெளியேற்றுவதற்கு அதிகாரம் உள்ளதா தெரியவில்லை. 

கப்டன் விமான அறையை விட்டு வெளியேற்றுமளவுக்கு துணை விமானி என்ன செய்தாரோ? 

இப்படியோர் சம்பவம் முன்பு கேள்விப்பட்டது இல்லை.

விமானிகளுக்கு ஒரே சாப்பாடு கொடுக்கப்படுவதில்லை என்பார்கள்.ஒரே சாப்பாடு என்றால் ஒரே நேரத்தில் இருவருக்கும் ஏதாவது நடக்கலாம்.

எந்த விமானியும் கழிவறை போவதானால் வெளியே உள்ள கபின் குறூவை உள்ளே அனுப்ப விமானி வெளியே வருவார்.இரட்டை கோபுர தாக்குதலின் பின் விமானி உள்ளே பூட்டவும் கபின்குறூ வெளியே பூட்டவும் என்று வசதிகளை செய்திருக்கிறார்கள்.கபின்குறூ திறந்தாலே விமானி வெளியே வரலாம்.

ஒரு விமானி தனியே விமானத்தை செலுத்தும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏதாவது வந்தால் அத்தனை பேருமே காலி.

இங்கே முக்கியமான ஏதோ ஒரு செய்தி தவறியிருக்கிறது.

2 hours ago, ரசோதரன் said:

பாத்ரூம் பிரேக் எடுத்ததில் இருவருக்கும் தகராறு வந்தது என்று செய்திகளில் இருக்கின்றது. ஒருவர் அதிக நேரம் எடுத்து விட்டாரா..............

நீண்ட பயணத்தில் இருவர் கட்டாயமாக விமானி அறையின் உள்ளே எப்போதும் இருக்க வேண்டும் என்று ஒரு விதிமுறை இருக்கின்றது. ஒரு விமானி வெளியே போனால் ஒரு விமான பணியாளர் அந்த இடத்தில் தற்காலிகமாக இருக்கவேண்டும். ஒரு விமானியை விமானி அறையின் வெளியே தள்ளி விட்டு விட்டு விமானத்தை பறக்கக்கூடாது. முன்னர் நடந்த ஒரு விமான விபத்தின் பின் இந்த நடைமுறை வந்தது.........      

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கன் எயர்லைன்ஸ் ஏற்கனவே நட்டத்திலை ஓடிக்கொண்டிருக்கு.... இதுக்குள்ள இதுகளின்ர புடுங்குப்பாடு வேற......😎

  • கருத்துக்கள உறவுகள்

துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.

🤣.........

உண்மையாகவும் இருக்கலாம்.......... ஆனாலும் புலவர்களுக்கு கற்பனை கொஞ்சம் அதிகம் என்பதால் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கின்றது..........😜.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, புலவர் said:

துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.

புலவர் கற்பனை குதிரையை அவிட்டு விட்டிருக்கிறார்.

😛

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:
2 hours ago, புலவர் said:

துணைவிமானி ஒரு பெண்ணாம். ஓட்டோ பயலட்டில் விட்டு விட்டு எதும் கசமுசா பண்ணப்போய் இப்படியானதோ என்றும் சிலர் கருத்துத்தெரிவிக்கிறார்கள்.

இங்கே முக்கியமான ஏதோ ஒரு செய்தி தவறியிருக்கிறது.

 

இந்த முக்கியமான செய்தியையே காணவில்லை என தேடிக் கொண்டிருந்தேன்.

நன்றி புலவர்.

  • கருத்துக்கள உறவுகள்

சம உரிமை பிரச்சனை  வந்திருக்க்குமோ ....துணை  விமானி ஏதாவது ஊழல் செய்திருப்பா அது வெளியே அன்ப்பி விட்டார் ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கன் எயார்லைன்ஸின் கேப்டன் பணிநீக்கம்

கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நேற்று (14) வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கன் எயார்லைன்ஸ்

குறித்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது.

மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில், கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிறிலங்கன் எயார்லைன்ஸின் கேப்டன் பணிநீக்கம் | Srilankan Airlines Captain Sacked

பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.   

சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://ibctamil.com/article/srilankan-airlines-captain-sacked-1729003024

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.