Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்,  இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது,

வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு  50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர்

ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார்.

வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும்  மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார்.

இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் :

 

பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே.

அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது?

அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம்.

நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல்  விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.

 எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும்.

அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது.

எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர்.

NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம்.

பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது.

மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை.

கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன்.

காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள்.

விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.

  • Replies 72
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போ

  • அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ்,  இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்க

  • நாடகம் ரணில் வீதியை திறக்காமல் தேர்தலுக்கு நாடகம் ஆடினார், அனுர வீதியை திறந்து தேர்தலுக்கு நாடகம் ஆடினார், சும், சும்மாவே திறக்கப்படப்போகும் வீதிக்கு ஓடி வந்து குரல் எழுப்பி தேர்தலுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

     தவராசா மாவீரர் துயிலும் இல்லம் துப்பவக்கும் இடத்தில் நின்று தானும் துப்பரவாக்குவது போல ஒரு காணொளி, போட்டோ எடுத்து அதை தனது முகநூலில் வெளியிட்டு  தனது பிரச்சாரத்துக்கு உபயோகிக்கிறார். இதுவெல்லாம்  மாவீரரை கொச்சைப்படுத்தும் வகைக்குள் வராது. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும்.

அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது.

எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர்.

NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம்.

பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது.

மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை.

கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன்.

காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள்.

விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.

ஆம் கோசான் ஏறக்குறைய  ஒரு மாதம் முன்னாடி இது சம்பந்தமாக பலதடவை எழுதிவிட்டேன்,

அதிலொன்று

 

 

 

காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. 

உங்கள் பயண கட்டுரையை படிக்க வேண்டும் ஊர் புதினம் பக்கமே அதிகமாக குப்பை கொட்டிவிட்டு போவதால் அதை படிக்க தவறிவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து வடக்கு கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளது
அதாவது 10:1 என்ற விகிதத்தில் இராணுவம் நிலைகொண்டிருக்கிறது.
குறிப்பாக வன்னியில் 1:5 எனும் விகிதத்தில் இராணுவம் இருக்கின்றது.
வடக்கு கிழக்கு அரச பிரதேச செயலகங்களின் தரவுகளின் படி 18,000 ஏக்கர் நிலம் இப்போதும் இராணுவம் வசம் இருக்கின்றது
முல்லைத்தீவில் 1,578.27 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளார்கள்
கிளிநொச்சியில் 4,378.8 ஏக்கர் காணிகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர்
யாழ்ப்பாணத்தில் 3,300 ஏக்கர் காணியில் இராணுவம் தங்கியுள்ளது
இது தவிர யாழ்ப்பாணத்தில் 68 இடங்களில் தங்களின் நிரந்தர முகாம்களுக்கு காணி பெற்று கொள்ள முயற்சி செய்கின்றார்கள்
வவுனியா மாவட்டத்தில் 1,021.55 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்ப்பட்டுள்ளது
மன்னாரில் 130.77 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு உள்ளடங்கலான கிழக்கு மாகாணத்தில் 8,457 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்திடம் இருக்கின்றது
ஆனால் நியத்தில் மேற்படி அரச செயலங்களின் புள்ளி விவரங்களுக்கும் அதிகமான நிலங்களை வசப்படுத்தியிருக்கின்றார்கள்
Oakland Institute யின் ஆய்வறிக்கையில் வடக்கு கிழக்கில் 30,000 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் நிலங்கள் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16,910 ஏக்கர் நிலத்தில் இராணுவம் குடி கொண்டிருக்கின்றது என Oakland ஆவணப்படுத்தியுள்ளது
இதில் வன பகுதிகள் உள்ளடக்கப்பவில்லை
அடையாளம் ஆய்வு நிறுவனம் வன பகுதிகளையும் உள்ளடக்கிய தனது ஆய்வில் முல்லைத்தீவில் 30,000 ஏக்கர் நிலம் இராணுவத்திடம் இருப்பதாக சொல்லுகின்றது
உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் A9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1,702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது.
அது பற்றி கணக்கில்லை.
வன்னியின்மிக வளமான பொருளாதார ஆதாரமான சகல விவசாய பண்ணைகளும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இன்று வரை இருக்கின்றது
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவசாய பண்ணைகளிலிருந்து மட்டும் இராணுவம் வருடாந்தம் 15 மில்லியன் மற்றும் 13 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது.
பொருளாதாரம் சார்ந்து வேறு மாற்றுத் தெரிவில்லாமல் முன்னாள் போரா*ளிகளை இராணுவ பண்ணைகளில் வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கின்றார்கள்
இது போதாதென்று வடக்கின் முன்பள்ளி கட்டமைப்பும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கின்றது
இவை இராணுவமயமாக்கலின் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன
வடக்கின் 3,152 முன்பள்ளி ஆசிரியர்களில் 481 ஆசிரியர்கள் இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு கட்டளை பிரிவின் கீழ் பணியாயாற்ருக்கின்றார்கள்
அதாவது கிளிநொச்சியில் 303 பேர், முல்லைத்தீவில் 366 பேர் யாழ்ப்பாணத்தில் 12 பேர் இராணுவ நிருவாகத்தின் கீழ பணியாற்றி வருகின்றார்கள்
இவ்வாறு மோசமாக செறிவாக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் வடக்கு கிழக்கு சிவில் நிர்வாகத்தில் தலையீடு செய்கின்றார்கள்
சிங்கள குடியேற்றங்கள்,பௌத்தமயமாக்கல் என சகல அத்துமீறல்களுக்கும் துணை நிற்கின்றார்கள்
உதாரணமாக குச்சவெளி பிரதேச செயலக பிரிவில் மட்டும் பௌத்த பிக்குகள் உட்பட பல்வேறு தரப்பால் 41,164 ஏக்கர் நிலம் இராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள்ளது
அதே போல முல்லைத்தீவில் மத்திய ஒற்றையாட்சி நிறுவனங்கள் 80,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இராணுவ ஒத்துழைப்புடன் ஆக்கிரமித்துள்ளது
இது போதாதென்றுஇராணுவ கட்டமைப்பின் ஒத்துழைப்புடன் தான் தென்னிலங்கை மீனவர்கள் பருவ காலங்களில் வடக்கை ஆக்கிரமிக்கின்றார்கள்
ஒரு சில தமிழ் கட்சிகளின் வேட்பளர் தெரிவு வரைகளில் கூட இராணுவ தலையீடு இருக்கிறது
கடந்த தடவை வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட 3 பாராளமன்ற உறுப்பினர்கள் இராணுவ துணைப்படையை சேர்ந்தவர்களாக இருக்கின்றார்கள்
உண்மையில் உயர் கல்வி நிறுவனமான பல்கலை கழகத்தின் துணைவேந்தரை தீர்மானிக்கும் இடம் வரை இராணுவம் ஆதிக்கம் செலுத்துகின்றது
ஆகவே மேற்படி மிக செறிவான இராணுவமயமாக்கலை எங்கள் சமூகத்தின் கூட்டு எதிர்காலதிற்க்காக எதிர்த்தே ஆக வேண்டும்
விட்டு கொடுப்பு என்கிற பேச்சே இதில் இருக்க முடியாது
இதில் வெறும் வாக்கரசியல் செய்ய முடியாது
ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்து 15 ஆண்டுகள் கடந்து விட்ட பின்னரும் கூட இராணுவம் மாற்றமின்றி மிக செறிவாக நிறுத்தப்பட்டிருக்கும் அவலத்தை மறைத்து சிலர் வெற்று அரசியல் செய்ய பார்க்கின்றார்கள்

https://www.facebook.com/share/p/B532ZFmWpim9kmJo/

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

     தவராசா மாவீரர் துயிலும் இல்லம் துப்பவக்கும் இடத்தில் நின்று தானும் துப்பரவாக்குவது போல ஒரு காணொளி, போட்டோ எடுத்து அதை தனது முகநூலில் வெளியிட்டு  தனது பிரச்சாரத்துக்கு உபயோகிக்கிறார். இதுவெல்லாம்  மாவீரரை கொச்சைப்படுத்தும் வகைக்குள் வராது. 😂

யார் முன்னாள் ஈபிடிபி வடக்கு மாகாண சபை எதிர் கட்சி தலைவரா? 

இப்போது எந்த கட்சியில்?

ஒரு பஸ் பிரயாணத்தில் கண்டேன்.  மிகவும் மெலிந்து போய் நோய் வாய்பட்டவர் போல தெரிந்தார். 

இந்த நிலையிலும் பதவி ஆசை.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

யார் முன்னாள் ஈபிடிபி வடக்கு மாகாண சபை எதிர் கட்சி தலைவரா? 

இப்போது எந்த கட்சியில்?

ஒரு பஸ் பிரயாணத்தில் கண்டேன்.  மிகவும் மெலிந்து போய் நோய் வாய்பட்டவர் போல தெரிந்தார். 

இந்த நிலையிலும் பதவி ஆசை.

இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி. மாம்பழ சின்னதில் தேர்தலில் நிற்பவர். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை. 

புலிகளின் முடிவுக்கு முன்னும், பின்னும் 1948-2020 வரை பல சிங்கள தலைவர்கள் விரும்பி, முயன்று முடியாமல் போனது, மக்களை தேசியத்தில் இருந்து விலக்குவது.

ஆனால் NPP க்கு காலமும், தமிழ் கட்சிகளின், புலம்பெயர் தமிழர் தலைமைகளின் போக்கிலித்தனமும் கைகொடுக்கிறன.

9 minutes ago, island said:

இல்லை ஜனாதிபதி சட்டத்தரணி. மாம்பழ சின்னதில் தேர்தலில் நிற்பவர். 

ஓ…கொழும்பு தமிழரசு காரார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓ…கொழும்பு தமிழரசு காரார்.

அவர்தான் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு திரியிறார் என்று வர்ணிக்கப்படுகிறார் இங்கு. அவர் அப்படி செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்.  

 

3 hours ago, goshan_che said:

யார் முன்னாள் ஈபிடிபி வடக்கு மாகாண சபை எதிர் கட்சி தலைவரா? 

இப்போது எந்த கட்சியில்?

ஒரு பஸ் பிரயாணத்தில் கண்டேன்.  மிகவும் மெலிந்து போய் நோய் வாய்பட்டவர் போல தெரிந்தார். 

இந்த நிலையிலும் பதவி ஆசை.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

காலம் காலமாக தமிழ்கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை சிங்கள கட்சிகளாலும் ஒரு புண்ணியமில்லை எனும்போது மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் அதில் மாற்றமில்லை.

மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் என்றால் முஸ்லிம் கட்சிகளை  முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை நோக்கி நகர்வார்களா😊

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, satan said:

ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்

யார் சுத்துமாத்து சுமனை சொல்கிறீர்களா, அல்லது பெர்மிட் மன்னன் தரனை சொல்கிறீர்களா?

இருவரையும் போது போதும் எனும் அளவுக்கு யாழில் கழுவி, கழுவி ஊத்தியுள்ளேனே?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிழம்பு said:

வடமாகாண மக்கள் விடுத்த வேண்டுகோளினை ஏற்று மூன்று தசாப்தகாலத்தின் பின்னர் பலாலி அச்சுவேலி வீதியை மீளத்திறந்ததை கௌரவமான விடயமாக கருதுகின்றேன்

ஆகா ..... ஆகா .....  நட்டு நறுக்காக சொல்லிவிட்டார். அவருக்கும் தெரியும், இதில் தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அரசியல் செய்வார்கள் என்று. இனி வருங்காலத்தில் இவர்கள் மக்களுடன் கூட இருந்து சேவைசெய்தாலே அவர்கள் மக்களின் பிரதிநிதிகள். இல்லையேல் மக்கள் நேரடியாக ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநரிடம் தமது வேண்டுகோளை சமர்ப்பிக்கலாம். அதற்கு பிரதிநிதிகள் என்கிற தரகர்கள், மக்களின் வாக்குகளையும், அதிக பணவிரையத்தையும் பெற வேண்டிய அவசியமில்லை. இப்ப பாருங்கள்! அனுரா யாழ்ப்பாணம் வரும்போது மக்கள் கொடுக்போகும் வரவேற்பை. செய்வோம் என்று வாக்களித்தவர்களை வரவேற்று வாக்களித்து  வாழ்த்துச்சொல்லி காத்திருந்து  ஏமாற்றப்பட்டவர்களுக்கு, செய்து காட்டிவிட்டு வாக்குக்கேட்டு வருபவரை காணாமல் இருப்பார்களோ? இதோடு அனுரா நல்லவராக இருந்தால்; அந்த மக்களின் வெள்ளை உள்ளத்தை பார்த்து, மனம் மாறுவார் இல்லையேல் பத்தோடு பதினொன்று.  

14 hours ago, Kandiah57 said:

அவர்  யாழ்ப்பாணம் அரசாங்க அதிபர்  பதவியில் இருந்த போது   இந்த தமிழரசு கட்சி   சுமத்திரன்.  மாவை   போன்றோர்  அலுப்பு கொடுத்தவர்கள்  தங்களின் எண்ணம் போல நடக்கவில்லை என்று    இடமாற்றம்   செய்தவர்கள்  என்று நினைக்கிறேன்    சரியாக தெரியவில்லை   பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த விடயம்   இந்த ஆளுநர் இவர்களுக்கு பிடக்காத. நபர்      இவர் ஏன் யாழ்ப்பாணத்தை விட்டு போனார் தெரிந்தவர்கள்   பதியுங்கள்.  

இவரை அனுரா ஆளுநராக நியமித்தபோது, யாரோ ஒரு உறவு, அதற்கான காரணத்தை பதிந்திருந்தார், யாரென்று மறந்துவிட்டேன். அந்த திரியில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து கொள்ளலாம். 

போன ஆண்டு என நினைக்கிறன், இங்குள்ள ஒரு ஆலயத்தை திறக்கப்போகிறார்கள் என்று சொல்லி இராணுவம் புடைசூழ தாடியர் வாகனத்தில் வந்தவர், அப்போது செய்தியாளர் உட்ச்செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. தாடியரிடம் தாங்களும் உட்ச்செல்ல அனுமதி வாங்கித்தருமாறு கேட்டிருந்தார்கள். அவர் உள்ளே போனவர்தான் காத்திருந்தவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

ஏனென்றால், அங்குள்ள நிலைமைகளை இவர்கள் படமெடுத்து மக்களுக்கு தெரியப்படுத்தி பிரச்சனையை உருவாக்குவார்களாம். தங்கள் நிலத்தை பார்வையிட மக்களுக்கு உரிமையில்லை. இது ஜனநாயக நாடு, இறைமையுள்ள நாடு என கர்ச்சிப்பார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் என்றால் முஸ்லிம் கட்சிகளை  முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றை நோக்கி நகர்வார்களா😊

விபரம் உள்ள நம்ம விளங்க நினைப்பவனிடமிருந்து இப்படியொரு வீணாபோன கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை😶 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

புலிகளின் முடிவுக்கு முன்னும், பின்னும் 1948-2020 வரை பல சிங்கள தலைவர்கள் விரும்பி, முயன்று முடியாமல் போனது, மக்களை தேசியத்தில் இருந்து விலக்குவது.

ஆனால் NPP க்கு காலமும், தமிழ் கட்சிகளின், புலம்பெயர் தமிழர் தலைமைகளின் போக்கிலித்தனமும் கைகொடுக்கிறன.

அந்த தமிழர்களுக்கு முடியாமல் போன காரணத்தால் "அனுராவுக்கு வாக்கு போட்டு பாருங்கோவன்" ...என நேரடியாக‌ சொல்லாமல் சொல்லுறீயல்....அது தாயக மக்களின் விருப்பம் ...இன்று லக்கிளசின் கட்சிகாரர் விடுதலை புலிகளுக்கு சிலை யாழ்நக்ரில் வைப்போம் என பிரச்சாரம் செய்கின்ற நிலை...

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, putthan said:

அந்த தமிழர்களுக்கு முடியாமல் போன காரணத்தால் "அனுராவுக்கு வாக்கு போட்டு பாருங்கோவன்" ...என நேரடியாக‌ சொல்லாமல் சொல்லுறீயல்....அது தாயக மக்களின் விருப்பம் ...இன்று லக்கிளசின் கட்சிகாரர் விடுதலை புலிகளுக்கு சிலை யாழ்நக்ரில் வைப்போம் என பிரச்சாரம் செய்கின்ற நிலை...

இல்லை இதுதான் உங்கள் போன்றோரின் பிழை. 

நடப்பதை சொன்னால், சொல்லுபவருக்கு வண்ணம் பூசுவதில் நேரத்தை கடத்தி விட்டு, சொன்ன விசயம் நடந்த பின் வானத்தை பார்ப்பது🤣.

அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு.

ஆனால் களயதார்த்தம் வேறு. நான் மேலே எழுதி இருப்பது களயதார்தத்தை, என் அரசியல் தெரிவை/ஆலோசனையை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இல்லை இதுதான் உங்கள் போன்றோரின் பிழை. 

நடப்பதை சொன்னால், சொல்லுபவருக்கு வண்ணம் பூசுவதில் நேரத்தை கடத்தி விட்டு, சொன்ன விசயம் நடந்த பின் வானத்தை பார்ப்பது🤣.

அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு.

ஆனால் களயதார்த்தம் வேறு. நான் மேலே எழுதி இருப்பது களயதார்தத்தை, என் அரசியல் தெரிவை/ஆலோசனையை அல்ல.

கள யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அது உங்கள் பார்வையில் ...நீங்கள் சந்தித்த நபர்கள் உங்களுக்கு சார்பானவர்களாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...யாழ்ப்பாணம் முழுவதும் கருத்துகணிப்பு செய்திருக்க வாய்ய்பில்லை தானே...

இப்படி பல தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர்..பல அலைகள் வந்து கடந்தும் போயிருக்கின்றன...  இந்த தேர்தலில் தமிழர் சுய நிர்ணயத்தில் நீங்கள் நினைப்பது போல சவப்பெட்டியில் விழும் ஆணி ஆக  இருக்கலாம் ஆனால் அந்த ஆணியை பிடுங்கி எடுத்து தமிழர் சுயநிர்ணயத்தை உயிர்ப்பிக்க சிங்கள சமுகம் தயாராக இருக்கின்றது என்பது எனது நிலைப்பாடு

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, putthan said:

கள யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அது உங்கள் பார்வையில் ...நீங்கள் சந்தித்த நபர்கள் உங்களுக்கு சார்பானவர்களாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...யாழ்ப்பாணம் முழுவதும் கருத்துகணிப்பு செய்திருக்க வாய்ய்பில்லை தானே...

இப்படி பல தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர்..பல அலைகள் வந்து கடந்தும் போயிருக்கின்றன...  இந்த தேர்தலில் தமிழர் சுய நிர்ணயத்தில் நீங்கள் நினைப்பது போல சவப்பெட்டியில் விழும் ஆணி ஆக  இருக்கலாம் ஆனால் அந்த ஆணியை பிடுங்கி எடுத்து தமிழர் சுயநிர்ணயத்தை உயிர்ப்பிக்க சிங்கள சமுகம் தயாராக இருக்கின்றது என்பது எனது நிலைப்பாடு

நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே.

விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம்.

எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும்.

சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத  நம்பிக்கை உண்டு.

ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.”

எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது.

ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை.

காலம் பதில் சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே.

விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம்.

எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும்.

சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத  நம்பிக்கை உண்டு.

ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.”

எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது.

ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை.

காலம் பதில் சொல்லும்.

உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி ....  ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... 

பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்...

நல்லதே நடக்கட்டும் ....

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

அனுரவுக்கு போடும் ஒவ்வொரு வாக்கும் தமிழர் சுய நிர்ணயத்தின் சவப்பெட்டியில் விழும் ஆணிகள் என்பதே என் நிலைப்பாடு.

சொன்னதுதான் சொன்னியள், யாருக்கு வாக்களிப்பது என்றும் சொன்னால் வாக்காளருக்கு சௌகரியமாக இருக்கும். அவர்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததாலேயே மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் சிங்களத்துக்கு வாக்களித்தால்; அது நடக்கும், இது நடவாது என்பவர்கள், அந்த வாக்குகளை வேண்டி அவர்கள் என்ன சாதித்தார்கள்? அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள்? அந்த வாக்குகளை வைத்து என்ன செய்கிறார்கள்? அந்த வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்றாவது விளக்குங்கள். பெரும்பான்மை கட்சிகள் எப்படி இவ்வளவு இலகுவாக தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு பெற முடிந்தது?  களைத்துப்போயிருக்கும் மக்களை சும்மா குறை கூறாதீர்கள். அதற்கு  காரணமானவர்களை குறை கூறுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

அவர்தான் பதவிக்காக நாக்கைதொங்கபோட்டுக்கொண்டு திரியிறார் என்று வர்ணிக்கப்படுகிறார் இங்கு. அவர் அப்படி செய்வதில் தவறேதும் இல்லை, ஆனால் தமிழரசுக்கட்சியை சொந்தமாக்கி கொண்டவர்கள் என்ன செய்தார்கள் மக்களுக்கு? வெறும் அறிக்கைகளையும் மிரட்டல்களை விரட்டல்களையும் தவிர்த்து. அவரையும் கொஞ்சம் விமர்சித்தால் நீங்கள் நடுவுநிலையாளர்.  

 

6 hours ago, goshan_che said:

யார் சுத்துமாத்து சுமனை சொல்கிறீர்களா, அல்லது பெர்மிட் மன்னன் தரனை சொல்கிறீர்களா?

இருவரையும் போது போதும் எனும் அளவுக்கு யாழில் கழுவி, கழுவி ஊத்தியுள்ளேனே?

அது போன மாசம். இது  இந்த மாசம். 😂

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, satan said:

சொன்னதுதான் சொன்னியள், யாருக்கு வாக்களிப்பது என்றும் சொன்னால் வாக்காளருக்கு சௌகரியமாக இருக்கும். அவர்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததாலேயே மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் சிங்களத்துக்கு வாக்களித்தால்; அது நடக்கும், இது நடவாது என்பவர்கள், அந்த வாக்குகளை வேண்டி அவர்கள் என்ன சாதித்தார்கள்? அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள்? அந்த வாக்குகளை வைத்து என்ன செய்கிறார்கள்? அந்த வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்றாவது விளக்குங்கள். பெரும்பான்மை கட்சிகள் எப்படி இவ்வளவு இலகுவாக தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு பெற முடிந்தது?  களைத்துப்போயிருக்கும் மக்களை சும்மா குறை கூறாதீர்கள். அதற்கு  காரணமானவர்களை குறை கூறுங்கள்.

 

கடந்த 75 வருடங்களாக தமிழர் தரப்பில் எவரும் தமது சாதனைப் பெறுபேறுகளை மக்களுக்கு கொடுக்கவில்லை என்பது தான் உண்மை.  மக்களுக்கு ஏற்கனவே இருந்த நிம்மதியான வாழ்ககையைக்கூட கெடுத்தது தான் அவர்கள் மக்களுக்கு கொடுத்த பெறு பேறு. அந்த பல தசாப்த பட்டறிவு தான் மக்களை மாற்றி சிந்திக்க வைத்துள்ளது.  அதனால் நீங்கள்  சொன்னது போல் மக்கள் மீது குறை சொல்ல முடியாது. மக்களை இந்த நிலைக்கு கொண்டுவந்த 75 வருட    ஒட்டுமொத்தமான எல்லா தமிழ் தரப்புக்களே இதற்கு காரணமான குற்றவாளிகள்.  அந்த கசப்பான வாழ்வை மறந்து மக்களை புதிய வாழ்வை தோக்கி பயணிக்க நினைப்பதில் தவறு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

வலவரே
தமிழரசு கட்சியும் வேண்டாம் தமிழர்கள் கட்சிகளும் தமிழர் பிரதேசங்களில் வேண்டாம் என்ற தமிழர்கள்,   சிங்கள கட்சிகளும் வேண்டாம் என்றால் எப்படி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு பொலிஸ் காணி அதிகாரங்கள் கிடையாது 13ம் இல்லை  என்கின்ற ஜேவிபியை தற்போது கோத்தபாயாவின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிங்கல கட்சியான ஜேவிபியை ஆதரிப்பார்கள் என்பதினால் வந்த குழப்பம் தான்

5 hours ago, valavan said:

மக்கள் வேறு திசை நோக்கி நகர்வார்கள் என்றால்

 

13 minutes ago, island said:

75 வருட    ஒட்டுமொத்தமான எல்லா தமிழ் தரப்புக்களே இதற்கு காரணமான குற்றவாளிகள்.  

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு உசுப்பு ஏற்றி கொண்டிருந்தவர்களும் முக்கிய குற்றவாளிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு உசுப்பு ஏற்றி கொண்டிருந்தவர்களும் முக்கிய குற்றவாளிகள்

உண்மை.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.  அவர்கள்  எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி ஆளாளுக்கு பங்கு பிரித்துக் சுக போக வாழ்ககையை அனுபவித்துக் கொண்டு இன்றும் பொழுது போக்காக உசுப்பேற்றிக் கொண்டிருப்பவர்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வலவரே
தமிழரசு கட்சியும் வேண்டாம் தமிழர்கள் கட்சிகளும் தமிழர் பிரதேசங்களில் வேண்டாம் என்ற தமிழர்கள்,   சிங்கள கட்சிகளும் வேண்டாம் என்றால் எப்படி வட கிழக்கு இணைப்பிற்கு எதிர்ப்பு பொலிஸ் காணி அதிகாரங்கள் கிடையாது 13ம் இல்லை  என்கின்ற ஜேவிபியை தற்போது கோத்தபாயாவின் வாக்குகளை பெற்று அதிகாரத்திற்கு வந்துள்ள சிங்கல கட்சியான ஜேவிபியை ஆதரிப்பார்கள் என்பதினால் வந்த குழப்பம் தான்

குழப்பம் வேண்டாம்.  சாப்பாட்டில் ஒரு கறியில் காரம் இல்லை,  மற்ற கறியில் உப்பு குறைவாக உள்ளது,  புளி குறைவாக உள்ளது, வடை , பாயசம், மிளகாய்ப் பொரியல் இல்லை என்று   ஒவ்வொரு பந்தியிலும் இருந்து எழுந்து வெளியே வருபவன் இறுதியில் சோறும் இல்லாது இருப்பான்.   அந்த நிலையிலேயே மக்கள். அது தான் மக்களை  இவ்வாறான சிந்தனைகளை நோக்கித் தள்ளியது.   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, putthan said:

உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி ....  ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... 

பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்...

நல்லதே நடக்கட்டும் ....

 

என்னிடம் அப்படி கூறியவருக்கு நான் நீங்கள் மேலே எழுதியதையே பதிலாக கொடுத்தேன்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

சொன்னதுதான் சொன்னியள், யாருக்கு வாக்களிப்பது என்றும் சொன்னால் வாக்காளருக்கு சௌகரியமாக இருக்கும். அவர்கள் நம்பி வாக்களித்து ஏமாந்ததாலேயே மக்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். மக்கள் சிங்களத்துக்கு வாக்களித்தால்; அது நடக்கும், இது நடவாது என்பவர்கள், அந்த வாக்குகளை வேண்டி அவர்கள் என்ன சாதித்தார்கள்? அதனால் மக்கள் என்ன பயனடைந்தார்கள்? அந்த வாக்குகளை வைத்து என்ன செய்கிறார்கள்? அந்த வாக்குகளுக்கு என்ன நடந்தது? என்றாவது விளக்குங்கள். பெரும்பான்மை கட்சிகள் எப்படி இவ்வளவு இலகுவாக தமிழ் மக்களிடத்தில் செல்வாக்கு பெற முடிந்தது?  களைத்துப்போயிருக்கும் மக்களை சும்மா குறை கூறாதீர்கள். அதற்கு  காரணமானவர்களை குறை கூறுங்கள்.

 

நான் என்ன ரஜனிகாந்தா மகளுக்கு யாருக்கு வாக்கு போடுங்கள் என அட்வைஸ் பண்ண.

நான் இப்போ ஒரு வாக்காளராக இருப்பின் டாக்டர் அர்ஜூனாவின் அணியில் பிரதான வாக்கை செலுத்தி, ஆனால் விருப்பு வாக்கை அர்ஜுனாவுக்கு போடாமல் விடுவேன்.

இதற்கு ஒரே காரணம் அவர்கள் தமிழ் தேசிய வழியில் வரும் புதியவர்கள் என்பதே. ஆனால் அர்ஜுனா மனநல தளம்பல் உள்ளவர், எனவே அவரை தவிர்ப்பேன்.

சிங்களத்துக்கு வாக்களித்தால் எதுவும் நடக்கும் என நான் கூறவில்லை. இதுவரை மக்கள் யாரும் பெரும் அளவில் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. அங்கயன், விஜயகலா, போன்றோரின் தனிப்பட்ட செல்வாக்கே அங்கே எடுபட்டது. ஆனால் NPP அப்படி அல்ல. முந்தைய கம்யூனிஸ்டுகளுக்கு பின், முதல் தடவை ஒரு சிங்கள கட்சிக்காக வாக்கு யாழில் விழுகிறது.

செல்வாக்குக்கு காரணம் - தமிழ் தேசிய கட்சிகளினதும், புலம்பெயர் அமைப்பு தலைமைகளினதும் கையாலாகாத, அயோக்கிய, திருட்டுத்தனங்கள்.

மக்களை நான் எங்கும் எப்போதும் குறை கூறியதில்லை.

மக்கள் தீப்பே மகேசன் தீர்ப்பு.

3 hours ago, தமிழ் சிறி said:

 

அது போன மாசம். இது  இந்த மாசம். 😂

எப்படி கழுவி ஊத்தியும் என்ன, இந்த இருவரும் மீண்டும் வரத்தான் போகிறார்கள்.

அங்கால கஜன்ஸ், சுரேஷ், சித்தர் எல்லாரும் இவர்களை ஒத்தவர்கள்தான்.

இவர்கள் கையில் தமிழ் தேசிய அரசியல் இருக்கும் வரை தேர்தலுக்கு தேர்தல் அது சிறுத்து, சிறுத்து போகும் என்றே நினைக்கிறேன்.

ஒட்டு மொத்தமாக தமிழ் தேசிய அரசியலை அரங்கில் இருந்து அகற்றும் வரை இவர்களும் அகல போவதில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.