Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்

adminNovember 11, 2024
douglas-1170x780.jpg

 

 

 

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.  இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/208183/

 

  • கருத்துக்கள உறவுகள்

விண்ணனிடம் கொடுக்கும் அளவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதோ. 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று.

9 hours ago, கிருபன் said:

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

 ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

அப்படி என்னதான் இவரைப்பற்றி விண்ணன் அவதூறாக கூறியிருப்பார்? வெளிப்படையாக கூறினால், நாங்களும் கொஞ்சம் சொல்லலாம் அவர் சொன்னது அவதூறா அல்லது முந்தி நடந்ததுதானா என்று.

 ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

 

கோடி கோடியாக வருமானமில்லாமலா கொட்டிக் கொடுத்திருப்பார்?

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, நியாயம் said:

விண்ணனிடம் கொடுக்கும் அளவுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளதோ. 

அதனால் தான் அவர் பெயர் விண்ணன்  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
51 minutes ago, satan said:

ஐயாவுக்கு உண்மை விளங்கிற்று அதை விண்ணன் மேல் சுமத்துகிறார்.

ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣
எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

 

1000 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டுள்ள டக்ளஸ்

adminNovember 11, 2024
douglas-1170x780.jpg

 

 

 

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பர் எனது நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் பொய்யான விடயங்களை அல்லது சேறுபூசல்களை திட்டமிட்ட வகையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பியமைக்கு எதிராக 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது விடயம் குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது –

விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் என்னைப்பற்றி முழுக்க முழுக்க உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான விடயங்களை கூறியுள்ளார்.

குறிப்பாக அவரது உண்மையற்ற புனையப்பட்ட பொய்யான பரப்புரையானது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு கிடைக்க இருக்கின்ற வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் அவரது பொய்யானதும் மற்றும் உண்மைக்கு மாறானதுமான கூற்று அமைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் இந்த பொய்யான கூற்றுக்களுக் கெதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக எனது சட்டதரணிகளிடம் பாரப்படுத்தியுள்ளேன்.  இந்த பொய்யான மற்றும் என் நற்பெயருக்கும் என் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்த அவரினது பொய்யான கூற்றிற்கு, 1000 கோடி ரூபா நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்வதற்காக நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன்.

இதேவேளை விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் தான் கூறியது விடயங்கள் பிழை என்றும் உண்மைக்கு மாறான விடயம் என்றும் பத்திரிகையாளர் மாநாட்டினூடாக அல்லது அறிக்கையின் ஊடாக உடனடியாக அறிவிக்க தவறும் பட்சத்தில், அவருக்கு எதிராக 1000 கோடிரூபா நட்டஈடு கோரி சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்பதனை கூறிக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://globaltamilnews.net/2024/208183/

 

15. -11-24 இன் பிறகு வழக்கை போடுங்கள்    🤣

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எவருமே மானநஷ்டஈடென்றால் ஆயிரம் கோடிகளிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள் போல..........

ரணிலின் ஆலோசகர் அவருடைய நண்பியின் வளர்ப்பு நாயுடன் ஏதோ செய்ததாக வந்த விடயத்திலும் அவர் நண்பியை ஆயிரம் கோடி நஷ்டஈடாக கேட்டிருந்தார் என்று ஞாபகம்.

பின்னர் ஹிருணிகாவையும் யாரோ ஆயிரம் கோடி கேட்டிருந்தனர்.

டயான கமகே ஆயிரம் கோடி கேட்டாரா அல்லது இனிமேல் தான் கேட்கப் போகின்றாரோ...... அப்படி ஏதோ ஒன்று..................

'ஆயிரம் கோடி வழக்குகள்.............' என்று ஒரு தொகுப்பே வெளிவிடலாம் போல................🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது, அவர்களது சொந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதனை வெளியில் கொண்டுவருவதற்காக இவரின் முன்னைய கொலைகளை கொண்டுவருகிறார். இவர் ஏன் இத்தனை கோடியை இவருக்கு அளித்தார்? தான்  தாடியருக்கு ஏதோ ஒரு தொழிலை சொல்லிக்கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்கிறாரே, அது என்ன தொழில்? இவரும் சாதாரணமான ஆள் அல்ல. இப்போ தாடியரால் நொந்து நொடிஞ்சு வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். அங்கயன் தாடியருக்கு தேர்தலில் வெல்வதற்காக உதவியவர் என்றால்; இவர் எப்படிப்பட்டவர்? துஸ்ட்டனுக்கு உதவி புரிந்தால் கடைசியில் அவனாலேயே அழிவது திண்ணம். தாடியர் யாரை வைத்து மற்றவரை அடக்கினாரோ அதே வழியை இவர் எடுத்து விட்டார் போலிருக்கிறது. அடுத்த முறை தாடியரின் இடத்தை இவர் நிரப்பக்கூடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நன்மை செய்திருந்தால்; அந்த மக்கள் இவரை வாழ்த்தியிருப்பர். பாவம் ஏதோ செய்யக்கூடாத தொழிலை செய்து, கூடாத கூட்டத்தோடு கூடி, அழிந்துபோய் நிக்கிறார். இப்போ... தாடியின் அரசியலும் போகப்போகுது, அவரின் சொகுசு வாழ்க்கைக்கு இவர் நஷ்ட ஈடு கொடுத்தார்தான் உண்டு. ஆனால் இவர் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த மனிதனுக்கு வாக்கு போடுற கூட்டம் போட்டுத்தான் ஆகும். இது இவரின் பிரச்சனை. அவர்களின் பிரச்சனை என்னவோ? அவர்களும் பின்னாளில் சொல்லக்கூடும். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம்.  தாடியர் அரசியலில் வீழ்வது இவராலல்ல. தாடியர் மேல் அனுரா நடவடிக்கை எடுப்பாரெனில், அதில் இவர் பங்குமிருக்கும். புலிகளுக்கு ஐம்பது வீதம் கொடுக்க விரும்பாமல், இப்போ எத்தனை கோடியை இழந்து தவிக்கிறார். நேர்மையாய் சம்பாதித்திருந்தால் யாருக்கும் பயப்படாமல், எதையும் இழக்காமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இத்தனை கோடியை இழந்தவரென்றால், அதற்கு மேல் இவர் சம்பாதிக்க இவர்களின் கூட்டுறவு வேண்டியிருந்திருக்கிறது.  இவர் மேல் நஷ்ட ஈடு கேட்டு இன்னும் பலர் வழக்கு போடப்போகிறார்கள். வாங்கிய காணிக்கு கையெழுத்து வாங்காமல் விட்ட புலி இவர், இவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு ஆதாரம் வைத்திருந்திருப்பாரா? எப்படியோ இவரிலும் சம பங்கு தவறுண்டு. அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் இவர் கொடுத்த காசை வட்டியோடு திருப்பிகேக்கலாம், குற்றம் நிரூபணமானால் தாடியர் விண்ணரிடம் கேட்ட நஷ்ட ஈடும், வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பியளிக்கவும் கோரலாம். 

5 minutes ago, ரசோதரன் said:

மானநஷ்டஈடென்றால் ஆயிரம் கோடிகளிலிருந்து தான் ஆரம்பிப்பார்கள் போல..........

"மானம் உயிரினும் மேலானது." அதனால்தான், மானம் போனபின் உயிரை என்ன ம** கு என்பர்.

30 minutes ago, குமாரசாமி said:

ஐயா உள்ளுக்கு போவார் எண்டுறியள்? 🤣
எல்லாத்துக்கும் சேர்த்துத்தானே இப்ப லெக்சன் நடக்குது...😎

இவ்வளவு காலமும் மௌனமாக இருந்தவர், இப்போ,  கூட்டம் போட்டு பேசுவதிலிருந்து விளங்குதே!

  • கருத்துக்கள உறவுகள்

ஒருகாலம் எங்குபோனாலும் 150 பேர் தனிப்பட்ட பாதுகாவலர்கள், மேலதிகமாக அதிரடிப்படை, பொலிஸ்,ராணுவம் பாதுகாப்புயாழ்ப்பாண நகரத்துக்கே ராஜா,ஸ்ரீதர் தியேட்டர் இவர் கோட்டை, இவர் வைச்சது சட்டம் கேக்காவிட்டால் வாய்க்குள்ளையே பிஸ்டலை வைச்சு சுடும் கொடூரம், ஊர்காவற்துறை அவர் வட்டகை அவரை மீறி யாரும் தேர்தலில் ஜெயிக்க கூடாது

என்ன ஆட்டமெல்லாம் ஆடினார், ஒரு வருடம் முன்பு என்னை யாரும் தொடோணூம் எண்டால் அதிரடிப்படையினரை தாண்டித்தான் வரவேண்டும்,முள்ளீவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் புலிகளை நினைவு கூருகிறார்கள்  எண்டு ஒரு சிங்களவனாகவே மாறி எகத்தாளமா வேறு பேட்டி கொடுத்தார். 

இன்று பதவியும் புடுங்கப்பட்டு பாதுகாப்பும் புடுங்கப்பட்டு, ஒரு கை துப்பாக்கிகூட வைத்திருக்க அனுமதி இலாமல்,  எவர் வேண்டுமென்றாலும் இவரை சீண்டலாம் வெற்றி வாய்ப்பை இல்லாமல் பண்ணலாம் என்று அவரே சொல்லி அழும் நிலைக்கு வந்துவிட்டார்.

உங்கள் வாழ்நாளிலும் எங்கள் வாழ்நாளிலும் உங்களைபோன்றவர்களின் கும்பலின் அஸ்தமனத்தை பார்ப்பதே ஒவ்வொரு மனிதனினதும் வேண்டுதல்.

அதிகாரத்திலும் பதவியிலும் இருக்கும்போதே இயற்கை மரணம் எய்தினால் நீங்கள் வென்றதாகவே ஆகிவிடும்

ஊரில் உள்ள இவரின் எடுபிடி ஒன்றின் கருத்துப்படி இந்த தேர்தலில் தோல்வியடைந்தால் லண்டனுக்குபோய் இவர் செட்டில் ஆகும் வாய்ப்பிருக்கிறது என்று சொன்னார், லண்டனில் இவருக்கு பெரிய வியாபாரங்கள் இருக்கு என்றும் சொன்னார் உண்மை பொய் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அவரிடம் இருக்கும் அளவு வாங்கினால் அதற்கு பெறுமதி இராது தானே? அதுக்கும் மேல....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.