Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
எம்மைப்போல் இன்னொரு ஏழைமகன் யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் இனிமேலும் பாதிக்கப்படக் கூடாதென்பதாற்காகவே பல தடவை சிந்தித்து இம்மடலை வரைகிறோம்.
கடந்த 08.11.2024 பி.ப 6.45 மணியளவில் எமது தாயாரை யாழ் போதனா வைத்தியசாலையின் 24 ம் இலக்க விடுதியில் அனுமதித்திருந்தோம்.வீட்டில் விழுந்த அவரை அனுமதித்த வேளையில் அவ்விடுதியில் கடமையில் இருந்தவர் சத்திரசிகிச்சை நிபுணர் Dr.Umashankar .பி.ப 6.45 ற்கு அனுமதித்த போதிலும் Medical students புடை சூழ தன்னை ஒரு ராஜாவாகப் பாவித்து வலம் வந்த வைத்திய நிபுணர் நோயாளியின் அருகில் கூட வராமல் ஆ செலூலைற்றிஸ் என்றவாறு செல்ல குறுக்கிட்ட எனது கணவர் "Dr அம்மா விழுந்துவிட்டா அதுதான் Admit பண்ணினோம் "என்றார்.ஆ அப்ப Xray போடு என்றவாறு விரைந்து விட்டார்.கிட்டத்தட்ட இரவு 9 மணியளவிலே Xray unit க்கு கொண்டு சென்று மீண்டும் விடுதியில் விட்டுச்சென்றோம்.
மறுநாள் அவரை 16 A விடுதிக்கு மாற்றியிருந்தார்கள்.Xray இல் எந்த பிரச்சினையும் இல்லை செலூலைற்றிஸ் கே வைத்தியம் பார்ப்பதாகச் சொன்னார்கள்.இப்படியாக வைத்தியம் பார்த்தவர்கள் 11.11.2024 காலை முதல் அவாருக்கு Urine போகாத காரணத்தினால் இரத்தப்பரிசோதனைகளை மேற்கொள்ள ஆரம்பித்திருந்தனர். மதிய வேளையில் CRP 536 இல் இருப்பதாகக் கூறியிருந்தனர்.மருந்தாளரான மகனுக்கு தாயின் நோயின் தீவிர நிலைமை புரிந்திருந்தது.ஒரேயொரு மகனைப் பெற்ற கணவனையிழந்த அந்த 69 வயதான தாய் நன்றாகவே கதைத்தபடி மகனுடன் இருந்தவர் பி.ப 2 மணியளவில் அவரது அன்புப் பேர்த்தியை காண வேண்டும் என்ற அவாவில் "தம்பி Babyamma வை கூட்டிக்கொண்டு வந்து காட்டுறியோ "என்று கேட்க ஓம் அம்மா என்ற மகன் வீட்டிற்கு வந்து மனைவியையும் 3 பிள்ளைகளையும் அழைத்துச்சென்று பி.ப 3 மணியளவில் விடுதிக்குள் நுழைகின்றார்.தன்னோடு கதைத்திருந்த தாயின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாது போகுமென்று அம்மகன் அறிந்திருக்கவில்லை.ஆசையாய் அப்பம்மாவைப் பார்க்கச் சென்ற பேரப்பிள்ளைகள் அடக்கத்தில் போய்க்கொண்டிருக்கும் அப்பம்மாவையே பார்க்க முடிந்தது.Ward ன் Emergency bed க்கு மாற்றியிருந்தார்கள்.Pulse rate high ஆகவும் BP very low ஆகவும் இருந்தது.இரவு 7 மணியளவில் Dialysis செய்வதற்காக அழைத்துச் சென்றார்கள்.அது வரை மகனும் மருமகளும் 3 குழந்தைகளும் விடுதியிலேயே வாடியிருந்தோம்.Dialysis இரவு 11 மணியளவிலேயே முடிவடையும் என்பதால் வீடு திரும்பியிருந்தோம்.இரவு 11.45 மணியளவில் விடுதியிலிருந்த உறவொன்று அழைத்து தாயின் நிலை கவலைக்கிடம் எனக்கூற வைத்தியசாலை விடுதியை 12.11.2024 அதிகாலை 12.10 மணியளவில் சென்றடைய 12.08 மணிக்கு தாயின் உயிர் பிரிந்ததாக கூறிய கடமையிலிருந்த வைத்தியர்கள் இரண்டு மணி நேரத்தின் பின்னர் mortuary இல் சடலத்தை ஒப்படைப்பதாகவும் Consultant inquest போட்டிருப்பதால் பிரேத பரிசோதனையின் பின்னரே சடலத்தை ஒப்படைக்க முடியுமெனக் கூறப்பட்டது.
வீடு திரும்பிய மகன் காலை 7 மணியளவில் மீண்டும் வைத்தியசாலைக்குச் செல்ல விடுதிக்கும் பிணவறைக்குமாக மாறி மாறி அலைக்கழிக்கப்பட இறுதியாக பணிப்பாளரின் அலுவலகத்தை நாட அங்கிருந்தவரின் வழிப்படுத்தலி படிவமொன்றைப் பெற்றவர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் செல்கிறார்.பொலிஸாரின் அறிவுறுத்தலின் பேரில் மகன்,மருமகள், அயலவர் ஒருவர் மற்றும் இறந்தவரின் சகோதரர் ஒருவர் என நான்கு பேர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.காலை 10 மணி முதல் நால்வரும் மரண விசாரணை அதிகாரியின் அலுவலக வாசலில் காவலிருக்கின்றனர்.நண்பகல் 12.30 அளவில் வருகை தந்த அவரது விசாரணைகள் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரணைகள் பூர்த்தியடைய பி.ப 1.08 அளவில் கீறிக்கிழித்த உடலத்தை காண்பிக்கிறார்கள்.பின்னர் மூட்டையாக பெற்சீற்றால் சுற்றியவாறு ஒப்படைக்கின்றனர்.அதற்குள் Gate pass ஐ பெற்றுக்கொள்வதற்காக Overseer அலுவலகத்தில் பல நிமிட காத்திருப்பின் பின்னர் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்ட கீறிக்கிழிக்கப்பட்டு தைக்கப்படாத சடலம் அவர்களின் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு பி.ப 2.45 மணியளவிலேயே வீட்டை வந்தடைந்தது.
இவ்வளவு சம்பவத்தையும் குறிப்பிடக் காரணம்
1.நான்கு நாட்கள் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று மரணித்தவருக்கு Inquest போட வேண்டிய அவசியம் என்ன?
2.பதின்நான்கு வருடங்களாக Dr.Peranandharaja வின் மருத்துவ clinic செல்லும் நோயாளிக்கு அவரது Full history உள்ள clinic கொப்பிகளை ஆராய்ந்து அனுமதித்த நாள் முதலே சிகிச்சைகளை ஆரம்பித்திருக்க முடியாதா?
3.அனுமதித்த உடனேயே செலூலைற்றிஸ் எனக் கூறியவர்கள் உடனேயே CRP பார்த்திருந்தார்களா?
4.பார்த்திருப்பின் நான்காவது நாளில் CRP 536 ஆகும் வரை வைத்தியம் பார்க்கவில்லையா?
5.அறுபத்தொன்பது வயது தானே என்ற அலட்சியமா?
6.நான்கு நாட்கள் விடுதியில் இருந்து இறந்தவரின் உடலத்தை கீறிக்கிழிக்கலாமா?
7.கிழித்த உடலத்தை தைக்காமல் கையளிக்கலாமா?
(பெட்டி ,வாகனம் ,மேளம் என்பவற்றுக்காக ரூ.52000 பேசியிருந்த லக்கி ஹவுஸ் தைத்தமைக்காக மேலதிகமாக ரூ.13000 பெற்றிருந்தனர்.)
8.சமூகத்தில் நல்நிலையிலுள்ள எமக்கு இந்நிலையாயின் பாமர மகனொருவரின் நிலை எவ்வாறிருக்கும்?
எமது தாயின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.நாம் உங்கள் நிர்வாகத்தோடு எந்தப் பிரச்சினைக்கும் வரப்போவதில்லை.இருப்பினும் இம் மடலை வரையக் காரணம் நாளை எம்போல் எவரும் பாதிக்கப்படக் கூடாதென்பதற்காகவே!
எமது சுகாதார அமைச்சர் கண்டி போதனா வைத்தியசாலையின் கழிப்பறையையே சுத்தம் செய்து சென்றிருக்கிறார்.தாங்கள் அவ்வாறெல்லாம் இறங்கத் தேவையில்லை.உங்கள் கதிரையைக் காப்பாற்றுவதற்காய் உங்கள் நிர்வாகத்தின் கீழ் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் விடாமல் இலவச மருத்துவத்தை ஏழைகளைக் காப்பதற்காய் பயன்படுத்துங்கள் என்பதே எமது வேண்டுகோள்.
இம்மடலால் ஏற்படவிருக்கும் விளைவுகள் ஏழைகளைப் பாதுகாப்பதற்காய் மாறட்டும்.இலங்கை அரசாங்கத்தின் இலவசக் கல்வியால் பட்டதாரியாய் அரசசேவையில் இருக்கும் ஓர் ஏழையின் குரல் ஏழைகளுக்காய் ஒலிக்கிறது!
நன்றி.
திருமதி.ஷர்மிலா சிவகணேசன் B.A,PGDE,PGD in TESL,M.A
ஆசிரியர்
யா/வட்டு இந்துக் கல்லூரி.
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க மிகவும் கவலையாகப் போய் விட்டது, ஈழப்பிரியன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

வாசிக்க மிகவும் கவலையாகப் போய் விட்டது, ஈழப்பிரியன்.

எனக்கும் தான் புங்கை.என்ன செய்வது?

வசதியான குடும்பத்திற்கே இந்த நிலை என்றால் சாதாரண கடும்பங்களின் நிலை தான் என்ன?

இந்த அநிஞாயங்களை யார் தட்டிக் கேட்பது?

  • கருத்துக்கள உறவுகள்

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

நன்றிகள் ஜஸ்டின் உங்களின் தெளிவுபடுத்தலுக்கு...........

இதே போன்ற தருணங்களில் வைத்தியர்களையும், மருத்துவமனையும் குற்றம் சாட்டுவது என்பது உலகெங்கும் உள்ள ஒரு உணர்வுபூர்வமான வழக்கமே. சம்பந்தப்பட்ட வைத்தியர்களும், மருத்துவமனை நிர்வாகமும் முயற்சி எடுத்து இதை பாதிக்கப்பட்டவர்கள் என்று நினைப்போருக்கு புரியவைக்கவேண்டும். 

ஒரு அநாமேதயக் கடிதமாக அல்லாமல், தன் பெயர் விபரங்களுடனேயே அவர் இந்தக் கடிதத்தை எழுதியிருப்பது நல்ல ஒரு விடயம்...........   

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

Septic shock நடந்திருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

நன்றி ஜஸ்ரின் விலாவரியான விளக்கத்திற்கு.  

கடிதத்தில் எனது மிக நெருங்கிய மருத்துவ நண்பனைப் பெயர் குறித்து வந்த அவசியமற்ற விமர்சனம் கவலையைத் தந்திருந்தது. உங்கள் விளக்கம் அக்கவலையைப் போக்கிவிட்டது.🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்

மடலும் அது எழுதப்பட்ட விதமும் அதற்கான விளக்கமும் நன்று. 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரசோதரன் said:

இதே போன்ற தருணங்களில் வைத்தியர்களையும், மருத்துவமனையும் குற்றம் சாட்டுவது என்பது உலகெங்கும் உள்ள ஒரு உணர்வுபூர்வமான வழக்கமே.

உண்மை. தமிழர்கள் வெளிநாட்டில் மருத்துவர்கள் மீது வைக்கின்ற குற்றசாட்டுக்கள் மிகவும் அதிகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

மருத்துவர் சத்திய மூர்த்தி பதிலளிக்க வேண்டிய சில கேஸ்கள் இருக்கின்றன. இந்த விடயம் அவற்றுள் ஒன்று அல்ல என்பது என் அபிப்பிராயம். காரணங்கள் இவை தான்:

1. மருத்துவ மனையில் சில நாட்கள் இருந்து இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை அவசியமில்லை என்பது தவறான புரிதல். ஒருவர் மருத்துவமனையில் இறந்தால், உடலைப் பொறுப்பெடுக்க வரும் உறவுகளிடம் "உங்களுக்கு மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா?, மரணவிசாரணை தேவையா?" என்று கேட்பார்கள். "இல்லை" என்று பதில் சொன்னால் கையெழுத்து வாங்கிக் கொண்டு உடலைக் கையளிப்பர். இங்கே உறவினர்கள் காவல்துறையை நாடிய போது, அவர்கள் மரணவிசாரணையை ஆரம்பித்திருக்கிறார்கள் - இது அவர்களின் கடமை. மரணவிசாரணையின் ஒரு அங்கமாக பிரேத பரிசோதனையைச் செய்திருக்கிறார்கள். பிரேத பரிசோதனை செய்த உடலை ஒழுங்காகச் சீரமைக்காமல் கையளித்தது மட்டுமே மருத்துவ மனையின் தவறு.

2. "மாணவர்கள் புடை சூழ மருத்துவர் வலம் வந்தார், கவனிக்கவில்லை" என்பது அவசியமற்ற விமர்சனம். யாழ் மருத்துவமனை ஒரு போதனா மருத்துவ மனை, அங்கே மாணவர்கள் புடை சூழ மருத்துவர்கள் நடமாடுவது ஆச்சரியமல்ல. நோயாளியின் உறவினர்களோடு உரையாடுவதில் வேறு பாடுகள் மருத்துவர்களிடையே இருக்கலாம். ஆனால், தோல் அழற்சியை (cellulitis) மருத்துவர் கண்டறிந்திருக்கிறார், பின்னர் எக்ஸ்றேயும் எடுத்திருக்கிறார்கள். என்பு முறிவுகள் இல்லாமையால் தோல் அழற்சிக்குத் தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இதில் என்ன குறை இருக்கிறதென விளங்கவில்லை.

3.  CRP (C-reactive Protein) இது உடலில் அழற்சி (inflammation) நிலை இருக்கும் போது இரத்தத்தில் அதிகரிக்கும் ஒரு குறிகாட்டி. இது தோல் அழற்சி இருக்கும் போது நிச்சயமாக அதிகரிக்கும். இதைப் பரிசோதிக்க முதலே, தோல் அழற்சி என்று நோய் நிர்ணயம் செய்து, அதற்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள். எனவே,  CRP இனை 4 நாட்கள் பிந்திச் செய்தமையால் நோயாளிக்கான மருத்துவம் பாதிக்கப் படவில்லை.

இங்கே ஒரு பிரச்சினை - மருத்துவர்களின் தவறினால் அல்லாமல்- இயற்கையாகவே ஏற்பட்டிருக்கலாம்.

தோல் அழற்சியின் குணங்குறிகள் போலவே தோன்றும் இன்னொரு நோய் நிலை நாளங்களில் ஏற்படும் குருதியுறைதல் நிலை (Deep Vein Thrombosis- DVT). இதை வேறு பிரித்தறிய சில இரத்தப் பரிசோதனைகள் இருக்கின்றன. நோயாளி நல்ல நிலையில் இருந்ததால் இதைச் செய்யாமல் விட்டிருப்பர். மறு பக்கம், நோயாளி கட்டிலில் ஓய்வில் இருந்த காலத்தில் கூட இந்த DVT குருதியுறைதல் ஏற்பட்டு, மரணத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.

இழப்பு சோகம் தான், ஆனால் மருத்துவர்களின் அலட்சியத்தினால் இது நிகழவில்லை.  

உங்களைப் போன்றவர்கள் போதிய விளக்கம் கொடுக்கவில்லை என்றால் டாக்ரர்களே முழுபழியையும் சுமக்க வேண்டும்.

இங்கே 53 ஆயிரத்துக்கு பெட்டி வாகனம் ஒழுங்கு பண்ணியது கொஞ்சம் குடைச்சலாகவே உள்ளது.

இதுபற்றி யாரும் விளக்கமளிக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பகிடி said:

Septic shock நடந்திருகின்றது.

ஆம், சிறு நீரக செயலிழப்பு, இரத்த அழுத்த மாற்றம் என்பன இதைத் தான் காட்டுகின்றன. இந்த இடத்தில் கட்டுப் பாடற்ற வகையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) தாயகத்தில் பாவிக்கப் படுவதையும் சுட்டிக் காட்ட வேண்டும். இதனால், சாதாரணமாக இது போன்ற நோய்களில் பயன்படுத்தப் படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிர்ப்புச் சக்தி (antibiotic resistance) உருவாகி, அந்த மருந்துகள் வேலை செய்யாமல் போகும் நிலை இருக்கிறது.  

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

 

இங்கே 53 ஆயிரத்துக்கு பெட்டி வாகனம் ஒழுங்கு பண்ணியது கொஞ்சம் குடைச்சலாகவே உள்ளது.

இதுபற்றி யாரும் விளக்கமளிக்க முடியாதா?

இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!   

இதை குடும்பத்தினர் தெரிவு செய்தமாதிரி தெரியவில்லை.

அதனாலேயே எமக்கு பரவாயில்லை ஆனால் ஏழைகள் இதைத் தாங்குவார்களா?

என்று கேள்வியுடன் முடித்துள்ளனர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இந்த தொகை குடும்பத்தினர் தெரிவு செய்த பெட்டி வகை, மலர்கள், உடை, வாகன வகை என்பவற்றைப் பொறுத்தது என நினைக்கிறேன்.

8 ஆண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் அந்திம கால ஏற்பாடுகளை வவுனியாவில் என் மருமகனின் உதவியோடு நான் செய்த போது கிடைத்த அனுபவத்தின் படி, இந்தத் தொகை பெரிதாகத் தெரியவில்லை. இந்த ஏற்பாடுகளைச் செய்யும் அந்திம சேவையினர், கறக்க வேண்டிய சகல வழிகளிலும் குடும்பத்தினரிடம் பணம் கறந்து விட்டே விடுவர். ஒரு பக்கம் நேரடியாக சேவைகளுக்குரிய பணத்தை வாங்கிக் கொள்வர். மறுபக்கத்தில் அமரர் ஊர்தி ஓட்டுபவர், உடலை தயார் செய்தவர், மலர் விநியோகம் செய்பவர், என எல்லோரும் தலையைச் சொறிந்து கொண்டு, அருகில் வந்து நின்று மேலதிக tips பணம் வாங்கிப் போவர். வாழ்க்கை வெறுத்து விடும்😂!   

அண்ணாவின் இறப்புக்கு பெட்டி மட்டுமே 50000 ரூபா

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.