Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு

  • Replies 223
  • Views 12.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில்,  வலு  அவதானமாக இருக்க வேண்டும்.    ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 

  • கிருபன்
    கிருபன்

    அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க

  • ரஞ்சித்
    ரஞ்சித்

    புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, கிருபன் said:

அசாத் பூட்டினின் விருந்தாளி என்பதால் பூட்டின் விசுவாசிகளுக்கு அவர் நல்லவர்! சொந்த நாட்டு மக்களையே இரசாயன ஆயுதம் பாவித்து அழித்தவரை, பல்லாயிரம் பேரை சித்திரவதைக்குள்ளாக்கி படுகொலை செய்தவரை வெள்ளையடிக்க ஒரு விதமான மனம் வேண்டும்!

தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே. :cool:

அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎

சதாம் ஹுசைனின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என நான் முன்னரே சொல்லியிருந்தேன் அதே போல் அசாத் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலவரங்கள் வெளிவரும் என நான் நினைக்கின்றேன்.

மேற்குலக செய்திகளை வைத்து நான் சொல்வதெல்லாம் உண்மை என  வாதிட நான் தயார் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

புலிகள் குடும்பங்களை பிடித்து வைத்திருந்தார்கள் என்பதனை  நானும் கேள்விப்பட்டதில்லை, ஆனால் 1995 இறுதிக்காலப்பகுதியில் புலிகளின் 3 போராளிகள் இயக்கத்திலிருந்து விலகியிருந்தார்கள், அவர்களுக்கு 3 மாத தண்டனைக்காலத்தில் தண்டனையாக சமையலறை வேலை இருந்தது, அந்த காலப்பகுதி முடிவடைவதற்கு வெகு சில நாள்கள் மட்டும் இருந்த நிலையில் அவர்கள் இருந்த சமையலறை மேல் புக்கார வீசிய குண்டில் 3 போராளிகளும் உடல் சிதறி பலியாகியிருந்தனர்.

அதில் ஒரு போராளி சாகவச்சேரியினை சேர்ந்தவர், அந்த குண்டு வீச்சு யாழ் மாவட்டத்திற்குள் நிகழ்ந்தது, இருந்தும் அந்த போராளிகளின் உடல்களை புலிகள் தாமே தகனம் செய்துவிட்டனர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கவில்லை, இறந்தவர்களுக்கு போராளிகள் எனும் அந்தஸ்தும் வழங்கப்படவில்லை, 5 பேருக்கும் குறைவானவர்களே அவர்களது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்த குற்றச்சாட்டை நீங்கள் மட்டும் அல்ல. வேறு எவரும் கேள்விபட்டிருக்க முடியாது. 

அது சிலரின் மனதில் உதித்த கற்பனை.

புலிகளின் பகுதியில் இருந்து மாற்று இயக்க உறுபினர்களின் குடும்பங்கள் வெளியேறியது உண்மை. குறிப்பாக, 89 இல் இந்தியன் ஆமியோடு சேர்ந்து வெறியாட்டம் ஆடிய பலரின் குடும்பங்கள் இந்தியாவுக்கும் கொழும்புக்கும் போயினர்.

அதே போல் யாழ் பல்கலைகழக ஆட்கள் சிலரும் ஓடித்தப்பினர். ஆனால் அரசியலில் சம்பந்தபடாத குடும்ப உறவுகளை புலிகள் இம்சித்ததாக தரவுகள் இல்லை.

அப்படி இருந்தாலும் கூட, கைது செய்து விடுவித்தார்கள், இந்தியாவுக்கு வள்ளம் எடுத்து அனுப்பி விட்டார்கள் என்பதும், அசாத் செய்ததை போல் கொலை செய்வதும் ஒன்றல்லவே.

ஆகவே எப்படி பார்த்தாலும் - அசாத்தை புலிகளோடு ஒப்பீடு செய்து இரெண்டும் ஒன்றே என எழுதியது விஷமத்தனம்தான்.

இந்தளவுக்கு இறங்கி அசாத்துக்கு ஏன் வெள்ளை அடிக்க வேண்டும்?

இப்படி எழுதுவதன் நோக்கம் புலம்பெயர் தமிழ் மந்தைகளை மேற்கின் எதிரிகளாக்கி வைத்திருப்பது.

இந்த மந்தைகள் மேற்கில் இருந்த படி மேற்கை எதிர்க்கும் மட்டும், இவர்கள் மூலம் இலங்கையில் இந்திய நலன் பாதிக்கப்படாது.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, valavan said:

ஆனால் குடும்பத்தோடு இரவிரவாக எங்கே எப்போது கைது செய்யப்பட்டார்களென்பது கடஞ்சா தெளிவு படுத்தினாலே உண்டு. 

டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில்.

இது தான்  நான் அறிந்தது. 

அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ  தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்).

குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள  வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள்  கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.)

அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர  எவருக்கும் இது தெரியாது).

அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நான் நிறைய சிரியர்களுடன் வேலை செய்துள்ளேன், இதில் பலர் சிரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் அசாதுக்கே அதரவு தெரிவிப்பர்கள். அவர் செய்வது சரி என விவாதிப்பர்கள். மற்ற இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தால் தாங்களும் ் முஸ்லீமாக மாற வேண்டும் என கூறுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

தாங்கள் பெரிய பிரித்தானியாவின் விசுவாசி என்பதை யாவரும் அறிந்ததே. :cool:

அதன் மூலம் தாங்களும் பெரிய பிரித்தானிய கொள்கைகளுக்கு அடிமைப்பட்டவர் என்பது நிரூபணமாகின்றது.😎

@குமாரசாமி ஐயா இப்ப மூக்குச் சாத்திரம் பார்ப்பதை முழுநேர தொழிலாக்கிவிட்டார்🤪

நான் பிரித்தானியாவில் உள்ள பெரிய கட்சிகள் நான்குக்கும் ஒருபோதும் வாக்களிப்பதில்லை! ஆனால் The Guardian பத்திரிகையை வாசிப்பவன். அப்படியென்றால் என்னவென்று நீங்கள் தேடிப்பார்த்துக்கொள்ளுங்கள்😃

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

டெலோ புலிகள் சண்டை உக்கிரமாக நடந்த இடத்தின் (கட்டைபிராய் டெலோ இன் முக்கிய இயங்கு தளம் ) அயலில் உள்ள இடத்தில்.

இது தான்  நான் அறிந்தது. 

அனால், அது நடந்தது புளொட் என்ற சந்தேகத்தில் (டெலோ ஐ  தொடர்ந்து புளொட் தடைசெய்யப்பட்டது, குறுகிய காலத்தில்).

குடும்பம் என்று சொல்லியது - தந்தை, சகோதரம் - கிட்டத்தட்ட பிணையாக அவர்களாகவே வந்து ஒப்படைக்கும் வரையும். (ஆயினும் அவர்களை ஏன் போட்டு தள்ள  வேண்டிய அவசியம் என்பது இப்போதும் நான் யோசிப்பது உண்டு. அவர்கள், எதோ நோட்டீஸ் பதிப்பித்து கொடுத்தவர்கள் என்பதே வெளியில் சொல்லப்டடது. அதாவது கைது செய்ய வந்தவர்கள் சொன்னதாக. ஆயினும், ஏன் பூதவுடல்கள்  கொடுக்கப்படவில்லை? சித்திரவதையில் சிதைந்து விட்டது என்றே சந்தேகம். இவர்கள் இளம் குடும்பஸ்தர்கள் அனா நேரத்தில்.)

அனால், இது நடந்தது ஓர் பகிரங்க இடத்தில (இங்கே கேட்கிறீர்கள், அதாவது அந்த இடத்தில இருந்த குறித்த சிலரை தவிர  எவருக்கும் இது தெரியாது).

அதனால் இப்படியான சம்பவங்கள் வேறு ஒதுக்கு புறத்திலும் நடந்து இருக்கலாம். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.

அதாவது 

இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2024 at 10:34, ரசோதரன் said:

கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல................

தாங்கள் கொடுங்கோலர்கள், மக்கள் விரோதிகள் என்று அறியாமல் ஒரு மாய உலகத்துக்குள்ளேயே வாழ்ந்து இருக்கின்றார்கள்.................... 

மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது.  இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது  பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும்.  

குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும். 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரசோதரன் said:

அடப் பாவிகளா................ அசாத் போன்ற ஒருவருக்காகவும் நியாயம் கதைப்பீர்களா.............. இங்கு நீங்கள் அசாத்திற்காக நியாயம் சொல்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு தீராத வெறுப்பு வேறு எங்கோ ஒரு இடத்தில் இருக்கின்றது என்று பொருள்........................🫣.

அது உள்ளிருந்தே கொல்லும்.........

அசாத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அசாத்தை விட மனித உரிமையில்   முன்னேற்றகரமான  அரசையோ அல்லது கிளர்ச்சியாளர்களையோ கொண்டுவந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். 

ஆனால் தற்போதைய கிளர்ச்சியாளர்கள் முன்னைய ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களெல்லோ,.? அசாத் தூக்கில் மாட்டிக் கொலை செய்தாரானால் கிளர்ச்சியாளர்கள் கழுத்தை அறுக்கிறார்கள் அல்லது உயரமான கட்டடத்தின் உச்சியில் அல்லது கோட்டை கொத்தளத்தின் உச்சியில் வைத்து கீழே தள்லிவிடும் ஆட்களல்லவா? 

சிறுவர்களின் கழுத்தை அரிந்துவிட்டு அல்லாஹு அக்பர் என்கிறார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சிறுபான்மையினரை அழிக்கிறார்கள். 

அசாத் செய்தது பிழை என்று கூறும் தாங்கள் கிளர்ச்சியாளர்களது பக்கத்தை மூடி மறைப்பது பக்கச் சார்பானது அல்லவா,......? 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அதாவது 

இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை. 

Mr. Minus,

போராட்ட காலப்பகுதியில்  இடம்பெற்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அதுபோல புலம்பெயர்ஸ் டமில் வியாபாரிகளின் சுருட்டல்களையும் கண்டும் காணாது  கடந்து போக வேண்டும் என்கிறீர்களா,.? 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்

  ரஸ்யா, ஈரானுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் காரணமாகவே அசாத்தின் அரசு கலைக்கப்பட்டது - துருக்கிய வெளிவிவகார அமைச்சர். 

We paved the way': Turkey negotiated fall of Assad with Russia, Iran, Turkish FM says - report

https://m.jpost.com/middle-east/article-833382

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள்  சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

அதாவது 

இத்தனை வருடங்களாக நடந்த போராட்டத்தில் உங்களால் காண முடிந்த அல்லது தூக்கி காவ முடிந்த புலிகளின் தவறு இது தான். வெள்ளைத் துணியில் கறுப்பு பொட்டைத்தேடும் உங்களுக்குமாகத்தான் ஆயிரம் ஆயிரம் இளசுகள் தம்மை ஈகம் செய்தார்கள். தொடர்ந்து காவுங்கள். கொஞ்சம் கண்ணே மணியே என்றும் போட்டு அடுத்த தலைமுறைக்கும் கடத்துங்கள். முகங்களை மறைக்க தேவை இல்லை. இனி அவர்கள் வந்து பதில் தரப்போவதில்லை. 

இதில் ஜோக் என்ன தெரியுமா…

நான் புலிகள் தடை செய்த இயக்கங்களில் உயர், மத்திய, கீழ் மட்டத்தில் இருந்த பலருடன் இதை பற்றி கதைத்துள்ளேன், விவாதித்துள்ளேன்.

அர்ஜூன் அண்ணா போன்ற வாழும் சாட்சிகள் யாழில் எழுதியுள்ளனர்.

பல வகையான இணையதளங்களில், புத்தகங்களில் பாதிக்கபட்டவர்களே தமக்கு நேர்ந்ததை எழுதியுள்ளனர்.

அவர்கள் நிலைப்பாட்டில் இருந்து இந்த எழுத்துக்கள் பல இடங்களில் மிகைபடுத்தலாகவும் இருப்பதை கண்டும் உள்ளேன்.

ஆனால் இங்கே சொல்லப்படும் கதைக்கு இவற்றில் இருந்து கூட ஆதாரம் தருவதாக தெரியவில்லை.

கட்டபிராயில் கண்டேன், உரும்பிராயில் கேள்விப்பட்டேன். என்ற அளவில்தான் கதை போகுது.

வழமையாக யாழில் மேற்கை எதிர்ப்பதை முழு நேர வேலையாக கொண்டோரை தவிர வேறு எவரும் இதை ஆமோதித்தும் கருத்து எழுதவில்லை.

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிரியாவில் முன்பு தலையை மூடும்படி கட்டாயபடுத்தும் அப்பாவோ சகோதரனோ கணவனோ இல்லாவிட்டால் பெண்கள்  சுதந்திரமாகவே இருந்தனர்.இனி முஸ்லிம் மத குழுக்கள் ஆட்சியில் ஹிஜாப் தான்

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த முன்னாள் ஜிகாதிகள் கையில் ஒட்டு மொத்த சிரியாவும் விழவில்லை.

முன்னாள் ஜிகாதிகள் என்பதில் பல ஐஎஸ் ஆட்களும் உண்டு. இவர்களுக்கு பெயர்தான் முன்னாள் ஜிகாதிகளே தவிர இவர்கள் ஐஎஸ் போல மிலேச்சர்கள்தான்.

IKR எனப்படும் ஈராக்கி கேர்டிஸ்தான் போல சிரியாவில் வடக்கே பல நிலத்தொடர்புள்ள இடங்கள் குர்தி இன போராளிகள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.

முன்னாள் ஜிகாதிகள் எஞ்சிய இடத்தை Free Syrian Army உட்பட்ட ஏனைய குழுக்களுடன் பங்கிடுகிறார்கள்.

முன்னாள் ஜிகாதிகள் இப்போ துருக்கியின் நண்பர்கள்.

ரஸ்யா தன் வான், கடற் படை தளங்களை இன்னும் அகற்றவில்லை. அசாத்தை கைவிட்டு விட்டு, இப்போ முன்னாள் கிளரையாளர்களுடன் ரஸ்யா பேச்சுவார்த்தை நடத்துகிறதாம். 

இனி சிரியாவில் ஒரு நிழல் யுத்தம் உள்நாட்டு போர் என்ற பெயரில் அரங்கேறும் என்றே நான் நினைக்கிறேன்.

இதில் முக்கிய பாத்திரம் துருக்கி, ரச்யாவுக்குத்தான் இருக்கும், ஆனால் பலவீனப்பட்டு வடகொரியாவிடம் படைகளை யாசிக்கும் நிலையில் உள்ள ரஸ்யாவால் பெரிதாக எதையும் செய்ய முடியும் என நான் நினைக்கவில்லை - மேற்கு FSA, குர்தீக்களை போசிக்க முனையலாம் - டிரம்ப் இதில் தலையிடேன் என அறிவித்து விட்டார்.

உண்மையில் இதில் ஆர்வம் உள்ள எல்லோரும் James Barr எழுதிய The Line in the Sand புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

வரைபடத்தை பார்த்தால் தெரியும் சிரியா, ஈராக் பகுதியில் எல்லை ஒரு ரூலரை வைத்து நேர் கோடு அடித்தது போல் இருக்கும். உண்மையில் நடந்ததும் அதுவே.

இவை இயற்கையாக அமைந்த இனவழி தேசிய நாடுகள் அல்ல. அசாத், சதாம், கடாபி போன்ற கொடுங்கோலர்களின் இரும்புபிடி உடைய - நாடுகள் இன, மத உட்பிரிவு அடிப்படையில் உடைவது தவிர்க்கவியலாதத்து.

மார்ஷல் டிட்டோவுக்கு பின் யூகோஸ்லாவியாவில் நடந்ததும் இதுவே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

Mr. Minus,

போராட்ட காலப்பகுதியில்  இடம்பெற்ற தவறுகளை மூடி மறைக்க வேண்டும். அதுபோல புலம்பெயர்ஸ் டமில் வியாபாரிகளின் சுருட்டல்களையும் கண்டும் காணாது  கடந்து போக வேண்டும் என்கிறீர்களா,.? 

😏

 

திரு. முதுகுகுத்தி ...

உங்களுக்கு ஒரு மைனஸ் பாக்கி...

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

திரு. முதுகுகுத்தி ...

உங்களுக்கு ஒரு மைனஸ் பாக்கி...

விசுகர் என்று அழைத்தேன்,  பதிலில்லை. Mr. Minus என்றவுடன் ஓடி வந்துவிட்டீர்கள்.  🤣

 

ஏன் விசுகர்,

விபு க்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததுபோல சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? வி பு க்கள் தொடர்பாக எதனை எழுதினாலும் -1 போடுகிறீர்கள் ? ஏன்??

1977 கலவரத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய உங்களைவிட 2000 களின் பின்னர் வெளியேறிய ஆட்களுக்கு அதிகம் உண்மையான நாட்டு நடப்புக்கள் தெரியும். புரிந்துகொள்ளுங்கள் 

😏

 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகளை மூடி மறைத்தால் அது  மேற்குலகுக்கு ஆதரவானது என்றும் உண்மைகளை சொன்னால் அது மேற்குலகுக்கு எதிரானது என்று ஒரு புதிய கொள்கை வகுக்கப்படுகிறது யாழ் களத்தில். 

உண்மையைச் சொல்வது ❤️ லைக் வேண்டுவதற்காக அல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kadancha said:

அனால், இதை விட கொடுராமானது, தமிழ் நாடில்  புலிகள் செய்ததாக நான் அறிந்தது.

'நான் அறிந்தது, நான் தெரிந்தது..................' என்று எதையாவது உங்கள் இஷ்டப்படி சொல்லலாமா........................ இவை என்ன வகையான ஆதாரங்கள்..............

அன்று எங்கள் சந்தியிலும் ஒரு கூட்டம் வைத்தார்கள். கிட்டண்ணா வந்திருந்தார். அவர் பிக்அப் ட்ரக்கின் மேலே ஏறி இருந்தார். ஊரில் இருந்த சில முன்னாள் டெலோ முக்கியஸ்தர்களை பிடித்திருந்தனர். அவர்களின் குடும்பங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தனர். முழு ஊருமே எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தது. சில பெண்கள் மண் அள்ளி எறிந்தார்கள். கிட்டண்ணாவால் பேசவே முடியவில்லை. ஆனால் அந்தக் குடும்பங்களை அவர்கள் எதுவும் செய்யவில்லை, எவரையும் சிறையில் அடைக்கவும் இல்லை, நாடு கடத்தவும் இல்லை.................

அதற்காக ஒன்றுமே நடக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் இலட்சக்கணக்கான சொந்த மக்கள் மீதே இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய, குண்டுகளை வீசிய, கொன்றொழித்த ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த இவர்களையும், அவர்களையும் ஒப்பிடலாமா...........  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது.  இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது  பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும்.  

குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும். 

நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம்.

இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது.

இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர்.

இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.         

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அசாத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அசாத்தை விட மனித உரிமையில்   முன்னேற்றகரமான  அரசையோ அல்லது கிளர்ச்சியாளர்களையோ கொண்டுவந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். 

அசாத் செய்தது பிழை என்று கூறும் தாங்கள் கிளர்ச்சியாளர்களது பக்கத்தை மூடி மறைப்பது பக்கச் சார்பானது அல்லவா,......? 

அசாத் மற்றும் அசாத் போன்ற கொடுங்கோலர்கள் இல்லாது போக வேண்டும் என்பதில் நாங்கள் உடன்படுகின்றோம் என்று நினைக்கின்றேன். 

அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம்.

கிளர்ச்சியாளர்கள் செய்வதாக நீங்கள் சொல்வது தமிழில் ஆதவனுக்கு ஈடான உலக ஊடகங்களில் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றது. அதனால் தான் நான் அவற்றை பொருட்படுத்தவில்லை. கிளர்ச்சியாளர்களில் எந்தப் பகுதியாவது அந்த அப்பாவி மக்களை இப்படிச் செய்கின்றார்கள் என்று தோன்றினால், அன்றே அவர்களுக்கு எதிராகவும் சொல்வேன், அவர்களை மூடி மறைக்கப் போவதில்லை.

நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அடித்தளத்தில் இருந்து எங்கள் பார்வைகளையும், கருத்துகளையும் உருவாக்குகின்றோம். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறான அடித்தளங்கள்.

என்னுடைய அடித்தளமானது 'தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினை அழித்துவிடுவோம்..........................' என்பதில் இருக்கின்றது. என்னுடைய பார்வையும், கருத்தும் இங்கிருந்தே வருகின்றது. தேசியம், நாடு, மதம், இனம், பக்கச்சார்பு போன்றவற்றில் இருந்து அல்ல.

குருநாகல் வைத்தியர்  மொகமட் ஷாஃபி, அந்த ஈரான் பெண், கழுத்தில் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பின அமெரிக்கர் (George Floyd), சிரியாவின் Mazen Al-Hamada, ரஷ்யாவின் Alexei Navalny மற்றும் கோடிக்கணக்கான அப்பாவிகள், பலமற்றவர்கள் .............. இப்படியான ஒவ்வொரு மனிதர்களுக்காக வேண்டியே கண்கள் கலங்குகின்றன. அதையே தான் நான் முன்வைக்கின்றேன்.

மேற்குலகையோ அல்லது அமெரிக்காவையோ நான் சார்வதில்லை. 'அவர்கள் செய்தார்களே, அதைத்தானே இவர்களும் செய்கின்றார்களே..................' என்ற நியாயங்களும் என்னிடம் இல்லை.

ஒருவரை அறிய ஒரு புள்ளியை, ஒரு கணத்தை மட்டும் பார்க்காமல், அவரின் தொடர்ச்சியை முழுவதுமாகப் பார்க்கவேண்டும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

விசுகர் என்று அழைத்தேன்,  பதிலில்லை. Mr. Minus என்றவுடன் ஓடி வந்துவிட்டீர்கள்.  🤣

 

ஏன் விசுகர்,

விபு க்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்ததுபோல சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? வி பு க்கள் தொடர்பாக எதனை எழுதினாலும் -1 போடுகிறீர்கள் ? ஏன்??

1977 கலவரத்துடன் நாட்டை விட்டு வெளியேறிய உங்களைவிட 2000 களின் பின்னர் வெளியேறிய ஆட்களுக்கு அதிகம் உண்மையான நாட்டு நடப்புக்கள் தெரியும். புரிந்துகொள்ளுங்கள் 

😏

 

@விசுகு

தாங்கள் - 1 போட்டால், நான்  உண்மையைச் சொல்கிறேன் என்று அர்த்தம். 

ஆரம்பத்தில் -1 என்பது ஒரு முறையற்ற ஒன்றிற்காகப் போடுவதாக இருந்தது. அதனை மாற்றி -1 போட்டாலே அது பெருமைக்குரிய விடயமாகக் கருதும் நிலைக்குக் கொண்டு வந்த பெருமை தங்களையே சாரும் விசுகர். 

வாழ்த்துக்கள்,.❤️❤️❤️❤️❤️

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

@விசுகு

தாங்கள் - 1 போட்டால், நான்  உண்மையைச் சொல்கிறேன் என்று அர்த்தம். 

ஆரம்பத்தில் -1 என்பது ஒரு முறையற்ற ஒன்றிற்காகப் போடுவதாக இருந்தது. அதனை மாற்றி -1 போட்டாலே அது பெருமைக்குரிய விடயமாகக் கருதும் நிலைக்குக் கொண்டு வந்த பெருமை தங்களையே சாரும் விசுகர். 

வாழ்த்துக்கள்,.❤️❤️❤️❤️❤️

இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்??

சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும். 

இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/12/2024 at 02:34, ரசோதரன் said:

கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு இப்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் நினைவிடம், சிலை, கல்லறை என்று வைத்தால், பின்னர் என்றோ ஒரு நாள் அவை அழிக்கப்படும் போல..............

சண்ணி முஸ்லீம்களின் மத கொள்கைப்படி சிலை வைத்தல்,மாபெரும் தப்பு....சியா தலைவர்களின்...சிலைகலை துவசம் பண்ணுகிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

அசாத்தின் வீழ்ச்சி ஒரு நல்ல சகுனம் என்றே நானும், பலரும் பார்க்கின்றோம். இங்கிருந்து சிரியா ஒரு புதிய பாதையில் போகலாம் என்று நம்புகின்றோம்.

அரசியல் திடதன்மை அற்ற சிரியா தான் மேற்குலகுக்கும் ,இஸ்ரேலுக்கும் தேவை அதை நன்றாக செய்துள்ளனர்..

ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..
 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, விசுகு said:

இந்த திரிக்கும் நீங்கள் எழுதிக் கொண்டு இருப்பதற்கும் என்ன சம்பந்தம்??

சிலதுகளுக்கு எப்படி போட்டு அடித்தாலும் நன்றி நன்றி என்று சிரித்தபடிதான் திரியுங்கள். அதுக்கு கொஞ்சம் சூடு சுரணை வேண்டும். 

இதற்கு மேலும் எழுதி மீண்டும் எச்சரிக்கை வாங்க விரும்பவில்லை. டொட். 

Valavan எழுதியதற்குப் பதில் எழுதியிருக்கிறேன். அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? 

விடுதலைப் போராட்டத்திற்கு தாங்கள் உழைத்தவர் என்று நீங்கள் கூறுகின்ற காரணத்தினாலேயே உங்களைக் கனம் பண்ணுகிறேன். அதற்காக விபு க்களுக்கு சொந்தம் கொண்டாட நினைப்பது மாகா தப்பு,.... நினைவில் வைத்திருங்கள். 

😏

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.