Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, vasee said:

அர்ச்சுனன் கண்ணனிடம் என்னால் முடியவில்லை என தோல்வியினை ஒப்புக்கொண்டாராம், கண்ணன் கர்ணனை கூப்பிட்டு இந்த 3 மலைகளையும் அந்து சாய்வதற்குள் தானமாக வழங்கிவிடு என கூற அதற்கு கர்ணன் மூவரை அழைத்து ஆளுக்கொரு மலையினை தானமாக வழங்கினாராம்.

இங்கு பிரச்சினை மனம் இல்லை.

இதையெல்லாம் ஒத்துக்கவே முடியாது.......... வியாசர் எழுதியதில் இப்படி ஒன்று இல்லவே இல்லை........... மூன்று கோடாலிகள், மூன்று நடிகைகள் கதைகள் போல இங்கே மூன்று மலைகள்................🤣.

யாரோ உட்கார்ந்து யோசித்திருக்கின்றார்கள்............

வசீ எழுதியதை வைத்து நாங்கள் இப்ப யோசித்துக் கொண்டிருக்கின்றோம்................😁

 

  • Replies 106
  • Views 5.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    சிறி அண்ணா, நீங்கள் கபிதனையும், கந்தையா அண்ணாவையும் ஒன்றாக்கிவிட்டீர்கள்................. இருவரும் களத்திற்கு தனித்தனியே வேண்டும்....................🤣.

  • ஏராளன்
    ஏராளன்

    யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட

  • எனக்கொரு டவுட்டு சிறியர்...கபிதனும் ,கந்தையாவும் ஒரே ஆளோ... ஆளுக்காள்  புடுங்குப்படுவது..நாடகமா ....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரசோதரன் said:

இதையெல்லாம் ஒத்துக்கவே முடியாது.......... வியாசர் எழுதியதில் இப்படி ஒன்று இல்லவே இல்லை........... மூன்று கோடாலிகள், மூன்று நடிகைகள் கதைகள் போல இங்கே மூன்று மலைகள்................🤣.

யாரோ உட்கார்ந்து யோசித்திருக்கின்றார்கள்............

வசீ எழுதியதை வைத்து நாங்கள் இப்ப யோசித்துக் கொண்டிருக்கின்றோம்................😁

 

ஒருவர் கடவுளை நோக்கி தவம் செய்வாராம் கடவுள் மனம் இரங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு அவர் நீரில் மிதக்கும் வரம் வேண்டும் என கேட்டார் அதற்கு கடவுள் ஆற்றில் ஒரு நபர் மிதவையில் வருவதனை காட்டி எதற்காக இப்படி தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்கிறாய் என கேட்டாராம்.

எனக்கு மகாபாரத கதையினை யார் எழுதியது என்றே தெரியாது கதைகளை வாசிப்பதுடன் நிறுத்திக்கொள்வதுண்டு, இதில் கூறப்படுகின்ற விடயம் மனம் இல்லை என்பதுதற்கு உதாரணமாக கதை கூறப்பட்டுள்ளது.😁

உங்கள் கருத்திற்கு நன்றி பச்சை முடிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, vasee said:

 

இங்கு பிரச்சினை மனம் இல்லை.

மனம் இல்லை முதலாவது ...இரண்டாவது பணம் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
Just now, putthan said:

மனம் இல்லை முதலாவது ...இரண்டாவது பணம் இல்லை

என்னை வம்பில மாட்டிவிட வேணும் எனும் முடிவோடதான் இருக்கிறீர்கள் போல .😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

இது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் நடப்பது தான் . தமிழ் பகுதி நோக்கிய ஒரு சதி அல்ல.

1- இவர்கள் தாதிகளாக (nurse) இருக்க வாய்ப்புக் குறைவு.நேரடியாக நோயாளிகளின் மருத்துவக் கவனிப்பைக் கையாளாமல் உதவும் தாதிய உதவியாளர்களாக (nurse assistants/auxiliary staff) இருக்கலாம் என ஊகிக்கிறேன். சிலர் பராமரிப்பு, சுத்திகரிப்பு ஊழியர்களாகவும் (janitorial) இருக்கக் கூடும். இப்படியான ஊழியர்களை சமயாசமய (casual) ஊழியர்கள் என அழைப்பார்கள் என நினைக்கிறேன். கல்வித் துறையில் "தொண்டர் ஊழியர்கள்" என்பார்கள்.  

 

இது அங்கஜன், டக்ளஸ் கால நியமனங்கள் என்பது போல சிலர் திரிக்க முயல்வதையும் காண்கிறேன். பா.உக்க

2-யாரும் இல்லாத போர்க்காலத்திலேயே இப்படியான நியமனங்கள், பின்னர் நிரந்தரமாக்க கோருதல் என்பன இருந்திருக்கின்றன. 

1- எனது அக்கா அடிக்கடி யாழ் மருத்துவமனைக்கு சென்று வருவதால் இப்படியானவர்களின் தொடர்புண்டு. நீங்கள் சொல்வது நிஜம் 

 

2- மருத்துவமனை மட்டுமல்ல தொண்டர் மற்றும் சிறுவர் பாடசாலை ஆசிரியர்களும் இவ்வாறு உயர்வது வழமையாக உள்ளது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இவர்கள் பலர் முன்னாள் ,பா.உக்களின்(மத்திய அரசு சார்பான) சிபார்சின் பெயரில் தொண்டராக உள்வாங்கப்பட்டவர்கலாம்...அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க  வேணும் என சிலர் நிற்கினம் போல...

“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” 

சத்தியமூர்த்திக்கு கொடிதூக்கவும் சிலர் இருக்கினம் போல...🙌

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அந்த பா.உ க்கள் இந்த தடவை தோல்வியடைந்த காரணத்தால் இவர்களின் இருப்பு கேள்வி குறியாக வரவே சத்தியமூர்த்திக்கு ஏதிராக போர்கொடி தூக்கினமாம்...எப்படியாவது சத்திய மூர்த்தியை விரட்டிய்டிக்க  வேணும் என சிலர் நிற்கினம் போல...

 

3 hours ago, Kandiah57 said:

படித்தவர்களும்கூட தொழில் எப்படி செய்வது என்று அறியாமல் இருககிறாரகள் இவர்களுக்கு படிக்காமல் தொழில் தெரிந்தவர்களே சொல்லி கொடுப்பதை நான் பல இடங்களிலும் பார்த்து உள்ளேன்

 

மனித வைத்திய, உயிரியல் துறையில் நீங்கள் சொல்வதை  கண்டீர்களா?

குறிப்பாக வைத்தியசாலையில்?

இவை மிகவும் குறித்த, சிறப்பு  அறிவு, பயிற்சி போன்றவை. (அவற்றில் உள்ள சொற்களை வாசித்து, விளங்கி திருப்பி கருத்தை உணர்ந்து சொல்லுவதற்கே நேரம் ஒதுக்க வேண்டும், ஏனெனில் அவை பொதுவாக இருப்பது லத்தீன் மொழியில், அல்லது  லத்தீன் மொழி சீரமைக்கப்பட்ட சொற்கள், பொதுவாக உச்சரிப்பு  நீண்டவையும்) 

எனவே படிக்காதவர்களால், பயிற்சி எடுக்காதவர்களால் ஒரு போதும் செய்ய முடியாது.

இதில் கூட, (நான்) வைத்தியர் , தாதியருடன்  நின்றேன்  பார்த்தேன், (தொழில்) பழகினேன் என்பது வைத்தியர், தாதியர் செய்த அந்த குறித்த அனுபவ அவதானம் மாத்திரமே. (அது கூட படித்து, பயின்று  இருக்காவிட்டால் மனதில் இருக்காது, ஏன் என்று விளங்காது.). சிறு நுணுக்கமான வேறுபாட்டுடன் இருக்கும் இரு வேறு அவதானங்கள் பயிலாதவருக்கு ஒன்றாகவே தெரியும்.

இதில் உள்ள நுணுக்கங்கள் மிக அதிகம்.

ஆனால், நன் இதை சொல்வது, பொதுவாக வைத்திய, உயிரியல் துறையில் படித்து, பயின்று இக வேண்டும் என்பதன் காரணம் மருதத்துவத்துறையிலும்    duty (பணி) creep up இருக்கிறது, அதாவது பணி செய்பவர்கள் அறிந்தோ  அறியாமலோ  சுமத்தப்படுவது (மனிதரின் பொதுக் குணம்), பல உடனடியாக நேரம் /மனித வலு தேவை  என்பதற்காக. ஏனெனில், மருத்துவம், குறிப்பாக வைத்தியசாலை பரிமாணத்தில் ஓர் குழு பணி (team work).

இவர்கள் (தொண்டர்) அந்த நிலைக்கு ஆளாகலாம் அப்படியான பணிகளில்  (உதவி தாதி போல) அவர்களை அறியாமல், அதே போல அவர்களை அறியாமல் ஓர் புதிதாக வரும் நோயாளியை மதிப்பு (அவசரம், ஆபத்து போன்றவை) செய்யும் நிலைக்கு உள்ளாகலாம்.

ஆனாலும், இவற்றை தொடங்கும் போது (சத்தியமூர்த்தி) மற்றும் சத்தியமூர்த்தியை நெருக்கிய அமைச்சர்கள் யோசித்து இருக்க வேண்டும்.

ஆயினும், அருச்சுனா வைத்தியர் தானே, இதை யோசிக்காமல் கொண்டு போனது , அல்லது இந்த விடயமும் அலசப்பட்டதோ தெரியாது?

குறிப்பு: இங்கே uk இல் இப்போதும் எம்மவர்களின் ஓர் பெரும் பகுதி grammar school (இது ஜெர்மனி, சுவிஸ் இல் கிட்டத்தட்ட Gymnasium) என்பதில் அவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும்  என்ற அவாவின் முக்கிய ஓர் காரணம் (இதுக்காக இடம் பெயர்ந்து ...), இவற்றில் இப்போதும் லத்தீன் மொழி பொதுவாக கற்பிக்கப்படுவது, அது அவர்களின் பிள்ளைகள் மருத்துவத்துறை போவதற்கு (விருப்பம் என்றால், ஆனால் எமது பெற்றோர் பிள்ளைகள்  பிறக்கும் போதே  மருத்துவர் என்று கணக்கு போடுவது ... ஆனால் இது இப்பொது மாறி வருகிறது பிள்ளைகள் தமது விருப்பில் நாண்டு பிடிப்பதால்) போடும் முதல் பிள்ளையார் சுழி (சீர்காழியின் பாட்டுத்தான் நினைவு வருகிறது, பிள்ளையார் சுழி போட்டு  நீ நல்லதை (டாக்குத்தரை) தொடங்கிவிடு ... இன்னொரு நினைவு, சிங்களத்தின் குற்றச்சாட்டு, தமிழர்கள் விடைத்தாளில்  பிள்ளையார் சுழிபோட்டே அதிக புள்ளிகள் பெற்றார்கள் உயர்தர பரீட்சையில்.

 

1 hour ago, vasee said:

வெறுமனே உயர் கற்கையினை முடித்துவிட்டு வரும் நபர்கள் கூட இவ்வாறான இடைநிலை பள்ளியில் படித்தவர்களிடம் ஆரம்பத்தில் உதவியாளாராக பணியாற்றி செயலனுபவம் பெற்ற பின்னரே தமது சேவைகளை தொடர்கின்றனர்.

மருத்துவ, தாதி துறையில் அல்ல. senior என்றால் மேலும் கற்கை நெறிகள், பயிற்சிகள் முடித்து, அதில் அனுபவமும்  இருக்க வேண்டும்.

மருதுவ, தாதி துறைகள் கற்கை நெறி, பயிற்சி போன்றவற்றால் படியமைகப்பட்டது (regimental hierarchy என்று சொல்லலாம், இராணுவம் போல இறுக்கமானது).   

கம்பனிகளில் செய்வது போல முடியாது, ஏனெனில் அந்த குறிப்பிட்ட நாட்டு மருத்துவ துறை வகுத்து வைத்து உள்ளது  படிநிலைகளை பகிரங்கமாக.

ஆனாலும், கம்பனிகளில் நடையேறுவது போல மேல்வைத்தியரின் ஆமோதிப்பும் தேவை, இதில் பாரபட்சம் காட்டப்படுவது இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kadancha said:

 

 

மனித வைத்திய, உயிரியல் துறையில் நீங்கள் சொல்வதை  கண்டீர்களா?

குறிப்பாக வைத்தியசாலையில்?

இவை மிகவும் குறித்த, சிறப்பு  அறிவு, பயிற்சி போன்றவை. (அவற்றில் உள்ள சொற்களை வாசித்து, விளங்கி திருப்பி கருத்தை உணர்ந்து சொல்லுவதற்கே நேரம் ஒதுக்க வேண்டும், ஏனெனில் அவை பொதுவாக இருப்பது லத்தீன் மொழியில், அல்லது  லத்தீன் மொழி சீரமைக்கப்பட்ட சொற்கள், பொதுவாக உச்சரிப்பு  நீண்டவையும்) 

எனவே படிக்காதவர்களால், பயிற்சி எடுக்காதவர்களால் ஒரு போதும் செய்ய முடியாது.

இதில் கூட, (நான்) வைத்தியர் , தாதியருடன்  நின்றேன்  பார்த்தேன், (தொழில்) பழகினேன் என்பது வைத்தியர், தாதியர் செய்த அந்த குறித்த அனுபவ அவதானம் மாத்திரமே. (அது கூட படித்து, பயின்று  இருக்காவிட்டால் மனதில் இருக்காது, ஏன் என்று விளங்காது.). சிறு நுணுக்கமான வேறுபாட்டுடன் இருக்கும் இரு வேறு அவதானங்கள் பயிலாதவருக்கு ஒன்றாகவே தெரியும்.

இதில் உள்ள நுணுக்கங்கள் மிக அதிகம்.

ஆனால், நன் இதை சொல்வது, பொதுவாக வைத்திய, உயிரியல் துறையில் படித்து, பயின்று இக வேண்டும் என்பதன் காரணம் மருதத்துவத்துறையிலும்    duty (பணி) creep up இருக்கிறது, அதாவது பணி செய்பவர்கள் அறிந்தோ  அறியாமலோ  சுமத்தப்படுவது (மனிதரின் பொதுக் குணம்), பல உடனடியாக நேரம் /மனித வலு தேவை  என்பதற்காக. ஏனெனில், மருத்துவம், குறிப்பாக வைத்தியசாலை பரிமாணத்தில் ஓர் குழு பணி (team work).

இவர்கள் (தொண்டர்) அந்த நிலைக்கு ஆளாகலாம் அப்படியான பணிகளில்  (உதவி தாதி போல) அவர்களை அறியாமல், அதே போல அவர்களை அறியாமல் ஓர் புதிதாக வரும் நோயாளியை மதிப்பு (அவசரம், ஆபத்து போன்றவை) செய்யும் நிலைக்கு உள்ளாகலாம்.

ஆனாலும், இவற்றை தொடங்கும் போது (சத்தியமூர்த்தி) மற்றும் சத்தியமூர்த்தியை நெருக்கிய அமைச்சர்கள் யோசித்து இருக்க வேண்டும்.

ஆயினும், அருச்சுனா வைத்தியர் தானே, இதை யோசிக்காமல் கொண்டு போனது , அல்லது இந்த விடயமும் அலசப்பட்டதோ தெரியாது?

குறிப்பு: இங்கே uk இல் இப்போதும் எம்மவர்களின் ஓர் பெரும் பகுதி grammar school (இது ஜெர்மனி, சுவிஸ் இல் கிட்டத்தட்ட Gymnasium) என்பதில் அவர்களின் பிள்ளைகள் படிக்கவேண்டும்  என்ற அவாவின் முக்கிய ஓர் காரணம் (இதுக்காக இடம் பெயர்ந்து ...), இவற்றில் இப்போதும் லத்தீன் மொழி பொதுவாக கற்பிக்கப்படுவது, அது அவர்களின் பிள்ளைகள் மருத்துவத்துறை போவதற்கு (விருப்பம் என்றால், ஆனால் எமது பெற்றோர் பிள்ளைகள்  பிறக்கும் போதே  மருத்துவர் என்று கணக்கு போடுவது ... ஆனால் இது இப்பொது மாறி வருகிறது பிள்ளைகள் தமது விருப்பில் நாண்டு பிடிப்பதால்) போடும் முதல் பிள்ளையார் சுழி (சீர்காழியின் பாட்டுத்தான் நினைவு வருகிறது, பிள்ளையார் சுழி போட்டு  நீ நல்லதை (டாக்குத்தரை) தொடங்கிவிடு ... இன்னொரு நினைவு, சிங்களத்தின் குற்றச்சாட்டு, தமிழர்கள் விடைத்தாளில்  பிள்ளையார் சுழிபோட்டே அதிக புள்ளிகள் பெற்றார்கள் உயர்தர பரீட்சையில்.

 

மருத்துவ, தாதி துறையில் அல்ல. senior என்றால் மேலும் கற்கை நெறிகள், பயிற்சிகள் முடித்து, அதில் அனுபவமும்  இருக்க வேண்டும்.

மருதுவ, தாதி துறைகள் கற்கை நெறி, பயிற்சி போன்றவற்றால் படியமைகப்பட்டது (regimental hierarchy என்று சொல்லலாம், இராணுவம் போல இறுக்கமானது).   

கம்பனிகளில் செய்வது போல முடியாது, ஏனெனில் அந்த குறிப்பிட்ட நாட்டு மருத்துவ துறை வகுத்து வைத்து உள்ளது  படிநிலைகளை பகிரங்கமாக.

ஆனாலும், கம்பனிகளில் நடையேறுவது போல மேல்வைத்தியரின் ஆமோதிப்பும் தேவை, இதில் பாரபட்சம் காட்டப்படுவது இருக்கிறது.

எமது நிறுவனத்தில் புற்று நோய் மருந்து ஆராய்ச்சி பிரிவில் ஒரு வைத்தியர் ஆலோசனையாளாராக பணி புரிந்திருந்தார், அவர் இன்னொரு மருத்துவ நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சித்த போது அவரது தில்லு முல்லு வெளியானது, இந்தியரான இவர் இன்னொரு இந்திய வைத்தியரின் சான்றிதழ்களை வைத்து சிட்னியில் அரச மருத்துவமனையில் இரவு நேர மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார், அவரின் கீழ் பல மருத்துவர்களும், தாதியர்களும் வேலை செய்திருந்தனர்.

https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756

 

அவர் ஒரு போலி வைத்தியர்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் நாம் பதில் சொல்லவேண்டும், அதனால் பெரும்பாலானவர்கள் அந்த பொறுப்பை எடுக்க விரும்புவதில்லை, ஒரு ஆண்டு இறுதிக்காலத்தில் இயந்திரங்கள் ஓய்வுக்குள்ளாக்குவதற்கு முன்னர் அது சரியான முறையில் நிகழ்த்தப்பட்டுள்ளது என இலத்திரனியல் உறுதி மொழி கொடுக்கும் நிலையில் ஒரு துறை எனது வேலையிடத்தில் இருந்தது, அதில் வேலை செய்தவர்கள் அதனை செய்ய தயங்கினார்கள், நான் வேறு ஒரு துறையில் வேலை செய்து கொண்டிருந்தேன், அந்த துறையில் வேலை செய்தவர்கள் என்னை விட வேலைத்தரத்தில் உயர்வானவர்களாகவும் கல்வியில் உயர்வானவர்களாகவும் இருந்தார்கள் ஆனால் யாரும் முன்வரவில்லை (அது அவர்களது வேலை).

நான் அந்த இலத்திரனியல் உறுதியினை வழங்கினேன், அப்போது அந்த அணியில் வேலை செய்த ஒரு ஐரிஸ் பெண்மணி என்னை தடுத்தார், உனக்கு இதனை அங்கீகாரம் கொடுக்கும் தகுதி இல்லை என ( அவரது நோக்கம் என்னை காப்பாற்றுவதாக இருந்தது) அவர்கள் உன்னை விட அதிக சம்பளம் வாங்குகிறார்கள் அது அவர்களது வேலை நீயாக ஏன் பிரச்சினையில் மாட்டி கொள்கிறாய் என.

மருத்துவதுறை மட்டுமல்ல அதனோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் அதே பொறுப்பு கூறல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

😅

 

1 hour ago, Paanch said:

“இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” 

சத்தியமூர்த்திக்கு கொடிதூக்கவும் சிலர் இருக்கினம் போல...🙌

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, vasee said:

எமது நிறுவனத்தில் புற்று நோய் மருந்து ஆராய்ச்சி பிரிவில் ஒரு வைத்தியர் ஆலோசனையாளாராக பணி புரிந்திருந்தார், அவர் இன்னொரு மருத்துவ நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சித்த போது அவரது தில்லு முல்லு வெளியானது, இந்தியரான இவர் இன்னொரு இந்திய வைத்தியரின் சான்றிதழ்களை வைத்து சிட்னியில் அரச மருத்துவமனையில் இரவு நேர மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார், அவரின் கீழ் பல மருத்துவர்களும், தாதியர்களும் வேலை செய்திருந்தனர்.

https://www.abc.net.au/news/2017-07-05/inquiry-hears-staff-covered-up-fake-doctor-shyam-acharya/8680756

 

அவர் ஒரு போலி வைத்தியர்.


இது தகமை அடையாளத்தை திருடி செய்தது.

(சரி  பார்க்காமல்) நிறுவனம் அவ்வாறு சொன்னதை நம்பி, அந்த நிலையில் அவரை பணிக்கு அமர்த்தியது.

அந்த தகமை உள்ள உரிய வைத்தியர் வந்த்து இருந்தாலும், உங்கள் நிறுவனம் அந்தப்பணியில் அமர்த்தி இருக்கும் தானே ? 

மற்றது, நீங்கள் சொல்வது வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் போல தெரிகிறது.

நான் சொல்வது தகமை அடிப்படையில் , சிகிச்சை, மருத்துவ சேவைகள் வழங்கும் வைத்தியசாலையில், குறிப்பாக அரச வைத்தியசாலையில், ஒவொருவரின் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த யாழ்ப்பாண தோழர் ஆஸ்பத்திரி பற்றி சொல்லுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

வெளிநாடுகளில் வேலை செய்த அனுபவத்தினை (எந்த வேலையாக இருந்தாலும்) கல்வித்தகமைக்கு பதிலீடாக பயன்படுத்துகின்ற நிலை நிலவுகிறது, வெறுமனே உயர் கற்கையினை முடித்துவிட்டு வரும் நபர்கள் கூட இவ்வாறான இடைநிலை பள்ளியில் படித்தவர்களிடம் ஆரம்பத்தில் உதவியாளாராக பணியாற்றி செயலனுபவம் பெற்ற பின்னரே தமது சேவைகளை தொடர்கின்றனர்.

அர்ச்சுனா உண்மையில்  விபரமானவராகவே இருக்கின்றார்.

 

மிக்க நன்றி  நீங்கள்  சொன்னது உண்மை தான்    அது சரியான  அணுகுமுறை கூட   

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kadancha said:

நான் சொல்வது தகமை அடிப்படையில் , சிகிச்சை, மருத்துவ சேவைகள் வழங்கும் வைத்தியசாலையில், குறிப்பாக அரச வைத்தியசாலையில், ஒவொருவரின் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது.

பதவி நீக்கப்பட்டவர்கள். தொண்டர் ஊழியர்கள்     அவர்கள் செய்த வேலையை.  பல  வருடங்களாக செய்த வேலையை   தொடர்ந்து ஏன்   செய்ய முடியாது???? 

 

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kadancha said:


இது தகமை அடையாளத்தை திருடி செய்தது.

(சரி  பார்க்காமல்) நிறுவனம் அவ்வாறு சொன்னதை நம்பி, அந்த நிலையில் அவரை பணிக்கு அமர்த்தியது.

அந்த தகமை உள்ள உரிய வைத்தியர் வந்த்து இருந்தாலும், உங்கள் நிறுவனம் அந்தப்பணியில் அமர்த்தி இருக்கும் தானே ? 

மற்றது, நீங்கள் சொல்வது வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் போல தெரிகிறது.

நான் சொல்வது தகமை அடிப்படையில் , சிகிச்சை, மருத்துவ சேவைகள் வழங்கும் வைத்தியசாலையில், குறிப்பாக அரச வைத்தியசாலையில், ஒவொருவரின் படிநிலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது.

 

52 minutes ago, vasee said:

சிட்னியில் அரச மருத்துவமனையில் இரவு நேர மருத்துவமனை நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார்,

அவர் வைத்தியராக மான்லி அரச வைத்தியசாலையில் பணியாற்றியவர், இந்த விடயத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றன .

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, vasee said:

மருத்துவதுறை மட்டுமல்ல அதனோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையிலும் அதே பொறுப்பு கூறல் இருக்கிறது.

ஆங்கிலத்தில் சொல்கிறேன்.  நீங்கள் சொல்வது assurance (process). இது கம்பனி நிர்ணயித்த எதோ ஓர் மட்டத்தில் (எண்ணாகவும், சொல்லல் வர்ணிக்கப்படும் அல்லது இவை இரண்டும் கலந்து), உங்கள் (அல்லது கொடுப்பவர்) அனுபவ புரிதலில், அந்த  மட்டத்தில் அல்லது அதை விடக் கூட உள்ளது.  

மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இருப்பது accounabilitty (பொறுப்பு). 

அத்துடன், மருத்துவர் செய்வது , இருக்கும் பொறுப்பு duty (of care) - இங்கு duty என்ற சொல்லே சட்டவலு, சட்ட அடிப்படையிலான  பொறுப்பு ஆக்கி விடுகிறது. 

எனவே, வேறுபாடு இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kandiah57 said:

பதவி நீக்கப்பட்டவர்கள். தொண்டர் ஊழியர்கள்     அவர்கள் செய்த வேலையை.  பல  வருடங்களாக செய்த வேலையை   தொடர்ந்து ஏன்   செய்ய முடியாது???? 

 

நல்ல கேள்வி எனக்கு இதற்கு பதில் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்தவர்கள்.   அந்த தகுதி உடன். கொரோனா க்கு முன்னர் ஜேர்மனியில்   மருத்துவர்.  வேலை செய்ய முடியாது   கொரோனாக்கு பின்னர்   கிழக்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்த தகுதியுடன் ஜேர்மனியில் வேலை செய்கிறார்கள்.  மருத்துவராக  

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

ஆங்கிலத்தில் சொல்கிறேன்.  நீங்கள் சொல்வது assurance (process). இது கம்பனி நிர்ணயித்த எதோ ஓர் மட்டத்தில் (எண்ணாகவும், சொல்லல் வர்ணிக்கப்படும் அல்லது இவை இரண்டும் கலந்து), உங்கள் (அல்லது கொடுப்பவர்) அனுபவ புரிதலில், அந்த  மட்டத்தில் அல்லது அதை விடக் கூட உள்ளது.  

மருத்துவ சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இருப்பது accounabilitty (பொறுப்பு). 

அத்துடன், மருத்துவர் செய்வது , இருக்கும் பொறுப்பு duty (of care) - இங்கு duty என்ற சொல்லே சட்டவலு, சட்ட அடிப்படையிலான  பொறுப்பு ஆக்கி விடுகிறது. 

எனவே, வேறுபாடு இருக்கிறது.

மருத்துவத்துறை மட்டுமல்ல அத்னோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையும் சட்ட ரீதியான பிர்ச்சினையினை எதிர்கொள்ள வேண்டும் நாங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு கூட அதனால்தான் ஒருவரும் பொறுப்பு எடுக்க விரும்புவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, putthan said:

இந்த யாழ்ப்பாண தோழர் ஆஸ்பத்திரி பற்றி சொல்லுகின்றார்கள்

ஆரம்பத்தை பார்த்ததில் நல்ல தொரு காணெளி. தமிழில் காணொளி என்றால் ஜேவிபியை கண்மூடிதனமாக புகழ்வது என்ற நிலையில் பேட்டி காண்பவர் சரியான கேள்விகள் கேட்கின்றாரே. மிகுதியை பின்பு பார்க்கின்றேன்
தமிழ் இன அழிப்புக்கான நீதி தமிழர்களின் தன்மானத்தில் தான் தங்கி இருக்கின்றது என்று சில மாதங்கள் முன்பு வரை முழக்கமிட்ட கனடா  ஒன்றாறியோ மாகாண பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் ஒருவர்  இப்போது அணுரா பிரிகேட்டில் சேர்ந்து  அநுரகுமார திசாநாயக்கவின் புகழ் முழக்கமாம்🤣

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kandiah57 said:

பதவி நீக்கப்பட்டவர்கள். தொண்டர் ஊழியர்கள்     அவர்கள் செய்த வேலையை.  பல  வருடங்களாக செய்த வேலையை   தொடர்ந்து ஏன்   செய்ய முடியாது???? 

எந்த துறையில் வேலை செய்தார்கள் என்பதும். மருத்துவ சேவை இல்லாவிட்டால் தொடர்வதில் - அது ஒரு அரசியல் பிரச்சனை போலவே தெரிகிறது.  

மருத்துவ சேவை துறை என்றால், பணிகள் சுமத்தப்படாது என்ற பகிரங்க வாக்குறுதியும். அனால், எந்தவொரு மருத்துவமனையும் அதை வழங்காது.

பிழைவிட்டால் உயிராபத்து இருப்பதால். அவர்களை அறியாமலே தவறு இழைப்பதற்கான சாத்திய கூறுகள் கூட.

அனால், இதை முன்பே யோசித்து இருக்க வேண்டும்.

(மருத்துவ துறையில் தகமை, பயிற்சி இல்லாதார் (அது யார் என்றாலும் வைத்தியர், தாதி, உதவித் தாதி) என்றால், உங்களுக்கு மருத்துவ செய் செய்யும் சேவையை ஏற்றுக்கொள்வீர்களா?)  

43 minutes ago, Kandiah57 said:

மேற்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்தவர்கள்.   அந்த தகுதி உடன். கொரோனா க்கு முன்னர் ஜேர்மனியில்   மருத்துவர்.  வேலை செய்ய முடியாது   கொரோனாக்கு பின்னர்   கிழக்கு ஐரோப்பாவில் மருத்துவம் படித்த தகுதியுடன் ஜேர்மனியில் வேலை செய்கிறார்கள்.  மருத்துவராக

மருத்துவராக அவர் பயின்று, பயிற்சி எடுத்து தானே இருக்கிறார்.

நீங்கள் சொல்வதில் தரம் (அது கூட வேறுபாட்டால்) தான்  கேள்வி?  

எப்படி கொரன முன் / பின் வேறுபாட்டை கடந்தது என்பதை பொறுத்தத்து.

ஆயினும், குறித்த நாட்டு (ஜேர்மனி) மருத்துவ ஒழுங்குபடுத்தல் அமைப்பு (medical regulatory authority), மற்றும் மருத்துவ துறைசார் அமைப்பு (மெடிக்கல் professional body)     அங்கீகரிக்காது இது நடக்க முடியாது.

எனவே, அவர்கள் தகமைகளே சரி,  பொருத்தம் பார்த்தே இது நடைபெறுகிறது.

ஏனெனில், அநேகமான europe, america, canada , australia, newzealand, japan, now china மருத்துவ படிப்பு வருடாவருடம் update பண்ணுவது, கோரான காலத்தில் அவை உங்கள் நாட்டு தரத்தை அடைந்து இருக்கலாம். 

Edited by Kadancha
add info.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

இந்த யாழ்ப்பாண தோழர் ஆஸ்பத்திரி பற்றி சொல்லுகின்றார்கள்

தொண்டர் ஊழியர்கள் என்று சம்பளம் கூட இல்லாமல் நியமனம் செய்துள்ளார்கள் நம்ம அரசியல்வாதிகள்.........🫢.

அடப் பாவிகளா, இங்கு எங்களின் பிள்ளைகள் பாடசாலைக் காலங்களில் Volunteer Job என்று போனால், பல இடங்களில் அதற்கு ஒரு சின்ன சம்பளமும் கொடுக்கின்றார்கள்................. சம்பளம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, இது ஒரு அனுபவம் என்றே பிள்ளைகள் அதை இங்கு எடுத்துக்கொள்கின்றனர்...............

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, vasee said:

மருத்துவத்துறை மட்டுமல்ல அத்னோடு சம்பந்தப்பட்ட அனைத்து துறையும் சட்ட ரீதியான பிர்ச்சினையினை எதிர்கொள்ள வேண்டும் நாங்கள் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு கூட அதனால்தான் ஒருவரும் பொறுப்பு எடுக்க விரும்புவதில்லை

 

உங்களின் responsibility கம்பனிக்கு மட்டும் தான், சட்ட responsibility கம்பனிக்கு.

பொதுவாக responsibility க்கு சட்ட வலு /பிடி இல்லை, duty என்பதற்கு உள்ள சட்ட பிடி / வலு போல.  

உங்களுக்கு வந்தால், கம்பனியின் முறையை  (instruction) பாவித்து, , assurance level க்கு ஏற்ப, கம்பனி ஏற்றுக்கொள்ளும் இயங்கு அபாய மட்டத்துக்கு (இதை அந்த இயங்கு அபாயத்தை கண்காணிக்கும் பிரிவு உறுதிசெய்யும் ) ஏற்ப எனது முடிவு. உங்களின் முடிவு அந்த மட்டம், அல்லது அதற்குள் இருத்தல் வேண்டும். 

பொறுப்பு (responsibility) எடுக்காததன் காரணம் பொதுவாக கம்பனிகளில், சிறு தவறுக்கும், வேலை நீக்கம், பணி  இறக்குதல், சம்பளத்தை குறைதல். கட்டுப்பாடு நடவடிக்கைகள் (disciplinary action) போன்றவை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kadancha said:

 

உங்களின் responsibility கம்பனிக்கு மட்டும் தான், சட்ட responsibility கம்பனிக்கு.

பொதுவாக responsibility க்கு சட்ட வலு /பிடி இல்லை, duty என்பதற்கு உள்ள சட்ட பிடி / வலு போல.  

உங்களுக்கு வந்தால், கம்பனியின் முறையை  (instruction) பாவித்து, , assurance level க்கு ஏற்ப, கம்பனி ஏற்றுக்கொள்ளும் இயங்கு அபாய மட்டத்துக்கு (இதை அந்த இயங்கு அபாயத்தை கண்காணிக்கும் பிரிவு உறுதிசெய்யும் ) ஏற்ப எனது முடிவு. உங்களின் முடிவு அந்த மட்டம், அல்லது அதற்குள் இருத்தல் வேண்டும். 

பொறுப்பு (responsibility) எடுக்காததன் காரணம் பொதுவாக கம்பனிகளில், சிறு தவறுக்கும், வேலை நீக்கம், பணி  இறக்குதல், சம்பளத்தை குறைதல். கட்டுப்பாடு நடவடிக்கைகள் (disciplinary action) போன்றவை.

இல்லை, தனிப்பட்ட ரீதியில் சட்ட ரீதியான பொறுப்புக்கூறல், அதனால்தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதற்கான பொறுப்பு கூறல் இருக்கும் என குறிப்பிட்டேன்.

நிறுவனங்கள் வெறுமனே ஒவ்வொருவரையும் கை நீட்டி தப்பி விடுவதற்காகவே அனைத்து செயற்பாடுகளும் ஆவணப்படுத்தப்படுகின்றது நீங்கள் கையெழுத்திடும் ( இலத்திரனியல் உள்ளடங்கலாக) ஆவணங்கள் சுகாதார திணைக்களத்தினால் பாதுகாக்கப்படுகின்றது.

நான் சும்மா விதண்டாவாதத்திற்காக அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என கூறவில்லை, அவர்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள், தவறு செய்தால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்:

சமீபத்தில் இரண்டு தடவைகள் இது செய்திகளில் வந்து இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி குத்து ஐவியினூடாக திரவங்கள் ஏற்றியிருந்தார்கள். இப்பொழுது விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

இன்னொரு நிகழ்வில், மருத்துவரும் தாதிகளும் இல்லாமல், இவர்களே ஒரு பிரசவம் பார்த்தது. இங்கேயும் விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது.

நான் சிறுவயதில் இருந்த போது எங்களூரில் மிகக் கைராசியான 'பரியாரி' ஒரு மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருத்துவமனை ஊழியர். வீட்டில் வைத்து மருந்து கொடுத்தார், கட்டுப் போட்டர்,................ நானும் போயிருக்கின்றேன்.

நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣

 

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.