Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா

யாழில் இம்முறை தேசிய தைப்பொங்கல் விழா.

எதிர்வரும் வருடம், தேசிய தைப்பொங்கல் விழாவை இந்த முறை யாழ்ப்பாணத்தில் நடத்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தேசிய தைப்பொங்கல் விழாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று (26) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, வருடாந்தரம் ஏற்பாடு செய்யப்படும் சபரிமலை யாத்திரைக்கு இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவிலான பக்தர்களை இணைத்துக் கொள்ளவும், அதற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அனுசரணையைப் பெற்றுத்தருமாறும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

https://athavannews.com/2024/1414284

  • கருத்துக்கள உறவுகள்

 

581594944.JPG

 
2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில்
 

2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன் தேசிய கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், பல வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயங்களின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது.
இதில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 https://newuthayan.com/article/2025ஆம்_ஆண்டு_தேசிய_தைப்பொங்கல்_விழா_யாழ்ப்பாணத்தில்  
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய பொங்கல் எண்டால் அந்த மாதிரித்தான் இருக்கும்...😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

தேசிய பொங்கல் எண்டால் அந்த மாதிரித்தான் இருக்கும்...😂

தமன்ன்னா வந்தால் இன்னும் அந்தமாதிரி இருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

2025ஆம் ஆண்டு தேசிய தைப்பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஏன் வேறு எங்கு நடத்துவதாய் ஐடியா இருந்தது?

கடந்தமாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், மீனவர்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கியமாதிரி தெரியவில்லை, அதனை முதலில் செய்யுங்கள்

பட்டங்களை கையில் வைத்துக்கொண்டு வேலை வேண்டுமென்று  கொளுத்தும் வெயிலில் நின்று போராடும் பட்டதாரிகளுக்கு ஏதாவது வழிகாட்டுங்கள்

இரண்டுநாள் தொடர்ந்து மழை பெய்தால் வெள்ளத்தில் மூழ்கிபோகும் யாழ்ப்பாணத்தை மீட்க நீர்நிலைகளை  தூர்வாரி, வடிகாலமைப்பு செய்து மக்கள் துயருக்கு வழி காணுங்கள் 

சுகாதார பணியாளர்களின் வேலையை உறுதிபடுத்துங்கள்

இதையெல்லாம் ஆரம்பகட்டமாகவாவது பண்ணினால்  அரசாங்கம் தேசியபொங்கல் வைக்க தேவையில்லை அங்குள்ள மக்களே அரசாங்கத்தை தங்களுடன் சேர்ந்து தேசிய பொங்கல் வைக்க கூப்பிடுவார்கள்.

இலங்கையிலேயே இதுவரை இல்லாத புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருகிறோம் என்று சொல்லிவிட்டு, முன்பிருந்த அரசுகள் செய்ததுபோலவே நல்லூர் கோவிலுக்கு போவது, பொங்கல் வைப்பது, தீபாவளி வாழ்த்து சொல்வதென்று பூச்சாண்டி காட்டினால்  உங்கள் ஆட்சி அது வழமைபோல அனைவரும் செய்த வாயால் வாணவேடிக்கை காட்டும் ஒரு நிகழ்வுதான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இது வரை தமிழர்கள் செய்தது என்ன??

மூன்று மதத்தினர் வந்தபோது தமிழ் பொங்கல் தமிழர் திருவிழா.

பிக்குகள் வந்தால் தேசியமா?

அப்படியானால் இனி பிக்குகள் வருவர். எல்லாம் மாறும்? 

இனி தேசிய தைப்பொங்கல் 

தேசிய வருடப்பிறப்பு 

தேசிய தீபாவளி

தேசிய சரஸ்வதி பூஜை.

இது தான் தமிழ் மக்கள் கேட்ட உரிமை. நன்றி. வணக்கம். 

 

அனுராவின் தமிழர்களின் கச்சையையும் புடுங்கிவிடும் நரித்தனம். 

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

பிக்குகள் வந்தால் தேசியமா?

தேசிய, மத, இன நல்லிணக்கமுங்கோ!

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, satan said:

தேசிய, மத, இன நல்லிணக்கமுங்கோ!

அதாவது 

பிக்குகள் இருக்கையில் அமர்ந்து இருக்க மற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் நல்லிணக்கம்,???

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, விசுகு said:

அதாவது 

பிக்குகள் இருக்கையில் அமர்ந்து இருக்க மற்றவர்கள் எழுந்து நின்று வணக்கம் செலுத்தும் நல்லிணக்கம்,???

அப்படியுமிருக்கலாம். வருட ஆரம்பத்தில் தேசிய நல்லிணக்கம் என்று, கூடி ஆரம்பிப்பார்கள். பிறகு, அவர்களின் கோயிலை இடித்து, வழிபாட்டை தடுத்து, ஆர்ப்பாட்டம் பண்ணி அதுதான் தேசிய நல்லிணக்கம் என்று முடிப்பார்கள். ஆரம்பத்துக்கும் முடிவுக்கும் தொடர்பே இருக்காது. இப்போ, இவர்களின் சாசனத்தில் நாற்பத்தி இரண்டாம் மூன்றாம் பிரிவுகளில் மாற்றம் செய்யபோகிறார்களாம். பாப்போம், தேசிய நல்லிணக்கம் தேசிய பிணக்காக மாறாமல் இருந்தால் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிய நடனமும் பால் புக்கையுடனும் முடியப்போகுது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.