Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !

1721018117.jpg

77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட  இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது  இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும்.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு நிகழ்வுக்காக, 107 மில்லியன் ரூபாய் செலவானதாகவும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களில், முடிந்தவரை செலவுகளைக் குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.[ஒ]

https://newuthayan.com/article/குறைந்த_செலவில்_தேசிய_சுதந்திர_தின_கொண்டாட்டம்_!

  • கருத்துக்கள உறவுகள்

Tamil “Extremists” Target Sampanthan and Sumanthiran of the TNA as  “Traitors” – dbsjeyaraj.com

இம்முறை நடக்கும்   இலங்கையின்  சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும்  சுமந்திரன் செல்வாரா?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா?
 

ப்ளீஸ் ரெல் மீ. 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Tamil “Extremists” Target Sampanthan and Sumanthiran of the TNA as  “Traitors” – dbsjeyaraj.com

இம்முறை நடக்கும்   இலங்கையின்  சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும்  சுமந்திரன் செல்வாரா?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா?
 

ப்ளீஸ் ரெல் மீ. 😂

தமிழரசுக் கட்சியின் உத்தியோக பூர்வமான‌ பேச்சாளர் என்ற வகையில் அவர் செல்வார்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Tamil “Extremists” Target Sampanthan and Sumanthiran of the TNA as  “Traitors” – dbsjeyaraj.com

இம்முறை நடக்கும்   இலங்கையின்  சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும்  சுமந்திரன் செல்வாரா?
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்து கொள்ள அனுமதிப்பார்களா?
 

ப்ளீஸ் ரெல் மீ. 😂

அவர், எங்கும் அனுமதி பெற்று செல்லும் ஆளல்லவே, நுழைந்து விடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

தமிழரசுக் கட்சியின் உத்தியோக பூர்வமான‌ பேச்சாளர் என்ற வகையில் அவர் செல்வார்

தேசியக்கொடி புகழ் சம் இல்லாதபடியால்..இம்முறை சும் போவார்...கொடி பிடிப்பார்.......அசைப்பார்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதே கேலிக்கூத்தான விடயம், இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் தற்போதய நிலை, பல இன வன்முறைகள், இன அழிப்பு போர்கள் மற்றும் பட்டினி, பொருளாதார பிரச்சினை என இலங்கை நாடு உள்ள நிலையில் இலங்கை மக்களின் மனங்களில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் மனநிலையே காணப்படுகிறது.

மக்கள் பட்டினியிலும் அடக்குமுறைகளுக்குள்ளும் அவலப்படும் போது சுதந்திர தின கொண்டாட்டம் எதற்கு? சுதந்திரம் கிடைத்து  எதனை சாதித்துவிட்டார்கள்?

தமிழ்த்தலைவர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதே தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, satan said:

அவர், எங்கும் அனுமதி பெற்று செல்லும் ஆளல்லவே, நுழைந்து விடுவார்.

போய் இருந்துவிட்டு சொல்வார்...ஏ. கே . டி ..விசேட அழைப்பு விட்டவர் என்று..😁

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையின் தற்போதய நிலை, பல இன வன்முறைகள், இன அழிப்பு போர்கள் மற்றும் பட்டினி, பொருளாதார பிரச்சினை என இலங்கை நாடு உள்ள நிலையில் இலங்கை மக்களின் மனங்களில் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனும் மனநிலையே காணப்படுகிறது.

அவற்றை மறைப்பதற்கு சுதந்திர தினம் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, putthan said:

தமிழரசுக் கட்சியின் உத்தியோக பூர்வமான‌ பேச்சாளர் என்ற வகையில் அவர் செல்வார்

தமிழரசு கட்சியின் உதவாக்கரை பேச்சாளர்.  😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

 

குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !

1721018117.jpg

77வது தேசிய சுதந்திர தினத்தை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் குறைந்த செலவில் கொண்டாட  இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதேநேரம் கொண்டாட்டங்களை பார்க்க பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது  இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் கௌரவத்தை பிரதிபலிக்கும் வகையில் இந்த நிகழ்வு, பெருமையுடனும், பிரமாண்டத்துடனும் கொண்டாடப்பட வேண்டும்.

இருப்பினும், நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பதால், 77வது தேசிய சுதந்திர தினத்தை குறைந்தபட்ச செலவில் கொண்டாடுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆண்டு நிகழ்வுக்காக, 107 மில்லியன் ரூபாய் செலவானதாகவும், இந்த ஆண்டு கொண்டாட்டங்களில், முடிந்தவரை செலவுகளைக் குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.[ஒ]

https://newuthayan.com/article/குறைந்த_செலவில்_தேசிய_சுதந்திர_தின_கொண்டாட்டம்_!

பேசாமல் online இல் கொண்டாட்டத்தை வைத்தால் என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, satan said:

அவற்றை மறைப்பதற்கு சுதந்திர தினம் தேவை.

இல்லாத ஒன்றிற்காக ஒரு சம்பிரதாய நிகழ்வு தேவைதானா? உயிருடன் இருக்கும் போது கவனிப்பாரற்று விட்டு விடு பின்னர் அவர் இறந்த பின் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுவது போல. இலங்கை காலம் செல்ல செல்ல நிலமை மோசமாகும் ஒரு தீராத நோயாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

உயிருடன் இருக்கும் போது கவனிப்பாரற்று விட்டு விடு பின்னர் அவர் இறந்த பின் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறுவது போல.

தமிழர்கள் பலர் செய்கின்ற இப்படியான சம்பிரதாய நிகழ்வுகள் போன்றதே இலங்கை சுதந்திர தின கொண்டாட்டமும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/12/2024 at 10:15, கிருபன் said:

குறைந்த செலவில் தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் !

சுதந்தின தினம் என்றால் என்னவென்று சிங்களவர்களுக்கு தெரியுமா?

13 hours ago, RishiK said:

பேசாமல் online இல் கொண்டாட்டத்தை வைத்தால் என்ன? 

நீங்கள் பேய் காய். 😎

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, RishiK said:

பேசாமல் online இல் கொண்டாட்டத்தை வைத்தால் என்ன? 

செலவில்லாமல் செய்துவிடும் சிக்கன திட்டம்.

3 hours ago, vasee said:

இல்லாத ஒன்றிற்காக ஒரு சம்பிரதாய நிகழ்வு தேவைதானா?

இல்லாத சுதந்திரத்தை  இருப்பதாக காட்டுவது, ஒரு இனம் இன்னொரு இனத்தின் சுதந்திரத்தின் மேல் நின்று கொண்டாடுவதற்கு சுதந்திரம். தமிழில் சுதந்திர கீதம் பாடக்கூடாது, நாம் கொண்டாடுவது சுதந்திரம். இதில், சுதந்திரம் யாரிடமிருந்து, எப்போது, எப்படி, யாரெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்பதையும் விளக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும், அதுதான் உண்மையான சுதந்திரம். அன்று, ஒரு நாட்டிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை பங்குதாரரோடு பகிர்ந்து கொள்ளாமல், பலநாடுகளிடம் அடைமானம் வைத்து கடன் வாங்கி, கடன் கொடுத்தவர்களை அழைத்து,  லட்ஷக்கணக்கில் கொட்டி இல்லாத ஒன்றை பந்தா காட்டுவதற்கு பெயர்  சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

செலவில்லாமல் செய்துவிடும் சிக்கன திட்டம்.

இல்லாத சுதந்திரத்தை  இருப்பதாக காட்டுவது, ஒரு இனம் இன்னொரு இனத்தின் சுதந்திரத்தின் மேல் நின்று கொண்டாடுவதற்கு சுதந்திரம். தமிழில் சுதந்திர கீதம் பாடக்கூடாது, நாம் கொண்டாடுவது சுதந்திரம். இதில், சுதந்திரம் யாரிடமிருந்து, எப்போது, எப்படி, யாரெல்லாம் பெற்றுக்கொண்டோம் என்பதையும் விளக்க வேண்டும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும், அதுதான் உண்மையான சுதந்திரம். அன்று, ஒரு நாட்டிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை பங்குதாரரோடு பகிர்ந்து கொள்ளாமல், பலநாடுகளிடம் அடைமானம் வைத்து கடன் வாங்கி, கடன் கொடுத்தவர்களை அழைத்து,  லட்ஷக்கணக்கில் கொட்டி இல்லாத ஒன்றை பந்தா காட்டுவதற்கு பெயர்  சுதந்திரம்.

ஆரம்ப பள்ளியில் தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு கதை உள்ளது அது உங்களுக்கு நினைவிருக்கலாம் மார்ட்டின் விக்கிரமசிங்க என்பவரின் கதை, அதில் ஒரு மாட்டுகாரரின் வாழ்க்கை கதையாக கூற்ப்பட்டிருக்கும், அந்த கதையின் தலையங்கம் அடிமைகள்.

கதியில் அவருக்கு ஏற்பட்ட விபத்தினால் அவர் படுத்த படுக்கையாகிவிடுவார், அந்த விபத்து நிகழ்வை கால ஓட்டத்தில் பின் சென்று பார்ப்பது போல் கதை அமைக்கப்பட்டிருக்கும், ஆனால் அந்த கதையின் ஒரு நூல் இழை போல சமூக ஒடுக்குமுறை அந்த சம்பவங்களை பிடித்து இனைக்கும் வாசகர்களின் கண்ணுக்கு புலப்படா இழையாக காணப்படும், தலைப்பை உள்வாங்காவிட்டால் அந்த கதை சொல்ல வருகின்ற உண்மையான கருத்தினை உள்வாங்காது அது ஒரு ஏழை மாட்டுக்காரரின் கதையாக மட்டும் பார்க்கும் நிலை ஏற்படும் (அதில் பல அடிமைகள் உள்ளார்கள்)

இலங்கையர்கள் என கூறுபவர்கள் இன்று செய்யும் செயல்கள் இலங்கை எனும் நாட்டினை மேலும் மேலும் மோசமாக்கும் செயல்கள்தான், அவர்கள் நினைப்பது பாதிக்கப்படுவது மற்றவர்கள் என ஆனால் உண்மையில் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள் எனும் உண்மை நிலை புரியாமல்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.