Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதம் கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் 350,000 இலிருந்து 250,000 ஆக குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அது மாத்திரமின்றி புற்றுநோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே தற்போதைய சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தினார்.

https://athavannews.com/2025/1414791

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்த  அதே டவேளை உலகத்தில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் எந்தக் கட்டுப்பாடுகுமில்லாமல் பிள்ளைகளைப் பெறறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இலங்கையிலும். தமிழர்கள் ஆகக்கூடியது 3 என்ற அளவில் பிறப்பு வீதத்தை வைத்திருக்கிறார்கள் . காலம்கடந்து திருமணம் செ
ய்வதால் குழந்தைப் பேறு கிடைப்பதில் சிக்கல்  பொருளாதாரப்பிரச்சினை ஆகிய காணங்களால் அதிக பிள்ளைகள் பெறுவதைத்தவிர்கிறார்கள்.நிலமை இவ்வாறு தொடர்ந்தால் பெரியப்பாஈசித்தப்பாஈகுஞ்சியப்பா>ஆசையப்பாஈ>பெரியம்மா>சின்னம்மா>குஞ்சியம்மா பெரியமாமி >வின்ன மாமி>ஆசைமாமி என்ற உறவுமுறைகளெல்லாம் ஆருகிப்போவதற்கு வாய்ப்புள்ளது. இலங்கையில் 3நதர குடிமக்களயாக மாற வேண்டி வரும். தமிழர்களே அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்த  அதே டவேளை உலகத்தில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் எந்தக் கட்டுப்பாடுகுமில்லாமல் பிள்ளைகளைப் பெறறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இலங்கையிலும். தமிழர்கள் ஆகக்கூடியது 3 என்ற அளவில் பிறப்பு வீதத்தை வைத்திருக்கிறார்கள் . காலம்கடந்து திருமணம் செ
ய்வதால் குழந்தைப் பேறு கிடைப்பதில் சிக்கல்  பொருளாதாரப்பிரச்சினை ஆகிய காணங்களால் அதிக பிள்ளைகள் பெறுவதைத்தவிர்கிறார்கள்.நிலமை இவ்வாறு தொடர்ந்தால் பெரியப்பாஈசித்தப்பாஈகுஞ்சியப்பா>ஆசையப்பாஈ>பெரியம்மா>சின்னம்மா>குஞ்சியம்மா பெரியமாமி >வின்ன மாமி>ஆசைமாமி என்ற உறவுமுறைகளெல்லாம் ஆருகிப்போவதற்கு வாய்ப்புள்ளது. இலங்கையில் 3நதர குடிமக்களயாக மாற வேண்டி வரும். தமிழர்களே அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும்.

காசு கொடுத்தாலும்  பிள்ளை பெற மாட்டார்கள் ....நீங்கள் கூறியது போல பொருளாதார பிரச்சனை ..மற்றது அழகு பிரச்சனை...
நயன்தார மாதிரி அழகாக இருக்க வேணும் எண்டு சிலர் நயன்தார +விக்னேஸ் தம்பதிகள் போல பிள்ளைகளை பெற முயற்சி செய்ய வெளிக்கிடியினம்....யாராவது பெத்து கொடுத்தால் வளர்க்கலாம் என்ற‌ யோசனையில் இருக்கினம் ...என்ன செலவு அதிகமாகும் என்பதால் சில தாமதம் நடக்கின்றது ...இந்த திட்டம் மலிவாக சந்தைக்கு வந்தால் நல்ல வசூல் நடக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, putthan said:

காசு கொடுத்தாலும்  பிள்ளை பெற மாட்டார்கள் ....நீங்கள் கூறியது போல பொருளாதார பிரச்சனை ..மற்றது அழகு பிரச்சனை...
நயன்தார மாதிரி அழகாக இருக்க வேணும் எண்டு சிலர் நயன்தார +விக்னேஸ் தம்பதிகள் போல பிள்ளைகளை பெற முயற்சி செய்ய வெளிக்கிடியினம்....யாராவது பெத்து கொடுத்தால் வளர்க்கலாம் என்ற‌ யோசனையில் இருக்கினம் ...என்ன செலவு அதிகமாகும் என்பதால் சில தாமதம் நடக்கின்றது ...இந்த திட்டம் மலிவாக சந்தைக்கு வந்தால் நல்ல வசூல் நடக்கும்...

உண்மை,

எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவத் தம்பதிகள் இப்படி செய்து பிள்ளை பெற்று இருக்கிறார்கள் கொழும்பில் 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பகிடி said:

உண்மை,

எனக்குத் தெரிந்து ஒரு மருத்துவத் தம்பதிகள் இப்படி செய்து பிள்ளை பெற்று இருக்கிறார்கள் கொழும்பில் 

"நயன்தார பேப்ஸ் திட்டம்" என பெயர் வைத்து வியாபாரம் பண்ணுவார்கள் .குஸ்புசீலை...போல..
காலப்போக்கில் இதற்கும் நிதி கேட்பார்கள்  புலம் பெயர்ஸிடம்...கோழி முட்டை உற்பத்தி செய்ய தெரியாத நாட்டில் ...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பிள்ளை பெறுகிறேன் பிறப்பு வீதத்தை அதிகரிக்கிறேன் என்று இப்படி இந்தியா மாதிரி செய்து போடாதீர்கள்1345299.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்த  அதே டவேளை உலகத்தில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் எந்தக் கட்டுப்பாடுகுமில்லாமல் பிள்ளைகளைப் பெறறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இலங்கையிலும். தமிழர்கள் ஆகக்கூடியது 3 என்ற அளவில் பிறப்பு வீதத்தை வைத்திருக்கிறார்கள் . காலம்கடந்து திருமணம் செ
ய்வதால் குழந்தைப் பேறு கிடைப்பதில் சிக்கல்  பொருளாதாரப்பிரச்சினை ஆகிய காணங்களால் அதிக பிள்ளைகள் பெறுவதைத்தவிர்கிறார்கள்.நிலமை இவ்வாறு தொடர்ந்தால் பெரியப்பாஈசித்தப்பாஈகுஞ்சியப்பா>ஆசையப்பாஈ>பெரியம்மா>சின்னம்மா>குஞ்சியம்மா பெரியமாமி >வின்ன மாமி>ஆசைமாமி என்ற உறவுமுறைகளெல்லாம் ஆருகிப்போவதற்கு வாய்ப்புள்ளது. இலங்கையில் 3நதர குடிமக்களயாக மாற வேண்டி வரும். தமிழர்களே அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும்.

உலக ரீதியாக பிறப்பு வீதம் அதிகரித்திருக்கிறதா? தரவுகள் இந்தக் கருத்திற்கு எதிர்மாறாக இருக்கின்றன புலவர். கீழே இணைப்பைப் பாருங்கள்👇.

https://www.healthdata.org/research-analysis/library/fertility-forecasts-and-their-implications-population-growth 

உலக ரீதியில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைகிறது. ஆனால், வீழ்ச்சியடையும் வீதம் ஏழை நாடுகளான சில ஆபிரிக்க நாடுகளில் குறைவாக இருக்கிறது.

இந்த உலகப் போக்கிற்குக் காரணங்கள் சமூக ரீதியானவை. அதிக வீதமான பெண்கள் கல்வியில் முன்னேறுவதால் பிந்திய திருமண வயது, திருமணமான பெண்களும் தங்கள் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்துவதால் குறைவான எண்ணிக்கையில் குழந்தைகள் - இவை தான் காரணங்களேயொழிய, பொருளாதாரச் சுமையென்று ஆட்கள் பிள்ளை பெறாமல் இருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரங்களில்லை. அப்படியானால், ஏழை நாடுகளில் அல்லவா பாரிய பிள்ளைப் பேறு வீழ்ச்சி வர வேண்டும்?

"இனத்தைப் பெருக்க சேவை" செய்வதற்காக, தமிழ் சமூகத்தில் பெண்களை பள்ளிக்கூடம் போகாமல் நிப்பாட்டிக் கல்யாணம் கட்டி வைக்கலாம் என்கிறீர்களா😂

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கத்தைய நாடுகளில் உள்ளது போல் பிள்ளை பராமரிப்புக்கு காசு கொடுத்து பாருங்க தெரியும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, RishiK said:

மேற்கத்தைய நாடுகளில் உள்ளது போல் பிள்ளை பராமரிப்புக்கு காசு கொடுத்து பாருங்க தெரியும். 

இந்தியா,சீனாவில் பிள்ளை பராமரிப்புக்காக காசு கொடுப்பனவுகள் இருக்கிறதா இல்லையே.

புலம்பெயர் நாடுகளில் கொடுப்பனுவுகள் இருந்தாலும் நம்மவர்கள் இரண்டுக்கு மேல் பிள்ளை பாக்கியம் வேண்டாம் என்றுதானே அடம்பிடிக்கின்றார்கள்.😃

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Justin said:

உலக ரீதியாக பிறப்பு வீதம் அதிகரித்திருக்கிறதா? தரவுகள் இந்தக் கருத்திற்கு எதிர்மாறாக இருக்கின்றன புலவர். கீழே இணைப்பைப் பாருங்கள்👇.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, புலவர் said:

 

உங்கள் இந்த இணைப்பிலேயே இருக்கிறதே? போன ஆண்டை விட சனத்தொகை அதிகரிப்பு 0.9% குறைவாக இருந்திருக்கிறது 2024 இல். நீங்கள் பிறப்பு வீதம் உலகில் அதிகரிப்பதாக அல்லவா குறிபிட்டீர்கள்?

97% நாடுகளில் பிறப்பு வீதம் குறைந்து வருகிறது - இதன் காரணமாக உலக பிறப்பு வீதமும் குறைந்து வருகிறது. இதை நான் தந்த IHM இணைப்பிலேயே தெளிவாகக் காணலாம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சி! - விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா 

10 JAN, 2025 | 07:08 PM
image

டந்த பத்து வருடங்களை கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைவடைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2024ஆம் ஆண்டாகும்போது 228,000ஆக குறைவடைந்துள்ளதாக கொழும்பு சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (10)  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பத்து வருடங்கள் கருத்தில் கொள்ளும்போது நாட்டில் பிறப்பு வீதம் படிப்படியாக குறைந்துள்ளது. 2013ஆம் ஆண்டு 350,000ஆக இருந்த பிறப்பு எண்ணிக்கை 2023ஆம் ஆண்டாகும்போது 250,000ஆக குறைவடைந்ததுடன்  2024ஆம் ஆண்டு பிறப்பு எண்ணிக்கை 228,000ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அவ்வாறு பிறக்கும் குழந்தைகளிலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகள் நோய் நிலைமைகளுக்கு ஆளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் காணக்கிடைக்காத குழந்தை பருவ நீரிழிவு நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதும் அதிகரித்துள்ளது. அவ்வாறு நீரிழிவு நோயால் பாதிப்புக்குள்ளான சுமார் 100 குழந்தைகள் சிறுவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் சிறுவர் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பைக் காண முடிகிறது. அதிகரித்த உடல் பருமன், மந்தபோசனை போன்ற உடலியல் நோய்களாலும் மன நோய் காரணமாகவும் சிறுவர்கள் பாதிப்புக்குள்ளாவதும் அதிகரித்துள்ளது.

சிறுவர்களின் குறும்புத்தனமும் அதற்கு எதிர்மாறான ஆடிசம் நிலையும் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் மேலோங்கியுள்ளது. குழந்தைகள் இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு ஆளாகுவதால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம். ஆகையால், பெற்றோர் மற்றும் சமூகம் என்ற ரீதியில் இவை தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இல்லையேல், எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/203510

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.