Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

  • Replies 1.3k
  • Views 38.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • கிருபன்
    கிருபன்

    எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுக்களை இழந்தாலும் இப்ராஹிம் ஸட்ரானின் அதிரடியான 177 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து சவாலான 325 ஓட்டங்களை எடுத்த

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: திருத்தப்பட்டுள்ளது   சம்பியன்ஸ் கிண்ணம் 2025 போட்டிகளில் வெற்றி பெற்ற பல அணிகளையும், சாதனை படைக்கும் அணிகளையும் சரியாகக் கணித்தும், 

  • கிருபன்
    கிருபன்

    ஐந்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்த்தான் அணி நிலைத்து ஆடமுடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து சராசரியான 241 ஓட்டங்களை எடுத்

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கிருபன் said:

18 கேள்விகளுக்குப் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

image.png

புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக.

மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை).

தரமான சம்பவம் புலவர். 🖖

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

A-parrot-zodiac.jpg

அம்மா தாயே குஷ்பு!

கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎

image.png

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புலவர் said:

வாழ்துக்கள் புலவர்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, செம்பாட்டான் said:

புலவர் எல்லோரையும் ஏப்பம்விட்டு, வந்துட்டாரையா முதல்வராக.

மொத்தமாக 48 புள்ளிகளில் 39 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் மட்டும்தான், இரு குழுக்களிலும் முதலாவது இரண்டாவது அணிகளைச் சரியாகக் கணித்தவர். இங்கிலாந்து இறுதியாக வரும் என்று கணித்தவர், பாகிஸ்தானுடன் கோட்டைவிட்டுவிட்டார் (அந்த ஒரு புள்ளிதான் அவருக்குக் கிடைக்கவில்லை).

தரமான சம்பவம் புலவர். 🖖

வாழ்த்துகள் புலவர். 48 புள்ளிகளில் 39 இணை பெற்றது சாதனைதான். மிகுதி 9 புள்ளிகளில் 6 புள்ளிகள் மழையினால் தடைபெற்ற ஆட்டங்களினால் புலவருக்கு கிடைக்கவில்லை. இதில் பாகிஸ்தான் வங்காளதேசப்போட்டி நடைபெற்று இருந்தால் புலவருக்கு மேலும் ஒரு புள்ளியும் கிடைத்திருக்கும்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

@புலவர் என்னையா புலவர் இப்படி பண்ணீட்டீங்களே.

வாழ்த்துக்கள்.

உங்களாலேயே நம்ப முடியலை இல்ல.

தம்பீ @கிருபன் எல்லோரும் கைவிட்டுட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே.

எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, செம்பாட்டான் said:

இது நல்லாருக்கே. தோற்றால், வேணும் என்று தோற்றது என்று சொல்லலாம். வென்றால், இது தேவையில்லாத வெற்றி என்று சொல்லலாம்.

எப்பிடி என்டாலும் இந்தியா தோற்றால் சரி. அப்பிடித்தானே. 😀

விதி வலியது.🤣

4 hours ago, கிருபன் said:

இந்திய அணி தெரிவாகாது என @vasee யும், பாகிஸ்தான் அணி தெரிவாகும் என 07 பேரும் பதில் தந்துள்ளனர்!

நான் தனியாள் இல்லை.🤣

1 hour ago, ஈழப்பிரியன் said:

23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே.

எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?

கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் மூவருக்கும்ம் கடைசி மூவருக்கும் வாழ்த்துக்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, vasee said:

கப்பல் மூழ்கும் போது தலைமை மாலுமி மற்றவர்களை அனுப்பிவிட்டு கடைசியாக கப்பலுடன் மூழ்குவாராம், இங்கு தலை அவர்தான் என நிரூபிக்கின்றார்.

உண்மையாவா?

இன்னமும் புள்ளிகள் வர இருக்கின்றன.

பார்ப்போம்.

1 minute ago, vasee said:

முதல் மூவருக்கும்ம் கடைசி மூவருக்கும் வாழ்த்துக்கள்.🤣

வசி ஏன் அவசரம்?

  • கருத்துக்கள உறவுகள்

வீரப்பையன் காட்டு கத்தலாக கத்தியும் கவனத்தில் கொள்ளாத இந்திய தெரிவுக்குழுவிற்கு வருண் நேற்றைய போட்டியில் நல்ல பதிலளித்துள்ளார். வெற்றி பெற்ற இந்தியணிக்கு வாழ்த்துக்கள் அவுஸுடன் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கு.

2 minutes ago, ஈழப்பிரியன் said:

உண்மையாவா?

இன்னமும் புள்ளிகள் வர இருக்கின்றன.

பார்ப்போம்.

நான் தான் கடைசியாக வருவேன் என என் உள்மனம் கூறுகிறது இபோதே அத்திவாரத்தினை போட்டு வைப்போம் என பார்த்தால் விட மாட்டேன் என நிற்கிறீர்கள்.🤣

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்தியணியினை அவுஸ்ரேலியா எப்படி எதிர்கொள்ள போகிறது என தெரியவில்லை, நேற்றைய போட்டியில் வருணின் பந்தினை கணிக்க முடியாமல் நியுசிலாந்து திணறியது, வருண் கரம் போல், லெக் ஸ்பின், ஓப் ஸ்பின், சிலைடர் போன்ற வித்தியாசங்களில் பந்து வீசுகிறார் என் கருதுகிறேன், பந்தினை கணிக்க முடியாவிட்டால் பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கும் ஆனால் வருணின் பந்து வேகமாக வருவது கூட மட்டையாளர்களை குழப்புகின்றது,

விலியம்சன் சிறப்பாக வருனை எதிர்கொண்டார் ஆனாலும் பன்ட்கை தவறாக கணித்தால் அதனை ஈடுசெய்யும் வகையில் தனது கால்களை நகர்த்தி விளையாடியமை வில்லியம்சன் கூட வருனை எதிர்கொள்ள சிரமபட்டதனை காட்டுகிறது.

மிஸ்ரி ஸ்பின்னர்கள் பலர் இதற்கு முன்னர் இருந்துள்ளார்கள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் அவர்களில் ஒருவர், ஒரு கால கட்டத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் இவர்களின் வேறுபாட்டினை கண்டுனர்ந்தபின் அவர்களின் பந்து வீச்சு சோபை இழந்து விடும் இது ஒரு பாதகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

A-parrot-zodiac.jpg

அம்மா தாயே குஷ்பு!

கொஞ்ச நாளாய் 24ம் இடத்திலையே அங்காலை இஞ்சாலை அரக்காமல் அரங்காமல் நிக்கிறவர் முற்பிறவியில என்னென்ன பாவங்களை செய்து தொலைச்சார் எண்டு சொல்லு தாயே...😎

image.png

பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் கடைசியாக வரும் என்று ஒருவரும் கணிக்கவில்லை என்பதுதான் ஆறுதல்😂

இல்லையென்றால் இன்னும் கீழே போயிருக்கலாம்!! இப்போது எப்படி ஒரு படிக்கு முன்னால் நிற்பவரின் தோளில் ஏறுவது என்பதுதான் இலக்கு🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

வாழ்த்துகள் புலவர். 48 புள்ளிகளில் 39 இணை பெற்றது சாதனைதான். மிகுதி 9 புள்ளிகளில் 6 புள்ளிகள் மழையினால் தடைபெற்ற ஆட்டங்களினால் புலவருக்கு கிடைக்கவில்லை. இதில் பாகிஸ்தான் வங்காளதேசப்போட்டி நடைபெற்று இருந்தால் புலவருக்கு மேலும் ஒரு புள்ளியும் கிடைத்திருக்கும்.

உண்மைதான். மழை அவரையும் பாதித்துவிட்டது. பார்ப்போம் அரை இறுதிச் சுற்றில் என்ன மாயம் செய்கிறார் என்று.

4 hours ago, ஈழப்பிரியன் said:

23 பேர் இருந்தும் ஒருத்தர் கூட கிருபனுக்கு உதவி செய்யலையே.

எத்தனை நாளாக இத்தனை பேரையும் தாங்குவது?

பரவாயில்லை. வசியா கிருபனா. பொறுத்திருந்து பார்ப்போம். வாத்தியாரும் உதவக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, கிருபன் said:

இல்லையென்றால் இன்னும் கீழே போயிருக்கலாம்!! இப்போது எப்படி ஒரு படிக்கு முன்னால் நிற்பவரின் தோளில் ஏறுவது என்பதுதான் இலக்கு🤪

தாராளாமாக, முன்னால் போங்கள் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்த இந்தியணியினை அவுஸ்ரேலியா எப்படி எதிர்கொள்ள போகிறது என தெரியவில்லை, நேற்றைய போட்டியில் வருணின் பந்தினை கணிக்க முடியாமல் நியுசிலாந்து திணறியது, வருண் கரம் போல், லெக் ஸ்பின், ஓப் ஸ்பின், சிலைடர் போன்ற வித்தியாசங்களில் பந்து வீசுகிறார் என் கருதுகிறேன், பந்தினை கணிக்க முடியாவிட்டால் பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கும் ஆனால் வருணின் பந்து வேகமாக வருவது கூட மட்டையாளர்களை குழப்புகின்றது,

விலியம்சன் சிறப்பாக வருனை எதிர்கொண்டார் ஆனாலும் பன்ட்கை தவறாக கணித்தால் அதனை ஈடுசெய்யும் வகையில் தனது கால்களை நகர்த்தி விளையாடியமை வில்லியம்சன் கூட வருனை எதிர்கொள்ள சிரமபட்டதனை காட்டுகிறது.

மிஸ்ரி ஸ்பின்னர்கள் பலர் இதற்கு முன்னர் இருந்துள்ளார்கள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் அவர்களில் ஒருவர், ஒரு கால கட்டத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் இவர்களின் வேறுபாட்டினை கண்டுனர்ந்தபின் அவர்களின் பந்து வீச்சு சோபை இழந்து விடும் இது ஒரு பாதகம்.

இந்தியாவுக்கு பெரிய தலைவலி தலைதான், டிராவிஷ் ஹெட். கொஞ்சநாளா, அவனும் இந்தியா என்டா சூரசம்காரம் ஆடுறான். அதுக்கு ஏதாவது ஒழுங்கோட வந்தால், இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாய் அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

இந்த இந்தியணியினை அவுஸ்ரேலியா எப்படி எதிர்கொள்ள போகிறது என தெரியவில்லை, நேற்றைய போட்டியில் வருணின் பந்தினை கணிக்க முடியாமல் நியுசிலாந்து திணறியது, வருண் கரம் போல், லெக் ஸ்பின், ஓப் ஸ்பின், சிலைடர் போன்ற வித்தியாசங்களில் பந்து வீசுகிறார் என் கருதுகிறேன், பந்தினை கணிக்க முடியாவிட்டால் பின் காலில் சென்று விளையாடுவது ஒரு தெரிவாக இருக்கும் ஆனால் வருணின் பந்து வேகமாக வருவது கூட மட்டையாளர்களை குழப்புகின்றது,

விலியம்சன் சிறப்பாக வருனை எதிர்கொண்டார் ஆனாலும் பன்ட்கை தவறாக கணித்தால் அதனை ஈடுசெய்யும் வகையில் தனது கால்களை நகர்த்தி விளையாடியமை வில்லியம்சன் கூட வருனை எதிர்கொள்ள சிரமபட்டதனை காட்டுகிறது.

மிஸ்ரி ஸ்பின்னர்கள் பலர் இதற்கு முன்னர் இருந்துள்ளார்கள் இலங்கை சுழல் பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் அவர்களில் ஒருவர், ஒரு கால கட்டத்தின் பின்னர் துடுப்பாட்ட வீரர்கள் இவர்களின் வேறுபாட்டினை கண்டுனர்ந்தபின் அவர்களின் பந்து வீச்சு சோபை இழந்து விடும் இது ஒரு பாதகம்.

அஜந்த மென்டிஷ் ஒரு தொடரில், இலங்கையில் வைத்து இந்தியாவ உருட்டு உருட்டென்று உருட்டினார். அடுத்த தொடரில் இந்தியாவில் வைத்து, இந்தியா வெளுத்துத் தள்ளிவிட்டுது. அதிலிருந்து அவரால் பெரிதாக ஷோபிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இந்தியா காட்டிக்குடுத்து விட்டுது.

வருணுக்கும் அதேதான் நடக்கும். இப்போ சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கிறார். நீங்கள் சொன்னமாதிரி, வேகமாகவும் வீசுகிறார். ஆனால் டிராவிஷ் ஹெட்டுக்கும், மாக்ஸ்வெலுக்கும் எப்பிடிப் போடப்போகிறார் என்பத்தில்தான் எல்லாம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, செம்பாட்டான் said:

இந்தியாவுக்கு பெரிய தலைவலி தலைதான், டிராவிஷ் ஹெட். கொஞ்சநாளா, அவனும் இந்தியா என்டா சூரசம்காரம் ஆடுறான். அதுக்கு ஏதாவது ஒழுங்கோட வந்தால், இந்தியாவுக்கு இலகுவான வெற்றியாய் அமையும்.

நாளைய போட்டியினை முழுமையாக பார்க்க முயற்சிப்பேன் (இதனைதான் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்), நியுசிலாந்து வருணின் பந்தை கணிக்க முடியாமல் ரிவர்ஸ் சுவீப்பும் அடிக்க முடியாமல் களத்தடுப்பை போட்டு இந்தியா நியுசிலாந்தினை நெருக்கி விட்டார்கள், பொதுவாக கெட் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள மைதானத்தில் இறங்கி வந்து விளையாடுவார், பந்தினை கணிக்க முடியாவிட்டால் அது ஆபத்து, சுவீப் அடிப்பதே சிறந்தது ஆனால் ஆசிய மட்டையாளர்கள் போல சுழலுக்கு எதிராக சுவீப் அடிக்க்க மாட்டார்கள் ,அத்துடன் இந்த துபாய் ஆடுகளம் வழுக்கி தாழ்வாக வருவதுடன் உயரம் வேறுபடும் இது ஆபத்தானது, இவ்வாறான சூழலில் அவுஸ்ரேலியா இந்திய சுழல் பந்தின் வீரியத்தினை எவ்வாறு இல்லாமல் செய்ய போகிறது என்பதுதான் ஆர்வமான விடயமாக அனைவரும் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவுஸ் எப்போதும் ஒரு திட்டத்துடன் வருவார்கள் இவ்வாறான நொக் அவுட் விளையாட்டுகளில்.

8 minutes ago, செம்பாட்டான் said:

அஜந்த மென்டிஷ் ஒரு தொடரில், இலங்கையில் வைத்து இந்தியாவ உருட்டு உருட்டென்று உருட்டினார். அடுத்த தொடரில் இந்தியாவில் வைத்து, இந்தியா வெளுத்துத் தள்ளிவிட்டுது. அதிலிருந்து அவரால் பெரிதாக ஷோபிக்க முடியவில்லை. எல்லோருக்கும் இந்தியா காட்டிக்குடுத்து விட்டுது.

வருணுக்கும் அதேதான் நடக்கும். இப்போ சிறிய மாற்றங்களுடன் வந்திருக்கிறார். நீங்கள் சொன்னமாதிரி, வேகமாகவும் வீசுகிறார். ஆனால் டிராவிஷ் ஹெட்டுக்கும், மாக்ஸ்வெலுக்கும் எப்பிடிப் போடப்போகிறார் என்பத்தில்தான் எல்லாம் இருக்கிறது.

வருண் மட்டுமல்ல மற்ற 3 சுழல் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக போடுவது நிலமையினை மோசமாக்கிறது, இதில் யாராவது இரன்டு பந்து வீச்சாளர்களை அவுஸ் இலக்கு வைக்க கூடும் யார் அந்த அதிர்ஸ்டசாலிகள், நான் நினைக்கிறேன் ஜடேயா, அக்சர் என.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, vasee said:

நாளைய போட்டியினை முழுமையாக பார்க்க முயற்சிப்பேன் (இதனைதான் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்), நியுசிலாந்து வருணின் பந்தை கணிக்க முடியாமல் ரிவர்ஸ் சுவீப்பும் அடிக்க முடியாமல் களத்தடுப்பை போட்டு இந்தியா நியுசிலாந்தினை நெருக்கி விட்டார்கள், பொதுவாக கெட் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள மைதானத்தில் இறங்கி வந்து விளையாடுவார், பந்தினை கணிக்க முடியாவிட்டால் அது ஆபத்து, சுவீப் அடிப்பதே சிறந்தது ஆனால் ஆசிய மட்டையாளர்கள் போல சுழலுக்கு எதிராக சுவீப் அடிக்க்க மாட்டார்கள் ,அத்துடன் இந்த துபாய் ஆடுகளம் வழுக்கி தாழ்வாக வருவதுடன் உயரம் வேறுபடும் இது ஆபத்தானது, இவ்வாறான சூழலில் அவுஸ்ரேலியா இந்திய சுழல் பந்தின் வீரியத்தினை எவ்வாறு இல்லாமல் செய்ய போகிறது என்பதுதான் ஆர்வமான விடயமாக அனைவரும் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவுஸ் எப்போதும் ஒரு திட்டத்துடன் வருவார்கள் இவ்வாறான நொக் அவுட் விளையாட்டுகளில்.

உண்மைதான். எப்பிடி மீண்டும் மீண்டும் இப்பிடியான கட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். மற்ற அணிகளினால் அவர்களைப் போல் தொடர்ச்சியாக ஏன் ஆடமுடியவில்லை என்ற பொறாமைதான், அவுஸ்ரேலியா தோற்கவேண்டும் என்று நான் விரும்புவது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

உண்மைதான். எப்பிடி மீண்டும் மீண்டும் இப்பிடியான கட்டங்களில் அவர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். மற்ற அணிகளினால் அவர்களைப் போல் தொடர்ச்சியாக ஏன் ஆடமுடியவில்லை என்ற பொறாமைதான், அவுஸ்ரேலியா தோற்கவேண்டும் என்று நான் விரும்புவது.

எனக்கும் நீன்ட நாளாக அவுஸினை பிடிப்பதில்லை அதற்கு காரணம் அவர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆனால் தற்போது அந்த இடத்தினை இந்தியா தட்டி பிடித்துவிட்டதால் அவுஸில் இருந்த கடுப்பு இப்போது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

நாளைய போட்டியினை முழுமையாக பார்க்க முயற்சிப்பேன் (இதனைதான் எதிர்பார்த்துக்கொண்டுள்ளேன்), நியுசிலாந்து வருணின் பந்தை கணிக்க முடியாமல் ரிவர்ஸ் சுவீப்பும் அடிக்க முடியாமல் களத்தடுப்பை போட்டு இந்தியா நியுசிலாந்தினை நெருக்கி விட்டார்கள், பொதுவாக கெட் சுழல் பந்து வீச்சாளர்களை எதிர் கொள்ள மைதானத்தில் இறங்கி வந்து விளையாடுவார், பந்தினை கணிக்க முடியாவிட்டால் அது ஆபத்து, சுவீப் அடிப்பதே சிறந்தது ஆனால் ஆசிய மட்டையாளர்கள் போல சுழலுக்கு எதிராக சுவீப் அடிக்க்க மாட்டார்கள் ,அத்துடன் இந்த துபாய் ஆடுகளம் வழுக்கி தாழ்வாக வருவதுடன் உயரம் வேறுபடும் இது ஆபத்தானது, இவ்வாறான சூழலில் அவுஸ்ரேலியா இந்திய சுழல் பந்தின் வீரியத்தினை எவ்வாறு இல்லாமல் செய்ய போகிறது என்பதுதான் ஆர்வமான விடயமாக அனைவரும் எதிர்பார்க்கிறோம், ஆனால் அவுஸ் எப்போதும் ஒரு திட்டத்துடன் வருவார்கள் இவ்வாறான நொக் அவுட் விளையாட்டுகளில்.

வருண் மட்டுமல்ல மற்ற 3 சுழல் பந்து வீச்சாளர்களும் சிறப்பாக போடுவது நிலமையினை மோசமாக்கிறது, இதில் யாராவது இரன்டு பந்து வீச்சாளர்களை அவுஸ் இலக்கு வைக்க கூடும் யார் அந்த அதிர்ஸ்டசாலிகள், நான் நினைக்கிறேன் ஜடேயா, அக்சர் என.

அப்பிடி நடந்தால், குல்தீப்புக்கு 5 விக்கட்தான்.

இந்தியா இன்று விளையாடிய அதே அணியுடனதான் இறங்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டுவந்து, ஹெட்ட அடிக்க விட்டா, பிறகு ஒருத்தராலும் அந்தாள நிப்பாட்ட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, செம்பாட்டான் said:

அப்பிடி நடந்தால், குல்தீப்புக்கு 5 விக்கட்தான்.

இந்தியா இன்று விளையாடிய அதே அணியுடனதான் இறங்கும் என்று நினைக்கிறேன். இன்னொரு வேகப்பந்து வீச்சாளரைக் கொண்டுவந்து, ஹெட்ட அடிக்க விட்டா, பிறகு ஒருத்தராலும் அந்தாள நிப்பாட்ட முடியாது.

நீங்கள் கூறுவது சரிதான் என கருதுகிறேன், அவுஸில் சிமித், லபுசான், இங்லிஸ், மக்வேல் சுழலினை விளையாட கூடியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் கீழிருந்து 3ஆவது நின்றேன் இப்ப அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் தொங்கிறன் .😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் கீழிருந்து 3ஆவது நின்றேன் இப்ப அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் தொங்கிறன் .😂

எனக்கு போட்டியாக நீங்களுமா? 1 இலிருந்து 24 வரையான இலக்கத்தில் எந்த இலக்கம் பெரியது?🤣

  • கருத்துக்கள உறவுகள்

புலவருக்கு வாழ்த்துக்கள்!

இந்தியாவிற்கு ICC பல சலுகைகளை வழங்கியிருக்கிறது. ஒரே மைதானத்தில் எல்லா மட்சும் விளையாடுவது இதனால் பயணக்களை இல்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.